Saturday, December 30, 2023

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu - திரைவிமர்சனம்

 தமிழ் சினிமா உலகில், ஒடவும் முடியாது ஒலியும் முடியும் என்பது ஒரு தனித்துவமான மாதிரியாக நிற்கிறது, மரபுகளை மீறி, திகில் நகைச்சுவை வகைகளில் மெட்டா-விழிப்புணர்வுக்கான புத்துணர்ச்சியை புகுத்துகிறது. ரமேஷ் வெங்கட் இயக்கிய இந்தத் திரைப்படம், இலேசான தன்மைக்கும் உணர்ச்சி ஆழத்துக்கும் இடையே உள்ள நுட்பமான கோட்டைத் திறமையாகப் பயணிக்கிறது. திரைப்படம் ஒரு உள்ளார்ந்த விளையாட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறது, பார்வையாளர்களை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தூண்டுகிறது, அதே நேரத்தில் வெளிவரும் கதையில் அவர்களை நேர்த்தியாக ஈர்க்கிறது.

ரமேஷ் வெங்கட்டின் இயக்குநரின் திறமை மிளிர்கிறது, அவர் நகைச்சுவை மற்றும் மர்மத்தின் இணக்கமான கலவையை ஒழுங்கமைக்கிறார், பிந்தையதை தேவையான உணர்ச்சிகரமான எடையுடன் செலுத்துகிறார். குறைபாடுகளிலிருந்து விடுபடவில்லை என்றாலும், சமகால உணர்வுகளின் பின்னணியில் தடுமாறும் சில நகைச்சுவைகளை படம் வெளிப்படுத்துகிறது. இருந்தபோதிலும், ஓடவும் முடியாது ஒலியும் முடியும் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு திகில் காமெடியை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.

இந்தப் படத்தைத் தனித்து நிற்பது, அதிலுள்ள முட்டாள்தனமான அரவணைப்புதான். ஒரு திகில் திரைப்படத்தை உருவாக்குவது பற்றி ஒரு பாத்திரம் விவாதிக்கும் ஒரு குறிப்பிட்ட காட்சியில், தன்னைப் பற்றிய விழிப்புணர்வு உணர்வுடன் கதை விரிவடைகிறது, படம் தன்னைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது போல் ஒரு நகைச்சுவையான பதிலைத் தூண்டுகிறது. இந்த மெட்டா-கதை அடுக்கு ஒரு தனித்துவமான சுவையைச் சேர்க்கிறது, இது பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், திரைப்படத்தின் சொந்த வர்ணனையிலும் அதன் வகையை உள்ளடக்கியது.

இது அறிவுப்பூர்வமாக ஆழமான அல்லது வாழ்க்கையை மாற்றும் சினிமா அனுபவத்தை வழங்காவிட்டாலும், ஓடவும் முடியாது ஒலியும் முடியவும் சிரிப்பைத் தூண்டும் காட்சியாக வெளிப்படுகிறது. இது திகில் மற்றும் நகைச்சுவை ஆகிய இரண்டிற்கும் நியாயம் செய்கிறது, அதன் எளிமை மற்றும் சுயமரியாதை நகைச்சுவையை வெளிப்படுத்துகிறது. இத்திரைப்படத்தின் பலம், ஒரு இலகுவான, வேடிக்கையான நகைச்சுவையாக இருப்பதற்கான மன்னிக்க முடியாத அர்ப்பணிப்பில் உள்ளது, மேலும் இது நேர்த்தியுடன் இதை நிறைவேற்றுகிறது-அதிகமாக இருக்க ஆசைப்படாமல் அல்லது குறைவான எதையும் தீர்க்கவில்லை. சாராம்சத்தில், திரைப்படத்தின் வசீகரம் அது என்னவாக இருக்க விரும்புகிறதோ அதுவாக இருக்கும் திறனில் உள்ளது: அபத்தத்தின் சாம்ராஜ்யத்திற்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு தப்பித்தல்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

*நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் பேசியதாவது,
”தமிழ் சினிமாவிற்கு ’அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ’பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ’கேஜிஎப்’போ அதேபோல் சிஜியில் தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். இயக்குநர் ரவிக்குமார் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி உள்ளீர்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது ’அயலான்’ பொங்கல்” என்றார்.

அடுத்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசும்போது, “ரவிக்குமார், விவேக் போன்ற புதிய தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்து உள்ளேன். சிஜி என்றதும் பயம் வந்தது. ஆனால், இந்தப் படத்தில் சிஜி நன்றாக இருந்தது. இதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே”. 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது, “இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நான் பால் போட்டால் சிக்ஸர் தான். இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரஹ்மான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர். அதுக்காக தென்‌மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு! கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் பயணத்தில் நிறைய நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி. இந்தப் படத்திற்காக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ’அயலான்’ ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. இந்த சமயத்தில் என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அவரது ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு. இந்தப் படத்தை ஏன் இத்தனை வருடங்கள் விடாமல் நான் வைத்திருந்தேன் என்றால், என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த கமிட்மெண்ட்தான் காரணம். படத்தின் கலெக்‌ஷன் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படத்தை உணர்வுப்பூர்வமாக பார்ப்பவன் நான். இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. ரஹ்மான் சார் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். நீரவ் ஷாவின் அனுபவம் பெரியது. அவர் எங்களுக்கு மிகப்பெரிய பலம். இப்படி திறமையான கலைஞர்களை வைத்துக் கொண்டு படம் சரியாக எடுக்கவில்லை என்றால் என்மீதுதான் பிழை. அதனால், எல்லா விஷயங்களுமே சிறப்பாக செய்துள்ளோம். விஎஃப்எக்ஸ் வைத்து படம் நிச்சயம் சிறப்பாக எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை சாத்தியமாக்கிக் கொடுத்த சாந்தோம் எஃபெக்ட்ஸூக்கு நன்றி. உலகத்தரமான எஃபெக்ட்ஸை அவர்கள் செய்து கொடுத்தனர். அந்தக் காட்சிகளை எல்லாம் பாக்கும்போது எனக்கே பெருமையாக இருந்தது. என் உதவியாளர்கள் என்னுடன் ஆறு வருடங்களாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சப்போர்ட் மிக அதிகமாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னை எந்த இடத்திலும் சந்தேகிக்கவில்லை, தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் எப்போதுமே அவருக்கு ஸ்பெஷல். இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளளார்” என்றார்.

   
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ’அயலான்’ வருமா வந்துவிடுமா எப்போ வரும் என்று கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈசியா பண்ணிவிடலாம். இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை. இந்தப் படம் தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது. இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். ஏஆர் ரஹ்மானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். என் படத்தில் ரஹ்மான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு. படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ஏஆர். ரஹ்மான். டீசரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அன்பறிவு மாஸ்டர்ஸ் போல, நானும் இரட்டையராக இருந்தால் நான் ஒருபடமும் அவர் ஒரு படமும் போய் இரட்டை சம்பளம் வாங்கலாம். எங்க ஒரு படத்திற்கு போனாலே சம்பளம் தரமாட்டேங்குறாங்க! ரஹ்மான் சார் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது. இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது அவருக்கும் வாழ்த்துகள். பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார்.‌ இதுபோன்ற படங்கள் வருவது அபூர்வம். 

ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின்‌ மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள். அதை நான் காதில் வாங்குவதில்லை. என்னை பிடித்தவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை. என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை. இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். சம்பளம் வாங்காததற்கு ஆர்த்தி மாதிரி ஒருவர் எனக்கு இருப்பதுதான் காரணம். இப்படத்திற்கு பிரச்சினை வரும்போது நம்ம ரவிக்குமார் அண்ணன்தானே என்றார். ’டாக்டர்’ சமயத்திலும் நம்ம நெல்சன் அண்ணன்தானே என்றார். ’கனா’ படத்துக்கும் அப்படியேதான். எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்த வைத்துள்ளது. கஷ்டப்பட்ட எல்லோருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். எனது மகன் குகன் முதலில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம்  ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்” என்றார்.

Friday, December 29, 2023

ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திம்மகவுடா,சுனிதா திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் திருவண்ணாமலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கி சேவை செய்து வழிபாடு


 ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திம்மகவுடா,சுனிதா திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் திருவண்ணாமலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கி  சேவை செய்து வழிபாடு


1879 ஆம் ஆண்டு திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ.ரமண பகவானின் ரமணாசிரமம். 


ஒவ்வொரு ஆண்டும் ரமண பகவானுக்கு மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.


அதன்படி 144- வது ஜெயந்தி விழா ரமணர் ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.


முன்னதாக ரமண பகவானுக்கு தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


இதற்காக ரமணரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ரமணாசிரமத்தில் குவிந்துள்ளனர்.


ஆன்மீக பக்தர்களுக்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா திம்மகவுடா, மரு. திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் ரமணாசிரமம் அருகில் அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 


திருமலா திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் வெங்கட்ரமண ரெட்டி அன்னதானத்தினை தொடங்கி வைத்தார்.


 தொடர்ந்து

காஞ்சிபுரம் இட்லி, கேசரி, போளி, உப்புமா, வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான அன்னதானங்கள் ரமண பக்தர்களுக்கும் கிரிவலம் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.


ரமண ஜெயந்தி தினமான இன்று அதிகாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இட்டிலி பொங்கல் கேசரி போளி சாம்பார் சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து சுனிதா திம்ம கவுடா குடும்பத்தினர் தொடர்ந்து அன்னதானத்தை வழங்கினர்.இரண்டு நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறி உபசரிப்பு.


ரமண பக்தர்களும் கிரிவல பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

Thursday, December 28, 2023

MATHIMARAN - திரைவிமர்சனம்

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிராமத்தில் தபால்காரராக பணிபுரிகிறார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்) மற்றொருவர் இவானா (மதி).

நெடுமாறன் உயரம் வளராத குட்டையானவர். இதனால் அவரை பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

அவன் தன் கல்லூரி தோழி ஆராத்யாவை காதலிக்கிறான்.

எல்லாம் நல்லபடியாக நடப்பதாகத் தோன்றும் போது, ​​ஒரு நாள், இவானா தன் கல்லூரிப் பேராசிரியையுடன் ஓடிப்போன செய்தி ஒட்டுமொத்த குடும்பத்தையும் குலைத்தது.

மன உளைச்சலில் இருந்த எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் கோபமடைந்த நெடுமாறன் தனது சகோதரியைத் தேடி சென்னை செல்கிறார்.

இதற்கிடையில், நகரத்தில் பல இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

நெடுமாறனுக்கு என்ன நடந்தது, கொலைக்கும் அவருக்கும் எப்படி தொடர்பு என்பதுதான் மீதிக்கதை.

மிக அழகான வாழ்க்கை முறையை சுவாரசியமான திரைக்கதையுடன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்.

அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை யூகிக்க வைப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக முடிந்திருந்தால் இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும்.

நெடுமாறன் கேரக்டரில் வெங்கட் செங்குட்டுவன் வாழ்ந்திருக்கிறார். முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு எனர்ஜியுடன், ஒரு அனுபவமிக்க நடிகர் கொடுக்கும் நடிப்பை, காட்சிகளை ரசிக்க வைக்கிறார்.

வெங்கட் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கும் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை இணைக்க வைத்துள்ளார்.

இந்த படத்தில் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார் இவானா.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களை கண்ணீரை வரவழைக்கிறார்.

ஆராத்யா நெடுமாறனின் காதலியாகவும், காவலராகவும் நடித்துள்ளார். அவளிடமிருந்து எதிர்பார்த்ததை அவள் வழங்கினாள்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவமிக்க நடிப்பால் தொடர்ந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

பர்வேஸ் கே ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய தூண்.


MOOTHAKUDI - திரைவிமர்சனம்

மது அருந்துவதை அடிக்கடி ரொமாண்டிக் செய்யும் கதைகளால் நிறைவுற்ற ஒரு சினிமா நிலப்பரப்பில், இந்த சமூக நோய்க்கு எதிராக தைரியமாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு திரைப்படம் வெளிப்படுகிறது. இந்த சினிமா ரத்தினம் ஒரு கிராமத்தின் பழமையான கேன்வாஸுக்கு எதிராக அதன் கதையை விரிவுபடுத்துகிறது, வகுப்புவாத குடிப்பழக்கத்தின் பேய் விளைவுகளை ஆராய்கிறது. அதீத மது அருந்துதல் காரணமாக பல கிராமவாசிகளின் துயர மரணங்களை அவிழ்த்து, ஒரு குளிர்ச்சியான ஃப்ளாஷ்பேக்குடன் கதை தொடங்குகிறது.

இந்த விறுவிறுப்பான கதையின் தலைமையில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, சோகமான சம்பவத்தில் பல ஆண் உறுப்பினர்களை இழந்ததன் பின்விளைவுகளுடன் போராடும் ஒரு குடும்பத்தின் மாமியாரை சித்தரித்துள்ளார். குடும்பத்தின் புகழ்பெற்ற மகளாக நடித்த அன்விஷா, பிரகாஷ் சந்திராவுக்கு ஜோதியாக மாறுகிறார், அதே நேரத்தில் தருண் கோபி அவளது பாசத்தை வெல்லும் அபிலாஷைகளைக் கொண்டுள்ளார். விரிவடையும் நாடகத்தின் மத்தியில், இரண்டு முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர்களான ஆர். சுந்தர்ராஜன் மற்றும் சிங்கம் புலி ஆகியோரைக் கொண்ட நகைச்சுவை துணைக்கதை, கதைக்கு லாவகத்தை சேர்க்கிறது, ஆனால் அதன் திறனை நிறைவேற்றுவதில் குறைவு.

ராஜ் கபூரின் அறிமுகத்தடன் கதை ஒரு இருண்ட திருப்பத்தை எடுக்கும், ஒரு முன்னாள் இயக்குனராக இருந்து நடிகராக மாறினார், அவர் ஒரு ஆல்கஹால் தொழிற்சாலையை நிறுவும் கெட்ட நோக்கத்துடன் எதிரியின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார். தருண் கோபி கபூரின் வலையில் சிக்குகிறார், இறுதி மோதலுக்கு களம் அமைக்கிறார். இருப்பினும், எதிர்பாராத நாயகியாக வெளிப்பட்டவர் அன்விஷா, கதையில் இருப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியை செயல்படுத்துகிறார்.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளரின் உன்னத நோக்கம் மறுக்க முடியாத பாராட்டுக்குரியது. இறுதிக் காட்சிகளில், தருண் கோபி ஒரு அழுத்தமான நடிப்பை வழங்குகிறார், உள்ளார்ந்த போராட்டத்தையும் இறுதியில் அவரது கதாபாத்திரத்தின் மீட்பையும் திறம்பட சித்தரித்தார். வரவுகள் உருளும் போது, ​​திரைப்படம் சமூக நெறிமுறைகளை சவால் செய்வதற்கும் நேர்மறையான மாற்றத்திற்காக வாதிடுவதற்கும் சினிமாவின் சக்திக்கு ஒரு சான்றாக நிற்கிறது, இது பெரும்பாலும் மது கலாச்சாரத்தை கவர்ந்திழுக்கும் பரவலான கதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கிறது.


NANDIVARMAN - திரைவிமர்சனம்


சுரேஷ் ரவி அனாயாசமாக போலீஸ் அதிகாரியாக, அந்தக் கதாபாத்திரத்திற்கு கையுறை போல் பொருந்துகிறார். அவரது நடிப்பு பாராட்டுக்குரியது மட்டுமல்ல, பார்வையாளர்களிடையே நீடித்த தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

போஸ் வெங்கட்டின் கதாபாத்திரம் சஸ்பென்ஸில் மறைக்கப்பட்டுள்ளது, கதைக்களத்தில் ஒரு புதிரான அடுக்கைச் சேர்க்கிறது. அவரது பாத்திரத்தின் புதிரான தன்மை பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கிறது, வெளிவரும் நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

திரையில் ஆஷா கவுடாவின் இருப்பு வசீகரமாக உள்ளது, அவர் தனது பாத்திரத்தில் ஈர்க்கிறார். அவரது சித்தரிப்பு படத்திற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது, இது அவரது கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாகவும் பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகிறது.

படத்தில் கிராபிக்ஸ்-உருவாக்கப்பட்ட காட்சிகள் அதன் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்திற்கு பங்களிக்கின்றன. விஷுவல் எஃபெக்ட்ஸ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் மற்றும் கதை சொல்லும் திறனை மேம்படுத்தும் ஒரு சினிமா அனுபவத்தை வழங்குகிறது.

அப்பாவி கிராம மக்களின் பழமையான இயல்பை சக்தி வாய்ந்தவர்கள் எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதை திறம்பட சித்தரிப்பதில் படத்தின் பலம் உள்ளது. இந்த சமூக வர்ணனை கதைக்கு ஆழம் சேர்க்கிறது, பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் எதிர்கொள்ளும் கடுமையான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

படத்தின் க்ளைமாக்ஸ் ஒரு ஆச்சரியமான தொகுப்பைக் கொண்டுள்ளது, இது கதைக்களத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் ஒரு திருப்பத்தை வழங்குகிறது. இந்த எதிர்பாராத திருப்பம் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் மற்றும் கதைக்கு கணிக்க முடியாத ஒரு கூறு சேர்க்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் சிலைகள் கடத்தல் ஆகியவற்றின் கருப்பொருளை ஆராய்வதால், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட புலனாய்வு திரில்லர் திரைப்படம். கதைக்களத்தில் இந்த கூறுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு சதித்திட்டத்திற்கு செழுமை சேர்க்கிறது, இது அறிவுபூர்வமாக தூண்டுகிறது மற்றும் பொழுதுபோக்குகிறது.

பல்லவ மன்னன், நந்திவர்மன் மற்றும் அவனது மந்திர வாள் பற்றிய யதார்த்தமான படத்தை தொடக்கக் காட்சிகள் திறமையாக வரைகின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியானது வெளிவரும் நிகழ்வுகளுக்கான களத்தை அமைத்து, கதையின் சூழலையும் ஆழத்தையும் வழங்குகிறது.

முடிவில், இந்தப் படம் பார்க்கத் தகுந்தது என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதைக்களம், வலுவான நிகழ்ச்சிகள், பார்வைக்கு ஈர்க்கும் காட்சிகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கருப்பொருள்களுடன், இது வெற்றிகரமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது மற்றும் நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Wednesday, December 27, 2023

இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி*

*‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி*

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். 

மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ ,  ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். 

 இந்தநிலையில்  நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார். 

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதாநாயகனான ஆதவ் பாலாஜி,  மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

டீசரை ஆர்வமுடன் பார்த்து ரசித்த நடிகர் விஜய்சேதுபதி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்களுக்கு அன்பு முத்தங்களையும் பரிசளித்து இன்ப அதிரச்சி அளித்தார். 

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். 

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். 

வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.

VATTARA VAZHAKKU - திரைவிமர்சனம்

 

கே.ஆர்.சந்துருவின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைத்த, "வட்டற வாழ்க்கை" என்ற சினிமா தலைசிறந்த திரைப்படம், நீண்ட காலத்தை நினைவுபடுத்தும் ஒரு கிராமத்தின் பின்னணியில் அமைந்த ஒரு பிடிமான கதையாக விரிகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சொட்டுவத்தல சோழ மண்டலத்தின் சிக்கலான சமூகக் கட்டமைப்பை சித்தரிக்கும் அழுத்தமான அறிக்கையாக இப்படம் வெளிவந்துள்ளது.

இரண்டு முக்கிய குடும்பங்களின் வாழ்க்கையின் மூலம் கதை நெசவுகள், பரம்பரை பரம்பரை வரலாற்றின் மூலம் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நீதியின் ஆழமான உணர்வால் உந்தப்பட்ட கதாநாயகன், தனது சொந்த குடும்பத்தைத் தாண்டிய வன்முறை வலையில் சிக்கிக் கொள்கிறான். அவரது உறவினர்களுக்கு எதிராக நடந்த கொலைகளுக்கு பழிவாங்க அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுகளை படம் ஆராய்கிறது, கொலைகளுக்கு காரணமானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இணை சேதத்தை வெளிப்படுத்துகிறது.

நுணுக்கமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குனர் சந்துரு, பார்வையாளர்களை எதிரொலிக்கும் ஒரு கதையை திறமையாக வடிவமைத்துள்ளார். இத்திரைப்படம் நிறுவப்பட்ட நடிகர்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கிராமப்புற சூழலின் நம்பகத்தன்மைக்கு பங்களிக்கும் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. காதல், பழிவாங்குதல் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்கள் ஆகியவற்றின் அழுத்தமான கதையை சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் திரையில் உயிருடன் வருகின்றன.

“வட்டற வழக்கம்” படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் இளையராஜாவின் இசையமைப்பாகும், இது கதையுடன் தடையின்றி ஒருங்கிணைத்து, படத்தின் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்துகிறது. ஆடம்பரமான இசை அமைப்புகளை நம்பாமல் உணர்ச்சிகளைத் தூண்டும் இளையராஜாவின் திறன் தெளிவாகத் தெரிகிறது, மேலும் சில காட்சிகளில் தேவையற்ற பின்னணி மதிப்பெண்கள் இல்லாதது பார்வையாளர்களை நடிகர்கள் சித்தரிக்கும் மூல உணர்ச்சிகளில் மூழ்கடிக்க அனுமதிக்கிறது.

கிராமத்து வாழ்க்கையின் சாரத்தை நம்பகத்தன்மையுடன் படம்பிடித்து, சொட்டுவத்தல சோழ மண்டலத்தின் இயற்கை அழகையும் படம் பிடித்துக் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் பேச்சுவழக்கு, உடல் மொழி மற்றும் பேச்சுவழக்கு வெளிப்பாடுகள் ஆகியவை படத்தின் ஆழமான அனுபவத்திற்கு பங்களிக்கின்றன, பார்வையாளர்களை கிராமப்புற சூழலுடன் இணைக்க அனுமதிக்கிறது.

சந்துரு தனது இயக்கத்தில், கதாநாயகனை நேர்த்தியுடன் சித்தரிக்கும் தினேஷ் ரவியின் விதிவிலக்கான நடிப்புத் திறமையை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறார். லவ் டுடே மற்றும் மாமன் மச்சான் ஆகிய படங்களில் நடித்ததற்காக முன்னர் அறியப்பட்ட பல்துறை ரவீனா ரவி, பெண் கதாபாத்திரத்தில் தனது பாத்திரத்தில் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். உணர்ச்சிகளின் அவரது சித்தரிப்பு, குறிப்பாக காதல் மற்றும் கோபம், பாத்திரத்தின் இயக்கவியலுக்கு ஆழத்தை சேர்க்கிறது.

"வட்டார வாழ்க்கை" ஒரு சிந்தனையைத் தூண்டும் திரைப்படமாக தனித்து நிற்கிறது, இது பொழுதுபோக்குடன் மட்டுமல்லாமல், சமூக நெறிமுறைகள் மற்றும் பழிவாங்கும் முயற்சியின் விளைவுகளைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகிறது. அதன் அழுத்தமான விவரிப்பு, விதிவிலக்கான நடிப்பு மற்றும் உள்ளத்தைக் கிளறும் இசை ஆகியவற்றால், இயக்குனர் கே.ஆர்.சந்துருவின் புத்திசாலித்தனத்திற்கும், இளையராஜாவின் காலத்தால் அழியாத கலைத்திறனுக்கும் இப்படம் ஒரு சான்றாகும்.

MOONDRAM MANITHAN - திரைவிமர்சனம்


 சமூக அவலங்களுக்கு இளைய தலைமுறையினர் மீது பழி சுமத்துவதை வழக்கமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு சாம்ராஜ்யத்தில், ஒரு தொலைநோக்கு கலைஞன் இந்த வழக்கத்திலிருந்து விலகிச் செல்லத் துணிந்துள்ளார். ஒரு தனித்துவமான முன்னோக்கை வழங்குவதன் மூலம், இந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் தவறான இளைஞர்களின் குடும்பத் தோற்றங்களை ஆராய்ந்து, அவர்களின் வளர்ப்பில் அவர்களின் பெற்றோர் ஆற்றிய பங்கை ஆராய்கிறார்.

மையக் கதாப்பாத்திரமான செல்லம்மாள் (பிரானா), ஒரு ஊதாரித்தனமான, மதுவுக்கு அடிமையான மனைவியை மணந்திருப்பதைக் காண்கிறார், அதன் தினசரி வழக்கம் ஒரு பாட்டிலின் உள்ளடக்கத்தைச் சுற்றியே செல்கிறது. அவனது அத்துமீறலைச் சகித்துக்கொண்டாலும், பள்ளி செல்லும் மகனுக்காக செல்லம்மாள் விடாமுயற்சியுடன் இருக்கிறார். இதற்கு இணையாக, ஒரு போலீஸ் அதிகாரி (ரிஷிகாந்த்), திருமண முரண்பாட்டுடன் போராடி, அவர்களது வீட்டில் முன்னாள் பணிப்பெண்ணான செல்லம்மாள் மீது பாசத்தை வளர்த்துக் கொள்கிறார். சாதாரண உரையாடல்களாகத் தொடங்குவது ஒரு ரகசிய விவகாரமாக விரிவடைகிறது, இது ஒரு சோகமான திருப்பத்தை எடுக்கும் நிகழ்வுகளின் திருப்பம், போலீஸ் அதிகாரி அவரது மறைவை சந்திக்கும் போது. அதைத் தொடர்ந்து, இரண்டு வாலிபப் பையன்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு விடாமுயற்சியுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணையை மேற்கொள்ளும்போது, ​​காவல்துறையின் கொலையின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள அடுக்குகளை வெளிக்கொணரும்போது கதை ஒரு பிடிமான திருப்பத்தை எடுக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது, ஆர்வத்தைத் தக்கவைக்கும் சஸ்பென்ஸின் ஒரு கூறுகளை புகுத்தியது.

முதன்மை நடிகர்கள் திருப்திகரமான செயல்திறனை வழங்குகிறார்கள், மேலும் தயாரிப்பு மதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளை சந்திக்கின்றன. இந்தத் திரைப்படம் குறிப்பாக திருமணமான பெண்கள் மற்றும் ஆண்களுடன் எதிரொலிக்கிறது, கடுமையான வாழ்க்கைப் பாடங்களையும் பெற்றோருக்கு எச்சரிக்கையான ஆலோசனைகளையும் வழங்குகிறது. வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பால், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் சிந்திப்பவர்கள் அல்லது ஈடுபடுபவர்களுக்கு ஒரு கட்டாய கண்காணிப்பாக இந்த கதை செயல்படுகிறது, இதனால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைப் பற்றிய தெளிவான எச்சரிக்கையை அளிக்கிறது.

சாராம்சத்தில், இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையைக் குற்றம் சாட்டுவதற்கான வழக்கமான கதையை மீறுகிறது, குடும்ப இயக்கவியல் மற்றும் சமூக விளைவுகளின் நுணுக்கமான ஆய்வை வழங்குகிறது. சிந்திக்கத் தூண்டும் கருப்பொருள்கள் மற்றும் சஸ்பென்ஸின் திடுக்கிடும் வெளிப்பாட்டிற்காக பார்க்க வேண்டிய படம், திரைப்படத் தயாரிப்பாளரின் சினிமா நெறிமுறைகளில் இருந்து தைரியமாக விலகியதற்கான சான்றாக இப்படம் நிற்கிறது.

Tuesday, December 26, 2023

முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

*'முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில்  எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் 'முடக்கறுத்தான்'.
           இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 
           இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா  சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முதலாவதாக பேசிய வீரபாபு, தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளதாக கூறினார். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார். அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். 

சுரேஷ் காமாட்சி பேசும்போது Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.

இயக்குனர்,நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் பேசும்போது,"தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது. கரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார்.தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார்", என்றும் கூறினார்.

தங்கர் பச்சான் பேசும்போது Dr.K.வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றிப்பதாகவும் அவரின் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்திருப்பதாகவும் அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை என்றும், தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த படத்தை தமிழ் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.

படத்தின் கதாநாயகி மஹானா பேசும்போது," வீரபாபு அவர்கள் 'ஒன் மேன் ஆர்மி' போல நடிப்பு,தயாரிப்பு,இயக்கம் என படத்தின் அனைத்து துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றினார். இந்த படம் பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலை பற்றி  பேசும் படம். படப்பிடிப்பின் போதும் கூட மூலிகை உணவுகளை கொடுத்து  எங்களை சிறப்பாக கவனித்து கொண்டார்.மயில்சாமி,சாம்ஸ், 'காதல்'சுகுமார்,அம்பானி சங்கர் போன்றோரது நகைச்சுவை நன்றாக வந்திருக்கிறது",என்றார்.

விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான  தமிழருவி மணியன்," நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்  பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன்.அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்", என்று கேட்டு கொண்டார்.

விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.

'முடக்கறுத்தான்' திரைப்படம் ஜனவரி-25 திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!*

*லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!*

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

*நடிகர்கள்:*

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ்குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்:  அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி - மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்:  மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி'ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் - பிரதூல் என்.டி

Monday, December 25, 2023

வட்டார வழக்கு' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

*'வட்டார வழக்கு' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் 'வட்டார வழக்கு'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, "'மாமன்னன்' படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்" என்றார். 

நடிகை ரவீனா ரவி, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன், " இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன் சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம் பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி. பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள். 29 ஆம் தேதி 'வட்டார வழக்கு' வெளியாகிறது இந்த படத்திற்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று ஊடகங்கள். நீங்கள் தரும் ஆதரவினால் தான் 'வட்டார் வழக்கு' மைலேஜ் ஏற்றி அடுத்தடுத்து நகரும்" என்றார். 

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், "இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது.  இயக்குநர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே அவரவர் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்" என்றார்.

Sunday, December 24, 2023

GLOBAL STAR RAM CHARAN THE PROUD OWNER OF HYDERABAD TEAM IN INDIAN STREET PREMIER LEAGUE*

*GLOBAL STAR RAM CHARAN THE PROUD OWNER OF HYDERABAD TEAM IN INDIAN STREET PREMIER LEAGUE*

The Indian Street Premier League (ISPL), an innovative tennis ball T10 cricket tournament staged within the confines of a stadium, is elated to announce Global Star Ram Charan as the proud owner of the Hyderabad team. This groundbreaking revelation adds another luminary name to the list of Bollywood superstars venturing into team ownership, including Akshay Kumar (Srinagar), Hrithik Roshan (Bengaluru), and Amitabh Bachchan (Mumbai), collectively amplifying cricket fervor to unprecedented levels nationwide.

Ram Charan's association with ISPL transcends mere ownership; it symbolizes a dynamic collaboration poised to ignite the flames of cricket passion in the city of Nizams. With his star power and unwavering enthusiasm for the sport, Ram Charan injects an electrifying energy into the league, promising an unforgettable journey for cricket enthusiasts in Hyderabad and beyond. The convergence of cinema and cricket under the vibrant ISPL banner is set to redefine the sports and entertainment landscape, creating a spectacle that transcends boundaries and captures the hearts of millions. Brace yourselves for an unparalleled cricketing experience as the ISPL, under the stewardship of Ram Charan, prepares to inscribe a new chapter in India's cricketing saga.

The inaugural edition of ISPL is scheduled to enthrall cricket enthusiasts from March 2nd to March 9th, 2024, in the dynamic city of Mumbai, featuring a dazzling array of 19 matches among six competitive teams – Hyderabad, Mumbai, Bengaluru, Chennai, Kolkata, and Srinagar (Jammu and Kashmir).
Expressing his enthusiasm for his association with the Indian Street Premier League, Ram Charan shared, "I am thrilled to be part of ISPL, a unique initiative that promises to redefine cricket entertainment. Hyderabad has always been a hub of exceptional cricketing talent, and this league provides a fantastic platform for our local players to shine on the national stage. I am excited to lead the Hyderabad team and witness the city’s cricketing prowess unfold on this grand platform.”

Diverging from conventional norms, ISPL imposes no age restrictions, except for the inclusion of at least one player from the U-19 age group category in the playing XI. This innovative approach positions ISPL as fertile ground for discovering hidden talents across the country.

Ashish Shelar, Core Committee Member of the Indian Street Premier League, commented, “Ram Charan’s entry into ISPL adds a new dimension to our league. His passion for the game and star power will undoubtedly inspire budding cricketers in Hyderabad to register for this one-of-a-kind tournament. We look forward to a successful collaboration and an exciting season ahead.”

Amol Kale, another Core Committee Member, emphasized, “ISPL is not just a cricket league; it’s a celebration of talent and sportsmanship. Ram Charan’s involvement enhances the league’s star-studded lineup and brings a new energy. Hyderabad players, seize this opportunity, and let’s make this season unforgettable!”

Suraj Samat, the ISPL League Commissioner, anticipates an elevated level of competition with Ram Charan's association with the Hyderabad team. He stated, “Ram Charan’s charisma and belief in the team will undoubtedly spur them to perform exceptionally well. We anticipate a fierce and thrilling competition, and the Hyderabad team, with Ram Charan at the helm, is set to make a mark.”

As the league gears up for its inaugural edition, aspiring players are encouraged to register on the ISPL Official Website and secure their 'Golden Ticket' for a chance to participate in city trials. Further details about the trials in each venue will be announced soon, providing aspiring cricketers with an opportunity to shine on the grand stage. Don't miss your chance to be part of this cricketing extravaganza!

Aspiring Players are encouraged to register here: www.ispl-t10.com 

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

*மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது 'புரொடக்ஷன் நம்பர் 2' ஃபேண்டஸி கதையான 'சிரோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் 'பதினெட்டாம் படி' மற்றும் 'வாலாட்டி' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, 'போர் தோழில்' புகழ் லிஷா சின்னு, 'சூப்பர் டீலக்ஸ்' புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இப்படத்தை எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார்.

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான எம்.எஸ். மன்சூர் கூறும்போது, ​​“நாங்கள் தயாரித்திருக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு 27 அக்டோபர் 2023 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கோவளம், பிச்சாவரம், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 45 நாட்கள் விரைவான படப்பிடிப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 10, 2023 அன்று படப்பிடிப்பு முடிந்தது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இப்படத்தை 'தனி ஒருவன்', 'வழக்கு எண் 18/9', 'தில்லுக்கு துட்டு' புகழ் கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார். படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Saturday, December 23, 2023

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் 'தி பாய்ஸ்' ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் 'தி பாய்ஸ்' ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட 'தி பாய்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக்*


இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'தி பாய்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். 

'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'. இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.‌ தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் E. செந்தில்குமார் தயாரித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார்.. அவருடைய சொந்த பட நிறுவனமான டார்க் ரூம் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்.

படத்தை பற்றி சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசுகையில், '' ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால்... அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.‌ மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான் '' என்றார். 

'கஜினிகாந்த்', 'பொய்க்கால் குதிரை' போன்ற படைப்புகளை வழங்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி .ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படம் வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் கல்ட் சினிமா என்பது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இளைய தலைமுறையினரிடத்திலும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

JIGIRI DOSTHU - திரைவிமர்சனம்


 சினிமா உலகில், பிரிக்க முடியாத மூன்று நண்பர்களைக் கொண்ட “ஜிகிரி தோஸ்து” போன்ற தலைப்பு பொதுவாக தோழமை மற்றும் மனித தொடர்புகளை இலகுவான ஆய்வுக்கு பரிந்துரைக்கிறது. இருப்பினும், அரண் V இன் இயக்குனராக அறிமுகமானது அத்தகைய எதிர்பார்ப்புகளை மீறி, இந்த வெளிப்படையான நகைச்சுவை அமைப்பை ஒரு த்ரில்லராக மாற்றுகிறது. ஷாரிக் ஹாசன், அரண் வி மற்றும் வி.ஜே. ஆஷிக் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட மூன்று தோழிகளை இந்தப் படம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது, ஆரம்பத்தில் ஒரு த்ரில்லரின் சஸ்பென்ஸ்ஃபுல் நிலப்பரப்பில் விரைவாக மாறுவதற்கு முன்பு ஒரு வழக்கமான நண்பன் திரைப்படமாக தன்னை முன்வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, "ஜிகிரி தோஸ்து" நகைச்சுவை அல்லது திரில்லர் வகைகளில் சிறந்து விளங்கும் முயற்சியில் தடுமாறி, பாரமான எதிர்பார்ப்புகளுக்கு அடிபணிகிறது.

அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், படம் சில பாராட்டத்தக்க கூறுகளை பெருமைப்படுத்துகிறது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை, படத்தின் குறைபாடுகளுக்கு முற்றிலும் மாறாக, திரையில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக இருப்பதை விட, பார்வையாளர்களை நம்ப வைக்கும் சூழ்நிலையை வெற்றிகரமாக உருவாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், வி.ஜே. ஆஷிக் லோகியாக ஒரு தனித்துவமான நடிப்பை வழங்குகிறார், மூவரில் மிகக் குறைவான வீரம், இன்னும் அழியாத தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறை ஒட்டுமொத்த அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தியிருக்கலாம். கலக்கமடைந்த ஒரு பெண் தனது கேங்ஸ்டர் காதலனுடன் உரையாடியதில் இருந்து நகைச்சுவையைப் பிரித்தெடுக்கும் படத்தின் முயற்சியானது அதன் கட்டாய மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மரணதண்டனை காரணமாக வீழ்ச்சியடைகிறது. இந்த ஏமாற்று உணர்வு முழு கதையிலும் ஊடுருவி, படத்தின் இறுதி வீழ்ச்சிக்கு பங்களிக்கிறது.

அதன் சிக்கல்களை ஒருங்கிணைத்து, "ஜிகிரி தோஸ்து" ஒரே மாதிரியான மற்றும் கேலிச்சித்திரமான குணாதிசயங்களால் பாதிக்கப்படுகிறது. ஒரு மனிதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் இடைவிடாமல் “சகோ” அல்லது சண்டையிடும் இளம் ஜோடி என்று முடிப்பது போன்ற க்ளிஷேக்களின் பயன்பாடு, கதாபாத்திரங்களை பொதுவானதாகவும் சூத்திரமாகவும் மாற்றுகிறது. பயமுறுத்தும் குண்டர்கள், குறைவான பயமுறுத்தும் குண்டர்கள், அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட இந்த திரைப்படம் பழக்கமான ட்ரோப்களின் களஞ்சியமாக மாறுகிறது, இவை அனைத்தும் முன்னறிவிப்பு உணர்வுக்கு பங்களிக்கின்றன.

சாராம்சத்தில், "ஜிகிரி தோஸ்து" மூன்று நண்பர்களைச் சுற்றி வருகிறது - விக்கி, ரிஷி மற்றும் லோகி - அவர்கள் கடத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற ஒரு ஆபத்தான பயணத்தைத் தொடங்குகிறார்கள். அதன் புதிரான முன்மாதிரி இருந்தபோதிலும், நகைச்சுவை மற்றும் த்ரில்லருக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த இயலாமை, கேலிச்சித்திரங்கள் மற்றும் ஸ்டீரியோடைப்களை நம்பியிருப்பதன் மூலம், ஒரு சினிமா முயற்சியில் அதன் திறனைக் குறைக்கிறது.

பத்திரிகையாளர்கள் காட்சியில்,**படத்தின் இறுதி காட்சியிலும்..**கேள்வி பதில் நிகழ்விலும் கை தட்டல்களை பெற்ற அபூர்வ OTT படம் நவயுக கண்ணகி* . படத்துக்கு இணையான OTT படம்.

*பத்திரிகையாளர்கள் காட்சியில்,*
*படத்தின் இறுதி காட்சியிலும்..*
*கேள்வி பதில் நிகழ்விலும் கை தட்டல்களை பெற்ற அபூர்வ OTT படம் நவயுக கண்ணகி* . 

படத்துக்கு இணையான OTT படம். 


கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார் கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர்.

ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ நாளை டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்தனர். படத்தின் இறுதி காட்சியில் கைதட்டல்களை பெற்றார்கள், பட குழுவினர். அதேபோல் இதை அடுத்த நடந்த பத்திரிகையாளர்கள் கேள்வி பதில் முடிந்ததும் கை தட்டல்களை பெற்றது அபூர்வமாக இருந்தது. 

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இப்படம் குறித்த பல தகவல்களை இயக்குநர் கிரண் துரைராஜ் பகிர்ந்துகொண்டார்

“நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அங்கே வெறும் கன்னட தமிழர் வித்தியாசம் மட்டும் தான். அங்கிருந்து இங்கே வந்து பார்க்கும்போது தான் என்னுடைய முந்தைய தலைமுறையில் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

எதிர் தரப்பில் இருந்து பிரச்சனைகள் பற்றி பேசும்போது ஜாதியை பற்றி பேசினால் மட்டும் பரவாயில்லை, கடவுள் இல்லை என்றெல்லாம் பேசுகிறார்கள்.. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக நான் என் கூட்டத்தை தேடுவதில்லை.. ஆனால் நீங்கள் என்னை அவ்வாறு சித்தரித்தால் நானே ஒரு படம் எடுத்து எங்கள் தரப்பை காட்டவேண்டும் என்பதற்காகத்தான்  இந்த படத்தை எடுத்தேன்.

சினிமாவுக்காக சென்னை வந்தபோது, இங்கே.. சென்னையில் ஜாதி பார்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள். 5 நிமிடத்திலேயே நம் ஜாதி என்ன என்று நம்மிடமே போட்டு வாங்கும் விதமாக பேசுவார்கள். எனக்கு என் ஜாதியை சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று கூட தெரியாது. ஆனால் நான் பொதுவாக பேசுபவன். சினிமா ஆசையில் சென்னை வந்தவன். என் ஜாதியை கண்டுபிடித்தவர்கள் அந்த கோணத்திலேயே என்னை சித்தரிக்க துவங்கி விடுவார்கள். அதனால் தான் இந்த கதையை என்னுடைய முதல் படமாக்க நினைத்தேன். இனி அடுத்து நான் எடுக்கும் படங்களில் கூட என் வாழ்க்கையில் பாதித்த நிஜ விஷயங்களை தான் படமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்த படத்தில் மாப்பிள்ளை கதாபாத்திரம் ஒரு தப்பும் செய்யவில்லை என்றாலும் அவரை வைத்து ஒரு தவறான ‘கேம்’ ஆடப்படும். பெண் கதாபாத்திரத்தின் தந்தை கடைசிவரை தான் செய்தது சரிதான் என்று பெண்ணிடம் வாதாடுவாரே தவிர தான் செய்த தவறை ஒப்புக் கொள்வதில்லை. இந்த மாதிரி மனநிலையில் தான் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஜாதியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார் என்று சொல்கிறீர்கள்.. பொதுவாக திரைப்பட இயக்குனர்கள் ஜாதி பற்றி பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். சினிமாவை கலையாக தான் பார்க்கிறேன். பா.ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான படம். அவர் அந்த மாதிரி பார்க்கிறார் என்பதற்காக அவரை வெறுக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். படமாக அவரை பின்பற்றுவேன்.. வாழ்க்கையில் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்ப்பதற்கு பதிலாக , இந்தப் படத்தின் மாப்பிள்ளை கதாபாத்திரத்தை மணப்பெண் பழி வாங்குவது போன்று காட்டுவது சரியா என்று கேட்டால் அந்த பெண்ணின் பார்வையில் அந்த மணமகன் தனது சமூகத்தை சேர்ந்தவன் என்கிற ஒரு வெறுப்பு இருக்கிறது. ஆனால் அந்த சமூகத்தில் பிறந்ததை தவிர அவன் மீது எந்த தவறுமே இல்லை. இப்போது வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் படத்தில் காட்டப்படும் போது ஒருவர் மீது ஒருவர் தவறு இருப்பது போன்று தான் காட்டுகிறார்கள். ஆனால் தங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் இவ்வளவு பிரச்சனைகளே இல்லையே. இதைத்தான் நான் சொல்ல விரும்பினேன்.

பெரியார் சிந்தனையை வைத்திருக்கிறோம் என்றால்.. பெரியார் கண்ணகியை எப்போதும் முட்டாள் என்பார். காரணம் தனது மோசமான கணவனுக்காக பழிவாங்குகிறேன் என ஊரையே எரித்தவள் என்பதால். இந்த படத்தின் கதாநாயகியும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பாள். ஆனால் ஒரு கட்டத்தில் தான் பெரியாரை படிக்கத் துவங்குகிறாள்.

பெண் சிகரெட் குடிக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது அவர்கள் விருப்பம். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் படத்தில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. சில மூடநம்பிக்கைகள் இருக்கின்றது என்பது போன்று கதையில்  கூற வேண்டி இருந்தது. அதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். ஒரு தனி நபர் தவறு செய்வதை,  ஒட்டுமொத்தம் செய்த தவறாக சித்தரிக்கக் கூடாது என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்து.

படத்தில் தலையாட்டி பொம்மை அடிக்கடி ஏன் காட்டப்படுகிறது என்றால் நமது இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு தலையாட்டி பொம்மையாக தான் பெண்களை இருக்க செய்கிறார்கள் என சொல்வதற்காக தான் என்று கூறினார்.

*நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

கதை- படத்தொகுப்பு – இயக்கம் ; கிரண் துரைராஜ்

*நடிகர்கள்*

பவித்ரா தென்பாண்டியன்
விமல் குமார்
E டென்சல் ஜார்ஜ்
தென்பாண்டியன் K
ஜெயபிரகாஷ்

*தொழில்நுட்ப கலைஞர்கள்*
ஒளிப்பதிவாளர் ; தர்மதீரன் P

இசை அமைப்பாளர் (பின்னணி) ; கெவின் கிளிஃபோர்ட்

இசையமைப்பாளர் (பாடல்கள்) ; ஆல்வின் புருனோ

கலை இயக்குநர் ; மோகன் குமார் தங்கராஜ்

*பாடகர்கள்*

சைந்தவி பிரகாஷ்
சின்மயி ஸ்ரீபடா
அனிருத்
ரேணுகா அஜய்

பாடலாசிரியர் ; டேனியல் சில்வானஸ்

ஸ்டண்ட் ; கிரண்.S

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

விளம்பரம் ; மூவி பாண்ட்

தயாரிப்பாளர் ; கோமதி துரைராஜ்.

Choco Pie Magic: 6 Quick Dessert Hacks for Your Sweet Cravings this Christmas eve!

Choco Pie Magic: 6 Quick Dessert Hacks for Your Sweet Cravings this Christmas eve!

Chennai Date 23.12.2023:  Embrace the holiday spirit with these versatile dishes perfect for unexpected guests! Whether you're catering to a desert lover, a sweet milkshake adorer, or simply a very hungry visitor, this Christmas Eve feast, we have some inventive and mouthwatering last-minute recipes that incorporate the heavenly Choco Pie. Whether you're a dessert aficionado or just looking for a speedy sugar fix, these last-minute surprises will help you to add special moments to your festive moments:

Choco Pie Ice Cream Sandwiches:
Ingredients: Lotte Choco Pies, vanilla ice cream.
Method- Grab some Lotte Choco Pies and vanilla ice cream. Create a sweet sandwich by placing a scoop of vanilla ice cream between two Choco Pies. Roll the edges in sprinkles or crushed nuts for that extra delightful touch.

Choco Pie Milkshake:
Ingredients: Lotte Choco Pies, milk, vanilla ice cream.
Method- Blend Lotte Choco Pies, milk, and vanilla ice cream for a rich and indulgent milkshake. Top it off with a generous dollop of whipped cream and chocolate shavings for a dreamy finish.

Choco Pie S’mores Dip:
Ingredients: Lotte Choco Pies, mini marshmallows, graham crackers.
Method- Arrange Choco Pies in a baking dish, topped with mini marshmallows, and bake until golden. Serve with graham crackers for a quick and satisfying s'mores dip.

Choco Pie Stuffed Pancakes:
Ingredients: Lotte Choco Pies, pancake batter.
Method- Mix pieces of Choco Pies into your pancake batter before cooking. Indulge in gooey, chocolate-filled pancakes in just minutes.

Choco Pie Parfait:
Ingredients: Lotte Choco Pies, whipped cream, fruits.
Method-Layer crushed Choco Pies, whipped cream, and your favorite fruits in a glass. Create a visually appealing dessert parfait for a quick and delightful treat.

Choco Pie Dipped Strawberries:
Ingredients: Lotte Choco Pies, fresh strawberries.
Method- Melt Choco Pies, dip fresh strawberries into the melted chocolate, and let them cool. Enjoy a simple and elegant last-minute treat that's perfect for any occasion.

As the festive season unfolds, the enchanting allure of Choco Pie takes center stage, transforming into a magical delight for those seeking last-minute Christmas treats. Beyond being a mere sweet snack, Choco Pie becomes a symbol of tradition, togetherness, and the simple joys of the holiday season. Whether savoured for its delightful taste, shared as a heartfelt gift, incorporated into culinary creations, or part of cherished festive memories, Choco Pie adds a unique and special sweetness to Christmas celebrations. From ice cream sandwiches to chocolate-dipped strawberries, these Choco Pie creations are the perfect solution for your last-minute dessert desires. Indulge and enjoy the bliss of Christmas with the Choco Pie Magic!

Friday, December 22, 2023

SALAAR - திரைவிமர்சனம்

கதை எளிமையாக இருப்பதாகத் தோன்றினாலும், இயக்குநர் பிரசாந்த் நீல் தனக்கே உரிய பாணியில் கொடுத்திருக்கிறார்.

எளிமையான வடிவத்தில் நடக்கும் விஷயங்களை நீல் விரும்புவதில்லை, மேலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவற்றை சிக்கலாக்க விரும்புகிறார்.

ஃப்ளாஷ்பேக் கதையை வசதியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

தொடக்கக் காட்சியில் இருந்தே, பிரசாந்த் நீல் உங்களை தனது வழக்கமான இருண்ட உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார், அங்கு நிறைய ஸ்லோ மோஷன்கள் மற்றும் ஓவர் தி டாப் ஷாட்கள் உள்ளன.

பிரபாஸுக்கு அவரது ஆளுமைக்கு ஏற்ற கேரக்டர் கிடைத்துள்ளது.

இந்த ‘கோபமான இளைஞன்’ வேடம் அவருக்குப் பொருத்தமானது. அவர் அதிகம் பேசமாட்டார், ஆனால் அவரது கண்களின் தீவிரம் புள்ளியில் உள்ளது.

அவர் செயலில் சிரமமின்றி இருக்கிறார், மேலும் அவரது ஒட்டுமொத்த திரை பிரசன்ஸ் சக்தி வாய்ந்தது.

பிருத்விராஜ் தனது பாத்திரத்தில் நம்பமுடியாதவர் மற்றும் அவரது நுட்பமான செயல் படத்துடன் ஓடுகிறது.

பிரபாஸுடனான அவரது திரையுலக தோழமையும் இயற்கையாகவே தெரிகிறது மற்றும் எந்த வாய்ப்பையும் வற்புறுத்தவில்லை.

ஸ்ருதி ஹாசனுக்கு குறைந்த திரை நேரம் மட்டுமே உள்ளது.

மற்ற நடிகர்களான ஜெகபதி பாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவும் எடிட்டர் உஜ்வல் குல்கர்னியும் தேவையானதைச் செய்துள்ளனர்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை எப்போதாவது சத்தமாக இருந்தாலும், படத்தின் முக்கியமான தருணங்களில் போதுமான அளவு இறைச்சியை சேர்க்கிறது. 

DUNKI - திரைவிமர்சனம்

 

பஞ்சாபின் லால்டுவைச் சேர்ந்த டாப்ஸி, அனில் குரோவர், விக்ரம் கோச்சார் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக லண்டன் செல்ல முடிவு செய்தனர்.

IELTS தேர்ச்சி பெறவும், பயிற்சி மையத்தில் சேரவும் ஆங்கிலம் காலத்தின் தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

ஷாருக் கான் என்ற சிப்பாய், எல்லைகளைக் கடக்கும் சட்டவிரோதமான டன்கி முறை (கழுதை விமானம் முறை) மூலம் அவர்களின் கனவை அடைய உதவுகிறார்.

ஷாருக்கான் யார்? அவர் ஏன் அவர்களுக்கு உதவினார்? லண்டனுக்குச் செல்ல அவர்கள் ஏன் சட்டவிரோதமான வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? இந்தப் பயணத்தில் அவர்கள் சந்தித்த அனுபவங்கள் என்ன என்பதுதான் படம்.

ராஜ்குமார் இயக்கிய ஹிரானி டுங்கியின் முதல் பாதி மிகவும் சிறப்பாக உள்ளது, இது முக்கியமாக நகைச்சுவையை நம்பியுள்ளது. இரண்டாம் பாதியில் சில நல்ல தருணங்கள் உள்ளன.

வேடிக்கையான எலும்புகளை கூச வைக்கும் நல்ல எண்ணிக்கையிலான காட்சிகள் உள்ளன. அந்த நகைச்சுவை காட்சிகள் முழுவதும் ஹிரானி மார்க் எழுதப்பட்டிருக்கிறது.

நகைச்சுவையைப் பொறுத்தவரை ஹிரானி சரியாகப் புரிந்து கொண்டாலும், உணர்ச்சிகளை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்.

ஷாருககான், ஒரு நடிகராக, டன்கியில் ஜொலிக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கோர்ட் காட்சியில்.

டாப்ஸி பன்னு நன்றாக வேலை செய்துள்ளார், மேலும் அவருக்கு படத்தில் உறுதியான பாத்திரம் கிடைத்துள்ளது.

அனில் குரோவர்  மற்றும் விக்ரம் கோச்சார் ஆகியோர் நகைச்சுவை நேரத்துடன் பார்வையாளர்களை பிரித்து விடுவார்கள்.

ப்ரீதமின் பாடல்கள் நன்றாக உள்ளன, அமன் பந்தின் பின்னணி இசை நேர்த்தியாக உள்ளது.

மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் நன்றாக வேலை செய்துள்ளன.

SABA NAYAGAN - திரைவிமர்சனம்


சபா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு ஆகியோருக்கு இடையே ஏற்படும் ஒரு சந்தர்ப்பச் சந்திப்பு “சபா நாயகன்” திரைப்படத்தில் இதயத்தைத் தூண்டும் பயணத்தைத் தூண்டுகிறது. ஆரம்பத்தில் பொது இடையூறுக்காக கைது செய்யப்பட்ட சபாவின் கடந்தகால மனவேதனைகள் பற்றிய நேர்மையான தன்மை விஷ்ணுவிடம் எதிரொலிக்கிறது, இது சாத்தியமில்லாத பிணைப்பை உருவாக்குகிறது. இந்தத் திரைப்படம் மனித உணர்வுகளின் ஒரு நாடாவை வெளிப்படுத்துகிறது, அங்கு சபா ஒரு குறைபாடுள்ள தனிநபரிலிருந்து இரக்கமுள்ள ஹீரோவாக மாறுவது கதையின் மையத்தை உருவாக்குகிறது.

முன்னணி நடிகர்களின் நுட்பமான நடிப்பு சிக்கலான இயக்கவியலுக்கு ஆழம் சேர்க்கிறது. விஷ்ணுவின் நுணுக்கமான சித்தரிப்பு தனது சொந்த வாழ்க்கைப் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைக்குரியவராக சபாவின் உணர்ச்சிப் பாதிப்பை அழகாக நிறைவு செய்கிறது. மாறுபட்ட உலகங்களிலிருந்து வரும் கதாபாத்திரங்களுக்கிடையேயான இந்த எதிர்பாராத நட்புறவு கதைக்களத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் அழகை சேர்க்கிறது.

"சபா நாயகன்" நகைச்சுவை, உள்நோக்கம் மற்றும் மனதைக் கவரும் தருணங்களைத் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் எதிர்பாராத திருப்பங்களில் இழைக்கப்பட்ட கதை திறமையாக தன்னைத்தானே வேகப்படுத்துகிறது. படத்தின் பலம் பார்வையாளர்களுடன் இணைக்கும் திறனில் உள்ளது, சபாவின் சுய-கண்டுபிடிப்பு பயணத்தை ஆழமாக தொடர்புபடுத்துகிறது.

காட்சிப் பார்வையில், ஆரம்பக் கைது முதல் அமைதியான பிரதிபலிப்பின் தருணங்கள் வரை ஒவ்வொரு காட்சியின் சாராம்சத்தையும் படம்பிடிக்கும் நுட்பமான ஒளிப்பதிவுடன் படம் மிளிர்கிறது. ஒலிப்பதிவு உணர்ச்சித் துடிப்புடன் இசைந்து, சினிமா அனுபவத்தை மேலும் மெருகேற்றுகிறது.

இறுதியில், "சபா நாயகன்" என்பது மனித தொடர்பு மற்றும் இரக்கத்தின் மாற்றும் சக்தியின் கொண்டாட்டமாகும். இது சாத்தியமில்லாத ஹீரோக்களின் மகிழ்ச்சிகரமான ஆய்வு மற்றும் அவர்கள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அசாதாரண தாக்கமாக உள்ளது. அதன் குறைபாடுகள் இல்லாமல் இல்லாவிட்டாலும், திரைப்படத்தின் ஆர்வமுள்ள கதைசொல்லல் மற்றும் நகைச்சுவை மற்றும் இதயத்திற்கு இடையேயான சமநிலை ஆகியவை தமிழ் சினிமாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சேர்க்கையாக ஆக்குகிறது, இது ஒரு மேம்பட்ட மற்றும் நுண்ணறிவு சினிமா அனுபவத்தை வழங்குகிறது.


 

நடிகர் மம்முட்டி நடித்த ‘பலுங்கு’ திரைப்படம் 17ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது!*

*நடிகர் மம்முட்டி நடித்த ‘பலுங்கு’ திரைப்படம் 17ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது!*

நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’பலுங்கு’ திரைப்படம் 17 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறது என தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இப்படம், நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் விளக்குகிறது. மக்களின் உண்மையான வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்முட்டி சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றார் மற்றும் மோனிசென் பாத்திரத்திற்காக தேசிய விருதுக்கான பரிந்துரையிலும் இந்தப்படம் இடம்பெற்றிருந்தது.

படத்தின் ஆழமான தாக்கம் மற்றும் கதைக்கான உத்வேகம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசியதாவது, "பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கரையில், ஒரு கடையின் முன்பு இரண்டரை வயது குழந்தை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. என் மனதை பாதித்த இந்த சோகமே ‘பலுங்கு’ திரைப்படத்திற்கான உத்வேகமாக அமைந்தது. இது போன்ற கொடுமைகளுக்கு எதிரான மோனிசெனின் கிளர்ச்சி மற்றும் அழுகைக்கு இப்போது பதினேழு வயது. துரதிர்ஷ்டவசமாக இன்றும், இந்த மாதிரியான சம்பவங்கள் அன்றாடம் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அழுகைகள் இழப்பையும் வலியையும் மட்டுமே எதிரொலிக்கின்றன” என்றார்.

இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் அடுத்து, பிரித்விராஜ் சுகுமாறன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்’ திரைபப்டம் உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று வெளியாக இருக்கிறது. ‘பலுங்கு’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நகைச்சுவையில் கலக்கும் பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படம்

நகைச்சுவையில் கலக்கும் பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படம் 

விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பாக சஞ்சய் பாபு தயாரிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படம் பாட்டி சொல்லை தட்டாதே இயக்குனர் ஹேம சூர்யா என்பவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. மிர்ச்சி விஜய் kpy பாலா,நளினி, பாண்டிய ராஜன்,  எம்.எஸ்.பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் ரசித்து மகிழும் வகையில் இதன் வசனத்தை  சுகுண குமார் எழுதியிருக்கிறார். இவர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பல காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப்படம் குறித்து இயக்குனர் ஹேம சூர்யாவிடம் பேசினோம். 

உங்களுடைய திரையுலகப் பயணம் எப்படி அமைந்தது ?
எனக்கு சொந்த ஊர் விழுப்புரம். நான் பிறந்தது பாண்டிச்சேரியில்.  சினிமா ஆசையில்  சென்னை வந்து இயக்குநர் ஆர்.கே.கலைமணி,இயக்குநர் விடுதலை, இயக்குனர் ஈ. ராம்தாஸ். சிவசக்தி பாண்டியன், ஆகியோரிடம் வேலை பார்த்தேன். தைபொறந்தாச்சு, சூப்பர் குடும்பம்  போன்ற படங்களில் பணியாற்ற ஆரம்பித்து நிறைய படங்களில்  வேலை பார்த்தேன். கன்னடம், தெலுங்கு திரைத்துறையில் தொடர்பு கிடைத்து  அங்கும் நிறையப் படங்களில் வேலைபார்த்தேன்.  சிவான்ணா, உபேந்திரா, சுதீப் உட்படப் பல பெரிய ஹீரோக்களின் படங்களில்  தொடர்ந்து ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். நிறைய அனுபவம் கிடைத்தது. தமிழில் யாரிந்த தேவதை என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். படம் நிறைவு பெற்று  வெளியாக இருக்கிறது.  கன்னடத்தில் ராஜவம்சம் என்ற படம் என் திரைக்கதையில்  வெளியாகியிருக்கிறது. கத்தலு மனசன்னா என்ற படத்தை இயக்கி அதுவும் வெளியாகியிருக்கிறது. 

பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற  டைட்டில் வைக்க  முக்கிய காரணம் என்ன ? 
கதையின் அடி நாதம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு  எழுதப்பட்டுள்ளது. இந்த கதைக்கு சிறந்த டைட்டில் பாட்டி சொல்லை தட்டாதே என்பதை முடிவு செய்து ஏவி.எம் இடம் அனுமதி பெற்றோம்,  அன்பை தவிர,பணம் இல்லாமல் வாழும் பேரன்,பணத்தை தவிர, அன்பு இல்லாம ல் இருக்கிற பாட்டி, இவர்கள் இரூவருக்கு இடையே ஏற்படும் பாச போராட்டம் தான் கதை , அன்பைத்தேடி அலையும் கதாநாயகன்,  நிறைய பணம் இருந்தும்  பாசத்திற்காக ஏங்கும் பாட்டியும் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறேன். பாட்டியாக நளினி நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வெளியான  பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படத்தில் மனோரமா ஆச்சி நடித்திருப்பார்.  அந்த இடத்தில் நடிக்கச் சரியான நடிகையாக நளினி அவர்கள்தான் இருப்பார் என்பதால் அவரிடம்  பேசினோம். கதையைக் கேட்டு விட்டு நடிக்கச் சம்மதித்தார். படத்தில்  தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இந்த தலைப்பிற்கு எப்படி அனுமதி கிடைத்தது ?
இப்படி ஒரு கதை என்றவுடன்  இதற்குச் சரியான டைட்டில் இதுதான் என்பதை முடிவு செய்து விட்டோம்.  இதற்காக ஏவி.எம். நிறுவனத்திடம் பேசியபோது ஒரு குழுவிடம் கதையைச் சொல்லச் சொன்னார்கள். அவர்களிடம் கதை சொல்லி விட்டுக்  காத்திருந்தோம்.  சில நாட்கள் கழித்துக் கதை நன்றாக இருக்கிறது என்று கூறி ஏவி.எம். நிறுவனத்திலிருந்து எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தார்கள்.  அவர்களின் சினிமா மீது  வைத்திருக்கும் பக்தி வியக்க வைத்தது. 

இதில் உங்களுடன் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள் ?
படத்திற்கு  பலமாக இருப்பதே படத்தின் வசனங்கள்தான்  இதை சுகுண குமார் எழுதியிருக்கிறார். கே.பாக்யராஜிடம்  உதவியாளராக இருந்தார்.  ஜன்னல் ஓரம் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதே போலப்  படத்தின் ஜீவனாக இருப்பது ஒளிப்பதிவும், இசையும் தான்,  கேமாரா கே.எஸ்.செல்வராஜ்  தன்னுடைய அனுபவத்தைத்  திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்.  அதே போல இசை.  ரவி ஷங்கர்  அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.  கோலி சோடா ரம்ம கலக்கி குடிக்கிறான்.   என்ற அந்தப் பாடல் யூ டியூபில்  பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து  பார்க்கப்பட்டிருக்கிறது.  படத்தொகுப்பு வேலையை ஜி.சசிகுமார் செய்திருக்கிறார். அதே போல என்னுடைய  இணை இயக்குனர் ரவி கணேஷின் உழைப்பு மறக்க முடியாதது. , இந்த இப்படி படத்தில்  எல்லோரும் அனுபவம் வாய்ந்த திறமையானவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.  சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமான ஏவி.எம்,. வாழ்த்து சொல்லியிருக்கும் இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றிருக்கிறது.  இந்தப்படம் இவ்வளவு வெற்றியடைய முதல் காரணமாக இருந்தது தயாரிப்பாளர் சஞ்சய் பாபு அவர்கள் தான்.  அவர்  எங்கள் குழுவுடன் இணைந்த பிறகு  படத்திற்கு  புதிய  அடையாளம் கிடைத்து விட்டது. 

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவு என்ன சொல்கிறது ?
இன்றைக்கு குடும்பத்துடன் திரையரங்கத்துக்கு வந்து படம் பார்க்கும் சூழல்  இல்லாமல்  இருக்கிறது.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்  கதை முக்கியமாக இருக்கிறது.  அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கதை இந்தப் படத்தில் இருப்பதால் குடும்பத்தினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நாயகன் மிர்ச்சி விஜய், நாயகி அனு ஷீலா, பாண்டிய ராஜன், நளினி எம்.எஸ்.பாஸ்கர் இவர்கள்   ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல  வேண்டும்.  இம்மாதிரியான நல்ல கதைகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருப்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது  என்றார் இயக்குனர் ஹேம சூர்யா.

Thursday, December 21, 2023

Phoenix Marketcity, Chennai Donates Relief Materials to More Than 1000 Victims Affected by the Floods in Southern Tamil Nadu ~ Essentials like rice, cooking oil, biscuits, dal, and others were collected and handed over at the Greater Corporation of Chennai


 


 Phoenix Marketcity, Chennai Donates Relief Materials to More Than 1000 Victims Affected by the Floods in Southern Tamil Nadu 


~ Essentials like rice, cooking oil, biscuits, dal, and others were collected and handed over at the Greater Corporation of Chennai ~


Chennai, December 21, 2023: In the wake of the recent deluge and devastating floods that have wreaked havoc in the southern part of Tamil Nadu, Phoenix Marketcity, has taken swift action to alleviate the suffering of the affected communities. The mall had initiated a significant social initiative by organizing and arranging essential relief materials to approximately 1000 beneficiaries, providing critical food items, groceries, and biscuits to those impacted by the calamitous floods in districts of Thoothukudi, Tirunelveli, Tenkasi and Kanyakumari.

Expressing heartfelt condolences to those who have endured losses and urging others to join in this humanitarian mission, Mr. Sabari Nair, Centre Director - Phoenix Marketcity, Chennai, stated, "We aim to reach out to more than around 1000 people and feel the urgent need to respond and help them with basic essentials during this crisis. With a strong commitment to extending support during such situations, Phoenix Marketcity, Chennai, has mobilized resources to address the urgent needs arising from this grave situation. We recognize the magnitude of the condition in these regions affected by the floods due to torrential rains and appeal to others to contribute generously towards these relief measures, which are vital in providing timely and effective assistance."

The relief materials organized by Phoenix Marketcity, Chennai, were handed over to Greater Corporation of Chennai at the Ripon Building. Phoenix Marketcity, Chennai, remains steadfast in its dedication to making a positive impact on society, reinforcing its role as a responsible corporate citizen committed to the well-being of the communities it serves.

About Phoenix Marketcity: A premier destination for luxury lifestyle, it provides guests a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options.


டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ''நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி'' என தெரிவித்திருக்கிறார்.‌


 டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ''நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி'' என தெரிவித்திருக்கிறார்.‌


டிசம்பர் 21 தேதியான இன்று மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் 'டங்கி' வெளியானது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது. இந்தியாவில் இதன் முதல் காட்சி அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கொண்டாடி எல்லையற்ற மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக இணையத்தில் ஷாருக் கானின் ரசிகர்கள் ஏராளமான காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் மேளதாளத்துடனும், வானவேடிக்கைகளுடனும் பட வெளியீட்டை அவர்கள் கொண்டாடுவதற்காக திரையரங்குகளில் ஒன்று கூடியதை காண முடிந்தது. மேலும் இந்த திரையரங்க வளாகத்தில் ஷாருக்கானின் பெரிய கட்அவுட் ஒன்றும் இருந்தது.

தற்போது X‌ என அழைக்கப்படும் ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஷாருக்கின் ரசிகர்கள் ஒன்றாக நடனம் ஆடுவதை காண முடிகிறது. அதே நேரத்தில் மேளதாளத்தின் ஒலிக்கு ஏற்ப நடனமாடி தங்களின் மகிழ்ச்சியான மனநிலையையும் வெளிப்படுத்தினர்.  ஒரு சில ரசிகர்கள் டங்கி என எழுதப்பட்ட பதாகையை உயர்த்திப் பிடித்து இருப்பதையும் காண முடிந்தது. பட்டாசு வெடிப்பதற்காக சிறிய மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தின் பிரீமியர் காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வெளியே நடனமாடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான காணொளிகளை தொடர்ந்து கீழே காணலாம்.


இந்த வீடியோக்களுக்கு ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பதிலளித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டிற்காக தயாராக இருந்த நடிகர் ஷாருக்கான்.. மும்பை
கெயிட்டி கேலக்ஸியில் ரசிகர்களின் வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கத்தில் மறு பதிவு செய்து, '' நன்றி தோழர்களே மற்றும் தோழிகளே.. இது ஒரு நல்ல நிகழ்ச்சி மற்றும் #டங்கி மூலம் நீங்கள் அனைவரும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்'' என பதிவிட்டிருக்கிறார்.  நியூசிலாந்தில் உள்ள பார்வையாளர்கள் மட்டுமல்ல மேலும் பலரும் இதற்கான எதிர்வினைகளை இணையத்தில் பகிர தொடங்கியுள்ளனர். படம் வெளியான தருணத்திலிருந்து சிறந்த விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

ஷாருக் கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்தயேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Tuesday, December 19, 2023

டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் அட்டகாசமான குரலில் 'பந்தா' பாடல் வெளியாகியுள்ளது !


 டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் அட்டகாசமான குரலில் 'பந்தா' பாடல் வெளியாகியுள்ளது !


ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, டாப்ஸி பங்குபெறும் “டங்கி டயரிஸ்” வெளியாகியுள்ளது !!


டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே டங்கி படத்திலிருந்து ஐந்து வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது  டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் உடைய அட்டகாசமான குரலில் 'பந்தா' பாடல் வெளியாகியுள்ளது.


படத்தில் வரும் ஷாருக்கானின் ஹார்டி கேரக்டரை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அறிமுகப்படுத்தும் 'பந்தா' பாடலானது, பெப்பி டிராக் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலை தில்ஜித் தோசன்ஜ் பாடியுள்ளார், பாடலின் வரிகளை குமார் எழுதியுள்ளார் மற்றும் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.


ஷாருக்கானின் அறிமுகப் பாடல் நிச்சயம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.


இன்னொருபுறம், ஷாருக் துபாயில் உள்ள 'தி வோக்ஸ் சினிமா' மற்றும் குளோபல் வில்லேஜை பார்வையிட்டதோடு, அங்கு அவர் படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


ஏற்கனவே  உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் டங்கி டைரிஸ் என்ற பெயரில் ஒரு சிறப்பு விருந்தை அறிவித்துள்ளனர்.


டங்கி திரைப்படத்தின் அனுபவங்களை அந்த உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில்  ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான், மற்றும் டாப்ஸி பண்ணு பங்குபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி டங்கி டயரிஸ் எனும் பெயரில் வெளியாகியுள்ளது.


#DunkiDiaries முழு வீடியோ இதோ

https://bit.ly/DunkiDiaries


படம் ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனைகளை படைக்க ஆரம்பித்து விட்டது. இதுவரையிலான பல பெரிய படங்களை முறியடித்துள்ளதில்,  பார்வையாளர்களின் உற்சாகம்  நன்றாகவே தெரிகிறது.


டிசம்பர் 22 ஆம் தேதி, ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில்  மனதைக் கவரும்,  அன்பான உலகத்தைப் பார்க்க பார்வையாளர்கள் தயாராகி வரும் நிலையில், டங்கி  தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள  “டங்கி டிராப் 6 பந்தா”  பாடல் மற்றும் டங்கி டயரீஸ் வீடியோக்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.  


ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.


இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகிறது.

அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக் 36வது கிளையை திரு.சி.கே.குமாரவேல், திரு.சரண் வேல், திருமதி.சர்வாணி ரேவந்த் ஆகியோர் மேற்கு முகப்பேரில் திறந்து வைத்தனர்

அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக் 36வது கிளையை திரு.சி.கே.குமாரவேல், திரு.சரண் வேல், திருமதி.சர்வாணி ரேவந்த் ஆகியோர் மேற்கு முகப்பேரில் திறந்து வைத்தனர்

அட்வான்ஸ்ட் க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் தனது 36வது  கிளையை மேற்கு முகப்பேரில்   பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது, இது அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.

 முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சையில் முன்னணி பிராண்டாக அறியப்பட்ட இந்த கிளினிக், சிறந்த சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய ஆரோக்கிய தீர்வுகளை வழங்குவதில் முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறது. 

Percutaneous FUE முடி மாற்று சிகிச்சை, PRP Pro+, லேசர் முடி சிகிச்சை, அட்வான்ஸ்ட் GroHair ஒப்பனை அமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மருத்துவ மற்றும் மருத்துவமற்ற அணுகுமுறைகளை அவர்களின் விரிவான சிகிச்சைகள் உள்ளடக்கியது, இவை அனைத்தும் US-FDA ஆல் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் Hydrafacial, Q Switched Laser, Chemical Peel, Botox, Fillers, Thread Lift, Full Body Laser, Face PRP, Warts Removal, மற்றும் பல போன்ற விதிவிலக்கான தோல் சிகிச்சைகளை வழங்குகிறார்கள்.

 கிளினிக்கில் அதிநவீன உபகரணங்கள் உள்ளன; அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் உன்னிப்பாக இயக்கப்படும் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இந்த கலவையானது எதிர்பார்ப்புகளை மீறும் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைய அவர்களுக்கு உதவுகிறது. 

அவர்களின் புதிய கிளையின் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், மதிப்பிற்குரிய தலைமை விருந்தினர்கள், திரு.சி.கே.குமாரவேல் , சிஇஓ நிறுவனர் நேச்சுரல்ஸ் சலோன் -  மரியாதைக்குரிய, திரு. சரண் வேல் ஜெயராமன் - பிராண்ட் நிறுவனர் நிர்வாக இயக்குனர் அட்வான்ஸ்ட் க்ரோஹேர் & க்ளோஸ்கின். இந்நிகழ்வில் உரிமையாளரான திருமதி.சர்வாணி ரேவந்த் மற்றும் கிளினிக்கின் பிற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அட்வான்ஸ்ட்  க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக், 2வது தளம், பிளாக் 8, பிளாட் எண்.8, PC4, பாரதி சாலை, மேற்கு முகப்பேர் , சென்னை 600 037 ( புகாரி ஓட்டல் எதிரில் )

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...