Wednesday, May 31, 2023

போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா,, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தென் மண்டலத் தலைவரான பிரமோத் செருவய்யா பேசுகையில்,'' எங்களுடைய அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ஐந்து ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறது. ஏராளமான இணைய தொடர்களை உருவாக்கியிருக்கிறோம். தமிழில் ‘குருதி களம்’, ‘இரு துருவம்’ என வெற்றி பெற்ற இணைய தொடர்களை தயாரித்து வழங்கியிருக்கிறோம். ‘போர் தொழில்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடியாகத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். மிகவும் வித்தியாசமான திரைப்படம். இயக்குநர் விக்னேஷ் ராஜா ரசிகர்களுக்கு அருமையான இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜானரிலான திரைப்படத்தை வழங்கி இருக்கிறார். இதுபோன்ற தரமான படைப்புகளை எங்கள் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம் ‘போர் தொழில்’ திரைப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம்.'' என்றார்.

எப்ரியாஸ் ஸ்டூடியோஸின் தலைவரான சந்தீப் மெஹ்ரா பேசுகையில், '' இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அனைவருக்கும் பிடித்திருந்தா?.. பிடித்திருந்தது எனில், ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து, உங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் திரைப்பட வணிக பிரிவின் தலைவரான சுனில் சாய்னானி பேசுகையில், '' இந்த படத்திற்கு அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன்  இணைந்து தயாரித்த E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் நிறுவனத்தின் முகேஷ் மேத்தா மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத் தலைவரான சந்தீப் மெஹ்ரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தின் போது இணைய தள சந்திப்பின் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜா முப்பது நிமிடம் இப்படத்தின் கதையை விவரித்தார். ஆனால் படத்தை பார்க்கும் போது இணையதளம் மூலமாக விவரித்ததை விட, பல மடங்கு நேர்த்தியாக உருவாக்கியிருந்தார். இதற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜாவை மனதார பாராட்டுகிறேன். இந்தத் திரைப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் என மூவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.'' என்றார்.

E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த முகேஷ் மேத்தா பேசுகையில், '' புதுமுக  இயக்குநரின் இயக்கத்தில் படத்தை தயாரிக்க தீர்மானித்தோம். அந்த தருணத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா விவரித்த கதை பிடித்திருந்தது. விக்னேஷ் ராஜா யாரிடம் கதை சொன்னாலும், ‘ கதை நன்றாக இருந்தது’ என அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். இப்படத்தின் கதையை கேட்ட நடிகர் அசோக் செல்வன், அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சம்மதித்தார். எப்ரியாஸ் ஸ்டுடியோவை சேர்ந்த சந்தீப்பும், அவர்களும் நன்றாக தொடர்பில் இருந்ததால், இணைந்து பணியாற்றினோம். இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக சரத்குமார் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலனை நன்குத் தெரியும். அவர் கடும் உழைப்பாளி. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடையும் வகையில் திரையரங்கில் வெளியீடும் பணியை மேற்கொண்டிருக்கிறார். 

அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று திரைப்படங்களை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரைத்துறை ஆரோக்கியமாக இயங்கும். திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகுதான், நட்சத்திரங்கள் நற்பெயரை சம்பாதித்து இருக்கிறார்கள். ‘போர் தொழில்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், '' போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா நான்கு மாதங்களுக்கு முன்னரே இப்படத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' திரைப்படத்தை திட்டமிட்டு தயாரிப்பதுடன், அதனை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் போன்றவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். சரத்குமார் இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சரத்குமாரின் இடத்தை நிரப்புவதற்கு தென்னிந்தியாவில் எந்த நட்சத்திரங்களும் இல்லை என உறுதியாக கூறலாம். அவர் இந்த படத்தில் தன் திறமையான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

'ஓ மை கடவுளே' படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்தத் திரைப்படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார்.

படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய விதத்தை பார்த்து, ‘இந்த இயக்குநர் எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார்’ என இப்படத்தில் நடித்திருக்கும் மூத்த தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் என்னிடம் தெரிவித்திருக்கிறார். இந்த இளம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படம் சுவாரசியமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.'' என்றார்.

இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ் பேசுகையில், '' அவ்வையாரின் ஆத்திச்சூடிப்படி, ‘போர் தொழில் புரியேல்’. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின்படி ‘போர் தொழில் பழகு’. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் அவ்வையார் ‘போர் தொழில் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பாரதியார் காலகட்டத்தில், நாம் வெளியிலிருந்து அடக்கப்பட்டதால், ‘போர் தொழில் பழகு’ எனக் குறிப்பிட்டார். தற்போதுள்ள காலகட்டத்தில் இதில் எது சரி..? இது என்ன? என்பதையும், இரண்டு நேர் எதிர் கருத்தியல்வாதிகள்  சந்தித்துக் கொள்ளும் களம் தான் இந்த திரைப்படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.'' என்றார்.

தயாரிப்பாளரும் நடிகருமான பி. எல். தேனப்பன் பேசுகையில், '' இப்படத்தின் தயாரிப்பாளர்களை ஒருவரான சி வி சாரதி, என்னுடைய நண்பர். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் திறமையை கண்டு வியந்தேன். படப்பிடிப்பின் போதே இப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. '' என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் 'போர் தொழில்' படத்திலும் நடித்திருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாரதி, ‘இயக்குநரிடம் கதையை கேளுங்கள். பிடித்திருந்தால்  நடிக்கலாம்’ என கூறினார். 

ஒரு சின்ன கதையை சொல்கிறேன். அதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக். இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார். 

இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார். 

என்னுடைய திரையுலக பயணத்தில் மிக விரைவாக நடிக்க சம்மதம் தெரிவித்த திரைப்படம் ‘போர் தொழில்’. படத்தின் கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தின் அளவைப் பற்றி கூட கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறோம். அதனால் நல்லதொரு தரமான கதையுடன் திரையில் தோன்ற வேண்டும் என விரும்பினேன். அது இந்த ‘போர் தொழில்’ படத்தில் இருக்கிறது. ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்கில் சந்திப்போம்.'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், '' எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி. கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குநரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசர் அவர்களுடனும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன். அவரை சந்திக்க சினிமா, அரசியல்.. என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார். இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார். இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக 'போர் தொழில் 2' வில் நடிக்க விருப்பம்.

நடிகை நிகிலா விமலுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். அவர் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

என்னுடைய சொந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இயக்குநர் விக்னேஷ் ராஜா எதிர்காலத்தில் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக உயர்வார். இதை நான் நண்பர் என்பதால் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அவருடைய திறமையை இந்த ‘போர் தொழில்’ படம் வெளிப்படுத்தும்.

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும்  டிரைலரைப் பாருங்கள். பிடித்திருந்தால் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ஆதரவளியுங்கள். ஏனெனில் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது, ரசிகர்களுக்கு சிறப்பான உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் காட்சி அமைப்பு.. ஒலி.. சிறப்பு சப்தங்கள்.. அனைத்தும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அமெரிக்காவிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்க வேண்டாம். ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

'தெகிடி' படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’  படம் நிச்சயம் பிடிக்கும்'' என்றார்.

நடிகர் ஆர்.. சரத்குமார் பேசுகையில், '' இயக்குநர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க.. பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார். இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது. முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.

எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு தரப்பினர் பல அதிரடியான திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இருப்பினும் நல்ல முறையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும், வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும்.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓ டி டி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள்‌. ஆனால் இந்தப் ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் அதனால் ஜூன் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் ‘போர் தொழில்’ படத்திற்கு திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், '' இயக்குநராக இருந்தாலும் எந்த விமர்சனத்தையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வேன். ‘போர் தொழில்’ போன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது. நான் இந்த படத்தை நினைத்த மாதிரி சுதந்திரமாக உருவாக்கி இருக்கிறேன். 

இந்த திரைப்படத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களை நன்றி தெரிவிக்க வேண்டும் என ஒரு பட்டியலை தயாரித்தேன் அது மிக நீண்டதாக இருந்தது. அதனால் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் என என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதன் பின்னணியில் பலரின் கூட்டு முயற்சி இருந்திருக்கிறது. நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இருப்பினும் அனைவரும் பல விதங்களில்.. பல விசயங்களில்.. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் -  புலனாய்வு பாணிலான திரில்லர் திரைப்படம். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தந்த ஐந்து நிமிடத்திற்கு பின் புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் இப்படத்தின் கதை அமைந்திருப்பதை உணர்வீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம். 

படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை. ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு... ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.'' என்றார். https://youtu.be/CfKZUZR1UDk

Sunday, May 28, 2023

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

*மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

*இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு நன்றி எழுத்தாளர் மீனா சாப்ரியா* 

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.  

யார் இந்த மீனா சாப்ரியா?

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா. 

இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதாவது:

எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது, 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. 

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி. 

அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை. 

நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது. 

நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். 

நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.

ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது,

எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.

மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை. 

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். 

ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 

17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார். 

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம். 

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். 

நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவரானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்.

மைக் செட் ஸ்ரீராம் பேசும்போது,

மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். “UNSTOPPABLE” என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர்.

இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 

ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார். இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. 

அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.  

நடிகை/தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது, 

இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.

ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது. 

இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,

நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.

அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து *“UNSTOPPABLE”* புத்தகத்தை வெளியிட்டனர்.

FREE FOOD TRUCK FLAGGED OFF BY CHENNAI

*FREE FOOD TRUCK FLAGGED OFF BY CHENNAI CORPORATION COMMISSIONER DR. RADHAKRISHNAN IAS AND ACTOR ASHWN KUMAR TO SERVE THE NEEDY IN THE CITY ON WORLD HUNGER DAY - AN INITIATIVE BY RAINDROPSS CHARITY FOUNDATION*

World Hunger Day is aimed to create awareness of chronic hunger that people live through and remind ourselves that hunger can be eliminated sooner than expected if the necessary political will, professional skill and people’s participation are brought together. 

In that spirit, Raindropss Charity Foundation a youth based social organization widely known for spreading social awareness to the public, partnered with Anifa Biriyani on the World Hunger Day, to donate food to the needy on the road sides in the main areas of the city. The free food truck was flagged from the Aasife Biriyani outlet, Koyembedu by Chennai Corporation Commissioner Dr. Radhakrishnan IAS and Actor Ashwin Kumar in the presence of Bhasit Rahman, Managing Director of Anifa Biriyani and Aravind Jayabal, Founder & Managing Trustee of Raindropss.

Serving the needy on the roadside is not something new to Raindropss, we already have a project Virunthali - Feedy the needy, where we serve the needy people every week. To do something special and big on World Hunger Day, we wanted to serve a large number of people through our Raindropss Free Food Truck and create awareness on chronic hunger, says Aravind Jayabal, Founder & Managing Trustee of Raindropss. 

Student Volunteers, Trustees and Members of Raindropss joined to help in serving the food to the needy.

Saturday, May 27, 2023

Fastest Indian to cover the four corners of India by car - 16 States - 4 Union Territories - 12,500 + Kms - One Epic drive- 3 Records, all in support of Girl Child Education"

Please find attached the press release about "Fastest Indian to cover the four corners of India by car - 16 States - 4 Union Territories - 12,500 + Kms - One Epic drive- 3 Records, all in support of Girl Child Education" for your kind perusal. 

Kindly publish the same in your esteemed publication.

Press Release

 

Fastest Indian to cover the four corners of India by car - 16 States - 4 Union Territories - 12,500 + Kms - One Epic drive- 3 Records, all in support of Girl Child Education

·       Coimbatore Businessman, Sports & Fitness enthusiast GD Vishnu Raam attempts a new Guinness World Record, World Records Union, Asian Book of Record and Indian Book of Record for being the fastest Indian to cover the four corners of India

·       Thiru K Shankar, IPS, Additional DGP, Law and Order, Tamil Nadu and Tmt. RV Ramya Bharati, IPS, Joint Commissioner of Police, North Chennai flag off the event from Anna Nagar Tower Park, amidst an august gathering

 

Chennai, May 28, 2023

 

A Coimbatore based Businessman, an Ultra Cyclist and a Marathon runner, GD Vishnu Raam embarks on a quest to cover 12,500 + Kms on an Epic drive to four corners of India - Kanyakumari - Tezu - Leh - Koteshwar on his indigenous Mahindra XUV 700 in 14 days, beginning May 28th 2023.

 

Flagged off by Thiru K Shankar, IPS, Additional DGP Law and Order, Tamil Nadu and Tmt. RV Ramya Bharati, IPS, Joint Commissioner of Police, North Chennai in the presence of other dignitaries, the first leg of the car expedition will see Vishnu drive from Chennai to Tezu, for about 3, 231 kms, from Tezu to Leh in the second leg for about 3,458 Kms, there on from Leh to Koteshwar for about 2,212 Kms and finally traversing 2,643 Kms from Koteshwar to Kanyakumari, in the last and fourth leg, before he drives 706 Kms to return to Chennai.

 

With six National records for expeditions (four by cycling and two by car) already to his credit, Vishnu Raam now attempts to clock 12,500+ Kms in 14 days to cover the four corners of India and break the earlier Guinness World Record of 401 hours achieved by India's Suresh Joseph. Also, during this remarkable journey he will be connecting with the locals to spread awareness on the importance of Girl Child Education.

 

Speaking to the media before his odyssey for a cause, GD Vishnu Raam said, " I am truly delighted and excited to begin my car expedition to the four corners of India. My passion for sports and fitness has brought me this far and I wish more and more youngsters take to the roads to set their fitness goals, either by running, cycling or driving and also achieve them in earnest. In the process they should also strive to give back to society in whatever way they can. This endeavour of mine is not only an attempt to create a Guinness World Record, but also to support 'Girl Child Education', a social cause that I strongly believe in. My inspiration stems from Dr BR Ambedkar's advocacy for Women's right to equal education and how he believed that education could help women achieve not only their own empowerment, but also empowerment of others through them. A Chennai based eminent artist has very artfully sketched the campaign logo- 'Girl Child Education and Dr B R Ambedkar'. The funds raised as part of this expedition will go for the development and enhancement of girl child education in Government schools of Chennai and Coimbatore".


Driving, running and pedalling for a cause!

 

From cycling to running to steering the wheel, his passion with purpose has seen him champion for social & environmental issues by integrating sports and fitness with one cause or the other!

 

GD Vishnu Raam’s national record accomplishments include:

 

Fastest cycling by an individual to cover 1000 Kms:

 

In November 2022, Vishnu Raam attempted a 1000 Kms cycling expedition, a national record, to create awareness around the growing menace of drugs in our country. In support of Tamil Nadu Government’s ‘Say No to Drugs’ Campaign, he undertook a non-stop cycle journey from Hyderabad International Airport to Coimbatore via Bangalore, where the ride was the toughest with high elevated roads making cycling difficult. In addition, heavy rains all through the Krishnagiri route affected his cycling speed too. With no sleep, no rest, undeterred, he pushed his limits to complete the attempt in a record time of 37 hours and 43 minutes and 22 seconds.

 

The fastest individual to cover 100 miles in road bicycling:

 

His solo cycling expedition in 2022 to create awareness on Global Warming and Climate Change saw him ride his Scott Addict 30 bicycle non-stop to reach Salem from Coimbatore airport in four hours, 28 minutes, and 19 seconds covering a distance of 161 kilometres. This endeavour fetched him the National record of being ‘The fastest individual to cover 100 miles in road bicycling’ and enter the India Book of Records and Asia Book of Records.

 

Maximum distance covered by an individual on bicycle:

 

The following year saw him cycling in support of the frontline covid warriors from Coimbatore International airport to Salem via Madurai, Trichy, Tirunelveli, Kayathaaru and Kanyakumari covering 623 kms in 23 hours and 52 mins and entering into the Asia Book of Record and India Book of Record.

 

Fastest Man to cover the Golden Quadrilateral by Car:

 

High on adrenalin his unstoppable adventures continued with a car drive through the epic golden quadrilateral, traversing 5853 kms across Chennai- Kolkata- Delhi- Mumbai in 82 hours, 20 minutes in his Toyota Fortuner to commemorate the 99th birthday of Iconic leader Kalaignar Karunanithi last year, thus entering the Limca Book of Record, Asia Book of Record and India Book of Record.

 

Maximum distance covered by an individual in 24 hours by car:

 

2020, the year of Pandemic saw Vishnu drive 2152.32 Kms in 20 hours 40 mins starting from Bangalore via Hyderabad to Nagpur and back to Bangalore by his car, as a tribute to the frontline Covid workers, creating a record for the maximum number of kilometres driven by an individual in India.


--

Friday, May 26, 2023

தீராக்காதல் - திரைவிமர்சனம்

ஜெய் தனது மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் திட்டத்திற்காக நகரத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவர் தனது கணவர் அம்சத்துடன் தவறான உறவால் அவதிப்படும் தனது முன்னாள் காதலர் ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார்.


ஜெய் அவளை ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறான், ஆனால் ஐஸ்வர்யா ஜெய்யிடம் மட்டும் ஆறுதல் பெற விரும்பி அவனிடம் திரும்பி வரும்போது விஷயங்கள் மாறுகின்றன.


குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வரும் ஜெய்க்கு இது பிரச்சனைகளை உருவாக்குகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது


இயக்குனர் ரோஹினும், எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்தும் படத்தில் மனித உணர்வுகளை நன்றாக ஆராய்ந்துள்ளனர்.


மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்திருக்கிறார்கள். இது பார்வையாளர்கள் திரைப்படத்தில் உள்ள விஷயங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.


படத்தின் முக்கிய பாசிட்டிவ்களில் ஒன்று ஒவ்வொரு கதாபாத்திரமும் பொறிக்கப்பட்டிருக்கும் தெளிவு. இரண்டு பெண்களுக்கு இடையில் வரும் கணவனாக ஜெய் பொருந்துகிறார்.


தெளிவான எண்ணங்கள் கொண்ட பெண்ணாக ஷிவதா நடித்துள்ளார், அவர் தனது பாத்திரத்தில் ஜொலிக்கிறார்.


ஐஸ்வர்யா ராஜேஷ், தனது முன்னாள் காதலனைப் பார்க்க முடியாதவராக, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


சித்து குமாரின் இசை மிக நன்றாக உள்ளது. பாடல்கள் மற்றும் BGM இரண்டுமே சுவாரஸ்யமாக உள்ளன. ரவிவர்மா இளங்கோவனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

 

1982 Anbarasin Kaadhal - Movie Review


படத்தின் அறிமுக இயக்குனரும் எழுத்தாளருமான உல்லாஸ் ஷங்கர், அவர் வித்தியாசமான கதை சொல்லலை முயற்சித்துள்ளார், கதை தேனி, போடிநாயக்கனூர், மூணாறு மற்றும் கேரளா சுற்றுப்புறங்களைச் சுற்றி விரிவடைகிறது. 1982 ஆம் ஆண்டு வெளியான அன்பரசின் காதல் கதை, ஒரு அப்பாவி பையன் அன்பரசு ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாக ஒருபுறம் காதலிக்கிறான், அவனது நண்பர்களின் உதவியுடன் அவன் காதலித்த பெண்ணிடம் (ப்ரியா) காதலை வெளிப்படுத்த முயற்சிக்கிறான்.


 


துரதிர்ஷ்டவசமாக, ப்ரியா கேரளாவின் இடத்திற்கு மாறுகிறார், அந்த சூழ்நிலையில் அன்பு காட்ட அன்பு தயங்குகிறார், இப்போது அவரது நண்பர்கள் அவரது பொறுமையை கிண்டல் செய்தனர். ஒரு சூழ்நிலையில், அன்பு ப்ரியாவிடம் இருந்து அழைப்பு வருகிறது, அன்பு ப்ரியாவுடன் ஒரு காட்டுப் பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார்.


 


தோழர்களே காட்டில் குழப்பமடைந்தனர், ஒரு விசித்திரமான மனிதன் (ஆறுமுகம்) அந்தச் சூழ்நிலையில் தலையிட்டான், இருவரும் அவருடைய வித்தியாசமான நடத்தைக்கு பயந்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களைத் துரத்துகிறார்கள். இந்த கடினமான நேரத்தில் எப்படி வழி தங்களை ஆபத்தில் இருந்து மீட்டது, அன்புவின் ஒரு பக்க காதல் என்ன ஆனது?


 


“1982 அன்பரசின் காதல்” பழைய ஃபார்முலா, வரவிருக்கும் ஆண்டுகளில் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை மிக வேகமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இயக்குனர் உல்லாஸ் ஷங்கர் பரபரப்பான முறையில் விளக்கம் அளித்துள்ளார். முக்கோணக் காதல் உணர்வுகள் கூட உணர்ச்சிவசப்பட்டு உருவாக்கப்பட்டன.


 


இயக்குனர் உல்லாஸ் ஷங்கர் அப்பா கதாபாத்திரத்தில் (ஆறுமுகம்) மிகவும் வலுவான மற்றும் ஆக்ரோஷமாக நடித்தார், ஆஷிக் மெர்லின் அவரது கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டார், மேலும் அருணிமா ராஜ் (காவ்யா) ஒவ்வொரு பிரேமிலும் அழகாகவும், நடிப்பில் போதுமானதாகவும் இருக்கிறார், படத்தின் ஒளிப்பதிவு ஜிஸ்பின் செபாஸ்டியன் காடு தோற்றம். கலகலப்பான மற்றும் இசை மற்றும் BGM நல்ல முறையில் ஒலித்தது.

Raghuthatha': Hombale Films' Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara


 Raghuthatha': Hombale Films' Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara


Hombale Films, the acclaimed production house behind blockbuster hits like 'KGF Chapter 2' and 'Kantara,' is delighted to announce the successful completion of the shooting for their First Tamil film, 'Raghuthatha.' This highly anticipated movie, directed by the award-winning writer of 'Family Man,' Suman Kumar, promises to captivate audiences with its powerful storytelling and remarkable performances.


Starring the immensely talented national award-winning actor Keerthy Suresh in the lead role, 'Raghuthatha' marks Hombale Films' first venture into Tamil cinema. Keerthy Suresh, known for her exceptional acting skills and extensive body of work in Malayalam, Tamil and Telugu films, has once again delivered a stellar performance that is sure to leave audiences in awe.


'Raghuthatha' is an empowering tale of a young woman's journey to save the identity of her people and land. Producer Viay Kiragandur expresses his enthusiasm for the project, stating, ‘Raghuthatha’ is a hilarious story of a fierce, rebellious young woman who has to choose between principle and patriarchy.


Hombale Films has established a reputation for delivering exceptional cinematic experiences, evident in their recent successes with 'KGF Chapter 2' and 'Kantara.' With 'Raghuthatha,' they continue to push boundaries and offer thought-provoking narratives that resonate with audiences on a deeper level.


Having completed the shooting for 'Raghuthatha', Hombale Films now embarks on the post-production phase, bringing together the creative efforts of a talented crew. The film features a stellar ensemble cast, including veteran actor M S Bhaskar, Devadarshini, Ravindra Vijay, Anandsami and Rajesh Balakrishnan, who have delivered impactful performances in their respective roles.


The production team of 'Raghuthatha' consists of accomplished professionals who have contributed their expertise to create a captivating cinematic experience. Ramcharantej Labani serves as the production (art) designer, music director Sean Roldan, known for his work in 'Jai Bhim,' has composed the film's score and national award-winning costume designer Poornima has crafted the characters' distinctive looks. Anand has lent his skills as the sound designer, while Yamini Y has skillfully captured the film's visuals as the cinematographer. T S Suresh has taken charge of film editing, ensuring a seamless and engrossing narrative.


'Raghuthatha' is set to enthrall audiences when it releases in the third quarter of 2023. Hombale Films has a huge line up for the next 2 years. Salaar starring Prabhas is slated to release in September 2023, Dhoomam starring Fahadh Fasil due to release in June 2023. In addition to these, there will be 2 more regional releases which will happen in this year from the production house. They have been on a roll after the humongous success of Kantara and KGF Chapter 2. Hombale Films has always embraced innovation and consistently strives to provide their fans with unique and unparalleled cinematic experiences. With a unique storyline in Raghuthatha, they’re aiming to start another revolution in the entertainment industry.

கழுவெத்தி மூர்க்கன் - திரைவிமர்சனம்


 வெவ்வேறு சாதியைச் சேர்ந்த அருள்நிதியும் சந்தோஷ் பிரதாப்பும் பால்ய நண்பர்கள்.


பள்ளிக் காலத்தில் அருள்நிதியின் உயிரைக் காப்பாற்றுகிறார் சந்தோஷ். அதனால், அருள்நிதிக்கு அவர் மீது அதிக ஈடுபாடு.


ஆனால், கிராமத்தின் முன்னாள் தலைவரான அருள்நிதியின் தந்தைக்கு இது பிடிக்கவில்லை.


ஜாதி அடிப்படையிலான கட்சியின் மாவட்டச் செயலாளராக ராஜசிம்மன் உள்ளார். கிராமத்தில் தனது கட்சி பலத்தை வெளிப்படுத்த மெகா பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை சந்தோஷ் கிழித்தார்.


இதனால் ராஜசிம்மன் தனது பதவியை இழக்கிறார். விரைவில், சந்தோஷ் இறந்து கிடந்தார், மேலும் பழியை அருள்நிதி மீது சுமத்தினார்.


அருள்நிதி காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடுகிறார், ஆனால் சந்தோஷைக் கொன்றவர்களை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு


கௌதம் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாதி அருள்நிதிக்கும் சந்தோஷுக்கும் இடையேயான நட்பைக் கையாள்கிறது. அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் இடையேயான காதல் பகுதியும் உள்ளது.


படம் இரண்டாம் கட்டத்தில் ஒரு முழுமையான திருப்பத்தை எடுத்து ஆக்ஷன் மற்றும் பழிவாங்கும் பாதையில் செல்கிறது.


மூர்கசாமி கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துகிறார், முகபாவனையால் மிரட்டுகிறார்.


துஷாரா விஜயன் ஒவ்வொரு படத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார், மேலும் அவர் தனது இருப்பை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார்.


அருள்நிதியின் நண்பராகவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகவும் சந்தோஷ் தன் பங்கை சிறப்பாக செய்திருந்தார். அருள்நிதியின் பெற்றோரால் அவமானப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு சுவாரஸ்யமாக இருந்தாலும் அதையெல்லாம் தன் நண்பருக்காக பொறுத்துக்கொள்கிறார்.


ராஜசிம்மன் வில்லனாக ஜொலித்து தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.


இமானின் பின்னணி இசை துடிக்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் கணேஷ் குமாரின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி சிறப்புடன் குறிப்பிடப்பட வேண்டும்.

Thursday, May 25, 2023

Varshace Boutique Launches its 4TH Retail Outlet in V R Chennai Mall

Varshace Boutique Launches its 4TH Retail Outlet in V R Chennai Mall 


~ Inaugural Offer 50 % OFF on Selected Products till 31st May 2023 ~  


Chennai, May 25, 2023: Varshace is launching a new location for its boutique in Chennai. Spread over 500 sq ft in Chennai’s most popular shopping mall V R Chennai in Anna Nagar s a premier boutique for women and children. Nestled in the heart of Chennai, Varshace Boutique aims to captivate shoppers with its exquisite collection of fashion-forward attire and accessories, tailored to meet the discerning tastes of modern women and their little ones. Shri G Rajeswara Reddy, Field General Manager, Indian Bank inaugurated the 4th Outlet of Varshace Boutique today at V R Chennai in the presence of Mr Devendiran and Mrs Sasikala Devendiran, Directors, Varshace Boutique. 


Varshace sets itself apart by curating an exceptional range of clothing and accessories that effortlessly blend style, quality, and comfort. Varshace specializes in designer sarees, Leheng Choli, Pure soft silks, Fancy Sarees, Kurti lehenge, Western wear, Pure cotton sarees, Party wear frocks, Custom-made blouses and other costumes, and any sort of ceremonial ensemble for women and kids. Varshace Boutique has it all under one roof with a great collection of designer attire and the difference is that most of the clothes we make are inspired by our nation’s rich heritage of art and craft.


The boutique's elegant interior, infused with a contemporary ambiance, creates an inviting atmosphere where customers can explore a carefully selected range of brands and designs. The attentive and knowledgeable staff members are dedicated to assisting shoppers in finding the perfect ensembles, offering personalized recommendations and styling advice to ensure each customer leaves feeling confident and satisfied.


"We are thrilled to unveil Varshace Boutique at V R Chennai Mall, a fashion haven that celebrates women and children alike," said of Mrs Sasikala Devendiran, Director, Varshace Boutique. "Our vision is to create a destination where women and children can discover their individual styles and express themselves through fashion. Varshace is more than just a boutique; it's a place where memories are made, connections are forged, and dreams are inspired. “Added, Ms. Sasikala


Our endeavor is to empower the Indian woman with our designs, to celebrate her identity, beauty, and, to enable her to inspire the people around her.  Our prices start at INR 500


For Further details: https://varshaceboutique.com/

Facebook: https://www.facebook.com/profile.php?id=100091964426242

Mob: 9840848473

Wednesday, May 24, 2023

Experience an exclusive Spring/Summer 2023 Luxury Eyewear Showcase in Chennai at Lawrence & Mayo Boutique, India’s leading optician brings you a taste of what’s in vogue

Summer is here! Let’s get our Sunnies out .

Experience an exclusive Spring/Summer 2023 Luxury Eyewear Showcase in Chennai at Lawrence & Mayo Boutique, India’s leading optician brings you a taste of what’s in vogue.


Chennai, 19th May 2023:

Featuring some of the world’s leading eyewear brands with their seasonal collections, the Spring/Summer 2023 Luxury Showcase will include creations from Bvlgari, Burberry, Prada, Tiffany, D&G, Versace, Oliver Peoples, Coach, Michael Kors, and Giorgio Armani. Curating an array of exquisite eyewear from around the world under one roof, Lawrence & Mayo is also bringing an exclusive kids section from Emporio Armani, so you can style your little ones too.

Lawrence & Mayo has a 146-year-old legacy that began all the way back in 1877. A favorite since the time of the royals and renowned for the highest standard in precision eye-care solutions, L&M is spread across more than 100 locations in 30 cities in India, offering genuine and authentic branded eyewear products. To carry forward this legacy of being a formidable presence in the luxury and fashion segment, Lawrence & Mayo Boutique was launched in three cities with the aim of being a destination for premium luxury eyewear for the discerning clients and celebrities. The extensive luxury brand portfolio, a unique personal shopping experience and a state-of-the-art eye-testing facility, are some of the things that set these stores apart.

With the motive of bringing out the best look for the customers with their eyewear, the showcase will see L&M’s team of experts advise on the best ways to accessorize your eyes with classy and stylish eyewear, and complete the summer looks for the hottest season of the year. Featuring a nail bar for the ladies, get ready to empower your new avatar with premium eyewear from Lawrence & Mayo. You can also save your look with a polaroid click at the chic photo booth as well.

Aimed at creating a unique personalized shopping experience for our clients  L&M’s Spring - Summer 23 collection at this scale is something that Chennai has never seen before. Word on the street is that there are special offers that await the customers through the 3 days. If you were eyeing for something special to add to your summer ensemble, Lawrence & Mayo has got you covered with à la mode options from around the globe. It’s time to trend!

Directors, Mrs. Menaka Mendonca and Mr. Amitava Mendonca said, “The Lawrence & Mayo Boutique is the One stop destination for luxury eyewear in Chennai. We have showcased the latest Spring/Summer 2023 eyewear collection of brands like Oliver peoples, D&G, Coach, Prada, Bvlgari, Burberry, Versace, Tiffany etc. to the discerning Chennai clientele to get their look for the season.”

Experience an exclusive Spring/Summer 2023 Luxury Eyewear Showcase in Chennai at Lawrence & Mayo Boutique, No. 3-A, Ground Floor, Second Street, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai. 044-2833 2757/58.


Walkaroo Launches Walkaroo+- The affordable premium men’s range is set to revolutionize the footwear market

Walkaroo Launches Walkaroo+- The affordable premium men’s range is set to revolutionize the footwear market

 

National, 24th May 2023: Elevating men’s footwear in India with a captivating blend of finesse and style to the men’s footwear category in India, Walkaroo, India’s leading footwear manufacturer today announced the launch of Walkaroo + a new premium range of footwear collection for men designed with premium texture with elegant style while maintaining the core expectations from consumers such as durability, affordability, and quality. With this collection, Walkaroo aims to revolutionize the market by offering customers an unmatched selection of premium designs at an affordable price point.

 

Commenting on the occasion, Mr. V Noushad, Managing Director, Walkaroo International Private Limited, said, “Walkaroo+ s is a game-changer in the footwear industry and our goal is to create a range that appeals to fashion-forward individuals seeking premium designs at an affordable price point. We are excited to introduce this collection and believe it will resonate with our customers. Our team of expert designers has meticulously crafted each pair to incorporate the latest trends while ensuring long-lasting durability.”

 

Commenting on the launch, Mr.Rajesh Kurian, DirectorWalkaroo International Private Ltd, said, “In the current market landscape, consumers are actively pursuing products that strike a balance between premium quality and affordability. To distinguish itself in this competitive environment, Walkaroo+ aims to provide customers with an exceptional premium experience through its sophisticated design and utilization of premium materials, offered in a range of exquisite colors. While Walkaroo maintains its stronghold in the mass segment across various categories, the introduction of Walkaroo+ will be perceived as an affordable premium range within the mass segment, ensuring unparalleled comfort and elevating your walking experience to new heights Following the successful launch in Kerala, which garnered encouraging feedback from our channel partners, we are excited to expand its availability to other regions across the country.”

 

About Walkaroo: Walkaroo, a homegrown brand, was launched in the year 2012 to continuously provide the latest in footwear fashion for everyone. Walkaroo introduced sports sandals at Rs 499 and was a pioneer to set a trend of aspirational products at affordable ranges in the footwear segment. The brand grew its portfolio with more additions that included flip flops, and sports shoes for men and women. It has sub-brands, Walkaroo & Walkaroo + to cater the consumers across age groups. During the financial year 22- 23, Walkaroo recorded a turnover of over Rs 2072 crore. The brand has a pan-Indian presence through over 700 dealers and reaches out to customers through over one Lakh retail outlets. The brand also works towards sustainable initiatives like renewable energy, water recycling, and afforestation at most of its manufacturing locations.

 

 

 

 

Thanks & Regards

 

Tuesday, May 23, 2023

திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும்  பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள்.


சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்
பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.
 
தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: குமார் ஸ்ரீதர்,
இசை: வேத் சங்கர் சுகவனம்,
கலை இயக்குநர்:  ஸ்ரீமன் பாலாஜி,
பாடல் வரிகள்: மணி அமுதன்,
சண்டைப்பயிற்சி: விக்கி,
காஸ்ட்யூமர்: எஸ். நாக சத்யா,
தயாரிப்பு மேலாளர்: மணி தாமோதரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
படங்கள்: பாலாஜி.

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 


MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  

இந்நிகழ்வினில்.. 

தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… 
நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்


இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார் என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள். ஆனால் கவிதா அவர்களின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது அவரது தந்தை TN பாலு அவர்களின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன் அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும் என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள்வேண்டும்.  நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன். இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

நடிகர் கதிரவன் பேசியதாவது..,  
இயக்குனர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி ,
என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார், இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,  அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி.  மட்டும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி. 



எங்கேயும் எப்போதும்  இயக்குநர் சரவணன் பேசியதாவது.., 
கவிதாவை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் காரணம் அவரின் தைரியம், அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும் அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது.  படம் வெற்றி பெற  என்னுடைய வாழ்த்துக்கள். 

Y G மகேந்திரன் பேசியதாவது 
நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன் ஆனால் இந்தப்படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி, TN பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர் அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை, அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார், கதை அருமையாக நகரும் அது படம் பார்க்கும்போது தெரியும், இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் ஆனாலும் அது ஒரு முயற்சிதான் மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் நன்றி. 



கதாநாயகி பூஜா பேசியதாவது.. 
இந்தப் படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி , இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் ஏங்கியுள்ளேன் இப்போது அது உண்மையாக நடப்பது  மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தப் படத்தில் என்னை நம்பி எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்த  இயக்குநர் கவிதாவிற்கு நன்றி , தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி, ஒவ்வொரு நாளும் எனக்கு ஆர்வமாக இருந்தது , படக்குழு அனைவருக்கும் எனது நன்றி , பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும், இது அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்,  அனைவருக்கும் நன்றி



படத்தொகுப்பாளர் டாய்ஸ் பேசியதாவது 
இந்தப் படத்தில் இயக்குநர் கவிதாவின் பங்களிப்பு மிகவும் பெரியது , இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மிகப்பெரும் பொதுநலத்தை பற்றி பேசும் படம், மக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


இயக்குநர் கவிதா பேசியதாவது…
இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின். ஒய் ஜி மகேந்திரன் சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள்  என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம் என் தந்தை TN பாலு இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தை, ஒய் ஜி மகேந்திரன்  சார் நடிக்க காரணம் என் தந்தை. இந்த பெருமை போதும் எப்போதும் பழையதை மறக்காதீர்கள், புதுப்பித்துக்கொண்டே இருங்கள். என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன்.  பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல, பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. 






நடிகர்கள் 
அஜித் விக்னேஷ், பூஜா சங்கர், நடராஜன் (கனடா), கதிரேசன், செந்தில் நடராஜன் (கனடா), ராதா ரவி, Y G மகேந்திரன் கதிரவன் பாலு , கார்த்திக், சக்தி (கனடா) வெங்கடேஷ் ஆறுமுகம் (அசத்த போவது யாரு) தென்காசி நாதன் வினோத் (KPY) DR அமுதா குமார், ஜீவா கார்த்திக், அஷ்வின் சுதந்திரம். 


தயாரிப்பு: மேட்டினி ஃபோல்க்ஸ் 
தயாரிப்பு  : ஜி. பிரதீப் குமார் ஆஷா மைதீன் இணை தயாரிப்பு: கதிரேசன் செந்தில் இயக்கம்: கவிதா 
ஒளிப்பதிவு : என்.எஸ்.ராஜேஷ் குமார் & ஸ்ரீவட்ஸ் 
எடிட்டர் : டாய்ஸ்.BM 
இசையமைப்பாளர்: தர்ம பிரகாஷ் 
கலை: சங்கர் 
உரையாடல்கள்: கவிதா & ராசி தங்கதுரை ஸ்டண்ட்: குன்றத்தூர் பாபு 
உடைகள் : சத்யா 
ஒப்பனை : நந்தினி லோகநாதன் 
தயாரிப்பு மேலாளர் : ஆம்பூர் ஜே நேதாஜி
டிசைன்ஸ்: குமரன் 
மக்கள் தொடர்பு :  பரணி அழகிரி, திருமுருகன்.

Monday, May 22, 2023

தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*'தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்,  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்… 

பாடலாசிரியர்  மோகன்ராஜா பேசியதாவது 
இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்தால் தன் எக்ஸ் உடன் நாகரீகமாகப் பழகுவார்கள். மனைவியுடன் அன்பாக இருப்பார்கள். ஜெய்யுடன் முன்பே எஸ் ஏ சி சார் படத்தில் பாட்டெழுதி உள்ளேன். ஐஸ்வர்யா மேடமுடன் வேலை பார்க்க வேண்டுமென ஆசை, அவர் இப்போது பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் வாழ்த்துக்கள்.  இந்தப்படத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் அனைவருக்கும் நன்றி. 

பாடலாசிரியர் விக்னேஷ் பேசியதாவது..,
'தீராக் காதல்' எனக்கு மிக  முக்கியமான படம். ஏனெனில் இது இசையமைப்பாளர் சித்துவின் படம். நாங்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள், ஜெய் சாரின் 'வாமனன்' படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பாடல் மட்டுமில்லை படத்தில் வரும் அனைத்து பாடலும் நன்றாக வந்துள்ளது, படக்குழுவிற்கு வாழ்த்துகள் நன்றி. 


இசையமைப்பாளர் சித்து குமார் பேசியதாவது… 
'தீராக் காதல்'- திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம் தான் இயக்குநர் ரோகின் அறிமுகம். என்னை இந்தப்படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி.  லைக்கா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி. எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப்படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப்படம் விழிப்புணர்வு தரும். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. 


நடிகர் அப்துல் லீ பேசியதாவது…
ரோகின் சாருக்கு இது மூணாவது படம். அவருடைய மூணாவது படத்துலயும் நான் இருக்கிறேன் என்பதே சந்தோஷம்.  ஐஸ்வர்யா மேடம், ஷிவதா மேடம் இருவரும் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஜெய் சாரை ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே ரொம்ப பிடிக்கும். நான் வியந்து பார்த்த பிரபலங்களுடன் நடிப்பது சந்தோஷம். இந்தப்படத்தில் நீங்கள் ரிலேட் பண்ணிக்கொள்ள நிறைய இருக்கும். இந்தப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. 


ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் பேசியதாவது… 
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் ரோகின் வெங்கடேசனுக்கு நன்றி. ஜெய் சார் போன்ற பெரிய ஹீரோவுடன் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வை, வந்தவுடன் இயல்பாகப் பழகி, போக வைத்துவிட்டார். ஷிவதா மேடமுடன் 'அதே கண்கள்' படத்திலும் வேலை பார்த்துள்ளேன். ஐஸ்வர்யா மேடமும் இயல்பாக இருந்தார். நடிகர்கள் சிறப்பாக இருக்கும் போது எங்களது வேலை எளிதாகிவிடும். இந்தப்படத்தில் எனக்குப் பிடித்த கேரக்டர் அம்ஜத் கேரக்டர் தான். சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் நிறையச் சுதந்திரம் தந்தார். லைக்கா புரடக்‌ஷனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 

நடிகர் அம்ஜத்  பேசியதாவது.., 
மேடை ஏறிப் பல நாட்கள் ஆகிவிட்டது, இந்த வாய்ப்பினை  அளித்த ரோகினுக்கு நன்றி. படத்தின் முழுக்கதை பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய பகுதி மட்டும்தான் எனக்குத் தெரியும், ஒட்டு மொத்த கதையும் அதற்குப் பின்னர் தான் தெரியும், என்னுடைய கதாபாத்திரம், தனித்துவமாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி. 

எழுத்தாளர் ஜி. ஆர். சுரேந்திர நாத்  பேசியதாவது..
இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், ரோகினும் 'கும்பளாங்கி நைட்ஸ்' படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்த மாதிரி படம் தமிழில் பண்ணவேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால், அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. முன்பு எக்ஸ் லவ்வர் சந்திப்பது மிக அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியை விட, எக்ஸ் லவ்வருடன் தான் டச்சில் இருக்கிறார்கள். இந்தப்படம் நடக்கும் போது, என் தாய் தந்தையரை உடல் நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப்படத்தின் கதை தான். இந்தக்கதை உணர்வுகளை.. நடிகர்கள் நன்றாக நடித்தால் தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசியதாவது..
முதன் முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள் எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிகள் விதித்தார், ஒன்று டான்ஸ்  இருக்க கூடாது மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது , இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி. 



நடிகை ஷிவதா பேசியதாவது , 
இதற்கு முன்னாடி ரோகினுடன் அதே கண்கள் படத்தில் வேலை பார்த்துள்ளேன்.  அப்போதே அவரிடம் அடுத்து என்ன எனக் கேட்டேன். காதல் கதை தான் என்றார். என்னை நடிக்க வைப்பீர்களா? என்று கேட்டேன். இந்தக்கதையை அனுப்பினார். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். ஐஸ்வர்யா  அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக்கொண்டே இருப்பார். நிறைய உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார். சித்து மிக நல்ல பாடல்களை தந்துள்ளார். சுரேந்தர் சாரிடம் இது யாருடைய கதை எனக்கேட்டேன். சிரித்தார். இந்தப்படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…, 
எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும்  இயக்குநர் ரோகினுக்கும்,  இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார்.  அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது, ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது  அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார். இந்தப்படம்  மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி


நடிகர் ஜெய் பேசியதாவது…,
இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது, ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார்.  பாடல்களும், இசையும்  அருமையாக வந்துள்ளது. சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும், இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி அவருடைய பணி தனித்துவமாக இருக்கும், படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர், ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன், தயாரிப்பாளர் லைக்கா தமிழ் குமரனுக்கு நன்றி, ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி, படம் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி. 


இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசியதாவது..
இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைக்காவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல   கிடைக்காம போறது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக்கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன் தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப்படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார். சுதன் இந்தப்படம் செய்யவில்லை என்ற போது தான் லைக்காவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப்படம் ஓகே ஆனது. ஹீரோ எனும் போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால்,  பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும், அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள்.  ஜெய் வசனம் இல்லாத போது தான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன். ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார், ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப்பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். வ்ரித்தி குழந்தைகளை நடிக்க வைப்பது தான் கஷ்டம்,  ஆனால் வ்ரித்தி எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். மிக அட்டகாசமாக நடித்துள்ளார். அம்ஜத் என் எல்லாப்படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச்சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக்கதை மீது நம்பிக்கை கொண்டவர். எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக்கொள்வார். டெக்னிகல் டீமில் எல்லோருமே மிகக்கடுமையாக உழைத்துள்ளனர். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப்படம் ஆரம்பிக்கும் போது, வீட்டில் காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றார். அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப்படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப்படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார். என் குடும்பத்திற்கு நன்றி. தீராக் காதல் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் மே 26 அன்று உலகமெங்கும்  திரைக்கு வருகிறது.

Sunday, May 21, 2023

ஏஜிஎஸ் #25 - தளபதி #68* *பத்திரிகை செய்தி*



*ஏஜிஎஸ் #25 - தளபதி #68*
 
*பத்திரிகை செய்தி*
 
*கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்* 

 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.
 
'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. 
 
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 
 
ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
 
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். 
 
நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
 
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.

***

Saturday, May 20, 2023

Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School for Training Collaboration


 Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School for Training Collaboration 

 

Chennai, May 20, 2023

 

GVR Foods Private Limited, which runs Geetham Veg, a leading vegetarian chain in Chennai, has entered into a partnership with Welcomgroup Graduate School of Hotel Administration (WGSHA), India’s top-rated hospitality school, promoted by Manipal Academy of Higher Education, a deemed university, in association with Welcomgroup, a division of ITC Hotels, to enhance the training and employment opportunities of WGSHA’s students.

 

The association would also help Geetham Veg introduce new, innovative items to its evolving menu, and give academic exposure to its 150-odd culinary team by way of training, joint-research, and paper publications, facilitating their professional development and career progress. The MoU was signed by Mr. Narayana Rao Murali, Managing Director, GVR Foods, and Dr. Chef K. Thirugnanasambandham, Principal, WGSHA recently.

 

Commenting about the WGSHA partnership, Mr. Murali N Bhat said, “We are extremely happy to have a formal collaboration with India’s leading hospitality school. With the partnership, we will be able to share our industry expertise with the students, but we would also gain new insights and fresh perspectives from the next generation of hospitality professionals. We have over a decade of experience in the culinary and hospitality industry. We have established ourselves as a respected and reliable provider of high-quality, fast-service Indian vegetarian cuisine. As an industry leader, we are committed to give back to the community while also developing a pipeline of talented, skilled professionals for our industry. We look forward to a continued successful partnership.”

 

According to the agreement, which is modelled on industry-institute partnership aimed at bridging the gap between theory and industry practices in the hospitality field. It paves the way for the experienced chefs, kitchen and service staff from GVR Foods to visit WGSHA as subject matter experts to conduct guest lectures, counselling sessions, and career talks. GVR Foods will also provide scholarships, internships, and job opportunities to eligible students, and conduct campus interviews.

 

In his comments, Mr. Thirugnanasambandham, said, “We are elated and extremely excited about our collaboration with GVR Foods. This partnership will add an advantage to both, WGSHA and Geetham by pioneering in Vegetarian cuisine. Geetham, being famous for its vegetarian delicacies will prove to be an excellent learning opportunity for WGSHA students. It will be a monumental step in providing an in-depth knowledge about Indian cuisine to the future hospitality professionals. WGSHA is the foremost institute to provide a post graduate program with a Master's in Indian Cuisine. Our linchpin is to put Indian cuisine on a global map by getting qualified professionals from the industry to train our students. This kind of an industry-academia interface will help our students acquire an abundance of expertise from the master chefs at Geetham. It will also be an extraordinary way to build mobility for our students and faculty members in terms of internships and refresher training at Geetham.

 

Post pandemic, the travel and tourism industry has undergone an instantaneous change in terms of business dynamics and rise in technological interface. Today's travelers are expecting curated experiences in fine-dine as well as casual dining restaurants. This alliance will help young minds expand their horizon and give them the freedom to innovate and create new products, which is the need of the hour in the hospitality industry.

 

According to research done by the ministry of tourism, our industry is in dire need of chefs that are well versed with vegetarian cuisine. With this partnership with GVR, we are definite that moving forward, we can enhance our curriculum by digging deep into the micro cuisines of India and strengthening our position as a leading hospitality institute”.

 

As part of the partnership, WGSHA will establish a space to be known as GVR Corner, which will have a dedicated notice board to display all relevant communications, information, highlights, success stories, events, and achievements related to GVR Foods. In addition, the schools newsletter will share expert commentaries of the staff of GVR Foods in its newsletter, and magazines. 


THE INAUGURATION OF CHENNAI FOOTBALL ASSOCIATION’S (CFA) SENIOR DIVISION LEAGUE 2022-23*



*THE INAUGURATION OF CHENNAI FOOTBALL ASSOCIATION’S (CFA) SENIOR DIVISION LEAGUE 2022-23*

*Chennai, 19th May 2023*:

The Chennai Football Association (CFA) is organizing five division leagues at various grounds including the Senior Division League 2022 – 23. The CFA’s Senior Division is extremely special in that regard because it has been the breeding ground for almost every talent that has come up from the South Indian state.

The inauguration of the league will be held at the ICF Stadium, Chennai.  The Chief Guest SHRI S. SRINIVAS, Principal Chief Mechanical Engineer - ICF will inaugurate the league. M/s. S.S. Mishra, CWE/FUR, ICF, Mr. Ankur Chauhan, Dy. CMM/s, ICF, Mr. T. Santhan – Octopus Marine, Mr. M. Raja Kumar – Industrialist, Mr. Wilson Cherian, Sr. Sports Officer - ICF, Mr P. Mohandoss – JAC Convener - ICF Labour Union will be the Guest of Honour.

As AIFF have banned foreign players in the local leagues, CFA league will be held without foreign players.  There are eight teams in the fray in the 2022-23 season. 28 matches in the senior division will be played at ICF Stadium / Jawaharlal Nehru Stadium. There will be one Senior Division matches every day at 4.00 pm.  First Division matches will commence at 2 PM and the second match at 4.00 PM.

 “Chennai Football Association league is the best among the leagues conducted throughout India.  Chennai League is the only platform for the best available players throughout Tamilnadu to show cause their talents, thereby getting appointment in state and central government departments and or to become a professional player. Players from all over the country also can be seen in action.”, says Mr. E Sugumaran, Secretary – Chennai Football Association.

The inaugural match kicks off between ICF and Income Tax on 19th May, 2023 at ICF Stadium. Cosco Platina football will be used in all matches. Entry to matches is free!

TEAMS – SENIOR DIVISION LEAGUE:

i) Swaraj FC                                                             
ii) Accountant General Office                             
iii) Income Tax                                                          
iv) ICF 
v) Chennai Customs
vi) Indian Bank
vii) Central Excise 
viii) Nethaji FC. 
                                                                         

LOCATION:

Senior Division            -     ICF Stadium, ICF.
First Division               -     ICF Stadium, ICF.
II Division                    -     Don Bosco Hr. Sec. School Campus, Perambur.
III Division                   -     Corporation Play ground, Kannigapuram, Chennai – 12.
IV Division                   -     St. Peter’s Church Football ground, Royapuram

*MEDIA CONTACT*                                                  

Anita D                                                          
+91 7358628294 | anita.squashpr@gmail.com
SQUASH PR & COMM.

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை #வெளியிடும்சிவகார்த்திகேயன்

#பத்திரிகையாளர்தயாரிக்கும் படத்தின் முதல் பார்வையை  #வெளியிடும்சிவகார்த்திகேயன் தினமலர்’ நாளிதழில் வீடியோ செய்தியாளராக  பணியாற்ற...