Tuesday, June 24, 2025

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர்

*ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!*

*ZEE5 தளத்தில் வெளியான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ Google தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது  !!*

*ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!* 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது.  திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. 

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.   இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது. 

எழுத்தாளர் ஷாரிஸ் முகமது  எழுதியுள்ள இப்படத்தை ,அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியுள்ளார்.  

பிரைடல் பொட்டிக் வைத்திருக்கும் 40 வயது முதிரிளம் இளைஞனான  பிரின்ஸ் சக்கலக்கல் (திலீப்), இன்றைய ZenG தலைமுறை இளைஞியை (சஞ்சு) மணக்கிறார். இதனால் அவர் வாழ்விலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் திரைக்கதை 
பரபர சம்பவங்களுடன், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்படி,   வெகு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், சோஷியல் மீடியா, குடும்பங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அழகாக பிரதிபலித்திருக்கும் இந்தப்படம், தமிழக மக்களின் வாழக்கையையும் பிரதிபலிப்பது போல அமைந்திருப்பதால்,  இப்படத்தின் தமிழ் பதிப்பும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், நடிகை ஊர்வசி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனைத்து வயதினரும் கொண்டாடும் ஃபேமிலி எண்டர்டெயினரான இப்படம்,  ஜூன் 20 முதல், ZEE5 இல் ஸ்ட்ரீமிங்  செய்யப்பட்டு வருகிறது. 

Google-ல் ரசிகர்களின் விருப்பத் தேடலில், டிரெண்டிங்கில் #1 இடத்தைப் பிடித்திருக்கும் இப்படத்தை,  ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தவறாமல் கண்டு ரசியுங்கள்!

“ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!”புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!”இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். புஷ்பா 1 & 2 அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது.தண்டேல் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.குபேராசேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!”

“ஹாட்ரிக் ஹிட்,  கலக்கும் ராக்ஸ்டார்  டிஎஸ்பி!”
புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!”
இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில்,  வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர்  ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். 

புஷ்பா 1 & 2 

அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது.  “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என  அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை,  இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது.

தண்டேல் 

சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.

குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.

இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!”

DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*

*'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. 
இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், '' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஒரு நாள் கூத்து'  படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான 'ஃபர்கானா 'படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து' டிஎன்ஏ  ' படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன். 

இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் பணியாற்றிய 'பேச்சி' எனும் முதல் திரைப்படம்  வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன்.  இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. '' என்றார். 

இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ' புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்' என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.  

இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை - கோஷா ஆஸ்பத்திரி - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் - என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். 

இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.  

நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம்.  இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது. 

இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது 'லிஃப்ட் ' கேட்பார்கள்.  இன்று 'லிஃப்ட்' என்பது 'பைக் டாக்சி'யாக மாறிவிட்டது. 

உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், '' கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் - வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து. 

இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், '' தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி  என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும்.  அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது.  இதன் மூலம் ஒரு வலிமையான கதை... ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது.  இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. 

அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். 

இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ...எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது. 

இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம். 

சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும்  கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், '' பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.  
இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. 

ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா. 

படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி.  அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை. 

இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், '' ‌ டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்... எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் ... யாருக்கு பிடிக்கும்... என்றெல்லாம் யோசிக்கவில்லை.  

படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது..‌ படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. 'வேர்ட் ஆஃப் மவுத்' என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.  

படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன். 

இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, 'உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்' என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் - பின்னணி இசையமைப்பாளர் - என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்,  நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

"Good Day" - திரைப்பட விமர்சனம்


 நியூ மாங்க் பிக்சர்ஸ் தயாரித்த 'குட் டே' திரைப்படம், என். அரவிந்தனின் இயக்குநராக அறிமுகமாகும். இவர் தனது சூழல், தனிப்பட்ட பேய்கள் மற்றும் சமூக அநீதியுடன் போராடும் ஒரு மனிதனின் நேர்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சித்தரிப்பை வழங்குகிறார். மைனா நந்தினி, விஜி சுப்பிரமணியம், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், பக்ஸ், வேலா ராமமூர்த்தி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட திறமையான நடிகர்களைக் கொண்ட இந்தப் படம், ஒரு எளிய தொழிலாளியைச் சுற்றி சுழல்கிறது, பிருத்வி ராஜ் ராமலிங்கம் குறிப்பிடத்தக்க ஆழத்துடன் நடித்தார்.

திருப்பூரில் அமைக்கப்பட்ட இந்தப் படம், ஒரு ஆலங்கட்டித் தொழிற்சாலை தொழிலாளியின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது, அவரது அன்றாட போராட்டங்கள் - குறைந்த ஊதியம், ஆதரவற்ற சூழல் மற்றும் தனிமை - பணியிட அநீதிக்கு எதிரான அவரது தார்மீக நிலைப்பாட்டால் தீவிரமடைகின்றன. ஒரு பெண்ணை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சி அவரை நிர்வாகத்துடன் மோதலுக்கு உள்ளாக்குகிறது, இதனால் அவருக்கு ஊதியம் மற்றும் அவமானம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் மீறி, அவர் தனது அடிப்படை மனிதநேயத்தை ஒருபோதும் இழக்கவில்லை.

பிருத்விராஜ் ராமலிங்கம் ஒரு சவாலான பாத்திரத்தில் பிரகாசிக்கிறார், ஒரு குடிகாரனின் பாதிப்பு மற்றும் விரக்தியை ஒரு நிலையான உணர்ச்சி தாளத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் நம்பத்தகுந்த முறையில் சித்தரிக்கிறார். படத்தின் மையக்கரு அவரது நடிப்புதான், ஒவ்வொரு காட்சியையும் நம்பகத்தன்மையுடன் நங்கூரமிடுகிறது. மைனா நந்தினியும் சமமாக ஈர்க்கக்கூடியவர், மென்மையான பாசத்தையும் உறுதியான மறுப்பையும் சமநிலைப்படுத்தி, தனது கதாபாத்திரத்தின் உணர்ச்சி மோதலை அழகாகப் படம்பிடித்துள்ளார். சிந்தனைமிக்க காவல் அதிகாரியாக விஜி சுப்பிரமணியம், நுட்பமான வெளிப்பாடுகள் மற்றும் அடுக்கு இருப்புடன் ஒரு தனித்துவமான நடிப்பை வழங்குகிறார்.

இயக்குனர் அரவிந்தனின் கதைசொல்லல் உணர்திறன் மற்றும் கவனிக்கத்தக்கது, குறிப்பாக ஒரு பிரச்சனைக்குரிய மனிதனின் மனநிலையை ஆராய்வதில். பிற்பாதியில் திரைக்கதை சற்று தடுமாறினாலும், யதார்த்தம் மற்றும் உணர்ச்சி நுணுக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. கண்டிப்பான ஆய்வாளராக விஜய் முருகனும் கதைக்கு தீவிரத்தை சேர்க்கிறார்.

தொழில்நுட்ப ரீதியாக, படம் இசை மற்றும் பாடல் வரிகளில் சிறந்து விளங்குகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் கார்த்திக் நேத்தாவின் எளிமையான ஆனால் அர்த்தமுள்ள பாடல் வரிகள் முக்கிய தருணங்களை உணர்ச்சி அதிர்வுகளுடன் உயர்த்துகின்றன.

சில கதை தவறுகள் மற்றும் அவ்வப்போது அதிகப்படியான நாடகமயமாக்கல் இருந்தபோதிலும், "குட் டே" உடைந்த உள்ளங்களில் கூட உள்ளார்ந்த நன்மை எவ்வாறு பிரகாசிக்க முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது. இது இரக்கம், வலி ​​மற்றும் அமைதியான எதிர்ப்பைப் பேசும் ஒரு பாராட்டத்தக்க அறிமுகமாகும் - இதயத்தில் நீடிக்கும் தருணங்களுடன்.

"Good Day"

நடிகர்கள் :
பிரித்திவிராஜ் ராமலிங்கம்
காளி வெங்கட்
மைனா நந்தினி
ஆடுகளம் முருகதாஸ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)
வேல ராமமூர்த்தி
போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்)
ஜீவா சுப்பிரமணியம்
பாரத் நெல்லையப்பன்

படக்குழுவினர் :
தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்

இயக்குனர் : N அரவிந்தன்
திரைக்கதை | வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
கேமரா & படதொகுப்பு : மதன் குணதேவ்
பாடலாசிரியர் & கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா
இசை : கோவிந்த் வசந்தா
கதை கரு : பிரித்திவிராஜ்  ராமலிங்கம்
இணை இயக்குனர் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
சவுண்ட் டிசைன் : s.அழகிய கூத்தன்
                                      சுரேன்.G
சவுண்ட் மிக்ஸிங் : சுரேன்.G
ஸ்டண்ட் இயக்குனர் : ஓம் பிரகாஷ்
டைட்டில் ரிவீல் & டீஸர் & ட்ரைலர் இசை : லியோன் & டார்வின்
துணை இயக்குனர் : சே மதன்
நிர்வாக தயாரிப்பாளர் : கோவை V.விஜய குமார்
நிர்வாக மேலாளர் : தனசேகர்
P.R.O : சதீஷ் (AIM)
ஸ்டில்ஸ் : ஜீவா சுப்பிரமணியம் – மக்கா பகத் – மணிகண்டன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் : சபா டிசைன்ஸ்
லைன் தயாரிப்பாளர் : ஜே பாண்டியராஜ் – தாமோதரன் வீரகுமார்
அட்மின் : கார்த்திகேயன்

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும்

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும்

"வா தமிழா வா
கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா" ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
மக்களின் குரலாய், மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.
 
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

Monday, June 23, 2025

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

இத்தனை வருடங்களில் எனக்கென்று தனியாக போஸ்டர் வெளியிட்டு புதிய நம்பிக்கை அளித்தது ‘கண்ணப்பா’ படம் தான் -  நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி

கிறிஸ்தவனான நானே சொல்கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கும் - படத்தொகுப்பாளர் ஆண்டனி

சிவபக்தி, கடவுள் பக்தி உடையவர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் - விநியோகஸ்தர் சக்திவேலன்

சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!


முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. இதில், நடிகர்  சரத்குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் சம்பத் ராம் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “மேடையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம், சரத்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, ‘அரசு’ படத்தில் இருந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அரசு படத்தின் போது அவர் என்னை கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி, இவருக்கு எதாவது நல்ல கேரக்டர் கொடுங்க என்று சொன்னார், எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கிறார், அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எடிட்டர் ஆண்டனி சார், சைனர் என்ற கன்னட படத்தில் நடித்தேன், அதற்கு அவர் தான் எடிட்டிங். அவர் சிறந்த எடிட்டர் என்பது தெரியும், இந்த படத்தில் அவரது பணி பெரிய அளவில் பேசப்படும். கடந்த வாரம் ஐதராபாத்தில் கண்ணப்பா வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற அனைவரும் சொன்னது என்னவென்றால் பிரபாஸ் சாரின் அறிமுகத்திற்குப் பிறகு படம் மிக சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவங்க எல்லோரும் அடிமனதில் இருந்து மகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வெற்றி படமாக இருக்கும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸியின் இசை மிக சிறப்பாக இருந்தது. ஐதராபாத்தில் அவரது பணி பேசப்பட்டது, சரத்சார் கூட பாடல்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக்கொண்டார். சென்னையில் மிகப்பெரிய அளவில் கண்ணப்பா நிகழ்ச்சி நடத்த இருந்தோம். ஆனால், இந்தியா முழுவதிலும் இருந்து நட்சத்திரங்கள் வர வேண்டி இருந்தது, நேரம் இல்லாததால் அது நடக்கவில்லை. அதனால் தான் சிறு குழுவாக நாங்கள் உங்களை சந்திக்கிறோம். படம் மிக சிறப்பாக இருக்கிறது, படத்தை ரசிகர்கள் பார்த்தப் பிறகு அவர்கள் பலரிடம் படத்தை பற்றி சொல்வார்கள். எனவே, ஊடகங்கள் இந்த படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு, கண்ணப்பா படத்தில் வாய்ப்பளித்த மோகன் பாபு சாருக்கு நன்றி. என் நண்பர் மூலம் அவரிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அதில் இருந்து அவரை நான் பின் தொடர்ந்தேன். அதன்படி எனக்கு அவர் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார். அவர் இல்லை என்றால் இந்த படத்தில் நான் இல்லை, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த மோகன் பாபு சார், விஷ்ணு மஞ்சு சார் இருவருக்கும் நன்றி. நான் இதுவரை 10 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறேன், எனக்கும் தனியாக போஸ்டர் வெளியிட்டு என் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியது கண்ணப்பா படத்தில் தான் முதல் முறையாக நடந்திருக்கிறது. இதுவரை எந்த படத்திலும் எனக்கென்று தனி போஸ்டர் வெளியிட்டதில்லை. எனக்கு இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “மோகன் பாபு சார் மற்றும் விஷ்ணு மஞ்சுக்கு நன்றி. இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றி. சரத்குமார் சார் எனக்கு சிறந்த நண்பர். இந்த படத்தில் மூன்று டிராக்குகள் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், காதல் கதை மற்றும் ஒரு கிராமத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம், என்று மூன்று டிராக்குகள் இருப்பதால் சிலருக்கு படம் நீளமாக இருப்பது போல் தோன்றும், ஆனால், அந்த உணர்வே உங்களுக்கு ஏற்படாத வகையில் படம் கிரிப்பாக இருக்கும். இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சரத் சார் நடித்திருக்கிறார். சூப்பராக நடித்திருக்கிறார், இன்னும் 25 வருடங்கள் அவர் நடிப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேரை அப்படியே தூக்குகிறார், ரியலாக எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியை பார்த்ததும் சரத் சாருக்கு போன் போட்டு, சூப்பர் சார் என்று சொன்னேன். 

இந்த படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, கதையை மிக சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கிறது. கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இறுதியில் நீங்கள் நிச்சயம் கண்கலங்குவீர்கள். எனவே இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து படங்களிலும் பிளஸ் மற்றும் மைனஸ் இருக்கும், நீங்கள் பிளஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும், நன்றி.” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “சரத்குமார் சார் ஒரு நாள் எனக்கு போன் போட்டு, கண்ணப்பா படத்தை தமிழ்நாடு ரிலீஸ் பண்றீங்களா? என்று கேட்டார். சார், இது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு சார், என்று சொன்னேன். பிறகு கண்ணப்பா படத்தை தமிழ்நாட்டில் நல்லபடியாக ரிலீஸ் பண்ணிக் கொடுத்துடுங்க என்றார். பொதுவாக சினிமா வியாபாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடக்கும், எப்படி பண்ண போகிறோம் என்ற ரீதியில் சில ஆலோசனைகள் நடக்கும், என்று எதிர்பார்த்தேன். அப்போது அங்கிருந்து எனக்கு விஷ்ணு மஞ்சு சார் போன் போட்டார். அவ்வளவு பெரிய ஹீரோ, பான் இந்தியா பட ஹீரோ அவரே எனக்கு போன் போட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் இரண்டு விசயங்களை மட்டுமே சொன்னார், எங்க குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம், நல்லபடியாக ரிலீஸ் பண்ணுங்க, என்று சொன்னார். சினிமா மீது உள்ள காதல் தான் அவரை இப்படி சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன். பிறகு டிரைலர் பார்த்தேன், அதில் அவர் சிவலிங்கத்தை கட்டிப்பிடிப்பார், அந்த காட்சியை பார்க்கும் போது, அவர் பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தது. இந்த படத்தை அவர் எவ்வளவு காதலித்திருக்கிறார், என்பது அந்த சிவலிங்கத்தை அவர் கட்டிப்பிடிப்பதிலே தெரிந்தது. இங்கே இருப்பவர்கள் கண்ணப்பா கதையை சிறு வயதில் இருந்தே கேட்டிருப்போம். ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட நாம் காலகாலமாக கேட்டு வந்த கதைகளை நாம் திரையில் பார்க்கும் போது, அது அவர்களை தொடர்புபடுத்திக் கொள்ளும். இந்த கண்ணப்பா படத்தை பொறுத்தவரை சிவபக்தி மற்றும் கடவுள் பக்தி உடையவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்டமான காட்சி அமைப்பு என படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

இதில், சரத்குமார் சார் மிக சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வேடம் என்ன என்பது டிரைலரில் தெரிகிறது. ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். அவர் தசரதன் படத்தில் கடவுள் பக்தி இல்லாதவராக நடித்திருப்பார், ஆனால் இதில் கடவுள் பக்தி உடையவராக நடித்திருக்கிறார். இந்த படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படத்தை நிறைய உழைப்புகளோடும், கனவுகளோடும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆண்டனி சாரின் கத்திரி மட்டுமே பேசும், அவர் பேச மாட்டார். ஆனால், அவரே இங்கு அதிகம் பேசியிருக்கிறார் என்றால் இந்த படம் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள். சம்பத் ராம் சார் இந்த படத்தின் சிறு சிறு அப்டேட்களை கூட சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டிருந்தார். மிகப்பெரிய உழைப்பை போட்டு பண்ணக்கூடிய படங்கள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இந்த படத்தையும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மிகப்பெரிய அளவில் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது. சரி நான் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தேன். இதை அறிந்த விஷ்ணு மஞ்சு, நம்பளே பண்ணலாம்,  நீங்களே படத்தின் சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்துவிடுங்கள் என்றார். அதனால் தான் இந்த ஏற்பாடு.

கண்ணப்பா ஒருவரிக்கதை தான். 63 நாயனார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவபக்தர்களில் மிக சிறப்பு வாய்ந்தவர், என்பது நமக்கு தெரியும். ஏற்கனவே ராஜ்குமார் சாரும், கிருஷ்ணா சாரும் கண்ணப்பா படத்தை பண்ணிவிட்டார்கள். இதை விஷ்ணுவின் கோணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கையற்றவர், பிறகு நம்பிக்கையுள்ளவராக மாறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், அவருக்கான போராட்டம் என்பது தான் இந்த படத்தின் கரு. மோகன் பாபு சாருக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் நான் தொடர்ந்து வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இதற்கு காரணம் படத்தின் லொக்கேஷன் தான். இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்து தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம், டிஐ-யில் பண்ணாத ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். அந்த இடத்தில் 10 நாட்கள் அல்லது 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் 120 நாட்கள் வெளிநாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அதற்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. அந்த காலத்தில் இந்த பூமி இப்படி தான் இருந்திருக்கும் என்று அந்த இடத்தை தேர்வு செய்தார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும், பணியை சிறப்பாக முடித்தோம்.

இந்த போராட்டம், சிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசும் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. அப்படி ஒரு மனப்போரட்டத்தில் இருக்கும் தின்னா எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது தான் கதை. நான் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். பல முறை மோகன் பாபு சாருடன் படம் பண்ணுவதாக இருந்து பண்ண முடியாமல் போனது, ஆனால் இந்த படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி. முகேஷ் குமார் சிங் மகாபாரதத்தை சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார், அவர் 3 ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை பிரமாண்டமாக எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார், அப்படிப்பட்டவரை அழைத்து கண்ணப்பா நாயனாரின் கதையை எடுக்க சொன்னது வியப்பாக இருந்தாலும், அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம், எனக்கும் தின்னாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரியது. அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் சிறப்பாக இருக்கும் என்று ஆண்டனி சொன்னார், அவர் படத்தை முதலில் பார்த்தவர் என்பதால் அதை சொல்லியிருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஒளிப்பதிவாளர், ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் என்று மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இது மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும், ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் தெரிய வேண்டும், என்று தான் மணி சார் அதை படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை விஷ்ணு தனது கோணத்தில், சிவபக்தரான கண்ணப்பா அதற்கு முன் எப்படி இருந்தார், அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சொல்லியிருக்கிறார். அது சிறிய கதையாக இருந்தாலும் கூட, விஷ்ணு கோணத்தில் அது மிக சிறப்பாக வந்திருக்கிறது, அதை அவர் சாதாரணமாகவும் சொல்லவில்லை, பல ஆராய்ச்சிகள் செய்து, கடினமான உழைப்பை செலுத்தி எடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும், என்று நினைக்கிறேன்.

கண்ணப்பாவின் கதை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்றால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இரண்டாவது பக்தி, இன்று எவ்வளவு பேருக்கு பக்தி இருக்கிறது, என்று தெரியவில்லை. தினமும் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம், ஆனால் பிரச்சனை வந்தால் நிச்சயம் கோவிலுக்கு செல்வோம். இறைவன் இருக்கிறார் என்பதை மேலும் மேலும் சொல்லி, அதிலும் சிவபக்தியை பற்றி சொல்லி, பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை, அது ஏசுவாக இருக்கலாம், அல்லாவாக இருக்கலாம், கடவுள் இருக்கிறார், என்பதை சொல்ல வேண்டும். தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில், கண்ணப்பா படத்தை பார்க்கும் போது இப்படி ஒரு சிவபக்தர் இருந்தார், என்பதை மக்கள் அறிந்துக் கொள்வார்கள். பக்தி என்பது அவர் அவர் மனதில் தோன்றுவது தான், அந்த பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய படம் தான் கண்ணப்பா. உங்களுடைய ஆதரவோடும், மக்களின் ஆதரவோடும் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அதேபோல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வையில் இந்த படம் எப்படி இருக்கிறது, என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, “மச்சா உள்ளே வந்துடாதே..” என்றெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம், உங்கள் நண்பர்களுக்கு வேறு ஒரு பார்வை இருக்கலாம், சிலர் பிரபாஸுக்காக படம் பார்க்க வரலாம், எனவே அவர் அவர் பார்வையில் படத்தை பாருங்கள், அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள், என்று சொல்லிக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

Thanks & regards 
Haswath Saravanan PRO


டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!*

*"டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்”  சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!*

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில்,  சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம்,  ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. 

சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம்   Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து,  படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க  மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது. 

முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து,  ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது… 
எங்களுடைய "டிடி நெக்ஸ்ட் லெவல்"  படம்,  Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.  இப்படம்  வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில்,  Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி.  படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. 

இறந்துபோன  திரைப்பட இயக்குநர்  ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட  திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்?  என்பது தான் இப்படத்தின் கதை.  நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது  The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !

Saturday, June 21, 2025

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது

*நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது.

நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புஷ்பா2' திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 'ஸ்ட்ரீ 2', 'பதான்', 'அனிமல்' மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது. 

இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள்தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர். 

இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

Friday, June 20, 2025

ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி !!*

*ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி !!*

*சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!*

*சின்ன மருகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து  கொண்டாடிய திருவிழா !!*


தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சின்ன மருமகள்"  நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி. 

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும்  ஒரு கட்டமாக, மதுரையில்  ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக, சின்ன மருமகள்  சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே,  தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர்.  சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின்  கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது. 


மதியம் சின்ன மருமக்கள் தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.  ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர். 

மாலை, விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, 4000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

 விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் முதலாக அனைத்து நிகழ்ச்சிகளையும், விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

Kuberaa - திரைப்பட விமர்சனம்

 சேகர் கம்முலாவின் கடந்த கால படங்கள் எப்போதும் ஏதோ ஒரு வகையான வாழ்க்கை மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கொண்டு வந்துள்ளன, அதேபோல், அவர் குபேராவைக் கொண்டு வருகிறார், இது ஒரு பிச்சைக்காரனை தங்கள் பணமோசடிக்கு பயன்படுத்தும் ஒரு பெரிய நிறுவனக் குழுவுடன் மோதுகிறது.

படம் ஒரு அற்புதமான கதைக்களத்தைக் கொண்டுள்ளது, மேலும் முதல் பாதியில் அதைப் பயன்படுத்திக் கொள்கிறது, அங்கு அது பல நல்ல காட்சிகளை ஒன்றிணைத்து பந்தை உருட்டிக்கொண்டே செல்கிறது. அதன் பிறகு, படம் மெதுவாகத் தொடங்குகிறது மற்றும் வேகம் குறைகிறது, மேலும் படம் முன்னணி கதாபாத்திரத்தைத் தேடுகிறது, இது படத்தின் ஆரம்ப நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது. இரண்டாம் பாதி இரண்டு கலவையாகும் - முற்றிலும் யதார்த்தமான சூழ்நிலைகள் மற்றும் ஒரு வணிகக் கோணத்துடன் வரும் சிகிச்சையுடன். குபேரா சூடாகவும் குளிராகவும் வீசத் தொடங்குகிறார் - நடிப்புகள் மற்றும் சூழ்நிலைகளின் பயன்பாட்டுடன் தனித்து நிற்கும் பல காட்சிகள் உள்ளன, ஆனால் எங்கோ, அது சரியாக இணைக்கப்படவில்லை என்று உணர்கிறது.

தனுஷின் நடிப்பிலிருந்து படம் பெரிய அளவில் பயனடைகிறது - பல தோற்றங்கள், உரையாடல் மாற்றங்கள், உணர்ச்சி கொந்தளிப்பு மற்றும் நீண்ட பயணம் தேவைப்படும் ஒரு பாத்திரத்தில் அவர் சிறந்தவர். இது நிச்சயமாக அவரது வாழ்க்கையில் சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும்.

நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் பல சாயல்களைக் கொண்டுள்ளது, அவரை இதுபோன்ற ஒரு பாத்திரத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ராஷ்மிகா தொடர்ந்து சரியான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பின்பற்றி வருவதைக் காட்டுகிறார்.

ஒளிப்பதிவில் சில பகுதிகளில் நல்ல பிரேம்கள் உள்ளன, மூடிய கதவுகளுக்குள் வரும்போது, ​​அது கொஞ்சம் யதார்த்தமாக உணர்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சரியாகப் பொருந்தவில்லை, மேலும் படத்திற்கு வலுவான இசை ஆதரவு இருந்திருந்தால் பயனடைந்திருக்கும் என்பதால் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, குபேரா ஒரு நல்ல நிகழ்ச்சியாகும், ஏனெனில் அது கொண்டு வரும் நடிப்புகள் மற்றும் நோக்கத்திற்கு நன்றி. தனுஷ், நாகார்ஜுனா மற்றும் நல்ல திடமான காட்சிகளின் பட்டியல் ஆகியவை பார்க்க வேண்டிய ஒரு படத்தை உருவாக்குகின்றன.

Chennai City Gangsters - திரைப்பட விமர்சனம்

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் இயக்கிய சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், ஒரு வித்தியாசமான கொள்ளை நாடகம், இது தமிழ் சினிமாவிற்கு அதன் துணிச்சலான முன்மாதிரி மற்றும் ஸ்டைலிஷ் செயல்படுத்தலுடன் ஒரு புதிய சுவையை கொண்டு வருகிறது. இந்த வகையின் அனைத்து பாரம்பரிய உயர் குறிப்புகளையும் இது எட்டவில்லை என்றாலும், அது அதன் சொந்த பாதையை செதுக்கத் துணிகிறது, இது வித்தியாசமான ஒன்றைத் தேடும் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பார்வையாக அமைகிறது.

ஒரு வங்கி ஊழியர் எதிர்பாராத விதமாக நான்கு முன்னாள் குண்டர்களுடன் ஒரு துணிச்சலான கொள்ளைக்காக இணைகிறார் என்ற கதையை இந்தப் படம் பின்பற்றுகிறது. இந்த வழக்கத்திற்கு மாறான கூட்டணி கதைக்கு ஒரு சுவாரஸ்யமான அடுக்கைச் சேர்க்கிறது, இருண்ட நகைச்சுவை, கணிக்க முடியாத தன்மை மற்றும் உணர்ச்சிபூர்வமான தொனிகளின் தருணங்களை வழங்குகிறது. வைபவ் தனது இயல்பான திரை இருப்புடன் முன்னிலை வகிக்கிறார், தனது பாத்திரத்திற்கு வசீகரத்தையும் ஆற்றலையும் தருகிறார். அதுல்யா ரவி தனது தன்னம்பிக்கையான நடிப்பால் தீப்பொறியைச் சேர்க்கிறார், அதே நேரத்தில் ஆனந்தராஜ் மற்றும் ஜான் விஜய் போன்ற மூத்த நடிகர்கள் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும் உறுதியான ஆதரவை வழங்குகிறார்கள்.

படத்தின் தனித்துவமான கூறுகளில் ஒன்று டி. இமானின் பின்னணி இசை, இது பதற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் படத்திற்கு ஒரு துடிப்பான தாளத்தை அளிக்கிறது. ஒளிப்பதிவும் அதன் நேர்த்தியான காட்சியமைப்புகள் மற்றும் பல காட்சிகளை உயர்த்தும் துடிப்பான தொனிகளுக்காக பாராட்டுக்குரியது. எடிட்டிங் சில நேரங்களில் சீரற்றதாக உணர்ந்தாலும், பெரும்பாலான இயக்க நேரத்தில் அது ஒரு நல்ல ஓட்டத்தை பராமரிக்க முடிகிறது.

படத்தின் பலம் அதன் லட்சியத்திலும், வித்தியாசமான நகைச்சுவையுடன் ஆக்‌ஷனைக் கலக்கும் முயற்சியிலும் உள்ளது. கதை எப்போதாவது தடுமாறலாம் என்றாலும், தனித்துவமான கதாபாத்திர இயக்கவியல் மற்றும் பகட்டான சிகிச்சை அதை ஒரு வழக்கமான திருட்டு படமாக மட்டும் அல்ல. குறைபாடுள்ள கதைகள் கூட நேர்மையுடனும் காட்சித் திறமையுடனும் சொல்லப்படும்போது ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் வகையை மறுவரையறை செய்யலாம், ஆனால் இது நிச்சயமாக வித்தியாசமான ஒன்றை வழங்குகிறது - பாணி, அணுகுமுறை மற்றும் சில மறக்கமுடியாத தருணங்களுடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு முயற்சி. தமிழ் சினிமாவில் சோதனை கதைசொல்லல் மற்றும் புதிய கண்ணோட்டங்களுக்கு பார்வையாளர்களிடையே பாராட்டு கிடைக்கும் ஒரு படம் இது.

 

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர்

*ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!* *ZEE5 தளத்தில் வெளியான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ Go...