Tuesday, April 30, 2024

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!  
‘Golden studios’  சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம்  தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன்  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப்  உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 

தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது… 
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த  வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம்.   எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.  உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.  

நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது… 
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு.  ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே  இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா.  டான்ஸ் மாஸ்டர் சாந்தி,  ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி,  என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது...
வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார்  பேசியதாவது...
படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா.  மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என  எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை  மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது...
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல  வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள்,  பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது.   ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 


நடிகர் மைம் கோபி  பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

நடிகர் சந்தோஷ் பிரதாப்  பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன்.  அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி  பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.  


நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது…
எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.  தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது…
இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே  கிளம்புவதைப் பார்த்துள்ளேன்,  இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.  தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த  வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள். 

நாயகன் ருத்விக் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம்,  நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப்  பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும்  கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள்,  நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான்  போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம்  முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன்  நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.   

இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி. 

இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த  மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார்.  இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில்  அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர்.  படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Monday, April 29, 2024

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!*

*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!*

*ரீல் குட் பிலிம்ஸின் 'எலக்சன்' மே 17 ஆம் தேதி வெளியாகிறது!*

'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ 

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'எலக்சன்' தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின்  வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை  தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

At the Skill Bridge Conclave 2024,Chairman of Agni Group of Companies R.N. Jayaprakash said that the quality engineering education provided in Tamil Nadu


 At the Skill Bridge Conclave 2024,Chairman of Agni Group of Companies R.N. Jayaprakash said that the quality engineering education provided in Tamil Nadu is the main reason for the development of the major cities of South India and Global companies are looking for Tamil Nadu. 

More than 200 HR Professionals & Industry experts participated in the program to bridge the gap between academia and industry participated in Skill Bridge Conclave 2024 organized by AGNI College of Technology hosted the much-anticipated event at the  WelcomeHotel by ITC Hotels. The event aims to underscore the pivotal role of work integrated learning and foster closer collaborations between academia and industry.

Mr.R. N. Jayaprakash, Chairman, Agni Group of Companies,Mrs.Bhawani Jay Prakash Chairperson,Prof T S Natarajan, Advisor (former IIT Madras Professor), Dr. Vijayakumar, COO, Garuda Aerospace & Dr. Srinivasan Alavandar, Principal, Agni College of Technology  graced the event and expressed their valuable inputs to the HRD experts.

Central to the SKILLBRIDGE event is the imperative to bridge the gap between academic knowledge and industry practices. AGNI College of Technology, recently bestowed with autonomous status by Anna University, is spearheading efforts to revamp its curriculum to align closely with the evolving needs of various industries. This includes the development of innovative Work Integrated Learning (WIL) programs designed to seamlessly integrate theoretical learning with practical, real-world experiences.

The event will serve as a platform for stakeholders from industry, and professional bodies to engage in meaningful discussions and collaborations. Through interactive sessions and panel discussions, participants will explore strategies to ensure that educational curricula remain abreast of current industry trends and demands.

Mr.R.N JayaPrakash ,Chairman  of AGNI group of companies  expressed enthusiasm for the event, stating, "SKILLBRIDGE represents a significant milestone in our ongoing efforts to nurture industry-ready graduates. By forging strong partnerships with businesses, organizations, and professionals, we aim to equip our students with the requisite skills and knowledge to thrive in today's dynamic workforce."

Dr. T. Natrajan, in his address, underscored the significance of Work Integrated Learning (WIL) and its uniqueness in bridging the gap between academia and industry, emphasizing its role in providing students with practical, real-world experiences to enhance their employability and readiness for the workforce.

Dr. Srinivasan Alavandar, Principal of Agni College of Technology, elucidated on Work Integrated Learning (WIL) and outlined AGNI's pioneering approach in its implementation, emphasizing the institution's commitment to shaping the future by seamlessly integrating academic learning with practical industry experience for students.

Key highlights of the SKILLBRIDGE event include:

Curriculum Innovation: AGNI College of Technology's commitment to curriculum enhancement, with a focus on integrating WIL programs to enhance students' employability and industry readiness.
Industry-Academia Collaboration: Facilitating dialogue and collaboration between academia and industry leaders to ensure that educational programs remain relevant and responsive to industry needs.
Practical Insights: Providing attendees with practical insights into effective strategies for aligning academic learning with the demands of the ever-evolving job market.

Networking Opportunities: Offering participants the chance to network with industry professionals, potential employers, and fellow educators to foster collaborations and exchange best practices.
The SKILLBRIDGE event promises to be a catalyst for transformative change in the realm of higher education, paving the way for innovative approaches to preparing future generations of professionals for success in an increasingly competitive global landscape.

Industry experts from leading software companies such as TCS, Wipro, Capgemini, Hexaware, etc and core companies including Brakes India, India Cements, Caterpillar, Ford etc participated in the event, offering valuable insights on Work Integrated Learning (WIL) and its implementation, enriching discussions on bridging the academia-industry gap.

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!*

*'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி  அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!*

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும்,  யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூகவலைதளங்களிலும் வைரலானது. 
 

இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இன்று வெளியாகியுள்ள புதிய டிரெய்லரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட திரையுலகில் உள்ள 6 முக்கிய நட்சத்திரங்களை இந்த டிரெய்லர் உடனடியாகக் கவர்ந்தது. 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, பி. சக்திவேலன் தனித்துவமான நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விநியோகம் செய்து முன்னணி விநியோகஸ்தராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் விநியோகிக்கும் படங்கள்  திரைப்பட ஆர்வலர்களுக்கு விருந்தாகவும் வர்த்தக வட்டாரங்களுக்கு லாபம் தருவதாகவும் உள்ளது. அவர் இப்போது ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளார். 
 
இயக்குநர் சாந்தகுமார் கூறும்போது, ”கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். ஒட்டு மொத்த படக்குழுவினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து, மே 10 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதை நடக்கும். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் எஸ்.எஸ்.தமன் (இசை), சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் (ஒளிப்பதிவு), வி.ஜே. சாபு ஜோசப் (எடிட்டிங்), சதீஷ் கிருஷ்ணன் (நடன அமைப்பு). சிவராஜ் (கலை), சேது (ஒலி எஃபெக்ட்ஸ்), எஸ் பிரேம் (நிர்வாகத் தயாரிப்பாளர்), யுகபாரதி (பாடல் வரிகள்), தபஸ் நாயக் (ஒலிக்கலவை), எம்.எஸ்.ஜெய சுதா (உரையாடல் பதிவாளர்), ஆக்‌ஷன் பிரகாஷ் (ஸ்டன்ட்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), ஆனந்த் (ஸ்டில்ஸ்) மற்றும் பெருமாள் செல்வம், மற்றும் மினுசித்ராங்கனி. ஜே (ஆடைகள்).

Sunday, April 28, 2024

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

பிரத்யேக போஸ்டருக்கு கிளிக் செய்யவும்..

https://x.com/vyjayanthifilms/status/1784189849282761177?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

அஸ்வத்தாமாவாக தோன்றும்  அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தின் மூலம்  '2898 AD கல்கி'யின் உலகத்தைப் பற்றிய சமீபத்திய பார்வை.. ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பழம்பெரும் நடிகரின் அற்புதமான இளமையான தோற்றத்துடன் கதாபாத்திரத்தினை வெளிப்படுத்தும் காணொளி... அசலான பான் இந்தியா டீசர் என்பதையும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் கலவை என்பதையும் காட்சிப்படுத்துகிறது.

நாக் அஸ்வின் இயக்கிய 'கல்கி 2898 AD' இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக அமைகிறது. ஆற்றல் வாய்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் வைஜெயந்தி மூவிஸ் ஆதரவுடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27 ஆம் தேதியன்று வெளிவரத் தயாராகிறது.

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024

This year's highly-anticipated sci-fi spectacle, Kalki 2898 AD, is set to win over the audiences worldwide on 27th June, 2024. With the biggest casting coup including the stalwarts of the Indian film industry such as Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone, and Disha Patani in pivotal roles, the film has garnered immense attention and kept fans eagerly awaiting its release.

The announcement, made today, precisely two months ahead of the release date, has only added to the excitement surrounding the project. Taking to social media, the makers unveiled the biggest news which read

https://x.com/vyjayanthifilms/status/1784189849282761177?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

A recent glimpse into the world of Kalki 2898 AD through Amitabh Bachchan's character as Ashwatthama left fans in awe, particularly with the stunning de-aging transformation of the legendary actor. The character reveal video, a true pan-India teaser, showcased a blend of languages including Tamil, Telugu, Malayalam, Kannada, and English.

Directed by Nag Ashwin, Kalki 2898 AD is set to be a biggest cinematic event of the year. With an incredible cast and backed by Vyjayanthi Movies, it's gearing up for its release on 27th June, 2024.

The Moscow City Tourism Committee is holding a conference for the key stakeholders from Indian MICE market


 The Moscow City Tourism Committee is holding a conference for the key stakeholders from Indian MICE market


Business tourism is one of the most promising directions for Moscow. In 2023, the capital was visited by 3.7 million business tourists - 7% more than in 2022. And India remains one of the leaders among visitors from non-CIS countries in terms of the number of business travelers. The Moscow City Tourism Committee recognized the market demands and organized the Shaping MICE Future Conference for representatives of the Indian MICE industry, to introduce them to the tourism strengths of the Russian capital. The event took place on April 19 in Delhi and brought together over 100 participants from MICE agencies of both countries, corporate customers, representatives of the travel industry in Moscow, Aeroflot and the Indian branches of Sberbank.

 

"The Russian capital as a center of business tourism and corporate events is already an established and a strong brand in the international arena," – commented Anastasia Popova, Deputy General Director for International and Industry Cooperation of Project Office for the Development of Tourism and Hospitality in Moscow. – Now our task is to demonstrate to our Indian partners all the possibilities of organizing high value MICE events in Moscow in combination with already proven tourist programs".

 

At the Shaping MICE Future Conference industry experts from Russia and India pronounced statements and speeches on the future of MICE events in these two countries, a presentation of the MICE potential of Moscow was showcased, and an analytical report on the state of the outbound MICE market in India was presented to the visitors. During the panel discussion participants assessed the current status and interaction peculiarities with the MICE market in India, and developed recommendations for the MICE industry in Moscow during the general brainstorming session. Representatives of the Indian MICE industry participated in B2B negotiations to find new cross-partners in the Moscow business environment and among representatives of the hospitality industry.  

 

Representatives of the MICE industry took part in the event from Moscow. Among them were DMC (Grand Rus, Academservice, Headed Goose, Satguru Travel, Isba Rus, Hug the Bear, Mellenium Group)) as well as representatives of other partners interested in the development of MICE cooperation between Russia and India: Global transfers provider i’way and hotels Edge Seligerskaya & Edge Vinogradovo Moscow by Rotana.

 

"In 2024, we have witnessed a significant surge (more than quadruple) in the demand for transfers by Russians visiting India, both for business and leisure purposes. Muscovites are leading the trend, with 80% of transfer bookings originating from the capital since the beginning of the year. Additionally, we observe a growing interest from Indian tourism agencies in exploring Russia, resulting in a substantial increase in our collaboration," — commented Dmitriy Saraykin, co-founder of Global Transfer Provider i’way. 

 

The Shaping MICE Future conference allowed the Moscow City Tourism Committee to form a pool of MICE industry representatives in Moscow to prioritize incoming requests for events, clarify India's requirements for business and corporate events to build mutually effective work. Indian colleagues received up-to-date information about Moscow as a safe and attractive MICE destination, and were able to find potential partners among representatives of the MICE industry of the Russian capital and were able to present the MICE market in India.

 

"The event served as a remarkable platform for fostering meaningful dialogue and collaboration within the tourism industry. The event provided us with invaluable opportunities to engage with key stakeholders from the tourism department, as well as tour operators and service providers. The insights gained during the event underscored the Moscow City Tourism Committee's keen interest in the Indian outbound market, and we are optimistic about the promising prospects for Moscow as a destination, particularly in the post-pandemic landscape. We firmly believe that with concerted efforts and strategic initiatives, Moscow has the potential to emerge as a top-choice destination for Indian tourists," — shared his impressions Mudit Mathur, director of Tours Delite India, representing Academ Service - Russia in India.

 

The conference also assessed the solutions to foreign demand for non-standard venues and elements in MICE programs, such as museums, parks, theaters and others. Holding MICE events at offbeat locations, such as the State Historical Museum, the Moscow Planetarium and Khudozhestvenny Cinema, is becoming popular. This helps to attract conference organizers and creates a unique experience for the participants. Working in this format, many visitors who came to Moscow on a business trip want to return with their families and spend time as regular tourists.

 

In 2023, 60 thousand guests from India visited Moscow - a quarter more than a year earlier. This year, according to the results of January and February India entered the top 5 countries in terms of the volume of e-visas issued. E-visa was one of the significant factors in the recovery of demand for hotel services and high utilization (76%) of Moscow hotels in 2023 and, as a consequence, the growth of international tourist traffic, the activation of business and classical tourists from India, China, Iran, Turkey, Saudi Arabia and so on.


One of the significant initiatives launched to support the growth of the tourist flow is the Moscow MICE Ambassadors Program – an online certification program for representatives of the Indian market, which aims to create demand for Moscow as a MICE destination. The Moscow City Tourism Committee and NIMA (Network of Indian MICE Agents) jointly launched the pilot project last year. The first 50 people from the Indian side who underwent the training and learned the intricacies of organizing business events in the Russian capital have received the relevant certificates. In 2024, the program will be made available to other MICE operators as well and is expected to expand to a total of 200 Moscow MICE Ambassadors by the end of the year.


Saturday, April 27, 2024

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார்.

ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்து அவளைப் பின்தொடரத் தொடங்குகிறான்.

சில குண்டர்கள் பிரியாவைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை விஷால் விரைவில் உணர்ந்தார். அவளைக் காக்க விஷால் எல்லா இடங்களிலும் செல்கிறார். யார் இந்த குண்டர்கள்? ஏன் பிரியாவை கொல்ல நினைக்கிறார்கள்? அவளுக்காக விஷால் ஏன் தன் உயிரை பணயம் வைத்தான் என்பது மீதிக்கதை.

ஹரி இயக்கும் திரைப்படம் வழக்கமாக ஒரு நிலையான டெம்ப்ளேட்டைக் கொண்டிருக்கும், ஆனால் அவரது முக்கிய பலம் கதை.

ஆனால், ரத்தினத்தில் கதை சொல்லுவதில் பின்னடைவு தெரிகிறது. ஹரியின் படங்கள் முன்னேறும் வழக்கமான வேகம் இல்லை.

இருப்பினும், படம் இன்னும் பார்வையாளர்களை ஈர்க்க வைக்கிறது.

விஷால் வழக்கம் போல் முழு நம்பிக்கையுடன் ஒரு தாக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அனைத்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். விஷாலின் உடல் மொழி நன்றாக இருக்கிறது, மேலும் படத்தைத் தன் தோளில் சுமந்து செல்கிறார்.

துன்பத்தில் இருக்கும் பெண்ணாக பிரியா பவானி சங்கர் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

யோகி பாபு உட்பட மற்ற நடிகர்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் படத்திற்கு முழு நியாயம் செய்தார். சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.


 

ORU NODI - திரைவிமர்சனம்

கணவனின் திடீர் மறைவால் மனதை உலுக்கிய சகுந்தலா, உறுதியான இன்ஸ்பெக்டர் பருத்தி இளமாறனின் உதவியை நாடுவதில் ஆறுதல் காண்கிறாள். அவருக்கு முன்னால் இரண்டு சிக்கலான வழக்குகள் விரிவடைகின்றன: ஒன்று, ஒரு அச்சுறுத்தும் கடன் சுறாவின் பிடியில் சிக்கிய காணாமல் போன மனிதனை உள்ளடக்கியது, மற்றொன்று, ஊழல் மற்றும் வஞ்சகத்தின் வலையை சுட்டிக்காட்டும் ஒரு குளிர்ச்சியான கொலை. அசைக்க முடியாத உறுதியுடன், பருத்தி நீதிக்கான தேடலைத் தொடங்குகிறார், பொய்கள் மற்றும் கையாளுதல்களின் தளம் வழியாகச் செல்லும் போது உண்மையைக் கண்டறியிறார்.

உண்மையைப் பின்தொடர்வதில், பருத்தி பல சந்தேக நபர்களை எதிர்கொள்கிறார், ஒவ்வொருவரும் அவரவர் ரகசியங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களில் மறைக்கப்பட்டுள்ளனர். தீவிர விசாரணை மற்றும் அசைக்க முடியாத உறுதியின் மூலம், அவர் வஞ்சகத்தின் இருண்ட ஆழத்திலிருந்து உண்மையின் துண்டுகளைப் பிரித்தெடுத்து, இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய குற்றங்களின் புதிரை ஒன்றாக இணைக்கிறார். விசாரணை விரிவடையும் போது, ​​பருத்தி தார்மீக இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கிறார், வஞ்சகத்தின் இருளுக்கு மத்தியில் நேர்மையின் பார்வைகளைக் காண்கிறார்.

ஏராளமான சந்தேகங்கள் மற்றும் திருப்பங்களுடன், சில சமயங்களில் விவரிப்பு மிகைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாலும், அது சூழ்ச்சி மற்றும் நுண்ணறிவின் தருணங்களால் மிதக்கிறது. உண்மையை வெளிக்கொண்டுவருவதில் பருத்தியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அவரது தளராத உறுதியும் இணைந்து, கதைக்கு அவசரத்தையும் நோக்கத்தையும் தருகிறது. சதி விரிவடையும் போது, ​​சிக்கலான அடுக்குகள் மீண்டும் உரிக்கப்படுகின்றன, இந்த வேறுபட்ட நிகழ்வுகளை ஒன்றாக இணைக்கும் சிக்கலான இழைகளை வெளிப்படுத்துகின்றன.

படத்தின் மையத்தில் இன்ஸ்பெக்டர் பருத்தியாக தமன் குமாரின் கட்டளையிடும் சித்தரிப்பு உள்ளது. வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நிகிதா உள்ளிட்ட திறமையான குழும நடிகர்களின் ஆதரவுடன், குமார் தனது நடிப்பில் ஆழத்தையும் தீவிரத்தையும் கொண்டு வருகிறார், அவரது காந்த இருப்புடன் படத்தைத் தொகுத்து வழங்கினார்.

வேகக்கட்டுப்பாடு சிக்கல்கள் மற்றும் வளைந்திருக்கும் ஒரு கதைக்களம் ஆகியவற்றை எதிர்கொண்டாலும், படத்தின் அடிப்படைக் கருப்பொருள்கள் கணிசமான எடை மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. "ஒரு நொடி" குற்றம் மற்றும் ஊழலின் பகுதிகளை ஆராய்கிறது, மனித இயல்பின் நுணுக்கங்கள் மற்றும் குறைபாடுகள் நிறைந்த உலகில் நீதிக்கான தேடலை நினைவூட்டுகிறது.

வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஈர்க்கும் முன்மாதிரியுடன், "ஒரு நொடி" சவால்களை எதிர்கொள்ளத் தேவையான பின்னடைவு மற்றும் ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. இது அதன் அதிகபட்ச திறனை அடையவில்லை என்றாலும், அது இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது, திரைப்படம் முடிவடைந்த பின்னரும் கூட உண்மை மற்றும் நீதியின் சிக்கல்களைப் பிரதிபலிக்க பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது.

Cast:-Thaman Kumar, Vela Ramamoorthy, M. S. Bhaskar, Sriranjini, Deepa Shankar, Pala Karuppaya, Arun Karthi

Director:-B. Manivarman

 

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்*

*கவின்+யுவன்+ இளன் கூட்டணியின்  இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்*

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, 'ஸ்டார்' எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌ இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

https://youtu.be/5QlTZEogGrE

Friday, April 26, 2024

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை #வெளியிடும்சிவகார்த்திகேயன்

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை 
#வெளியிடும்சிவகார்த்திகேயன்

தினமலர்’ நாளிதழில் வீடியோ செய்தியாளராக  பணியாற்றி வருகிறவர் கவிதா. ஏற்கெனவே கொலை விளையும் பூமி, சாக்லெட், தாத்தா என்கிற குறும்படங்களை தயாரித்த கவிதா தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். தனது உறவினர்களுடன் இணைந்து தனது இம்ப்ரஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார், மெட்ரோ புரொடக்ஷன் என்ற நிறுவனம் இணைதயாரிப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அவரது சகோதரி மகன் கதை நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.முன்னதாக படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார்.

SANCHU Animal Hospital Launches Innovative Online Nutrition Consultation Service for Pets


 SANCHU Animal Hospital Launches Innovative Online Nutrition Consultation Service for Pets

 

Chennai, 25th April 2024: SANCHU Animal Hospital, a leading multi-speciality pet care facility from the house of FMCG Major CavinKare, today announced the launch of its Online Nutrition Consultation service for pets. This innovative offering aims to provide specialized care to pets by enabling pet owners to have their furry companions receive personalized nutrition advice and guidance from experienced veterinarians at Sanchu Animal Hospital via video consultations, all from the comfort of their homes. Interested Pet owners can call 9355053890 between 8 am to 10 pm to schedule their appointments.

 

The Online Nutrition Consultation service offers a convenient platform for pet owners to seek expert advice on their furry companions' nutritional needs. Through virtual sessions, pet owners will have the opportunity to engage with SANCHU's team of expert nutritionists, who will assess each pet's individual dietary requirements and craft tailored diet plans accordingly. Whether it's addressing specific health concerns, recommending nutritional supplements, or managing weight issues, SANCHU's experienced veterinarians will provide holistic guidance to promote optimal health and vitality in pets.

 

With pets being integral members of families worldwide, ensuring their optimal health and well-being is paramount. Recognizing the evolving needs of pet owners and the increasing demand for convenient and comprehensive pet care solutions, SANCHU Animal Hospital has introduced the Online Nutrition Consultation service as a revolutionary step towards addressing pets' unique dietary requirements. The launch of the Online Nutrition Consultation service underscores SANCHU Animal Hospital's dedication to innovation and excellence in pet care. By leveraging technology to bridge the gap between pet owners and veterinary experts, SANCHU continues to set new benchmarks in the field of pet healthcare.

 

The benefits of Sanchu’s Online Nutrition Consultation service extend far beyond convenience. Priced at just ₹500 per session, this solution empowers pet owners to prioritize their pet’s health, with high-quality care and exceptional customer service.

 

About SANCHU Animal Hospital:  SANCHU Animal Hospital is the brainchild of Mr. CK Ranganathan, who is an avid and passionate pet lover. A multispecialty hospital, SANCHU houses hi-tech facilities to cater to all pets’ ailments. SANCHU believes in providing the best healthcare services to every pet with a large team of Doctors and support staff. SANCHU today has over 5 branches spread across Chennai and aims to treat pets with state of the art medical equipment and evidence based treatment.

About CavinKare: CavinKare is a diversified FMCG major with business interest in personal care, professional care, dairy, snacks, foods, beverages & salons. The brand portfolio consists of Shampoos (CHIK, Meera, Karthika, and Nyle), Hair Wash Powders (Meera & Karthika), Coconut Oil (Meera), skin creams (Fairever & Spinz), Deodorant; Talc (Spinz), Pickles; Snacks (Ruchi, Chinni’s & Garden), Hair colors (Indica), Retail Salon Products (Raaga Professional), Beverages (Maa), Dairy (Cavin’s), Beauty Salons (Green Trends & Limelite). Most of the brands are clear winners in their respective product categories. A dedicated  R & D center equipped with the latest equipment and technologies constantly supports the divisions in their endeavor. CavinKare has achieved significant milestones and a competitive edge with a sound understanding of mass marketing dynamics and has established a firm foothold in the national market. CavinKare’s success is based on it being firmly grounded to its corporate mission ‘We shall grow significantly better than the industry by fostering innovation and building preferred brands, through passionate and delighted employees.

 

Thursday, April 25, 2024

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது..
இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதைச் செய்துள்ளார். சாம் சி எஸ் இசைப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின், அவர்த் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம், இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். நான் ஒரு தமிழ் அமெரிக்கன், ஏன் அமெரிக்கர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட் எப்படிப் பெஸ்ட் கொடுக்கிறார்கள் அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம். நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்தக்கம்பெனி. இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.
BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசியதாவது…
பிடிஜி நிறுவனத்தின் பாபிக்கு முதல் நன்றி. சினிமாவில் வந்தது 8 வருஷம் ஆகிவிட்டது, அதில் பீக் இந்த வருடம் தான். பிடிஜி நிறுவனம் மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. பாபியும் நானும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பாபியை எப்போதும் பிரமிப்பாகப் பார்க்கும் அளவு, பணிகள் செய்துகொண்டே இருப்பார். நான் ஒரு மருத்துவன் என்றாலும் எங்கள் குடும்பம் மொத்தமும், பாபியைப் பிரமிப்பாக பார்க்கிறோம். பாபி படம் எடுக்கப்போகிறேன் பார்த்துக் கொள் என்று சொன்ன போது எந்த மறுப்பும் என்னிடம் இல்லை. பாபியின் ஷெட்யூல் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் அத்தனை வேலைகளை முடித்துவிட்டு, என்னுடன் இரவில் படம் பற்றிப் பேசுவார். என் மனைவியே என்னைவிட பாபியிடம் தான் அதிகம் பேசுகிறீர்கள் என்பார். ஆனால் நாங்கள் பேசினால் தான் அடுத்த ஸ்டெப் என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். எங்கள் உழைப்பும், பேச்சும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும் அது மாதிரி தான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள் இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். அடுத்தடுத்து திட்டமிட்டபடி பல படங்கள், எங்கள் நிறுவனம் மூலம் வரும். ஜெயம் ராஜா என் நீண்ட கால நண்பர், எனக்காக எங்களை வாழ்த்த வந்துள்ளார் நன்றி. அஜய் ஞானமுத்து எங்கள் நிறுவனத்தில் மிரட்டலான படத்தைச் செதுக்கி வருகிறார். டிமாண்டிக் காலனி 2 உங்களை மிரட்டும். அருண் விஜய் நான் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர், அப்போதும் இப்போதும் அண்ணன் என அன்பாக இருப்பார். அவர் எங்கள் படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக்கதை வந்தவுடன் அவரிடம் தான் முதன் முதலில் கதைச் சொல்லச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். திருக்குமரன் மிகச்சிறந்த திறமைசாலி, அவரிடம் பெரிய பிளானிங் இருக்கும். அது அவரது பிளஸ். இந்தப்படம் கண்டிப்பாகத் திருக்குமரனுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும். அவர்ப் பெரிய வெற்றிப் பெற்றால் எங்களுக்கு மகிழச்சி. சித்தி இத்னானி பலரது மனதைக் கொள்ளை கொண்டவர். இந்தப்படம் முடியும் போது தமிழ்ப் புலவர் ஆகிவிடுவார். தான்யா இப்படத்தில் பங்குகொண்டது மகிழ்ச்சி. சாம் சி எஸ் பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. நடிகர்ப் பாலாஜிக்கு இது பெரிய திருப்புமுனையாக இருக்கும். எடிட்டர் ஆண்டனி எப்போது கேட்டாலும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்பார், எங்களை வாழ்த்த வந்த ஆண்டனிக்கு நன்றி. எல்லாப்படமும் பிரம்மாண்டமாக வரும் எனச்சொன்னால் உங்களுக்குப் போரடிக்கும், ஆனால் அது தான் உண்மை. இந்தப்படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யம் தரும், டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும். நன்றி.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் ஆண்டனி பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி. இது நல்ல படமாக இருக்கும். அருண்விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் யோகி பேசியதாவது…
பாபி சார், மனோஜ் சார் மற்றும் திருக்குமரன் சாருக்கு நன்றி. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. எனக்குத் தந்துள்ள கதாப்பாத்திரத்தைச் சிறப்பாக செய்வேன். அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
திருக்குமரன் சார், பாபி சார், மனோஜ் சார் அனைவருக்கும் நன்றி. என்னை இந்தப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அருண்விஜய் சாரை ரொம்ப காலமாகத் தெரியும், பல நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. பிட்னெஸாக உடம்பை வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம் எனத் தெரியும். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் குவியும். என் படக்குழுவினருக்கும் மீடியாவிற்கும் என் நன்றிகள்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது. தயாரிப்பாளர்ப் பாபி சின்ன சின்ன விசயங்களுக்கும் எனக்குக் கால் செய்வார், தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப்பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும். ஒரு படம் ஹிட்டாகக் கதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிடிவிட்டி இருந்தாலே அந்தப்படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள். சாம் சி எஸ் என்றாலே பின்னணி இசையில் மிரட்டுவார் என்பார்கள் அதற்காக நான் பாடல்கள் நன்றாகச் செய்ய மாட்டேன் என அர்த்தம் இல்லை. நான் ஒவ்வொரு வருடமும் நல்ல பாடல்கள் தந்து வருகிறேன். இந்தப்படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும். இயக்குநர் ஒவ்வொரு பாடலின் போதும் தரும் பாராட்டுக்கள் எனக்குப் பெரும் ஊக்கம் தரும். இந்தக்கம்பெனிக்கு யார்ப் படம் செய்தாலும் ஹிட் படமாகத்தான் இருக்கும் இவர்களிடம் அத்தனைத் திட்டமிடல் இருக்கிறது. அருண் விஜய் சார் மிகப்பெரிய உழைப்பாளி, எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார். அவருடன் வேலைப் பார்ப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

Tuesday, April 23, 2024

On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*

*On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*

The Visionary Prasanth Varma has become a household name across the country after the Pan India sensation Hanu-Man. The creative director is bringing us another Epic Adventure from The Prasanth Varma Cinematic Universe (PVCU). The film titled Jai Hanuman is a sequel to Hnau-Man which was announced towards the end of the prequel. The script was already locked and the movie will be crafted on a big canvas. The movie will feature a stellar cast and popular craftsmen will be part of it.

The director who started the pre-production works of the movie on the momentous day of the inauguration of the Ayodhya Ram Temple has come up with a new poster for the Hanuman Jayanthi occasion. The poster sees Lord Hanuman standing valiantly on the cliff with a mace in hand, even though the dragon that is approaching him breathing fire. Prasanth Varma is bringing Dragons to the Indian screen for the first time. The poster gives hints about the kind of experience we are going to get with top-end VFX and other technicalities.

The movie Jai Hanuman will be released on IMAX 3D. The other details of this magnum opus are awaited.

Today, the team will be celebrating 100 days event of Hanu-Man.

RELAXAA Eco Friendly finest Bamboo Egyptian Cotton Bedsheets & Dohars launched by Saravanan Palaniappan & Revathi Saravanan

RELAXAA Eco Friendly finest Bamboo Egyptian Cotton Bedsheets & Dohars  launched by Saravanan Palaniappan & 
Revathi Saravanan

Experienced Unparalleled Luxury at RELAXAA Home Textiles Pvt. Ltd. Product Launch Event at Chennai - Saravanan Palaniappan, Co-Director of RELAXAA Home Textiles Pvt. Ltd., alongside Revathi Saravanan, announced the official launch  RELAXAA exclusive Product Launch Event  at TAJ Coromandel which gave the opportunity to explore and acquire unique collections, including Egyptian Cotton TC-400 bedsheets, the finest bamboo bedsheets from the eco-ease collection, and exquisite bamboo dohars, promising unparalleled comfort and style for every home.

Furthermore, in a strategic move towards retail expansion, RELAXAA is thrilled to announce the forthcoming inauguration of its flagship store in July 2024, marking the initial step towards a nationwide presence.

 Simultaneously, the company's global aspirations take shape with planned strategic launches in key international markets such as the UAE and Singapore, reaffirming its commitment to the "Make in India" initiative.

Saravanan and Revathi assure their clientele of their steadfast dedication to upholding the highest  standards of production and quality. With a pledge to deliver unmatched goods at competitive prices, 
RELAXAA invites customers to experience the epitome of luxury for every home.

Join Saravanan Palaniappan and Revathi Saravanan on their journey to redefine the world of home textiles, as they usher in a new era of affordable luxury with RELAXAA Home Textiles Pvt. Ltd.

Sunday, April 21, 2024

Aabaranam a new store opened at Adyar is the store house for latest trending Jewellery that can be rented or purchased.





 AABARANAM

 WHY BUY, WHEN YOU CAN RENT?

Aabaranam a new store opened at Adyar is the store house for latest trending Jewellery that can be rented or purchased. At Aabaranam, we offer the customers a chance to rent stunning temple and Indian Jewellery for special occasions

The Adyar based boutique features an exquisite collection that combines tradition with elegance. One can enjoy the luxury of high-quality accessories without the expense of ownership

Shine with Style and grace at your events and celebrate your dream day with exclusive bridal Jewellery collection. Wide variety of fashion Jewellery in Zircon, American Diamond, Antique and Matte finish Bridal Jewellery sets are in the offering. Sale options are also open to customers who wish to purchase their favourite pieces and like to own them

Rather than buying expensive jewellery, that is likely to adorn your bank locker far more than you, you can instead rent ornaments of your choice, at a fraction of the cost, look positively ravishing, and also be free of safekeeping responsibilities and the tension of guarding your jewellery, also get a wider selection

The store was inaugurated by Upasana RC, Film Actor and special invitee Soundarya Bala Nandakumar, Singer on the 21st April, 2024

The new store is located at 33A No 75 Gandhi Nagar, first main road, Adyar, Chennai 600 020 (above Apollo pharmacy, before Vivek & co) and can be contacted at 99405 95658

 

 

 

 

 

ROOBAN - திரைவிமர்சனம்

அய்யப்பன் இயக்கி எழுதிய "ரூபன்". எஸ், விஜய் பிரசாத் மற்றும் காயத்ரி ரேமா நடித்துள்ளனர், சார்லி மற்றும் ராமர் ஆதரவு. அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இது விரிவடைகிறது, அங்கு ஒரு ஜோடி கருத்தரிக்க இயலாமை காரணமாக சமூக தனிமைப்படுத்தலை எதிர்கொள்கிறது. கைவிடப்பட்ட குழந்தையை அவர்கள் தத்தெடுக்கும்போது அவர்களின் வாழ்க்கை ஒரு திருப்பத்தை எடுக்கும், அச்சுறுத்தும் புலியின் வருகையுடன், கிராமவாசிகள் இந்த ஜோடி மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

வன அதிகாரிகள் புலியை பிடிக்க மத்தியஸ்தம் செய்து, கிராம மக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். குழப்பம் இருந்தபோதிலும், சில கிராம மக்கள் புலியால் ஏற்படும் ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்குச் செல்வதில் உறுதியாக உள்ளனர்.

ஷாமுகம் (விஜய் பிரசாத்) மீது சந்தேகத்தை தூண்டி, நான்கு கிராமவாசிகள் மர்மமான சூழ்நிலையில் காட்டில் இறந்து கிடப்பது சோகம். தம்பதியரின் மகன் புலியை எதிர்கொள்வதற்காக காட்டிற்குள் நுழைவது மிகவும் மோசமானது, கிராமவாசிகளை மேலும் கோபப்படுத்தியது.

"ரூபன்" சமூகங்களுக்குள் மூடநம்பிக்கை மற்றும் தவறான புரிதல்களின் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அதே சமயம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது மக்களின் நெகிழ்வுத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. ஆன்மிகக் கருப்பொருளில் கவனம் செலுத்தாவிட்டாலும், படம் முடிவடையும் ஒரு உணர்ச்சிமிக்க பக்தி பாடலுடனும், அய்யப்பன் புலி மீது சவாரி செய்யும் தோற்றத்துடனும், மனிதகுலத்தின் நல்லெண்ணத்தை வலியுறுத்துகிறது. விஜய் பிரசாத்தின் சக்தி வாய்ந்த சித்தரிப்பும், அரவிந்த் பாபுவின் இசையும் கதையை மேம்படுத்தி, "ரூபன்" அதன் செய்தியை பார்வையாளர்களுக்கு திறம்பட தெரிவிக்கிறது.




 

Dr. Mohan's Diabetes Specialties Centre Honours Kris Gopalakrishnan with Lifetime Contribution Award

Dr. Mohan's Diabetes Specialties Centre Honours Kris Gopalakrishnan with Lifetime Contribution Award

 

Chennai, 20th April, 2024 : Dr. Mohan's Diabetes Specialties Centre (DMDSC) and Madras Diabetes Research Foundation (MDRF), today honoured Padma Bhushan Mr. Kris Goapalakrishnan, Infosys Co-founder & Trustee - Pratiksha Trust, with the prestigious DMDSC Lifetime Achievement Award 2024 in recognition for his pivotal role in advancing medical research in general and brain research in particular. The award was presented to Mr. Kris Gopalakrishnan by Dr. T.S Surendran, Chairman - Sankara Nethralaya, in the presence of Dr. V Mohan, Chairman - DMDSC & MDRF, Dr. Ranjit Unnikrishnan, Vice Chairman - DMDSC & MDRF, Dr. R.M Anjana, Managing Director - DMDSC & MDRF and other dignitaries.

 

On this occasion, Dr. Mohan’s Diabetes Specialties Centre and Madras Diabetes Research Foundation (MDRF) also jointly inaugurated India’s first Diabetes Museum - Madras Diabetes Research Foundation Diabetes Museum at the MDRF facility in Siruseri. The facility was formally inaugurated by Mr. Kris Gopalakrishnan along with management from MDRF and top management of TANUVAS who helped MDRF set up the Museum. As a globally renowned Centre of Excellence for Diabetes research, the Diabetes Museum at MDRF will be an exclusive museum dedicated to honouring and chronicling the decades long history of Diabetes research, its early treatment, milestones, scientific research and other technological breakthroughs by senior scientists across the globe.  

 

Commenting on the occasion, Dr. V. Mohan, Chairman - DMDSC & MDRF said, "Mr. Kris Gopalakrishnan's dedication to brain research is of immense national importance. His philanthropic initiatives, such as the Centre for Brain Research, are instrumental in addressing critical health challenges, including neurodegenerative disorders. It is a great honour to recognize his contributions, and we hope to see more such philanthropic endeavors across various medical fields.”

 

Receiving the award, Padma Bhushan Shri. Kris Gopalakrishnan, Infosys Co-founder and Trustee - Pratiksha Trust, said “I am deeply honoured to receive this recognition from Dr. Mohan, a pioneer in diabetes research whose contributions have significantly impacted medical science. The inauguration of the Diabetes Museum underscores the vital role of research institutions like MDRF in chronicling the history and advancements in diabetes research, ultimately aiming to make India a global leader in top-quality research. India has made remarkable progress in the startup ecosystem, and I am hopeful that similar strides will be made in research. The Centre for Brain Research aims to unravel the complexities of brain function, paving the way for innovative treatments and interventions. I envision India among the top five countries globally for top-quality research."

 

 

Adding to this, Dr. R. M Anjana – Managing Director - DMDSC & MDRF said “The inauguration of the Diabetes Museum at Madras Diabetes Research Foundation (MDRF) facility signifies a significant milestone in the journey of diabetes research in India. This exclusive museum will celebrate the decades-long history of diabetes research, showcasing milestones, scientific breakthroughs, and technological advancements by eminent scientists worldwide.”

 


About Dr. Mohan’s Diabetes Specialties Centres: Dr. Mohan’s Diabetes Specialities Centre is a one-of-a-kind diabetes speciality chain founded in the year 1991 headquartered in Chennai, Tamil Nadu. It is India’s leading diabetes care provider offering comprehensive services for diabetes patients. Dr. Mohan’s Diabetes Specialties Centres has 50 Diabetes centres and clinics in India and over 1 million people with diabetes have been registered at these centres and more than 5.5 million consultations have been completed till date. The Madras Diabetes Research Foundation is Asia’s largest standalone diabetes research centre. Appointments can be booked by calling 8939110000 or visit:  www.drmohans.com

 

 

IMAGE – 2 Left to right : Dr. Ranjit Unnikrishnan - Vice - Chairman - Dr. Mohan's Diabetes Specialities Centre, Dr. T S Surendran - Chairman - Shankara Nethralaya, Mr.  Kris Gopalakrishnan - Co-founder of Infosys and Trustee - Pratiksha Trust , Dr. R M Anjana - Managing Director - Dr. Mohan's Diabetes Specialities Centre and President - MDRF and Dr. V. Mohan - Chairman - Dr. Mohan's Diabetes Specialities Centre and MDRF

 

Saturday, April 20, 2024

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!  

Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன  நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.  

நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி,  என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB.

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்  இரத்தம் பாயும் கரும்  சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.   பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் லுக்கும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான தோற்றத்தில் மிரட்டுகிறது.  வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி,  ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நான்கு  கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங்க் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி  அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை  என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின்  டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு

எழுத்து  இயக்கம் – பிரிட்டோ JB
ஒளிப்பதிவாளர் - மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா
இசையமைப்பாளர் - தேவ் பிரகாஷ்
கலை – ராம் , தினேஷ், சுபேந்தர்
எடிட்டர் – தமிழ் அரசன்
ஸ்டண்ட் இயக்குனர் - ராக் பிரபு
ஒலி வடிவமைப்பு - சுகுமார் MPSE, ஸ்ரீகம்த் சுந்தர் MPSE,  ( The Soundables)
ஆடை வடிவமைப்பாளர் - ஸ்ரீதேவி, ரெபேக்கா, ஜீவா
நடன இயக்குனர் - சாண்டி
ஒப்பனை – கோலப்பன்
பாடல் வரிகள் - A.S தாவூத், அக்ஷரா பாலகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பாளர் - ஃபாக்ஸ் ஐ
மக்கள் தொடர்பு  - யுவராஜ்
இணை இயக்குநர் - மெல்பர்ட்
கலரிஸ்ட் - கௌஷிக்
வி எஃப் எக்ஸ் – அதிதியா
தயாரிப்பு மேலாளர் - செல்வம் இளையராஜா
தயாரிப்பு -Signature Productionz மற்றும் GS Cinema International

இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்*

*இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்* மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில்...