Tuesday, October 31, 2023

Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023

Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023
 
• Chennai gets a glimpse of ‘Amazon Xperience Arena’ event, providing retail and business customers a unique view of the exciting deals and offers during the Amazon Great India Festival 2023
• Business customers in Chennai show a strong inclination towards automotive, furniture, laptop and IT peripheral purchases during festive season
 
Chennai, October 31, 2023: India’s most awaited shopping event - Amazon Great Indian Festival 2023, that went live on October 8th, 2023, brings the joy of shopping to its customers in Chennai through Amazon Xperience Arena, a virtual destination designed to bring favourite Amazon categories to life. Hosted at SRM Easwari Engineering College, Chennai, Amazon Xperience Arena, provided a glimpse into the world of Amazon and enabled media, influencers and customers an exciting opportunity to explore their favourite brands and gain access to exciting deals and offers at the ongoing Amazon Great Indian Festival.
 
Amazon Xperience Arena curated with seven engaging and interactive zones, enabled customers to participate in exciting competitions and win fantastic Amazon prizes. It also provided the chance to enjoy never-seen-before deals on the widest selection of products across categories including Smartphones, Laptops, Large appliances, TVs, Consumer Electronics and Kitchen appliances at great value and convenience of fast and reliable delivery.
On Amazon Business, customers can enjoy these deals and additionally get up to 5% extra discounts on bulk orders; avail instant credit of up to Rs.60000 based on their eligibility and save up to 28% with GST input credit. Most popular products among business customers included IT peripherals (growing at ~1.5X vs last year), office furniture and fixtures (growing at ~1.4X vs last year), gifting products like Small Appliances and Gift Baskets (growing at ~1.6X YoY), Maintenance and Repair products (growing at ~1.5X vs last year) and Security & Surveillance products (growing at ~2.5X vs last year).
Commenting on the occasion, Suchit Subhas, Director, Amazon India said, “We are excited to provide our customers with a unique view into the exciting deals and offers to be availed during the Amazon Great India Festival 2023 at ‘Amazon Xperience Arena’ in Chennai. Business customers in Chennai have continued to shop from Amazon Business, over past years. We have ~1.3X YoY increase in customer registrations and ~1.4X YoY increase in sales from Chennai. This festive season, we are delighted to offer great deals, exciting offers to business customers and help them shop more and save more during our ongoing Amazon Great Indian Festival 2023”
 
This year, Amazon Business completed six years of empowering business customers in India, helping them with seamless and efficient e-procurement. With more than 19cr GST across 14 lakhs+ sellers, Amazon Business, today, caters to more than 99.5% pin codes across the country and has created a one-stop destination for all business buying needs. To commemorate the six years, it announced its integration with Amazon Pay Later to provide a virtual credit to eligible business customers. All eligible business customers have seamless access to 30-day interest free credit with the option to extend to 12 months at minimal interest rates, and no hidden costs
This initiative is aimed to help MSMEs and other corporate buyers to extend their budgets for bulk and regular purchases of products ranging from daily essentials, electronics, to corporate gifts with an easy and hassle-free payment experience. With in-built security features, Amazon Pay Later will give customers an option to set up auto-repayment to settle monthly bill or EMIs through the bank of their choice.
Amazon Great Indian Festival 2023 celebrates 14 lakh+ sellers, offering crores of products to customers on Amazon.in, including unique products from Indian Small and Medium Businesses and local stores. The ‘Amazon Xperience Arena’ moves to Kolkata on 7th November. The ‘Amazon Xperience Arena’ curated in the form of life-size boxes is set to become the city’s attraction for a day!

About Amazon.in                ​              ​
Amazon is guided by four principles: customer obsession rather than competitor focus, passion for invention, commitment to operational excellence, and long-term thinking. Amazon strives to be Earth’s Most Customer-Centric Company, Earth’s Best Employer, and Earth’s Safest Place to Work. Customer reviews, 1-Click shopping, personalized recommendations, Prime, Fulfilment by Amazon, AWS, Kindle Direct Publishing, Kindle, Career Choice, Fire tablets, Fire TV, Amazon Echo, Alexa, Just Walk Out technology, Amazon Studios, and The Climate Pledge are some of the things pioneered by Amazon.
 
For more information, visit www.amazon.in/aboutus

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை  நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர்  அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம்  பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன்,  பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Monday, October 30, 2023

MS Manzoor presents ‘CHIRO’ shooting starts with a ritual ceremony*

*MS Manzoor presents ‘CHIRO’ shooting starts with a ritual ceremony* 

It’s time for a shoutout to all the fantasy genre films! Million Studios’s MS Manzoor, who has created a spellbinding film ‘Weapon’ that is all set to offer a never-before cinematic experience to the film lovers, has got his ‘Production No.2’ rolling on floors now. The film titled ‘CHIRO’ is a fantasy genre that will throw an ultimate feast in the theaters with a top-notch technical bonanzas. Akshay Radhakrishnan, who is famous for his blockbuster hits in Malayalam such as pathinettam padi, valaati is playing the  lead role. Actress Prarthana Chabria, who is a certified commerical pilot, is playing the female lead role. The others in the star cast include  Rohini, Por Thozhil fame Lisha chinnu, Super Deluxe fame Nobel in pivotal characters.

The shooting of this film commenced from October 27, with a simple ritual Pooja ceremony, attended by the cast and crew. 

The film is written and directed by Wivek Rajaram, a former ad filmmaker and designer, who embarks on his directorial venture with this movie. 

Producer MS Manzoor says, “We are happy to announce that the shooting of our ambitious project ‘Chiro’ has started with a ritual ceremony. We are planning to complete the entire shoot in a single stretch schedule. We at Million Studios have always aspired to make content-driven movies with a top-notch technical aspect. Our maiden production ‘Weapon’ starring Sathyaraj and Vasanth Ravi as titular characters, is one such film that has already started garnering good response for its visual promos. ‘Chiro’ will offer a never-seen-before cinematic experience for the audiences as we are roping in the finest CG and VFX/Animation artists.”  
 
 

Technical Crew 

Cinematography: Kishan CV
Editing: Gopi Krishna 
Production Controller: Sivakumar 
Executive Producer: Sakthivel & Rizwan 
Publicity Designer: Dinesh Ashok
PRO: Suresh Chandra-Rekha D'One

Passion Studios and Soldier’s Factory present**Filmmaker Ramkumar Balakrishnan directorial* *“Harish Kalyan starrer “Parking” all set for worldwide release on December 1, 2023*


*Passion Studios and Soldier’s Factory  present*
*Filmmaker Ramkumar Balakrishnan directorial* 
*“Harish Kalyan starrer “Parking” all set for worldwide release on December 1, 2023* 


Actor Harish Kalyan, the most bankable and promising star of the trade circle keeps expanding his territory with every film. Ever since the announcement of his upcoming release ‘Parking’ was made, the expectations have been spiking up decorously. Now the makers of this film - Passion Studios and Soldier’s Factory are glad to announce that the film will have its worldwide theatrical release on December 1,2023. 

The pre-release business has been commendable for the film, which has turned the entire team excited. The film is directed by Ramkumar Balakrishnan, who earlier worked as assistant director to KS Sinish in Balloon. 

While Indhuja plays the female lead character in this movie, the others in the star cast include MS Bhaskar, Rama Rajendra, Prarthana Nathan, Ilavarasu, and few more prominent actors. The perfect planning and proper execution made the entire crew complete the entire shooting in a short span of time. 

‘Parking’ features musical score by Sam CS and cinematography by Jiju Sunny. 
Philomin Raj (Editing), NK Rahul (Art), T Murugesan (Executive Producer), Dinesh Kasi, Phoenix Prabhu (Action), Sher Ali (Costumes), Apsar (Choreographer), Yugabharathi (Lyrics), DTM (VFX), Rajakrishnan M.R. (Sound Mixing), Sync Cinema (Sound Design), Yellowtooths (Designs), Rajendran (Stills) are the others in the technical crew. 

Parking is a thriller drama, written and directed by Ramkumar Balakrishnan and produced by Sudhan Sundaram of Passion Studios and K.S.Sinish of Soldier’s Factory.

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் ( YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.'


 சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ்

 (  YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.'


பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா (  AK Pratheesh Krishna )கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka)கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா(Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி(Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


கதைக்களம்:

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள். காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.


படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா (Kevin D costa) இசையமைத்துள்ளார்.


விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ரூல் நம்பர் 4(Rule Number 4 ) வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


படக்குழு:

டேவிட் ஜான் (David John )ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் (Dheeraj Sukumaran )பின்னணி இசையமைத்துள்ளார். எஸ்.பி.அஹமது ( S P Ahmed )எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குர் பொறுப்பை அஜய் காளிமுத்து (Ajay Kalimuthu )ஏற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை ராக் பிரபு (Rock Prabhu) வடிவமைத்துள்ளார்.  மக்கள் தொடர்பு பணிகளை பா.சிவக்குமார்(P.SIVAKUMAR) கவனிக்கிறார். 

தயாரிப்பாளர் - ஷிமி இஸட் (Simy Z )

இணை தயாரிப்பாளர்கள் - ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை (Kumara Pillai, Kiran Meleveetil, Devarajan Pillai)

நவம்பர் 3 முதல் தமிழகமெங்கும் படம் வெளிவருகிறது . ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution )படத்தை வெளியிடுகிறார்

சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு

*'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு*

சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'துருவ நட்சத்திரம்', 'தங்கலான்' ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, 'சீயான் 62' படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது

Sunday, October 29, 2023

தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்த கார்த்தி

தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்த கார்த்தி


ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தியின் வளர்ச்சி குறித்து நெகிழ்ந்த சூர்யா 


கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி


“பருத்திவீரனை போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ; ராஜூ முருகன்


“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் கார்த்திக்கு ஆயிரம் முத்தங்களை பரிசாக தந்திருப்பார்” ; ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யப்படுத்திய ஸ்டண்ட் இயக்குனர் 


பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. 


கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. 


இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட  விழா நடைபெற்றது.


இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ்.ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், சுராஜ்,, சத்யராஜ், சிபிராஜ், இயக்குனர் சதீஷ், ஜித்தன் ரமேஷ், சக்திவேலன், தயாரிப்பாளர்கள் லட்சுமன், கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், பொன்வண்ணன், பவா செல்லத்துரை, அனல் அரசு, பாண்டியன் மாஸ்டர், திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் நந்தா, இயக்குனர் R. ரவிக்குமார், தயாரிப்பாளார் T. G தியாகராஜன், இயக்குனர் தமிழ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை  எனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. 


இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.


ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்


இந்த விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில், “விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது.  ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..


இந்த நிகழ்வில்  தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..


இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.


மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.. வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என நம் நாயகன் கார்த்தி அவர்கள் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன்.


இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். இந்த சமூக செயற்பாட்டாளர்களை கண்டறிந்து உதவிய இ.ரா சரவணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


நடிகர் சூர்யா பேசும்போது, “ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றி கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குனர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.


நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்துசக்தியாக ரசிகர்கள் நீங்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பலபேர் சொல்வதுண்டு. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன். 


அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அவரது 25வது படத்தை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார். 


தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்திற்காக தங்களது கடின உழைப்பையும் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்தி அண்ணாவின் 25-வது திரைப்படத்தை தயாரித்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்பதுடன் எங்களது முதல் திரைப்படத்தையும் கூட அவரை வைத்தே தயாரித்து இருக்கிறோம். எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் அவர் என்னை உற்சாகப்படுத்துவார். இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் திரைப்படம் குடும்பங்களுடன் பொழுதுபோக்க சிறந்த படமாக இருக்கும்” என்றார். 


பவா செல்லத்துரை பேசும்போது, “இந்த சிறந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நான் இயக்குநர் ராஜு முருகனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜூ முருகன், ரவிவர்மன் போன்ற திறமையாளர்களுடன் பணியாற்றியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், கார்த்தியின் அர்ப்பணிப்பு ரொம்பவே உன்னதமாக இருந்தது. அதை ரசிகர்கள் வெள்ளித் திரையில் நிச்சயம் பார்ப்பார்கள்” என்றார்.


நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது, “இந்த படம் கார்த்திக்கு சிறப்பான வெற்றிப்படமாக அமையப் போகிறது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருக்கும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக நன்றி சொல்கிறேன். இந்த படத்தைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் ஜப்பான் பட வெற்றி சந்திப்பின்போது பகிர்ந்து கொள்கிறேன். ஒட்டு மொத்த ஆதரவை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவிற்கு எனது நன்றி” என்று கூறினார்.


நாயகி அனு இம்மானுவேல் பேசும்போது, “25 படங்கள் நடித்த கார்த்தியின் மிகப்பெரிய வெற்றிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களிலிருந்து ஜப்பான் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மேனரிசங்கள் மற்றும் உடல் மொழியுடன் அவர் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வசன உச்சரிப்பை வழங்கி இருக்கிறார். படப்பிடிப்பின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அவர் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக இயக்குனர் ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.


இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது, “கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்று கூறினார்.


இயக்குனர் ராஜேஜூ முருகன் பேசும்போது, “ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி சார் என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பருத்திவீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த பட குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.


நடிகர் வாகை சந்திரசேகர் பேசும்போது, “சூர்யாவுடனும் இப்போது கார்த்தியுடனும் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் எல்லோருக்கும் சிவகுமார் சார் ஒரு கூகுள் ஆக இருந்தார். அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஏதாவது சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாங்கள் அவரை தான் கேட்போம். இந்த தீபாவளியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் பட்டாசாக மாறும். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.


நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “கார்த்தி ஒரு நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட. நடிப்புக்கு அப்பால் அவர் திரைப்படங்களில் தன்னை ரொம்பவே ஈடுபடுத்திக் கொள்கிறார். மேலும் நடிகர் சங்கத்தின் பெருமைகளை உயர்த்தும் விதமாக மிகுந்த முயற்சியும் எடுத்து வருகிறார்” என்றார்.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘நான் லட்சுமன் மற்றும் கார்த்தி அனைவருமே பள்ளிக்கால நண்பர்கள். எங்களது பள்ளி நாட்களில் நாங்கள் சினிமாவிற்குள் நுழைவது பற்றி கற்பனையாக பேசிக் கொள்வோம். ஆனால் கடவுளின் கருணையால் அது நிஜமாகவே ஆகிவிட்டது. கார்த்திக்கு எப்போதுமே நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரால் டென்ஷனை தவிர்க்க முடியும் என்பதும் தான். வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை விட்டு போகும்போது அவற்றை ஜாலியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் படத்தின் டிரைலரில் அவர் சொல்வதைப் போல அதே தத்துவத்தை அவர் தனது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பிளாக் பஸ்டர் பொழுதுபோக்கு படமாக அமையும்” என்று கூறினார்.


பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமன் பேசும்போது கார்த்தி குழந்தைப்பருவத்தில் இருந்து எனது நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். நான் ஐடி துறையில் இருந்தபோது கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் தான் என்னை சினிமாவில் நுழைவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் இருவருமே என்னுடன் அழகான பிணைப்பை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் இப்போது சர்தார் -2வுக்காக தயாராகி வருகிறோம். அது எல்லோருக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.


நடிகை தமன்னா பேசும்போது, “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்த இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.


இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “மெட்ராஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி சார் சரியாக பொருந்தியிருந்தார். இதற்காக நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள். இப்போது ஜப்பான் திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். மொத்த குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘கார்த்தி சார் எப்போதுமே சினிமாவை பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. அதுமட்டுமல்ல அதுபற்றிய மிகப்பெரிய அறிவையும் அவர் கொண்டுள்ளார். ராஜூ முருகன் சாரிடம் இருந்து ஜப்பான் போன்ற ஒரு ஆச்சரியமான விருந்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. ராஜூ முருகனுக்கும் கார்த்தி சாருக்கும் ஜப்பான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.


சக்தி பிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்து இருக்கிறார். அதில் 18 படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கின்றன. சிவாஜி கணேசன் சார் தான், தனது முதல் படமான பராசக்தியிலேயே தான் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தவர். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்தில் நடித்த கார்த்திக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல ஐந்து வருடங்களில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகர் யாரென்றால் அது கார்த்தி மட்டுமே. பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் அவர் வேறுவித வடிவம் பெற்றார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கஜினி ஆகிய படங்கள் தான் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் மொழிமாற்று படங்களில் ஒரு புதிய டிரென்டை உருவாக்கின” என்றார்.


இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசும்போது, “கார்த்தி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை கொண்டு என்னை வசீகரித்ததன் மூலம் நான் ஒரு முழுமையான இயக்குனராக மாறினேன். எந்த நேரமும் சினிமா பற்றியே யோசித்துக் கொண்டு இருக்க கூடிய நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.


இயக்குநர் முத்தையா பேசும்போது, “பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததுடன் அந்த படத்தில் அழகான மதுரை பாஷையில் கார்த்தி சார் பேசியிருந்தது ரசிருப்பதாக இருந்தது. கொம்பன் படத்திற்காக அவரை அணுகியபோது நான் அவரிடம் ராமநாதபுரம் வித்தியாசமான ஒரு பாஷையை கொண்டது என கூறினேன். அவரும் அதற்கேற்ற மாதிரி தன்னை தயார் செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.


இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது, “என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார். அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.


ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் பேசும்போது, “என்னை கார்த்தியிடம் சிவக்குமார் சார் அறிமுகப்படுத்திபோது அவர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் இருந்தார். அவருக்கு எப்படி நான் பயிற்சி கொடுக்க போகிறேன் என்பது அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், சூர்யா சாரிடம் இருந்து கிடைத்த உற்சாகப்படுத்தலும் கூடுதல் கருவிகளாக அமைந்து விட்டன” என்றார்.


ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது, ‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார். 


இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ‘கார்த்தியின் 25வது பட விழாவான இந்த அழகிய நிகழ்வில் இங்கே இடம்பெற்று இருப்பது மிகச்சிறப்பான ஒன்று. கார்த்திக்கும் இயக்குனர் ராஜூ முருகனுக்கும் ஜப்பான் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமர்சியலாக மட்டுமல்லாமல் கலை சார்ந்த படைப்புகளிலும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஒரு விதிவிலக்கான நடிகர் கார்த்தி. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகமானதாக இருந்தது. சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்காக நிறைய உதவிகளை செய்து சமூக கடமை ஆற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

Friday, October 27, 2023

மார்கழி திங்கள் - திரைவிமர்சனம்

ரக்ஷனாவும், ஷியாம் செல்வனும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். வாரியத் தேர்வில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்க அவர்கள் போட்டி போடுகிறார்கள்.


இறுதியில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தினால் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்த தாத்தா பாரதிராஜாவிடம் தங்கள் காதலைப் பற்றி ரக்ஷனா கூறுகிறார்.


கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை ஷ்யாமுடன் பேசக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். ரக்ஷனா பாரதிராஜாவின் வார்த்தைகளை நம்பி கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.


அவளுக்கு அதிர்ச்சியாக, அவள் திரும்பி வரும்போது, ​​ஷ்யாமும் அவனது குடும்பமும் கிராமத்திலிருந்து காணவில்லை.


மனோஜ் பாரதிராஜா இயக்கும் இப்படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளால் நிரம்பியுள்ளது.


சாதிக் கொலைகளில் ஆழ்ந்து வாழ்ந்த அவர், தற்போதைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியை அனுப்புகிறார்.


ரக்ஷனா தனது கேரக்டரில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் ஷ்யாமுடன் அவரது கதாபாத்திரம் நன்றாகவே வேலை செய்தது. பள்ளிப் பகுதிகளில் ஜொலித்து அசத்துகிறார்.


இன்னொரு பக்கம் ஷ்யாமும் தன் கேரக்டரைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடித்திருக்கிறார்.


ரக்ஷனாவின் தாத்தாவாக பாரதிராஜா தனது கேரக்டரில் மிளிர்வதுடன் இன்னொரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


சுசீந்திரன், ராசு உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சிநாதன் முருகேசனின் கேமரா நிகழ்வுகளை சுவாரஸ்யமாக படம் பிடித்துள்ளது.

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இயக்குனர் நடிகர் திரு.சுந்தர்.C, இயக்குனர் நடிகர் திரு.SJ சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி ராம நாராயணன்,  நடிகர் திரு. அதர்வா, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், தயாரிப்பாளர் திரு. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு.கமல் நயன், தயாரிப்பாளர் திரு. தாய் சரவணன், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், இயக்குனர் நெல்சன், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன், திரு. சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Mass Maharaja Ravi Teja, Gopichandh Malineni, S Thaman, Mythri Movie Makers’ #RT4GM Launched In A Grand Manner*

*Mass Maharaja Ravi Teja, Gopichandh Malineni, S Thaman, Mythri Movie Makers’ #RT4GM Launched In A Grand Manner*

Mass Maharaja Ravi Teja and mass maker Gopichandh Malineni’s fourth collaboration is turning big with each announcement, though the movie is yet to go on floors. The film #RT4GM to be produced by Tollywood’s leading production house Mythri Movies Makers will be mounted on a large scale. Ravi Teja will be playing a never-seen-before character in the movie.

The movie has been launched today in a grand manner with a pooja ceremony, in the presence of Ravi Teja, Selvaraghavan, Indhuja Ravichandran and other team members and several special guests. The script was handed over to the makers by Allu Aravind. For the muhurtham shot, the camera was switched on by Anmol Sarma, and the clapboard was sounded by VV Vinayak. K Raghavendra Rao did the honorary direction for the first shot.

Actor-turned-filmmaker Selvaraghavan will be playing a pivotal role in the movie that marks his maiden Telugu film. Indhuja Ravichandran is roped in for a crucial role. The film’s heroine will be revealed soon.

#RT4GM is a unique and powerful story based on real incidents. Naveen Yerneni and Y Ravi Shankar will produce the movie on a massive budget and it will be technically high in standards with some leading technicians taking care of different crafts.

The sensational composer S Thaman will score the music for the movie. While it’s the 12th movie for Thaman with Ravi Teja, this marks his 7th with Gopichandh Malineni and 4th one with Mythri Movie Makers.

The highly talented cinematographer GK Vishnu who is the mastermind behind blockbuster hits like Bigil, Mersal, and the recent sensation Jawaan is set to bring the massive world of #RT4GM to life with his lens.

The National Award-winning technician Naveen Nooli will edit the movie, while AS Prakash is the production designer. The dialogues are penned by Sai Madhav Burra, while Mayuk Aditya, Srinivas Gavireddy, M Vivek Anand, and Srikanth Nimmagadda are the other writers.

Cast: Ravi Teja, Selvaraghavan, Indhuja Ravichandran and others

Technical Crew:
Story & Direction: Gopichandh Malineni
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
Banner: Mythri Movie Makers
CEO: Cherry
Executive Producer: Dinesh Narasimhan
Music: S Thaman
DOP: GK Vishnu
Editor: Naveen Nooli
Dialogues: Sai Madhav Burra
Production Designer: AS Prakash
Costumer Designer: Anirudh/Deepika 
Writers: Mayukh Adithya, Srinivas Gavireddy, M Vivek Anand, and Srikanth Nimmagadda
Publicity Designer: Kabilan
PRO: Yuvraaj
Marketing: First Show
Publicity: Baba Sai (Max Media)

Thursday, October 26, 2023

உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

“பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன்

”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” - மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா”

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய நடிகர் ஆஷிக், இந்த மிரியம்மா படத்தின் புராஜக்ட் மிக வேகமாக நடந்து முடிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் சில படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தாண்டு விஜயதசமிக்கு வெளியாகும், படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். அப்படியெல்லாம் இங்கு நடப்பது சகஜம். ஆனால் இந்த படத்தின் வேலைகளை இவ்வளவு வேகமாக முடித்திருக்கும் இயக்குநர் மாலதி நாராயணுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் கூறிக் கொள்கிறேன்.  ரேகா மேடம் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் கொண்டு வந்த உணவை கூட்டாஞ்சோறு போல எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். அதில் ஒரு தாய்மை உணர்வு இருக்கும்.  2017ல் செஞ்சிட்டாளே என் காதலை படம் வெளியான போதிருந்தே எனக்கு எழிலை நன்றாகத் தெரியும்..  அப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே இப்படம் நன்றாக இருக்கும் என்கின்ற உணர்வை ஏற்படுத்தியது.  ஏ.ஆர்.ரெஹனா எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர், என் படத்திற்கு அவர் இசையமைப்பாளராக கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.  யாத்திசை படத்தில் இருந்தே கலை இயக்கத்தில் ரஞ்சித் மிரட்டி வருகிறார். அந்த மிரட்டல் இப்படத்திலும் தொடர்கிறது.  என் நட்புக்காக கடைசி நேரத்தில் அழைத்தும் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் விஜய் வர்மாவிற்கு என் நன்றிகள். இது போன்ற சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு பத்திரிக்கை  நண்பர்களான நீங்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.  இப்படத்தை  மக்களிடம் கொண்டு போய் சேர்த்து மிகப்பெரிய வெற்றியடையச் செய்ய வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்று பேசினார்.

நடிகர் எழில் பேசும் போது, சிறு முதலீட்டுப் படங்களே தேவை இல்லை என்று பேசிக் கொண்டு இருக்கும் போது, இந்த சிறு முதலீட்டுப் படத்திற்கு ஆதரவு தந்து இவ்வளவு பத்திரிக்கை நண்பர்கள் வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு நன்றி.  இப்படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன் ஒரு டாக்டர், அயர்லாந்தில் படித்து செட்டில் ஆனவர்.  அவர் இங்கு வந்து ஒரு தமிழ்ப்படத்தை இயக்கி தயாரித்து சிறப்பான முறையில் வெளியீட்டிற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.  ஏ.ஆர்.ரெஹனா மேடத்தின் பாடல்களை படப்பிடிப்பில் ஒலிக்கச் செய்து, அதைக் கேட்டுக் கொண்டே தான் பாடல் படப்பிடிப்பு நடந்தது.  மிகச்சிறப்பான பாடல்களைக் கொடுத்த  அவருக்கு நன்றி.  அது போல் பின்னணி இசை அமைத்திருக்கும் மூன்ராக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப் படத்தின் கதை மிகவும் வித்தியாசம் ஆனது.  நீங்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

மிரியம்மா படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கும்  “மூன் ராக்” குழுவினர் பேசும் போது, “மிகவும் எமோஷ்னலாக இருக்கிறது. பெரிய பெரிய இசையமைப்பாளர்களின் பெயர்களை எழுதிய பத்திரிக்கையாளர்கள் எங்களது பெயரை இசையமைப்பாளர் என்று எழுதப் போவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய ஆதரவு தாருங்கள்”  என்று பேசினர்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா பேசும் போது, ”ஒளிப்பதிவாளர் ஜேஷனின் அறிமுகத்தால் தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். இயக்குநர் மாலதி நாராயணன் தேனீயைப் போல் சுறுசுறுப்பானவர், இருக்கின்ற எல்லா வேலைகளையும் அவர் பார்ப்பார். தயாரிப்பு, இயக்கம் மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் தேவைப்படும் சிறு சிறு வேலைகளைக் கூட கூச்சமின்றி இறங்கிச் செய்வார்.  இக்கதை மிகவும் வித்தியாசமான கதை, நடிகை ரேகாவிற்கு இக்கதை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார்.  நடிகை ரேகா எனக்கு நெருங்கிய தோழி போன்றவர், இப்படத்தில் பின்னணி இசை அமைத்திருக்கும் மூன் ராக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.  இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.

நடிகை ரேகா பேசும் போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் என் உயிரினும் மேலான என் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.  செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்..  பின்னர் நான் அவனை “டேய் இங்க வாடா” என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது.

நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.  என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்..  நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்…  உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. 

சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன்  பேசும் போது, “இப்படம் தொடங்கும் போது நான், ஆஷிக் மற்றும் கேமராமேன் ஜேஷன் மட்டுமே இருந்தோம். இங்கு இருக்கும் அனைவரையும் இந்த புராஜக்டிற்குள் அழைத்து வந்தது ஆஷிக்கும் ஜேஷனும் தான். அவர்களுக்கு என் நன்றிகள்.  முதலில் நான் இப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை. இயக்கவே விரும்பினேன். பின்னர் ஒரு சூழலில் இப்படத்தை தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு  தள்ளப்பட்டேன்.  இப்படத்தில் நிறைய நபர்கள் உள்ளே வந்துவிட்டுப் பின்னர் வெளியேறி இருக்கிறார்கள்.  ஒரு தயாரிப்பு நிறுவனம் கூட இப்படத்தை தயாரிக்க முன் வந்தது. ஆனால் படத்தின் பூஜைக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது, அந்நிறுவனம் காணாமல் போனது. எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை.  இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம். 
அவர்கள் யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. அயர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். படத்தை எடுத்து முடிப்பார்களா..? பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடு சென்று விடுவார்களா…? என்று பல சந்தேகங்கள் அவர்களுக்கு. அவர்களால் எங்களை நம்பமுடியவில்லை. அவர்கள் இந்த புராஜெக்டை விட்டு வெளியேறியது ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றுகிறது. அதனால் தான் எனக்கு என் மீதான நம்பிக்கை அதிகரித்தது.  என்னை நம்பி இவ்வளவு பெரிய அணி உருவாகி இருந்ததால் ஒரு கட்டத்தில் நானே தயாரிக்க முன் வந்து இப்படத்தை தயாரித்திருக்கிறேன். மீண்டும் படம் தயாரிப்பேனா என்று தெரியாது.  ஆனால்  கண்டிப்பாக படம் இயக்குவேன்.

இங்கு எழில் சிறுமுதலீட்டுப் படங்கள் எடுக்க வேண்டியதில்லை என்று யாரோ பேசியதைக் குறித்துப் பேசினார்.  சிறு முதலீட்டுப்படங்களே எடுக்கக் கூடாது என்று கூறினால் அறிமுக இயக்குநர்களுக்கான எல்லா கதவுகளும் அடைபட்டுவிடும். ஏற்கனவே படம் செய்த இயக்குநர்கள் மட்டும்தான் திரும்ப திரும்ப படம் செய்வார்கள்.  முதல் வாய்ப்பு என்பது மிகப்பெரிய விசயம், அதனால் தான் மூன் ராக் குழுவினரை கண்டிப்பாக இப்படத்தில் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய அளவிற்கு இது பெரிய முதலீட்டுப் படம் தான்.  எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த என் குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார். 

தற்போதைய பிக் பாஸ் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா பேசும் போது, “நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.  மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று பேசினார்.

துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து   #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் முதல்  பதிப்பில், DCP  மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.

 ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது. 


ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன்,  'துரங்கா சீசன் 2' இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து  இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர். 

ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை,  பொழுதுபோக்கின் வழியே  ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5  முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.

டெல்லி காவல்துறை DCP  மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா  கூறுகையில்.., 
“சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும்  திறனை ZEE5  கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள்.  அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.


ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்..,
 “ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும்  சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும்,  அதனைச்  சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்..,
"துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்."


ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.  இது  மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.


ZEE5  பற்றி
ZEE5  என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5    வழங்குகிறது.

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்:'ரா .. .ரா .சரசுக்கு ராரா...' படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்:
'ரா .. .ரா .சரசுக்கு  ராரா...' படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் 'ரா . .ரா .சரசுக்கு  ராரா...'

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்றொரு படம்
 உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். 

இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை?

யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் சிரமங்களைச் சொல்கிறது கதை. பரபரப்பாகவும் காமெடியாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இப்போது பரவி வரும் கால்பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் நகைச்சுவையுடன்  சொல்லப்பட்டுள்ளன.

பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.
 
படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளையும் , சுதந்திரமான காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார் அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று அறுவது கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்.

படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் கேட்டபோது....

 " இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தான் நான் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும்  காட்சிகள் உள்ளன.இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது.இயக்குநர் கேட்டபடி நடிப்புக் கலைஞர்கள் ஆகட்டும் தொழில்நுட்ப வசதிகளாகட்டும் அனைத்தையும் நான் செய்து கொடுத்தேன்.அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது.

இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம் தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்க்கலாம். இப்போது வருகிற படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றுக் கொண்டு  குடி, புகை,கொலை, குத்து  வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமை நடக்கிறது.படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம். ஆனால் நாங்கள் "இது ஒரு ஏ படம்" தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம் .இது அனைவருக்குமான படம் அல்ல.பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை."என்கிறார் தயாரிப்பாளர்.
 
 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Jaipur Jewels Unveils Exquisite Jewellery Collections at Amethyst Chennai on 26th and 27th October


Jaipur Jewels Unveils Exquisite Jewellery Collections at Amethyst Chennai on 26th and 27th October

 Jaipur Jewels, the celebrated luxury jewellery brand with a rich heritage spanning over 150 years and seven generations, is thrilled to announce its exclusive jewellery exhibition in Chennai. The much-anticipated event  began 26th and will be open till 27th of October at The Folly at Amethyst, Whites Road, Chennai, presenting a breathtaking selection of fine jewellery collections.

The inauguration of this exquisite collection was a star-studded affair, graced by renowned personalities, including Actress Poornima Bhagyaraj, Anupamaa Shivram, Director- Shriram Chits , Vineet Naheta (Managing Director of Jaipur Jewels), Ritisha Niveda (Entrepreneur, Fashion Interior Designer, Supermodel, and Beauty Pageant Titleholder), Reshma Srijay-Flora Wedding Planners and Karun Raman-Celebrity Fashion Choreographer.

Jaipur Jewels has been a name synonymous with timeless elegance and craftsmanship, and this exclusive exhibition in Chennai is an opportunity for connoisseurs of fine jewellery to witness the magic of their creations firsthand. The brand's Managing Director, Vineet Naheta, a seasoned jewellery designer and trousseau consultant with three decades of experience, will personally grace the event, adding his expertise to this grand showcase.

Ritisha Niveda, the multi-talented entrepreneur, fashion interior designer, supermodel, and beauty pageant titleholder, is hosting this exceptional event. Ritisha, also the founder of NILA – a non-profit organization for women's empowerment, has an impressive list of accolades, including the title of Mrs. United Nations Ambassador 2018 and Mrs. South Asia UN. Her commitment to empowering women and her passion for style make her the perfect host for this exclusive exhibition.

Event Details:

• Date: 26th and 27th October 2023

• Venue: The Folly at Amethyst, Whites Road, Chennai

Jaipur Jewels invites all jewellery enthusiasts and aficionados to be a part of this grand exhibition. Discover the finest craftsmanship and exquisite designs that have been cherished for generations. 

 

Wednesday, October 25, 2023

Mahat Raghavendra-Meenakshi Govindarajan starrer “Kadhale Kadhale”*

*Sri Vaari Film P. Ranganathan presents*

*Filmmaker R Premnath directorial* 

*Mahat Raghavendra-Meenakshi Govindarajan starrer “Kadhale Kadhale”* 


Sri Vaari Film is one of the most celebrated production houses of the Tamil film industry that created beautiful entertainers appealing to the interests of audiences from all walks of life. Producer P. Ranganathan has been ritually inclined to the mantra of engrossing family audiences with good content-driven movies. His upcoming production “Kadhale Kadhale” will be yet another feather on his cap. The film, a breezy feel-good romantic entertainer, features Mahat Raghavendra and Meenakshi Govindarajan as the titular characters. The film is written and directed by R Premnath. The movie shooting commenced this morning (October 25) with a GRAND ritual Pooja ceremony, graced by the cast and crew members along with eminent personalities from the film industry. 

Throwing light on the film, director R Premnath says, “Love has been an inevitable force in everyone’s LIFE. It has been an unavoidable element from the adolescent phase to the older age. However, falling in love and being in a strong relationship with a single partner has changed through the course of time, and contemporary relationships have gone through a drastic change. Kadhale Kadhale will delve into the lives of the current generation and their perspective on love and relationships. It will be a beautiful celebration of love coated with good entertainment values. Mahat Raghavendra has a unique trait of capturing the interests of audiences across all age groups. After completing the development of characterizations and script, I felt he would be the perfect one for this role and it’s the same with Meenakshi Govindarajan. The film also has an ensemble star cast including Iyakkunar Imayam Bharathiraja, KS Ravikumar, VTV Ganesh, Raveena Ravi, and many others.” 

AFTER HIS ROMANTIC MUSICAL HIT, SITA RAMAM, MUSIC DIRECTOR Vishal Chandrashekar IS ALL SET TO TINGLE YOUR ROMANTIC NERVE WITH this film. The others in the technical crew include Sudharshan Govindarajan (DOP), M.S.SAGU (Art), and THIYAGU(Editing).

அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்*

*அசத்தும் அழகுடன் ரசிகர்களை  வசீகரிக்கும் மாளவிகா மோகனன்*

நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். 

அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவிகா மோகனன் தனக்கான ரசிகர்களை கவர்வதற்கு பிரத்யேக வழியை பின்பற்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.   அவரது சமீபத்திய புகைப்படங்களில் தன்னுடைய வசீகரமான தோற்றத்தை அவர் பயன்படுத்தும் பாணி வித்தியாசமானதாகவே தெரிகிறது. 

இதனிடையே நடிகை மாளவிகா மோகனன், தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் நல்வாழ்வுக்காக பலகட்ட யோசனையில் இருந்து உருவான திட்டமான 'Femi9'ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

விஜயதசமியின் இந்த மங்களகரமான நாளில், நான் இன்று ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளேன். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன். இத்தனை வருடங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாகவும் இருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருந்தேன், பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்திருக்கிறேன். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கிறேன். இந்த மகிழ்ச்சி அனைத்தும் இன்று ஒருங்கிணைந்துள்ளது.

பெண்களின் நல்வாழ்வுக்காக பலகட்ட யோசனையில் இருந்து உருவான திட்டமான 'Femi9'ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல. இது நான் நேசித்த ஒரு கனவு! அது திரைகளுக்கு அப்பால் சென்று பெண்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆகும்.

'Femi9' ஒரு பிராண்ட் மட்டுமல்ல. இது பெண்களின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பிரதிநிதித்துவம். தனிப்பட்ட சுகாதார உலகில், இது பெண்களால், பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது ஆரம்பம் முதல் இப்போது வரை அதில் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது.

தனிப்பட்ட வெற்றியை அடிக்கடி முன்னிலைப்படுத்தும் ஒரு துறையில், 'Femi9' என்பது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். தனிப்பட்ட சுகாதாரத்தில் இந்த முயற்சியை எடுக்க என்னைத் தூண்டியவர்களுக்கும் கொடுத்த ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்றி. 'Femi9' என்பது நமது கூட்டு சாதனையாகும். நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒருவரையொருவர் உயர்த்தும்போது அனைவருக்கும் அது நன்மை கொடுக்கிறது.

'Femi9' ஒரு புராடக்ட், அது வாங்குபவர்களின் வீடுகளுக்குச் செல்கிறது என்பதையும் தாண்டி உலகெங்கிலும் உள்ள பெண்களின் இதயங்களைச் சென்றடையும் ஒரு பிராண்ட்.  இது அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும், ஆறுதலாகவும், ஒன்றாக இணைந்து, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கட்டும்.

அன்புடனும் நன்றியுடனும்,
நயன்தாரா

Tuesday, October 24, 2023

Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Suryavin Sanikizhamai Launched Grandly*

*Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Suryavin Sanikizhamai Launched Grandly*

Natural Star Nani and Talented Director Vivek Athreya collaborated for the second time. While the first movie Ante Sundaraniki was a wholesome entertainer, the second movie Suryavin Sanikizhamai is a unique actioner. The Unchained video that presented Nani in a complete mass and action avatar enthused the masses. DVV Danayya and Kalyan Dasari of DVV Entertainment are bankrolling the project on a large canvas with a high budget.
Suryavin Sanikizhamai has been launched grandly today with a Pooja ceremony, on the auspicious occasion of Dussehra. Producer DVV Danayya handed over the script to the director. Dil Raju switched on the camera for the muhurtham shot, while the clapboard was sounded by VV Vinayak. SJ Suryah did the honorary direction for the first shot.

Nani is not sticking himself to doing one particular genre. He is also undergoing transformation, as per the demand of the story and his character. He sports a rugged look in Suryavin Sanikizhamai.

Priyanka Arul Mohan is the female lead, while Tamil Star Actor SJ Suryah is cast in a crucial role in the film. Leading technicians are working on this film. Sensational composer Jakes Bejoy scores the music, while Murali G is the cinematographer. Karthika Srinivas is the editor.

Suryavin Sanikizhamai is a Pan India film that will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.

Cast: Nani, Priyanka Arul Mohan, SJ Suryah

Technical Crew:
Writer and Director: Vivek Athreya
Producers: DVV Danayya, Kalyan Dasari
Banner: DVV Entertainments
Music: Jakes Bejoy
DOP: Murali G
Editor: Karthika Srinivas
PRO: Yuvraaj
Marketing: Walls And Trends

Sunday, October 22, 2023

Geetha Arts, Mass Movie Makers and Dheeraj Mogilineni Entertainment next prestigious project with National Crush Rashmika Mandanna and director Rahul Ravindran announced*

*Geetha Arts, Mass Movie Makers and Dheeraj Mogilineni Entertainment next prestigious project with National Crush Rashmika Mandanna and director Rahul Ravindran announced*

Since its inception, Geetha Arts is a production company, known for its distinctive storylines and quality production values. The production company has been making exceptional hits time and again. Now, the production joined hands with new blockbuster production house Mass Movie Makers and Dheeraj Mogilineni Entertainment to produce an exciting project.

With National crush and phenomenal performer Rashmika Mandanna in the lead role, talented filmmaker Rahul Ravindran helming the project. Rashmika has delivered compelling performances in all of her films and is now poised to deliver a path breaking performance in a women-centric film.

The team also revealed a sneak peek, which promises to be a one-of-a-kind cinematic experience for audiences of all ages. The title of the film is The Girlfriend, and the dialogues are about the perfect love he expects from his girlfriend while Rashmika is seen breathless in the water. Glimpse is both beautiful and meaningful. The film's principal photography will commence soon.

Krishnan Vasant weilds the camera while musical sensation Hesham Abdul Wahab will score the music, both of which will surely be among the movie's highlights. Ace producer Allu Aravind presenting the film while Vidya Koppineedi and Dheeraj Mogilineni are producing the film.

*Cast & Crew Details* 

Starring - Rashmika Mandanna & Others.
Writer - Director - Rahul Ravindran
Presented by - Allu Aravind
Producers - Vidya Koppineedi, Dheeraj Mogilineni
Music - Hesham Abdul Wahab
DOP - Krishnan Vasant
Production Design - S. Ramakrishna & Monika Nigotre
Costumes - Shravya Varma
PR - Yuvraaj
Marketing - First Show

https://youtu.be/f13nzoAWVvU

Prashanth Hospitals ‘Save Young Hearts’ 2023 Campaign reverberates cardiac health awareness and concludes in a grand manner

Prashanth Hospitals ‘Save Young Hearts’ 2023 Campaign reverberates cardiac health awareness and concludes in a grand manner

  • Noted Tamil Actor Vikram Prabhu of Kumki fame recommended many youngsters to have regular healthy lifestyle and fitness routines to arrest cardiac complications

  • Cancer patient wins the first prize for uniquely amplifying heart health through his interesting Instagram reel.

Chennai, October 21, 2023 - Prashanth Hospitals, a leading super-speciality hospital in Chennai, successfully culminated its impactful ‘Save Young Hearts’ 2023 digital campaign, in continuation with the major hit campaign of 2022, designed to raise awareness about cardiac wellness and encourage healthy lifestyles among the youth to prevent cardiac complications and heart attacks. The grand finale event featured distinguished guests and renowned cardiologists from Prashanth Hospitals who delivered key insights on stress management, healthy eating, and lifestyle choices crucial for cardiac well-being.

Grandson of the legendary actor Chevalier Sivaji Ganesan and well-known Tamil actor Vikram Prabhu of the national award winning Kumki and Tamil blockbuster Ponniyin Selvan fame, extended his heartfelt congratulations as the event’s chief guest to the award winners and participants of the short video contest, recognizing their outstanding creative contributions in promoting cardiac wellness and encouraging a heart-healthy lifestyle.

Prashanth Hospitals' team of expert cardiologists shared their perspectives on the pressing need to de-stress, adopt a balanced diet, and make positive lifestyle choices to safeguard against cardiac issues. Their insights shed light on the gravity of frequent cardiac arrests among young individuals in recent times.

The event included a recognition ceremony for the winners of the short video/reels contest, who have demonstrated exceptional creativity in advocating for cardiac wellness and healthy living. Overall, there were a total of more than 100 entries that innovatively resonated the trending topic on Instagram which aided in creating a mega awareness amongst the targeted audience. 

The first prize was awarded to a cancer patient Mr. Sivamani Kannan with a handsome cash reward of Rs.1 lakh for brilliantly conveying the intended message by depicting the rising cardiac complications in a smart and impactful manner. The second prize Rs.50,000 was awarded to Mr. Jeevan for creating a compelling video on preventive measures for heart health. 

Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, Chennai, emphasized, "Our unwavering commitment is to protect the hearts of our youth and ensure a healthier future. Increased awareness and lifestyle changes are instrumental in preventing heart attacks. Engaging with young individuals and the broader social media community is the key. Through this competition, we aim to convey the message of preventing cardiac arrests and fostering a heart-healthy lifestyle. We are delighted by the overwhelming response to this campaign and the tremendous support from celebrity influencers."



Addressing the audience on the significance of being aware and alert of cardiac wellness, Senior Cardiologist, Dr. Kathiresan commented "The healthy lifestyle changes should be imbibed right from the school. There should be a continuous campaign for the public by professional organisations and the government. Long term environmental changes are also needed. We must immediately seek medical help when we face even the slightest signs and symptoms of cardiac complications like a heart burn, radiating pain in hands and shoulders, and a sense of discomfort in the heart or breathing. "Prashanth Hospitals’ ‘Save Young Hearts’ digital campaign reached out to a wide audience across various social media platforms, empowering young individuals to take proactive steps in preventing cardiac complications. Given the growing concern of heart disease among the younger generation, the campaign's mission was to educate, inspire change, and drive the importance of heart health through innovative social media initiatives. The Grand Finale of this campaign was organized at Crest Club, Phoenix Marketcity, Chennai.  The "Save Young Hearts Reels Contest" served as a platform for open discussions, creative engagement, and debates focused on preventing the increasing incidents of heart attacks.

About Prashanth Hospitals: Prashanth Hospitals is a multidisciplinary hospital that provides sophisticated and dedicated healthcare services by professionally trained experts. Prashanth Super-specialty Hospital at Velachery and Kolathur is one of the best- and well-known multi-specialty hospitals in Chennai. These facilities have well trained and skilled nursing staff who can take good care of the patients. The vision is to become an internationally renowned medical institute by providing excellent health care services to the patients, and the mission is to maintain the trust of the patient by providing good quality of health care. The values on which Prashanth Super-specialty Hospitals functions are quality of care, respect, competence, the effectiveness of the treatment, safety, and creating health awareness among the people. Prashanth Super-specialty Hospitals also provides various health care packages for check-ups and diagnosis of any ailment and their treatments.

பிரமயுகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

*'பிரமயுகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*


நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது.

'பிரமயுகம்' மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான 'கண்ணூர் ஸ்காவ்ட்' படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம்.

மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’. ஹாரர்- த்ரில்லர் படங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பேனரின் கீழ் தயாரிக்கப்படுகின்ற முதல் திரைப்படமாக 'பிரமயுகம்' அமைந்ததில் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து ‘பிரமயுகம்’ படத்தை வழங்குகின்றன.

சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் தயாரித்த 'பிரமயுகம்' படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ள நடித்துள்ளனர். மேலும் ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவாளராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஷஃபிக் முகமது அலி எடிட்டராகவும் கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். படத்திற்கு டி.டி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் மெல்வி ஜே ஆடைகளையும் கவனித்துள்ளனர்.

RATHNAM - திரைவிமர்சனம்

சித்தூர் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் நெருங்கிய உதவியாளர் விஷால். அவர் எப்போதும் ஏதாவது ஒரு மோதலில் ஈடுபடுவார். ஒரு நாள் அவன் ப்ரியா பவானி சங்க...