Sunday, June 30, 2024

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு

*15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு !!*
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது !!  
நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் 'மட்கா'. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் ஷூட்டிங் ஷெட்யூலாகும், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும். 
'மட்கா' மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ் லுக்கை கொண்டு வர, பிரம்மாண்ட செட் அமைப்பது, ரசிகர்களுக்கு கண்கவர் அனுபவத்தை வழங்குவதற்கான படக்குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும்  பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். மேக்கிங் வீடியோ படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு என படத்தின் மீது ஆர்வத்தை கூட்டுகிறது. 
பன்முக நடிப்புக்கு பெயர் பெற்ற வருண் தேஜ், 'மட்கா' படத்தில் வித்தியாசமான மற்றொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க உள்ளார். அவரது பாத்திரம் படத்தில் முக்கியமானது, மேலும் அவரது கதாப்பாத்திரத்தின் தாக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் கருணா குமார். மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'மட்கா' படத்தின் தனித்துவமான கதை, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட செட் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் என்று
படக்குழுவினர் நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்து நிற்கும் ஒரு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை உருவாக்குவதாகும்.
'மட்கா' வருண் தேஜின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்கும், மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்
தொழில்நுட்பக் குழு: 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார் 
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார் 
ஒளிப்பதிவு : பிரியசேத் 
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R 
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா 
கலை: சுரேஷ் 
நிர்வாகத் தயாரிப்பாளர் - RK.ஜனா 
மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் - ஹேஷ்டேக் மீடியா

Saturday, June 29, 2024

மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

*'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்".

இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்". 

தயாரிப்பாளர் டி. சிவா, "படங்களின் வசூலை பொருத்தவரை தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது. திரையரங்கிற்கே வராதீர்கள் என்றோ, தரம் தாழ்ந்தோ தயவு செய்து ஊடகங்கள் விமர்சனம் செய்து பார்வையாளர்களை வரவிடாமல் செய்து விடாதீர்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் போலதான். உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. விஜய் மில்டன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி தலைகனம் பிடிக்காத மனிதர். அவருடைய கடின உழைப்பிற்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்கள் ஆதரவு அதற்கு தேவை". 

இயக்குநர் சசி, "'ரோமியோ' படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிக்க ஆரம்பித்த படம் இது. கதையின் மீதும் இயக்குநர் மீதும் அதிக நம்பிக்கைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' எனப் படத்தின் டைட்டில் சொன்னபோது பலர் மாற்ற சொல்லி சொன்னார்கள். ஆனால், அந்த டைட்டிலை மாற்றாமல் நம்பிக்கை வைத்தவர் விஜய் ஆண்டனி. அதுபோலதான் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவாக இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்".

நடிகர் விஜய் ஆண்டனி, "என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். 'பிச்சைக்காரன்' படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார். இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைதான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'


 இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் வித்தியாசமான தோற்றம் - மயக்கும் பின்னணி இசை- வசீகரிக்கும் வசனங்கள்- விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் வலிமையாக கூட்டணி அமைத்திருப்பதால்.. திரையரங்குகளில் இந்த அறிவியல் புனைவுடன் கலந்த காவிய படைப்பினை காணும் ரசிகர்கள்.. கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.  இதனால் ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். 

'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு.. இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திர பின்னணி- சுப்ரீம் யாஸ்கினின் அடுத்த கட்ட நடவடிக்கை-  சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி- புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு.. என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பாராட்டுவதுடன், அன்பினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா


 நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.



தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்".

இணைத்தயாரிப்பாளர் சிநேகா, “நிகழ்வுக்கு வந்திருக்கும் நயன்தாரா மேம்க்கு நன்றி.  இந்த வாய்ப்பு கொடுத்த அப்பாவுக்கும் இப்படியான ஒரு ஸ்டைலிஷ் படத்தை எனக்கும் ஆகாஷூக்கும் கொடுத்த விஷ்ணு சாருக்கும் நன்றி. எல்லோரும் ஆகாஷை அன்போடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்”.

நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும்.  மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார். 

ஆகாஷ் முரளி, "இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி".

நடிகர் ஆர்யா, “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார். 

நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.



இயக்குநர் விஷ்ணு வர்தன், “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் சிறப்பான நாள். படத்தின் முதல் பார்வையே நம்பிக்கை தந்துள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பிரிட்டோ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இப்போது அவர் மருமகனை வைத்து படம் எடுத்துள்ளார். நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும்”.

தயாரிப்பாளர் தேனப்பன், “முரளி சாருடன் நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய மகன் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வில் நான் இருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள்!”.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “முரளியுடன் நிறைய நல்ல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பமும் எனக்கு நல்ல பழக்கம். அதர்வா இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆகாஷை இந்த போஸ்டரில் பார்த்தபோது, ‘உதயா’ படத்தில் நாகர்ஜூனாவைப் பார்த்தது போல இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.

இயக்குநர் இளன், “விஷ்ணு வர்தன் - யுவன் காம்பினேஷனில் ஒரு ஹீரோவுக்கு சூப்பரான அறிமுகம் இது. ஆகாஷ்- அதிதி காம்பினேஷன் போஸ்டரில் சூப்பராக உள்ளது. வாழ்த்துகள்”.

அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

Round Table India and Ladies Circle India Collaborate on Transformative HEAL Project at Coimbatore GH Neonatal Ward


 


Round Table India and Ladies Circle India Collaborate on Transformative HEAL Project at Coimbatore GH Neonatal Ward

 

Coimbatore, June 28, 2024: In a commendable joint effort, Coimbatore Metropolitan Round Table 62 and Coimbatore Metropolitan Ladies Circle 23 have successfully completed a highly deserving HEAL project at the Coimbatore Government Hospital's Neonatal Ward. The two organizations have generously donated essential medical equipment, significantly enhancing the healthcare services provided to newborns and their mothers.

 

The donations include a state-of-the-art Stainless Steel Water Purifier with Hot and Cold Function, valued at Rs. 61,360, and an Ameda Breast Pump along with Breast Pump kits, worth Rs. 141,000. The total value of these contributions is Rs. 204,000.

 

These valuable additions are expected to have a profound impact on the Neonatal Ward, providing clean, safe drinking water for both staff and patients and facilitating breastfeeding for new mothers.

 

Photo Caption: Members from CMRT 62 and CMLC 23 donating towards HEAL project at the Coimbatore Government Hospital's Neonatal Ward.

 

 

 

Thanks & Regards

 

G. Sreenivasan

Friday, June 28, 2024

தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா


 தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா!

'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.* 

32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

இந்த ஆண்டு தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம்  21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கிறார்.

இந்நிகழ்வு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் இன்று(28-06-24) நடைபெற்று வருகிறது.  800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பெற்று வருகிறார்கள்.

இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த

 S.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த E.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு 'வைர தோடு' வழங்கி கௌரவித்தார் 'தளபதி'விஜய்.

அதேபோல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் A.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த K.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த R.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த D.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை(03-07-2024) அன்று மீதி உள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.

Celebrating the 10th United Nations International Yoga Day in Chennai Jointly Organized by Born To Win Research Foundation Trust and Sustainable Development Council


Celebrating the 10th United Nations International Yoga Day in Chennai Jointly Organized by Born To Win Research Foundation Trust and Sustainable Development Council

Chennai, June 21, 2024 - Today, the 10th United Nations International Yoga Day was celebrated with great enthusiasm and vigor at Pakwan, Chennai. This event, jointly organized by Born To Win and the Sustainable Development Council, witnessed the participation of 100 women coming together to embrace the spirit of yoga and holistic well-being.

The event was graced by the esteemed Chief Guest CMA.Divya Abhishek & Guest of Honour Dr.Srimathy Kesan & Special Guest Comd. Shri. K Prabhakar, CISF Chennai along with Varsha Aswani Founder Born To Win, Yoga Guru Mona Bafna, who guided the participants through various yoga asanas and breathing techniques. Her expertise and serene approach created an atmosphere of tranquility and mindfulness, reflecting the true essence of yoga.

The International Yoga Day, established by the United Nations to promote global health, harmony, and peace, was observed with a focus on empowering women through the practice of yoga. This year's theme emphasized the role of yoga in sustainable living and mental health, aligning perfectly with the missions of Born To Win and the Sustainable Development Council.

The event featured a variety of yoga sessions catering to both beginners and advanced practitioners, followed by a session on the importance of incorporating yoga into daily life for long-term health benefits. Participants left feeling rejuvenated and inspired to continue their yoga journey.

As the event concluded, participants expressed their gratitude for the opportunity to be part of such an enriching experience. The organizers reiterated their commitment to continuing such initiatives that foster community health and well-being.


Mad Gala 2024 Fashion Meet celebrated with Rap Singer Iykki Berry, Actress Sanchita Shetty, Actress Upasana RC, Ms.Harisha, Mr.Vicky Kapoor, Mr.Ramesh & Mr.Raj


Mad Gala 2024 Fashion Meet celebrated with Rap Singer Iykki Berry, Actress Sanchita Shetty, Actress Upasana RC, Ms.Harisha,  Mr.Vicky Kapoor,  Mr.Ramesh & Mr.Raj

Mad Gala 2024 celebrated the Fashion in namma Chennai with designers, Makeup artist, Models,influencer and Celebrities and few socialites along with Mr.Vicky Kapoor,Mr.Ramesh & Mr.Raj

The LIFE STYLE awards were given away in different Category to cheer up the fashion industry and 
motivate fresh models, influencers, makeup artists, Fashion Designers. 

The event was hosted at a popular Lounge in the city The ZEBRA CROSSING saw the best of models influencers and Celebrities catching up and celebrating the fashion statement with great food and 
Music. 

As the Chennai Fashion scene is catching up wild the Managing Partners Mr.Ramesh and Mr.Raj are going to have mad gala 2.O soon in bigger Venue.

The Event was hosted by Vicky Kapoor Fashion Designer showcasing his new collection for Mad Gala Meet which saw some amazing outfits with loud colors Famous Singer & Actress Ms.Ikki Berry got Rap Singer Award,  Actress Sanchita Shetty got style icon award for 2024 and Actress upsana won the award for best brand icon 2024 few more awards were given to other celebrities to last not the least Harisha won raising star award.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி மற்றும் அவரது குட் டீட்ஸ் கிளப் இணைந்து பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான மெகா மருத்துவ முகாமை நடத்தினர்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி மற்றும் அவரது குட் டீட்ஸ் கிளப் இணைந்து பொது சுகாதாரத்தை  மேம்படுத்துவதற்கான மெகா மருத்துவ முகாமை நடத்தினர்.

வளசரவாக்கம் மற்றும் சாலிகிராமம் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய 500க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாம் மூலம் பயனடைந்தனர்.  இந்நிகழ்ச்சியில் திருமதி சுமா ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் இசிஆர் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரமிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த சுகாதார முகாமில், பொது சுகாதாரப் பரிசோதனைகள், சிறப்பு ஆலோசனைகள் மற்றும் அத்தியாவசிய உடல்நலப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு இலவச  சேவைகள் வழங்கப்பட்டன.

 அடித்தட்டு மக்களின் சுகாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சி, தரமான சுகாதாரத்தை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. 

சமூக செயல்பாடுகளுக்கு புகழ்பெற்ற  அப்சரா ரெட்டி, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

 நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கும்,  மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கும் பொது சுகாதாரம் அவசியம் என்றார்.  பொருளாதார சிக்கல் காரணமாக, வறுமையில் உள்ள மக்கள் தங்கள் உடல்நலனைப்  பேன முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் சுகாதார சேவை கிடைக்கவும் இது போன்ற நல்ல முயற்சிகளை மேற்கொள்வதாகவும்,  அப்சரா ரெட்டி கூறினார்.

Thursday, June 27, 2024

Kalki 2898 AD - திரைவிமர்சனம்


மகாபாரதத்தின் இறுதி தருணங்களில் கதை தொடங்குகிறது, அங்கு அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன் நடித்தார்) உத்தராவின் (அபிமன்யுவின் மனைவி) பிறக்காத குழந்தையைக் கொன்று, பாண்டவர்களின் பரம்பரையை முடிவுக்குக் கொண்டுவருகிறார். பகவான் கிருஷ்ணர் அஸ்வத்தாமாவின் கடைசி அவதாரமான கல்கியைப் பாதுகாக்க கலியுகத்தின் இறுதி வரை என்றென்றும் வாழுமாறு சபித்தார். கதை பின்னர் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் காசிக்கு மாறுகிறது, இப்போது அதன் முந்தைய அழகு மற்றும் மத முக்கியத்துவம் இல்லாத பாழடைந்த நிலம். மக்கள் உயிர் பிழைப்பதற்காக சண்டையிட்டுக் கொல்லும் வெறும் அலகுகளாகத் தள்ளப்படுகின்றனர்.

பைரவா (பிரபாஸ் நடித்தார்) எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஒரு கவனக்குறைவான மற்றும் சுய-வெறி கொண்ட பவுண்டரி வேட்டையாடுபவரின் ஒரே நோக்கம் யூனிட்களை சம்பாதிப்பதை மட்டுமே. எந்தப் பக்கம் அதிக லாபம் தருகிறதோ அந்த பக்கம் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பவாதியாக அவர் சித்தரிக்கப்படுகிறார். படத்தின் முதல் பாதி பைரவாவின் குறும்புகள் மற்றும் அவரது ஈர்க்கக்கூடிய வாகனமான புஜ்ஜி மீது கவனம் செலுத்துகிறது. அதே சமயம், சுப்ரீம் யாஸ்கின் ஆண்கள் வெவ்வேறு உயிரணுக்களில் சிறைபிடிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சீரம் பிரித்தெடுக்கும் ஒரு ஆய்வகத்தை வளாகத்தில் காண்கிறோம். இந்த கூறுகள் கல்கி 2898 கி.பி.யின் உலகக் கட்டுமானத்திற்கு பங்களிக்கின்றன. பிரபாஸின் நுழைவு காட்சிகள் மற்றும் ஆய்வகக் காட்சிகள் ஈர்க்கும் போது, ​​தேவையற்ற நகைச்சுவை மற்றும் பாடல் காட்சிகள் கதையிலிருந்து திசை திருப்புகின்றன.

பைரவாவின் கட்டுப்பாடற்ற இயல்பைக் காட்டுவதற்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது, நகைச்சுவைக் காட்சிகள் கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. காம்ப்ளக்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பைரவா மற்றும் அவரது வீட்டு உரிமையாளருக்கு இடையேயான தற்செயலான உரையாடல்கள் சதித்திட்டத்திற்கு கொஞ்சம் சேர்க்கின்றன. காசியின் துன்பகரமான காட்சி இருந்தபோதிலும், பைரவா குடித்துவிட்டு நடனமாடுவதாகக் காட்டப்படுகிறார், இது இடமில்லாததாக உணர்கிறது. அதிர்ஷ்டவசமாக, இடைவேளைத் தடையானது வேகத்தை அதிகரிக்கிறது, இது சகா எவ்வாறு முன்னேறும் என்று பார்வையாளர்களுக்கு ஆர்வமாக உள்ளது.

கல்கி 2898 AD இன் இரண்டாம் பாதியில் நாக் அஸ்வினின் புத்திசாலித்தனம் பார்வையாளர்களை கதையில் மூழ்க வைக்கிறது. கர்ப்பிணியான சுமதியை (தீபிகா படுகோனே நடித்தார்) பாதுகாக்க வேண்டும் என்பதால் அஸ்வத்தாமா மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தார். அஸ்வத்தாமா மற்றும் பைரவா இடம்பெறும் சண்டைக் காட்சிகள் விதிவிலக்கானவை, இறுதியாக டைட்டன்களின் மோதலை வழங்குகின்றன. இது ஒரு டீஸர் மட்டுமே, கதையானது இறுதிவரை தீவிரமடைந்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்துகிறது.

இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், சண்டைக் காட்சிகளுக்காக நாக் அஸ்வின் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், பிளாக் பாந்தர் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த காட்சிகள் முடிந்து, மகாபாரத ஃப்ளாஷ்பேக்குகள் மீண்டும் மைய நிலைக்கு வந்தவுடன், பார்வையாளர்கள் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் கலவையால் மயங்குவதைத் தவிர்க்க முடியாது.

அமிதாப் பச்சன் உண்மையிலேயே அஸ்வத்தாமாவாக ஜொலிக்கிறார். திரைப்படம் அவருடன் தொடங்குகிறது, மேலும் அவர் இடைவேளைக்குப் பிறகும் க்ளைமாக்ஸின் போதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அஸ்வத்தாமாவின் சக்தி வாய்ந்த திரைப் பிரசன்னமும், கட்டளையிடும் சித்தரிப்பும் பாராட்டுக்குரியவை. சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் இரட்டை நடிப்பு இருந்தாலும், அமிதாப்பின் உறுதியும், அனல் பறக்கும் உணர்ச்சிகளும் திரையில் பாராட்டுக்குரியவை.

பிரபாஸின் பைரவாவில் பாகுபலியின் ஷிவுடு மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியரின் அயர்ன் மேனின் சாயல்கள் உள்ளன—சீரியற்ற, முழுக்க முழுக்க, காது கேளாதவன். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். AI வாகனமான புஜ்ஜியுடன் பிரபாஸின் நட்பு ரசிக்க வைக்கிறது. பிரபாஸுக்கும் திஷா பதானிக்கும் இடையேயான காதலை வலுக்கட்டாயமாகச் செய்ய முயற்சிக்கும் ஒரு திரைப்படத்தில், அவருக்கும் புஜ்ஜிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பிரியமானது.

தீபிகா படுகோனின் SUM-80, சுமதி, ஜவானில் அவரது கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. இங்கே, 2023 ஆம் ஆண்டு சிறையில் அவர் கர்ப்பமாக இருக்கும் படத்தில் நடித்ததைப் போலவே, காம்ப்ளெக்ஸின் செல்லில் கர்ப்பமாக இருக்கிறார். அவரது உரையாடல் குறைவாக இருந்தாலும், படுகோனின் வெளிப்படையான கண்கள் அவரது குணாதிசயத்தை நமக்கு உணர்த்த உதவுகின்றன. மனித ஆன்மாக்களை துன்புறுத்தும் சுப்ரீம் யாஸ்கினாக கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது திரை நேரம் குறைவாக இருந்தாலும், அவரது உயிரற்ற உடலும் கொடூரமான நோக்கங்களும் ஒரு நம்பிக்கைக்குரிய சித்தரிப்பை உருவாக்குகின்றன. கமாண்டர் மானஸாக சாஸ்வத சாட்டர்ஜியும் தனித்து நிற்கிறார். அவரது முகத்தில் புன்னகையுடன், அவர் இரக்கமற்ற செயல்களைச் செய்கிறார் மற்றும் கசப்பான வரிகளை வழங்குகிறார்.

KALKI 2898 AD - CAST AND CREW PRODUCTION - VYJAYANTHI FILMS PRODUCER – C ASWINI DUTT RELEASE – SRI LAKSHMI MOVIES – N.V PRASAD CAST PRABHAS as BHAIRAVA AMITABH BACHCHAN as ASHWATTHAMA KAMAL HAASAN as SUPREME YASKIN DEEPIKA PADUKONE as SUMATHI DISHA PATANI as ROXIE SHOBHANA as MARIAM PASUPATHY as VEERAN BRAHMANANDAM as RAJAN CREW DIRECTOR – NAG ASHWIN DOP – DJORDJE STOJILJKOVIC MUSIC – SANTHOSH NARAYANAN EDITOR – KOTAGIRI VENKATESWARA RAO BANNER - VYJAYANTHI FILMS PRODUCED BY – C ASWINI DUTT RELEASE – SRI LAKSHMI MOVIES – N.V PRASAD.
 

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

 மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே 'யூ ஆர் நெக்ஸ்ட்'.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு  சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்   பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.

முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,"இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது..இயக்குனர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

அடுத்ததாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி,”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை  பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, 'புல்லட்' சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள்  நடிக்கிறார்கள்.

பின்னர் பேசிய இயக்குனர் ஷரீஃப்,"யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்",என்றார்.

இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் 'இசை பேட்டை'வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், 'கலைமாமணி'ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.


நடிகர்கள் :-

கே.எஸ்.ரவிக்குமார்
ரச்சிதா மகாலட்சுமி
உதயா
ஜனனி
தினேஷ்
திவ்யா கிருஷ்ணன்
அர்ஷத்
கேபிஒய் வினோத்
ரஃபி
‘புல்லட்’சமி

படக்குழு :-

தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி
எழுத்து & இயக்கம் : ஷரீஃப்
ஒளிப்பதிவு : கே ஜி ரத்தீஷ்
படத்தொகுப்பு : அஜித்
இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த்
கலை : வேணு
சண்டைப் பயிற்சி : ஓம்பிரகாஷ்
நடனம் : 'கலைமாமணி' ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்
படங்கள் : சக்தி பிரியன்
விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்

Wednesday, June 26, 2024

கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !
*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். 
தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. 
இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியதாவது… 
'உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்தப்படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி' என்றார்.

நடிகர் சித்தார்த் பேசியதாவது… 
'21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2.  இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்' என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது...
'பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார். இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே  இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள்.  விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார். இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது...
'உயிரே உறவே வணக்கம்.  உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது. ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2  மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி. சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார்.  நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்' என்றார்.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2  எனவும் மற்றும்  தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும்  இப்படம் வெளியிடப்படுகிறது. 

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.  


இயக்குநர்: ஷங்கர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன் 
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ் 
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத் 
வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்
ஆக்‌ஷன் அன்பறிவ் - ரம்ஜான் புல்லட் - அன்ல் அரசு - பீட்டர் ஹெயின் - ஸ்டண்ட் சில்வா - தியாகராஜன்
VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்
நடன இயக்குனர் போஸ்கோ-சீசர் - பாபா பாஸ்கர்  
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன் 
மேக்கப் - வான்ஸ் ஹார்ட்வெல் - பட்டணம் ரஷீத் - ஏ.ஆர். அப்துல் ரசாக் 
ஆடை வடிவமைப்பு :  ராக்கி - கவின் மிகுல் - அமிர்த ராம் - எஸ் பி சதீசன் - பல்லவி சிங் - வி.சாய்
DI: ரெட்சில்லிஸ் 
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா 
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்
ஜி.கே.எம். தமிழ் குமரன் – மு. செண்பகமூர்த்தி
தயாரிப்பு: சுபாஸ்கரன்

Monday, June 24, 2024

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது - இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள்

*கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது - இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !!*

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது  கவனத்தையும் கவர்ந்துள்ளது.

முழு வீடியோ லிங் : https://youtu.be/z6cZSWF7dy4

படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.  வீடியோவில்  நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்காவிடம் “இது  இயக்குநர் நாகியின் ஐடியாவா, அல்லது உங்கள் ஐடியாவா ?  என்று கேட்டேன். அதற்கு தத் சகோதரிகள், "நாகி நம்மருகே இருக்கும் போது தனியாக யோசிக்க ஏதும் உள்ளதா என்ன? " என்று பதிலளித்தனர் என்றார்.


தீபிகா படுகோன் பிரபாஸை போனில் அழைத்ததை குறிப்பிட்டு, “கமல் சாருடன் எங்கள் முதல் நாள் படப்பிடிப்பை முடித்த, சிறந்த அனுபவத்தை கூறவே  அழைத்தேன்” என்று தெரிவித்தார். பிரபாஸ் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம் என்றார். படத்தின் கான்செப்ட் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “இந்தியா  வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது, இக்கதையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்களுடன், இப்படம் ஒரு இணையற்ற சினிமா அனுபவமாக இருக்கும்.

Bayamariya Brammai - திரைவிமர்சனம்


இது நிச்சயமாக உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு படம்.

96 பேரைக் கொன்ற கடந்த காலத்தைக் கொண்ட ஜெகதீஷ், சிறைக் கம்பிகளின் இருபுறமும் அமர்ந்தபடி எழுத்தாளர் கபிலனுடன் சிந்தனையைத் தூண்டும் உரையாடலில் ஈடுபடுகிறார். இந்த உரையாடல் ஜெகதீஷின் கடந்த காலத்தை ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்கிறது.

பலருக்கு, சிறந்த திரைப்படம் பார்க்கும் அனுபவம் மாறுபடும். சிலர் கிரெடிட்ஸ் ரோலுக்குப் பிறகு விவாதத்தையும் சிந்தனையையும் தூண்டும் திரைப்படங்களை ரசிக்கிறார்கள், மற்றவர்கள் நேரடியான கதைகளை விரும்புகிறார்கள். "பயமரியா பிரம்மா" முந்தையதை வழங்குகிறது, பார்வையாளர்களை அதிகம் சிந்திக்க வைக்கிறது. ராகுல் கபாலி இயக்கிய இந்தப் படம், பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு சிக்கலான கதையை வழங்குகிறது, ஆனால் துல்லியமாக இந்த சிக்கலானதுதான் இதை ஒரு கட்டாயப் பார்வையாக மாற்றுகிறது.

இப்படத்தில் பலம் மற்றும் சவாலான பல நிகழ்வுகள் உள்ளன. இது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு தேவையற்ற கவனத்தை ஈர்க்காமல் முன்னோக்கி நகர்கிறது, கதையை இயல்பாக வெளிவர அனுமதிக்கிறது. இந்த குறைத்து மதிப்பிடப்பட்ட அணுகுமுறை என்பது, ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு தனித்துவமான விளக்கத்துடன் விலகிச் செல்லலாம், இது திரைப்படத்தில் வழங்கப்பட்ட பலதரப்பட்ட முன்னோக்குகளைப் பிரதிபலிக்கிறது.

அதன் இதயத்தில், "பயமரியா பிரம்மா" இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: கபிலன், ஒரு எழுத்தாளர் மற்றும் ஜெகதீஷ், பல கொலைகளில் குற்றவாளி. அவர்களின் வாழ்க்கை வேறுபட்டதாகத் தெரிகிறது - கபிலன் தனது முதல் புத்தகத்தை 1987 இல் எழுதினார், அதே நேரத்தில் ஜெகதீஷ் தனது முதல் கொலையை 1978 இல் செய்தார். அவர்களின் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஜெகதீஷ் அவர்களின் வாழ்க்கைக்கு இடையே இணையை வரைந்து, அவரது கடந்த காலத்தை ஆராயவும், அவரது செயல்களுக்குப் பின்னால் உள்ள உந்துதல்களைப் புரிந்துகொள்ளவும் பார்வையாளர்களை அழைக்கிறார்.

படம் ஜெகதீஷின் வரலாற்றை ஆராயும் அதே வேளையில், இது பார்வையாளரின் கற்பனைக்கு நிறைய விட்டுச்செல்கிறது, மேலும் அதன் புதிரான முறையீட்டைச் சேர்க்கிறது. கதாப்பாத்திரங்களின் சிக்கலான தன்மை மற்றும் விவரிப்பு அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் இந்த சிக்கலான தன்மையே படத்துடன் இன்னும் ஆழமாக ஈடுபட பார்வையாளர்களை சவால் செய்கிறது.

"பயமரியா ப்ரம்மை" அதன் தனித்துவமான கதைசொல்லல் மற்றும் சுவாரஸ்யமான தொடுதல்களுக்காக தனித்து நிற்கிறது, அதாவது ஆண்ட்ரோஜினஸ் கதாபாத்திரத்தை உள்ளடக்கியது-ஒரு பெண் முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தை சித்தரிப்பது, கேட் பிளான்செட்டின் பாப் டிலானின் "நான் அங்கு இல்லை" என்ற சித்தரிப்பை நினைவூட்டுகிறது. ” இந்த புதுமையான அணுகுமுறை படத்தின் ஒட்டுமொத்த சிகிச்சையை பிரதிபலிக்கிறது, அங்கு புதிரான யோசனைகள் பெரிய கதையில் பிணைக்கப்பட்டுள்ளன.

படத்தின் வலுவான அம்சம் அதன் நடிப்பு. நடிகர்கள் ஆழமான நடிப்பை வழங்குகிறார்கள், தங்கள் பாத்திரங்களுக்கு ஆழத்தை கொண்டு வருகிறார்கள். கதையின் அமைப்பும் நீண்ட உரையாடல்களும் அனைவரையும் கவரவில்லை என்றாலும், அவை படத்தின் தனித்துவமான அழகைக் கூட்டுகின்றன.

முடிவில், “பயமரியா பிரம்மா” அனைவரையும் கவராமல் இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக ஆர்வத்தைத் தூண்டுகிறது மற்றும் அதன் தனித்துவமான கதை மற்றும் அழுத்தமான நடிப்பால் நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Cast:-JD, GURU SOMASUNTHARAM, HARISH UTHAMAN. , JOHN VIJAY. , SAI PIRIYANKA RUTH. , VISHVANTH., HARISH RAJU., JACK ROBBIN., VINOTH SAGAR, AK., DIVYA GANESH

Director:-RAHUL KABALI.


 

Sunday, June 23, 2024

Indo Cine Appreciation Foundation, Instituto Cervantes in New Delhi and Consulate of Spain in Chennai Presents: Spanish Film Festival at Avichi College of Arts & Science*

*Indo Cine Appreciation Foundation, Instituto Cervantes in New Delhi and Consulate of Spain in Chennai Presents: Spanish Film Festival at Avichi College of Arts & Science*

Chennai, June 23, 2024 – The Indo Cine Appreciation Foundation (ICAF) is delighted to announce a three-day Spanish Film Festival, taking place at the AVM Auditorium in Avichi College of Arts & Science, Virugambakkam, Chennai. The festival will be held on the 22nd, 23rd, and 24th of June 2024, commencing each day at 4:00 p.m.

The festival was inaugurated by Mr. Sivan Kannan, President of ICAF, in the presence of Mr. AVM. K. Shanmugam, General Secretary of ICAF. The evening's highlight was the presence of the esteemed cine actress, Ms. Namitha, who graced the event as the Chief Guest.

The festival kicked off with the screening of the critically acclaimed film "La Caja 507" (Box 507). Over the next two days, the audience will be treated to a selection of remarkable Spanish films, including:
• "Las 13 Rosas" (13 Roses)
• "7 vírgenes" (7 Virgins)
• "15 años y un día" (15 Years and One Day)
• "Caótica Ana" (Chaotic Ana) 

Please note that entry to the festival is restricted to individuals aged 18 years and above.

Join us for this celebration of Spanish cinema and culture, and immerse yourself in the rich storytelling and artistic brilliance that these films have to offer.

About ICAF:

The Indo Cine Appreciation Foundation is dedicated to promoting film culture in India through the organization of film festivals, screenings, and related events, fostering a love for diverse cinematic experiences.




-
Thanks
Nikil Murukan 
23.06.2024
Sunday

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

*கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024*

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று (22.06.2024 - சனிக்கிழமை) நடைபெற்றது.
விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி,  மிஷ்கின்  , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு.  வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 
மேலும் 53 கவிதைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிடப்பட்டது. நூலை இயக்குனர் மிஷ்கின் வெளியிட பேராசிரியை பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார்.
முதல் பரிசு கவிதையாக அம்சப்ரியா எழுதிய
தன் நிழலை
காடென நினைத்து
மெல்ல அசையும் கோவில் யானை
என்ற கவிதையும்,
இரண்டாவது பரிசுக்குரியதாக ஸ்ரீதர் பாரதி எழுதிய
பார்வையற்றவனின்
புல்லாங்குழலில்
ஒன்பது கண்கள்
கவிதையும்
மூன்றாவது பரிசுக்குரியதாக
காஞ்சி பாக்கியா எழுதிய
நீந்தியபடியே கீழிறங்குகிறது
பனிக்கட்டியின் மேல் விழுந்த
ஒற்றை எறும்பு
என்ற கவிதையும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் இருந்து ஹைக்கூ கவிஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Jugalbandhi Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan


Jugalbandhi Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan  

Chennai, June 21, 2024 – The prestigious Jugalbandhi Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan was held at Rani Seethai Hall, Anna Salai, Chennai on June 21st 2024. This grand event, organized by Koothambalam (Academy of Bharathanatyam & Mohiniyattam), featured a remarkable Jugalbandhi Rangapravesam in Bharathanatyam by Selvi. Aaraadhana Radhakrishnan, a disciple of Acharya Ms. Saathvika Aravindan, and Mohiniyattam by Smt. Malar Radhakrishnan, disciple of Guru Smt. Vasantha Aravindan.

Ms. Aaraadhana, aged 14, began her dance journey at six and has since participated in numerous events, showcasing her dedication to Bharathanatyam. Under the tutelage of Acharya Ms. Saathvika Aravindan, she has honed her skills and remains actively engaged in academic pursuits and extracurricular activities. Aaraadhana is also known for her IT skills, Carnatic music talents, and multifaceted interests in arts, sports, and crafts.

Mrs. Malar Radhakrishnan, aged 42, performed her Bharatanatyam Arangetram in 1995 and has been an IT professional while pursuing her passion for Carnatic music and Mohiniyattam. Trained under Guru Kalaimamani Ms. SV Usha, she has won accolades in various music and dance platforms, including the "Bhajan Samrat" title by Sankara TV in 2018. She has also presented film songs in popular program “QFR” under the guidance of Film Music Analyst Smt. Subhasree Thanikachalam.

The event was graced by esteemed chief guests, “Kalaimamani” Sri. Chitra Lakshmanan (Actor & Producer), Music Producer and Analyst Smt. Subhasree Thanikachalam (Founder & Curator, Maximum Media), and "Sarva Lakshana Natya Mayuri" and "Natya Ratnam" Smt. Smrithi Vishwanath (Disciple of Kalaimamani Smt. Anitha Guha, Chennai).

The Arangetram was a beautiful blend of tradition, culture, and talent, leaving a lasting impression on all attendees, friends and relatives. The story depiction of Mahishasuramardhini in Varnam by Malar and Depiction of Krishna’s mischiefs in Sabdham by Aaraadhana received special applause from audience. Malar’s “Thalaattu” in Mohiniyattam and Aaraadhana’s “Ananda Nadam” in Bharathanatyam were appreciated by Chief guests. “Krithi” and “Thillana” performed as Jugalbandhi by Malar and Aaraadhana was a visual treat for the audience to witness two beautiful dance forms at the same time on the stage.

    

Saturday, June 22, 2024

The Former captain of the Indian women's cricket team Sudha Shah Inspires at Unified Special Carnival 2024: Celebrating Inclusivity for Special Children

The Former captain of the Indian women's cricket team Sudha Shah Inspires at Unified Special Carnival 2024: Celebrating Inclusivity for Special Children

 The Madras West Round Table 10 (MWRT10) brought together over 1000 special children from across Chennai today at the ICF Indoor Stadium for the highly anticipated 'Unified Special Carnival 2024'. Started in  1996, this annual event, now in its 28th year, received a significant boost with the presence of Sudha Shah, former captain of the Indian women's cricket team, who graced the occasion with her inspiring presence.

Sudha Shah, known for her leadership both on and off the field, inaugurated the festivities amidst cheers and applause from attendees. Her involvement underscored the importance of inclusivity and empowerment, themes that resonate deeply with MWRT10's mission of 'Service Through Fellowship'. The ICF Indoor Stadium, chosen for its spaciousness and accessibility, provided an ideal venue for a day filled with carnival games, music, delicious food, and spirited football matches tailored for the children.

MWRT10, a prominent member of Round Table India, has dedicated decades to organizing Community service Projects, spreading Education via its long-term project 'Freedom Through Education' and its recently inaugurated Phase II of the Dialysis centre in Porur. 

These initiatives enrich the lives of special children, education deprived Children and people ailing with health conditions. The Unified Special Carnival has become a hallmark of their commitment to community service, offering a platform for social integration, creating memorable experiences for all

Speaking about Sudha Shah's role in the event, MWRT10 Chairman Tr. Vinoo expressed gratitude for her support in making USC 2024 a remarkable success. "Sudha Shah's presence has been truly inspiring for everyone involved. Her dedication to inclusivity and her passion for empowering young individuals have left an indelible mark on this carnival," they remarked.

While Tr. Akul, Vice Chairman highlighted the six months plus effort put in to organise this event, Secretary Akshay and event convener Tr. Varun and many other supporting hands such as Tr. Dushyant, Tr. Kunal and National Connect Convener Tr. Vikash Nahar show the determination of young men coming together for the betterment of the society.  

As the day unfolds at the ICF Indoor Stadium, the Unified Special Carnival 2024 continues to shine as a testament to Chennai's spirit of inclusivity and MWRT10's enduring commitment to making a positive impact in the community. Sudha Shah's involvement has added a special significance to the event, highlighting the transformative power of compassion and leadership in fostering a more inclusive society.

சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது.

சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது.

சென்னைஸ்  அமிர்தா கல்வி நிறுவனம் தனது 8th பட்டமளிப்பு விழாவினை சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் Radisson Blu வில் கொண்டாடியது. இவ்விழா மலேசிய OUM பல்கலைக்கழகத்தில் தொழில்சார் டிப்ளோமா மற்றும் நிர்வாக டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்ற 250 பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

சென்னைஸ் அமிர்தா கல்வி  நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் முன்னணியில் உள்ள OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் கூட்டு சேர்ந்து விருந்தோம்பல் கல்வியில் 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் வேலையில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ளது.  

OUM பல்கலைக்கழகத்தின் தலைவர், YBhg பேராசிரியர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங், செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் பட்டயப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு டிப்ளோமாக்களை வழங்கினார். அவர் தனது உரையில், எதிர்கால விருந்தோம்பல் தலைவர்களை வடிவமைப்பதில் கல்வியின் பங்கை வலியுறுத்தினார், சென்னைஸ் அமிர்தாவின் கல்விச் சிறப்பையும்  மற்றும் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டிற்காகப் நிறுவனத்தின் பங்கையும்  பாராட்டினார். மாணவர்கள் தங்கள் திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்துமாறு அவர் ஊக்குவித்தார்.

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு. ஆர்.பூமிநாதன், மாணவர்களை  வாழ்த்தி, "எங்கள் பட்டய படிப்பு முடித்த மாணவர்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் திறமைகளை வளர்ப்பதற்கும், விருந்தோம்பல் துறையில்  வருங்கால தலைவர்களை தயார்படுத்துவதற்கு சென்னைஸ் அமிர்தாவின் அர்ப்பணிப்பு என்றும் தொடரும் என்று கூறினார். நிறுவனத்தின் மதிப்புகளான புதுமை, இரக்கம் மற்றும் professionalism  ஆகியவற்றை நிலைநிறுத்த மாணவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் OUM பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்/துணை இணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் யோன் ரோஸ்லி டாட் திரு. முகமட் யசெட் பஹாமன், டைரக்டர் குரூப் ஆஃப் மார்க்கெட்டிங் OUM மலேசியா; திரு கலையரசன்,Chairman Future Dream Academy மலேசியா; திரு. ஜெய் நானக் சிங், CEO,Future Dream Academy மற்றும் சென்னையிஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் திரு. லியோ பிரசாத், தலைமை கல்வி இயக்குனர், டாக்டர் டி. மில்டன், டீன், மற்றும் பல்கலைக்கழக விவகாரத் தலைவர் திருமதி. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு 9393200600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

LAANDHAR - திரைவிமர்சனம்


 கோயம்புத்தூரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியான விதார்த், தனது மனைவியுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு இரவில் ஒரு போலீஸ்காரர் சாலையில் சந்தேகத்திற்கிடமான நபரைப் பார்க்கிறார்.

அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து காப்புப்பிரதிக்கு அழைப்பு விடுக்கிறார். அந்த மர்ம நபரை போலீசார் பிடிக்க முயன்றபோது, ​​அந்த நபர் அவர்களை தாக்கிவிட்டு தப்பியோடினார்.

அப்போது அந்த நபரை பிடிக்க விதார்த் முயன்றார். இதற்கிடையில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவது காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

யார் அந்த மர்ம மனிதன்? கொலைகளின் பின்னணி என்ன? லாந்தரின் முக்கியப் பகுதியான தொடர் கொலையாளியை விதார்த்தால் பிடிக்க முடிந்ததா?

சாஜிசலீம் இயக்கிய இந்தப் படம், போலீஸ்காரர்களுக்கும் தொடர் கொலையாளிக்கும் இடையே நடக்கும் பூனை மற்றும் எலி விளையாட்டு.

படத்தின் கதைக்களம் ஒன்றும் புதிதல்ல, திரைக்கதையும் பெரும்பாலும் தட்டையானது.

இருப்பினும், பார்வையாளர்களை ஆர்வமாக வைத்திருக்க போதுமான முக்கிய தருணங்கள் உள்ளன. சிறப்பாக எழுதினால் திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

விதார்த் வழக்கம் போல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், அவரது நடிப்பு படத்தின் சேமிப்பு கருணைகளில் ஒன்றாகும்.

சஹானா மஞ்சு நல்ல திரைவெளியைப் பகிர்ந்துள்ளார் மற்றும் அவரது பாத்திரத்தில் ஈர்க்கிறார்.

நகுல் மற்றும் ஸ்வேதா டோரத்தி முக்கிய வேடங்களில் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

பிரவீனின் பின்னணி இசை சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் ஞானசௌந்தரின் ஒளிப்பதிவினால் பாராட்டப்பட்டது.

படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் கவனிக்கத்தக்கவை.

'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு


 மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்!


'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான்   இசையமைத்திருக்கிறார். A.R மோகன்  கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல்  கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம்  தயாரித்திருக்கிறார்.  
 
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

Friday, June 21, 2024

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் "சூரியனும் சூரியகாந்தியும்"!

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் "சூரியனும் சூரியகாந்தியும்"!

இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்!

“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா. “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்”
-என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது...

விரைவில் திரையில் உதயமாகுகிறது "சூரியனும் சூரியகாந்தியும்"!

@GovindarajPro

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை  வெளியிட்டது !!  இந்தியாவ...