Friday, December 19, 2025

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!*

*பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்”  மூலம் தொடங்கி வைத்தார்!!*

பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த  முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.

இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார்.

“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்தார்.

மேலும் அவர் பகிர்ந்துகொண்டதாவது:

ஒவ்வொரு குரலும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது.
ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம்.
#TheScriptCraft சர்வதேச குறும்பட திரைப்பட விழா  இது இங்கே உங்களுக்காக, 
உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.

https://www.thescriptcraft.com/register/director
@TSCWriters #Vaishnav @uppalapatipramod

பாரம்பரிய போட்டிகளிலிருந்து மாறுபட்டு, இந்த விழா உலகின் எந்த மூலையிலிருந்தும் கதை சொல்லிகளை ஆதரிக்கிறது. 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், 90 நாட்கள் போட்டி காலத்தில் பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.

அந்த வீடியோவில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளதாவது :

“ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.”

இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது :

“YouTube-ல் பார்த்த ஒரு குறும்படம் மூலமாகத்தான் நான் அனுதீப்பை கண்டுபிடித்தேன். அதிலிருந்தே ‘ஜதி ரத்னாலு’ படம் உருவானது. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.”

இயக்குநர் ஹனு ராகவபுடி மேலும் கூறியதாவது:

“பல இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்கள் பார்வையை வெளிப்படுத்துங்கள், உங்கள் கனவுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்.”

ஒரு பிரத்யேக கூட்டணியாக, புதிய  இயக்குநர்களுக்கான கூட்டாளியாக க்விக் டிவி இதில் இணைகிறது. க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இணையதளத்தில் தற்போது பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரியான சமர்ப்பிப்பு தேதிகள் மற்றும் பிரிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
“அடுத்த பார்வையாளர்களை கவரும் இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”


பிரபாஸ் அவர்களின் துணிச்சலான கனவுத் திட்டமான தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், தால்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. புதிய திறமைகளை வளர்த்து, எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வலுவான மேடையை வழங்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை பொறுத்தவரையில், பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப், ஃபௌஸி, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி பாகம் 2, சலார் பாகம் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

https://www.instagram.com/reel/DScvkk5kovH/?igsh=bmdxaWVmbGt0bmp4

*The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival*

The undisputed pan-India Rebel Star Prabhas, often hailed as one of the greatest actor on the face of earth, known for blockbuster hits like Baahubali, Salaar, and Kalki 2898 AD today unveiled The Script Craft International Short Film Festival through an electrifying announcement video. This groundbreaking initiative on The Script Craft platform marks a new era in global storytelling, transforming dreams into cinematic careers by giving creators worldwide a direct launchpad to fame, producers, and audiences.

Prabhas, who personally championed this revolutionary platform, emphasized its power to democratize filmmaking. "The Script Craft isn't just a festival—it's where stories become careers," Prabhas shared in the video, rallying filmmakers to seize their moment and wrote, “Every voice deserves a beginning.
Every dream story deserves a chance. #TheScriptCraft International Short Film Festival is here, Inviting storytellers from around the world to begin.

https://www.thescriptcraft.com/register/director @TSCWriters #Vaishnav @uppalapatipramod”. 

Unlike traditional contests, this festival empowers storytellers from every corner of the globe, with short films of 2 minutes and above in any genre competing over 90 days. Audience votes, likes, and ratings will decide the top three winners, but every submission gains visibility among major production houses already scouting The Script Craft for fresh talent.

In the video, Sandeep Reddy Vanga appeared and said, “Making a short film is the most important aspect in pursuing the filmmaking process. Whatever you have achieved on writing on paper and what you will achieve on screen are exactly two different realities. For all the aspirants, it's the right time to enrol and make the best out of it.”

Nag Ashwin also said, “I found Anudeep through a short film on YouTube and that's how ‘Jathi Ratnalu’ happened.  I think more than a film school, your work and what you understand of your work is so important. I hope all of you utilise this opportunity to submit your films, make your films and make the best out of it.” 

Hanu Raghavapudi also added saying, “Many youngsters have a desire to enter the film industry and direct films. Present your vision, conquer your dream. Good luck”

In an exclusive association, Quick TV joins as the partner for emerging directors. Quick TV's internal jury will select 15 standout filmmakers, providing each with a fully funded 90-minute script, complete production support, and a global premiere on the Quick TV platform. This ensures 15 creators leap from short films to professional directing careers with international exposure.

Registrations are now open at TheScriptCraft.com, with exact submission dates and categories to be announced soon. A Script Craft spokesperson added: “We believe the next visionary filmmaker can come from anywhere. This platform gives every storyteller a voice, a stage, and an opportunity to be seen by global audiences and leading production houses.”

Prabhas's bold vision, The Script Craft, founded by Thaalla Vaishnav and Pramod Uppalapati, is designed to nurture new talent and provide writers, storytellers, and directors with a platform to showcase their creativity. On the work front Prabhas has a mega lineup of highly anticipated projects including The RajaSaab, Fauzi, Spirit, Kakli 2898 AD Part 2, Salaar Part 2.

https://www.instagram.com/reel/DScvkk5kovH/?igsh=bmdxaWVmbGt0bmp4

Tuesday, December 16, 2025

திரைக்கதையில்.. கலைஞர் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!

பரபரப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா” மொகாத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பான கதைக்களத்தில் கதை நகர்ந்து வரும் கதையில் தற்போது, தனது குழந்தை இறந்து விட்டதாக நினைத்து ரஞ்சனி மற்றும் விக்ரம் திதி கொடுக்க, ரஞ்சனியின் மகளின் ஜாதகத்தை பார்த்த ஐயர், அவளது குழந்தை உயிரோடு இருப்பதாக கூறிய நிலையில், கதை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
 
இறந்துவிட்டதாக நினைத்த தனது மகள் உயிருடன் இருப்பதாக கிடைத்த செய்தி ரஞ்சனிக்கு புத்துணர்ச்சி அளிக்க, தனது மகளை தேடும் பணியில் இறங்குகிறாள். மறுபுறம், இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட வில்லன்கள், இதை வைத்து ரஞ்சனியை ஆட்டிப் படைக்க நினைக்கின்றனர்.
 
இப்படியான சூழ்ச்சிகளைத் தாண்டி, ரஞ்சனி தனது மகளை கண்டுபிடித்து மீட்பாளா, இதற்கிடையே அவளுக்கு வரும் தடங்கள்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே விறுவிறுப்பான மீதிக் கதையாகும்.

குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா !!

குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா  !!

தமிழ் சினிமாவில்  இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார். 

தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கவனம் ஈர்த்து வருபவர்  இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா. முன்னணி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் தி கோட் லைஃப் பட ஒளிப்பதிவாளர் KS  சுனில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.  தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் ஒளிப்பதிவாளராக  அறிமுகமானார். 

ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம், சிம்பு நடித்த பத்து தல, செல்வராகவன், நட்டி நடித்த பகாசூரன், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் மேலும் முகிலன் வெப் சீரிஸிலும், தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸிலும் சிரப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். மேலும் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாகர்ஜினா உப்ட பலருடன் 500 க்கும் மேற்பட்ட  விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பலத்த பாராட்டுக்களை பெற்று வரும் சோனி லைவ் ott யில் வெளியாகி உள்ள குற்றம் புரிந்தவன் குறித்து கூறுகையில்.., 
இயக்குநர் செல்வமணி முனியப்பன் அவர்களின் எழுத்து மற்றும் பார்வை மிகத் தெளிவாக இருந்தது.  இந்த சீரிஸின் திரைக்கதை முழுக்க இயல்புத்தன்மையும், உளவியல் ஆழமும் கொண்டதாக இருந்தது; அதுவே ஒளிப்பதிவின் காட்சியமைப்பை தீர்மானிக்க முக்கிய காரணமாக அமைந்தது.  தயாரிப்பு நிறுவனம் ஹாப்பி யூனிகார்ன் உடன் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், இதுவரை நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மிக எளிதாக இருந்தது. தற்போது அந்த நிறுவனம் நீண்ட வடிவ கதையாக்கத்திற்கு (long format) மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, மீண்டும் அவர்களுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் பணியாற்றியது மகிழ்ச்சி.

குற்றம் புரிந்தவன் இந்த அளவு பாராட்டுக்களைக் குவிக்கும் என நினைக்கவில்லை. எல்லோரும் என் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

பொதுவாக திரைப்படங்களுக்கும், சீரிஸிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோயிஸம்,  உச்சகட்டங்கள் எதுவும் சீரிஸில் இருக்காது. சீரிஸ் முழுக்க இயல்பான டிராமா இருக்கும். இந்தக்கதை குற்றம் புரிந்தவனின் மனநிலை சம்மந்தப்பட்டது. அதை திரையில் கொண்டு வர, முழுக்க க்ரே டோனில், நிஜத்தில் ஒரு ரூமில் எவ்வளவு வெலிச்சம் இருக்குமோ அதே போல் ஒளிப்பதிவு செய்தோம். இப்போது ரசிகர்கள் தனியாக குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. 


அமிதாப்பச்சன், கமல்ஹாசன் என முன்னணி நடட்சத்திரங்களோரு பணிபுரிந்தது குறித்தும் விளம்பர படங்கள் குறித்தும் கூறும்போது.., 

விளம்பர படங்கள் எப்போதும் ஒளிப்பதிவாளரை நம்பித் தான் இருக்கும், ஒரு நிமிடத்தில் ரசிகனை அசையவிடாமல் இழுத்துப் பிடிக்க வேண்டும்.  விளம்பரம் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு  விளமபரங்மள் செய்துள்ளேன் எல்லாமே மிகச்சிறந்த அனுபவம்.

நடிகர் அமிதாப்பச்சன் சொன்ன நேரத்தில் செட்டில் இருப்பார். அவரது  அர்ப்பணிப்பு ஆச்சரியம் தந்தது.  நிறைய நடிகர்களுடன் வேலை பார்த்திருந்தாலும் கமல்ஹாசன் சாருடன் மையம் விளம்பரத்துக்காக வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். முதன்முறை வாழ்க்கையில் கூஸ்பம்ஸாக உணர்ந்தேன். அவருடன் வேலை பார்த்த போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்

நடிகர் சிம்புவுடன் பத்து தல படத்தில் பணியாற்றியது குறித்து கூறுகையில்.., 
முதல் இரண்டு படங்களை ஒப்பிடுகையில் பத்து தல படம் மிகப்பெரிய பட்ஜெட் படம். அப்படத்தின் ரயில் காட்சிக்காக இந்தியா முழுதும் சுற்றினோம். ஆக்சன் காட்சிகள் 200, 300 பேரை வைத்து எடுத்தோம். சிம்பு ஒரு ஜீனியஸ் அவருக்கு எல்லாம் தெரியும், என்ன லென்ஸ், என்ன ஷாட் என எல்லாம் தெரியும்,  எதாவது வித்தியாசமாக செய்தால் உடனே பாராட்டுவார். அப்படத்திற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. 

பத்து தல படம் முழுக்க ஆக்சன் படம் ஆனால் 
விஜய் ஆண்டனியின்  ரோமியோ ஒரு காதல் படம். அதில் முழுதாக வேறொரு கலர் பேளட்டில், ரொமான்ஸ் ஃபீல் வருமாறு வேலை பார்த்தேன். அதில் விஜய் ஆண்டனி மிகவும் அழகாக இருந்ததாக இப்போது வரை அனைவரும் பாராட்டுகிறார்கள். 

ஒரு பெரிய பிரியட் படத்தில் வேலை செய்ய  வேண்டும் என்பது என் கனவு. நல்ல திரைக்கதை, நல்ல டிராமா படங்களில் அடுத்தடுத்து வேலை பார்க்க ஆசை. குற்றம் புரிந்தவன் சீரிஸிற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வருகிறது. இயக்குநரின் கனவை அவர் நினைத்தது போல், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி திரையில் கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம் என்றார். 

தமிழ் திரையுலகில்  கவனம் ஈர்த்து வரும் ஃபரூக் ஜே.பாஷா,  தமிழின் அடுத்த தலைமுறையின் சிறந்த படைப்பாளியாக மிளிருவார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Friday, December 12, 2025

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!

20 26 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி 'டியர் ரதி' !
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.

படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது,

 "இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது  சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது " என்கிறார்.

படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில்  கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர்.  'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் 'பொறியாளன்', 'சட்டம் என் கையில்' படங்களுக்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு செய்துள்ளவர்  லோகேஷ் இளங்கோவன். இவர் 'நாய்சேகர்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், 'ஹர்ஹரா' படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர்.
 பிரேம் .B  படத்தொகுப்பு செய்துள்ளார்.இவர் செல்வா ஆர்கே - யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் .கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப்,
 நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார்.
இப்படி புதுமுகங்களையும் அனுபவி சாலிகளையும் இணைத்துப் படக் குழு அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். கே .மணி.

வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி இந்த  
'டியர் ரதி'
திரைப்படம் வெளியாக இருக்கிறது.உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

Wednesday, December 10, 2025

கலைஞர் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”

கலைஞர் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”
 
 
இளம் திறமையாளர்களுக்காக கலைஞர்தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி"லிட்டில் சூப்பர் ஹீரோஸ்".
 
வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்தியதிறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாகஉருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட மற்றும் வித்தியாசமான திறமைகள்உலகறியப்படுகிறது.
 
இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக இருக்கும் கருணாகரன் தொகுத்து வழங்குகிறார்.

Wednesday, December 3, 2025

99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு !


 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  படத்திற்காக புத்த  மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு ! 



99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  


மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் 

எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "

 என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.



இந்தப் படத்தில் சபரி, 

ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.


இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா

ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.


படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  கூறும்போது,



"படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு 

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " 

என்று பெயர் வைத்துள்ளோம்.


அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது.எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன?  என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க  முயல்கிறார்கள்.அவர்களின் விரும்பியபடி  மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.


இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் - சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.


மற்றும் படத்தில் AI-CG -  காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது" என்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.மூர்த்தி.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்" நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
 
இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Saturday, November 29, 2025

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!


 ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!


ப்ராமிஸ் 'படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்'

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும்  அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும்.அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் 'சத்தியமேவ ஜெயதே' ,அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக  இருப்பதை அறியலாம்.

அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ்.

கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா  பணியாற்றியுள்ளனர்.

நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,

"இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது.உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள்  இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன.
அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை"என்கிறார்.

படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பற்றிக் கூறும் போது,
"ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வெயில் நகரங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு ,குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர் அணைக்கட்டு போன்ற இடங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.பிச்சாவரம், கடலூர் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்தப் படத்தில் உயிரோட்டமான கதை மட்டுமல்ல,உணர்ச்சிகரமான கதை மாந்தர்களும் உள்ளனர்.அது படத்தின் மீது எங்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் ஆகும்"என்கிறார் இயக்குநர்.

படப்பிடிப்பு நடைபெற்று படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் டிரெய்லர் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை  வாழ்த்தியிருக்கிறார்கள்.

Wednesday, November 26, 2025

கலைஞர் டிவியில்லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும் சீசன் 2” ஆரம்பம்

கலைஞர் டிவியில்
லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும் சீசன் 2” ஆரம்பம்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு "

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " 

துப்பறிவாளர் சிவகுமார் நாயர் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " 

சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் (Silvar Thuch India Productions )
என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு " தீர்ப்பு " என்று பெயர் வைத்துள்ளார்.

இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார்.
கலை இயக்குனர் T. K. தினேஷ்
விளம்பர வடிவமைப்பு - அகிலன்

பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணை எடிட்டிங் - K.மாருதி

நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் சிவகுமார் நாயர் கூறியதாவது..

இந்தப் படத்தை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாக்க இருக்கிறோம்.

இயக்குனர் சிவகுமார் நாயர் எழுத்தாளர் மற்றும்  துப்பறியும் சேவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கிரைம் திரில்லர் படம்  நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சென்னை மற்றும் அட்டப்பாடி, ஊட்டி கொடைக்கானல் போன்ற  இடங்களில் படப்பிடிப்பு
நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவகுமார் நாயர்.

Wednesday, November 19, 2025

கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்

KALAIGNAR TV – GOWRI SERIAL
கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்காவுக்கு எதிராக சூழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ஆவுடையப்பன் குடும்பம் துர்காவை கொல்ல திட்டமிடுகிறது.
 
இந்த இக்கட்டான சூழலில், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் கடப்பா கனகா. முன்பு, துர்கா சிகிச்சையில் இருக்கும் போது, துர்காவாக ஆவுடையப்பனின் குடும்பத்தை ஆட்டி படைத்த கனகா, மீண்டும் வந்திருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால் தொடர் இனி பரபரப்பாக நகரும்.

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!*

*பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவ...