Monday, September 1, 2025

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'*


*பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'*

*வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது*


பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 

சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது. 

திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்," என்றார். 

'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா. 

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 



*'

Sunday, August 31, 2025

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி !! 

பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது.

தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் "பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்" என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, புதுமையான முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உள்ளது.

இந்த நிகழ்ச்சியை, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை, புகழ்பெற்ற நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் இந்நிக்கழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் பார்த்திபன் கூறியதாவது… 

நாளைய அப்துல்கலாம் ஆகவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கனவை உருவாக்க நினைத்த RAV, A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 
பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை, அதே போல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம், அது மாதிரி அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.

இப்படியான ஒரு முன்னெடுப்பை பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சிக்கு என் நன்றிகள்.  இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. பல கனவுகளோடு வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து, அவர்களின் கனவை ஒரு கட்டத்திற்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு, நான் உடன் நிற்பது எனக்கு மகிழ்ச்சி. கலாம் சாருக்கும் எனக்கும் இடையே  நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. அதைப்பற்றி நிகழ்ச்சியில் நான் நிறைய பகிர்ந்துகொள்வேன். 

இந்த நேரத்தில் நான் நடிகர் விவேக் சாரை அதிகம் மிஸ் செய்கிறேன். பல படவாய்ப்புகள் எனக்கு வந்தபோது அதை பொருத்தமான வேறு நபர்களுக்கு நான் அனுப்பியிருக்கிறேன் அதே போல இந்த நிகழ்ச்சியையும் நடிகர் விவேக் இருந்திருந்தால் அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன். இதற்கு பொருத்தமானவர் அவர் தான். அவரில்லாததால் இந்த நிகழ்ச்சியை நானே ஏற்று நடத்துகிறேன்.

சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்த நிகச்சியை நான் தொகுத்து வழங்குவது எனக்குப் பெருமை என்றார். 


ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தளமான, சபா டோஸ் அவர்களின் "பிட்ச் இட் ஆன்" முயற்சி, தென்னிந்தியா முழுவதும் பயணித்து அசாதாரணமான கண்டுபிடிப்புகளைத் தேடும் ஒரு புரட்சிகரமான நிகழ்வை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் யோசனைகளை வணிக ரீதியாக மாற்றியமைக்க ஒரு முன்னோடியான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் சிறந்த கண்டுபிடிப்புகளை, புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 கண்டுபிடிப்புகள் சென்னையின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அங்கு, சிறந்த 10 கண்டுபிடிப்புகள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் வழிகாட்டும் 15 நாள் இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்கும்.
இந்தியாவின் அடுத்த பெரிய யோசனை, தொலைவான ஒரு கிராமத்தின் எளிய கேரேஜிலேயே இருக்கலாம்.

இந்த நிகழ்ச்சி, கண்டுபிடிப்புக்கும் தொழித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு பாலமாக அமையும்.

Lokah Chapter 1 Chandra - திரைப்பட விமர்சனம்


 லோகா Chapter 1: சாந்திரா மலையாள சினிமாவுக்கே புதிய பாதையைத் திறந்த படம். இது தான் மலையாளத்தில் முதல் female-led சூப்பர் ஹீரோ படம். டொமினிக் அருண் இயக்கம், சாந்தி பாலச்சந்திரன் எழுத உதவியிருக்கார். கதை பக்கத்துல புனைகதை, புராணம், “அமரத்துவம்” மாதிரி கருக்கள் எல்லாம் கலந்துருக்காங்க. வேகமா action காட்சிகள் கொடுக்காம, universe-க்கு ஒரு அடிப்படை கட்டமைக்குதான் படம் அதிகம் focus பண்றது.

கதைல சாந்திரா ஒரு மர்மமா, சக்தி வாய்ந்த பெண். அவள் மூணு care-free நண்பர்களோட வாழ்க்கையிலும், ஒரு கடுமையான போலீஸான நாசியப்பாவோட வாழ்க்கையிலும் சிக்கிக்கிறாங்க. “அறிவுரை கேட்டு ஒளிஞ்சு வா”ன்னு சொல்லினாலும், அநீதி நடந்தா அமைதியா இருக்க முடியல. தன்னால கண்ணுக்கு தெரியாம முடியலன்னு நேரடியாக எதிர்த்து நிற்கிறாள். சின்னச் சின்ன பெயர்லேயே symbolism இருக்கு – சன்னி, சாந்திரா மாதிரி – பழைய கதைகளையும் இப்போ present-க்கும் connect பண்ற மாதிரி. படம் தான் ஆரம்பிக்கிற வரிகள் கூட சுவாரஸ்யமா இருக்கு: “ஒவ்வொரு புராணத்துக்கும் உண்மைச் சுவடு இருக்கும்.”

அடிப்படையா பார்ப்போம் என்றா – performance தான் main highlight.

  • கல்யாணி பிரியதர்ஷன் – சாந்திரா வேடத்துல ரொம்ப strong, graceful, vulnerable-ஆ நடித்துருக்கா.

  • நஸ்லென் – எப்போதும் போல natural charm, சின்ன சின்ன காமெடி, instant relatable.

  • சாண்டி (நாசியப்பா) – கடுமை, தீவிரம் வெளிப்படுதுறார்.

  • விஜயராகவன் – சாந்திராவோட தோற்றம்/கதை சொல்ற narration, அதுக்கு ஜோடியாக visuals-ல goosebumps தரும்.

சின்ன cameo roles கூட கதைல நிறைய importance இருக்கு. First part-ல அவ்வளவு முக்கியமா தெரியலேன்னாலும், அடுத்த chapters-ல use ஆகப்போறது clear-ஆ தெரியும். Universe-ஐ build பண்றதுக்கான stepping stones மாதிரி.

Technical பக்கம்:

  • நிமிஷ் ரவி cinematography – grand visuals, intimate moments இரண்டையும் balance பண்ணி capture பண்றார்.

  • ஜேக்ஸ் பீஜாய் music – energy-யும் soul-யும் இரண்டையும் சேர்த்து, ஹீரோயிக் feel perfectly suit ஆகுது.

  • சின்ன சின்ன காமெடி இடங்கிட்டே சில சமயம் சரியா click ஆகாதது, dialogues uneven-ஆ இருக்கு. ஆனாலும் layered storytelling, immersive presentation audience-ஐ பிடிச்சுக்கிட்டே போகுது.

முடிவில சொல்லணும்னா – Lokah Chapter 1: Chandra மலையாள சினிமாவுக்கு ஒரு புதிய வகை சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்ற powerful start. அடுத்த parts-க்கு solid stage set பண்ணி வச்சிருக்கு. Promise, courage, imagination நிறைந்த ஒரு saga ஆரம்பிச்சிருக்கு.

KPY Bala is going to be a sheer winner in Kollywood, a true ‘content-driven star - Director Balaji Sakthivel



A versatile filmmaker and storyteller, Balaji Sakthivel has carved an indelible mark in Tamil cinema with his path breaking directorial. His seamless transition into acting has further elevated his stature, earning him immense appreciation for his natural, realistic portrayals. Today, he has become the “lucky charm” for filmmakers, with his very presence adding credibility and weight to every film.

After impressing audiences with his recent performances in Kudumbasthan and DNA, Balaji Sakthivel is now gearing up to win hearts with his performance in Gandhi Kannadi, scheduled for release on September 5. His presence in the visual promos has already piqued the curiosity of cinephiles.

Speaking about the film, Balaji Sakthivel said, “I’ve been a director for years, and it’s always a bliss to see roles come alive through brilliant actors. But standing on the other side has taught me that acting is no easy feat. I’m grateful that every project I’ve been a part of has been helmed by remarkable filmmakers, and working with Sherief gave me the same confidence. When he narrated Gandhi Kannadi, I agreed instantly—it was such a beautiful, emotional script. Watching the final film, I feel happy with how Sherief has crafted it. KPY Bala is going to be a sheer winner in Kollywood, a true ‘content-driven star’. Archana is a powerhouse talent, and sharing screen space with her was a privilege. I truly believe Gandhi Kannadi will be a wonderful experience for audiences.”

Gandhi Kannadi is written and directed by Sherief and produced by Jayi Kiran under the banner of Adhimulam Creations. The film stars KPY Bala and Namitha Krishnamoorthy in the lead roles, with Balaji Sakthivel and Archana in pivotal roles. Music is composed by Vivek–Mervin, cinematography is handled by Balaji K Raja, and editing is by Shivanandeeswaran. The film is set for a worldwide theatrical release on September 5 by Sakthi Film Factory B Sakthivelan all over Tamil Nadu.

Saturday, August 30, 2025

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!


GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது…

எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் ரசிக்கும் படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது. நன்றி.

GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது…

அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் உங்களுக்குப் புரியும். படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இமான் சார் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளன. நாங்கள் படம் பார்த்த போது பெற்ற சந்தோஷத்தை, நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலன் சாருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…

தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி. விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம். அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது. இமான் சார் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது…

இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்பு தேடி அலையும் போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன். அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர். அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் டி. எஸ். கே பேசியதாவது…

போன வருடம் லப்பர் பந்து, இந்த வருடம் பாம். அந்தப் படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு முன் காமெடி தான் செய்து கொண்டிருந்தேன்; ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்ல வேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன். இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார் – அவருக்கு நன்றி.இமான் சார் ரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன். அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான் சார் – அவருக்கு நன்றி.மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி.

TrendMusic ஜித்தேஷ் பேசியதாவது…
இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்த படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தோம் மிகச் சிறப்பாக இருந்தது. அர்ஜூன் தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி. மணிகண்டன், காளி வெங்கட் எனப் பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார். செப்டம்பர் 12 எல்லோரும் திரையில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பகிர்ந்துகொண்டதாவது…
விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானது தான் இந்தப்படத்தின் கதை. அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.

அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார்.

டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச் சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் சார் செய்யாத தொழிலே இல்லை. எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார். படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார். அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார். அவரிடம் நிறைய புது ஐடியாக்கள் உள்ளது. அவர் போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார். இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர். அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது…
பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் காளிவெங்கட் பேசியதாவது…
இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். மறந்து விடாதீர்கள். இது மிக நல்ல படம். ஆதரவு தாருங்கள். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் கார்த்திகேயன் மணி …
இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் சார் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். அவர் சின்ன வயதிலேயே எத்தனை விதமான பாத்திரங்கள் செய்துவிட்டார். ஒரு முறை சேவலாக நடித்து காட்டி அசத்தினார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் சண்முகபிரியன் …
விஷால் வெங்கட் மிக நல்ல மனிதர். எனக்குப் படம் காட்டினார், அட்டகாசமாக இருந்தது. ஷிவாத்மிகா ஃபேன் நான், அருமையாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸை எப்படி இந்த கதாபாத்திரத்தில் யோசித்தார் எனத் தெரியவில்லை. அவர் என்ன கொடுத்தாலும் செய்வார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி. எல்லோரும் மிக அட்டகாசமாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் டி. இமான் …
இப்படம் முள்ளு மேல் நடப்பது மாதிரியான ஒரு கதை, ஆனால் அதை மிக கவனமாக அழகாக எடுத்துள்ளார் விஷால் வெங்கட். சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்தவுடன் அவருடன் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அவருடன் பணிபுரிந்தது மிக மிக சந்தோசமாக இருந்தது. நம் மண்ணின் கதை சொல்லும் இந்த மாதிரி படங்களுக்கு நம் மண்ணின் இசை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படத்தில் முறையான புதுமுக பிளேபேக் சிங்கர்ஸ் பாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அர்ஜூன் தாஸ் தன் பிம்பத்தை உடைத்து புதிதாகச் செய்கிறார். வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் லோகேஷ் …
அர்ஜூன் தாஸ் பிரதர் அவருடைய இமேஜை உடைத்து இப்படத்தைச் செய்துள்ளார். ஷிவாத்மிகா இப்படத்தில் நேரில் நடிப்பதைப் பார்த்தேன் – மிகச் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். காளி வெங்கட் சார் நிறைய இடத்தில் என் அப்பாவைப் பிரதிபலித்தார் – மிகச்சிறந்த நடிகர். வாழ்த்துக்கள். விஷால் வெங்கட்டும் நானும் புரொடக்ஷன் மேட், தயாரிப்பு கம்பெனியில் சந்தித்தோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். விஷால் எந்த பிரச்சனையையும் ரொம்ப கேஷுவலாக எடுத்துக்கொள்வார். நம் வெற்றியை அவர் வெற்றியாகக் கொண்டாடுவார். இப்படி ஒரு கதையைப் படமாக்கும் தைரியம் இவரைத் தவிர யாருக்கும் வராது. கண்டிப்பாக இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஶ்ரீகணேஷ் …
விஷாலின் முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அவரை தேடி கால் செய்து பேசினேன். அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது. அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புது டைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி. இமான் சார் செய்யும் புது விஷயம் – இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி அண்ணா இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி …
விஷால் பிரதர் கதை சொன்ன போது யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டேன், அர்ஜூன் தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன். வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி சார். அவருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான். காளி வெங்கட் அண்ணன் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து தந்தார். சினிமாவை உண்மையாக நேசிப்பவர், அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் மணிகண்டன் …
இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள் தான். கிட்டதட்ட எல்லா துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள். அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. காளி அண்ணா யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத் தயங்காதவர். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. இமான் சார் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர். அவர் இசையமைத்தது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார். விஷால் வெங்கட் 2008 ல் இருந்து பழக்கம். அவன் அனுபவித்த தடைகளை, அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும். நன்றி.

நடிகை ஷிவாத்மிகா …
எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி. இமான் சார் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விஷால் வெங்கட் …
GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் அர்ஜூன் தாஸ் …
எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான் சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன் – "நான் தான் பண்ணனுமா?" எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

நடிகர்கள்:

அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இயக்கம் – விஷால் வெங்கட்

தயாரிப்பு – சுதா சுகுமார்

இசை – டி. இமான்

கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்

வசனம் – மகிழ்நன் BM

ஒளிப்பதிவு – P.M. ராஜ்குமார்

படத்தொகுப்பு – G.K. பிரசன்னா

கலை இயக்கம் – மனோஜ் குமார்

உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண்

நடன அமைப்பு – அப்ஸர்

சண்டைப்பயிற்சி – முகேஷ்

மக்கள் தொடர்பு – சதீஸ் (AIM)

நிர்வாகத் தயாரிப்பாளர் – D. சரவண குமார்

*KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!*



ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood)  பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN Productions  இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

சிவராஜ்குமார் நாயகனாக  நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக  உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே (Deshpande), பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi) போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.  

படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ( Ajaneesh Loknath) இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் (Shashank Narayan) எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

*துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது*




துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன்  - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. இதற்கு முன் பல சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்குக் கொடுத்திருந்தாலும், “லோகா” மூலம் இந்த  பேனர் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. துல்கர் சல்மான் எடுத்த துணிச்சலான இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வரலாற்றில்  திருப்புமுனையாக  அமைந்துள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் துல்கரின் பங்களிப்பு லோகா மூலம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian)  சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

கேரளாவிலும், சர்வதேச அளவிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் தரப்பிலும் வலுவாகச் செல்கிறது. முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

*ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!*




*ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !!* 

பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார்.

சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும்  உருகச் செய்துள்ளது. 

தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார்.
அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். 

சிரஞ்சீவி ராஜேஸ்வரியை இதயம் நெகிழ்ந்த  அன்புடன் வரவேற்றார். அவர் காட்டிய உண்மையான அன்பையும், தனது கனவை அடைவதற்காக எடுத்த கஷ்டத்தையும் கண்டு உருகிய சிரஞ்சீவி, அந்த சந்திப்பை ரசிகையின் வாழ்நாள் நினைவாக மாற்றினார். அந்த நேரத்தில் ராஜேஸ்வரி சிரஞ்சீவிக்கு ராக்கி கட்ட, அவர் ரசிகைக்கு பாரம்பரிய புடவையை பரிசளித்து, தனது மரியாதை, ஆசீர்வாதம் மற்றும் பாசத்தை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் அனைவர் நெஞ்சங்களையும்  நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான தருணமும் அரங்கேறியது.  சிரஞ்சீவி ராஜேஸ்வரியின் குழந்தைகளின் கல்வி பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவர்களின் கல்வி பயணத்துக்கு துணையாக இருப்பதாக உறுதி அளித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உறுதியையும் வழங்கினார்.

இந்த அன்பான செயல் சிரஞ்சீவியின் மனிதாபிமானக் குணத்தை மறுபடியும் வெளிப்படுத்தியது. அளவிட முடியாத புகழையும், உயர்ந்த நிலையையும் அடைந்திருந்தும், எப்போதும் தாழ்மையுடனும், ரசிகர்களை குடும்பத்தினராகவே கருதுவதும் அவரின் அன்பு  தனிச்சிறப்பாகும்.

ராஜேஸ்வரியின் அன்புக்கு, சிரஞ்சீவி அளித்த இதயத்தை உருக்கும் பதில், ஒரு பிரபலத்தின் நற்கருணைச் செயலைவிடவும் பெரிதாகும்.  உண்மையான மகத்துவம் என்பது பரிவு, நன்றியுணர்வு, பிறரை உயர்த்தும் மனப்பான்மை என்பதற்கான வாழும் சான்றாக அவர் திகழ்கிறார். 

திரையில் அவர் மெகா ஸ்டார், ஆனால் திரைக்குப் பின்னால் அவர் உண்மையிலேயே தான் ஒரு ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

*சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, கார்த்திக் கட்டமனேனி, டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி வழங்கும், பான் இந்தியா படைப்பு “மிராய்” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது !*



*பிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !*

ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த பெரும் கனவு திரைப்படத்தை, திரையில் உயிர்பித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாயகனின் வலிமையை மட்டுமல்ல, அவன் எதிர்நின்று போராட வேண்டிய ஆற்றல்மிக்க வில்லனையும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்” பாடல் இசை ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்போது இறுதியாக டிரெய்லர் வெளியான நிலையில், கார்த்திக் கட்டமனேனி  (Karthik Ghattamaneni) கட்டமைத்திருக்கும் பிரம்மாண்ட உலகம் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சாதாரண இளைஞன், தன்னலமின்றி அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுபவன், தன்னை நோக்கி வரும் மிகப்பெரிய பணி குறித்து அறியாமல் இருக்கிறார். ஆனால் மனித குலத்தை அழிக்க முனைந்த கரும்படை (Black Sword) என்ற கொடிய சக்திக்கு எதிராக, ஒன்பது அரிய சாஸ்திரங்களை காப்பது தான் அவன் விதி. ஒரு மந்திரக் கோலின் சக்தியை கண்டுபிடித்தாலும், அவன் மனித வலிமை தீய சக்திக்கு எதிராக போராட போதாது. இறுதியில், அவர் தனது ஆன்மிக பக்தியிலிருந்து, குறிப்பாக இறைவன் ஸ்ரீ ராமரிடமிருந்து, துணிவு மற்றும் சக்தியைப் பெறுகிறார்.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி (Karthik Ghattamaneni) மிகப்பெரிய புது உலகத்தை கட்டமைத்துள்ளார். கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை ஒருங்கே செய்துள்ளார். மணிபாபு கரணம் எழுதிய பளிச்செனும் வசனங்கள் படத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. காட்சிகள் கண்களை விலக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக உள்ளன. இறுதியில் வெளிப்படும் இறைவன் ராமர் காட்சி, மிக அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

தேஜா சஜ்ஜாவின் நடிப்பு அற்புதம். ஒரு சாதாரண இளைஞனிலிருந்து உலகின் பாரத்தைச் சுமக்கும் ஒரு சூப்பர் யோத்தாவாக மாறும் அவரது பரிமாற்றம் வெகு அழகாக  வெளிப்பட்டுள்ளது. அதிரடி காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, பிளாக் ஸ்வோர்டு என்ற அழிவு சக்தியாக அச்சமூட்டுகிறார். ரித்திகா நாயக் வழிகாட்டும் ஆன்மீக சக்தியாக முக்கியப் பங்காற்றுகிறார். ஜகபதி பாபு சாது கதாபாத்திரத்தில் சிறப்பாகவும், ஷ்ரேயா சரண் தாயாக மனதை உருக்கும் வகையிலும், ஜெயராமின் புதிரான தோற்றமும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கௌரா ஹரியின் பின்னணி இசை, குறிப்பாக ஸ்ரீ ராமரின் காட்சிகளுக்கான பாடல்கள், அனுபவத்தை தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றன. ஸ்ரீ நாகேந்திர தங்காளாவின் அபாரமான கலை அமைப்பும், நிர்வாக தயாரிப்பாளர் சுஜித் குமார் கொல்லியின் பங்களிப்பும், மிராய் உலகை உயிரோட்டமாக்குகின்றன.

எப்போதும் போல பீப்பிள் மீடியா பேக்டரி, இந்திய சினிமாவின் எல்லைகளைத் தாண்டும் வகையில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பை வழங்கியுள்ளது. காட்சியமைப்புகள், அதிரடி, VFX – அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த டிரெய்லர் மட்டுமே திரையரங்குக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்ல போதுமானதாக அமைந்துள்ளது. பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வமான அம்சங்கள், புராணம் – மூன்றையும் ஒருங்கிணைக்கும் “மிராய்” செப்டம்பர் 12 முதல் திரையரங்குகளில் பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.

*நடிகர்கள்* : சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு

*தொழில்நுட்பக் குழு:*

இயக்குநர்: கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள்: டி.ஜி. விஸ்வா பிரசாத், கீர்த்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம்: பீப்பிள் மீடியா பேக்டரி
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி
இசை: கௌரா ஹரி
கலை இயக்குநர்: ஸ்ரீ நாகேந்திர தங்காளா
எழுத்து: மணிபாபு கரணம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா

Trailer Link : https://www.youtube.com/watch?v=gaf-TK8eWPo

யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!


 யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில் பேசியவர்கள்

தயாரிப்பாளர் மகேஷ்:

எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் சூரஜ்:

நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:

கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.

மாஸ்டர் ரகு:

நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தேவ் மிகப்பெரிய உழைப்பாளி. என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி:

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. கண்டிப்பாக நீங்கள் திரையில் ரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை. இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

எழுத்தாளர் ராம்ஸ் முருகன்:

இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்து வருகிறார். இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

TrendLoud சார்பில் ஜிதேஷ்:

தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. அவர் மிக பாசிடிவானவர். சகிஷ்னா சேவியர் ஒரு படத்தில் 6 பாடல்கள் கிடைப்பது அரிது என்றார், அந்த ஆறு பாடல்களும் TrendLoud க்கு கிடைத்தது சந்தோஷம். எல்லா பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் அருமையாக வந்துள்ளது. தேவ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள்.

VJ நிக்கி:

நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள். நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் செகண்ட் லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய் விட்டார்கள். அங்கு ஆகாஷ் பிரேம், திவாகர், யுவராஜ் எல்லோரிடமும் நீ தான் செகண்ட் லீட் என்று சொல்லி இருந்தார்கள். நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் ஹார்ட் பீட் கிரி:

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ. தலைப்பே சிறப்பாக உள்ளது. நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி. சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

Generous Entertainment சார்பில் கோகுல்:

இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் ஆகாஷ் பிரேம்:

படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் படவா கோபி:

2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.

நடிகை தேவிகா:

நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.

தயாரிப்பாளர் K.V. துரை:

நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் சதீஷ்:

படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.

இயக்குநர் ARK சரவணன்:

டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.

நடிகர் தேவ்:

இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி 
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.

"YOLO" என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.

இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.

எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.


இயக்குநர் அமீர் 
இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு "கேப்டன்" எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.

என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. "சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்" என சொன்னால் "அப்படியா, சரி ஓகே" அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.

எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: "ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?" என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.

தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.

நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது.
படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.


இயக்குநர் சாம்
முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.

நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். "எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்" என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.

எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.

ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.
படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.

இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும்.
"YOLO" செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.


இயக்குநர், நடிகர் சமுத்திரகனி 
இறைவனுக்கு நன்றி. மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு "இவனை விட்டு விடக்கூடாது" என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன்.

இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது.
தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நண்பன் மகேஷ் இந்தக் குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படத்தின் குறிப்பு

நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால் — அதுவே இந்தப் படத்தின் ஃபேண்டஸி மையம்.
மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாகவும், ரொம்-காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட்டாகவும் இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S. சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.



நடிகர்கள்

தேவ்

தேவிகா

படவா கோபி

ஆகாஷ் பிரேம்குமார்

பிரவீன்

நித்தி பிரதீப்

திவாகர்

யுவராஜ்

விஜே நிக்கி

தீபிகா

தீப்சன்

சுப்ரு

சுவாதி நாயர்

பூஜா ஃபியா

சுபா கண்ணன்

கலைக்குமார்



தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures

தயாரிப்பாளர் – மகேஷ் செல்வராஜ்

இயக்கம் – S. சாம்

ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி

இசை – சகிஷ்னா சேவியர்

எடிட்டிங் – A. L. ரமேஷ்

கலை இயக்கம் – M. தேவேந்திரன்

கதை – ராம்ஸ் முருகன்

ஸ்டண்ட் – டேஞ்சர் மணி

நடனம் – கலைக்குமார், ரகு தாபா

திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்

பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்

உடைகள் – நட்ராஜ்

உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன்

ஸ்டில்ஸ் – மணியன்

தயாரிப்பு நிர்வாகி – புதுக்கோட்டை M. நாகு

விளம்பர வடிவமைப்பு – யாதவ் JBS

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Friday, August 29, 2025

Kuttram Pudhithu - திரைப்பட விமர்சனம்


 இயக்குனர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங் இயக்கிய குற்றம் புதிது ஒரு தைரியமான அதிரடி–அமானுஷ்ய திரில்லர். இதில் மர்மம், பதட்டம், மனித உணர்வுகள் எல்லாம் கலந்திருக்கிறது. தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி ஆகியோரின் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய பலம். வாழ்க்கை–மரணம், உண்மை–மாயை ஆகியவற்றுக்கு நடுவே இருக்கும் மெல்லிய கோட்டை படத்தில் அழகாக ஆராய்ந்திருக்கிறார்.

கதை ஒரு அமைதியான நகரத்தில் தொடங்குகிறது. மதிப்புமிக்க ஒருவரின் கொலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அந்த இறந்தவர் மீண்டும் உயிரோடு வந்துவிட்டாரோ என்ற அதிர்ச்சி திருப்பம் கதையில் வருகிறது. அந்த அமானுஷ்ய சம்பவம் கதையை வேறொரு திசையில் இழுக்கிறது. நீதி, பாவத்தின் சுமை, மீட்பு ஆகிய தீம்கள் படத்தில் ஆழமாக பேசப்படுகின்றன.

தருண் விஜய் போலீஸ் அதிகாரியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சந்தேகம் கொண்டும், உள்ளுக்குள் பயம் கொண்டும் அவர் காட்டும் நடிப்பு படத்துக்கு நம்பகத்தன்மை தருகிறது. சேஷ்விதா கனிமொழி தனது கதாபாத்திரத்தில் மர்மமும் உணர்ச்சியும் கலந்த சிறந்த நடிப்பை வழங்குகிறார். நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ் போன்ற அனுபவசாலிகள் படத்திற்கு சிறந்த வலிமை சேர்க்க, பிரியதர்ஷினி ராஜ்குமார் சில காட்சிகளில் உணர்ச்சி பூர்வமான தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறார்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக உள்ளன. ஜேசன் வில்லியம்ஸ் எடுத்த ஒளிப்பதிவு இருண்ட காட்சிகளும், சஸ்பென்ஸ் உணர்வும் நிரம்பியுள்ளது. கமலா கண்ணன்’ன் எடிட்டிங் கதை ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. கரன் பி. க்ருபா கொடுத்த பின்னணி இசை பார்வையாளர்களை இறுதி வரை பதட்டத்தில் வைத்திருக்கும். தலைப்புப் பாடல் கூட முடிவில் ஒரு பேய்மறைச்சலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சில இடங்களில் கதை மெதுவாக செல்கிறது என்றாலும், குற்றம் புதிது முழுக்க முழுக்க ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சஸ்பென்ஸ், அமானுஷ்யம், உணர்ச்சி – மூன்றையும் கலந்து, பயம், குற்ற உணர்வு, மீட்பு பற்றிய ஆழமான சிந்தனையை எழுப்பும் படம் இது. அதிரடி திரில்லர் படங்களையும், உணர்ச்சி நிறைந்த கதைகளையும் விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'*

*பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ...