Tuesday, September 16, 2025

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
தற்போதைய கதைக்களத்தில் ஒருபுறம், ரம்யாவும் – தானும் காதலிப்பதாக சரவணன், ரம்யாவின் அப்பாவிடம் கூற, தனது மகளை விட்டுவிடும் படி ரம்யாவின் அப்பா கேட்க, மறுபுறம் சரவணணுக்கு ஈஸ்வரியை மணமுடிக்க, அவளது குடும்பம் சரவணனின் அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறது.
 
இவ்வாறான, இக்கட்டான சூழ்நிலையில், சரவணன் எடுக்கப் போகும் முடிவு என்ன காதலியை கரம் பிடிப்பாரா? அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவாறா? என்கிற பரபரப்போடு கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Saturday, September 13, 2025

ஸ்ரீ லீலா - விராட் நடித்த " கிஸ் மீ இடியட் " செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


 ஸ்ரீ லீலா - விராட் நடித்த  " கிஸ் மீ இடியட் "    செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " கிஸ் மீ இடியட் "  

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள்  ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ்  " படம்  தமிழில்   " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில்  ரீமேக் செய்யப்படுகிறது.

கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும்  ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை - பிரகாஷ் நிக்கி

பாடல்கள் - மணிமாறன்


இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர்.

கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன்  தமிழிலும் இயக்கியுள்ளார்.

கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம்பொரித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள். அந்த கல் பேனரில் பட்டு பிரதிபலித்து ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வீராட் என்பவரின் காரில் படுகிறது . இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது .இந்த சேதத்திற்கு நஷ்டஈடாக வீராட், ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று சொல்கிறார். இதற்க்கு ஸ்ரீ லீலா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுக்கிறார். அதற்க்கு வீராட் மாற்று வழி ஒன்றை சொல்கிறார் . என்னவென்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய்ய சொல்கிறார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்ரீ லீலா உதவியாளராக வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் ஸ்ரீ லீலா சில நிகழ்வின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முற்பட்டு அதனை சொல்ல வரும்பொழுது, வீராட் அவளை வேலையை விட்டு அனுப்புகிறான் . அவளை அனுப்பிய பிறகுதான் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை உணர்கிறான். பின்பு தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சிக்கிறான் . அது வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பது தான் கதை.

செண்டிமெண்ட் கலந்த

இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ள

"  கிஸ் மி இடியட் " செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Friday, September 12, 2025

அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!


 அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

100 பிரபலங்கள் வெளியிடும் 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா  நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது.

வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் .

அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது.

இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். 

இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். 

மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா  இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.

 இவரின் தந்தை 

 திரைப்படங்களில் நடிப்பதில்  மிதுன் சக்கரவர்த்திக்குச்  சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு.  இவர் இப்போது எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார் .படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என அவர் தந்தை கேசி பிரபாத் கூறியுள்ளார்.

 இந்தப் பாடலை திரைப் பிரபலங்கள் 100 பேர் வெளியிட்டார்கள்.

 இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர்,

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான  ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன்,

அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,

இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்  மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்,நடிகைகள் தேவிகாவேணு, தியா.மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் இந்தப் பாடலை பார்த்து பாராட்டி  வலைதளத்தில் வெளியிட்டனர்.

Finding bliss in acclaimming your sweet heart.

Here's Mellifluous #AdiyeVellalagi song.

Direction: Mohammed Imthiyas

Hero -  K.C.P Methun Shakaravarthy Heroine - Jeevitha

Link -  youtu.be/pNjQFSUl0HY?si…

@PROSakthiSaran


சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!*

*சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!*

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :

“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”

மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.
தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு, புதிய இசை பரிமாணத்தை தருமென  எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2025 அன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

*Diljit Dosanjh Records for Kantara Chapter 1 Album – A Musical Union Blessed by Shiva’s Grace*
National award–winning actor-singer Diljit Dosanjh has joined hands with director-actor Rishab Shetty for the music album of Kantara Chapter 1.

Sharing a heartfelt note on Instagram, Diljit recalled how deeply the original Kantara moved him:

“With Big Brother @rishabshettyofficial – salute to this man who made the masterpiece Kantara. I have a personal connection with this film which I can’t tell, but I remember when the song Varaha Roopam played in theatres, I cried in so much ecstasy.”

The acclaimed artiste further expressed his excitement for the upcoming prequel, releasing October 2, and thanked composer B. Ajaneesh Loknath for the creative exchange, saying he “learnt a lot in just one day” with him.

This powerful collaboration between Diljit Dosanjh and Rishab Shetty promises to add a fresh musical dimension to the much-awaited Kantara Chapter 1, produced by Hombale Films.

Kantara Chapter 1 hits theatres worldwide on 2 October 2025.

Wednesday, September 10, 2025

சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!

“சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க - சீசன் 2” என்கிற புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
 
சமைக்க சுவைக்க சமையல் நிகழ்ச்சியின் முதல் சீசனில் தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்ற நிலையில், சமைக்க சுவைக்க நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனானது இலங்கையில் தனித்துவமான உணவுகளை நம் கண் முன் கொண்டு வரப் போகிறது.
 
நிகழ்ச்சிக்காக "கற்றது கையளவு" சமையல் குழுவினர் இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள் இடம்பெறுகிறது.
 
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொரு உணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல் இந்த முறை இலங்கையின் தனித்துவமான உணவுகளை சுவைக்க சமைக்க சுவைக்க சீசன் 2 -வை தொடர்ந்து பாருங்கள்.

Monday, September 8, 2025

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

*பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்*

*அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்*

*பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி*

தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. 

அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில் பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு மற்றும் குடிசை மாற்று வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் திரு பூச்சி முருகன் உள்ளிட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்ட பூவை செங்குட்டுவன், ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல்கள், திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என அளவற்ற பலவற்றை  எழுதியுள்ளார். 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இறைவன் படைத்த உலகை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், திருப்புகழைப் பாட பாட, கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். 

இறுதிவரை இடைவிடாது எழுதி வந்த இவரது இறுதி நூலான 'வாழ்க்கை எனும் நேர்க்கோடு' கடந்த சில தினங்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ் பி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன், கவிஞர் அறிவுமதி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையிலும் பூவை செங்குட்டுவன் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

அய்யன் வள்ளுவனின்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும்
எளிய நடையில்
இசைப்பாடலாக (133 பாடல்கள்)
தந்தவர் இவர் ஒருவரே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனை மனமுவந்து
பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடலை 
'குறள் தரும் பொருள்'
என்ற இசைப் பேழையாக
இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார், பத்திரிகைகள் பலவும் பாராட்டின.

கலைமாமணி (1980), கலைத்துறை வித்தகர் விருதான
கண்ணதாசன் விருது (1997), மகாகவி பாராதியார்
விருது (2020) உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பூவை செங்குட்டுவன் பெற்றுள்ளார். 

பூவை செங்குட்டுவனுக்கு பூவை தயாநிதி மற்றும் எஸ் ரவிச்சந்திரன் ஆகிய மகன்களும், விஜயலட்சுமி மற்றும் கலைச்செல்வி ஆகிய மகள்களும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். பூவை செங்குட்டுவனின் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டார். பூவை செங்குட்டுவன் மனைவியின் தங்கை கணவர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் என்பதும் தங்கையின் மகன்கள் நடிகர் உதயா மற்றும் இயக்குநர் ஏ எல் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



***

இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!*



 *இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!*

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விஜய் கனிஷ்கா விருது பெற்றதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்

இயக்குநர் விக்ரமன் தனது பதிவில், "துபாயில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக என் மகன் விஜய் கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற போது..வாக்கு அளித்து support பண்ணிய அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தனது மகனின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த இந்த விருது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பெரிய விருதுகள்

இது விஜய் கனிஷ்காவுக்குக் கிடைத்த மூன்றாவது விருது என்றும், இதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது மற்றும் மலேசியாவில் நடைபெற்ற Edison Film Award ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளதாகவும் விக்ரமன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விருதுகளுக்கு விஜய் கனிஷ்கா தகுதியானவர்தான் என்பதை 'ஹிட் லிஸ்ட்' படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

'ஹிட் லிஸ்ட்' விமர்சனப் பார்வை

'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம், "ஒரு மந்தமான மதிய பொழுதுக்குப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல த்ரில்லர்" என்று குறிப்பிட்டு, படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு குறித்துப் பாராட்டியது. மேலும், ஒரு புதிய நடிகர் என்ற வகையில் விஜய் கனிஷ்காவின் நடிப்பு திருப்திகரமாக இருந்ததாகக் குறிப்பிட்டது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம், "படத்தில் ஒரு நல்ல மெசேஜ் உள்ளது. படத்தின் இறுதி 30 நிமிடங்கள் த்ரில்லாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. க்ளைமாக்ஸ் யாராலும் கணிக்க முடியாத ட்விஸ்ட்டுடன் இருந்தது" என்று குறிப்பிட்டது. மேலும், புதுமுகமாக இருந்தாலும் விஜய் கனிஷ்கா பயந்த சுபாவம் கொண்ட கதாபாத்திரத்தின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், இது மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் ஒரு யதார்த்தமான கதாபாத்திரமாக இருந்ததாகவும் குறிப்பிட்டது.

டைம்ஸ் நவ் விமர்சனத்தில், "விஜய் கனிஷ்கா ஒரு புதுமுகத்திற்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று பாராட்டி, சில காட்சிகளில் அவர் அனுதாபத்தையும், பயத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.

இயக்குநர் விக்ரமன் குறிப்பிட்டதுபோல, 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், படத்தின் கதைக்கரு, த்ரில்லர் அம்சங்கள் மற்றும் விஜய் கனிஷ்காவின் நடிப்பு ஆகியவற்றிற்காகப் பலரால் பாராட்டப்பட்டுள்ளது. இதுவே அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, September 4, 2025

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* "உஃப் யே சியாபா"

ஏஆர் ரஹ்மான்
இசையமைப்பில்
மொழி,வசனம்
இல்லாமல்
வெளியாகும் திரைப்படம்*  "உஃப் யே சியாபா"

  லவ் பிலிம்ஸ் வழங்கும்
லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர்  ஜி. அசோக் இயக்கிய "உஃப் யே சியாபா"
திரைப்படம்  வரும்  செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.


இது ஒரு  நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல் 
நகைச்சுவைகள் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் உற்சாகமான இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வசனம் கூட இல்லாமல் நடிகர்கள்  சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதுவும் முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது.
இந்த படத்திற்கு இசையையும், நடிகர்களின் வசனமில்லாத நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருந்திருக்கிறது இந்த படம். இது குறித்து அவர் கூறியது.

இந்தபடத்தில்  பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும்   இருந்தது. 
பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாகும். இசை முக்கிய கதைசொல்லலை இயக்கும் இது போன்ற வாய்ப்புகள் அரிதானவை. புதிய  பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன்,
 குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது.
லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது, 
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களின் இந்த முயற்சி  வெற்றி பெரும் விதமாக அமைந்துள்ளது. 


ரஹ்மானின் பின்னணி இசை  வெறும் பின்னணி மட்டுமல்ல - அது படத்தின் குரல். 
அவரது இசை உணர்ச்சிகளை வழிநடத்துகிறது, 
பதற்றத்தை உருவாக்குகிறது, உரையாடல்  இல்லாத நகைச்சுவையை  உணர வைக்கிறது. 

இயக்குனர் 
ஜி. அசோக்  பாகமதி , மற்றும் துர்காமதி போன்ற படங்களை இயக்கியவர் .

 "உஃப் யே சியாபா" மூலம், நவீன பார்வையாளர்களுக்கு அமைதியான கதைசொல்லலில் ஒரு துணிச்சலான பாய்ச்சலை மேற்கொள்கிறார். 

டார்க் காமெடி வகையான இந்த திரைப்படம் 
சிரிப்பையும் சஸ்பென்ஸையும் மட்டும் வைத்து 
ஒரு புதிய   சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது - 
நவீன பாலிவுட்டில்  இதுபோன்ற படங்கள் வருவது அறிது
இது பல வருடங்களுக்குப்பிறகு இந்தியாவில் உருவாக்கும்  படம். திரு கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே இது போன்ற வசனங்கள் இல்லாத படம் வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் சோதனை முயற்சிகள் புதிதல்ல,  தமிழில் ஏற்கனவே இந்த முயற்சி செய்ப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சியை  இந்த தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
இப்படி ஒரு படம் வருவது மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மொழி இல்லாத படமாக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த படத்தை தயக்கமின்றி வெளியிடுகிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.

Wednesday, September 3, 2025

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*

*அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் –  இந்த   மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும்  பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.

ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray)  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது.

ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel) மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ (Vedika Pinto), மோனிகா பன்வார் (Monika Panwa), முகமது ஜீஷான் அய்யூப் (Mohammed Zeeshan Ayyub )மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜீ மியூசிக் கோ வெளியிடும் இசையில், நாட்டுப்புற சுவை கொண்ட புதிய பாடல்கள், “பிலம் தேகோ”, “டியர் கன்ட்ரி”, “பிர்வா” போன்ற ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பில் அனுராக் சாய்கியா, மனன் பாரத்வாஜ், துருவ் கானேகர், ஆயிஷ்வர்ய் தாக்கரே, நிஷிகர் சிப்பர் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பாடகர்களில் அரிஜித் சிங், மதுபந்தி பாக்சி, ஆயிஷ்வர்ய் தாக்கரே உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ப்யாரேலால் யாதவ், மனன் பாரத்வாஜ், சஷ்வத் திவேதி மற்றும் பலர் வரிகள் எழுதியுள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 அன்று உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது.

"நிஷாஞ்சி" டிரெய்லர் பார்வையாளர்களை 2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பப்லூ நிஷான்சி, ரங்கேலி ரிங்கூ மற்றும் டப்லூ ஆகியோரின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மோதிக்கொள்கிறது. அதிரடி துரத்தல்கள், அசத்தல் வசனங்கள், நேரடி மோதல்கள், அன்பு மற்றும் ஏக்கம் நிரம்பிய காட்சிகள் — இவை அனைத்தும் குழப்பமானதாய் இருந்தாலும் ஒரு புதிய அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.  

ஆக்சன், நகைச்சுவை, தேசி ஸ்வாக் ஆகியவற்றால் நிரம்பிய இந்த டிரெய்லர், காதல் மற்றும் இரு கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான போட்டியின் துடிப்பை சம அளவில் வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்தும் ஆர்வத்தை தூண்டுகிறது.

அமேசான் MGM ஸ்டூடியோஸ் மற்றும் பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இயக்குநர் நிகில் மாதோக் கூறியதாவது...,

“நிஷாஞ்சி" டிரெய்லரை வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனுராக் காஷ்யப் போன்ற துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநருடன் இணைந்தது இப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. ஆயிஷ்வர்ய் மற்றும் வேதிகா ஆகியோரின் அருமையான நடிப்பு பார்வையாளர்களை கவரும்.   “திரையரங்கு அனுபவத்தின் மீது  நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகிற ஆண்டுகளில் தனித்துவமான படங்களை திரையரங்குகளில் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். நிஷான்சி அந்தப் பயணத்தின் ஆரம்பமாக முக்கிய பங்காக இருக்கும்.


இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது...,

“நிஷாஞ்சி" பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப்படத்தை தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வை சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே  கூறியதாவது...,

“நிஷாஞ்சி" என்  மனதுக்கு நெருக்கமான படம். இது என் முதல் படம் என்பதற்காக மட்டுமல்ல, பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களாக நடிப்பதன் மூலம் என் நடிப்பின் திறமையை  வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் இது முக்கியமான் படம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை நடிப்பதில் மனதாலும் உடலாலும் பல சவால்களை சந்தித்தேன். அதேசமயம், படத்தின் இசையிலும் பங்களித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா போன்ற தைரியமான கதைகளுக்கு ஆதரவு தரும் நிறுவனத்துடன் அறிமுகமாகுவது பெருமை.  செப்டம்பர் 19 அன்று பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.


நடிகை வேதிகா பின்டோ கூறியதாவது...,

“நிஷாஞ்சி" டிரெய்லர் வெளியாகியிருப்பது இன்னும் கனவுபோல் இருக்கிறது! அனுராக் சார் எப்போதுமே என் விருப்பப்பட்டியலில் இருந்தவர். அவர் இயகத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு நனவாகியது. இந்த படத்தில் நான் நடித்த ரங்கேலி ரிங்கூ முதல் பார்வையில் மென்மையான, இனிமையானவளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் வலிமையான, துணிச்சலானவளாக இருக்கிறாள். அதை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆயிஷ்வர்யுடன் இணைந்து பணிபுரிந்ததும் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. நிஷாஞ்சி திரைப்படம் உணர்ச்சி, டிராமா மற்றும் எனர்ஜி நிறைந்த தேசி என்டர்டெய்னர். செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் நீங்கள் இப்படத்தை அனுபவிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.


ரசிகர்களே தயார் ஆகுங்கள் – "நிஷாஞ்சி" செப்டம்பர் 19 அன்று முதல் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!


அமேசான் MGM ஸ்டூடியோஸ் பற்றி

அமேசான் MGM ஸ்டூடியோஸ் என்பது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உள்ளடக்கங்களை தயாரித்து உலகளவில் விநியோகிக்கும் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம். ஒரிஜினல்  தொடர்கள் Prime Video வில் வெளியாகின்றன. 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இவற்றை பார்வையிட முடியும். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் Prime Video வில் மட்டும் கிடைக்கும். மேலும் MGM+ சேனலுக்கான உள்ளடக்கங்களையும் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

 தொடர்பு: pv-in-pr@amazon.com

 சோஷியல் மீடியா ஹாண்டில்ஸ்: @AmazonMGMStudiosIn

Link : https://bitly.cx/PpRYy

Tuesday, September 2, 2025

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் "வா தமிழா வா"

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் 

"வா தமிழா வா"

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு "வா தமிழா வா" என்கிற பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
 
மக்களின் குரலாய், மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.
 
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள்என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தஉருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில்நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்துசெல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும்பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!*

*கட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!*

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது.
முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
---

தொழில்நுட்பக் குழுவினர்:
தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம்: செல்லா அய்யாவு
ஒளிப்பதிவு: கே. எம். பாஸ்கரன்
இசை: ஷான் ரோல்டன்
எடிட்டிங்: பரத் விக்ரமன்
கலை இயக்கம்: எஸ். ஜெயச்சந்திரன்
சண்டைக் காட்சிகள்: முருகன்
நடன அமைப்பு: பாபா பாஸ்கர்
பாடல்வரிகள்: மோகன்ராஜன்
தலைமை நிர்வாகம் (வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்): நிதின் சத்யா
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"   நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்...