Wednesday, June 18, 2025

அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா

*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!*

சென்னை,  இந்தியா- ஜூன் 18, 2025: ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். 


இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது" என்று நடிகர் மஹத் கூறினார். 

மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, "கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது" என்றார்.


இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் மஹத் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதையும் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். "நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம்  எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்” என்றார். 


*நடிகர் மஹத் ராகவேந்திரா பற்றி:*

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. அவர் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’மங்காத்தா’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் ’ஜில்லா’, ’டபுள் எக்ஸ்எல்’ மற்றும் ’பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களிலும் தனது நடிப்பு மூலம் முத்திரை பதித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் இறுதிப் போட்டியாளராகவும் வந்தார். தற்போது நடிகராக மட்டுமல்லாது பயிற்சி பெற்ற அத்லெட்டாகவும் மாறி இருக்கிறார்.

தொடர்பு:

Media Contact: D'one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: d.onechennai@gmail.com
Ph. No:  99418 87877

மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*

*'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

நடிகர் 'லொள்ளு சபா' சாமிநாதன் பேசுகையில், '' புதிய கலைஞர்களின் முயற்சியை ஊடகங்கள் பாராட்டின.  இதனால் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்தது.

இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார். 

படத்தில் நடித்த அனைத்து நடிகர் , நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. '' என்றார். 

இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், '' அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும்  நன்றி.  இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி. என்றார். 

நடிகர் விஷ்வா பேசுகையில், '' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.  

படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் . 

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், '' சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும் , ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. '' என்றார். 

இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி'' என்றார். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில்... இப்படத்திற்கு ஊடகங்களும் , ரசிகர்களும் கொடுத்த ஆதரவும் , வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி. 

'மெட்ராஸ் மேட்னி' நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..?  இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். 

சாதாரண கதையை அசாதாரணமான  திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது. 

படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. 

இயக்குநர் - இசையமைப்பாளர் - ஒளிப்பதிவாளர் - படத்தொகுப்பாளர் - என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன். 

இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான். '' என்றார். 

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், '' மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. 

தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.

அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம். 

புது தயாரிப்பு நிறுவனம் - புது இயக்குநர் - புது தொழில்நுட்பக் கலைஞர்கள் - சின்ன பட்ஜெட் படம் - நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன.‌ இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி  கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. 

இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.  படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு' நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் 'என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.  

தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த  உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி.

இந்தப் படம் வெளியான பிறகு, 'காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்' என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்'' என்றார். 

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ''  இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.  

இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். 

இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. 

நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 

கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். 

நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.  

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன்.  மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். 

ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Tuesday, June 17, 2025

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!*

*அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!*

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில்,  காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது. 

காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது. 

மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ்  திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். 

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, 'விடுதலை' சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில்,  ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக  இரட்டை இயக்குநர்கள்  எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். 

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர். 

கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மகாபலிபுரத்தில் உள்ள ராடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே, புத்துணர்வு நிரம்பிய மறு உருவாக்கம் செய்யப்பட்ட கடற்கரை சமையல் உணவகம் WHARF 2.0. வை திறந்தது.


 மகாபலிபுரத்தில் உள்ள ராடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே, புத்துணர்வு நிரம்பிய மறு உருவாக்கம் செய்யப்பட்ட கடற்கரை சமையல் உணவகம்  WHARF 2.0. வை திறந்தது.


ராடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே இன்றைய கடலோர எபிக்யூரியனுக்காக அதாவது சுவை நாடுபவர்களுக்கான WHARF 2.0 எனும் மறுவடிவமைக்கப்பட்ட பிரத்யேக கடற்கரை உணவுவிடுதியை தொடங்குவதாக  அறிவிக்கிறது. 

வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள WHARF 2.0 ஒரு உணவகத்தை விட மேலான உணர்வைத் தரக்கூடியது. இது உலகளாவிய சர்ஃப் கலாச்சாரத்திற்கு ஒரு சுதந்திரமான மரியாதையை வழங்குகிறது.  உலகின் மிகவும் புகழ்பெற்ற சர்ஃப் தளங்களான, ஹவாய், போண்டி, கலிபோர்னியா, கோவளம் மற்றும் பாலி ஆகிய இடங்களிலிருந்து உத்வேகம் பெற்று, புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட வார்ஃப் 2.0 கடல் சாகசத்தின் சிலிர்ப்பை சுவையான மற்றும் புதுமையான உணவு மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையுடன் இணைக்கிறது. 

வார்ஃப் 2.0 இன் மறுதொடக்கம் ஒரு மறக்க முடியாத கடற்கரையோர முழு நிலவு ஓட்ட விருந்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு சர்ஃப் கலாச்சாரத்தின் உணர்வை உயிர்ப்பித்தது.தங்கத்துகள்கள் போன்ற மணற்பரப்பின் பின்னணியில், இதமான நிலவொளியில் உயிரோட்டம் நிறைந்த சர்ஃப்  ஃபேஷன் ஷோ,  பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.  

DJ சாண்டனாவின் துடிப்பான இசைக்கோர்வையில் கடற்கரை  ஆடைகளுடன் ஃபேஷன் ஷோ நடைபெற்றது புதிய அனுபவத்தை பகிர்ந்தது. அதே நேரத்தில் விருந்தினர்கள் வார்ஃப் மெனுவிலிருந்து  சுவையான உணவுகள் மற்றும் பானங்களின் உன்னத சுவையை அனுபவித்தனர்.

ஹவாய், போண்டி, கலிபோர்னியா, கோவளம் மற்றும் பாலி ஆகிய சர்ஃப் இடங்களின் சமையல் திறமையைக் குறிக்கும் ஐந்து நேரடி கவுண்டர்கள்   உலகளாவிய சுவையை சேர்த்தன. ஃபயர் க்ரில்ட் கடல் உணவுகள் மற்றும் ஸ்மோக்கி தந்தூரி வகைகள் முதல் புதிய சாலடுகள், உலகளாவிய உணவு வகைகள் மற்றும் மகிழ்ச்சியான இனிப்புகள் வரை மெனுவில் இடம்பிடித்து,  கடலோர இன்பத்தின்  காட்சிப் பொருளாக அமைந்தது.  மேலும் பானங்களின்  பட்டியலில், காக்டெய்ல்கள், சிறந்த ஒயின்கள், கிராஃப்ட் பியர்கள் மற்றும் புதிய  மற்றும் பருவகால பழங்களால் நிரப்பப்பட்ட கைவினைஞர்களின் மாக்டெய்ல்கள் ஆகியவை இடம்பெற்று உறுதியான மற்றும் மகிழ்வுக்கான இடமாக WHARF 2.0 வை உறுதி செய்தது.  ஒவ்வொரு முறை உண்ணும்போது மற்றும் பருகும்போது  கரையின் தாளத்தையும் கடலின் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் வகையில் WHARF 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடற்காற்றை அனுபவித்துவாறு  கடலின் ஆன்மாவுடன் உரையாடி, மணற்பரப்பில் வெறுங்கால்களோடு நடைபோடும் அனுபவத்தை நினைத்தாலே மனம் பூரிக்கும். அந்த அனுபவத்தை  வார்ஃப் 2.0 இல் உள்ள ஒவ்வொரு உணவும்  எதிரொலிக்கிறது-ஃபயர் க்ரில்ட் கடல் உணவு, கடல் உணவுகளின் புதிய சுவை  ஆகியவற்றின் கொண்டாட்டம் ஆச்சரியத்தையும்  மகிழ்ச்சியையும் அதிகரிக்க வல்லது.  

ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்ரம் கோட்டா, "WHARF 2.0 மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், கடல் உணவுகளின் சிறந்த விருந்தோம்பலின் ஆன்மாவை சந்திக்கும் ஒரு இடத்தை நாங்கள் மீண்டும் அறிமுகப்படுத்துகிறோம். இது ஒரு உணவகம் மட்டுமல்ல-இது விருந்தினர்களை கரை, சுவை மற்றும் சாகசத்தின் சிலிர்ப்புடன் மீண்டும் இணைக்க அழைக்கும் ஒரு அனுபவமாகும். மகிழ்வான தருணங்களுக்கு வரவேற்கிறோம் என்று  கூறினார். 

நீங்கள் ஒரு கடலோர நடைப்பயணத்திலிருந்து திரும்பி வருகிறீர்களோ அல்லது நட்சத்திரங்களின் கீழ் ஒரு மாலைக்கு வருகிறீர்களோ, WHARF 2.0,  கடல் மட்டுமே சொல்லக்கூடிய கதைகளைக் கண்டறிய உங்கள் ஆழ்மனதில்  அழைத்துச் செல்கிறது. 

ரேடிசன் ப்ளூ ரிசார்ட், டெம்பிள் பே மாமல்லபுரம்,ஆடம்பரமும் பாரம்பரியமும் ஒன்றிணைந்த ஒரு கடலோர சிறப்பு இன்பத் தளம். இங்கிருந்து  வங்காள விரிகுடாவின் காட்சிகளைக் கண்டு லயிக்கலாம். மேலும் ரிசார்ட்டில் ஸ்பா, உடற்பயிற்சி மையம் மற்றும் ஏராளமான நீச்சல் குளம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.  ரிசார்ட்டில் ஒன்பது சந்திப்பு அறைகள் மற்றும் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய தூண் இல்லாத பால்ரூம் உள்ளது. நீங்கள் ஒரு அழகான  அல்லது ஒரு குறிப்பிடத்தக்க  நிகழ்வை நாடினால்,  இது ஒரு வசதியான தங்குதலுக்காக பரந்த அளவிலான சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.

SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!


 SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!

Ballpark Padel Club-க்காக Ceri Digital நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்!

திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!

இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது.

டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,

நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2 புகழ் ரினி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு அதன் பின்னர், 16 வீரர்கள் நான்கு அணிகளாக (A, B, C, D) பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்களின் வரிசை A vs B, C vs D, A vs C, B vs D, A vs D, B vs C என ஆட்டங்கள் நடைபெற்றன. இவையுடன், முன்னேறிய நான்கு அணிகள் இடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இறுதியாக வெற்றி பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

நிகழ்ச்சியின் இடையே பிரபலங்களின் உரைகள், ரசிகர்களுக்கான கேம்கள், புகைப்பட தருணங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. குறிப்பாக, Celebrity vs Celebrity Doubles போட்டி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சி இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு Best Team, MVP (Most Valuable Player), மற்றும் Fan Favorite Celebrity ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த சண்டே ஸ்மாஷ் லீக், சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் திருவிழாவாகும் வகையில் சிறப்பாக நடைபெற்றது

'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா


 'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - இயக்குநர் பூரி ஜெகன்நாத்-  சார்மி கவுர் - பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார். 

அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் - தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது 'தென்னிந்திய சினிமாவின் வசீகரம் 'என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா - இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது. 

பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும். 

நடிகர்கள் : 

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார். 

தொழில்நுட்பக் குழு : 

எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத் 

தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் - சார்மி கவுர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

தலைமை நிர்வாக அதிகாரி : விஷூ ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடி

ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!


 ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார். 

இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது. 

ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன்.  பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார். 

கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான  ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். 

தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான  ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார். 

கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்”.

ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. 

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பானிஜே ஆசியா பற்றி:

பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகா-ஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.

தொடர்பு:

Media Contact: D'one

Point of contact : Abdul.A.Nassar

Email ID: d.onechennai@gmail.com

Ph. No:  99418 87877

தமிழோடு விளையாடு சீசன் 2 – மாபெரும்இறுதிப்போட்டி

தமிழோடு விளையாடு சீசன் 2 – மாபெரும்இறுதிப்போட்டி
 
கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகஒளிபரப்பாகி வரும் "தமிழோடு விளையாடு" இரண்டாவதுசீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுஅசத்தி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிஅத்தியாயத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது, தமிழோடு விளையாடு 2 பட்டத்தை வெல்லும் நோக்கில் 6 பள்ளிகள் கடுமையாக போட்டி போடுகின்றன. நிகழ்ச்சியின்பிரம்மாண்ட இறுதிச்சுற்று வருகிற ஞாயிறு மாலை 6 மணிமுதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் ஒளிபரப்பாகஇருக்கிறது.
 
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Monday, June 16, 2025

மக்களின் கவனத்தை ஈர்த்த த்ரில்லர் திரைப்படம் லெவன் இந்த வாரம் உங்கள் Tentkotta-வில்!!!

மக்களின் கவனத்தை ஈர்த்த த்ரில்லர் திரைப்படம் லெவன் இந்த வாரம் உங்கள் Tentkotta-வில்!!!

நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ திரைப்படம்,  புலனாய்வு திரில்லர் திரைப்படம், ஜூன் 13 முதல் Tentkotta OTT இல் வெளியாக உள்ளது.

இயக்குனர் சுந்தர் சி -யின் உதவி இயக்குனர் லோக்கேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்த, Leven திரைப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்' படத்தின் கதை!

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து 
பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன்  பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத Climax காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத  திரைப்படம் Leven. பல விமர்சகர்களால் பாராட்டப்பட்ட Leven Tentkotta OTT அறிவிப்பு தேதி வெளிவந்ததிலிருந்து, Thriller ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 13 முதல் Tentkotta இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் Eleven இன் பரபரப்பான திரை அனுபவத்திற்கு தயாராகுங்கள்

அறிவு திருக்கோயில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் தமிழக செய்தித்த்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேச்சு*

*“அறிவு திருக்கோயில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் தமிழக செய்தித்த்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேச்சு* 
*“மனவளக்கலை பயிற்சி சிறப்பாக வாழும் முறைய சொல்லித் தருகிறது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ்* 

*“மன அழுத்தத்தில் இருந்து என்னை மீட்டது மனவளக்கலை பயிற்சி தான்” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் மனம் திறந்த இயக்குனர் எழில்* 

*“வேதாத்திரி மகரிஷியை என்று கைப்பிடித்தேனோ அப்போது முதல் என் வாழ்க்கையில் துன்பம் போய்விட்டது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் இயக்குநர் கதிர் பளிச் பேச்சு* 

*“இன்று நான் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் மகிழ்ச்சி ரகசியம் பகிர்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்*

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ. திரு. SKM.மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கும் படம் ‘ஆனந்த வாழ்க்கை’.. 

இத்திரைப்படத்தில், கே..பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.
 
இத்திரைப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE  FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் "பாஞ்சாலி" என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
 
கேங்கர்ஸ் மற்றும் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த சத்யா.C . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி.CEO.திரு.P. முருகானந்தம் கவனிக்கிறார். 

ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் கே.பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .
 
அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப்  பயிற்சிகளை கற்று,  அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாண்புமிகு தமிழக செய்தித் துறை அமைச்சர் மு,பெ.சாமிநாதன், உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம் மயிலானந்தம், துணைத் தலைவர்கள் சின்னசாமி, கே.ஆர் நாகராஜன், இயக்குனர்கள் எஸ்.பி முத்துராமன், கே பாக்யராஜ், சமுத்திரக்கனி, கதிர், எழில் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 
 
இந்த நிகழ்வில்,

*மாண்புமிகு தமிழக செய்தித்த்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேசும்போது,* 

“வணிக ரீதியில் இல்லாமல் சமூகத்திற்கான ஒரு படைப்பாக இந்த ‘ஆனந்த வாழ்க்கை’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி. எதிர்காலத்திலே உலகம் அமைதியாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் மனிதனும் நலமோடு வாழ வேண்டும் என்கிற நோக்கத்திலே இந்த படம் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு முன் நான் அமைச்சராக இருந்த பொழுது ஒரு முறை அணைகளை ஆய்வு செய்வதற்காக நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனுடன் சென்றபோது அறிவு திருக்கோயிலில் தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக அங்கே சென்றேன். வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு அது. அப்போது வேதாத்திரி மகரிஷி முக்தி அடைந்திருந்த சூழ்நிலை. அந்த நிலையில் அதிகாலையில் அங்கே வேதாந்தர மகரிஷிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சிறிய யோகா பயிற்சி ஒன்றை செய்த போது எனக்கு சுகர் இருப்பதாக கண்டுபிடித்துக் கூறி சிகிச்சை எடுக்க வலியுறுத்தினார் உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம் மயிலானந்தம். 

அந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நீண்ட தூர பயணங்கள் நான் மேற்கொண்டு வந்ததால் இப்படி களைப்பு ஏற்பட்டதால் வந்த உடல் சோர்வு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் அதன்பிறகு தான் அது நீரிழிவு நோய் என தெரிய வந்தது. சென்னை வந்து பரிசோதித்த போது அது அதிக அளவில் இருந்தது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அன்று அவர் சொன்னதை நான் கவனிக்கவில்லை என்றால் அது வேறு விதமாக கூட மாறி இருக்கலாம். அந்த வகையில் அறிவு திருக்கோயில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக மக்களுக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் அன்று திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதினார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலமாக தன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். அந்த வகையில் இந்த படம் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் செல்ல வேண்டும். மற்ற மொழிகளிலும் கூட இந்த படத்தை மொழிபெயர்த்து வெளியிட வேண்டிய சூழல் ஏற்படும் என்று நிச்சயமாக நான் கூறுகிறேன். கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் கூட இந்த படம் செல்லும் என நம்புகிறேன்” என்று கூறினார்

*இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,*

“சொர்க்கம், நரகம் இரண்டும் இங்கே நம்மிடையே தான் இருக்கிறது. இரண்டிற்கும் வாசல் ஒன்றுதான். அது நம் வாய்தான். அதிலிருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துதான் சொர்க்கம், நரகம் இருக்கிறது. அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சி என்பது அடுத்தவர்களுக்கு, உதவி செய்து வாழாவிட்டாலும் கூட தனக்கான வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறைய சொல்லித் தருகிறது. மனவளக்கலையை கற்றுக் கொண்டால் நம் உடல் சுத்தமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். நாம் சீராகி விட்டாலே நம்மை சுற்றி இருப்பவர்களையும் சீர்படுத்த முடியும்.

இந்த படத்தில் நடிக்க இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது, முதலில் மனவளக்கலை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, பிறகு நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். அதன் பிறகு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கும் என் மனைவி பூர்ணிமாவிற்கும் சில நாட்கள் இதற்கான பயிற்சியை அளித்தனர். அதை ஓரளவாவது கற்றுக் கொண்ட பின் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்தப்படத்தின் மூலம் ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்களின் அன்பர்களே சினிமாவிற்கு வந்து எங்களை போல நடிகர்களாகி விட்டார்கள் என்பதே எங்களுக்கு சந்தோஷம் தான். 

இதன் பயன் எல்லா இடத்திற்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த படத்தை அவர்கள் எடுத்ததன் நோக்கமாக இருந்தது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கிராமத்தை தத்து எடு’க்கிறார்களோ இல்லையோ, தங்களை சுற்றி உள்ளவர்களில் ஒரு சிலரையாவது ஒருவருக்கொருவர் கவனித்துக் கொண்டால் அதுவே ஒரு நல்ல மாற்றம் தான். இந்த படம் பார்க்கும்போது அந்த உணர்வு நிச்சயம் ஏற்படும். உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து மனிதர்களும் இந்த படத்தை பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு பயன் கிடைக்கும். இந்த வகையில் இந்த மனவளக்கலை பயிற்சியின் நன்மைகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்” என்று கூறினார்.

*இயக்குநர் எழில் பேசும்போது,*

“எனக்கும் ஆழியாறு மனவளக்கலை பயிற்சிக்கு சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இயக்குநர் இந்த படத்தில் சொந்த வந்த விஷயத்தை அடித்தட்டு மக்கள் வரை சென்று சேரும் விதமாக மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். 2011 காலகட்டத்தில் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தேன். மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கும். அப்போது ஒரு நாள் ரங்கதுரை சுவாமியை சந்தித்தபோது இது பற்றி கூறினேன்.. அவர் என்னை அடையாறில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு அழைத்துச் சென்று ஒரு வார பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். அங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த ஒரு வார பயிற்சி வகுப்பில் எனக்கு மன அமைதி கிடைக்க ஆரம்பித்தது. அப்போதிருந்து மெடிடேசனை தொடர்ந்து செய்து வருகிறேன். சில நேரங்களில் நம்மை அறியாமல் ஏற்படும் சிறு கோபம் கூட நமது வளர்ச்சி, குணாதிசயங்களை கெடுத்து விடும். அதை இந்த பயிற்சி கட்டுப்படுத்துகிறது. அப்படி 2011ல் இந்த மனவளக்கலை மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் 2012ல் மனங்கொத்தி பறவை படத்தை துவக்கினேன். என்னுடைய வளர்ச்சிக்கு அது ரொம்பவே உதவிகரமாக இருந்தது. இது ஒரு அற்புதமான விஷயம். எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்” என்று கூறினார்.

*இயக்குநர் கதிர் பேசும்போது,*

வேதாத்திரி மகரிஷி சொல்லிய முக்கியமான ஒன்று வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பது வேண்டும். அந்த வகையில் இங்கே அமர்ந்திருக்கும் இயக்குநர் பாக்கியராஜ் எனது திரையுலக பயணத்தில் அடித்தளம் போட்டு கொடுத்தவர். எனது மானசீக குரு. அவருக்கு என் நன்றி. கவிஞர் வாலி என்னிடம் சொல்வார் நான் எப்போது எம்.எஸ் விஸ்வநாதனை சந்தித்தேனோ அப்போதே என் வாழ்க்கையில் வறுமை காணாமல் போனது என்பார். அதேபோல நான் வேதாத்திரி மகரிஷியை என்று கைப்பிடித்தேனோ அப்போது முதல் என் வாழ்க்கையில் துன்பம் போய்விட்டது.

நல்ல படங்களை இயக்கி பணமும் புகழும் சம்பாதித்தாலும் ஒரு கட்டத்தில், படங்களை தயாரித்து வெளியிட்டு நஷ்டத்தை சந்தித்தேன். அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் தானாகவே தேடி வந்தது. அந்த சமயத்தில் நடிகர் ராஜேஷை சந்திக்க சென்ற சமயத்தில்தான் வேதாத்திரி மகரிஷியின் மனவள கலை பயிற்சி பற்றி தெரியவந்தது. அதன் பிறகு முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என் மனைவிக்கும் அதை கற்றுக் கொடுத்தேன். சமீபத்தில் தான் ஆழியாறு சென்று பிரம்ம ஞானம் கற்று  முடித்தேன். முன்பு எல்லாம் துன்பம் என்றால் அதை எதிர் கொள்ள முடியாமல் தவித்தேன். இப்போது துன்பம் என்றாலே வேதாத்திரி மகரிஷியின் முகம் நினைவில் வந்து விடுகிறது. அது ஒரு எண்ணம் தானே என தெளிவாக கடந்து செல்ல முடிகிறது. உன்னை அறியாத வரை உண்மையான சந்தோசத்தை உன்னால் உணர முடியாது, உண்மையான சந்தோசம் என்ன என்பது நீ யார் என்பதை தெரிந்து கொள்வது தான் என வேதாத்திரி மகரிஷி கூறியதை நான் உணர்ந்து கொண்டேன். இந்த எண்ணம் தான் ஒருவனுடைய வாழ்க்கையை சீரமைக்கும் என்று மனவளக்கலையை ஒரு படிப்பு பயிற்சியாக கொடுத்து சமுதாயத்திற்கு அவர் கொடுத்திருக்கிற சேவையை, வெகு மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இப்படி ஒரு அற்புதமான படத்தை சுப்பிரமணிய பாரதி இயக்கியுள்ளார்” என்று கூறினார்.

*இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது,*

“இந்த மாதிரி ஒரு படத்திற்குள் இருப்பதற்கு ஏதோ ஒரு அருள் கிடைக்க வேண்டும். இந்த படத்தில் நடித்து இருப்பவர்களுக்கு அது கிடைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் பொள்ளாச்சி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென ஒரு நாள் ஆழியாறுக்கு வர சொன்னார்கள். அப்போது மகரிஷி அய்யாவின் வாழ்க்கையை படமாக பண்ண வேண்டும் என சொன்னார்கள். அவருடைய வாழ்க்கை வரலாற்றை முழுவதும் படிக்க வேண்டும் என்று சொல்லி படித்தேன். மிக பிரமிப்பாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அனேகமாக அதையும் சுப்பிரமணிய பாரதி தான் இயக்குவார் என நினைக்கிறேன்.

பொதுவாக நான் ஒரே சமயத்தில் நான்கைந்து வேலைகளை பார்ப்பேன்.. எல்லாமே சரியாக நடக்கும். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே போல அப்படி பார்க்கும் போது எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. ஒரே குழப்பமாக இருந்தது. அப்போதுதான் எடிட்டர் லெனினை சந்தித்தபோது அவர்தான் இந்த மனவளக்கலை வகுப்பில் சேர்த்துவிட்டார். ஏழு நாள் பயிற்சியில் அவரும் என்னுடன் இருந்தார். அதன் பிறகு பிரச்சனைகள் நீங்கி பழையபடி மாறினேன். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்புகள் வந்த போது கூட வேறு எங்கோ இருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் என்னை இங்கே அழைத்து வந்துவிட்டது.

இந்த மணவளக்கலை பற்றி எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் கொண்டு செல்ல தேவையில்லை. அதுவே தானாக எல்லாவற்றையும் இழுத்துக்கொள்ளும். அதற்கு தகுதியானவர்கள் தானாக வந்து சேர்ந்து விடுவார்கள். அவ்வளவு பெரிய சக்தி அது. நாமாக எல்லாம் தூக்கிக்கொண்டு நடக்க முடியாது. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு விஷயம் செய்திருக்கிறோம். இந்த சமுதாயத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் இது ஒரு அருட்கொடையாக இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன். நீ நல்லது செய்ய வேண்டாம், நல்லது செய்ய வேண்டும் என நினை அது போதும் அதுவே நம்மை சரியாக்கும் என்று என் குருநாதர் சொல்வார். காசு, பணம் யாரையும் காப்பாற்றாது. இது போன்ற ஒரு சக்தி தான் காப்பாற்றும். இதை இறுக்கி பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

*இயக்குநர் எஸ்.பி முத்துராமன் பேசும்போது,*

“நான் 30 வருடங்களுக்கு வேதாத்திரி மகரிஷி அய்யாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அனுமிஷம் என்கிற நாடகத்தை எழுதி இருக்கிறேன் இதை நாடகமாக நடத்த முடியுமா என்று கேட்டார். சென்னைக்கு வந்து நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நாடகக் குழுவுடன் இணைந்து மகரிஷி ஐயாவின் பிறந்த நாள் அன்று ஆழியாறிலே அவர் முன்னாலேயே அதை நாடகமாக நடத்தினோம்.. என்னுடைய பிறந்தநாளின் பெரும்பகுதி நான் ஆழியாறில் தான் இருப்பேன்.. அப்படி இல்லை என்றால் திருவொற்றியூரில் இருப்பேன்.

ஒருமுறை என்னை அப்படி ரஜினிகாந்த் தேடி சந்திக்க வந்து விட்டார். அப்போது அவர் என்னிடம் பேசும்போது இங்கே ஒரு அலை வீசுகிறது. நான் இங்கு உங்களை பார்க்க வந்தேன். ஆனால் அவரை (வேதாத்திரி மகரிஷி) பார்த்தபோது என் மனதில் உள்ள குழப்பம் எல்லாம் நீங்கியது என்று சொன்னார். அவரை ஆழியாறுக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் மனைவி லதா வந்து விட்டார். தானும் வருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார். நிச்சயமாக அவரையும் ஒரு நாளைக்கு அங்கே அழைத்து வருவேன்.

பாக்யராஜை பொருத்தவரை காமெடியாக நடிப்பார். ஆனால் இந்த படத்தில் அய்யாவின் மறு உருவமாக தத்துவத்தை பேசியிருக்கிறார். நான் வேதாந்த மகரிஷிஅய்யாவை பற்றி சினிமா எடுக்க ஆசைப்பட்டேன். சிவாஜியை வைத்து மூன்று படம், உலகநாயகன் கமலை வைத்து 10 படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து 25 படங்களை இயக்கி இருக்கிறேன். மகரிஷி அய்யாவை பற்றி படம் இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இந்த சுப்பிரமணிய பாரதி ஜெயித்து விட்டார்.. வேறு யார் மீதும் நான் பொறாமைப்பட மாட்டேன். ஆனால் இப்போது இவர் மீது பொறாமைப்படுகிறேன். 

இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இன்று நான் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..உடற்பயிற்சி, உணவு பயிற்சி, மனவளக்கலை பயிற்,சி தியானம் இந்த நான்கையும் செய்தால் அய்யா சொன்ன அத்தனையும் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும். சினிமா என்கிற என் லட்சிய கனவு நிறைவேறியது. ஆனால் குடும்பம் என்கிற என் வாழ்க்கை கனவு சரியாக நிறைவேறவில்லை. மனைவி, குழந்தைகளை சரியாக கவனித்ததில்லை. ஆனால் என் மனைவி, என் குடும்பத்தை அழகாக கவனித்துக் கொண்டார். அய்யாவின் அமைப்பில் தான் மனைவிக்கு நன்றி சொல்வதற்கான ஒரு விழா நடத்துவதை பார்க்க முடியும். நானும் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். 

பாண்டியன் படப்பிடிப்பில் இருந்தபோது என் மனைவி மாரடைப்பால் இறந்து விட்டார் என தகவல் வந்தது. அவர் தானாக இறக்கவில்லை. என்னுடைய வேலைப்பளுவையும் அவர் மீது சுமத்தி நான்தான் அவரை சென்று விட்டேனோ என்கிற குற்ற உணர்ச்சி மனதில் இருந்தது. அந்த சமயத்தில் தான் என் பிள்ளைகள் பொள்ளாச்சி ஆழியாறு பகுதிக்கு சென்று வாருங்கள், மன அமைதி கிடைக்கும் என்றார்கள். அப்போதுதான் அங்கே அறிவு திருக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு வேதாத்திரி மகரிஷி பற்றி கேள்விப்படும் வாய்ப்பு கிடைத்தது. மகரிஷி அய்யாவின் கையாலேயே பயிற்சி பெற்று பாடம் கற்று அவரே எனக்கு குருவாக அமைந்த பாக்கியமும் கிடைத்தது” என்று கூறினார்.

*இசையமைப்பாளர் சி சத்யா பேசும்போது,* 

2009ல் தான் நான் மனவளக்கலை பயிற்சி வகுப்புக்கு சென்றேன். அதற்கு முன்னதாக நிறைய மன போராட்டங்கள் இருந்தது. அப்போது சீரியல்களில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சில படங்களுக்கு ஒப்பந்தம் ஆனேன். ஆனால் எதுவுமே முன்னோக்கி நகராமல் நின்று விடும். பெரிய குழப்பமாக இருக்கும். அப்போது வடலூர் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் நீங்கள் அறிவு திருக்கோயில் சென்று வந்தால் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் விடை கிடைக்கும், ஒரு தெளிவு கிடைக்கும் என்று கூறினார்.. 

அப்போது இசையமைப்பாளர் சிற்பியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தேன். அவரிடம் இது பற்றி சொல்லும்போது நாம் இருவருமே சென்று வரலாம் என்று கூற ஆழியாறு சென்று வந்தோம். பல்வேறு விதமாக பயிற்சிகள் கிடைத்தன. அந்த அனுபவங்களுடன் மெடிடேஷன், உடற்பயிற்சி எல்லாம் செய்யும்போது ஒரு தெளிவு கிடைத்தது. அந்த ஒரு மாதத்திலேயே என்னும் பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது. அதன் பிறகு தெளிவு கிடைத்தது. அப்படி தெளிவான நிலையில் இருக்கும்போது எனக்கு தானாகவே வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பிறகு தான் எனக்கு எங்கேயும் எப்போதும் என்கிற படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது என்னுடைய நட்பில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர்களையும் கூட அங்கே அழைத்துச் சென்றேன். வேதாத்திரி மகரிஷி ஐயாவை பற்றி நிறைய பாடல்கள் பண்ணியிருக்கிறேன். அதெல்லாம் எனக்கு மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அவருடைய கொள்கைகள் ஒரு படமாக, என்னுடைய இசையில் வருகிறது என்பதை இன்னும் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

*நடிகர் ஜீவா தங்கவேலு பேசும்போது,*

“2003ல் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியிடம் நேரடியாக பிரம்மஞானம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதை இப்போதுதான் முதல் தடவையாக ஒரு மேடையில் சொல்கிறேன். அதற்கான சரியான மேடை இதுதான் என்று நினைக்கிறேன். திரையுலகில் இருக்கும் பல மேதைகளும் இதை பின்பற்றுகிறார்கள் என்பதை இந்த மேடையில் பார்க்கும் போது தான் தெரிகிறது. ஆனால் யாருமே இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு விஷயம் லேட்டாக மக்களிடம் சென்று சேருகிறது என்றால் அதில் உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.

இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயங்களை போல எப்படி வேதாத்திரி மகரிஷியை, அவரது கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்தோம் என்றும் தங்களது வாழ்க்கை மாறியது என்பதையும் எல்லோரும் தங்களது அனுபவங்களாக கூறினார்கள். எனக்குள்ளே இந்த தியானம் பண்ண வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பாபா படம் ரிலீஸ் ஆன சமயம் அவர் பாபாவை தேடி செல்வார். இந்த சமயத்தில் தான் நானும் தியானத்தை விரும்ப ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் தான் எதேச்சையாக என்னை தேடி வந்த பெரியவர் ஒருவர், ஆவடியில் இருந்த அறிவு திருக்கோயிலில் அழைத்துச் சென்று சேர்த்து விட்டார் அதன் பிறகு ஒரு வருட காலத்தில் பிரம்மஞானம் பெற்று விட்டேன். ஆனால் என்னை சேர்த்து விட்ட அந்த பெரியவரை அதற்கு பின் நான் பார்க்கவே இல்லை. எல்லோரும் ஒருமுறை ஆழியாறு சென்று அந்த மணவளக்கலை பயிற்சியை எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்” என்று கூறினார்.

*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,* 

“இந்த படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய பாரதி என்னுடைய ஆருயிர் தம்பி. அவர் இயக்கிய குறும்படத்தை எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்தான் தயாரித்தது. விருது கொடுத்தது. அவருக்கு இப்படி ஒரு படத்தை இயக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் எடுத்த 17 படங்களில் 13 படங்கள் ஆழியாறு பகுதியில் தான் எடுத்திருக்கிறேன். அந்த மனவளக்கலை கட்டிடத்தையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட உள்ளே சென்றது இல்லை. ஆனாலும் அந்த கட்டிடத்தை பார்த்ததாலேயே என்றும் ஒழுக்கமான ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆசிரமத்தில் எல்லாவித அணுக்கிரகங்களும் அங்கே போகாமலேயே என்னை வந்து அடைந்ததாக கருதுகிறேன். ஒழுக்கமானவனாய் இருப்பதே ஒரு தியானம் தான். அது ரொம்ப சிரமம். ஒரு வழிகாட்டுதல் இருந்தால் கொஞ்சம் சுலபம்.

சினிமாவில் இயக்குநர்கள் மட்டும்தான் நரம்புகளிலும் வேலை செய்பவர்கள். அதில் ஒரு பிரச்சனை வரும் போது தான் தாங்கள் என்னென்ன விஷயங்களை செய்ய தவறி இருக்கிறோம் என்ன தெரிய வரும். இந்த பிரச்சனைகளுக்கு வேதாத்திரி மகரிஷி ஐயாவிடம் வழி இருக்கிறது. எஸ்பி முத்துராமன் சாருக்கு இதுபோன்று பிரச்சனை வந்த பிறகுதான் அவரே அங்கே சென்று இருக்கிறார். பள்ளிக்கூடத்தில் இருந்து இதுபோன்ற பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.. என்னை போன்றவர்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பது நீண்ட நாள் கழித்துதான் தெரிகிறது. ஆனால் பள்ளி பருவத்தில் இருந்தே இதுபோன்ற ஒரு மனவளக்கலை பயிற்சியை கொடுத்தால் மாணவ பருவத்தில் இருந்தே அவர்கள் நல்ல குணாதிசயங்களுடன் வளருவார்கள் இல்லையா ? இதற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

இப்படிப்பட்ட அனுபவத்தை சென்று அனுபவித்தவர்கள் பெரிதாக வெளியே அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள். பரப்ப மாட்டேன் என்கிறார்கள். நமக்கு கிடைத்த இந்த பாக்கியம் நம்மோடு இருக்கட்டும் என்று நினைத்து விடக்கூடாது. அதை சொல்வதற்கு கூட சில கூச்சப்படுவார்கள். சொன்னால் அதை சரியாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கூட பல மனிதர்களிடம் இல்லை என்பதும் உண்மை தான். இயக்குநர்கள் எழில், கதிர் போன்றவர்கள் கூட இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லையே. என்னிடம் சொல்லி இருந்தால் இயக்குநர் சங்கத்தில் ஒரு மீட்டிங் போட்டு அனைவரிடமும் இது பற்றி சொல்லி இருப்பேன். அந்த வகையில் இந்த படத்தை இயக்குனர் சங்கத்திற்கே ஒரு முறை திரையிட்டு காட்டி விட்டால் மிக சரியாக இருக்கும்” என்று கூறினார்.

*உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம் மயிலானந்தம் பேசும்போது,*

“இந்த படத்தை கதை வசனம் எழுதி இயக்கி உள்ள சுப்பிரமணிய பாரதி நன்கு பயிற்சி எடுத்தவர். அதனால் இந்த படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவும் ‘உலக நல வாழ்க்கை’யில் இருந்து எல்லா பாடல்களையும் அவர்தான் பண்ணி இருக்கிறார். நடிகர் பாக்யராஜ் உள்ளிட்ட கலைஞர்களும் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சுவாமிஜியின் மறைவிற்குப் பிறகு சுமார் 300 மடங்கிற்கு மேல் நம் சங்கம் வளர்ந்திருக்கிறது. எங்களது கணக்குப்படி சுவாமிஜியின் மறைவுக்கு பிறகு 49 லட்சம் பேருக்கு இன்று தியானத்தை கற்றுக் கொடுத்திருக்கிறோம். எங்களது சிஇஓ முருகானந்தம் தலைமையில் இதுவரை 350 கிராமங்களை தத்தெடுத்து லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவசமாக இந்த பயிற்சியை கொடுத்து இருக்கிறோம். இந்த நிலையில் இந்த சினிமாவை கிராமத்தில் திரையிட்டால் இன்னும் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள கிராமங்கள், பட்டிதொட்டி எங்கிலும் இந்த சினிமா வெளியிடப்படும். அதற்கான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறோம்.

இந்த மனவளக்கலை பயிற்சியை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல 17 மண்டலங்களாக பிரித்து அலுவலகங்களை நிர்மாணித்து செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த திரைப்படமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறேன். மக்களுடைய மனம் பண்பட்டால் குடும்பத்தில் அமைதி, அன்பு ஏற்படும். மனதிலே உயர்ந்த பண்புகளைக் கொண்டு வருவது என்பது வாழ்நாள் பயிற்சி. கெட்டவனாக இருந்தாலும் கூட அவனைக் கெட்ட விதமாக பேசுவது பாவம். இந்த மாதிரி நற்பண்புகளை அடைய குழந்தைகளிலிருந்து பயிற்சி கொடுக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி பெற்று இதுவரை 10 லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக இந்த பயிற்சியை கொடுத்திருக்கிறோம். அறிவில் சிறந்த குழந்தைகளோடு பண்புள்ள குழந்தைகளையும் நாம் உருவாக்க முடியும். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Sunday, June 15, 2025

Tennis Icon Somdev Devvarman Inspires at Unified Special Carnival 2025 Celebrating Inclusivity for Special Children


 


Tennis Icon Somdev Devvarman Inspires at Unified Special Carnival 2025

Celebrating Inclusivity for Special Children

The Madras West Round Table 10 (MWRT10) once again brought joy, inclusion, and celebration to over 1000 special children from across Chennai at the ICF Indoor Stadium through the much-awaited Unified Special Carnival 2025. In its 29th glorious year since inception in 1996, this landmark event was elevated with the inspiring presence of Somdev Devvarman, India’s tennis icon and a passionate advocate for youth and sports.

Somdev Devvarman, known for his grit and determination on the international tennis circuit, inaugurated the festivities to resounding cheers. His presence underscored the Carnival's core message of empowerment through inclusivity, echoing MWRT10’s larger mission of “Service Through Fellowship.” The vibrant atmosphere at the ICF Indoor Stadium—with its accessibility and space—set the perfect backdrop for a day packed with carnival games, music, food stalls, and adapted football matches designed for the children.

MWRT10, a chapter of Round Table India with a strong legacy of service, continues to transform lives through impactful projects like ‘Freedom Through Education’ and healthcare outreach, including Phase II of the Dialysis Centre in Porur. These initiatives serve underprivileged children and patients, with the Unified Special Carnival being a shining example of their commitment to holistic and inclusive community engagement.

Speaking about the significance of the event, newly appointed Chairman Tr. Akul said, “Unified Special Carnival is not just an event, it's a movement that bridges hearts. Having a youth icon like Somdev Devvarman with us today sends a powerful message of acceptance and inclusion.”

Vice Chairman Tr. Varun Reddy added, “This event is the culmination of months of hard work and collaboration. It showcases what’s possible when spirited young individuals unite for a cause larger than themselves.”

From Secretary Tr. Laviesh, event convenors Tr. Anirudh and Tr. Sunil, to countless others like Tr. Dushyant, Tr. Kunal, and National Connect Convener Tr. Vikash Nahar, the effort behind the scenes reflected true teamwork and purpose.

As the day unfolded with smiles, high-fives, and heartfelt moments, the Unified Special Carnival 2025 stood tall as a celebration of unity, compassion, and the belief that every child deserves joy, dignity, and inclusion. The event continues to cement MWRT10’s legacy as a changemaker in Chennai’s social landscape.


ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா


 ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா


'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், 'ஜீவா டுடே' ஜீவ சகாப்தன், ' யூ டூ ப்ரூட்டஸ்' Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்' காதல் கோட்டை' படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல்  நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார்.  தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் - நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். '' என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''  ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. 'தூறல் நின்னு போச்சு' படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும்.  'நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்' என சொல்வார்.  அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, 'அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்' என்றார்.  சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். '' என்றார்.

கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், '' என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து.  படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், '' இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.  இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்... இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். '' என்றார்.

இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், '' திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன்.  இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் '' என்றார்.

தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், '' எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் 'Grand Master of Politics ' எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 'பதிவுகள்' எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை.  சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற  முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். '' என்றார்.

தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,'' இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் 'ரோப்' என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.  

அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
இது ஒரு புது முயற்சி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது.  'நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே' என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்... எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான்.  எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். '' என்றார்.

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்புவிழாவில் இயக்குநர் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


 சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்புவிழாவில் இயக்குநர் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

சத்யபாமா வளாகத்தில் நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் அட்லீக்கு வேந்தர்டாக்டர் மரியசீனா ஜான்சன் மற்றும் டாக்டர் மேரி ஜான்சன் ஆகியோரிடமிருந்து கௌரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.


சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உடன் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்கள் மரிய பெர்னதெத் அருள்செல்வன், அருள்செல்வன், மரியா கேத்தரின் ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் அட்லி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.  அதே பல்கலைக்கழகத்தில் தான் அவர் படித்து, முதலில் இயக்குனராக வேண்டும் என்று கனவு கண்டார்.

விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியசீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் முன்னிலையில் 'ஜவான்' இயக்குநருக்கு இந்த மதிப்புமிக்க கௌரவ முனைவர் பட்டச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பட்டமளிப்பு ஆகியவற்றை வழங்கினார். அட்லியின் மனைவி பிரியா மற்றும் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர், இது இந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்கியது.

இந்திய திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அட்லி இந்த விருதைப் பெற்றார், அவரது படைப்புகள் உலகளாவிய பாராட்டைப் பெற்றன. 'ராஜா ராணி'யில் தொடங்கி, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' மற்றும் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிகளை அட்லி வழங்கினார்.
கௌரவ முனைவர் பட்டம் சான்றிதழ் பெற்ற பிறகு, அட்லி கூறியதாவது, "நான் ஒரு காலத்தில் பெரிய கனவுகளுடன் ஒரு மாணவனாக நுழைந்த அதே பல்கலைக்கழகத்தால் கௌரவிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இங்குதான் நான் நம்பிக்கையின் சக்தியைக் கற்றுக்கொண்டேன்." அவர் தனது குடும்பத்தினருக்கு உணர்ச்சிவசப்பட்டு, "நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகும் வரை என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அதன் பின் நான் யார் என்பதை வடிவமைத்தவர் என் மனைவி பிரியா அட்லீ. என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியவர் என் மகன்" என்று பகிர்ந்து கொண்டார்.
 
பட்டமளிப்பு விழாவிற்கு இடையே பத்திரிகையாளர்களிடம் அட்லீ, அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனேவுடன் தனது படத்தைப் பற்றிப் பேசுகையில், "இது மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகும் படம்,.  இதில் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் நாங்கள் கொண்டு வருகிறோம்.பட்ஜெட்டைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும், எனது வேலை படத்தை இயக்குவது. தற்போது இந்த திட்டத்திற்கான பெரிய கனவுகளை நான் காண்கிறேன். இது நம் அனைவரையும் பெருமைப்படுத்த போகிறது." என்று அவர் மேலும் கூறினார்.


 

34 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 4221 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 810 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 79 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை  பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கினார்.

 

சாதனை மாணவர்கள் 54 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 5031 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டது.

 

 

வேலை வாய்ப்பு :-

 

சத்தியபாமா தொடர்ந்து கேம்பஸ் தேர்வில் அதிகபட்ச மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறது.

 

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2024- 2025 கல்வி ஆண்டில் சுமார் 400 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில் மொத்த மாணவர்களில் 92.74% மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த மாணவர்கள் ஆண்டுக்கு அதிகபட்ச ஊதியம் 41,20,000, குறைந்தபட்ச ஊதியமாக 5,70,000 தேர்வு செய்யப்பட்டனர்.

Saturday, June 14, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

*அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* 
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன்,  சீதா,  ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர். 

ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், '' அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார். 

இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை - இந்திய நாட்டார் இசை - இந்திய செவ்வியல் இசை - என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. 

இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  

அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்' பலாப்பழம் 'என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு.  இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும். 

அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை.  சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் '' என்றார். 

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள்  நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான 'அஞ்சு வண்ண பூவே..' பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன். 

இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் உதய்-  நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌ 

அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். 'இணைந்த கைகள் ' படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன். 

'மூங்கில் கோட்டை' என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன். 

'ஊமை விழிகள்' படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது.  அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன். 

இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் 'வாழ்க்கை போராட்டமே 'எனும் பாடலை எழுதினேன்.  அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா - பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.‌ 

சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது.  இதற்கு 'குடும்பஸ்தன்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்'' என்றார். 
 
இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், '' இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம். 

இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார்.  நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள்.  இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இயக்குநர் உதய் .கே  நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார். 

நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்'' என்றார். 

இயக்குநர் உதய்.கே பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.  

அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார்.  இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு போன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்து பணியாற்ற சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விசயமாக பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.  அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். 

நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக  நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய  குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். 

கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ... அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர்  வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும். 

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும்,  நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 

அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.  

இசையமைப்பாளர் பரத் - ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி-  படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக 'மெல்லாலியே மெல்லாலியே' என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி. 

அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி.  இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார்.  ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார்.  இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன். 

ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், '' நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய 'யாக்கை திரி' எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்... அதன் தொழில்நுட்ப தரம்...  சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். 

அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..
 ஒரு நடிகராக....  இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும். 

அப்பா 'ஊமை விழிகள்', 'இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன். 

நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து - போர்-  இழப்பு - என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும்.  இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். 

இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம்.  இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். 

இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது.  இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான். 

இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும்.  நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.'' என்றார். 

நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், '' இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை. 

நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.  

இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா?  எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.

அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் - படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன். 

முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின்  ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். '' என்றார்.

அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா

*“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!* ...