Wednesday, June 17, 2026

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்" நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Monday, June 1, 2026

கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!

கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!
 
வைணவத் துறவியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி தொலைக்காட்சித் தொடராக ஆவணப்படுத்தியுள்ளார். கலைஞர் டி.வி.க்காக அவர் எழுதிய இந்தத் தொடர், ராமானுஜரின் ஆன்மிகப் பங்களிப்பைத் தாண்டி, அவர் நிகழ்த்திய சமூகப் புரட்சிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரிதினும் அரிதான இந்த மெகாத் தொடர், ஜூன் 3 முதல் திங்கள் - வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிறது.
 
மதத்தில் புரட்சி செய்த மகான்:
 
கி.பி. 1017-ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், விசிட்டாத்துவைத தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர். எனினும், அன்றைய காலகட்டத்திலேயே சாதி, மத பேதங்களை உடைத்தெறிந்து தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழிக்கும், திவ்ய பிரபந்தத்திற்கும் முன்னுரிமை அளித்துச் சமத்துவக் குருவாக விளங்கினார்.
 
திராவிடக் கொள்கையும், ராமானுஜரின் சீர்திருத்தமும்:
 
பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பற்றுக் கொண்ட கலைஞர் கருணாநிதி, ராமானுஜரின் முற்போக்குச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அத்தொடரை எழுதினார். ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டையொட்டி, "இராமானுஜர்: மதத்தில் புரட்சி செய்த மகான்" என்ற தலைப்பில், அத்தொடருக்கான திரைக்கதை மற்றும் வசனங்களை அவர் தனது கைவண்ணத்தில் வடித்திருந்தார். சாதி ஒழிப்பு மற்றும் சமூகச் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இத்தொடர், ஆன்மிகத் தலைவர்களையும், திராவிடச் சிந்தனையாளர்களையும் ஒரு புள்ளியில் இணைத்த முக்கிய வரலாற்றுப் பதிவாகக் கருதப்படுகிறது.

Wednesday, May 27, 2026

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி
 
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் - தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.

Wednesday, May 20, 2026

கலைஞர் டிவியில் "தமிழோடு விளையாடு சீசன் 3" - மாபெரும் இறுதிப்போட்டி

கலைஞர் டிவியில் "தமிழோடு விளையாடு சீசன் 3" - மாபெரும் இறுதிப்போட்டி
 
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
 
விறுவிறுப்பாக நடந்து வந்த அரையிறுதிப் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், தமிழோடு விளையாடு பட்டம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை வெல்லப் போகும் அணி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்திருக்கிறது.

Tuesday, May 12, 2026

KALAIGNAR TV – GOWRI SERIALஎகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!

KALAIGNAR TV – GOWRI SERIAL
எகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா, கனகா ஆகிய இருவரும் ஒரே முகத் தோற்றத்தில் இருப்பதால் உண்மையான துர்கா யார் என்கிற குழப்பம் நிலவி வருகிறது.
 
இதனை நிரூபிக்கும் பொருட்டு தீக்குழியில் இறங்க துர்கா முடிவு செய்ய அடுத்த நடக்கப்போவது என்ன என்கிற பரபரப்போடும், ரோஜா மெகாத்தொடரின் நாயகியான பிரியங்கா கௌரி மெகாத்தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாக இருக்கிறார் என்பதால் தொடர் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Monday, April 27, 2026

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"


 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

 


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்" நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 


மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

 

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Thursday, April 16, 2026

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - புத்தம்புதிய நிகழ்ச்சி


நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன்கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைகொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்துபணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமானபல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்கலகலப்பான நிகழ்ச்சியாக இருவர் உருவாகி இருக்கிறது.

Tuesday, April 7, 2026

கலைஞர் டிவியின் சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


 கலைஞர் டிவியின் சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் "குடும்பஸ்தன்" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் 2026-ன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான "பராசக்தி" சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய் நடிப்பில் "இட்லி கடை" சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Tuesday, March 24, 2026

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்”

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்”
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்” மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
 
அன்பும், பொறுமையும் கொண்ட நல்ல மனைவியாகவும், தன் குடும்பத்திற்காகவும் வாழ்ந்து வரும் உமாவை அவளுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மதிக்காமல் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இதனால், அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்கிறாள்.
 
நாள்கள் கடந்து போக, உமா தனது உரிமைகள் மற்றும் தன்னம்பிக்கையை அறிந்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொள்ள முயல்கிறாள்.
 
இவ்வாறாக, குடும்ப உறவுகள், தியாகம், பெண்களின் வலிமை, மற்றும் வாழ்க்கை சவால்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான இந்த தொடர், ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அவற்றை கடந்து முன்னேறும் அவளது பயணத்தை வெளிப்படுத்துகிறது.

Tuesday, March 17, 2026

இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!

இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா” மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் திரைக்கதையில் தற்போது, விக்ரம் கடத்த திட்டமிட்டிருந்த வைரங்கள் ருத்ராவின் கைக்கு கிடைக்க, ருத்ராவிடம் இருந்து அதனை அபகரிக்க ருத்ராவுக்கு உதவுவது போல் நடிக்கும் விக்ரம் நல்லவன் போல் நாடகமாடுகிறார்.
 
மறுபுறம், தற்கொலை செய்து கொள்வதாக ருத்ராவை ஏமாற்றும் காவ்யா, ருத்ராவை கொலை செய்ய திட்டமிட, காவ்யாவை வைத்து ருத்ராவிடம் இருந்து வைரத்தை வாங்க விக்ரம் திட்டமிடுகிறார்.
 
இறுதியில், ருத்ரா தன் தங்கை காவ்யாவை காப்பாற்றினாரா? வைரத்தை அபகரிக்க நினைக்கும் விக்ரம் கும்பலை கைது செய்வாரா? என்கிற பரபரப்போடு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

Wednesday, March 11, 2026

இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"

இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"
 
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "காத்துவாக்குலரெண்டு காதல்" மெகாத் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, தற்போதுசரவணனை விட்டு பிரிய முடிவெடுத்திருக்கும் ஈஸ்வரிஅதற்கு ஈடாக, ரம்யாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தனது சொத்துக்களை மீட்கிறாள்.
 
விஷயம் தெரிய வந்து ஈஸ்வரியை சமாதனம் செய்யப்போகும் அபிராமி அவமானப்படுத்தப்பட, சரவணணுக்குரம்யாவுடன் திருமணம் செய்து வைக்க அவர்முடிவெடுக்கிறார்.
 
இதற்கிடையே, சரவணனை ஏமாற்றிய போலி ரெசார்ட்ஓனர் சரவணனின் கண்ணில் பட, தன் மீதான கலங்கத்தைசரவணன் போக்குவாரா? மற்றும் சரவணன் - ரம்யாதிருமணம் நடக்குமா? அல்லது சரவணன் ஈஸ்வரியுடன்மீண்டும் இணைவாரா? என்கிற பரபரப்போடு தொடர்விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை...