Saturday, May 31, 2025

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சி அடைகிறது.


'காதல்', 'பட்டியல்', 'காளிதாஸ்' போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் பெற்ற பரத், இந்தப் படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நாகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள்  மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பரத்தின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தனது அழுத்தமான கதாபாத்திர தேர்வும், திரையில் தோன்றும் விதத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடமும் பரிச்சயமானவராக இருக்கும் பரத்துடன்  கைகோர்ப்பதன் மூலம், இந்த படம் ஒரு பான் தென்இந்தியா பட உணர்வை வழங்கி, அதன் இருமொழித் தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.

நடிகர் பரத் தேர்வைப் பற்றி இயக்குநர் விஜய் மில்டன் கூறும்பொழுது: “பரத் ஒரு நடிகராகக் கட்டுப்பாடும், உணர்ச்சி நுட்பமும் கொண்டவர். இந்தப் படத்தில் அவர் செய்யும் பாத்திரம் கதைமுழுவதற்கும் உணர்வுகளின் உச்சமாக உள்ளது — முடிவெடுக்க முடியாத தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து வரும் மாற்றங்கள் என நெகிழ்ச்சியான மனிதனாக வருகிறார்.” என்று கூறினார். 

ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிற இந்த இருமொழி திரைப்படத்தில் நடிகர் ஆரி முதல்முறையாக ஒரு போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார், டோலிவுட் நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார், மேலும் இசை வெளியீட்டு ஷென்சேஷன் பால் டப்பா தனது நடிப்பு பயணத்தை தொடங்குகிறார். இந்த கூட்டணியில் பரத்தின் சேர்க்கை, படத்திற்கு ஆர்டிஸ்ட் வேல்யூவையும், கதைக்கு ஸ்திறத்தன்மையும்   கூட்டித் தருகிறது.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியையும், உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கதையமைப்பையும் கொண்ட இந்த திரைப்படம், விஜய் மில்டனின் படைப்புகளுக்கே உரிய அடையாளங்களை கொண்டு, நிஜத்தையும், தீவிரத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் இதையடுத்து பல சுவாரஸ்யமான அப்டேட்கள்  மற்றும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. வித்தியாசமான மற்றும் வலிமையான படக்குழுவை  உருவாக்கி வரும் Rough Note Productions, இந்தப் படம் ஒரு  உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கப்போகிறது என்று ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறது.

இந்த உணர்ச்சி மிக்க திரைப்படப் பயணத்தின்  மேலும் பல புதிய தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்!

Karate Kid: Legends - திரைப்பட விமர்சனம்


 கராத்தே கிட்: லெஜண்ட்ஸ், அன்பான கராத்தே கிட் சரித்திரத்தின் ஆறாவது அத்தியாயம், இதயப்பூர்வமான ஏக்கத்திற்கும் நவீன கால அதிரடிக்கும் இடையில் ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது. தனது சகோதரனின் துயர இழப்பால் சுமையாக இருக்கும் ஒரு தீவிர இளம் குங்ஃபூ ஆர்வலரான லி ஃபோங்கை மையமாகக் கொண்டது கதை. மீண்டும் ஒருபோதும் சண்டையிட மாட்டேன் என்று சபதம் செய்த அவர், ஓய்வுபெற்ற குத்துச்சண்டை சாம்பியனான விக்டரை சந்திக்கும் போது விதி ஒரு திருப்பத்தை எடுக்கிறது. குணப்படுத்துதல், ஒழுக்கம் மற்றும் மறு கண்டுபிடிப்பு ஆகியவற்றின் தொடுதல் மற்றும் ஊக்கமளிக்கும் பயணம் வெளிப்படுகிறது.

படம் அதன் துடிப்பான பயிற்சி காட்சிகளுடன் பிரகாசிக்கிறது, அங்கு ஷிஃபு ஹான் மற்றும் சின்னமான சென்செய் டேனியல் லாருஸ்ஸோவின் வழிகாட்டுதலின் கீழ் லி குங்ஃபூ மற்றும் குத்துச்சண்டை இரண்டின் கலையையும் கற்றுக்கொள்கிறார். சண்டை பாணிகளின் இந்த இணைவு உரிமைக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தைக் கொண்டுவருகிறது, அதே நேரத்தில் அதன் வேர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. பயிற்சி மாண்டேஜ்கள் உற்சாகமூட்டுகின்றன, மேலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வளர்ச்சி அதிரடிக்கு ஆழத்தை சேர்க்கிறது.

பென் வாங் லியாக ஒரு கவர்ச்சிகரமான நடிப்பை வழங்குகிறார், பாதிப்பு மற்றும் வலிமையை திறமையாக கலக்கிறார். அவரது உடல் சுறுசுறுப்பு மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் அவரை ஒரு தனித்துவமாக்குகின்றன. ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மச்சியோ அவர்களின் சூடான வேதியியல் மற்றும் விளையாட்டுத்தனமான பரிமாற்றங்களால் திரையை ஒளிரச் செய்கிறார்கள், குறிப்பாக பயிற்சி காட்சிகளின் போது, ​​அவை வேடிக்கையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

கதைக்களம் ஒரு உன்னதமான, நேரடியான கட்டமைப்பில் சாய்ந்திருந்தாலும், அது படத்தின் ஏக்கம் நிறைந்த வசீகரத்திற்கு சாதகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு பஞ்ச், உதை மற்றும் மௌன தருணமும் 1984 மூலத்தின் உணர்வைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் இன்றைய பார்வையாளர்களுக்கு புதிய அடுக்குகளை அறிமுகப்படுத்துகிறது.

அதன் உயர் ஆற்றல்மிக்க சண்டை நடன அமைப்பு, இதயப்பூர்வமான கருப்பொருள்கள் மற்றும் அன்பான கதாபாத்திரங்களுடன், கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் என்பது ஒரு நேசத்துக்குரிய உரிமையின் தகுதியான தொடர்ச்சியாகும். இது எதிர்கால கதைகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும் அதே வேளையில் அசல்களின் மரபை மதிக்கிறது. நீண்டகால ரசிகர்களுக்கும் புதியவர்களுக்கும், இந்த படம் அதிரடி மற்றும் இதயத்தால் நிறைந்த ஒரு உற்சாகமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. புராணக்கதைகள் ஒருபோதும் மங்காது என்பதை இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டல் - அவை உருவாகின்றன.

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா



வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா



மாவீரன் "காடுவெட்டி" குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா - இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம்.

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும்  பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன்,  மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். 'படையாண்ட மாவீரா' இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். 'பிக் பாஸ்' புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.  தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். 

நடிகர் இளவரசு பேசுகையில், "தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்," என்றார். 

இயக்குநர் வி.சேகர் பேசுகையில், "இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்." 

வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், "கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது 'சந்தனக்காடு' தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது 'படையாண்ட மாவீரா' படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 'படையாண்ட மாவீரா' படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்," என்றார். 

சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்," என்றார். 

தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், "படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்," என்றார். 

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், "தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், 'படையாண்ட மாவீரா' பிரம்மாண்டத்தின் உச்சம், 'புஷ்பா' படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்," என்றார். 

இயக்குநர் பேரரசு பேசுகையில், "நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது 'படையாண்ட மாவீரா' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், "அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார். 

நீதிபதி கலையரசன் பேசுகையில், "அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'படையாண்ட மாவீரா' படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்," என்றார். 

'படையாண்ட மாவீரா' படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், "இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் 'படையாண்ட மாவீரா'. 

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். 

இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி. 

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் 'சந்தனக்காடு' எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. 

இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். 

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன்.  இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார். 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். 

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் 'படையாண்ட மாவீரா' என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். 

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 'சந்தனக்காடு', 'மகிழ்ச்சி' அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ 'படையாண்ட மாவீரா' மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. 'படையாண்ட மாவீரா' மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். 

***
 

Friday, May 30, 2025

வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!

வரலாற்றை திருப்பி  எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!

*கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!*

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

இப்போது, அல்லு அர்ஜூன்,  கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில்,  இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.

ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.

இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.

Manidhargal - திரைப்பட விமர்சனம்


மணிதர்கள் என்பது ஒரு தமிழ் இண்டி த்ரில்லர் திரைப்படம், இது திண்டுக்கல்லில் ஒரு மறக்க முடியாத இரவில் ஏற்படும் நட்பின் உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒரு துடிப்பான கிராமத் திருவிழாவின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், ஆறு நண்பர்களைப் பின்தொடர்கிறது, அவர்களில் ஒருவர் இறந்து கிடந்தால் அவர்களின் கொண்டாட்டம் இருண்ட திருப்பத்தை எடுக்கும். சந்தேகம், பயம் மற்றும் நீண்ட காலமாக புதைக்கப்பட்ட பதட்டங்கள் மேலெழுந்து, தீவிர மோதல்கள் மற்றும் மூல உணர்ச்சி முறிவுகளின் இரவிற்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக கபில் வேலவன் மற்றும் தக்ஷாவின் நடிப்புகள், இதயப்பூர்வமானவை மற்றும் ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ளன. பயம், சந்தேகம் மற்றும் பாதிப்பு ஆகியவற்றின் சித்தரிப்புகள் கதைக்கு ஒரு உணர்ச்சி எடையைச் சேர்க்கின்றன. ஒட்டுமொத்த குழும நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வருகிறார்கள், ஒருவருக்கொருவர் இயக்கவியலை நம்பக்கூடியதாகவும் ஈடுபாட்டுடனும் ஆக்குகிறார்கள்.

ராம் இந்திராவின் இயக்கம் சூழ்நிலையை இறுக்கமாக வைத்திருக்கிறது, பதற்றம் ஒருபோதும் தொலைவில் இல்லை என்பதை உறுதி செய்கிறது. அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு அதன் தூண்டுதல் இரவுநேர காட்சிகள் மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் தனித்து நிற்கிறது, கதையின் பயங்கரமான மனநிலையை அழகாகப் பிடிக்கிறது. அனிலேஷ் எல் மேத்யூவின் இசை, காட்சிகளை மிஞ்சாமல் உணர்ச்சிகளை மைய நிலைக்குக் கொண்டு வர அனுமதிக்கிறது, நுட்பத்துடன் கதைக்கு நிறைவு அளிக்கிறது.

மணிதர்களை உண்மையிலேயே சிறப்பானதாக்குவது அதன் தனித்தன்மை. இந்த படம் ஒரு தீவிர கூட்ட நிதியுதவி முயற்சி, ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார் மற்றும் சாம்பசிவம் எம் கே ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது, கதைசொல்லலில் அவர்களின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. மனித உளவியலையும் நம்பிக்கையின் பலவீனத்தையும் ஆராயும் படத்தின் லட்சியம் பாராட்டத்தக்கது.

திரைக்கதை எப்போதாவது வளைந்து கொடுக்கும் மற்றும் வேகம் இறுக்கமாக இருக்கலாம், மணிதர்கள் அதன் வலுவான முன்மாதிரி மற்றும் வளிமண்டல அமைப்பால் இன்னும் உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. இது சிறந்த ஆற்றலைக் காட்டும் ஒரு படம், மேலும் நேர்த்தியான எடிட்டிங் மற்றும் கதாபாத்திர வளைவுகளுடன், இது எளிதாக அதிக உயரங்களுக்கு உயரக்கூடும்.

அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், மணிதர்கள் இண்டி சினிமா பிரியர்களுக்கு ஒரு பார்வைக்கு மதிப்புள்ளது. இது நட்பு, துரோகம் மற்றும் மனித ஆன்மாவின் சிக்கல்களை வெளிப்படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சி. ஒரு முதல் இண்டி த்ரில்லராக, இது நம்பிக்கைக்குரிய திறமையைக் குறிக்கிறது மற்றும் எதிர்காலத்தில் இன்னும் வலுவான திட்டங்களுக்கு மேடை அமைக்கிறது.

Manidhargal Cast & Crew Details

Cast :

Kapil velavan As karli

Dhaksha As sathish

Gunavanthan As mano

Arjundev saravanan As deepan

Sambasivam As chandru

Crew:

Director - Raam Indhra

Production - Studio Moving Turtle & Sri Krish Pictures

Producers - Rajendra Prasad, J Naveen Kumar, Sambasivam M K

Co - Producers 

Dharanidharan Parimala Kulothungan, Yuvaraj N

Cinematography -  Ajay Abraham George

Edit - Dinsa

Music - Anilesh L Mathew

Additional Background Score - John Robins

Art Direction - Mahendhran Pandiyan

Lyrics - Karthick Netha

Singer - Kapil Kapilan

Sound mixing - Anand Ramachandran

Make-Up Artiste- A Sabirigirison

DI - Vasanth S Karthik

Publicity Design - Riverside house 

Sfx - Sathish

Stunt - Win Veera

Title Design - Somasekar

PRO - Sathish, Siva (AIM)

Thursday, May 29, 2025

Jinn The Pet - திரைவிமர்சனம்


 மலேசியாவின் கவர்ச்சியான பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கற்பனை திரில்லர், மர்மம், மந்திரம் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது - கோடையின் வெப்பத்திலிருந்து ஒரு சரியான தப்பிப்பு. அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் கற்பனை காட்சிகளுடன், படம் முழுவதும் மகிழ்விக்கும் ஒரு வசீகரிக்கும் அனுபவத்தை வழங்குவதில் வெற்றி பெறுகிறது.

திரைக்கு அவர் துடிப்பான திரும்புவதைக் குறிக்கும் முகேன் ராவ், கதைக்கு ஆழத்தையும் ஆற்றலையும் கொண்டு வரும் ஒரு நம்பிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய நடிப்புடன் பிரகாசிக்கிறார். அவரது சித்தரிப்பு கற்பனை உலகத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான அடுக்கைச் சேர்க்கிறது, இது அவரை படத்தின் சிறப்பம்சமாக்குகிறது. பவ்யா, இன்னும் தனது கைவினைத்திறனை வளர்த்துக் கொண்டாலும், காலப்போக்கில் வலுவாக வளரக்கூடிய ஆற்றலையும் உற்சாகத்தையும் காட்டுகிறது.

பாலசரவணன் நகைச்சுவையின் தெளிப்பைச் சேர்க்கிறார், த்ரில்லர் கூறுகளை சமநிலைப்படுத்தும் லேசான தருணங்களை வழங்குகிறார். துணை நடிகர்கள் வினோதினி வைத்தியநாதன் மற்றும் வடிவுக்கரசி, குறுகிய வேடங்களில் காணப்பட்டாலும், அவர்களின் பாகங்களுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வருகிறார்கள். ராதாரவியின் எதிரி வேடம் ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரது இருப்பு இன்னும் குழுமத்திற்கு மதிப்பை சேர்க்கிறது.

கதையின் மையத்தில் ஒரு கவர்ச்சிகரமான திருப்பம் உள்ளது - ஒரு ஜின், உச்சக்கட்டத்தில் ஒரு வலிமையான, கிட்டத்தட்ட டெர்மினேட்டர் போன்ற நபராக உருவாகிறார். சிறப்பு விளைவுகள், திகில் மற்றும் மர்மமான காட்சிகளை நோக்கியே அதிகம் சாய்ந்து, பார்வையாளர்களை ஆர்வத்துடன் வைத்திருக்கும் ஒரு திகில் காட்சியைச் சேர்க்கின்றன. CGI புதுமையானதாக இல்லாவிட்டாலும், கற்பனை கட்டமைப்பிற்குள் அதன் நோக்கத்தை திறம்பட நிறைவேற்றுகிறது.

படத்தை உண்மையிலேயே தனித்துவமாக்குவது அதன் சாகச உணர்வு. நகைச்சுவையுடன் கற்பனையை கலக்க இது துணிந்து, விசித்திரமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒரு கதையை உருவாக்குகிறது. சில குறைபாடுகள் இருந்தபோதிலும், படத்தின் படைப்பாற்றல் மற்றும் முகேன் ராவின் தனித்துவமான நடிப்பு இதை ஒரு மகிழ்ச்சிகரமான காட்சியாக ஆக்குகிறது. லேசான மனதுடன் ஆனால் சிலிர்ப்பூட்டும் தப்பிப்பைத் தேடுபவர்களுக்கு, இந்த கற்பனை சவாரி கோடைகால சோகத்தை வெல்ல ஒரு டிக்கெட் மட்டுமே.

CAST

Mugen rao - sakthi 

Bhaviya Trikha - priya 

Vadivukkarasi - abithakujalambal

Balasaravanan - paranjothi 

Radha Ravi - manokar 

Nizhgal ravi - Radha Krishnan

Vinothini - geetha 

Rithivik - simbu

CREW 

Producer - T R BALA 

DIRECTOR - T R BALA 

DOP - ARJUN RAJA 

MUSIC DIRECTOR - VIVEK MERVIN 

EDITOR - DEEPAK 

ART DIRECTOR - DINESH KUMAR 

STUNT MASTER - PRADEEP DINESH 

SOUND DESIGN - T UDHAYA KUMAR

VFX - VIPIN VIJAYAN

COLORIST - SHANMUGA PANDIYAN 

COSTUME DESIGNER - DEEPTHI

PRO - Nikil Murukan

Wednesday, May 28, 2025

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


 யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

'இராமாயணா' படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !! 

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான 'இராமாயணா' படத்திற்காக,  ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.

நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.

இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.

'இராமாயணா பாகம் 1' – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது

இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

 இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

 ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம்  ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!  

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில்  பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது.

இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது….

"எங்களின் இந்த  கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து  மக்கள் விரும்பும்  கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஹிர்திக் ரோஷன் கூறியதாவது….

"ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்."

கடந்த சில ஆண்டுகளில், பான்-இந்தியா அளவில் பெரும் வெற்றிப் படங்களை வழங்கி, ஹொம்பாலே பிலிம்ஸ் இந்தியாவின் முன்னணி  தயாரிப்பு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. கேஜிஎப்: பார்ட் 1 மற்றும் 2, சலார்: பார்ட் 1 – சீஸ்‌ஃபயர், மற்றும் காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, அவர்கள் கதைக்களத்திலும், வசூலிலும் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு புறம், ஹிர்திக் ரோஷன் இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். அவரது தனித்துவமான நற்சிறப்பும், மாபெரும் திரை நேர்த்தியும், சிறந்த நடிப்பும் அவரை உயரத்தில் நிறுத்தியுள்ளன. வார் 2 மற்றும் க்ரிஷ் 4 போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களுடன், அவர் மிக வலுவான வருங்கால திரைப்பட வரிசையைக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹொம்பாலே பிலிம்ஸும் ஹிர்திக் ரோஷனும் இணைகிறார்கள் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புதிய உச்சத்துக்கே சென்றுள்ளது

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!


 தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!



இந்தியாவில் முதன்முறையாக ஒரு  அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான  “மிராய்” படத்தோடு வந்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்  தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், 

டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.

தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.

இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே  செய்யும் சாகசம்  உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை  துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.

மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல,  மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது. 

கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் - மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு  இது உதாரணமாக இருக்கும்.

இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள "மிராய்" திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு

தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி 

தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் 

பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி 

நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி 

இசை: கவுரா ஹரி 

கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம் 

எடிட்டர் - ஶ்ரீகர் பிரசாத்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் - ஹேஷ்டேக் மீடியா

https://youtu.be/Uf6allM1yWc 

கிளாசிக் திரைதமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர்

கிளாசிக் திரை
தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள மாரி செல்வராஜ் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர் .இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர், பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்தினம்,பாலு மகேந்திரா என இந்த பட்டியல் மிக நீண்டது. இவர்களின் படைப்புகளை நாம் திரும்பிப் பார்த்து அதனை ரசிக்க ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது இந்த கிளாசிக் திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற திரைப்படங்களை சுருக்கமாக ஒரு தொகுப்பாக வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி. 1950 களில் தொடங்கி 60, 70 மற்றும் 90களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களின் முக்கிய காட்சிகளை தொகுத்து ரசிகர்களுக்காக வழங்குகிறது இந்த கிளாசிக் திரை.
கிளாசிக் திரை நிகழ்ச்சி புது யுகம் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

INUS உடல் வடிவமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மையத்தினை நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தனர்

INUS  உடல் வடிவமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மையத்தினை நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தனர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் MINUS  உடல் வடிவமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மையத்தினை நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் MINUS நிர்வாக இயக்குநர் சரண்வேல், கரீபியன் வர்த்தக கவுன்சில் வாரிய உறுப்பினர் ராஜேஷ் சந்தன், அப்பல்லோ மருத்துவமனை, முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் 

இந்த சிகிச்சை மையத்தின் சிறப்பு அம்சங்கள்:- 

சமீபத்திய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கொழுப்பு குறைப்பு மற்றும் தோல் புத்துணர்ச்சிக்கான சிகிச்சைகள் வழங்கி, தீர்வுகள் காணப்படும்

உருமாற்றும், உடல் வடிவமைத்தலை அனைவருக்கும் அணுகக்கூடியதாக எளிதில் சிகிச்சை அளிக்கப்படும்,சர்வதேச அளவில் வடிவமைப்பு சிகிச்சைகளை இந்தியாவிற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது 

இந்தியாவில் தற்போது சான்றுகள் அடிப்படையிலான உடல் வடிவமைத்தல், அதற்கான பயிற்சி அளிப்பது, சிகிச்சையில் சிறந்து விளங்குதல், பாதுகாப்பாக சிகிச்சை அளித்து, தேவைகளை நிவர்த்தி செய்வதே எங்கள் தொலைநோக்குப் பார்வை  

இந்திய நாட்டில் தேவைகளுக்கு ஏற்ப ஆசிய மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பங்களின் சமீபத்தியவற்றைப் பயன்படுத்தி, பொதுமக்கள் உடல் நலனை, சிறந்த முறையில் பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய குறிக்கோள் 

உலகத்தரம் வாய்ந்த ஸ்லிம்மிங் தொழில்நுட்பங்களை தற்போதைய தலைமுறையை அறிமுகப்படுத்தி இந்தியாவின் முதல் மருத்துவமனையாக, எங்களுடைய சிகிச்சையை கொண்டு செல்வோம் 

மையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள்:- 

கோல்ட்ப்ளே கிரையோஸ்பியர்,
கிரையோமேக்ஸ் சிற்பம், கிரையோஃப்ளாஷ், அல் ரோபோடிக் சோனிக் ஸ்லிம், ஸ்கின்ஃபியூஷன் ஆர்எஃப் , வி-ஃபிட் காண்டூர், ஸ்லிம் ஸ்மார்ட், லிப்போ காண்டூர்,,,

தாடை வரையறை, நிணநீர் நச்சு நீக்கம், ஸ்லிம்ஃபார்ம், லேசர் உதவியுடன் லிபோசக்ஷன், ஊசி லிபோலிசிஸ்,வயிற்று அறுவை சிகிச்சை, உடல் தூக்கும் அறுவை சிகிச்சை  உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படும்

Tuesday, May 27, 2025

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி'  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

*மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ்  வாழக்கையை பிரதிபலிக்கும்,  அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம்   'மெட்ராஸ் மேட்னி'*

வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்… 

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர்.  இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்  பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப சின்ன படம் ஆனால் ரொம்ப வலிமையான படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி  

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே.  பேசியதாவது..  
ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாகத் தொடங்கிய பயணம், 15 வருடங்கள். இங்கு இருக்க ஒளிப்பதிவாளராக ஆனதற்குக் காரணமான, இப்படத்தின் வாய்ப்பைத் தந்த கார்த்திகேயன் அண்ணாவிற்கு நன்றி.  இப்படம் கார்த்திக் உடன் இணைந்து 3 வருடங்கள் முன்பு தொடங்கியது. இப்படம் உருவாகத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்த மோனிகா, ஷான், வீரமணி, ஆகியோருக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் படம், நீங்கள் கவனிக்க மறந்த, தவறவிட்ட தருணங்களை உங்களுக்கு இப்படம் ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியதாவது...
இயக்குநர் கார்த்திகேயன் அண்ணாவுடன் மூன்று வருடம் முன்பு ஒரு குறும்படத்தில் ஆரம்பித்த பயணம், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்தப்படம். முதல் படத்திலேயே வடிவேலு முதல் பல ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு. நான் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது… 
இந்தப்படம் செய்யக்காரணமான வாய்ப்புத் தந்த கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி, தயாரிப்பாளராக அவர் எனக்கு பெரும் சுதந்திரம் தந்தார், அவர் இயக்குநராகத் தான் செயல்பட்டார், படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை எங்கு கோண்டு செல்வது என்று யோசித்த போது தான் ட்ரீம் வாரியர்ஸ் வந்தார்கள் அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி. 

 

எடிட்டர் சதீஷ்குமார் பேசியதாவது…
இந்தப்படம் செய்தது மிக மகிழ்ச்சி.குழந்தை பிறக்கும் முதல் தடவை ஒரு பெண் குழந்தையாக இருந்தால் எவ்வளவு சந்தோசமோ அவ்வளவு சந்தோசம். படம் திரையிட்ட இடங்களிலிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி. 


நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு சார் வரக்காரணம் மோனிகா மேடம் தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால் கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது.  அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
என்னை இதற்கு முன் எமகாதகி பிரஸ்மீட்டில் கோடம்பாக்கத்து அம்மாவாக அழகாக கொண்டாடுனீர்கள், ஆனால் அப்போது நான் உங்களிடம் வித்தியாசமான கதாப்பாத்திரம் செய்ய ஆசை என சொல்லியிருந்தேன் . இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் மணிக்கு நன்றி. ரொம்ப சின்ன பாத்திரம் தான் என்றாலும் மிக நிறைவான பாத்திரம், இப்படத்தில் நடித்த அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 

நடிகர் விஷ்வா பேசியதாவது…
இது என் முதல் மேடை, எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி, என்னை நானே நம்பமுடியாத அளவு அழகாக காட்டியதற்கு நன்றி. இசையமைப்பாளர் பாலசாரங்கன் அண்ணா அவர் இசையுடன் என் நடிப்பை பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பெயருடன் என் பெயரைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. காளி வெங்கட் மிகச்சிறந்த நடிகர், அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். ஷெல்லி மேம் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். ரோஷிணி அக்காவுக்கும் எனக்கும் கம்மியான சீன் தான்,  அவர் என்னுடன் இயல்பாகப் பேசினார், இந்தப்படம் செய்தது இன்னும் கனவு போல் உள்ளது. அனைவருக்கும் நன்றி, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.  


நடிகை ஷெல்லி பேசியதாவது…
நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம், இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம், அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். அவரது எழுத்துக்கு நன்றி. இந்தப்படத்தில் காளி வெங்கட் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். இந்த புரடக்சன் சினிமாவுக்கு புதுசு, எல்லோரும் ஐடி வேலை பார்த்தவர்கள் யாருக்கும் சினிமா தெரியாது ஆனால் மிகச்சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள், ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம், கண்டிப்பாக இந்தப்படம் உங்களை மகிழ்விக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் கலையரசன் பேசியதாவது…
நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை ஆனால் நான் நடித்த மாதிரி சந்தோசமாக உள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் ரிலீஸ் வரை மட்டும் தான் அதன்பிறகு கண்டென்ட் தான் முடிவு செய்யும். இது ரொம்ப நல்ல படமா தெரிகிறது. நான் ரெண்டு மூன்று தடவை பாக்க வாய்ப்பு  கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன் சாரி.   ஒரு நல்ல படம் வந்தால் எப்படியாவது இண்டஸ்ட்ரிக்குள்  எங்கேயாவது அதைப் பற்றி பேச்சு  வந்துவிடும், இப்படம் பற்றியும் நிறையப் பேர் சொல்கிறார்கள் மகிழ்ச்சி. பிரபு சார் திரைத்துறையில் நிறையப் பேரை உருவாக்கியுள்ளார், நிறையச் சின்ன படங்களுக்கு ஆதரவு தருகிறார்.  ஒரு கதைக்கு வந்து முகங்கள் கதாபாத்திரங்கள் ரொம்ப முக்கியம். அதுக்கேத்த மாதிரி முகங்களை நடிக்க வைப்பது தான் நல்ல படமாக இருக்குமென்று நம்புகிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் கதைக்கான முகங்களாக இருக்கிறார்கள். காளி வெங்கட் கலைத்துறை தந்தை, அவருக்குள் நிறையக் கதைகள் இருக்கு ஷீட்டிங்கில் இருக்கும் போது,ஆறு மணிக்கு மேல பாடுவாரு, ஆடுவாரு, மிமிக்ரி பண்ணுவாரு, ஏதோதோ சொல்லுவாரு,  நிறைய பேசுவாரு, ஜெபம் பண்ணுவார், அதே மாதிரி நிறையக் கதைகள் சொல்லுவார். அவர் ஊர்ல  இருக்க  ஒரு வளையல் தாத்தான்னு ஒரு கதை சொல்லியிருக்காரு,  எனக்கு அதைப் படமா பண்ண ஆசை,  அவரிடம்  சொல்லியிருக்கிறேன்.  அவருக்குள்ள அழகா  ஒரு பெரிய லைப் இருக்கு. இப்போதே அவருக்குள் 60 வயதுக்கான ஞானம் இருக்கிறது. இந்தப்படத்தில் எல்லோருமே ரொம்ப அழகா நடித்திருக்கிறார்கள். எல்லோரும் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. கார்த்திகேயன் இந்த மாதிரி புதுமையா இன்னும் நிறையப் படங்கள் செய்யுங்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 
  


நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது… 
டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு  வரவில்லை, அதற்குக் காரணம் காளி வெங்கட் தான் அவருடன் தான் ஷீட்டில் தான் இருந்தேன், நீங்கள் தந்த பாராட்டுக்கள் என் 15 வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிதாக இருந்தது. இந்த மேடையைக் காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அதற்கு நான் மூன்று காரணங்கள் சொல்கிறேன் முதலி எஸ் ஆர் பிரபு சார் இந்தப்படத்தை வாங்கியுள்ளார், இரண்டாவது டிரெய்லரும் பாடலும் அவ்வளவு நன்றாக உள்ளது, மூன்றாவது ஒரு படம் முடித்துவிட்டு டப்பிங்க் எல்லாம் முடித்து படம் நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும், காளி வெங்கட் அண்ணாவுடன் தான் மூன்று மாதமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன் ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்படியெனில் கண்டிப்பாகப் படம் ப்ளாக்பஸ்டர் தான். இவர் வாழும் இந்த நாட்டில் நானும் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ப்ளாக் அன் ஒயிட் காலத்திலிருந்து, டிஜிட்டல் வரை, சினிமாவில் எல்லா அறிவுரைகளும் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் அவர்களுக்கு நன்றி. நான் இது  மூலமா ஐநா சபைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த வருஷத்துக்கான நோபல் பிரைஸ் காளி அண்ணாவிற்குக்   கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் குழுவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும்.  அனைவருக்கும் நன்றி.



ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது…   
எல்லாருக்கும் வணக்கம். மெட் ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்ல. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய  பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது அது அழகா அமைஞ்ச் படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு, எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம  பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப்  மேட்னி ஷோவா  பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது.   கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகை ரோஷினி பேசியதாவது…
ஆனந்த சார் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு வந்தது அவருக்கு நன்றி,  நாங்க எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாம அவ்வளவு அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான்  பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி ஆனந்த் சார். கார்த்திக் சார் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது. காளி வெங்கட் சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், அவர் நடிப்பு பயங்கர அமேசிங்கா இருக்கும்.    ஸ்விட்ச் போட்ட மாதிரி ஒரு கேரக்டர்ல இருந்து வேற கேரக்டர்ல அவ்ளோ அழகா பண்ணுவார், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில்  ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மேடம் மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது… 
என் அம்மா  நிறைய இலக்கிய வட்டம்  போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது  எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம்   கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை  இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம்,  ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும்.  இந்தக் கதையை நான்  எழுதி முடித்த பிறகு,  ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான்  வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன்  அப்போதுதான்  காளி சார்   இந்த கதைக்கு ஓகே சொன்னார்,  காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல  மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு.  இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன்  இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது, எல்லோரும் ஆதரவு தாருங்கள், நன்றி



காளி வெங்கட் பேசியதாவது… 
முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு  ரொம்ப ரொம்ப நன்றி.  படம்  முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  






மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை,  ஒரு மாறுபட்ட தளத்தில்,  அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம்,  அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 


ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனியின் மார்கன் டிரெய்லர் வெளியீட்டு

 


விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தமிழ்த் திரையுலகில் 19 படங்களைத் தயாரித்து ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசனுக்குப் பிறகு தனது சொந்த பேனரின் கீழ் பல படங்களைத் தயாரித்த நடிகர் இவர். 7 படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. மோஷன் போஸ்டர், சிறப்பு விளம்பர வீடியோக்கள் மற்றும் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே படத்தின் முக்கியமான கிளிப்பிங்குகளை வெளியிடுவது போன்ற புதிய போக்கை உருவாக்குவதில் அவருக்கு ஒரு தனித்துவமான பண்பு உள்ளது. அவரது வரவிருக்கும் படம் மார்கன், விஜய் ஆண்டனி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஒரு கொலை-மர்ம குற்றத் திரில்லர். ஜூன் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள இந்தப் படம், டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது.

நடிகர் விஜய் ஆண்டனி-லியோ ஜான் பாலின் அர்ப்பணிப்பு மிகவும் அற்புதமானது, மேலும் அவரது நேர்மையும் பணி மீதான நேர்மையும் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். நான் எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு இசைப் பணிகளை விட்டுவிட்டேன், மேலும் லியோ தனது இயக்குநராகப் பணியாற்றிய பிறகு இப்போது எடிட்டிங் பணியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக விரைவில் எனது இசைப் பயணத்தை மீண்டும் தொடங்குவேன். அஜய் சிறப்பாகச் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் அசாதாரண நடிப்பை வழங்கியுள்ளனர். தனஞ்சயன் சார் ஒரு சிறந்த ஆதரவாகவும் ஆலோசகராகவும் இருந்துள்ளார், மேலும் இந்த நிகழ்வு கூட அவரது யோசனையாக இருந்தது. ஒரு நடிகராக எனக்கு ஒரு திருப்புமுனையை அளித்ததற்காக சசி சாருக்கு நன்றி கூறுகிறேன். லியோவை தனது எடிட்டிங் வாழ்க்கையில் இவ்வளவு ஆதரவை வழங்கியதால், இன்று அவரை ஒரு இயக்குநராக மாற்றிய அனைத்து பெருமைகளும் சி.வி.குமார் சாருக்குச் சொந்தமானது. படம் நன்றாக வந்துள்ளது, மேலும் படத்திற்கான உங்கள் பதிலையும் ஆதரவையும் நாங்கள் ஒரு குழுவாக பணிவுடன் எதிர்நோக்குகிறோம்.

இயக்குனர் லியோ ஜான் பால் - இன்று என்னை இயக்குநராக்கியதற்காக கடவுள், பெற்றோர், மனைவி மற்றும் விஜய் ஆண்டனி சாருக்கு எனது பணிவான நன்றிகள். நான் விஜய் ஆண்டனி சாரின் படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியுள்ளேன், முதல் முறையாக, 'மார்கன்' படத்தின் ஸ்கிரிப்டை நான் சொன்னபோது, ​​அது நிறைவேற நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால், அந்த செயல்முறை நான் நம்பியதை விட வேகமாக நடந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். விஜய் ஆண்டனி சார் எனக்கு ஒரு முழுமையான இயக்குநர் குழுவை வழங்கினார். 'மார்கன்' படத்தின் ஸ்கிரிப்டை நான் லாக்டவுனில் எழுதினேன், அதை என் நண்பர் இப்போது இல்லை. என் குழந்தை பருவத்திலிருந்தே, சக்திமான் போன்ற கதைகளால் நான் ஈர்க்கப்பட்டேன், அதுபோன்ற ஒன்றை உருவாக்க விரும்பினேன். இந்த படத்தில் சில மாய, கற்பனை கூறுகள் இருக்கும், இருப்பினும் முக்கிய வகை த்ரில்லர். இந்த படத்தில் ஸ்கிரிப்ட்டுடன் 'தண்ணீர்' மிகவும் பொருத்தமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டின் சிறந்த நீர் ஆதாரங்களைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன், அது படத்திற்கு நேர்மறையான வழியில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஒருபோதும் ஒரு அறிமுக நடிகரைப் போலத் தெரியவில்லை, மேலும் அவர் 20 அடி உயரத்தில் ஒரு நீருக்கடியில் ஒரு காட்சியை நிகழ்த்தினார், இது அனுபவம் வாய்ந்த நடிகருக்கு கூட எளிதான விஷயம் அல்ல. நான் அவரது உழைப்பால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது கடின உழைப்பால் அவர் நோய்வாய்ப்பட்டார், அது என்னை பயமுறுத்தியது. அவரது அர்ப்பணிப்பு மிகவும் அசாதாரணமானது. சமுத்திரக்கனி சார் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார், ஆனால் இந்த படத்தில் அது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் செயல்முறை முழுவதும் இவ்வளவு ஆதரவாக இருந்ததற்காக முழு நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். நன்றி.”

நடிகை பிரிகிடா சாகா - விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் மிகவும் வேடிக்கையான மற்றும் அன்பான நபர். நான் முதல் முறையாக ஒரு இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளேன், இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் ஒரு சிறப்பு படம். சினிமா மீதான எனது ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, மேலும் இந்த படம் எனக்கு நிறைய அர்த்தம் தருகிறது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவை நான் உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன். நீங்கள் அனைவரும் படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், குறிப்பாக எனது நடிப்பு. இது எனக்கு ஒரு அமில சோதனை போன்றது, ஏனெனில் நான் இதற்கு முன்பு முயற்சிக்காத ஒரு பாத்திரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக இயக்குனர் லியோ ஜான் பாலுக்கு நன்றி கூறுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் அஜய் ஒரு புதுமுக நடிகராகவே உணர்ந்ததில்லை, அவர் நம்பமுடியாத திறமையானவர். ஒரு போலீஸ்காரராக என்னை இவ்வளவு கச்சிதமாகப் படம்பிடித்ததற்காக எங்கள் டிஓபி சாருக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.”

தயாரிப்பாளர் ஜி. தனஞ்சயன்-மார்கன் எங்கள் பேனருக்கு ஒரு சிறப்பு படமாக இருக்கப் போகிறது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் 100% லாபகரமான தயாரிப்பு நிறுவனமாக வர்த்தக மற்றும் நிதி வட்டாரங்களில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​மார்கனின் இந்தி செயற்கைக்கோள் உரிமைகள், OTT மற்றும் செயற்கைக்கோள் உரிமைகள் மற்றும் திரையரங்க உரிமைகள் அனைத்தும் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் உள்ளன. OTT பேச்சுவார்த்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புத் திரையிடலின் போது, ​​அந்தந்த ஸ்ட்ரீமிங் தளம் படத்தைப் பெரிதும் பாராட்டியது, உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்கன் என்பது ஒரு சமூகப் பொறுப்புள்ள த்ரில்லர், இது பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். விஜய் ஆண்டனி இப்போது மார்கனின் விளம்பர நிகழ்வில் படத்தின் அதே தோற்றத்தில் கலந்து கொண்டார். இது அவரது அர்ப்பணிப்பைப் பற்றி நிறைய பேசுகிறது. விஜய் ஆண்டனி தனது மருமகன் அஜய்க்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளார், மேலும் இந்த படம் ஒரு சரியான அறிமுகத்தையும் அவரது வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தையும் குறிக்கப் போகிறது. விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'வழக்கறிஞர்' படத்திலும் நான் வியப்படைகிறேன், மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான விருந்தாக இருக்கும். விஜய் ஆண்டனி சாரின் தன்னம்பிக்கையும், தொடர்ச்சியான திட்டங்களில் கையெழுத்திடும் அவரது துடிப்பான வேகமும் அற்புதமானது. நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். "மார்கன்" திரைப்படம் வெளியாகியுள்ளது. முழு குழுவினருக்கும் மிகப்பெரிய வெற்றியை வாழ்த்துக்கள்."

நடிகர் அஜய் திஷன் - இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக விஜய் ஆண்டனி ஐயா மற்றும் என் அத்தை பாத்திமா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. இயக்குனர் லியோ ஜான் பாலின் அர்ப்பணிப்பு மற்றும் கைவினைத்திறனைக் கண்டு நான் உண்மையிலேயே மயங்கிவிட்டேன். படப்பிடிப்பு தளத்தில், அவர் சில நேரங்களில் திடீரென்று தன்னைத் தூர விலக்கிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்து தோன்றுவார். எனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று ஆரம்பத்தில் யோசித்தேன். ஆனால் படத்தின் வெளியீட்டையும் அது உருவாக்கிய தாக்கத்தையும் பார்த்த பிறகு, அவர் சிறந்ததை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். எனது முதல் படத்தை இவ்வளவு அழகான அனுபவமாக மாற்றியதற்காக முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் எங்கள் பணிவான முயற்சியை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி."

போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது!

போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது!

உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டத்தில் 13 முதல் 14 மேம்பட்ட திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் 230 ஏக்கரில் ஒரு திரைப்பட நிறுவனம் ஆகியவை உருவாக உள்ளது. இந்த திட்டம் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். நொய்டா செக்டார் 21 இல் உள்ள திரைப்பட நகரத்திற்கான லே அவுட் திட்டத்தை போனி கபூர் சமர்ப்பித்துள்ளார் என்பதை யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) தெரிவித்துள்ளது.

இந்த கட்டுமானம் சலுகை ஒப்பந்த விதிகளுக்கு இணங்கும் என்று இதன் இயக்குனர் கூறியதாக HT தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு நிறுவனம், நீருக்கடியில் படப்பிடிப்பு ஸ்டுடியோ, விருந்தினர் தங்குமிடங்களுடன் மற்றும் பல வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நகரமாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு:
Media Contact: D'one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: d.onechennai@gmail.com
Ph. No:  99418 87877

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். 

வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில்  ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார். 

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், "இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்தையும் நான் தான் எழுதியுள்ளேன். ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை. இப்படத்தின் குழுவினர் மிகவும் நேர்மையோடு கடினமாக உழைத்துள்ளனர். பாடல்கள் சிறப்பாக வர வேண்டும் என்று இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களும் தனி கவனம் செலுத்தினர். படத்தின் நாயகன் விமல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. ‘பரமசிவன் பாத்திமா’ மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்," என்றார். 

ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் பேசுகையில், "இப்படத்தில் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுக்க இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு நன்றி. 'பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன், நன்றி," என்றார். 

நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், "இன்று எனக்கு மிக முக்கியமான நாள். தமிழ் சினிமாவில் என் பயணம் இப்போது தான் தொடங்குகிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி," என்றார். 

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், "இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை, அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். இந்த மேடையில் நான் பேச காரணமான எனது தாயாருக்கும், வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி," என்றார். 

இயக்குநரும் எழுத்தாளருமான சுகா பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவர். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரே தனது படத்திற்கான கதைகளை தன்னை சுற்றி நடப்பவைகளிடம் இருந்தே உருவாக்கினார். அவ்வாறு இசக்கி கார்வண்ணனும் அவரது ஊரில் அவர் பார்த்த சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
 
நடிகர் காதல் சுகுமார் பேசுகையில், "இந்தப் படக்குழுவினர் என்னுடைய குடும்பத்தினர் போன்றவர்கள். இப்படத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தைரியமான ஒரு விஷயத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். 'பரமசிவன் பாத்திமா' படத்தில் ஒரு காவலராக நான் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம் எஸ் பாஸ்கர் போன்ற திறமையான கலைஞர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார். 

நடிகை ஆதிரா பேசுகையில், "இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், வணக்கம்," என்றார். 

தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமாவை காதலிப்பவர். ஒரு வலுவான கதையுடன் தற்போது 'பரமசிவன் பாத்திமா' மூலம் வந்துள்ளார். நாயகன் விமலுக்கு வாழ்த்துகள், நடிகராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன், நன்றி," என்றார். 

நாயகி சாயாதேவி பேசுகையில், "இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உடனும் நடிகர் விமல் உள்ளிட்டோருடனும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஐந்தாம் தேதி இப்படம் வெளியாகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்," என்றார். 

இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் 'கிடாரி' திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பாடல் எழுதினார், அதற்காக அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்," என்றார். 

இயக்குநர் மனோஜ் குமார் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவர். ஒரு குடும்பம் போல் குழுவினரை வழி நடத்தி செல்வார். இப்படத்தை மிகவுக் சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரமாதமாக தனது பணியை செய்துள்ளார். விமலுக்கு இது ஒரு மைல்கல் படமாக அமையும். இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்," என்றார். 

நடிகர் விமல்ராஜா (வி ஆர்) பேசுகையில், "இப்படத்தில் சலீம் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை பெற உதவிய ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு நன்றி. விமல் சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். இந்த படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்," என்றார். 

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், "புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்," என்றார். 

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், "இந்த மேடையில் நான் வாங்கும் கைதட்டல் அனைத்தும் 'பரமசிவன் பாத்திமா' குழுவினரையே சேரும். படம் வெற்றி பெற உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை," என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசுகையில், "இசக்கி கார்வண்ணன் அவர்கள் எனக்கு ஊக்கமளித்தவர். எனவே இப்படத்தில் நடிக்குமாறு அவர் அழைத்துவுடன் மகிழ்ச்சியுடன் உடனே சம்மதித்தேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். 

சாட்டை துரைமுருகன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 

நாயகன் விமல் பேசுகையில், "வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை," என்றார். 

தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், "இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. 'பரமசிவன் பாத்திமா' திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்," என்றார். 

****

The Trance of Kuberaa Unveils A Spellbinding Glimpse Into Sekhar Kammula's Cinematic World — Audiences Already Hailing It A Blockbuster!


 The Trance of Kuberaa Unveils A Spellbinding Glimpse Into Sekhar Kammula's Cinematic World — Audiences Already Hailing It A Blockbuster!

The much-awaited “Trance of Kuberaa” from the upcoming film Kuberaa has finally dropped, giving fans a breathtaking glimpse into the unique world envisioned by National Award-winning director Sekhar Kammula. Featuring an ensemble of powerhouse performers — Dhanush, King Nagarjuna, Rashmika Mandanna, Jim Sarbh, and Dalip Tahil — the teaser has set social media ablaze, with fans and industry insiders alike declaring it a surefire blockbuster even before its release.

The teaser offers a subtle yet intriguing hint of the story, inviting viewers into a layered, atmospheric narrative that promises to blend drama, intensity, and visual spectacle. With Sekhar Kammula’s signature storytelling finesse on full display, “Trance of Kuberaa” builds a world that is both mysterious and captivating, leaving audiences hungry for more.

The production houses — Sree Venkateswara Cinemas, Asian Cinemas, and Amigos Creations — have kept the momentum high with a series of exciting updates leading up to this teaser release. Earlier this month, the first single “Poyivaa Nanba” became an instant chartbuster. A collaboration of the dream trio — Kammula, Dhanush, and rockstar Devi Sri Prasad (DSP) — the song features Dhanush’s dynamic vocals set to Viveka’s catchy lyrics and DSP’s electrifying score. The song’s teaser, which dropped just days ago, sent fans into a frenzy, and the full release has only amplified the buzz, trending across social media and music platforms.

As anticipation mounts, Kuberaa is shaping up to be one of the most eagerly awaited cinematic events of the year. With a prestigious bilingual production and a release slated for June 20, 2025, the countdown has officially begun.

Monday, May 26, 2025

கலைஞர் டிவியில்லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில்
லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியை தொடர்ந்து லக்‌ஷ்மிராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க, ஜூன் 2 முதல் திங்கள்முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி “உண்மைவெல்லும்”.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரஉருவாக்கப்பட்டுள்ளது.

House of Crompton மூன்று NITEO, FLUIDO ,SUPERFLO என்ற தனித்துவமான தயாரிப்புகளை கிராம்ப்டன் ஃபேன்ஸ் பி. எல் தலைவர் திரு. அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர் திரு. குரு விஜய் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

House of Crompton மூன்று NITEO, FLUIDO ,SUPERFLO என்ற தனித்துவமான தயாரிப்புகளை கிராம்ப்டன் ஃபேன்ஸ் பி. எல் தலைவர் திரு. அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர் திரு. குரு விஜய் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். 

 சென்னை தியாகராய நகரில் உள்ள ரத்னா ஃபேன் ஹவுசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம்ப்டன் குடும்பத்தின்,  Niteo,Fluido  மற்றும் Superflo ஃபேன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

Niteo வகை ஃபேன்கள் "நியூக்ளியஸ்" இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட முதல் ஃபேன் ஆகும்.  இது பிரத்யேக PCBயைக் கொண்டுள்ளதால், நீடித்த உழைப்பு, எளிதான சேவை மற்றும் சிறந்த தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. இது உற்பத்தியின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது அதிக உறுதியை வழங்குகிறது. 

Fluido இண்டக்ஷன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஃபேன். இதன் அட்டகாசமான, நேர்த்தியான அழகியல் வடிவமைப்பு,  பிரீமியம் தோற்றத்துடன்  அமைதியான செயல்பாடு ஆகியவை இதனை ஃபேன் வர்த்தகத்தில் தனித்து நிற்கச் செய்கிறது. இது வடிவம் மற்றும் செயல்பாட்டின் சரியான தயாரிப்பு ஆகும். 

260 CMM காற்று வழங்கக்கூடிய, சந்தையில் உள்ள ஒரே இண்டக்ஷன் ஃபேன்  Superflo மட்டுமே. இந்த வகை ஃபேன்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.  மேம்பட்ட "டர்போபூஸ்ட்" தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இது, சந்தையில் உள்ள மற்ற ஃபேன்களை விட சிறந்த ஆயுள் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. 

இந்த மூன்று மாடல்களும் தனித்துவமான மற்றும் துடிப்பான வண்ணங்களில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களின் அழைகை மேலும் கூட்ட சரியான தேர்வாக அமையும்.  

Niteo,Fluido,Superflo என்ற தனித்துவமான தயாரிப்புகளை கிராம்ப்டன் ஃபேன்ஸ் பி. எல் தலைவர் திரு. அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர்
திரு. குரு விஜய் நேஷனல் டிரேட் மார்கெட்டிங் மேலாளர், திரு. ராமகிருஷ்ணா கெய்க்வாட் , தெற்கு மண்டல தலைவர் திரு.சச்சின் தாரேஷ்வர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

3 மாடல் ஃபேன்களின் தனித்துவங்கள்: 

*Niteo*

குரோம்ப்டனின் சொந்த "நியூக்ளியஸ்" இயங்குதளத்தில் கட்டப்பட்ட முதல் ஃபேன் இது.  நீடித்தஆயுள், செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் கட்டுப்பாட்டை இந்த மாடல் மறுவரையறை செய்கிறது. 
60% வரை மின் சேமிப்பு,அதிக ஆற்றல் திறன் கொண்ட BLDC தொழில்நுட்பம், அதிவேகத்தில் சுழல வெறும் 24W மின்சாரம் மட்டுமே பயன்படுத்தும் இந்த ஃபேன் 
மேம்பட்ட ஆயுள், சிறந்த தரக் கட்டுப்பாடு மற்றும் எளிதான சேவைக்காக, பிரத்யேக PCB உடன் உருவாக்கப்பட்டுள்ளது.   ActivSight UI- அமைப்பு பயனர் தொடர்புகளை மேம்படுத்தும். 
சூடான எல். இ. டி விளக்குகள் இந்த ஃபேன் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது இரவு விளக்குகளாகவும் பயன்படுகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
அறையில் எங்கிருந்தும் எளிதாக கட்டுப்படுத்த வசதியான ஐஆர் ரிமோட் வழியாக இந்த ஃபேன் இயக்கப்படுகிறது.  இந்த ஃபேன்
4 ஆண்டு  உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. Niteo ஃபேன் மட்டுமல்ல, நீண்ட கால செயல்திறனில் நம்பிக்கை மற்றும்
ஆற்றல் சேமிப்பு வாழ்க்கை முறையை மேம்படுத்தும் ஒரு ஸ்மார்ட் தொழில்நுட்பம். 

*Fluido* 

Unibody வடிவமைப்பு, அமைதியான செயல்பாடு மற்றும் உயர்ந்த காற்றோட்டத்துடன் கூடிய பிரீமியம் டிசைனர் இண்டக்ஷன் ஃபேன் இது. 
தனித்துவமான யூனிபாடி வடிவமைப்பு-தடையற்ற மற்றும் சுத்தமான, நவீன தோற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த சத்தத்துடன் மேம்பட்ட காற்று விநியோகத்திற்கான ஏரோடைனமிக் விசிறிகள் கொண்டது. 
உயர் தர ABS வடிவமைப்பு சுத்தம் செய்ய எளிதானது. 
திறமையான, நிலையான செயல்திறனுக்காக ஆக்டிவ் பவர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது . 
இண்டக்ஷன் மோட்டார் தொழில்நுட்பம் அமைதியான, நம்பகமான செயல்பாட்டை வழங்குகிறது . 
பிரீமியம் வண்ணங்கள் கொண்ட மிருதுவான அழகியல்-வடிவம் மற்றும் செயல்பாட்டின் உண்மையான கலவை இதன் தனித்துவம். 
சந்தையில் வேறு எந்த ஃபேன்-னும் இந்த வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே கொண்டதில்லை என்பது இதன் தனிச்சிறப்பு.Fluido ஒரு ஃபேன் மட்டுமல்ல-இது நவீன வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட அழகியல் முற்போக்கு வடிவமைப்பு. ஆற்றல் மற்றும் திறமையான குளிரூட்டும் அனுபவம் தரும் இது உருவாக்கப்பட்டது என்பதை விட சிற்பமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். 

*Superflo*

260 CMM ஏர் டெலிவரி கொண்ட இந்தியாவின் ஒரே ஃபேன் இது. ஒப்பிடமுடியாத காற்றோட்டம் மற்றும் கடினமான செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் முன்னணி தயாரிப்பாக, 260 CMM காற்று விநியோகத்தை வழங்குகிறது. 
இந்த பிரிவில் இது சக்திவாய்ந்த குளிரூட்டலை வழங்குவதில் முதன்மையானது. 
அதிகபட்ச காற்று வழங்குவதோடு, பரவலான பகுதிகளுக்கு காற்று வழங்கும் அல்ட்ரா-வைட் ஏரோடைனமிக் விசிறிகள் கொண்டது. 
சிறந்த செயல்திறன் மற்றும் அதிவேக நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஹெவி-டூட்டி மோட்டருடன் கட்டமைக்கப்பட்ட இது, 
டர்போ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன்உருவாக்கப்பட்டுள்ளது. காற்றை வேகமாகவும் தூரமாகவும் பரவச்செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுள் கொண்ட அலுமினிய விசிறிகள் மற்றும் பாகங்களுடன் உருவாக்கப்பட்டது.  கடலோரம் அல்லது அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் கூட காற்றினால் ஏற்படும் அரிப்பு சேதத்தை எதிர்த்து, நீண்ட கால ஆயுளுக்கு ஏற்றது.
உயர் செயல்திறன், நீடித்த வலிமையை இந்த ஃபேன் வழங்குகிறது. கடினமான சூழ்நிலைகளில் கூட திறம்பட செயல்பட கட்டமைக்கப்பட்டுள்ள இது, நவீன கட்டட வடிவமைப்புகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில், கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.  
Superflo என்பது உச்சபட்ச உயர் செயல்திறன் கொண்ட ஃபேன். சக்திவாய்ந்த காற்றோட்டம், கடினமான கட்டமைப்பு மற்றும் நீடித்த இது மதிப்பை வழங்குகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா


நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா



நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். 

ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களை பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 

நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களை பகிர்ந்து கொண்டார். அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம்.  தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம்.‌ அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது. 

ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும்  சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.

இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம். 

ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன். 
தற்போது ஹெர் ஸ்டோரீஸ் என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது. இந்த பதிப்பகம் நூறு பெண்களின் கதையை சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராக தங்களது கதையை சொல்ல வேண்டும்.  அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா - இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன் . ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன் / பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்த காணொலியை பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தை பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது.  அந்த வகையில் இந்த சமூகத்திற்கு சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது. 

ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்த கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்த கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். 


என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு. அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரை பாதுகாத்து கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான். 
எல்லா பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள்.  திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 

இப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தெரிகிறது. இந்த படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்,'' என்றார். 

நடிகை அம்பிகா பேசுகையில், ''இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான்.‌ இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன்.  பொழுதுபோக்காக இருக்கிறது. 
இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ''இந்த மேடை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கவர்ச்சிகரமான பெண்களுக்கு மத்தியில் நானும் இருப்பதால் என்னுடைய கவர்ச்சியும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். 

வனிதாவை பற்றி இயக்குநர் வசந்தபாலன் அழகாக குறிப்பிட்டார். வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையை பார்க்கிறேன். நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். அவர்கள் தனக்கு பிடித்தது போல் வாழ்கிறார்கள். சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்த துணிச்சல் என்னை கவர்ந்திருக்கிறது. இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

சினிமாவில் அவர் பல தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்திருக்கிறார். அதை எல்லாம் கடந்து, இன்று வெற்றிகரமான பெண்மணியாக வலம் வருகிறார். இந்த சினிமாவை நீங்கள் முழுமையாக நம்பினால், சினிமா உங்களுக்கான இடத்தை நிச்சயமாக வழங்கும். 

இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது எளிதானதல்ல . பெரிய பொருட்செலவில் வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீனிக் கிரியேஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை நல்லதொரு தேதியில் வெளியிடுங்கள். ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் இந்த படக்குழு வெற்றி பெற வேண்டும். இந்தத் திரைப்படம் மத்திம வயதில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் நல்ல தேதியில் வெளியானால் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். 

தமிழ் சினிமாவில் 240 படங்கள் வெளியானால் அதில் இரண்டு பேர் மட்டுமே பெண் இயக்குநர்கள். இந்த தருணத்தில் நிறைய பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாகும் போது வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வனதா இயக்கி இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி வெற்றியை அளிக்கும் என நினைக்கிறேன்,'' என்றார். 

நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில், ''நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னை பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை தனது இடது கையால் புறம் தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. 

இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். 

இந்த படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். 

ஷகிலாவை இந்த படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில்  வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார். 

ஷகீலா பேசுகையில், ''வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தை தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம். 

பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்த படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன. 

எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். 

எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா. 

அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்," என்றார். 

ஜோவிகா விஜயகுமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது. 

இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது. 

நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். 

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், ''தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன்.  அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர். 
இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராக படங்களை தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது. 

ஜோவிகாவிற்காக தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் நன்றாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் சுந்தர் சி படம் போல் காமெடியாக இருக்கும்.

இப்படத்தில் நாயகன் ராபர்ட் மாஸ்டர் தற்போது கோவாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.  இப்படத்திற்குப் பிறகு அவர் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ''இதுவரை 125 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் , மாஸ்டர் வனிதா விஜயகுமார், ஜோவிகா என மூன்று டான்கள் இருக்கிறார்கள். இதில் ஜோவிகா தேர்வுதான் இறுதியானதாக இருக்கும். இந்த சிறிய வயதில் அவருக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டி தான் காரணம். அவர்களுடைய ஆசி இவருக்கு இருக்கிறது. 

ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் இணைந்த 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சங்கி மங்கி..' எனும் பாடல் 50 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களும் அதனை கடந்து புதிய சாதனையை படைக்கும். 

இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. கிளைமாக்ஸில் சாமி பாட்டு ஒன்றும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் பாடல்களை எழுதியும் இருக்கிறேன். 

இந்தத் திரைப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் - மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.  இந்தப் படத்தில் ராபர்ட் மான்ஸ்டர் நடனத்தை விட நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,'' என்றார்.

சதீஷ்-பாலா பேசுகையில், ''நாங்கள் இரட்டையர்கள் அல்ல, மூவர். மதியழகன் சொல்வதை செய்கிறோம். தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதற்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றார். 

இயக்குநர் வனிதா விஜயகுமார் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

'பிதா' படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம். 

அம்மாவிற்கு பிறகு அம்பிகா - ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன். ஷகிலா இந்த படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்த படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான். 

வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி பணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது. 

வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான 'அநீதி ' திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. 

நல்ல இயக்குநர் - பெரிய இயக்குநர்-  சிறந்த இயக்குநர் - என யாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் பெயருக்கு முன் 'ரொமான்ஸிக்கல்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.  

இயக்குநர் பி. வாசு சாரிடம் 'பொண்ணு வீட்டுக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா. அவர்களுக்கும் நன்றி. 

சமூக வலைதளங்களில் என்னை பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். 

இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். 'ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ' என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம். 

ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. 

வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

***


அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

*அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*  A...