சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம். அரசியல், சாதி—இவை இரண்டுமே கலந்த சூழல். அப்படிப் பட்ட இடத்தில், கல்வியுள்ள, மனம் நல்ல செவிலித்தாய் அமுதா (மதுமிதா) தன் கிராமத்துக்காக போராட வருகிறார். அநீதி நடந்தாலும், யாராலும் அவரை மவுனப்படுத்த முடியாது.
ஒருநாள், அவர் ஒரு பெரிய முடிவு எடுக்கிறார் — கிராமத் தேர்தலில் போட்டியிட! இது பழைய அதிகாரிகளை அதிர வைக்கிறது. அவர்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்ற எதையும் செய்யத் தயார். ஆனா, அமுதா பின்னடையவில்லை. உயிருக்கு ஆபத்து வந்தாலும், தன் நிலைப்பாட்டை விட்டுவிடாமல் நிற்கிறார்.
கதையின் உச்சத்தில், நியாயமும் பிடிவாதமும் பேராசையையும் அச்சத்தையும் வெல்லும். “ஒரு உறுதியான மனசு, ஒரு சமூகத்தை எழுப்ப முடியும்” என்பதை அமுதா நிரூபிக்கிறார்.
மதுமிதாவின் நடிப்பு அருமை — கண், குரல், உணர்ச்சி எல்லாமே கதாபாத்திரத்தோடே கலந்துவிட்டது. சாதி அரசியல், அதிகாரப் போட்டி போன்ற உண்மைகளை படம் காட்டுகிறது. அதேசமயம், தைரியமும் நம்பிக்கையும் சேர்ந்தால் மாற்றம் சாத்தியமேன்னும் நம்பிக்கையும் தருகிறது.
இதுவொரு மனதில் நீங்காத படம் — உண்மை, இரக்கம் சேர்ந்தால் எந்த அநீதியையும் வெல்லலாம் என்பதற்குச் சான்று.
கிரியேஷன்ஸ் T சிவா
வழங்கும்
ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில்
அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நாளை நமதே
படத்தின் நடிகர்கள்
கதாநாயகி - மதுமிதா
வேல்முருகன்
ராஜலிங்கம்
செந்தில் குமார்
முருகேசன்
மாரிக்கண்ணு
கோவை உமா,
மற்றும் கிராமத்து மக்கள்.
ஒளிப்பதிவாளர் - பிரவீன்
எடிட்டர் - ஆனந்த் லிங்ககுமார்
கலை- தாமோதர