Friday, July 5, 2024

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்

*இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி"  திரைப்படம் !!*

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் "ககனச்சாரி". இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளது. 

"ககனச்சாரி"  சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்ட நிலையில், திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் சுரேஷ் கோபி. 

பிரபல முன்னணி மலையாள நடிகர் சுரேஷ்கோபி அவர்களின் மகன் கோகுல் சுரேஷ், ககனச்சாரி படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான களத்தில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், நேற்று சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ்கோபி, படக்குழுவினரைப் பாராட்டி , தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். 

கேரளாவில் இயற்கை பெருமளவு அழிந்து போன 2040 ஆம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் அடைக்கலமாகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், புதுமையான களத்தில் சொல்லியிருக்கும் இப்படம், திரைவிழாவில் திரையிடப்பட்டு   பெரும் வரவேற்பைப் பெற்றது.  தற்போது முன் திரையிடல்களில் விமர்சகர் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 

இத்திரைப்படம் கடந்த ஜூன் 21ஆம்  தேதி கேரளாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் இந்தியா முழுவதும்  வெளியிடுகிறது.

Thursday, July 4, 2024

சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!*

*'சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!*

தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட 'குபேரா', வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும்  எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார்.

இன்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில்  ராஷ்மிகா மந்தனாவின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியாகி  இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா ஒரு அசாதாரணமான, வித்தியாசமான அவதாரத்தில் காணப்படுகிறார், இது பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மூத்த நடிகர்களான தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் இடையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இந்த மகத்தான படைப்புக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இன்று(05/07/2024) அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியிடப்படும் முன்பே தயாரிப்பாளர்களால் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் தோற்றத்தின் ஒரு பார்வை, ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்து, வெறிச்சோடிய இடத்தில் ஒரு சூட்கேஸை பின்னால் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றம் அவரது கதாபாத்திரம் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. நேற்று, புதிதாக வெளியிடப்பட்ட முதல் தோற்றத்தின் ஒரு பார்வை முழுமையான தோற்றத்தைக் காண பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 'குபேராவில்' இருந்து நடிகர் தனுஷ் மற்றும் 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது, இது நாடு முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.

'குபேரா'வில் தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். 'குபேரா' ஒரு பான்-இந்தியா பன்மொழி படம் ஆகும். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.

இந்தியன் 2** 2024 வெளியீட்டின்

**இந்தியன் 2** 2024 வெளியீட்டின் 

**முதல் பரிசு**  
இந்தியன் 2 என்ற திரைப்படம், இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஷங்கரின் கைவண்ணத்தில் உருவாகும் இந்த திரைப்படம், கமல்ஹாசன் நடிப்பில் வரும் இரண்டாம் பாகமாகும். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இது இந்திய மக்களை பெரிதும் கவரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**தொடர்ச்சி**  
பழைய இந்தியன் படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த சினேகன் மற்றும் சேகர் பாஷ்கர் ஆகிய இரட்டை வேடங்களும் இந்த படத்தில் இடம் பெறுகின்றன. இதனால், கதை மேலும் ஆழமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரியோகிராபி, சண்டை காட்சிகள் மற்றும் சாங்ஸ் அனைத்தும் முந்தைய படத்தை விட உயர்ந்த தரத்தில் இருக்கும்.

**தொழில்நுட்பம் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ்**  
இயக்குநர் ஷங்கர் தொழில்நுட்பத்தை மிகுந்த முறையில் பயன்படுத்துவார் என நம்பப்படுகிறது. 3D தொழில்நுட்பம், உயர் தர விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அசத்தலான கேமரா தொழில்நுட்பம் மூலம், இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும். ஒளிப்பதிவு, இசை மற்றும் பின்னணி இசை அனைத்தும் சிறப்பாக அமையும்.

**நடிகர் குழு**  
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், மற்றும் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். இவர்களது நடிப்பும், கதை மாந்தர்களின் பாத்திரங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமையும். கமல்ஹாசனின் வெற்றிப்படங்களை கருத்தில் கொண்டு, இவரது நடிப்பில் சிறந்த தாக்கம் காணலாம்.

**வெளியீட்டு எதிர்பார்ப்பு**  
இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு தேதி 2024ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த திரைப்படம், அதன் முதல் பார்வை மற்றும் டீசரின் மூலமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாபெரும் வெற்றியை எட்டும் என நம்பப்படும் இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்திடும்.

Times Interact Awards 2024: Chennai's Amirta Group Chairman Mr. R. Bhoominathan Honoured with Trendsetters in Education Award 2024.*

*Times Interact Awards 2024: Chennai's Amirta Group Chairman Mr. R. Bhoominathan Honoured with Trendsetters in Education Award 2024.*

Chennais Amirta Group Chairman R.Bhoominathan was awarded the prestigious Trendsetters in Education Award at the Times Interact Awards ceremony organized by Times of India. 

The award was presented by Health and Family Welfare Minister Honorable MA. Subramanian, who served as the chief guest at the event held at Hilton Star Hotel in Guindy, Chennai. Minister Subramanian recognized 27 companies for their innovative contributions across various sectors.

Chennais Amirta Group, renowned for its significant accomplishments in the Hotel management and aviation industries, The institution is the pioneer in the field of Hotel management and the only hotel management institution to have provided more than 25000 students in jobs globally.

 Chennais Amita’s students achievement in the recently concluded IKA/Culinary Olympics 2024 held at Stuttgart, Germany is a proof for their quality of education and standards where the students secured three Gold medal in addition to other medals and this Gold medal is the first gold medal for India in the 124 years of culinary Olympics. 

Chennais Amirta provides its students the concept of “ Earn while you Learn “ whereby students are able to beat their financial challenges and also get Industrial experience during their course of studies.

Hon.Minister MA. Subramanian highlighted the importance of such accolades in encouraging humanitarian efforts. In his address, he underscored the initiatives of the Public Health Department, citing over 110 announcements in the Legislative Assembly annually, with detailed progress reports in the 'Action Report'.

Hon.Minister also addressed healthcare advancements in Tamil Nadu, noting the influx of patients from neighboring states seeking treatment. He announced plans to inaugurate two new children's health hospitals, one at the premises of Artist Centenary Multi speciality Hospital and another in Thanjavur. Additionally, the government has invested ₹14 crore in advanced equipment for brain tumor treatment and established artificial insemination centers.

The minister commended the state's achievements in healthcare and emphasized the provision of free services under People's Health Life.

நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான "ரவுது கா ராஸ்" இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!


நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான "ரவுது கா ராஸ்"  இப்போது ZEE5 தளத்தில்  ஸ்ட்ரீமாகிறது !! 

~ ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில்  மீண்டும் இணைந்துள்ளனர் ~
~ கடந்த ஆண்டு ZEE5 இல் வெளியான நவாசுதீன் சித்திக் நடித்த ஹத்தி திரைப்படத்திற்கு ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ~

இந்தியா,  02 ஜூலை 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது சமீபத்திய நேரடி-டிஜிட்டல் படமான ரவுது கா ராஸ் படத்தை வெளியிட்டுள்ளது. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில்,  ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த பரபரப்பான திரில்லர் படத்தில், போலீஸ் அதிகாரி தீபக் நேகியாக, பிரபல  நடிகர் நவாசுதீன் சித்திக் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். உத்தரகாண்டில் உள்ள ரௌது கி பெலி என்ற அழகிய கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில்  மீண்டும் இணைந்துள்ளனர் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொலையே நடந்திராத ஒரு கிராமத்தில், திடீரென பார்வையற்ற பள்ளியில் வார்டன் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.  SHO தீபக் நேகி (நவாசுதீன் சித்திக்) மற்றும் இன்ஸ்பெக்டர் டிம்ரி (ராஜேஷ் குமார்) உள்ளிட்ட அவரது குழு, இந்த மர்மமான கொலை விசாரணையில் இறங்குகின்றனர். இத்திரைப்படம் சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையின் தனித்துவமான கலவையைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. கடந்த ஆண்டு 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI)  பிரீமியரின் போது இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்நிலையில் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது.

இது குறித்து நவாசுதீன் சித்திக் பகிர்ந்துகொண்டதாவது, "நான் கிரைம் திரில்லர்கர்களின்  ரசிகன், எனவே, இந்தப் படம் ஒரு தனித்துவமான திருப்பத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பார்வையாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். உண்மையில் ரவுது கா ராஸை வேறுபடுத்துவது நகைச்சுவையான கதாபாத்திரங்களும் மற்றும் அசாத்தியமான திரைக்கதையும் தான்.   ஒரு கிராமத்தில் நிகழும் கொலையை, போலீஸ் எவ்வளவு சோம்பேறியாக  விசாரிக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது இப்படம். 190+ நாடுகளில் உள்ள ZEE5 இன் பார்வையாளர்களை இந்தப் படம் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்”
"ரவுது கா ராஸ்" படத்தை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டு ரசியுங்கள் !

சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது!

சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது!

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில்,  “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல  சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். 

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,  வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த, கேப்டன் மில்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. 

இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்திருந்தனர். 

கேப்டன் மில்லர், திரையரங்கு வெளியீட்டின் போதே, ரசிகர்கள் மற்றும்  விமர்சகர்கள் மத்தியில், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  அதனைத் தொடர்ந்து, ஓடிடியில் வெளியான இப்படம், உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் டாப் 10 தரவரிசையில்  இடம் பிடித்தது. மேலும் இது இந்தியா உட்பட 9 நாடுகளில் டாப் 10 படங்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.

Tuesday, July 2, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை  வெளியிட்டது !! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார்  ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது. 

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான "அமுதா கஃபே" என்ற பாரம்பரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே  திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறார்கள்.  

அடுத்ததாக யோகி பாபு தள்ளு வண்டியில் நடத்தும் ஒரு சிறிய சாலையோர உணவகமான 'அமுதா உணவகம்'. இங்குள்ள சட்னிக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த இரு உணவகங்களுக்கு இடையேயான போட்டியை மையப்படுத்தியே இந்த சீரிஸ் அமைந்துள்ளது.  

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து  நடிக்கிறார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Monday, July 1, 2024

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.


தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



# தென்னிந்திய நடிகர் சங்கம்

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்

*இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி"  திரைப்படம் !!* ...