Tuesday, May 21, 2024

Tip and Toe Nail Club Celebrates Successful Meet and Greet Events in Chennai

Tip and Toe Nail Club Celebrates Successful Meet and Greet Events in Chennai
 
Chennai, [21st May 2024] – Tip and Toe Nail Club is thrilled to announce the successful completion of our highly anticipated meet and greet events, held at two prime locations in Chennai. The events, hosted at our Annanagar and Palladium Mall, Velachery salons, provided an exclusive opportunity for clients to interact with our expert salon professionals. Guests experienced personalized consultations, insightful beauty tips, and first-hand demonstrations of our premium services.
 
Our meet and greet sessions were designed to offer an immersive experience, showcasing the extensive range of services that Tip and Toe Nail Club has to offer. Attendees were treated to live demonstrations and interactive sessions where they could witness the meticulous artistry involved in our treatments. The events fostered a vibrant community atmosphere, with enthusiastic participation from our valued clients and new visitors alike.
 
At both locations, participants had the chance to explore a variety of services that Tip and Toe Nail Club specializes in, including:
Nail Extensions & Gel Polish: Transforming nails with beautiful, durable extensions and a variety of stunning gel polish colors.
Gel Polish for Hands & Feet: Offering long-lasting, high-gloss finishes that add elegance to any look.
Basic Manicure and Basic Pedicure: Pampering clients with essential nail and cuticle care, leaving hands and feet refreshed and revitalized.
Eyelash Extensions: Enhancing natural beauty with expertly applied lashes that add volume and length.
Lash Lifting & Tinting: Providing a natural lift and tint to lashes, creating a more dramatic and defined appearance.
Brow Lamination & Tinting: Sculpting and tinting brows for a polished and refined look.
The Annanagar event showcased our commitment to bringing premium nail and beauty services to a broader audience, while the Palladium Mall, Velachery location emphasized our dedication to convenience and luxury. Both events were marked by enthusiastic participation and positive feedback, reinforcing Tip and Toe Nail Club's reputation as a leading destination for nail and beauty treatments in Chennai.
 
Tip and Toe Nail Club looks forward to hosting more engaging events in the future, continuing our mission to provide exceptional beauty experiences and foster a community of beauty enthusiasts.
 

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள 'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு


 பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள 'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு

மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது

சென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் (சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்) ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்’ எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். 

இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கி உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே பி ஒய் சரத் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள 'ஜண்ட மட்டான்’ வெளியானது. பல்வேறு துறைகளை சார்ந்த முன்னணியினர் இதில் பங்கேற்றனர். 

மருத்துவத்துறையில் பாரீஸில் தனிப் பயிற்சி பெற்றுள்ள டாக்டர் சீனிவாசன், அடிப்படையில் கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். முக்கியமாக பாடல், இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இதன் காரணமாக தனது பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் பின்னணி சுவாரசியமானது. ஆரம்பத்தில் டாக்டர் யூ.பி.எஸ் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். அது நாகர்கோயில் வட்டார வழக்கில் கூறப்படும் ‘நள்ளிரவு பேய்களின் ஆட்டத்தை’ பற்றிய கதை ஆகும். பலராலும் பாராட்டப்பட அக்கதையையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என யோசிக்க உடனே நண்பர்களோடு சேர்ந்து களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் ஆரிஷ் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். அப்போது இதில் வருகிற பேய்களின் ஆட்டத்திற்கு ஒரு பாடல் தேவைப்பட, அதை மேலோட்டமாக எடுத்து விடாமல் தனி ஆல்பமாக எடுப்போம், இசையின் ஒரு பகுதியை குறும்படத்தில் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். டாக்டர் யூ.பி.எஸ் நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் அவரே ‘ஜண்ட மட்டான்’ என்ற இதற்கான ஒரு பாடலை எழுதிட, இசையமைப்பாளர்கள் H.ஹூமர் எழிலன், H.சாஜஹான் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்திட, மாஸ்டர் சுரேஷ் சித் நடனம் அமைத்திட, அதையும் இயக்கநர் ஆரிஷே இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை பார்த்த ‘சரிகம’ அதை வெளியிடுகிறது.

தனது ஆபரேஷன் பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பம் பணி பற்றி டாக்டர் யூ.பி.எஸ் பேசுகையில், “நான் அடிப்படையில் ஒரு டாக்டர். கலையில் சின்ன ஆர்வம் உண்டு, அவ்வளவு தான். ஒரு சிறுகதையாக தொடங்கியது இப்படி குறும்படமாக, ஆல்பமாக உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் என் பாட்டி சொன்ன கதையின் விரிவாக்கம் தான் இது. நண்பர்களின் உதவியோடு தான் இதை தயாரித்து உள்ளேன். ஆல்பத்திற்கான பாடல் வரிகளை கூட என்னை வற்புறுத்தி தான் எழுத வைத்தனர். பாட்டி கதையில் சில சமூக கருத்துகளையும் இணைத்து பாடல் வரிகளை அமைத்துள்ளோம். இதில் நிறைய கிராபிக்ஸ் வேலைகளை பார்த்தது எனக்கு சினிமா பற்றிய புது அனுபவமாக இருந்தது. இப்போது ஆல்பமாக பார்த்துவிட்டு எல்லோரும் பாராட்டும் போது மனநிறைவாக, மகிழ்ச்சியாக உள்ளது. இது தரும் உற்சாகம் என்னை இன்னும் இத்துறையில் பயணிக்க வைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

Monday, May 20, 2024

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது* !!

*யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது* !!

*இறுதிக்கட்ட பணிகளை துவக்கிய வானவன் படக்குழு* !! 

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு,  
ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது. 

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும்  மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.

யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன்  இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்

திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்
----------------------------------------------
முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன்,  வினோத் சாகர்   ஆகியோரின் நடிப்பில் உருவான "திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார். 

பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில்,
கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திறைவி படத்தை இயக்குனர் சசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்

ஒளிப்பதிவு-
 R.அதிசயராஜ்
இசை - என்.டி.ஆர்
பாடல்கள்-அருண்பாரதி, வெ.மதன்குமார்
எடிட்டிங்-R.வசந்தகுமார்
நடனம் - எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு மேற்பார்வை-
S.M.ராஜ்குமார்
மக்கள் தொடர்பு - வெங்கட்

உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் இது என்கிறார் இயக்குனர் கார்த்தி தக்ஷிணாமூர்த்தி

மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன் - வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!*

*“மிராய்” மூலம் மீண்டும் திரையில்,  மின்னும் வைரமாக வருகிறான்,  கருப்பு வாள் வீரன் - வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!*

எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமுகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான  மிராய் உலகில்  'தி பிளாக் வாள்'  எனும் வாள் வீரனாக அவதாரமெடுக்கிறார். இப்படத்தில் சூப்பர் யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பிரபல படைப்பாளி கார்த்திக் கட்டமனேனி இப்படத்தை இயக்குகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இணையற்ற உற்சாகம் நிறைந்த இந்த சூப்பர் ஹீரோ  பிரபஞ்சத்தில், மனோஜ் அறிமுகமாகிறார்.

மனோஜ்  பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜின் “தி பிளாக் வாள்” கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு விசித்திரமான ஆயுதத்துடன், வெட்டவெளி நிலப்பரப்பின் பின்னணியில் தோற்றமளிக்கிறார். ஸ்டைலுடன் வித்தியாசமான கலவையில் தோற்றமளிக்கும் அவரது கதாபாத்திர லுக்,  பார்க்கும்போதே நம்மை மயக்குகிறது. கருப்பு வாள் வீரனாக மின்னுகிறார் மனோஜ். போனிடெயில் மற்றும் ஸ்டைலான தாடியுடன் நீண்ட கூந்தலைக் கொண்ட மனோஜ், அறிமுகக் காட்சியில் லாங் கோட் அணிந்து மிக நாகரீகமாகத் தோன்றுகிறார், அதைத் தொடர்ந்து டி-ஷர்ட்டுடன் பிளேசரில் மற்றொரு அதிரடி-சீக்வென்ஸில் தொடர்ந்து காட்சியளிக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஒரு நடிகராக அவருடைய பன்முகத் திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பாத்திரம், படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்குமென  எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு கூறுகையில்.., "இத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் புதிரான கதாபாத்திரத்துடன் மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வருவது சவாலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. "கருப்பு வாள் வீரன் என்பது வலிமை மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய  ஒரு  அழுத்தமான பாத்திரம். நான் மீண்டும் திரைக்கு திரும்பி வருவதற்கு பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

பிரமிக்க வைக்கும்  கதைகள் நிறைந்த உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட இப்படம், பாரம்பரிய வீரம் மற்றும் நவீன கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும்.  இது அசோகரின் 9 அறியப்படாத புத்தகங்களின் ரகசியங்களை ஆராய்கிறது, வரலாறு மற்றும் புராணங்களின் அடிப்படையில்  ஒரு காவியக் கதையாக அசத்தவுள்ளது.

முன்னதாக, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு பெரும்  வரவேற்பைக் குவித்தது, இப்போது ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சுவின் பிறந்தநாளில் அவரது கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்   வெளியிடப்பட்டு  வரவேற்பைக் குவித்து வருகிறது. மனோஜ் தெலுங்கு சினிமாவுக்கு மட்டும் மீண்டும் திரும்பவில்லை, அதைத்தாண்டி மீண்டும் ஒரு பெரும் நடிகனாக திரைத்துறைக்கு சவால் விடும் பாத்திரத்தில் அசத்தவுள்ளார். 


தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் கட்டமனேனி திரைக்கதையை எழுதியுள்ளார், அவருடன் இணைந்து மணிபாபு கரணம் வசனம்  எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கலை இயக்குநராக ஸ்ரீ நாகேந்திரா தங்காவும், இணை தயாரிப்பாளராக விவேக் குச்சிபோட்லாவும் பணியாற்றுகிறார்கள். கிருத்தி பிரசாத் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

மிராய் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் அடுத்த கோடையில் ஏப்ரல் 18 ஆம் தேதி 2டி மற்றும் 3டி பதிப்புகளில் வெளியிடப்படும். 

தொழில்நுட்பக் குழு: 
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத் 
பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி 
இணை தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: கிருத்தி பிரசாத் நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி இசை: கவுரா ஹரி 
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம் 
மக்கள் தொடர்பு : யுவராஜ்

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி

*ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!* 

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  ( all we imagine as light ) திரைப்படம்,  30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. 


இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம்  என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில்,  ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. 

தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும்,  நடித்து முடித்துள்ளார்.

வரும் மே 25 ஆம் தேதி கேன்ஸ் விருது அறிவிக்கப்படவுள்ளது.  உலகம் முழுக்க திரையுலக படைப்பாளிகளால் கொண்டாடப்படும் கேன்ஸ் விருதான cannes palme d or 2024 விருதுக்காக இந்த முறை ஒரு இந்தியப்படம் கலந்துகொள்வதால்,  இந்தியா முழுக்க படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள 'கீதம் வெஜ்' ரெஸ்டாரண்ட்!*

*சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள 'கீதம் வெஜ்' ரெஸ்டாரண்ட்!*

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், 'கீதம் வெஜ்' சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி. 

சென்னையை தளமாகக் கொண்ட 'கீதம் வெஜ்' அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும்
துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, 'கீதம் வெஜ்'ஜின் சுவையூட்டும் இனிப்புகளுக்கென தனி ஸ்டாலும் உள்ளது. 

'கீதம் வெஜ்'ஜின் இனிப்புகள் மற்றும் பிரத்தியேகமாக விற்கப்படும் உயர்தர பிற பொருட்கள் எல்லாம் எங்கள் ஒவ்வொரு உணவகத்தின் ஸ்டால்களிலும் உண்டு. இவை தவிர ஹோம் டெலிவரி, வெளிப்புற கேட்டரிங் சேவைகள், வெட்டிங் கேட்டரிங் ஆர்டர்கள் மற்றும் பஃபே நிகழ்வுகளையும் திருப்திகரமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தோடு உங்களுக்கு நடத்தி தருவோம்.

கூடுதலாக, எங்கள் திறமையான கால் சென்டர் குழு சரியான நேரத்தில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் அவற்றை விசாரித்து உடனே நிவர்த்தி செய்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் சுவையான உணவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது 'கீதம் வெஜ்'.

இதன் 11வது கிளை திறப்பில் நடிகர்கள் நளினி, YG மகேந்திரன், ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். "நல்ல வெஜ் உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நம்முடைய 'கீதம் வெஜ்'. நீங்கள் எந்த நேரத்தில் பசி என்று சாப்பிட வந்தாலும் சுடச்சுட இங்கு உங்களுக்குப் பிடித்த வெஜ் உணவு கிடைக்கும். காலை 6 மணியில் இருந்து இரவு 2 மணி வரை 'கீதம் வெஜ்' திறந்திருக்கும். வயதாக வயதாக நான் வெஜ் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் நானும் வெஜ்தான். உணவின் சுவை இங்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் 'கீதம் வெஜ்' சிறப்பானது, நம்பகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றது. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உணவு அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது" என்றார்.

'ஏஸ்' ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!




'ஏஸ்' ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' எனும் திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs  என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை ... என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி  நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சூதாட்டம்,  துப்பாக்கி, குண்டு வெடிப்பு,  கொள்ளை, பைக் சேசிங் ...போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும்  இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் 'ஏஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் 'ஏஸ்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.

https://youtu.be/T1MVmNUqUsA?si=Fwv9g015DPveclXp

 

Sunday, May 19, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

 


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான 'உப்பு புளி காரம்' சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும். 

'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

https://www.youtube.com/watch?v=265-Io026vc

போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு


 போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு  !!


Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை".  விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்…


தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. 

நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன் ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். 12த் பெயில் படம் பார்த்த போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக்கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.  

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது.. 

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன் அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. 

கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசியதாவது...

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி  பேசியதாவது.. 

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகு தூரமில்லை கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார் அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி 

இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது.. 

போகுமிடம் வெகு தூரமில்லை தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர், விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை அது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர்  சொல்லும் படமாக இருக்கும். ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.  அவருக்கும் என் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது.. 

ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்தப்படத்திற்கு என்னை அழைத்தது கோகுல் தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன்,  இரண்டே கேரக்டர் தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன், அடுத்த படத்தில் மறந்து விடாதீர்கள். தயாரிப்பாளர் தமிழ் தெரியவில்லை என்றார் தமிழில் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப்படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


நடிகர் அருள் தாஸ் பேசியதாவது.. 

இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது, ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால் அந்த ஜானரில் அருமையாக  இந்தப்படத்தை  எடுத்துள்ளார்கள். படம் மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.  

இயக்குநர் தினகரன் பேசியதாவது...

மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப்படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி. 

கவிஞர் சினேகன் பேசியதாவது.. 

கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும் தான் நான் வந்தேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின்  தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில்  போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு,  ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நன்றி. 

இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது.. 

தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் விட்டிலருகே தான் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப்படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும் வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது… 

இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத படி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசியதாவது.. 

இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை  சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம்,  தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி. 

நடிகர் கருணாஸ் பேசியதாவது.. 

இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை.  சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது  நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.   

நடிகர் விமல் பேசியதாவது.. 

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.  தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய  இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம்.  எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். 

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா

தயாரிப்பாளர்: சிவா கில்லாரி (Shark 9 pictures)

இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

தொகுப்பாளர்: M.தியாகராஜன்

கலை இயக்குநர்: சுரேந்தர்

ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்

நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்

நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

Saturday, May 18, 2024

The Great Mango Festival Returns - A Sweet Celebration of Summer

The Great Mango Festival Returns - A Sweet Celebration of Summer
Hanu Reddy Raghava Farms, a beacon of innovation and a celebration of the abundance of India, recently made headlines by hosting the supremely successful India’s Culinary Odyssey, at the iconic 156ft Hanu’s Table, where ten of the country's top chefs came together to create a gastronomic spectacle like no other. Now, this same 200-acre farm is set to come alive once again with the arrival of The Great Mango Festival.
This unique event marks a significant milestone in India's farm tourism, as it showcases the farm's abundant treasures and celebrates the richness of its bountiful ingredients. The Great Mango Festival isn't just an ordinary gathering; it's an immersive nature experience that promises to captivate the senses and ignite the spirit of adventure in visitors of all ages.
Set against the picturesque backdrop of Hanu Reddy Raghava Farms, this festival stands out as the first of its kind in India - a 100% sustainable event that is both engaging and educational for every member of the family. From farm-themed activities and traditional Indian games to workshops on sustainable practices, The Great Mango Festival offers a holistic experience that is as enriching as it is entertaining.
There is simply no other event in the country that offers such a comprehensive immersion into nature's bounty while promoting environmental consciousness and cultural heritage. As visitors explore the lush mango orchards and participate in a myriad of activities, they will gain a deeper appreciation for the interconnectedness of food, culture, and the environment.
Prepare to embark on an extraordinary journey as The Great Mango Festival, presented by Hanu Reddy Mango Tourism, on the first four Sundays of June (2nd, 9th, 16th, 23rd). Nestled in the heart of mango country, this festival stands as a testament to India's rich agricultural heritage and the undisputed reign of the mango, fondly hailed as the King of Fruits.
This immersive event isn't just a celebration; it's a living testament to the love affair between India and its beloved soil. The festival's cornerstone is its unique array of experiences, carefully curated to showcase nature in all its glory while paying homage to traditional practices and cultural heritage.
Beginning at the crack of dawn, we welcome you into the Mango Madness zone and treat your taste buds on Hanu’s Table, a 156 ft architectural marvel, to a mango-themed breakfast, featuring an assortment of delectable mango-infused dishes crafted with love and expertise. Experience the thrill of the Mango Eating Showdown, a riveting competition where participants showcase their prowess in devouring this succulent fruit. Dive into the Mango Picking activity, where visitors can pluck ripe mangoes straight from the trees, savouring the sweet taste of victory with each juicy bite.
Delve into the rich tapestry of Indian culture with our Cultural Exploration sessions, where traditional games, storytelling sessions, and workshops on sustainable practices transport you to a bygone era of simplicity and charm. Enjoy the art of Parai Attam, an ancient form of drumming that echoes the rhythms of rural India, or immerse yourself in the captivating world of Indian folklore through vibrant puppet shows and theatrical performances.
Take a journey back in time with Farmyard Fun activities that offer a glimpse into the agricultural traditions that have sustained communities for generations. Experience the thrill of ploughing the land and planting rice saplings, guided by seasoned farmers who share their wisdom and expertise. Hop aboard a traditional bullock cart for a leisurely ride through lush mango orchards, marveling at the beauty of nature's bounty.
For the adventurous souls, Active Play zones offer an adrenaline-pumping experience with obstacle courses, slacklining, and traditional martial arts demonstrations. Channel your inner warrior with Silambam, an ancient Indian martial art, or test your balance and agility on the Vazhuku Maram, a traditional slippery pole used by Tamil Nadu's rural communities to showcase their talent in climbing as high as possible.
No festival is complete without an ode to traditional craftsmanship, and we proudly showcases the artistic prowess of local artisans through Native Crafts workshops. Discover the ancient art of pottery and leaf craft, experience the art of block printing, or try your hand at creating intricate Kolam designs that adorn the thresholds of homes during festive occasions.
As the sun sets on each day of the festival, visitors are left with memories to cherish and stories to share, testament to the enduring legacy of India's beloved mangoes. This unique celebration isn't just about indulging in the sweetness of the fruit; it's about honoring the cultural significance and agricultural heritage that have shaped India's identity for centuries.
"This festival is not just about celebrating mangoes; it's about celebrating the essence of our land and the traditions that have sustained us for generations," says Hanu Reddy, visionary founder of Hanu Reddy Raghava Farms. "At Hanu Reddy Raghava Farms, we believe in showcasing the beauty and bounty of nature in a way that is both sustainable and soulful. The Great Mango Festival is a testament to our commitment to preserving our agricultural heritage and fostering a deeper connection with the land. 
Always thinking ahead for India, Mr Hanu Reddy, continues to elaborate that “Through this one of a kind immersive experience, my vision is two fold. One is about bringing the world to India to celebrate its mangoes, much like how people journey to Japan for the cherry blossom festival. Two is to give back to the farmer community by empowering them to sell experiences. While produce may hold a certain value, I believe that selling an experience can amplify its worth exponentially, by at least a hundredfold. This approach not only benefits our farmers but also contributes significantly to the country's GDP."
Experience the magic of The Great Mango Festival, where every moment is a celebration of India's vibrant culture and the timeless allure of the mango. 
Book your tickets now and join us for a day of fruity fun and festivities!
Dates: First Four Sundays of June (2nd, 9th, 16th, 23rd).
Venue: Hanu Reddy Raghava Farms
BOOK NOW: https://bit.ly/43riHSK
CONTACT US 📞Phone: +91 9884020848  | ✉Email: hanureddymangoes@gmail.com

Friday, May 17, 2024

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!


 மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலைப் பார்த்த எல்லோருக்குமே நன்றி!”.

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்‌ஷன் செய்திருக்கிறோம். புதிய டெக்னாலஜி, ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “சமூகத்திற்கு தேவையான கருத்தோடு படம் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பிறகு ‘ராக்கி’ வசந்த்ரவி என்ற பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்யுங்கள். ஆக்‌ஷன் - எண்டர்டெயினராக படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்!”.

கலை இயக்குநர் சுபேந்தர், ”இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் குகன் சாருக்கு நன்றி. எல்லோருமே சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”.

எடிட்டர் கோபி, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட்டோடுதான் இந்தப் படம் வந்திருக்கிறது. படப்பிடிப்பு முடித்த பின்னர்தான் இந்த படத்தையே நான் பார்த்தேன். வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாக படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில் இது அடுத்தக் கட்டத்திற்கான நகர்வு ‘வெப்பன்’. வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்கு புது அனுபவம் கொடுக்கும்”.

இயக்குநர் கார்த்திக் யோகி, “இயக்குநர் குகன், வசந்த் ரவி ஆகியோர் எனது நண்பர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்!”.

இயக்குநர் அஸ்வின், “குகன், நான், கார்த்திக் யோகி மூன்று பேருமே நாளைய இயக்குநர் சமயத்தில் இருந்தே நண்பர்கள். குகனுக்கு இந்த படம் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். இப்போது தமிழ் சினிமாவுக்கு படம் வெற்றி அடைந்து மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்க வேண்டும்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜயகாந்த் vs சத்யராஜ் என்று போட்டி ஆரோக்கியமாக இருந்த காலம் அது. அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 'வெப்பன்' படத்தின் போஸ்டர், டிரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில்நுட்ப குழுவினருக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள்! ".

ஸ்டண்ட் இயக்குநர் சுதீஷ், "பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்". 

நடிகர் மைம் கோபி, "இயக்குநர் குகன் திறமைசாலி. சத்யராஜ் அண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். உங்கள் ஆதரவு தேவை!"


படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் வேலை செய்ததை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்!”



நடிகர் வசந்த் ரவி, “தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். ’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’தான் சொன்னார். நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார். 


நடிகர் சத்யராஜ், “திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல...’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!”.

ELECTION - திரைவிமர்சனம்



“தேர்தல்” திரைப்படம், அரசியல் சார்புடைய படைப்புகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் தமிழின் திறமையையும், “உறியடி” தொடரின் நடிகர் விஜய் குமாரின் திறமையையும் ஒன்றிணைக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாகவே ஆராயப்படும் ஒரு விஷயமான உள்ளாட்சித் தேர்தல்களின் கண்கவர் உலகத்தை இந்த ஒத்துழைப்பு ஆராய்கிறது.

சசிகுமாரின் சக்திவாய்ந்த குரல்வழியில் படம் துவங்குகிறது, விஜய் குமாரின் கதாபாத்திரமான நடராசனை உள்ளடக்கிய ஒரு வியத்தகு பட்டி சண்டைக்கு களம் அமைக்கிறது. ஒரு கட்சி ஊழியரின் கவலையற்ற மகன் - மற்றும் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவரை எவ்வாறு அரசியல் அரங்கிற்குள் தள்ளியது என்பதை அவரது பின்னணியை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இந்த பயணம் லட்சியம் மற்றும் சக்தி விளையாட்டுகள் நிறைந்த உலகில் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான குறிப்பிடத்தக்க சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

"தேர்தல்" அடிமட்ட அரசியலின் யதார்த்தமான சித்தரிப்பில் மிளிர்கிறது. இது சிறிய தேர்தல்களின் சிக்கல்களை ஆராய்கிறது, அங்கு வெற்றிகள் சிலருக்கு (சாதி மற்றும் வர்க்கப் பெருமிதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்) பெரும் எடையைக் கொண்டுள்ளன, மேலும் மற்றவர்களுக்கு உரிமைகள் மற்றும் மாற்றத்திற்கான போராட்டத்தை பிரதிபலிக்கின்றன. தேர்தல் செயல்பாட்டில் பணம் வகிக்கும் பங்கிலிருந்து திரைப்படம் வெட்கப்படாது, அடிப்படையான பார்வையை வழங்குகிறது.

இந்தத் திரைப்படத்தின் பலம், தேர்தல்களின் மனிதச் செலவை சித்தரிப்பதில் உள்ளது. அரசியலின் தனிப்பட்ட பக்கத்தைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்கும், ஒரு வேட்பாளரின் கூட்டாளியில் முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கடுமையான காட்சி ஆராய்கிறது.

படம் ஜாதி அரசியலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அதே வேளையில், அது ஒரு மேற்பரப்பு ஆய்வாக உணரும் தருணங்கள் உள்ளன. கூடுதலாக, பாடல்கள் போன்ற வணிகக் கூறுகளைச் சேர்ப்பது முக்கிய செய்தியிலிருந்து திசைதிருப்பலாம். பெரிய நடிகர்கள், கதைக்கு அவசியமானாலும், படத்தின் சுருக்கமான இயக்க நேரம் இருந்தபோதிலும், பார்வையாளர்களை அதிகமாக உணர வைக்கலாம்.

இருப்பினும், "தேர்தல்" ஆழமாக எதிரொலிக்கும் மறக்கமுடியாத வரிகளுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் உரையாடலைக் கொண்டுள்ளது. இயக்குனர் தமிழ் தனித்துவமான தொடுகைகளை புகுத்துகிறார் .விஜய் குமார் முரண்பட்ட இலட்சியவாதியாக வலுவான நடிப்பை வழங்குகிறார். இருப்பினும், அவரது கதாபாத்திரத்தின் செயலற்ற பாத்திரம் சில சமயங்களில் கதையை முன்னோக்கி செலுத்தும் ஒரு உறுதியான கதாநாயகனை நீங்கள் விரும்புகிறது.

ஒட்டுமொத்தமாக, "தேர்தல்" என்பது உள்ளாட்சி அமைப்பு அரசியலின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும், இது ஒரு சில வாய்ப்புகளைத் தவறவிட்டாலும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது பாராட்டத்தக்க பலம் மற்றும் முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் திறன் கொண்ட படம்.


 

INGA NAN THAAN KINGU - திரைவிமர்சனம்


 



“இங்க நான் தான் கிங்கு” படத்தில் அட்டகாசமான சிரிப்பை அள்ளி வீசிய சந்தானம் மீண்டும் வந்துள்ளார். கடனாளியான ஜமீன்தார் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட வெற்றியின் தொடர் நகைச்சுவையான சாகசங்களில் சிக்கிய இளங்கலையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. வெற்றியின் அபார்ட்மெண்டில் ஒரு பயங்கரவாதியின் தற்செயலான மரணம் தொடர்பான குழப்பமான நிகழ்வுகள், வெற்றி மற்றும் அவரது வினோதமான மாமியார் உடலை மீட்டெடுப்பதன் மூலம் வெகுமதியைப் பெற முயற்சிக்கையில், திருட்டுத் திருட்டுக்கு மேடை அமைக்கிறது.

வெற்றி (சந்தானம்) என்பது பலருடன் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு பாத்திரம், பணச் சிக்கல்கள் மற்றும் மனைவியைக் கண்டுபிடிக்கும் அழுத்தத்தால் சுமையாக இருக்கிறது. ஒரு திருமண நிறுவனத்தில் அவரது வேலை விஷயங்களுக்கு உதவவில்லை, மேலும் ஒரு பேரழிவு தரும் திருமண திட்டம் அவரை ஒரு விசித்திரமான அரச குடும்பத்துடன் இணைக்கிறது. தேன்மொழியுடன் (பிரியாலயா) முடிச்சுப் போடும் வெற்றி, தனது திறமையற்ற தந்தை (தம்பி ராமையா) மற்றும் சகோதரன் (பால சரவணன்) ஆகியோருடன் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க போராடுவதைக் காண்கிறார். ஒரு நிறுவனத்தின் விருந்தில் ஏற்பட்ட ஒரு விபத்து வெற்றியை நிறுத்துவதில் விளைகிறது, இது அவரது துயரங்களைச் சேர்த்தது.

வெற்றியின் அபார்ட்மெண்டில் ஒரு பயங்கரவாதி (விவேக் பிரசன்னாவைப் போன்றவர்) இறக்கும் போது சதி ஒரு பெருங்களிப்புடைய திருப்பத்தை எடுக்கிறது. வெற்றி மற்றும் அவரது துப்பு இல்லாத மாமியார் ஒருவரின் உடலை அப்புறப்படுத்துகிறார்கள். பயங்கரவாதிக்கு ₹50 லட்சம் வெகுமதியைப் பற்றி அறிந்ததும், அவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பார்க்கிறார்கள், இது ஒரு கொந்தளிப்பான மற்றும் நகைச்சுவையான திருடலாகத் தொடங்குகிறது.

எழிச்சூர் அரவிந்தனின் அசல் ஸ்கிரிப்டிங் மிளிர்கிறது, அதிகபட்ச நகைச்சுவை விளைவுக்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள். நகைச்சுவை, சில நேரங்களில் நியாயமற்றதாக இருந்தாலும், பார்வையாளர்களை மகிழ்விக்க வைக்கிறது. மறக்கமுடியாத தருணங்களில் வெற்றியின் திருமணக் காட்சியும் அடங்கும், அங்கு அவர் ஜமீன்தார் தரத்தை நிலைநிறுத்த ஒரு முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை நகைச்சுவையாக வழங்கினார். இரண்டாம் பாதியில் கடுமையான சதி திருப்பங்களுடன் சில நீராவிகளை இழந்தாலும், பக்கவாட்டுக் காட்சிகளுடன் படம் வலுவாகத் தொடங்குகிறது. இருப்பினும், ஒரு பிணமாக நடிக்கும் அண்ணியின் கோமாளித்தனங்கள், கமல்ஹாசனின் "பஞ்சதந்திரம்" திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் நிலையான சிரிப்பை அளிக்கிறது.

சந்தானம், பால சரவணன், தம்பி ராமையா உள்ளிட்ட குழுவினர் படத்தின் அழகை அதிகரிக்கின்றனர். சந்தானம் தாராளமாக நகைச்சுவை ஸ்பாட்லைட்டை பகிர்ந்து கொள்கிறார், சக நகைச்சுவை நடிகர்களை பிரகாசிக்க அனுமதிக்கிறது. பாடி பலராமனாக முனிஷ்காந்தின் நடிப்பு ஒரு சிறப்பம்சமாகும், மேலும் சேசு மற்றும் மாறனின் சிறிய பாத்திரங்கள் கூட தனித்து நிற்கின்றன. ப்ரியாலயா தனது தோற்றம் மற்றும் நடனம் ஆகியவற்றால் ஈர்க்கிறார், அதே நேரத்தில் விவேக் பிரசன்னா தனது இரட்டை வேடத்தில் மகிழ்கிறார்.

சந்தானத்தின் கலகலப்பான நடிப்பு மற்றும் பாவம் செய்ய முடியாத நகைச்சுவை நேரமும் படத்தை ஈர்க்கிறது. இமானின் பாடல்களும் ஓம் நாராயணின் ஒளிப்பதிவும் படத்திற்கு நன்றாக துணை நிற்கிறது. இலேசாகத் தப்பிக்க வேண்டிய நேரத்தில், "இங்க நான் தான் கிங்கு" ஒரு மகிழ்ச்சியான ஓய்வு அளிக்கிறது, தியேட்டரில் நன்றாகச் சிரிப்பதற்கு ஏற்றது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.*

*இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  'மாஸ்க்'  திரைப்படம்  பூஜையுடன் இன்று துவங்கியது.*

'காக்கா முட்டை' ,'விசாரணை',  'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
உடன் இணைந்து  தயாரிக்கும் புதிய படம் தான் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .

இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக   
பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக  கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா ,சார்லி, ருஹானி ஷர்மா ,பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு  
G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இன்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் 
இனிதே தொடங்கியது.

கிராஸ் ரூட்  ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

*நடிகர்கள்*
கவின் 
ஆண்ட்ரியா 
ருஹாணி ஷர்மா
சார்லி 
பாலா சரவணன் 
VJ அர்ச்சனா சந்தோக் 

*தொழில் நுட்பக்கலைஞர்கள்*
தயாரிப்பு நிறுவனம்:
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி 
பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் 
எழுத்து இயக்கம்: விகர்ணன் அசோக் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார் 
ஒளிப்பதிவு: ஆர் டி ராஜசேகர் 
படத்தொகுப்பு: ஆர் ராமர் 
கலை: ஜாக்கி 
ஆடை அலங்காரம்: பூர்த்தி விபின் 
ஸ்டில்ஸ்: சாய்  சந்தோஷ் 
தயாரிப்பு: வெற்றிமாறன் 
SP சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு:  ரியாஸ் K அஹ்மத்

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” 

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று  படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில்..

இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. 
இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம்.  பல வருடக் கனவு இது.  இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி  இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது.  அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள். 

இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியதாவது.. 
இது என் முதல் படம்,  நான் பல டீவி  விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது.  இந்தப்படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்
பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள். 

நடிகை விஷ்ணு பிரியா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாப்பாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த  ஆதரவாக இருந்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி.. 

நாயகி அக்ஷயா கந்தமுதன் 
பேசியதாவது..,
எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே  தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம்,  அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை.  இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளை தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.  டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது.  இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள்.  படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் சுப்பிரமணியம் சிவா  பேசியதாவது… 
இந்தக்குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தபடத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாக கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர் தான்  முருகன். இவர் மாதிரி பலரை பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப்படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார், அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்கியவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான் அந்த வகையில் வெற்றி குரு தான். இந்த புதிய முகங்கள் எல்லோரும்  இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன். இந்தப்படத்திற்கு என் வாழ்த்துக்கள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்.  ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

நடிகர் வெற்றி பேசியதாவது…
எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப்படம் கிடைத்தது.  கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப்படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  

'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார்.  விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை  பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் மே 24 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மே 17 முதல், அமேசான் ப்ரைம்மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!!

மே 17 முதல், அமேசான் ப்ரைம்
மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம்  “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! 

சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. 

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,  சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய  ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த  மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் கலையரசன்,   96 பட ஆதித்யா பாஸ்கர்,  மற்றும்  கௌரி கிஷன்,  சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலேயே பெரும் விமர்சனங்களைக் குவித்தது. படம் வெளியான பிறகு படத்தின் நெகட்டிவிடி மொத்தமும் பாஸிடிவிடியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள்.  சமூகம் பேசத் தயங்கும் பல விசயங்களை, மிகத் தைரியமாக, மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில், இப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.    

தற்போதைய திரையரங்கு சூழ்நிலையில் இப்படம் திரையங்குகளில் முழுதாக 5 வாரங்களைக்  கடந்து சாதனை படைத்தது. இப்படம் எப்போது ஓடிடியில் வெளிவருமென ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இப்படம் அமேசான் ப்ரைம், மற்றும் ஆஹா என இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில், வரும் மே 17 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. 

உங்கள் கோடை விடுமுறையை ஹாட் ஸ்பாட் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.

Thursday, May 16, 2024

P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'P T சார்' வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

'P T சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். 
ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்வினில்…

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது…

ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக  செய்துள்ளோம். ஆதி அண்ணா கடுமையாக உழைத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும், நன்றி.

நடிகை பிரணிகா பேசியதாவது…
இந்தப்படத்தில் ஆதி அண்ணா சிஸ்டர் கேரக்டர் செய்துள்ளேன், ரொம்ப சந்தோசம்.  அதிலும் என் முதல் படமே வேல்ஸ் பிலிம்ஸில் செய்வது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சக படமாக இருக்கும். இந்தப்படம் புது அனுபவமாக இருந்தது,  அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை மதுவந்தி பேசியதாவது…
இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். நான் நடிப்பேனா? என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக்குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் சேட் உள்ள பாத்திரம், அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த குழுவிற்கு முழு சுதந்திரம் தந்த, வேல்ஸ் ஐசரி சாருக்கு என் நன்றிகள். ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25 வது படம், வாழ்த்துக்கள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகை அனிகா சுரேந்திரன் பேசியதாவது…
நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. இந்த கதாப்பாத்திரம் தந்த இயக்குநர் கார்த்திக் சாருக்கு நன்றி. தயாரிப்பு தரப்பினருக்கும் என் நன்றிகள்.  மிக வித்தியாசமான கதாப்பாத்திரம், உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் பாத்திரம், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.  

நடிகை காஷ்மீரா பர்தேஷி பேசியதாவது…
ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இரண்டாவது படம், மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர், திறமையாளர் அவரது 25 வது படத்திற்கு எனது வாழ்த்துக்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள் அனைவருக்கும் நன்றி.  


இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…
ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது, ஆனால்  கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள், இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக  இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது…
வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர், அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார்.  அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி. 


நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி. 

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

KANNI - திரைவிமர்சனம்



 

மனதைக் கவரும் “கன்னி” திரைப்படத்தில், செங்கா என்ற வயதான பெண், ஒரு காலத்தில் குணப்படுத்த முடியாது என்று நினைத்த நோய்களைக் குணப்படுத்த தெய்வீக ஓலைப் பெட்டியையும் மருத்துவ மூலிகைகளையும் பயன்படுத்துகிறார். மலைக் கிராமத்திற்குச் சென்ற செல்வந்தர் ஒருவர் திடீரென இடிந்து விழும்போது, ​​அவரது தோழர்கள் அவரை செங்காவிற்கு அழைத்து வந்தனர். அவளது மூலிகைச் சிகிச்சைகளால், சில நாட்களில் அவர் முழுமையாக குணமடைந்து, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வீடு திரும்புகிறார்.

இந்த அதிசய சிகிச்சையானது செங்காவின் முறைகளால் ஈர்க்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. பாரம்பரிய ஞானத்திற்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்தும் மாய ஓலைப் பெட்டியைப் பெற அவர்கள் முயற்சிக்கும்போது கதை விரிவடைகிறது.

பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் வீரியத்தை எடுத்துரைத்த இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடி பாராட்டுக்குரியவர். இந்த கருப்பொருளுக்கான அவரது அர்ப்பணிப்பு வெளிப்படையானது மற்றும் பாராட்டத்தக்கது.

செங்காவாக மாத்தம்மா வேல்முருகன் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இத்திரைப்படம் ஒரு நட்சத்திர நடிகர்களைக் கொண்டுள்ளது. மணிமாறன் ராமசாமி மகன் வேடனாகவும், அஷ்வினி சந்திரசேகர் மகளாக செம்பியாகவும், தர்ரா கிரிஷ் மருமகள் நீலிமாவாகவும், ராம் பரதன் மச்சகனாகவும், சரிகா செல்வராஜ் மாயம்மாவாகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரங்களுக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அஸ்வினி சந்திரசேகர் தனித்து நிற்கிறார். செம்பியாக, அவர் கதையின் மையமாக இருக்கிறார் மற்றும் அவரது நாடக மற்றும் அதிரடி காட்சிகள் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார், அவரது பாத்திரத்தில் ஈர்க்கக்கூடிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார். மாதம்மா வேல்முருகனின் செங்காவின் சித்தரிப்பும் சமமாக அழுத்தமானது, படத்தின் உணர்ச்சி மற்றும் கதை வலிமைக்கு பங்களிக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவு கதையின் சாராம்சத்தை அழகாக படம்பிடித்துள்ளது, செபாஸ்டியன் சதீஷின் இசை படத்தின் கருப்பொருளை கச்சிதமாக பூர்த்தி செய்கிறது. திரைக்கதை மற்றும் விவரிப்பு இன்னும் ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், பாரம்பரிய வைத்தியத்தின் நீடித்த சக்தி மற்றும் நம் முன்னோர்களின் ஞானத்திற்கான நகரும் அஞ்சலியாக "கன்னி" உள்ளது.

Cast:-Ashwini Chandrashekar Manimaran TharraKrish RamBharathan

Director:-Mayon Siva Thorapadi

PADIKKADHA PAKKANGAL - திரைவிமர்சனம்

வணிகத் திரைப்படங்கள் நீண்ட காலமாக தீவிரமான பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளன, மேலும் இது சமகாலத் திருப்பங்களுடன் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. யாஷிகா அன்னந்த் தனது பாத்திரத்திற்கு கவர்ச்சியையும் ஆற்றலையும் கொண்டு வருகிறார், அதே நேரத்தில் பிரஜின் ஒரு நவீன காவலராக ஸ்டைலான மற்றும் சரியான நேரத்தில் தோற்றமளித்து, நாகரீகமான தாடியுடன் முழுமையடைகிறார், மேலும் முன்னணி பெண்மணியின் காதல் ஆர்வத்திலும் நடிக்கிறார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்திவாய்ந்த அரசியல்வாதியின் மகனான, கெட்டுப்போன ஒரு பிராட்டைச் சுற்றி கதை சுழல்கிறது. இந்த இளைஞனும் அவனது கும்பலும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெண்களைச் சுரண்டுகிறார்கள். அவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் யாஷிகா அன்னந்தின் கதாபாத்திரத்தின் சகோதரியும் உள்ளார், அவர் விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு நீதியைத் தேடுகிறார்.

கதாநாயகியின் காதலன் மற்றும் அர்ப்பணிப்புள்ள காவலர் ஆகிய இரு வேடங்களில் பிரஜினின் இரட்டை வேடம், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வர அவர் பணியாற்றும் கதைக்கு ஆழம் சேர்க்கிறது. எதிரிகள் முன்வைக்கும் சவால்களை அவர் வழிநடத்தும் போது அவரது கதாபாத்திரத்தின் உறுதியும் நேர்மையும் தனித்து நிற்கின்றன.

இப்படம் வெறும் அதிரடி நாடகமாக இல்லாமல் பெண்களை சுரண்டுபவர்களை விமர்சிக்கும் படமாக உள்ளது. அடக்குமுறை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடும் பெண்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது. ஜாஸ்ஸி கிஃப்ட்டின் இசை, அற்புதமானதாக இல்லாவிட்டாலும், படத்தின் தொனியை நிறைவு செய்து அதன் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிக்கிறது.

சுருக்கமாக, இந்த படம் சமகால சிக்கல்கள், காதல் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய கலவையை வழங்குகிறது. இது பெண்களின் தைரியத்தையும் உறுதியையும் கொண்டாடும் அதே வேளையில் அவர்கள் மீதான சுரண்டலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. யாஷிகா அண்ணாந்த் மற்றும் பிரஜின் ஆகியோரின் ஆற்றல்மிக்க நடிப்பு, அழுத்தமான கதைக்களத்துடன், இந்த வகைக்கு ஒரு குறிப்பிடத்தக்க கூடுதலாக உள்ளது.

Cast:-Prajan Yashika annandh Muthukumar George marian – Aadhanga Balaji -Dharrshiny

Director:-Selvam Mathappan

 

THALAIMAI SEYALAGAM - திரைவிமர்சனம்

இந்தத் தொடர் ஒரு சமகால நீதிமன்ற அறை நாடகமாக மாறுகிறது, தமிழக அரசியலின் சிக்கலான உலகில் விரைவாக மூழ்குகிறது. முதல்வர் அருணாசலம் (கிஷோர்) ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். வழக்கமான வில்லனைப் போலல்லாமல், அருணாச்சலம் அதிகார வெறி கொண்ட உறவினர்களால் கண்ணியில் சிக்கிய ஒழுக்கமான மனிதராக சித்தரிக்கப்படுகிறார். அவரது மூத்த மகள், அமுதா (ரம்யா நம்பேசன்), மற்றும் அவரது மருமகன், ஹரிஹரன் (நிரூப் நந்தகுமார்), இருவரும் முதல்வர் நாற்காலிக்கு போட்டியிடுகிறார்கள், ஒவ்வொருவரும் அதிகாரத்திற்கான தங்கள் பாதையை திட்டமிடுகிறார்கள்.

ஒரு வண்ணமயமான கதாபாத்திரங்கள் இந்த அரசியல் நிலப்பரப்பை நிரப்புகின்றன, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன். செல்வப்புயரசன் (சந்தான பாரதி) ஒரு விசுவாசமான மந்திரி, எப்போதும் தனது முதலாளியின் நலனுக்காக செயல்படுகிறார். சந்தர்ப்பவாத வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரங்கராஜன் (ஒய்.ஜி. மகேந்திரன்) ஆகியோர் ஆளுங்கட்சியை சீர்குலைக்க அமுதா, ஹரி மற்றும் செல்வா ஆகியோரை தனித்தனியாக குறிவைத்து, சூழ்நிலையை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. கொத்ரவை (ஸ்ரியா ரெட்டி), ஒரு புத்திசாலியான பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் ஆலோசகர், தனது தாயின் அரசியல் சூழ்ச்சிகளால் வெறுப்படைந்த மகள் மாயாவுடனான (சாரா பிளாக்) தனது தொழில்முறை கடமைகளை சமன்படுத்தி, சூழ்ச்சியின் மற்றொரு அடுக்கைச் சேர்க்கிறார்.

இந்த அதிகாரப் போட்டிக்கு வெளியே துர்கா (கனி குஸ்ருதி) ஒரு கடுமையான பாத்திரம், கைப்பற்றப்பட்ட கப்பலில் கொற்றவாயின் உதவியை நாடுகிறது மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை. சிபிஐ அதிகாரி நவாஸ் கான் (ஆதித்யா மேனன்) ஜார்க்கண்டில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார், தெரியாமல் துர்காவை மூடுகிறார். இதற்கிடையில், தமிழ்நாடு டிசிபி மணிகண்டன் (பரத்) தனது சொந்த காரணங்களுக்காக கொற்றவை மற்றும் துர்காவைப் பின்தொடர்கிறார், இது மற்றொரு சஸ்பென்ஸைச் சேர்த்தது.

ஆந்திரா நீதிமன்றத்தில் தீர்ப்பு நாள் மற்றும் முதல்வர் வீட்டில் வாரிசு கேள்வி என தொடர் உச்சக்கட்டத்தை எட்டும்போது, ​​எதிர்பாராத திருப்பம் வெளிப்படுகிறது. இந்தத் தொடர் அதன் பல்வேறு கதைக்களங்களைத் திறமையாகக் கையாளுகிறது, இருப்பினும் சில கூறுகள் சற்றே மாறுபட்டதாக உணர்கின்றன. ஆரம்பக் காட்சிகள் ஒரு பெரிய சதியைக் குறிப்பதாக இருந்தபோதிலும், நவாஸ் கானின் கதைக்களம் ஆரம்பத்தில் துண்டிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் எதிர்காலப் பருவங்களில் அதிக அர்த்தமுள்ளதாக உறுதியளிக்கிறது.

அரசியல் சூழ்ச்சி கட்டாயப்படுத்துகிறது, அருணாச்சலம் ஒரு செயலற்ற ஆளுமையிலிருந்து மிகவும் உறுதியான தலைவராக உருவாகிறார். கொற்றவை, தனது வியூக நகர்வுகளால், வசீகரிக்கும் பாத்திரமாக வெளிவருகிறார். இந்தத் தொடரில் பல சக்திவாய்ந்த உரைகள் மூலம் நடப்பு விவகாரங்கள் பற்றிய கூர்மையான வர்ணனைகளும் அடங்கும்.

"தலைமை செயலகம்" எப்போதாவது தமிழ் சீரியல்களின் வழக்கமான மெலோட்ராமாவில் மூழ்குகிறது, சில காட்சிகள் இழுக்கப்படுவதோடு உரையாடல்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. இருப்பினும், வலுவான செயல்திறன் தனித்து நிற்கிறது. கிஷோர் முதலமைச்சரின் சக்திவாய்ந்த சித்தரிப்பை வழங்குகிறார், ஸ்ரீயா ரெட்டி கொற்றவையாக வசீகரிக்கிறார், மேலும் கனி குஸ்ருதி துர்காவுக்கு தீவிரத்தை கொண்டு வருகிறது.

வானபாலனின் பார்வை "தலைமை செயலகம்" முழுவதும் தெளிவாகத் தெரிகிறது, சில யூகிக்கக்கூடிய சதி திருப்பங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட திரைக்கதைகள் இருந்தபோதிலும் ஒரு நம்பிக்கைக்குரிய முன்மாதிரியை வழங்குகிறது. இந்தத் தொடர் வலுவான நடிப்பையும் ஆர்வமுள்ள தருணங்களையும் காட்டுகிறது, தமிழ் சீரியல் அழகின் தொடுதலுடன் அதன் பரபரப்பான கதையை சமநிலைப்படுத்துகிறது.

Cast:-Kishore, Sriya Reddy, Bharath, Ramya Nambessan, Aditya Menon, Kani Kusruti, Niroop Nandakumar, Darsha Gupta, Sarah Black, Siddharth Vipin, YGM, Santhana Bharathi, Kavitha Bharathi 

Director:-G. Vasanthabalan

 

Tip and Toe Nail Club Celebrates Successful Meet and Greet Events in Chennai

Tip and Toe Nail Club Celebrates Successful Meet and Greet Events in Chennai   Chennai, [21st May 2024] – Tip and Toe Nail Club ...