Thursday, August 21, 2025

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!*

*பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் அக்டோபர் 17  தீபாவளிக் கொண்டாட்டமாக,  உலகம் முழுவதும் வெளியாகிறது!!*

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' )  திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி  ரசிகர்களை மகிழ்விக்க  திரைக்கு வருகிறது.‌

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK  ( ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி') திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்குகிறார்.  

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம்  வரும் அக்டோபர் மாதம் 17  ஆம்  தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் , பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பிக்..ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் (தீமா தீமா) பெரும் வரவேற்பினை பெற்றது. புதுவிதமான கதைககளத்தில் உருவாகியிருக்கும்,  இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில்,  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் அதிக எதிர்பார்ர்பிலிருக்கும் டீசர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

*'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு*

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - வசிஷ்டா (Vassishta) - எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) - கூட்டணியில் உருவாகும் 'விஸ்வம்பரா ' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய  சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் 'விஸ்வம்பரா ' படத்தின் தயாரிப்பாளர்கள்-  ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி - பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும்,  ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக-  மிக சக்தி வாய்ந்த - வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார்.

இந்த காட்சி தொகுப்பு நன்கு வடிவமைக்கப்பட்ட டீசராகும். இது சிரஞ்சீவியை ஒரு முக்கியமான வேடத்தில் பார்க்க ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆரம்பக் கட்ட பரபரப்பு இப்போது அதிகரித்து வரும் நிலையில்.. கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.

இயக்குநர் வசிஷ்டா பிரம்மாண்டமும், வெகுஜன ஈர்ப்பும் நிறைந்த ஒரு விகிதாச்சார காவியத்தை... பிரபஞ்சத்தை ... கற்பனை செய்து படைத்திருப்பதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் காந்தம் போன்ற திரை ஆளுமை ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் அவரது தீவிர நடிப்பு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஸ்வம்பராவின் பிரபஞ்சத்தை கனவு போன்ற தொடுதலுடன் வடிவமைத்ததற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ. எஸ். பிரகாசின் கடும் உழைப்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)-  விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான ...கம்பீரமான... காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) கிளர்ச்சியூட்டும் வகையில் பின்னணி இசையை அமைத்து காணொளியை சக்தி வாய்ந்த உணர்ச்சி எழுச்சியை சேர்க்கிறது.  VFX - ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது. மேலும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு  மதிப்பீடுகள் கிளிம்ப்ஸ் முழுவதும் தெளிவாகத் தெரிகின்றன.

சிரஞ்சீவியின் புகழ்பெற்ற வாழ்க்கையில் விஸ்வம்பரா திரைப்படம்- ஒரு மைல்கல் படமாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இதனை திரை ரசிகர்கள் தவற விட விரும்பமாட்டார்கள். இந்தக் காட்சி உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரை போற்றும் ரசிகர்களுக்கும் மிகச் சரியான பிறந்தநாள் பரிசாகும்.

இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்.‌ இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.

*நடிகர்கள் :*

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி , திரிஷா கிருஷ்ணன்,  ஆஷிகா ரங்கநாத் , குணால் கபூர் மற்றும் மௌனி ராய் ( ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் )

*தொழில்நுட்ப குழு :*

எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி - பிரமோத்
தயாரிப்பு நிறுவனம்:  யு வி கிரியேசன்ஸ்
இசை : எம். எம். கீரவாணி , பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : சோட்டா கே. நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ. எஸ். பிரகாஷ்

*Megastar Chiranjeevi, Vassishta, MM Keeravani, UV Creations’ Vishwambhara Mega Blast Glimpse Sets Tone For A Cinematic Epic*

As Megastar Chiranjeevi celebrates his birthday tomorrow, the makers of Vishwambhara have treated fans to a special surprise, an enthralling glimpse of the much-anticipated socio-fantasy spectacle. Directed by Vassishta and produced on a grand scale by Vikram, Vamsi, and Pramod under UV Creations, the glimpse builds significant intrigue and sets the tone for a cinematic epic.

The glimpse opens with a captivating conversation between a child and an elderly man, reflecting on the turbulent events that happed in the world of Vishwambhara. The old man recounts a great destruction, triggered by one man’s selfishness. That long-awaited savior finally emerges, making a powerful, dramatic entrance as the protector of the realm.

This glimpse is a well-crafted teaser that promises to thrill movie buffs eager to see Chiranjeevi in a larger-than-life role. With the initial hype now elevated, the narrative hints at a mythic tale where Chiranjeevi plays the guardian of Vishwambhara.

Director Vassishta appears to have envisioned a universe of epic proportions, filled with grandeur and mass appeal. Chiranjeevi’s magnetic screen presence commands every frame, and his intense performance delivers true goosebumps. Production Designer AS Prakash deserves special mention for crafting the universe of Vishwambhara with a dreamlike touch.

Cinematographer Chota K Naidu brings the mystical world of Vishwambhara to life with rich, majestic visuals, while MM Keeravani’s stirring background score adds a powerful emotional charge. The VFX are top-notch, rivalling Hollywood standards, and UV Creations’ lavish production values are evident throughout.

All signs point to Vishwambhara being a landmark film in Chiranjeevi’s illustrious career, a spectacle fans won't want to miss. This glimpse indeed is a perfect birthday gift to Megastar Chiranjeevi and those who admire him.

The film also stars Trisha Krishnan as the female lead, with Ashika Ranganath and Kunal Kapoor playing pivotal roles.

As earlier announced, Vishwambhara will be arriving in summer 2026 in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages, as the biggest attraction in the season.

*Cast* : Megastar Chiranjeevi, Trisha Krishnan, Ashika Ranganath, Kunal Kapoor, Mouni Roy in special song

*Technical Crew:*

Writer & Director: Vassishta
Producers: Vikram, Vamsi, Pramod
Banner: UV Creations
Music: MM Keeravani, Bheems Ceciroleo
DOP: Chota K Naidu
Production Designer: AS Prakash

Link : https://youtu.be/5RcJKmrdDZg

Indra - திரைப்பட விமர்சனம்

"இந்திரா" ஒரு சுவாரஸ்யமான துப்பறியும் திரில்லர் படம். சஸ்பென்ஸ், டிராமா, எமோஷன் எல்லாம் கலந்த இந்த படம் பார்வையாளர்களை முழுக்க ஈர்க்கும். கதையில், போலீஸ் அதிகாரி இந்திரா (வசந்த் ரவி), ஒரு துயரமான விபத்து காரணமாக சஸ்பெண்ட் ஆகிறாரு. அந்த சம்பவத்துல வரும் குற்ற உணர்ச்சி, குடிப்பழக்கம் காரணமா அவர் வாழ்க்கை சிதறி, பார்வை கூட இழந்து விடுறார். அந்த நிலையில் நகரத்தில கொடூரமான கொலைகள் நடக்க ஆரம்பிக்குது. பார்வை இல்லாத நிலையில் கூட, அந்த மர்மத்தை கண்டுபிடிக்கிறார் இந்திரா. அதுவே படத்துக்கு அதிகமான சுவாரஸ்யத்தையும், டென்ஷனையும் தருகிறது.

முதல்ல பார்ப்பவர்களுக்கு, இது மாதிரி காயமடைந்த போலீஸ்காரர், சீரியல் கில்லிங், குருட்டு ஹீரோ வந்திருக்கும் படங்களோட சேர்ந்து தோன்றலாம். ஆனா, டிரெக்டர் சபரீஷ் நந்தா இந்தப் படத்துக்கு தனி அடையாளம் கொடுத்திருக்கார். "கான்டென்ட்-டிரைவன்" படம் மாதிரி சிம்பிளா போகவில்ல. பெரிய திரையில் பார்ப்பதற்கான அனுபவத்தை அழகா கொடுத்திருக்கார். சவுண்ட் டிசைன், பி.ஜி.எம். எல்லாம் கதையோட டென்ஷனை சரியா பிடிச்சிருக்கு. கேமரா வேலைகள் கதைல வரும் இருண்ட உணர்வை அழகா காட்டுது. 128 நிமிஷம் நீளமா இருந்தாலும், எங்கும் நீட்டாம டைட் எடிட்டிங் இருக்கு.

நடிப்புல கூட படம் சரியா நின்றிருக்கு. வசந்த் ரவி ஒரு மனசு உடைந்தாலும் தளராத போலீஸ்காரரா சென்சிட்டிவா நடித்திருக்கார். சுனில் வலிமையான கேரக்டரா பெரிய தாக்கம் விட்டிருக்கார். மெஹ்ரீன் பிரிழாதா கவர்ச்சியா இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சரியா நடித்திருக்கலாம்னு தோணும். ஆனா கதைக்கு தேவையான அளவுக்கு வேலை செய்து இருக்கார். அனைகா சுரேந்திரன் வர்ற பகுதி பெரிய ஆச்சரியமா, கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுற மாதிரி இருக்கு.

கொஞ்சம் சீன்ஸ் நிச்சயமா நினைவில் நிற்கும் – இன்டர்வலுக்கு முன் வரும் கான்பிரண்டேஷன், பாஸ்ட் பேக் சீன், கடைசி ட்விஸ்ட் எல்லாமே படம் உயர்த்தும்.

கடைசில, இந்திரா ஜானரேஷனைக் கலக்கிய புதிய திரில்லர் இல்லன்னாலும், அழகா கட்டமைக்கப்பட்ட மர்மக் கதை, உணர்ச்சி கலந்த கோர் இருக்கு. நல்ல நடிப்பு, சுவாரஸ்யமான டெக்னிக்கல் வேலை, டிரெக்டரின் தெளிவான பார்வை—all சேர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருது.

Wednesday, August 20, 2025

குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா

*'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா!*

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். 'குற்றம் புதிது' படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார். 

நடிகை சேஷ்விதா கனிமொழி, "நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் 'குற்றம் புதிது'. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை" என்றார். 

நடிகை பிரியதர்ஷினி, " இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".

'கெவி' பட இயக்குநர் தமிழ் தயாளன், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்".

தயாரிப்பாளர் கணேஷ், " எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்".

நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், " படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்".

தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், " சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார். 

இயக்குநர் பேரரசு, " வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்". 

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், " கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி  எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி".

இயக்குநர் ஹரி உத்ரா, " இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்". 

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா " கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் 'குற்றம் புதிது' ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!

*மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன்  நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!*அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும்  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை,  மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) சார்பில் தயாரிப்பாளர்  ஐசரி K கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்”  படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக,  அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன்  தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tuesday, August 19, 2025

BIG CINE EXPOவின் எட்டாவது பதிப்பை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. பன்னீர் செல்வம், தியேட்டர் வேர்ல்ட் நிறுவனர் திரு. சந்தீப் மிட்டல், பிக் சினி எக்ஸ்போவின் இயக்குநர் திரு.ராகவேந்திரா, GTC INDUSTRIES -ன் பங்குதாரர் திரு. யூசுஃப் கலாபைவாலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


BIG CINE EXPOவின் எட்டாவது பதிப்பை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. பன்னீர் செல்வம், தியேட்டர் வேர்ல்ட் நிறுவனர் திரு. சந்தீப் மிட்டல், பிக் சினி எக்ஸ்போவின் இயக்குநர் திரு.ராகவேந்திரா, GTC INDUSTRIES -ன் பங்குதாரர் திரு. யூசுஃப் கலாபைவாலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Big Cine Expoவின் 8 வது பதிப்பு, முந்தைய படைப்புகளை விட பிரமாண்டமாக சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆசிய நாடுகள் மற்றும்  இந்தியாவில் உள்ள ஒற்றை திரை, மல்டிபிளெக்ஸ், மால்கள் மற்றும் தியாட்ரிக்கல் டிஸ்ட்ரிபியூஷன் தொழிற்சாலைகளுக்கான ஒரே மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வர்த்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு பல கண்காட்சியாளர்கள் இரண்டு கண்காட்சி அரங்கங்களை அமைக்கும் வகையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை வர்த்தக மையத்தில் Big Cine Expo சர்வதேச தரத்தில் இந்த கண்காட்சியை நடத்துகிறது.   இந்த  தனித்துவ,  பிரத்யேக நிகழ்வு, நெட்வொர்க்கிங் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குவதோடு,  உள்ளூர் திரையரங்குகளுக்கு தேவைப்படும் அனைத்தையும் காட்சிபடுத்துகிறது.  ஒற்றைத் திரை திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், சினிமா மற்றும் பொழுதுபோக்கின் வணிக, வர்த்தக விற்பனை,  பங்குதாரர்களுக்கு மதிப்பு சேர்க்கும் ஒரு  மிகப்பெரும் தளத்தை பிக் சினி எக்ஸ்போ  உறுதியளிக்கிறது.  ஆசிய அளவிலும்,  இந்தியாவிலும் உள்ள ஒரே சினிமா மற்றும் வர்த்தக கண்காட்சி மாநாடாக இருப்பதால், இந்த நிகழ்வு சிறந்த திரையரங்குகளைக் கட்டமைப்பதற்கான கற்றல் மையமாக செயல்படுகிறது.

இந்த 2 நாள் நிகழ்வு இந்தியாவில் சினிமா கண்காட்சித் துறைக்கான கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றிற்கான ஒரு தளத்தை பயனாளர்களுக்கு எளிதாக்குகிறது. 

இந்த நிகழ்வில் தயாரிப்பு காட்சிகள், செய்முறை விளக்கங்கள்,   கருத்தரங்குகள், குழு விவாதங்கள், விருது நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்வுகள்,  திரையிடல்கள் மற்றும் வணிக கூட்டங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இதற்கான டைட்டில் பார்ட்னரக கலாலைட் - உம், அவார்டு பார்ட்னராக ஐமாக்ஸ் - உம், அசோசியேட் பார்ட்னராக கியூப் சினிமாவும்,  டெக்னாலஜி பார்ட்னராக கிறிஸ்டீ நிறுவனமும் செயல்படுகின்றன. 

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய அளவில் பிரசித்தி பெற்ற இயக்குநரான மணிரத்னம், இந்நிகழ்ச்சி  இவ்வளவு பிரமாண்டமாகவும்,  சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருக்குமென எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.   தொழில்நுட்பம் மற்றும் கண்காட்சியுடன் தொடர்பில் இருப்பது, திரைப்படங்களை உருவாக்கும் நம் அனைவருக்கும் மிக முக்கியமான அம்சமாகும் என்று கூறிய அவர், கண்காட்சியில் அதீத விவரங்களில் கவனம் மற்றும் எதிர்கால பாய்ச்சலுக்கான  உறுதி இருப்பதாக தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தான் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். 

சினிமாத் துறையில் ஆசிய நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து புயல் போன்ற வேகத்தில் பயணித்து வருவதாக குறிப்பிட்ட 
Big Cine Expoவின் இயக்குனர் ராகவ், இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட வெளியீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சினிமா ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.  Big Cine Expo  2025 என்பது அறிவு இடைவெளியைக் குறைக்கும் திறனைக் கொண்ட ஒரு நிகழ்வாக இருக்கும் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.  பல்வேறு பிராண்டுகளின் நேரடி விவாதங்கள் மற்றும் கொண்டாட்டங்களால் நிரம்பிய இந்த இரண்டு நாள் நிகழ்வு, சினிமா கண்காட்சித் துறைக்கான மிகப்பெரிய நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை உள்ளடக்கும் என்றார்.  மல்டிபிளெக்ஸ் முதல் ஒற்றைத் திரை வரை உலகின் ஒவ்வொரு சினிமாவையும் காட்சிப்படுத்துவதற்கான போட்டியை ஊக்குவிக்கும் புதுமைகள் உட்பட, மலிவு முதல் உச்சபட்ச அளவிலான ஏராளமான பொருட்களை உள்ளடக்கிய ஒரு வர்த்தக நிகழ்ச்சி,   நிலையான சினிமாவை வடிவமைக்கிறது என்றும் அதை தவறவிட முடியாது என்றும் எடுத்துரைத்தார். 

தியேட்டர் வேர்ல்ட், 8 வது Big Cine Expo  மூலம் சினிமா கண்காட்சித் துறையை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது என்றும்  இந்த நிகழ்வு எப்போதும் தங்கள் தொழில்துறையின் முக்கிய நபர்களிடையே நெட்வொர்க்கிங் மற்றும் ஒத்துழைப்புக்கான சிறந்த தளத்தை வழங்கியுள்ளது என்றும்  பி. வி. ஆர் ஐனாக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி கூறினார். பிக் சினி எக்ஸ்போ வலிமை மற்றும் புதுமைகளின் அடையாளமாக இருந்து வருகிறதாகக் கூறிய அவர்,  பி. வி. ஆர் ஐனாக்ஸ் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும்,  முன்னேற்றத்தைக் கொண்டாடுவதிலும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சிறந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காகவும், எங்கள் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த அர்ப்பணிப்புக்காகவும்  அஜய் பிஜ்லி வாழ்த்துகளை தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், சில சிறந்த படைப்புகள் மற்றும் சில புதுமையான கருத்தாக்கங்களைக் காண்பதற்கும் எதிர்பார்ப்போடு உள்ளதாகவும்,   இத்தகைய முன்முயற்சிகள் சினிமா துறையில் உள்ள தொழில்முனைவோருக்கும் துணை வணிகங்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் கய் கூறினார். 

Big Cine Expoவில் தனது பங்களிப்புக்கான பாராட்டாக  விருதைப் பெறுவது, தான் பெற்ற அனைத்து விருதுகளிலும் மிகவும் முக்கியமானது என்றார், திரைப்படத் தயாரிப்பாளரும், நடன இயக்குனரும், நடிகருமான ஃபரா கான். மர இருக்கைகளில் அமர்வதிலிருந்து இன்று வழங்கப்படும் தரம் உயர்ந்த இருக்கைகள் வரை திரையரங்குகளின் பயணத்தை தான் கண்டுள்ளதாகவும்,  உலகம் முழுவதும் பயணம் செய்து,  இந்தியாவில் இருப்பதை விட சிறந்த சினிமா அனுபவம்  எங்கும் இல்லை என உணர்ந்ததாகவும் கூறும் அவர், இந்திய சினிமாக்களின் தரம் மற்றவதோடு ஒப்பிடமுடியாதவை என்றார். 

தான் உள்ளே நுழைந்தபோது, இந்நிகழ்ச்சி எவ்வளவு பெரியது என்று தனக்குத் தெரியவில்லை என்றும்,  திரைப்படங்கள் மூலம் பல உயிர்களின் ஆன்மா தொடப்படுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறினார். 

இந்தியாவில் திரைப்படத் துறையில் கண்காட்சி வணிகம்  மிகவும் புறக்கணிக்கப்படும் அம்சமாக உள்ளது எனவும், கண்காட்சித் துறையின் வலிமையில் தான்  மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளருமான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்தார். மேலும், ஒற்றைத் திரை, மல்டிபிளெக்ஸ், சிறப்பு விநியோகம், தொழில்நுட்பம் மற்றும் அனைத்து வகையான அம்சங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து கொண்டாடும் ஒரே நிகழ்வு Big Cine Expo  என்றும் அவர் புகழ்ந்தார்.     நிபுணர்களுடன் கலந்து கொண்டு, நமது திரைப்படத் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல சினிமா கண்காட்சி இருப்பதை உறுதி செய்வதற்கும் நாம் எவ்வாறு ஒத்துழைக்கலாம் மற்றும் புதுமைப்படுத்தலாம் என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஆண்டில் தொழில்துறையில் பல உயர்வுகளை இந்திய சினிமா கண்டிருக்கிறது.  திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. புதிய திரையரங்குகள் உருவாகின்றன.  புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தோன்றுகின்றன.  இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.  இந்த வளர்ச்சியில் பொழுதுபோக்குத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.  Big Cine Expo ,  கண்காட்சியாளர்களுக்கும் ஒப்பிடமுடியாத நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுக்கும் ஒரு துடிப்பான தளத்தை வழங்குகிறது.  தேசிய மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்துவதற்கும், தொழில்துறை நண்பர்களுடன் நுண்ணறிவுகளையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த நிகழ்வு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.  

Big Cine Expo  2025 இல் தியேட்டர் உரிமையாளர்கள், வடிவமைப்பு ஆலோசகர்கள், உபகரண உற்பத்தியாளர்கள், சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட மேலாண்மை வல்லுநர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோக்கள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் ஆசியா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஒற்றைத் திரை மற்றும் மல்டிபிளெக்ஸ் சினிமா துறைகளைச் சேர்ந்த இறுதி பயனர்கள் கலந்து கொள்வார்கள்.  கூடுதலாக, பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில், மதிப்புமிக்க ஐமேக்ஸ் பிக் சினி விருதுகள் இந்த நிகழ்வின் போது வழங்கப்படும்.  இந்த விருதுகளுடன் குழு விவாதங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் விளக்கக்காட்சிகளும் இருக்கும்.

ஐமாக்ஸ் பிக் சினி விருதுகள் நிகழ்வு,  அதன் அங்கீகாரம் பெற்ற ஐமேக்ஸ் பிக் சினி விருதுகளை ஊக்குவிக்கும் பேனல்கள் மற்றும் விளக்கக்காட்சிகளுடன் தொடர்ந்து நடத்துகிறது. இந்தியாவின் சிறந்த மல்டிபிளெக்ஸ் குழுமங்கள், ஆண்டின் சிறந்த மல்டிபிளெக்ஸ் தியேட்டர், ஆண்டின் சிறந்த ஒற்றைத் திரை தியேட்டர், ஆண்டின் சிறந்த தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆண்டின் புதுமையான தொழில்நுட்பம்,  ஆண்டின் வளர்ந்து வரும் சினிமா தொடர்,  ஆண்டின் மிகவும் நம்பகமான பிராண்ட் சிறப்பு சாதனை விருது உள்ளிட்டவை இதில் வழங்கப்படுகின்றன.

சினிமா உள்ளடக்கத்தின் முன்னணி நுகர்வோராகவும், சினிமா கண்காட்சித் துறையின் முன்னணி சந்தையாகவும் இந்தியா இருந்து வருகிறது.  சினிமா அனுபவங்களுக்கான விரிவான தேவையுடன், இந்தியா தொழில்துறையில் ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, விரிவான பிரத்யேக பிக் சினி எக்ஸ்போவை நடத்துவதற்கான பொருத்தமான சந்தையாகவும் இடமாகவும் இந்தியா மீண்டும்  நிரூபித்துள்ளது. 

தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் திரைப்படத் துறையின் மையத்தில் சென்னை நிற்கிறது, இந்திய சினிமாவில், குறிப்பாக கோலிவுட் அதன் செல்வாக்கு மற்றும் புகழுக்கு பெயர் பெற்றது.  அதன் ஆழமாக வேரூன்றிய சினிமா பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரக் காட்சியுடன், இந்த நகரம் நீண்ட காலமாக கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கில் புதுமைகளின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது.  உலகளாவிய அளவில் தொழில் தொடர்ந்து வளர்ந்து வருவதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு சென்னை ஒரு மாறும் மையமாக உள்ளது, இது பிக் சினி எக்ஸ்போ 2025 ஐ நடத்துவதற்கான சரியான இடமாக சென்னையை அமைக்கிறது 

Monday, August 18, 2025

வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.

வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார். 

சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான  டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு  காரணமாக மரணமடைந்தார். 

திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார். 
மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவகல்லூரியில் Controller of
Examinations ஆக பணியாற்றியவர், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.

தனது கணவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களைப் போலவே, வண்ணாரபேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ பணிகள்  செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார். 

மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து, இந்தியப்பிரதமர் மாண்மிகு திரு மோடி அவர்களாலும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்களாலும் பாராட்டப்பெற்ற திரு டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூக பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

டாக்டர் திருமதி வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று 18.08.2025 காலை 6.15 மணி அளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெங்கடாச்சலம் தெரு,  பழைய வண்ணாரபேட்டை, சென்னை 21  என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை 19/08/2025 காலை 10 மணிக்கு அவர்களின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு இடுகாட்டில்  அடக்கம் செய்யப்படுகிறது. 


தொடர்புக்கு 
டாக்டர் சரத் ராஜ ஜெயச்சந்திரன் 
+91 98848 66007

ஆகஸ்ட் 27 முதல் "காத்துவாக்குல ரெண்டு காதல்" - கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர்

ஆகஸ்ட் 27 முதல் "காத்துவாக்குல ரெண்டு காதல்" - கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர்
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 25 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்கிற புத்தம் புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
கும்பகோணத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த திறமையான நகை வியாபாரியான சரவணன், தனது தாய், தம்பி மற்றும் சகோதரியுடன் வசிக்கிறார்.
 
விசுவாசமும், மரியாதையும் கொண்ட சரவணன், நகைக்கடை உரிமையாளரான ராஜசேகரிடம் வேலை செய்கிறார். அவரது மகள் ரம்யாயும், சரவணணும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருகிறார்கள்.
 
மறுபுறம், தஞ்சாவூரில், கடன் கொடுக்கும் தண்டபாணியின் மகளான ஈஸ்வரி, சரவணனை சந்தித்த நொடியே காதல் வயப்படுகிறாள். இரு குடும்பங்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், ஈஸ்வரி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கிறாள். இறுதியாக, சரவணனுக்கும், ஈஸ்வரிக்கும் திருமண ஏற்பாடும் நடைபெறுகிறது.
 
இவ்வாறு, இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளும் சரவணன், தனது வாழ்க்கையில் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
 
இறுதியில், எந்த காதல் வெற்று பெறும்? இவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறும்? என்பதே தொடரின் விறுவிறுப்பான கதையாகும்.

Sunday, August 17, 2025

திருவள்ளூர் பிரிமியர் லீக் 3.0 – தமிழ்நாட்டு ஹாக்கிக்கு ஒரு புதிய அத்தியாயம் மாஸ்காட் அறிமுகம்,தமிழ் ஹாக்கி கீதம் வெளியீடு

திருவள்ளூர் பிரிமியர் லீக் 3.0 – தமிழ்நாட்டு ஹாக்கிக்கு ஒரு புதிய அத்தியாயம் மாஸ்காட் அறிமுகம்,தமிழ் ஹாக்கி கீதம் வெளியீடு

முக்கிய அறிவிப்புகள் – விறுவிறுப்பான பத்திரிகையாளர் சந்திப்பில்

சென்னை, ஆகஸ்ட் 9, 2025:

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எக்மோர் – உற்சாகம் நிறைந்த சூழலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திருவள்ளூர் பிரிமியர் லீக் (TPL) தனது மூன்றாவது பதிப்புக்கான விரிவான திட்டங்களை அறிவித்தது. ஹாக்கி புரவலர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊடக பிரதிநிதிகள், மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

2023 ஆம் ஆண்டில் தொடங்கிய TPL, தமிழ்நாட்டின் முன்னணி லீக் ஹாக்கி போட்டியாக விரைவில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, ஹாக்கி திருவள்ளூர் யூடியூப் சேனல் மற்றும் i1SPORTS மூலமாக அனைத்து போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது முக்கிய சிறப்பு.

வரவேற்பு உரை

லீக் இயக்குநர் மற்றும் 1980 ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பத்மஸ்ரீ வி. பாஸ்கரன் அவர்கள்,

“TPL என்பது ஒரு ஹாக்கி லீக் மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். இந்த முறை, பிளட்லைட்ஸ் கீழ் நடைபெறும் இறுதிப் போட்டியுடன், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க உள்ளோம். நீங்கள் மைதானத்தில் இருந்தாலும், ஆன்லைனில் பார்த்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக இருப்பீர்கள்,”

என்று உரையாற்றினார்.

லீக் வளர்ச்சி மற்றும் எதிர்காலம்

ஹாக்கி திருவள்ளூர் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை அவர்கள்,

“முதலிரண்டு சீசன்களில், நாங்கள் தரமான, சுவாரஸ்யமான ஹாக்கியை வழங்கியுள்ளோம். இப்போது, வீரர்களை ரசிகர்கள் நாயகர்களாக ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். TPL, திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளுக்குக் கொண்டு செல்லும் தளமாக திகழ்கிறது,” என்று வலியுறுத்தினார்.

போட்டியிடும் அணிகள்

தொழில்நுட்ப இயக்குநர் திரு. மொகுல் முகம்மது மூனீர் அவர்கள், 2025 சீசனுக்கான அணிகளை அறிமுகப்படுத்தினார்.

பூல் A:

வருமான வரி ஹாக்கி அணி

மாஸ்கோ மேஜிக்

தியான்த் வீரன்ஸ்

ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பூல் B:

இந்தியன் வங்கி

AGORC

எஸ்.எம். நகர் ஹாக்கி

பட்டாபிரம் ஸ்ட்ரைக்கர்ஸ்

தெற்கு ரயில்வே

மாஸ்காட் ‘மாறா’ அறிமுகம்

சிற்பி திரு. சதீஷ் ராஜா வடிவமைத்த ‘மாறா’ எனும் மாஸ்காட், வேகம், உறுதி, மற்றும் போராட்ட மனப்பாங்கின் அடையாளமாக விளங்குகிறது. 

ஒலிம்பியன் திரு. திருமல்வளவன் அவர்கள் மாஸ்காட்  சிலையை திறந்து வைத்தார்

லீக் கீதம் – ‘ஹாக்கிதான் ஹீரோ’ வெளியீடு

பிரபல தாளவாத்தியக் கலைஞர் திரு. சித்தார்த் நாகராஜன் இசையமைத்த லீக் கீதம், ஒலிம்பியன் திரு. முகம்மது ரியாஸ் அவர்களுடன் வெளியிடப்பட்டது.

“இது ஒரு பாடல் மட்டுமல்ல; ஹாக்கியின் இதயத் துடிப்பு. ரசிகர்கள் முதல் விசில் அடிக்கும் முன்பும், கடைசி ஹூட்டருக்குப் பிறகும் இதன் அதிர்வை உணர வேண்டும்,” என்று சித்தார்த் தெரிவித்தார்.

ஹாக்கியை ரசிகர்களுக்கு மேலும் ஈர்க்கும் முயற்சிகள்

இயக்குநர் மாலினி ஜிவரத்தினம் அவர்கள், இசை, நேரடி உரையாடல்கள், துடுக்கான நிகழ்ச்சி நடத்தும் பாணி, மற்றும் ஆன்லைன் பார்வையாளர்களுக்கான கதை சொல்லல் மூலம் ஹாக்கியை மேலும் சுவாரஸ்யமாக்கும் திட்டங்களை பகிர்ந்தார்.

முன்னணி பயிற்சியாளரின் கருத்து

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திரு. சி.ஆர். குமார் அவர்கள், திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் முறைகள் மற்றும் அவர்களை வளர்ப்பதில் தேவைப்படும் ஒழுக்கம் குறித்து விலைமதிப்பற்ற கருத்துகளை பகிர்ந்தார்.

இளம் தமிழக வீரர்களின் அனுபவம்

இந்திய அணியில் விளையாடும் தமிழக இளம் நட்சத்திரங்கள் மர்ரேஸ்வரன், ஆனந்த், மற்றும் சதீஷ் ஆகியோர் தங்கள் பயணமும், TPL வழங்கும் போட்டித் தளத்தின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்தனர்.

போட்டி அட்டவணை

2025 பதிப்பு ஆகஸ்ட் 11 முதல் 31 வரை எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும். தினமும் இரண்டு போட்டிகள் நடைபெறும்.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னணி அணிகள் தகுதி பெறும்.

ஆகஸ்ட் 30 – காலிறுதி (பிளட்லைட்ஸ்)

ஆகஸ்ட் 31 – பிளட்லைட்ஸ் கீழ் நடைபெறும் பெரும் இறுதி – லீக் வரலாற்றில் முதல்முறை!


Saturday, August 16, 2025

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு


 

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்'  படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். 

இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.  இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.  இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் 'கணக்கு எப்படி இருக்க?' என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன். 

கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். 

நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், '' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன். 

என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது. 

இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.

சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.  ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம். 

இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. 

எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என  பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம். 

இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம். 

இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான். 

சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும்.‌ ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது. 

இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும். 

இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.

இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 'டண்டனக்கா டான்'  என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,'' என்றார்.

***


*18 Mall பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்ட Launch ஐ பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், அதன் இயக்குனர் பிரியதர்ஷினி குமார் மற்றும் மேலாண் இயக்குனர் ஜான் கிறிஸ் டெரன்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.*

*18 Mall பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்ட Launch ஐ  பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், அதன் இயக்குனர் பிரியதர்ஷினி குமார் மற்றும் மேலாண் இயக்குனர் ஜான் கிறிஸ் டெரன்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.* 

கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூரில் 18 மால் புதிய வாழ்க்கை முறையின் அடையாளச் சின்னமாக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 

பிரபல உணவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஒரு துடிப்பான புதிய அத்தியாயத்தை,  18 மால் வழியே பிரமாண்டமாக திறக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இது நவீன வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு ஒரு சங்கமமாக அமைந்துள்ளது. 18 மால் என்பது வெறும் வர்த்தக பகுதி மட்டுமல்ல, இது ஒரு கண்டுபிடிப்பு. சந்திப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மாற்றத்திற்கான இடமாகும்.

18 மால்-இன் இயக்குனர் பிரியதர்ஷினி குமார் குறிப்பிடும்போது, 18 மால் ஒரு வழக்கமான சென்டர் அல்ல-இது பிராண்டுகள் மற்றும் அனுபவங்களுக்கான ஒரு தொகுக்கப்பட்ட கேன்வாஸ் என்றார்.   ஒவ்வொரு வருகையும் புதிய மற்றும் மறக்க முடியாத நினைவை வழங்கும் இடமாக வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

18 மாலின் கருத்தாக்கத்தின் மையத்தில் அதன் தனித்துவமான ஒரு பிராண்ட், ஒரு உணவு தத்துவம் உள்ளது.  இதன் ஒவ்வொரு கடையும்  வாழ்க்கை முறை, உணவு முறை, ஆகியவற்றிற்கு ஒரு பிராண்ட் மற்றும் கருத்தாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.  பார்வையாளர்களை ஈடுபடுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் ஆழமான, உண்மையான அனுபவங்களை இது வழங்குகிறது.

குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் தனிநபர்கள் பொழுதுபோக்கவும், ரசிக்கவும் ஒரு இடமாக 18 மால் உருவாக்கபட்டுள்ளதாக  அதன் மேலாண் இயக்குனர் ஜான் கிறிஸ் டெரன்ஸ் தெரிவித்தார்.  

 கஃபேக்கள், பொழுதுபோக்கு மண்டலங்கள் மற்றும் திறந்தவெளி ஓய்வறைகளுடன், 18 மால் கிழக்கு கடற்கரையின் புதிய விருப்பமான ஹேங்கவுட்டாக மாறி உள்ளது.

Thursday, August 14, 2025

Coolie -திரைப்பட விமர்சனம்

இங்கே உங்கள் கூலி திரைப்பட விமர்சனத்தை எளிய தமிழில், 5 பதிவுகளாக மாற்றி எழுதியுள்ளேன் — இலக்கணம் சரி செய்யப்பட்டு, அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்:

*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்* நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம், 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆகஸ்ட் 15 முதல் 17 வரை தொடர்ச்சியான விடுமுறைகளை முன்னிட்டு படத்தை ஒரு நாள் முன்பே வெளியிட்டனர். சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, அவர்களுக்கே நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொடுத்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம், ரஜினிகாந்தின் சினிமா பயணத்தின் 50வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் உருவானதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லியோ, விக்ரம், மாஸ்டர், கைதி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ், இந்த முறை சில மாறுபாடுகளுடன் மாஸ் படமாக உருவாக்கியுள்ளார்.

கதை, ராஜசேகர் (சத்யராஜ்) இறுதிச்சடங்கில் இருந்து தொடங்குகிறது. அங்கு தேவா (ரஜினிகாந்த்) வந்து கலந்துகொள்ள, ராஜசேகரின் மகள் ப்ரீதி (श्रுதி ஹாசன்) அவரை தந்தையின் முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை. தேவா மற்றும் ராஜசேகர் 30 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். தேவா விரைவில் நண்பரின் மரணம் இயல்பானது அல்ல என்று சந்தேகிக்கிறார். மறுபுறம் சைமன் சேவியர் (நாகார்ஜூனா) என்ற கடத்தல் கும்பல் தலைவன், பலரைக் கொன்று சுவடே இல்லாமல் அழிக்கிறான். ராஜசேகரையும் அவரது மகளையும் சைமன் பயன்படுத்தியிருக்கிறான். தேவா தனது நண்பரை யார், ஏன் கொன்றார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார்.

ரஜினிகாந்த், 75 வயதிலும் ஆற்றல் குறையாமல் நடித்துள்ளார். அவர் இன்னும் ரசிகர்களின் மனதில் மாஸ் ஹீரோவாக இருப்பதை நிரூபிக்கிறார். ஆனால் சிலருக்கு படத்தில் தீவிரம், பஞ்ச் டயலாக், ஜோஷ் ஆகியவை குறைவாக உணரப்படலாம். வில்லன் வேடத்தில் சோபின் ஷாஹிர் சிறப்பாக நடித்துள்ளார்; சில காட்சிகளில் அவருடைய நடனம் கூட ஆச்சரியமாக இருக்கிறது. நாகார்ஜூனா ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக கவர்கிறார். ஸ்ருதி ஹாசன், ரஜினிகாந்துடன் முழுப் படத்திலும் பயணிக்கிறார். சத்யராஜின் சின்னச் சின்ன காட்சிகள் மனதில் நிற்கும். உபேந்திரா ஒரு துணை வேடத்தில் நடித்துள்ளார்; தொடக்க காட்சியில் கலி வெங்கட் நன்றாக நடித்துள்ளார்.

படத்தின் கிளைமாக்ஸில் அமீர் கான் வருவது, விக்ரம் படத்தில் சூர்யா வந்த ரோலெக்ஸ் கேரக்டரை நினைவூட்டுகிறது. அனிருத் இசை மற்றும் பின்னணி இசை பல காட்சிகளில் உயிரூட்டுகிறது; ஆனால் பாடல்கள் மிகுந்த நினைவில் நிற்கவில்லை. காமெரா கையாளுதலில் கிரிஷ் கங்காதரன் அழகான காட்சிகளை வழங்கியுள்ளார். எடிட்டர் பிலோமின் ராஜ், 170 நிமிட நீளமான படத்தையும் சலிப்பில்லாமல் நகர்த்தியுள்ளார்.

மொத்தத்தில் கூலி, பெரிய நடிகர்கள், வில்லன்கள், பிரம்மாண்ட காட்சிகள் கொண்ட ஒரு மாஸ் படமாகும். ஆனால் கதை சொல்லும் முறை பழைய பாணியில் இருப்பதால், புதுமையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே எதிர்பாராத ஏமாற்றம் தரலாம். சமீபத்தில் மாஸ் ஹீரோ படங்கள், பான்-இந்தியா முயற்சிகள் வெற்றிபெற, வேறுபட்ட திரைக்கதை தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. அதனால், இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் பெரிய திரை அனுபவத்தை விரும்புபவர்களுக்கும் பார்க்கத்தக்க படம்

 

Wednesday, August 13, 2025

அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய 5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை


 அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய

 5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை

நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்த நெகிழ்வான தருணம்

சென்னை, ஆகஸ்ட் 13, 2025 — மருத்துவ நிபுணத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோசினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, அச்சிறுவனின் தோற்றத்தை நேர்த்தியாக மாற்றியிருக்கிறது; அதுமட்டுமன்றி, குழந்தையின் உடலின் மிக முக்கிய செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கான ஒரு புதிய வாய்ப்பை அக்குழந்தைக்கு வழங்கியுள்ளது. டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் ஜி. பாலமுரளி தலைமையிலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களது குழுவின் இந்த வெற்றி, சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளில் காவேரி மருத்துவமனையின் மிகச்சிறப்பான திறன்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கிரானியோசினாஸ்டோசிஸ் (கபாலமுக குறைபாடு) என்பது ஒரு அரிய வகை குறைபாடாகும். இது, பிறக்கும் 2,000–2,500 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பிறந்த பிறகு மண்டை ஓட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் மிக விரைவாக இணைந்து ஒட்டிக் கொள்வதால் இக்குறைபாடு ஏற்படுகிறது; மண்டை ஓட்டின் இயல்பான வளர்ச்சியைத் தடுக்கும் இப்பாதிப்பு இயல்பற்ற தலை மற்றும் முக வடிவமைப்பு, மூளையில் அழுத்தம் அதிகரித்தல் மற்றும் கடுமையான பாதிப்பு நேர்வுகளில் வளர்ச்சி தாமதங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, இந்த பாதிப்பு நிலை உணர்வு ரீதியான மற்றும் சமூக ரீதியிலான கடும் சங்கடங்களையும், சிரமங்களையும் பெரும் சுமையாக சுமத்துகிறது; இது பெரும்பாலும் அவர்களின் தன்னம்பிக்கையையும், பள்ளி கல்வியில் ஈடுபாட்டுடன் பங்கேற்பு அல்லது விளையாட்டுகளில் கலந்து கொள்வதை பாதிக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதன் தாக்கம் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கக்கூடும்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவரும் மற்றும் முக மற்றும் தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மணிகண்டன் கூறுகையில், "மண்டை ஓட்டு தையல்கள் முன்கூட்டியே இணைவதால் ஏற்படும் கடுமையான முக சிதைவு, மூக்கு மற்றும் கண் குழிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதே மேக்ஸில்லோஃபேஷியல் எனப்படும் மேல்தாடை-முகச்சீரமைப்பு சிகிச்சை நிபுணரின் பங்காக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பெற்றோரின் விழிப்புணர்வு இல்லாமை, சிகிச்சையின் இடர்வாய்ப்புகள் குறித்த பயம், அல்லது மேம்பட்ட சிகிச்சையை பெற இயலாமை போன்ற காரணங்களால் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல குழந்தைகள் சரியான நேரத்தில் இப்பாதிப்புக்கான சிகிச்சையை பெறுவதில்லை. பாதிப்பு அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஒரு குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே முற்றிலும் மாற்றி மேம்பட்டதாக ஆக்கிவிடும்," என்றார்.

ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுரளி கூறுகையில், "இந்த அறுவை சிகிச்சைகளுக்கு தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளை பரிசோதித்து உறுதி செய்ய விரிவான மதிப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த சீரமைப்பு சிகிச்சை செயல்முறை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை நீடிக்கக்கூடும். இது மண்டை ஓட்டைத் திறந்து, எலும்புகளைப் பிரித்து, சீரான முகம் மற்றும் தலை வடிவத்தை உருவாக்க அவற்றை மறுவடிவமைப்பு செய்வதும் இந்த சிகிச்சையில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும். பல மருத்துவ வல்லுநர்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்துடன் மட்டுமே இந்த சீரமைப்பு சிகிச்சையில் சிறப்பான முடிவுகள் சாத்தியமாகும்," என்றார்.

காவேரி மருத்துவமனையில், ரோபோட்டிக்ஸ்  (robotics), உயர்நிலை மயக்க மருந்து வழங்கல் சாதனங்கள், பிரத்யேகமான குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (pediatric ICU), மற்றும் அனுபவம் வாய்ந்த பல்துறை மருத்துவக் குழு உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளின் ஆதரவோடு இத்தகைய மேல்தாடை-முக சீரமைப்பு அறுவை சிகிச்சை திட்டமிடப்படுகிறது. இம்மருத்துவமனையானது நோய்க்குறி மற்றும் நோய்க்குறி அல்லாத வகையிலான மண்டை ஓடு மற்றும் முகக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்த மேம்பட்ட நவீன சிகிச்சையை பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் குடும்பங்கள் பெறுவதற்கு இம்மருத்துவமனை வழிவகை செய்திருக்கிறது.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், "காவேரி மருத்துவமனை, ஒத்துழைப்புமிக்க கூட்டு மருத்துவத்தின் சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைநல மருத்துவர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் என அனைவரும் இக்குழந்தைக்குச் சீரான தோற்றத்தையும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தையும் வழங்குவதற்காக ஒரே நோக்குடன் இணைந்து பணியாற்றினர்," என்றார்.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, ஒரு மருத்துவ சாதனையை விட மிக மேலானது. அந்தச் சிறுவனுக்கு, இது ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பட்ட மூளை வளர்ச்சி மற்றும் முக சிதைவு ஏற்படுத்துகிற சிரமங்களும், கட்டுப்பாடுகளும் இன்றி அன்றாட வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடும் திறனுக்கான கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அவனது குடும்பத்திற்கு, நிம்மதியையும், புத்துயிர் பெற்ற நம்பிக்கையையும், தங்கள் குழந்தை இப்போது உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தையும் இச்சிகிச்சை தந்திருக்கிறது. சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தின் மதிப்பையும், ஒருங்கிணைந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் இந்த சிகிச்சை நேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது போன்ற சாதனை நிகழ்வுகள், ஆரம்பகால நோயறிதல், எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவை, மற்றும் இதுபோன்ற மேம்பட்ட சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே  சென்னையிலும் சாத்தியம் என்ற விழிப்புணர்வைப் பரப்புவதன் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது.


Tuesday, August 12, 2025

வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்

*வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!*

யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார் 2' . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக  வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை, ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கபீர் மற்றும் விக்ரம் கதாபாத்திரங்களில் களமிறங்கும், பரபரப்பான  புரோமொ காட்சியுடன் யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

அதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2, வரலாற்று சிறப்புமிக்க யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் இது ஆறாவது பாகமாக இணைகிறது . இதற்கு முன் இந்த யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில்  வெளியான ஒவ்வொரு படமும் வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

வார் 2 படம் இதுவரை இல்லாத அளவிலான மாபெரும் பிரமாண்டமான காட்சியமைப்பு, பரபரப்பூட்டும் அதிரடி, மற்றும் தீவிரம் மிக்க கதை சொல்லலுடன் கூடிய,  ஒரு திரை அனுபவமாக இருக்கும் என வாக்குறுதி அளிக்கின்றனர். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவர்கிடையே  நடைபெறும் சாகசம் நிறைந்த மோதல் திரையரங்குகளில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்கிறார்கள். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜேப்பியர் பொறியியல் கல்லூரி கல்வித்துறையில் பிரம்மாண்டமான தனது 25 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது!*

*ஜேப்பியர் பொறியியல் கல்லூரி கல்வித்துறையில் பிரம்மாண்டமான தனது 25 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது!*

*பெண்களுக்கான தனி பல்கலைக்கழகம் ஜேப்பியர் நிர்வாகம் கொண்டு வரவிருக்கும் மகிழ்வான செய்தியை சில்வர் ஜூப்ளி வருடத்தை கொண்டாடும் அற்புதமான நிகழ்வில் டாக்டர் ரெஜினா ஜே முரளி பகிர்ந்து கொண்டார்!* 

சென்னை, ஆகஸ்ட் 12, 2025: கல்வி மற்றும் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ஜேப்பியர் பொறியியல் கல்லூரி தனது 25ஆவது வருடம் என்ற மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்வு பிரமாண்டம், தொலைநோக்கு மற்றும் எதிர்காலத்திற்கான திட்டமிடலுடன் நடந்தது. இந்த நிகழ்வில், கல்வித்துறையில் பெயர் பெற்ற நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ”கல்வித்துறையை மறுவடிவமைப்பு மற்றும் புதுமைகளுக்கான திட்டமிடல்” என்ற தலைப்பில் நடைபெற்றது.  

ஜேப்பியர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தரும் ஜேப்பியர் பொறியியல் கல்லூரியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ரெஜினா ஜே முரளி நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு கூறுகையில், “பெண்கள் வளர்ச்சியில் ஆரோக்கியமான முறையில் ஆண்கள் ஊக்கமளிப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. இன்று, சுமார் 70 சதவீத மாணவர்கள் பெண்கள் என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். என் தந்தை கல்லூரியை நிறுவியபோது, 100 ஆண்கள் மாணவர்களாக இருந்தனர். பெண்களுக்கு ஒரு தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அவரது கனவு. எங்களது தீவிர முயற்சியால அந்தக் கனவு விரைவில் நிறைவேறும் என உறுதியளிக்கிறோம்” என்றார். 

வேந்தர்கள், துணைவேந்தர்கள், ரெஜிஸ்ட்டர்ஸ், நிர்வாக அறங்காவலர்கள், முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கல்வித் தலைவர்கள், நாடு முழுவதிலுமிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பிரபல தொழில்துறைத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடக்க நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்து தமிழக கல்வித் துறையில் மதிப்புக்க தருணமாக மாறியது. அதாவது, ஜேப்பியர் பல்கலைக்கழகத்திற்கும் தமிழக அரசின் ஐடிஎன்டி மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (ஐடிஎன்டி) அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் திரு. டேனியல் பிரபாகரன் மற்றும் ஜேப்பியர் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வேந்தரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் ரெஜினா ஜே முரளி ஆகியோர் முறைப்படுத்தினர். இது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

காலை நடந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்புமிக்க வெள்ளி விழா நினைவுப் புத்தகமான ‘25 Years of Legacy – A Journey Through Time’ வெளியிடப்பட்டது. இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் மற்றும் உடனிருந்த பார்ட்னர்ஸ் அனைவருக்கும் டாக்டர் ரெஜினா ஜே முரளி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அதே நேரத்தில் வருகை தந்திருந்த பிரமுகர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்திய தனியார் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (CIPU), மெட்ராஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை (MCCI) மற்றும் TiE குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த வட்டமேசை மாநாட்டில் தொழில்-கல்வி இடைவெளியைக் குறைத்தல், மாணவர்களை தொழில்துறைக்குத் தயாராக இருக்கச் செய்தல் மற்றும் புதுமை சூழல் அமைப்புகளை வளர்ப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. சரளா பிர்லா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கோபால் பதக் இந்த அமர்வை திறமையாக நிர்வகித்தார். "தொழில்துறையும் கல்வித்துறையும் ஒன்றிணையும்போது இந்தியா புதுமையில் உலகளாவிய வல்லரசாக உயரும்" என்ற உண்மையை அனைவரும் ஆமோதித்தனர். 

புகழ்பெற்ற இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இந்த நிகழ்வின் மாலையை அற்புதமான கொண்டாட்டமாக மாற்றி அனைவருக்கும் மறக்க முடியாத தருணத்தை அமைத்து கொடுத்தது.

ஜேப்பியர் பொறியியல் கல்லூரி அதன் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில் நடந்திருக்கும் இந்த வெள்ளி விழா கொண்டாட்டம், மாறிவரும் எதிர்கால உலகத்திற்குத் தயாராக இருக்கும் தலைவர்களை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு அதன் 25 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.

கலைஞர் டிவியில்லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில்
லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியைத் தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் "

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 
 " நெல்லை பாய்ஸ் "

" அருவா சண்ட "   படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக  முற்றிலும் புது முகங்களை வைத்து 
தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து  " நெல்லை பாய்ஸ் " என்ற படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி எஸ். தாணு அவர்கள் 

இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை  சமூகத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

அதுவும் ஆணவ படுகொலை என்றால் நிச்சயமாக தென் தமிழகம் அதில்  முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும்  இந்த " நெல்லை பாய்ஸ் " படம். காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் வெட்ட வெளிச்சமாக காட்டும் இந்த நெல்லை பாய்ஸ் நண்பர்கள்.

நெல்லை நட்புக்கு தனி தரம் உண்டு அவை இப்படத்தில் தெரியும். படத்தின் படத்தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  வெளியிட்டதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை இத்திரைப்பட தலைப்பு பெற்றாலும், விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகளை விருவிருப்பாக செய்துகொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் V ராஜா.

கதையின் நாயகனாக அறிவழகனும் நாயகியாக ஹேமா ராஜ்குமார் அவர்களும் நடிக்க வில்லனாக வேலராம மூர்த்தி மிரட்டியிருக்கிறார்.
மற்றும்

ரஷாந்த் அர்வின் இசையில் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி எடிட்டிங் பணிகளை செய்துள்ளார் கமல் ஜி.

அக்டோபர் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் " நெல்லை பாய்ஸ் " படத்தை  படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நேரடியாக உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ்

*16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம்  மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ்* !!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.  

படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ( Sai Abhyankkar) இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், “பல்டி” 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.

2007ஆம் ஆண்டு,  நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் (Angel John) என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி,  வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  


சாந்தனு தனது மலையாளக் கம்பேக்கைப் பற்றி கூறியதாவது:

“பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் ஒரு புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.”

புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும், விளையாட்டு பின்னணியிலான அதிரடி திரில்லர் திரைப்படமான இந்தப் “பல்டி” படம்,  திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. STK ஃபிரேம்ஸ் மற்றும் Binu George Alexander Productions ஆகிய நிறுவனங்களின் சார்பில் சந்தோஷ் T. குருவில்லா (Santhosh T. Kuruvilla) மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.


படத்தின் அற்புதமான தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்புக் குழு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது மலையாள சினிமாவில் அபயங்கரின் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாடலாசிரியர் விநாயக் சசிகுமாருடனான அவரது கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


"RDX: ராபர்ட் டோனி சேவியர்" திரைப்படத்தில் பணியாற்றியதற்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் J. புலிக்கல், இந்த நட்சத்திரக் குழுவில் இணைகிறார். இந்தப் படத்தை சிவகுமார் V. பணிக்கர் எடிட்டிங் செய்கிறார். ஷெரின் ரேச்சல் சந்தோஷ் இணை தயாரிப்பாளராகவும், சந்தீப் நாராயண் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தில்  கிஷோர் புறக்காட்டிரி தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், ஸ்ரீலால் M தலைமை இணை இயக்குநராகவும் ஒரு வலுவான குழு உள்ளது. இணை இயக்குநர்களில் சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டியன் மற்றும் மெல்பின் மேத்யூ (போஸ்ட் புரடக்சன்) தயாரிப்பு) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இந்தபடத்தில் கிரியேட்டிவ் இயக்குநராக வாவா நுஜுமுதீன் பணியாற்ற, T.D. ராமகிருஷ்ணன் கூடுதல் வசனங்களை எழுதியுள்ளார். ஆஷிக் S அவர்களின் கலை இயக்கம் படத்தின் காட்சி ஈர்ப்பை மேலும் மேம்படுத்துகிறது. உடைகள்: மெல்வி J, ஸ்டண்ட் : ஆக்‌ஷன் சந்தோஷ் & விக்கி மாஸ்டர், ஒப்பனை: ஜிதேஷ் போய்யா, ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்சிங் : விஷ்ணு கோவிந்த், DI: கலர் பிளானட், ஸ்டில்ஸ்: சஜித் R M, வண்ணக்கலைஞர்: ஸ்ரீக் வாரியர், VFX: ஆக்செல் மீடியா, ஃபாக்ஸ் டாட் மீடியா, திட்ட ஒருங்கிணைப்பாளர்: பென்னி கட்டப்பண்ணா, நடன அமைப்பு: அனுஷா, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: கிஷோர் புறக்காட்டிரி, தலைமை இணை இயக்குநர்: ஸ்ரீலால் M, இணை இயக்குநர்: சபரி நாத், மெல்பின், சாம்சன் செபாஸ்டியன், ராகுல் ராமகிருஷ்ணன், தயாரிப்பு: Moonshot Entertainments மற்றும் STK Frames CFO: ஜோபீஷ் ஆண்டனி, COO: அருண் C தம்பி, விநியோகம்: Moonshot Entertainments PVT LTD, ஆடியோ லேபிள்: Think Music, டைட்டில்  வடிவமைப்பு : ராக்கெட் சயின்ஸ், விளம்பர வடிவமைப்புகள்: வியாகி மற்றும் ஆண்டனி ஸ்டீபன், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள்: Snakeplant LLP, மக்கள் தொடர்பு : யுவராஜ்


Monday, August 11, 2025

Dr. Edumed Academy Launches in Anna Nagar, Chennai-Ushering in the Next Generation of Aesthetic Leaders.*

*Dr. Edumed Academy Launches in Anna Nagar, Chennai-Ushering in the Next Generation of Aesthetic Leaders.*

 Dr. Edumed, India’s premier aesthetic training academy, proudly announces the grand launch of its Anna Nagar chapter, a transformative milestone in its mission to shape the future of aestheticmedicine. With a vision to empower doctors, dentists, and healthcare professionals withadvanced clinical skills and international-standard training, Dr. Edumed continues to setbenchmarks in aesthetic education across India.

*Setting New Standards in Aesthetic Training*
Founded on a commitment to clinical excellence, hands-on learning, and global exposure, Dr.Edumed ofers comprehensive certification programs in aesthetic medicine, trichology,injectables, lasers, and skin rejuvenation procedures. With curriculums designed by industryexperts and taught by experienced practitioners, the academy ensures each learner receivesnot just knowledge, but mastery.

Whether it's Botox, Dermal Fillers, PRP, Hair Restoration, or advanced laser aesthetics, Dr.Edumed delivers immersive education through live demos, hands on training andsimulation-based learning, preparing every student for real-world clinical success.

*An Inauguration that Inspires Vision*
The prestigious launch in Anna Nagar was marked by the presence of esteemed dignitariesfrom both the medical and academic worlds. The event was honored by Dr.R.Annamalai, MS,Managing Director, Karpaga Vinayaga Institute of Medical Science, as Chief Guest, Dr. T.ArunKumar, MS, Director - Vels Medical College & Hospital, as Chief Guest, and Mr. Saran Vel J,Brand Founder & Managing Director, as Guest of Honour. With heartfelt thanks to our franchisepartner, whose support has been instrumental in bringing Dr. Edumed’s vision to Anna Nagar.

*Empowering Healthcare Professionals with Skill & Confidence*
This launch isn't just about a new location, it's about opening doors. Doors to careers,confidence, and capability. With a focus on practical skill-building and internationally recognizedcertifications, Dr. Edumed enables practitioners to expand their scope of practice, grow theiraesthetic careers, and ultimately, deliver safer, more efective outcomes for patients.

*Shaping the Future of Aesthetic Medicine, One Doctor at a Time*
Dr. Edumed Academy's expansion into Anna Nagar is a testament to the rising demand forquality aesthetic education and the academy’s dedication to bridging the gap between passionand proficiency. With its learner-centric approach and relentless pursuit of innovation, Dr.Edumed is not just educating, it’s elevating the entire ecosystem of aesthetic medicine in India.

*About Dr. Edumed Academy*
Dr. Edumed is India’s leading aesthetic training academy ofering advanced clinical training ininjectables, lasers, trichology, and facial aesthetics. With state-of-the-art facilities, internationallyaligned modules, and a growing alumni network across the country, Dr. Edumed is redefiningthe standards of medical aesthetic education.

For more information, visit: www.dredumed.com

Address: MuVa Arcade , 2nd Floor , 2nd Avenue , First Main Road , C Block , Anna NagarEast, Chennai 600102.
Contact: 99648 10000

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!*

*பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் அக்டோபர் 17  தீபாவளிக் கொண்ட...