Tuesday, October 15, 2024

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி !!*

*பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!*

*போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !!* 

*கலக்கும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள், பரபரக்கும் பிக்பாஸ் சீசன் 8 !!*

தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸொடு முதலே  ரசிகர்களை ஈர்த்து வருகிறது.   

இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர்  விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்  வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது. 

வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட  அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. 

வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளைக் கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. 

வார முடிவில் எலிமினேசன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களைப் பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். 

ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன்,  எதிர்பாரா திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும்  கண்டுகளியுங்கள்.

Monday, October 14, 2024

ANLON Art Salon 2.0 இரண்டாவது கிளையை தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ், சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன் ஆகியோர் கோட்டூர்புரத்தில் தொடங்கி வைத்தனர்.



 ANLON Art Salon 2.0 இரண்டாவது கிளையை தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ், சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன்  ஆகியோர் கோட்டூர்புரத்தில் தொடங்கி வைத்தனர்.


சென்னையில் அழகுக்கலை துறையில் புகழ்பெற்ற நிறுவனமான ANLON Art Salon, சென்னை கோட்டூர்புரத்தில் 8,000 சதுர அடி பரப்பளவில் அதன் இரண்டாவது கிளையை விரிவுபடுத்துகிறது.  

சென்னை கோட்டூர்புரத்தில் சுமார் 8000 சதுர அடி பரப்பளவில், பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள ANLON art salon னில், உலகத்தரமான சிகை அலங்காரம் மற்றும் தேக பராமரிப்பு, நகம் பராமரிப்பு, உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. மேலும் சலூனில் அமைந்துள்ள கஃபே வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குகிறது. 

பிரபல சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன் மற்றும் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட, அழகுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழங்கும் சென்னையின் முன்னோடி மருத்துவ-சலூனாக ANLON art salon விளங்குகிறது. 

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ANLON art salon, அதிநவீன மேம்பட்ட உபகரணங்களுடன் உயர்மட்ட ஒப்பனை மற்றும் அழகியல் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத சேவை மற்றும் ஆடம்பரத்தை உறுதியளிக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரா சிங் தோனி முதல் ANLON art salon ஐ தொடங்கி வைத்தார்.

முகவரி : Anlon Art Salon, 2nd Floor, No.40, Gandhi Mandapam Road, Kotturpuram, Chennai - 600085. Mobile: 9500653243 ( www.anlonartsalon.com)

Lyca Productions' Vettaiyan Shatters Box Office Records with ₹240+ Crores Worldwide Collection

*Lyca Productions' Vettaiyan Shatters Box Office Records with ₹240+ Crores Worldwide Collection!*

Following the back to back success of their previous releases, Lyca Productions is thrilled to announce that their latest release, Vettaiyan, starring the legendary Superstar Rajinikanth, has crossed a staggering ₹240 crores at the global box office within days of its release. This marks yet another milestone in Indian cinema and further cements Lyca Productions' place at the forefront of the industry.

Vettaiyan, directed by the visionary TJ Gnanavel, has captivated audiences with its powerful narrative, breathtaking action sequences, and stellar performances. The film boasts an ensemble cast including Bollywood Megastar Amitabh Bachchan, Manju Warrier, Fahadh Faasil, Rana Daggubati, Ritika Singh, and Dushara Vijayan, Rohini and Abhirami, making it one of the most star-studded films of the year. Each actor brings their unique energy to the screen, delivering standout performances that have resonated with viewers worldwide.

The film's music, composed by the ever-talented Anirudh, has been a chart-topping success, with tracks from the movie becoming instant hits across platforms. His score adds depth and emotion to the high-octane sequences, further elevating the cinematic experience.

Producer Subaskaran of Lyca Productions expressed his immense pride and gratitude for the overwhelming response to Vettaiyan, "This film is a labor of love, and we are humbled by the support from fans across the globe. Superstar Rajinikanth's unparalleled charisma, combined with a top-tier cast and crew, has delivered a film that will be remembered for years to come."

Vettaiyan is headed by GKM Tamilkumaran of Lyca Productions, with M Shenbagamoorthy distributing the film under the esteemed banner of Red Giant Movies.

Audiences and critics alike have hailed Vettaiyan for its gripping storyline, innovative direction, and masterful execution. The film explores themes of justice, power, encounter killing, corrupt education system, woven into an epic saga that has struck a chord with viewers of all ages.

With box office collections already surpassing ₹240 crores and counting, Vettaiyan is well on its way to becoming one of the highest-grossing films in recent history.

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்*

*ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்*

சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம்  பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக 'மொய் விருந்து' எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவரும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் - நாள்தோறும் பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்கி வருகிறது. இந்த வகையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சேவையை மேற்கொண்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ... உலக உணவு நாளை முன்னிட்டு, 'மொய் விருந்து' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ருசியான மற்றும் சுவையான உணவளிப்பதற்காக உணவு  பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

ஆண்டுதோறும் இது போன்ற மக்கள் நல திட்டங்களில் கலந்து கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊக்கமளித்து வரும் இதன் விளம்பர தூதுவரான ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த ஆண்டும் இந்த 'மொய் விருந்து' பயணத்தில் கலந்து கொண்டார்.‌ இவருடன் இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று ருசியான உணவை வழங்கும் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

ஹெல்ப் ஆன் ஹங்கர் - ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஆகியோர் இணைந்து முன்னெடுத்து இருக்கும் இந்த நிகழ்வு.. பசியால் வாடும் மக்களின் மனதை கவர்ந்ததுடன்... இணையவாசிகளின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !

*இயக்குநர் ஷங்கரின்  "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று  வெளியாகிறது !!*

*குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது*

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், 
குளோபல் ஸ்டார் ராம் சரண்  கூட்டணியில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில்,  தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்,  கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட  வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  

இந்த போஸ்டரில்  ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும்  கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை  அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 


பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர்  தமன்  இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது. 

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில்  உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். 

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது.  கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல்,  அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது. 

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.  முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

நட்சத்திர  நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது.  படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய  தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




திரைப்படம்: கேம் சேஞ்சர் 

நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் 
இயக்கம் : ஷங்கர் சண்முகம் 
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ் எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்
கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ் 
இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித் 
ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு 
இசை: எஸ்.தமன் 
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 
லைன் புரொடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர் 
கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா 
சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு 
நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி 
பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம் 
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM)

Sunday, October 13, 2024

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா2 'படத்தின் தொடக்க விழா

*'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா2 'படத்தின் தொடக்க விழா*

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி -  எஸ் எல் வி சினிமாஸ் - கூட்டணியில் உருவாகும் '#நானிஓடேலா 2 'எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

'நேச்சுரல் ஸ்டார்' நானி, 'தசரா' எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ' #நானி ஓடேலா 2 ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 'இந்த திரைப்படம் 'தசரா' திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்' என நானி அண்மையில் தெரிவித்திருந்தார். 

'தசரா' திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்து பெரும் புகழை பெற்றுள்ளதால், இந்த பான் இந்திய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான தொடக்க விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் நவராத்திரி திருவிழாவை தேர்வு செய்தனர். 

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அழுத்தமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதையை அடர்த்தியான திரைக்கதையுடன் வடிவமைத்துள்ளார். இதில் நானியை இதற்கு முன் கண்டிராத வகையில் மாஸான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறார். இதற்காக நடிகர் நானி.. அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இது அவரது நடிப்பில் தயாராகும் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி  பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பன்முக ஆளுமைக்கு பெயர் பெற்ற நானி-  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றிகரமான மற்றும் டைனமிக் கூட்டணியுடன் தயாராகும் இந்த திரைப்படம்.. நானியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும். 

நடிகர்கள் : நானி 

தொழில்நுட்பக் குழு:  

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடேலா 
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி 
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் 
மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Saturday, October 12, 2024

BLACK - திரைவிமர்சனம்

கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கிய "கருப்பு", ஜீவா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தமிழ் ஹூடுனிட் த்ரில்லர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP இன் பேனரின் கீழ் S. R. பிரபு தயாரித்த இந்தப் படம் ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இது அக்டோபர் 11, 2024 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. விவேக் பிரசன்னா, யோக் ஜேபி ஆகியோரும் இந்த குழுமத்தில் நடித்துள்ளனர். ஷ ரா மற்றும் ஸ்வயம் சித்தா ஆகியோர் படத்தின் துணை வேடங்களில் பங்களிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்த, கோகுல் பெனாய் ஒளிப்பதிவைக் கையாள்வதோடு, பிலோமின் ராஜ் எடிட்டிங்கைக் கவனித்தும், படம் அடையாளம் தெரியாத மற்றும் சஸ்பென்ஸின் அழுத்தமான கலவையை வழங்குவதாக உறுதியளித்தது.

கதை 1964 இல் தொடங்குகிறது, அங்கு விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரம் அவரது கடற்கரை வீட்டில் ஓடிப்போன ஜோடியைப் பாதுகாப்பதைக் காணலாம். இருப்பினும், தம்பதியினர் அதே இரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர், இது ஒரு சஸ்பென்ஸ் கதைக்கான தொனியை அமைக்கிறது. படம் பின்னர் வசந்த் (ஜீவா) மற்றும் அவரது மனைவி ஆரண்யா (ப்ரியா பவானி சங்கர்) ஆகியோரின் கவனத்தை மாற்றுகிறது, அவர்கள் புதிதாக வாங்கிய வில்லாவில் ஒரு வார இறுதியை கழிக்கச் செல்கிறார்கள். ஒரு பௌர்ணமி இரவில் வாகனம் ஓட்டும்போது மர்மமான விளக்குகள் அவர்களைத் திசைதிருப்புவதால் வினோதமான சூழ்நிலை உருவாகத் தொடங்குகிறது, இது வரவிருக்கும் அழிவின் உணர்வை உருவாக்குகிறது.

 "கருப்பு" படத்தின் முதல் பாதி ஈர்க்கக்கூடியது, அதன் சஸ்பென்ஸ் பில்ட்-அப் மற்றும் நல்ல நேர த்ரில்ஸ் மூலம் பார்வையாளர்களை விளிம்பில் வைத்திருக்கிறது. கதையானது விஞ்ஞானக் கூறுகளையும் பெர்முடா முக்கோணக் கருத்தையும் கதைக்களத்தில் பின்னுகிறது, மர்மத்திற்கு ஒரு புதிரான அடுக்கைச் சேர்க்கிறது. இருப்பினும், வேகம் குறைவதால், கதை அதன் பிடியை இழந்ததால், இரண்டாம் பாதி அதே பதற்றத்தை தக்கவைக்க போராடுகிறது. இருந்தபோதிலும், பிலோமின் ராஜின் எடிட்டிங், மந்தமான வேகம் ஒட்டுமொத்த தாக்கத்தைத் தடுத்தாலும், படத்தை மிதக்க வைக்கிறது.

சாம் சி.எஸ்ஸின் இசை, வளிமண்டலத்தில் இருந்தாலும், படத்தை எதிர்பார்த்த அளவுக்கு உயர்த்தவில்லை. ஸ்கோர், சில சமயங்களில் வேட்டையாடினாலும், இந்த வகை திரைப்படத்திற்குத் தேவையான பஞ்ச் இல்லை. மரணதண்டனை சீரற்றதாக இருந்தாலும், மர்மம், அறிவியல் புனைகதை மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றைக் கலக்க இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணியின் லட்சியம் பாராட்டுக்குரியது. "பிளாக்" உற்சாகமான தருணங்களையும், புதிரான முன்னுரையையும் வழங்கும் அதே வேளையில், படம் இறுதியில் முழு திருப்திகரமான த்ரில்லர் அனுபவத்தை வழங்குவதில் குறைவுபடுகிறது.

'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா


 'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா

'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் - எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி - ஏற்கனவே 'சிம்ஹா', ' லெஜண்ட்', 'அகண்டா' என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது. 

இந்நிலையில் பாலகிருஷ்ணா - பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக '# BB4 ' எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை 'லெஜண்ட்'  படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். 

நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான  தொடக்க விழாவில்  வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல்  விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

#BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது.  

நடிகர்கள் : 'மாஸ் கடவுள்' நந்தமூரி பால கிருஷ்ணா 

தொழில்நுட்பக் குழு : 

எழுத்து & இயக்கம் : பொயப்பட்டி ஸ்ரீனு 

தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா -கோபி அச்சந்தா 

தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் 

வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் - "விஸ்வம்பரா" டீசர் வெளியாகியுள்ளது !


 மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV  கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட  மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் - "விஸ்வம்பரா" டீசர் வெளியாகியுள்ளது !

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி  சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும்,  பிரம்மாண்டமான  

ஃபேண்டஸி  சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின்  பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி   உலகிற்கு அழைத்துச் செல்கிறது.  இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது.  ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். 

இந்த இருளை எதிர்கொள்ள முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாயகன் உதயமாகிறான்.  ஒரு இளம் பெண் வரவிருக்கும் போரைப் பற்றி அறிய முற்பட்ட உடனேயே, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு சூப்பர் ஹீரோவைப் போல, பறக்கும் குதிரையில் சவாரி செய்கிறார். டீஸர் சிரஞ்சீவியின் அதிரடி காட்சிகளைக் காட்டுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த தருணத்தில் முடிவடைகிறது, அங்கு அவர் தனது எதிரிகளுக்கு எதிராக ஒரு சூலாயுதத்தைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு வழிகாட்டும் தெய்வீக வலிமையைக் குறிக்கும் ஹனுமான் சிலையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் தனித்து நிற்கும் ஒரு நம்பமுடியாத பிரபஞ்சத்தை வடிவமைத்துள்ள வசிஷ்டாவின் தொலைநோக்கு பார்வை உண்மையிலேயே முன்மாதிரியானது. பிரமிக்க வைக்கும் மற்றும் கற்பனையான உலகம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதைசொல்லல் ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கிறது, அதன் அழுத்தமான அறிமுகங்கள்  பார்வையாளர்களை ஈர்க்கிறது. அதிரடி காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடைசி பகுதிகள், ஹனுமான் சிலை மற்றும் சிரஞ்சீவியின் தந்திரத்துடன் கூடிய சக்தி வாய்ந்த செயல் ஆகியவை இந்த டீசருக்கு சிறப்பு சேர்க்கிறது.

சிரஞ்சீவி இளமையாகவும் வசீகரமாகவும் தோற்றமளிக்கிறார், சமீப காலங்களில் தோற்றங்களிலிருந்து மிக மாறுபட்ட தோற்றத்தில் மெகாஸ்டார் ரசிகர்களை ஈர்க்கிறார். ஃபேண்டஸி சாகசத்தில் அவர் ஜொலிக்கிறார். அதிரடி காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆன்டிஹீரோவின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அப்பாத்திரம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர நடிகர்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீஸர் முதன்மையாக சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இந்த அற்புதமான டீசரைப் பார்த்த பிறகு, விஸ்வம்பராவைப் பார்ப்பதற்கான ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு: 

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ் 

இசை: எம்.எம்.கீரவாணி 

ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி 

வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 

பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் 

ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ் 

லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

https://youtu.be/NCv-wz1nSnE

BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !!

BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் BTG Universal நிறுவனம் !!

BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.   

தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ''ரெட்டதல" படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது. 

தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி 20  ஆண்டுகளை கடந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர்களின் விருப்பமிகு நாயகனாக, குடும்பங்கள் கொண்டாடும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.  

ரசிகர்கள்  ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் BTG Universal நிறுவனத்தின் தயாரிப்பில்

அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

 

Vettaiyan - திரைப்பட விமர்சனம்


 சட்டத்தை கையில் எடுத்தாலும் நீதிக்காக எப்போதும் நிற்கும் போலீஸ்காரர் ரஜினிகாந்த்.

இதற்கிடையில், அமிதாப் பச்சன் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை சாம்பியனாவார், அவர் சட்டம் எல்லாவற்றிற்கும் மேலானது என்று நம்புகிறார்.

ரஜினிகாந்த் தனது சொந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வைப்பதைச் சுற்றியே படத்தின் மையக் கதை சுழல்கிறது.

இந்த வழக்கில் ராணா எப்படி இணைக்கப்பட்டார், அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மையக்கரு.

டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தின் முதல் பாதியில் சில ஈர்க்கக்கூடிய விசாரணை காட்சிகள் மற்றும் வெகுஜன தருணங்கள் உள்ளன.

ரஜினிகாந்தின் பிரமாண்ட தொடக்கமும், ஃபஹத் பாசிலுடனான அவரது காட்சிகளும் தனித்து நிற்கின்றன.

இரண்டாம் பாதி உணர்ச்சி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளால் உயர்த்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் வழக்கம் போல் அநாயாசமாக கதாபாத்திரத்தில் கலக்கி, உணர்ச்சி மற்றும் மாஸ் கவர்ச்சியை நேர்த்தியாக மாற்றுகிறார்.

ஃபஹத் ஃபாசில் பார்ப்பதற்கு விருந்தாக இருக்கிறார் மற்றும் அவரது கதாபாத்திரத்திற்கு முழு நீதி செய்துள்ளார்.

அமிதாப் பச்சன் திரைப்படத்தின் தார்மீக திசைகாட்டியாகச் செயல்படுகிறார் மற்றும் அவரது பாத்திரத்தை சித்தரித்திருப்பது கூடுதல் நன்மை.

ராணா டகுபதி மற்றும் மஞ்சு வாரியர் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

அனிருததின் பிஜிஎம் கதையுடன் இணைந்துள்ளது மற்றும் வெகுஜன ரஜினி தருணங்களும் உள்ளன.

படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் நன்றாக உள்ளன.

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி !!*

*பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!* *போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் ச...