Saturday, August 9, 2025

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள *“சிறை”* படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். 

கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 

டாணாக்காரன்  இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் *வெற்றிமாறனின்* இணை இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். 

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். 

நடிகர் *விக்ரம் பிரபு* நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை *அனந்தா (Anantha )* நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் *SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார்* அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக *அனிஷ்மா (Anishma)* நடித்துள்ளார்.

*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ*  சார்பில்  *SS லலித்குமார்* பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு *ஜஸ்டின் பிரபாகர்* இசையமைத்துள்ளார். *மாதேஷ் மாணிக்கம்* ஒளிப்பதிவு செய்துள்ளார். *பிலோமின் ராஜ்* எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை *பிரபு* வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  *அருண் K மற்றும் மணிகண்டன்* பணியாற்றியுள்ளனர். 

இப்படத்தின்  படப்பிடிப்பு *சென்னை, வேலூர் சிவகங்கை* ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.



கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு**“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில்

*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு*
*“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்*
*“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம்*

*“கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல்*

*“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் கொடுத்த வாக்குறுதி*

*“நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன்” ; நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி*

*“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” ; கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி*

*“கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும்” ; மன்சூர் அலிகான் கலாட்டா பேச்சு*

*“கேப்டன் பிரபாகரன் எனக்கு கொடுத்த வெற்றியால் அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகள் குவிந்தன” ; ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்*
  

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம். 

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்

இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்  பேசும்போது,

“எனக்கு அரசியல் மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபங்களை எல்லாம் கொட்ட வேண்டும்.. அதை திரைப்படத்தின் மூலம் தான் கொட்ட வேண்டும்.. அப்படி எனக்கு கிடைத்து பவர்ஃபுல் ஹீரோ தான் விஜயகாந்த்.. வேறு எந்த ஹீரோவையும் நான் தேடி போகவில்லை.. ஒரு காலகட்டத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பயங்கர வெற்றிகளை கொடுத்தார்கள். ஆனால் பெரிய செலவு வைக்கிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் பயந்து விட்டார்கள். திரைப்பட கல்லூரியில் படித்தவர்களில தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தவர்கள் என்றால் ஆர்கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார் இருவரையும் குறிப்பிட்டு சொல்லலாம். கேப்டன் பிரபாகரன் படம் வெளியான பொழுது எப்படி ஓடியதோ அதே போல இப்போதும் வெற்றிகரமாக ஓடும், விஜயகாந்த் மற்ற இயக்குனர்களை எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். என்னை மட்டும் டைரக்டர் சார் என்று சொல்வார். இதுதான் மரியாதை, நன்றி.. நன்றி என்றால் விஜயகாந்த் என்று அர்த்தம். மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்.

சட்டம் ஒரு இருட்டறை படத்தில் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ அதன்பிறகு அவருடன் 18 வது படம் பெரியண்ணா இயக்கியபோதும் அதே போல தான் என்னிடம் மரியாதை வைத்திருந்தார். என்னுடைய மகன் விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு. 70 லட்சம் செலவு செய்து எடுத்து சரியாக போகவில்லை. ஆனால் நடிகராக வந்து விட்டார்.. அவரை எப்படியாவது நான் வளர்த்து விட வேண்டும் அதற்காக ஒரு பெரிய நடிகருடன் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். எந்த பெரிய நடிகரும் ஒத்துக் கொள்ளவில்லை அப்போது விஜயகாந்திடம் சென்று, விஜயகாந்த் தம்பியாக விஜய் நடிக்கும் விதமாக ஒரு கதை இருக்கிறது அப்படி நடித்தால் விஜய்க்கு அது உதவியாக இருக்கும் என்று கேட்டேன். உடனே எப்போது கால்சீட் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இவரை வைத்து நான் இயக்கிய 18 படங்களிலும் நான் தான் அவருக்கு டேட் சொல்லி இருக்கிறேன். செந்தூர பாண்டியில் அவரை வைத்து 17 நாள் சூட்டிங் நடந்தது. செந்தூரப்பாண்டி முடித்ததும் வியாபாரம் சூப்பராக நடந்தது. மிகப்பெரிய லாபம் வந்தது. ஆனால் ஒரு பைசா கூட பணம் வாங்க மறுத்து விட்டா.ர் அப்போது அவர் வீட்டு அருகில் இருந்த என்னுடைய காலி இடத்தை அவர்கள் பெயருக்கு மாற்றி பத்திரம் பதிவு செய்து அவரிடம் சென்று கொடுத்தேன். ஆனால் அப்போதும் கூட என்னிடம் கோபப்பட்டார். 

எங்கள் இருவருக்கும் நட்பு என்பதையும் தாண்டி வேறு உறவு. அவர் மனதில் எனக்கு தனி இடம் இருந்தது. போகும்போது தனுடைய அடையாளத்தை விட்டுட்டு செல்பவன் தான் சிறந்த மனிதன். அப்படி விஜயகாந்த் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு ஆர்கே செல்வமணியை தேடி நிச்சயமாக தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்று கூறினார். 

இயக்குனர் விக்ரமன் பேசும்போது, 

கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆன அந்த காலகட்டம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த படம் வெளியான சமயத்தில் தான் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது. அப்போது விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர் என்பதால் இந்த படம் சரிவை சந்திக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெற்றி கண்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே பிரமாண்டம் இப்போதும் இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும். கேப்டன் பிரபாகரன் படத்தில் 25 நிமிடம் கழித்து தான் அவர் மாஸாக என்ட்ரி கொடுப்பார் அந்த போலீஸ் ஸ்டேஷன் பைட் போல தமிழ் சினிமாவில் இன்னொரு சண்டைக்காட்சியை யாராலும் பண்ண முடியாது. ஏனென்றால் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருப்பவன் என்பதால் சொல்கிறேன். அவரைப் போலவே அவரது மகன்கள் சண்முக பாண்டியன் சினிமாவிலும் விஜயபிரபாகரன் அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது,

“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று. கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்கு தந்தது. இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை அந்த காலத்தில் யாரும் எடுக்க முடியாத பட்ஜெட்டில் எடுத்தார் இப்ராஹிம் ராவுத்தர். சோலே படத்தின் பத்து சதவீத பட்ஜெட்டில் தமிழில் ஒரு சோலை போல எடுத்தார் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில் ஆர்கே செல்வமணியுடன் தோளுக்கு தோள் நின்றது லியாகத் அலிகானின் வசனங்கள். மன்சூர் அலிகானை உருவாக்கிய படம் இது. கேப்டன் ரத்தம் சொட்ட சொட்ட நடித்த படம் இது. கேப்டன் பிரபாகரன் காலத்தை வென்ற படம் தான். ரீ ரிலீஸில் இந்த படம் தான் பெஸ்ட் என்கிற சாதனையை கேப்டன் பிரபாகரன் படைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசும்போது,

“மனித நேயத்திற்கு ஒரு உத்தரவாதம் என்றால் அது விஜயகாந்த் தான். அவரோடு நான் கூலிக்காரன், நல்லவன். புதுப்பாடகன் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். கடையேழு வள்ளல்களைப் பற்றி படித்திருக்கிறோம். நாம் பார்த்ததில்லை. நம் கண் முன்னே வாழ்ந்த எட்டாவது வள்ளல் என்றால் விஜயகாந்தை சொல்லலாம். 24 மணி நேரமும் அவருடைய ராஜா பாதர் தெருவில் உள்ள அலுவலகத்தில் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கேப்டன் பிரபாகரன் வெளியான சமயத்தில் வட இந்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் செல்வமணியை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.  புரட்சி கலைஞர் என்கிற அடைமொழியை கேப்டனுக்கு கொடுத்ததில் நான் பெருமையடைகிறேன். திரையுலகில் எந்த ஒரு பிரச்சனைக்காகவும் அவர் முன் நின்று பணியாற்றியவர். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து அதன் கடனை அடைத்தவர். அவருடைய செல்வங்கள் இருவரும் கலை உலகிலும் அரசியலியலும் பெரிய உயரத்தை அடையவேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று பேசினார்

இயக்குநர் ஆர்,வி.உதயகுமார் பேசும்போது,

“35 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது இந்த மேடை. இனிமேல் சினிமா இப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். விஜயகாந்த்திற்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். அவரைப்போல அவரை அதிகமான இயக்குனர்களை உருவாக்கியவர்கள் வேறு எந்த நடிகரும் இல்லை. அந்த வகையில் இயக்குனர்களின் தெய்வமாக அவர் தெரிகிறார். அதில் முதன்மையானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்த் அவருக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி ராவுத்தர் ஃபிலிம்ஸின் பெயரை உச்சத்துக்கு கொண்டு போனதில் செல்வமணியின் கடின உழைப்பு இருக்கிறது. ரம்யா கிருஷ்ணனை இந்த விழாவில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்திற்கு எத்தனையோ சாதனைகள் உண்டு. இந்த சாதனைகளை படைத்த ஆர்.கே செல்வமணி அவர்களுக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இன்றைக்கும் காலத்தால் அழியாத ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலை கொடுத்தார். நான் கேப்டனுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு முன்பு ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்டமாக படம் எடுத்து விட்டனர். என்னையும் அவர் அப்படித்தான் நினைத்தார் போல. ஆனால் நான் ஒரு எமோஷனல் கிராண்டியராக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அப்படி அந்த படத்தில் இடம்பெற்ற வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே பாடல் வேறு யாருக்கும் இன்று வரை பொருந்தாது. அடுத்தவங்க வந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று கேட்காமல் தெரிஞ்சு உதவி செய்யக்கூடிய ஒரே மாமனிதர் கேப்டன் தான். இந்த கேப்டன் பிரபாகரன் படம் இதை தைரியமாக எடுத்து வெளியிடும் எனது அன்பு தம்பி கார்த்திக் அவர்களுக்கும் அவருடைய பார்ட்னருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த படம் மீண்டும்   மிகப்பெரிய வெற்றி பெறும். இதை தொடர்ந்து இயக்குநர் செல்வமணி பெப்சி வேலைகளை விட்டுவிட்டு புதிதாக படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் இளவரசு பேசும்போது,

மதுரையில் நான் டுடோரியல் படித்த காலத்திலேயே கேப்டனும் ராவுத்தரும் இணை பிரியாத நண்பர்களாக கெத்தாக வலம் வருவார்கள். அப்போது இருந்தே அவர்களை பார்த்திருக்கிறேன் .விஜயகாந்த்திற்கு வசனம் எழுதுவதற்கென்றே பிறப்பு எடுத்தவர் தான் லியாகத் அலிகான். விஜயகாந்த் செய்த புண்ணியத்துக்கு அவரது வாரிசுகள் எல்லாம் ஜெயித்தே ஆக வேண்டும்” என்று பேசினார்.

வசனகர்த்தாவும் இயக்குநருமான லியாகத் அலிகான் பேசும்போது, 

“ஆர்,கெ.செல்வமணி இந்த சங்கங்களின் வேலைகளில் ஈடுபடாமல் இருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு போயிருப்பார். பலரது நெஞ்சங்களில் கோயிலாக இருந்த கேப்டன் இன்று கோயம்பேட்டில் கோயிலாகவே மாறிவிட்டார். தொண்டர்களும் மக்களும் பக்தர்கள் ஆகிவிட்டார்கள். எம்ஜிஆர் பாடிய கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் நூறு சதவீதம் விஜயகாந்த்திற்கு தான் பொருந்தும். செல்வமணிக்காக வசனங்கள் எழுதும் வாய்ப்பை எனக்கு கொடுத்தவர் விஜயகாந்த் தான். கேப்டன் பிரபாகரன் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டபோது கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகளை தூக்கி விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம். ஆனால் படம் வெளியான பிறகு விஜயகாந்த் பேசப்பேச தெலுங்கு ரசிகர்களின் கைதட்டல் பயங்கரமாக இருந்தது என்று அவர்களே சொன்னார்கள். இந்த படத்தை இன்றைய இளைஞர்கள் பார்க்கும்போது ஏன் இப்போது இது போன்ற படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். செல்வமணியின் புகழ் பேசப்படும். அரசியலில் எந்த கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது ஆனால் செல்வமணி லியாகத் அலிகான் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது தேமுதிக மத்தியில் ஒரு எழுச்சி தெரிகிறது. அதை புரட்சியாக மாற்றுவது விஜய பிரபாகரனின் கடமை” என்று பேசினார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, 

“தமிழில் நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி இல்லாத சமயத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு வந்தது. அதில் இரண்டாவது கதாநாயகி தான். ஆனால் அந்த படம் எனக்கு கொடுத்த வெற்றி அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகளை தேடி வந்து கொடுத்தது. இப்போ வரைக்கும் அந்த ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக இருக்கிறது. இன்று விஜயகாந்த் இருந்திருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் இரண்டு மடங்கு வெற்றி பெறும் என அவர் மேலே இருந்து வாழ்த்துவார் என நம்புகிறேன்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது,

“இந்திய சினிமாவில் 2025ல் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன இந்தியாவே கொண்டாடும் ஷோலே படத்தின் ஐம்பதாவது ஆண்டில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் வெளியாகிய 35 வது வருடத்தில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாடல்களுக்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்படும். செல்வமணியை மாபெரும் சிக்கலில் விட்ட படம் தான் கேப்டன் பிரபாகரன். காரணம் இந்த படம் அவரை அவ்வளவு உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது. இயக்குனர் ரமேஷ் சிப்பிக்கும் இந்த நிலை தான் ஏற்பட்டது. மன்சூர் அலிகான் இன்றும்போல அதே யூத் ஃபுல்லாக இருக்கிறார். ஷோலே படத்தில் வில்லனாக நடித்த அம்ஜத் கான் எப்படி இன்றுவரை சிறந்த வில்லனாக கொண்டாடப்படுகிறாரோ, அதேபோல கேப்டன் பிரபாகரன் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகானும் கொண்டாடப்படுகிறார். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்று விஜயகாந்தின் புகழை இன்னும் காலகாலமாக பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை” என்று பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது, 

“கள்ளக்குறிச்சியில் இந்த படம் வெளியானபோது கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் இரண்டு பாடல்கள்தான். அதுவும் ஹீரோவுக்கு கிடையாது. துப்பாக்கி படத்தின் முதல் 20 நிமிட காட்சிகளை கேப்டன் பிரபாகரனை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துத்தான் எடுத்தேன். பெரும்பாலும் வில்லன் இறந்து விட்ட பிறகு ஒரு படம் முடிந்து விடும். ஆனால் இதில் வில்லன் இறந்த பிறகும் பத்து நிமிடம் படம் ஓடியது. அதை முன்னுதாரணமாக வைத்து தான் ரமணா படத்திலும் ஹீரோ இறந்த பிறகு கொஞ்ச நிமிடங்கள் படம் ஓடும்படி உருவாக்கினேன். கேப்டனை வைத்து படம் இயக்குவது ஒரு கனவாக இருந்தது. என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில படம் போல அன்றைய காலகட்டத்திலேயே அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டத்தை இயக்குனர் ஆர்கே செல்வமணி கொடுத்திருக்கிறார். அவரது அருகில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதே பெருமை” என்று பேசினார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, 

“நான் ரஜினி சார் ரசிகன். என்னுடைய அண்ணா விஜயகாந்த் ரசிகர். இந்த படத்தில் 30 நிமிடம் கழித்து தான் விஜயகாந்த் என்ட்ரி அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சி தான் என்னுடைய ரன் படத்தின் சப்வே சண்டை காட்சிக்கு உந்துதலாக இருந்தது. பிரம்மாண்டமான ஆக்சன் படங்களில் நான் பார்த்து பிரமித்து ஸ்க்ரிப்ட் என்றால் அது கேப்டன் பிரபாகரன் தான். புஷ்பா படத்தை பார்க்கும்போது கேப்டன் பிரபாகரனின் இன்ஸ்பிரேஷன் அதில் நிறையவே தெரிகிறது. படத்தில் மட்டுமல்ல உழைப்பில், நேர்மையில், குணாதிசயத்தில் கூட ஆர்,கே செல்வமணி பிரம்மாண்டமானவர். விஜயகாந்தின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு மிக முக்கியமான படம் என்றால் கேப்டன் பிரபாகரனுக்கு முன்பு கேப்டன் பிரபாகரனுக்கு பின்பு என்று சொல்லும் விதமாக இதை இயக்குனர் செல்வமணி கொடுத்திருந்தார்” என்று பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“ரம்யா கிருஷ்ணன் படத்தில் ரிலீசின் போது பார்த்ததை விட இப்போது இன்னும் இளமையாக இருக்கிறார். ஒருவேளை எனக்கு வயதாகிறதோ என்னவோ ? எத்தனையோ படங்கள் நடித்தாலும் இந்தப் படம் தான் மன்சூர் அலிகான் பேர் சொல்லும் படம். இந்த படத்தின் மூலம் கேப்டனும் கிடைத்தார். பிரபாகரனும் கிடைத்தார். மீண்டும் செல்வமணியை ஒரு இயக்குனராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. ஆர்கே செல்வமணி என்றால் ஆளுமை. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வளரும் காலகட்டத்தில் புது இயக்குனர்களுக்கு படம் கொடுப்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகு வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள். விஜயகாந்த் மட்டும் 150 படங்களில் 150வது படத்தில் கூட புதிய இயக்குநரை அறிமுகப்படுத்தினார். நமது வெற்றி நமக்கு பயன் தருவதை விட ஒருவரை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் விஜயகாந்த். அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சென்று சந்திக்கலாம்.. தடை இருக்காது.. இந்த காலகட்டத்தில் தமிழில் இது போன்ற படங்களை எடுக்க முடியுமா என்று நினைத்த காலத்தில் இப்படி ஒரு படத்தை கேப்டனும் செல்வமணியும் இணைந்து கொடுத்தார்கள். இந்த படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து செல்வமணியின் புதிய இன்னிங்ஸ் ஆரம்பிக்கும். கேப்டனின் கலை உலக வாரிசாக சண்முக பாண்டியனும் அரசியல் வாரிசாக விஜய பிரபாகரனும் அவரைப் போலவே வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குனர் எழில் பேசும்போது,

“இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது புஷ்பா டிரைலர் போல இருந்தது. 35 வருடம் கழித்து இந்த படம் வெளியாகிறது என்றால் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்தின் வெற்றி. கேப்டனின் படங்களில் காலம் கடந்து நிற்கும் பல படங்களில் முக்கியமான படம் இந்த கேப்டன் பிரபாகரன். விரைவில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் சிங்கம் புலி பேசும்போது,

“கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நடந்த போது மலைப்பகுதியில் இருந்து அந்த படத்தின் படப்பிடிப்பை ஓடி ஓடி பார்த்தேன். கேப்டன் போட்ட சாப்பாடு தான் என்னை சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல விடாமல் இங்கேயே தங்க செய்து இயக்குநராக மாற்றியது. ஒரு முறை கேப்டனை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். என்னை அழைத்து யார் என்று கேட்டபோது சுந்தர் சியின் உதவி இயக்குனர் என்றேன். நீயும் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டார்.. சார் உங்களை வைத்து நான் படமே  வேண்டும் என்று கேட்டேன். அப்போது ஆச்சரியமாக பார்த்துவிட்டு போய்விட்டார். ஆனால் மாயாவி படத்தில் அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்” என்று கூறினார்.

நடிகர் ரவிமரியா பேசும்போது,

“எனுடைய 28 வருட திரையுலக வாழ்க்கையில் 20 வருடங்களை இயக்குனர் ஆர்.கே செல்வமணிவுடன் தான் கழித்துள்ளேன். 28 வயதிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படம் பண்ணியிருக்கிறார் என்றால் இன்றைய இயக்குனர்களுக்கு உண்மையிலேயே அது சவால் விடும் விஷயம். இன்று நாம் பார்த்து வியக்கின்ற இயக்குனர்களை விட எல்லாம் 35 வருடங்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய முத்திரையை பதித்தவர் ஆர்.கே செல்வமணி. கேப்டன் விஜயகாந்த் மனிதராகப் பிறந்து மனித தெய்வம் ஆனவர். இது புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் மட்டுமே” என்று கூறினார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,

“புரட்சி கலைஞரின் நூறாவது படத்தில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் இந்த படத்தில் நடிக்கும் போது நிஜமான வீரப்பனின் முகம் எப்படி இருக்கும் என்று வெளி உலகத்திற்கு தெரியாது. சாலக்குடி படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே செல்வதற்காக ராவுத்தர் தனி பாதையே போட்டு கொடுத்தார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை சரண்யா தான்.. ஆனால் இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து யானை, பாம்பு என வன மிருகங்களை பார்த்ததும் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டாராம். இயக்குனர் ஆர்.கே செல்வமணி லொக்கேஷன்களை கண்டுபிடிப்பதற்காக நடந்து கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும். காலையிலிருந்து வசனமே இல்லாமல் என்னுடைய காட்சிகளை எடுப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் சென்னையில் இருந்து டயலாக் பேப்பர் விமானம் மூலமாக, கார் மூலமாக வரும், அதற்குப் பிறகு பக்கம் பக்கமாக பேச வைத்து எடுப்பார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மறக்க முடியாதது. அதை படமாக்கிக் கொண்டிருந்த கடைசி நாளில் தான் தம்பி விஜய பிரபாகரன் பிறந்தார். அதேபோல படத்திலும் சென்டிமென்டாக ரம்யா கிருஷ்ணனுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாட்கள் அனைத்துமே மறக்க முடியாதவை” என்று கூறினார்.

இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும்போது,

“என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான். புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.

இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.

இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.

இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.
 

விஜய பிரபாகரன் பேசும்போது,

தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏகனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.

Friday, August 8, 2025

மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி

*மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி*

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் படத்தை கமர்சியல் அம்சங்களுடன், வெற்றி இலக்கை எளிதாக தொட்டுவிடும் முயற்சியாக தான் இயக்கி வருகிறார்கள். வணிக வெற்றி என்பது இன்றைய நாளில் இயக்குநர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப்பெரிய அவசியமாகிறது. 

அதே சமயம் வெகு சில இயக்குநர்கள் தான், இந்த மண் பற்றியும் மண்ணின் மைந்தர்கள், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கைகள் இவற்றைப் பற்றியும் திரைப்படங்களாக எடுக்க வேண்டும்,, அதை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், தன்னுடைய படங்கள் மூலமாக அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்கிற நோக்கில் படங்களை உருவாக்கி வருகின்றனர்,. 

அப்படி சமூக நோக்கில், பல வருடங்களாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருகின்ற, தமிழகத்தில் இருக்கும் வெள்ளக்கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கெவி’ என்கிற படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் தமிழ் தயாளன்.

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வெளியான இந்த படத்தில் ஆதவன், ’மண்டேலா’ புகழ் நாயகி ஷீலா, விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. இந்த படம் தற்போது மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
‘கெவி; படத்திற்கான மக்கள் வரவேற்பு குறித்து இயக்குநர் தமிழ் தயாளன் பேசும்போது, “கெவி படம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட 10 படங்கள் கூடவே வெளியாகின. ஆனால் எங்கள் படம் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது பெருமையான விஷயம். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக படம் பார்த்த பெண்கள் பலரும் அழுது கொண்டே வெளிவருவதை பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு அவர்கள் கதையுடன், கதை மாந்தர்களுடன் ஒன்றி விட்டார்கள்.
குறிப்பாக கர்ப்பிணி பெண் கதாபாத்திரமும், அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க நடத்தும் போரட்டமும் கிளைமாக்ஸும் அவர்களை ரொம்பவே கண் கலங்க வைத்துவிட்டது. அதை இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.
இந்த கதையை நேர்மையாக கொடுத்துள்ளோம். அதற்கு கிடைத்த வரவேற்பு தான் இது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த அந்த மலை கிராமத்து மக்கள், எங்களது வலி நிறைந்த வாழ்க்கையையும் நாங்கள் சந்திக்கும் அவலங்களையும் இவ்வளவு தெளிவாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளீர்கள் என கண் கலங்கியபடியே கூறினார்கள். இந்த படம் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட கெமி கிராமத்தை பார்ப்பதற்காக பலரும் கிளம்பி செல்ல துவங்கி உள்ளனர். ஓரளவு தற்போது அந்த கிராமம் கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

இந்த படத்தில் காட்டப்படும் மலை கிராமத்திற்கு உரிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த படத்தை பார்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்தப்படத்தை அவர்கள் பார்த்தால் அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கை முறைக்கு என்ன விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உணர்ந்து அதை செயல்படுத்த ஆரம்பித்தார்கள் என்றாலே, அது இந்த படம் எடுத்ததற்கான குறிக்கோளை நிறைவு செய்யும்” என்று கூறினார்.
*மக்கள் தொடர்பு ; A.ஜான்*

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது

*இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!*

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது.  

மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார். 

தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத ஆச்சரியம் உள்ளது’ என்றும் ‘மனதிற்கு இதமான ஃபீல் குட் கதை’ என்றும் விமர்சகர்கள் பாராட்டினர். செண்டிமெண்ட், எண்டர்டெயின்மெண்ட், நகைச்சுவை, என இதயப்பூர்வமான படமாக அமைந்ததாக ரசிகர்கள் தங்கள் கருத்தை  இணையத்தில் பதிவிட்டனர். 

தற்போது ‘பறந்து போ’ திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் சப்டைட்டிலோடு ஸ்ட்ரீம் ஆகிறது. மேலதிக விவரங்களுக்கு சமூகவலைதளங்களில் ஜியோஹாட்ஸ்டாரை பின்தொடருங்கள்!

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதை களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Naalai Namadhey - திரைப்பட விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம். அரசியல், சாதி—இவை இரண்டுமே கலந்த சூழல். அப்படிப் பட்ட இடத்தில், கல்வியுள்ள, மனம் நல்ல செவிலித்தாய் அமுதா (மதுமிதா) தன் கிராமத்துக்காக போராட வருகிறார். அநீதி நடந்தாலும், யாராலும் அவரை மவுனப்படுத்த முடியாது.

ஒருநாள், அவர் ஒரு பெரிய முடிவு எடுக்கிறார் — கிராமத் தேர்தலில் போட்டியிட! இது பழைய அதிகாரிகளை அதிர வைக்கிறது. அவர்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்ற எதையும் செய்யத் தயார். ஆனா, அமுதா பின்னடையவில்லை. உயிருக்கு ஆபத்து வந்தாலும், தன் நிலைப்பாட்டை விட்டுவிடாமல் நிற்கிறார்.

கதையின் உச்சத்தில், நியாயமும் பிடிவாதமும் பேராசையையும் அச்சத்தையும் வெல்லும். “ஒரு உறுதியான மனசு, ஒரு சமூகத்தை எழுப்ப முடியும்” என்பதை அமுதா நிரூபிக்கிறார்.

மதுமிதாவின் நடிப்பு அருமை — கண், குரல், உணர்ச்சி எல்லாமே கதாபாத்திரத்தோடே கலந்துவிட்டது. சாதி அரசியல், அதிகாரப் போட்டி போன்ற உண்மைகளை படம் காட்டுகிறது. அதேசமயம், தைரியமும் நம்பிக்கையும் சேர்ந்தால் மாற்றம் சாத்தியமேன்னும் நம்பிக்கையும் தருகிறது.

இதுவொரு மனதில் நீங்காத படம் — உண்மை, இரக்கம் சேர்ந்தால் எந்த அநீதியையும் வெல்லலாம் என்பதற்குச் சான்று.

கிரியேஷன்ஸ் T சிவா 

வழங்கும்

ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில்  

அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நாளை நமதே

 படத்தின் நடிகர்கள் 

கதாநாயகி  - மதுமிதா

வேல்முருகன்

ராஜலிங்கம்

செந்தில் குமார்

முருகேசன் 

மாரிக்கண்ணு

கோவை உமா,

மற்றும் கிராமத்து மக்கள்.


ஒளிப்பதிவாளர் -  பிரவீன்

எடிட்டர் - ஆனந்த் லிங்ககுமார்

கலை- தாமோதர

 

கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானது! - இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 
ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பயிற்சி பெற்று ஏராளமான இசைக்குழுக்களுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய சுவாமிநாதன் ராஜேஷ், வெற்றிகரமான இசைத் தொகுப்பாளராக பணயாற்றினார். அதை தொடர்ந்து பல இசை வீடியோக்களுக்கு இசையமைத்தார். அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் மூலம் அனைத்து வயதினரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக, ஹரிஹரன் குரலில் “நாம் போகிறோம்...”, “மேகத்தில் ஒன்றுரை நிந்த்ரோம்...”, “மின்னலை...” போன்ற பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது. 

யோகி பாபு மற்றும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லோக்கல் சரக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சுவாமிநாதன் ராஜேஷ், ’கண்ணால மயக்குரியே’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து ராதாரவி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி தோட்டா’ படத்தின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து கவனம் ஈர்த்தார். அப்படத்தில் இடம்பெற்ற ”அய்யாயோ..” மற்றும் “நானும் அவலும்...” பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

தொடர்ந்து இசைத்துறையில் அடுத்தடுத்தக்  கட்டத்திற்கு பயணித்து வரும் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், ‘கண்ணோரமே’ஆல்பம் பாடலை இசையோடு கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் பிரமாண்டமான காட்சிகளோடு இளைஞர்கள் மனம் கவரும் வகையில் உருவாக்கியுள்ளார்..

Wednesday, August 6, 2025

சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

 சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. 

“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. 

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது… 

எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. எல்லோரும் குழந்தைகளோடு ஃபேமிலியாக இப்படத்தைப் பாருங்கள் நன்றி. 

நடிகை வர்ஷிணி வெங்கட் பேசியதாவது… 

சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும் அதே நேரம்  எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நாயகி ஆகும் கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. இப்படம் ஷீட்டிங் மிக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் கேர்கடராக கலக்கலாக நடித்துள்ளனர். ஷீட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லோரையும்  தியேட்டரில் சந்திக்கிறோம். பல புதுமுகங்கள்  பணியாற்றியிருக்கும் படம்,  புதிய முயற்சிக்கு  உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை ஷாலினி பேசியதாவது… 

எனக்கு வாய்ப்பு தந்த குழுவிற்கு நன்றி. என்னை ஷீட்டிங்கில் எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஷீட்டிங் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

கலக்கப்போவது யாரு புகழ் ராஜா பேசியதாவது… 

கலக்கப்போவது யாரு ஆரம்பித்து 6,7 வருடமாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். எல்லோருக்கும் இருக்கும் கனவு வெள்ளித்திரையில் தெரிய வேண்டும் என்பது தான் அது நிறைவேறியுள்ளது. இயக்குநர் நவீத் அவரால் தான் இது சாத்தியமானது. எல்லா பிரஸரையும் அவர் எடுத்துக்கொண்டு, எங்களை ஈஸியாக வைத்துக்கொண்டார். படத்தை வெறும் 18 நாட்களில் முடித்தோம். அவரால் தான் இது நடந்தது. எல்லோரும் இணைந்து உழைத்ததால் தான் இது சாத்தியமானது. இந்தப்படத்தில் நான்  நடித்திருக்கிறேன், வசனம் எழுதியுள்ளேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் குடும்பத்தோடு ரசிக்கும் படியான படமாக இருக்கும். விஜய் டிவி திறமைகள்  பலபேர் இதில் வேலை பார்த்துள்ளனர். எனக்காக வந்த நண்பர்களுக்கு நன்றி. ரஞ்சித் உன்னி அழகான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி. 

நடிகை ரியா பேசியதாவது… 

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நன்றியைத் தவிர பெரிதாக எதுவும் சொல்ல தோணவில்லை. ராஜா சார் பேப்பரே இல்லாமல் மொத்த சீனையும் மனதிலிருந்தே சொல்வார். இயக்குநர் மிக அற்புதமாகக் காட்சிகளை எடுத்து விடுவார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது… 

எனது ஐந்தாவது படம்.  எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி,  இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகை பிரியங்கா நாயர் பேசியதாவது…  

எனது முதல் படம் இது. என்னைத் திரையில் பார்க்கப் போகிறேன் என ஆவலாக உள்ளேன். இயக்குநர் எனக்கு கால் செய்து ஒரு பாடலில் கேமியோ இருக்கிறது நடிக்க வேண்டும் என்றார். ஷீட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் ரோபோ சங்கர்  பேசியதாவது…  

என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு மிகப்பெரியது அவர்களுக்கு நன்றி. இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் S ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப்பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் அவன் மிகச்சிறந்த எழுத்தாளர், அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள். அனைவருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி பேசியதாவது… 

எனது பருந்தாகுது ஊர்க்குருவி படம் பார்த்து இயக்குநர் நவீத் இந்தப்படத்திற்காக என்னை ஓப்பந்தம் செய்தார். ஒரு காட்சியை சொல்லி பாடல் கேட்டார். நான் தந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு டியூன் அனுப்பிய உடனே அது பிடிக்கிறதா? இல்லையா? என உடனே சொல்லிவிடுவார். அதனால் வேலை பார்ப்பது மிக ஈஸியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். என்னை மாதிரி புது இசையமைப்பாளருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது…  

சொட்ட சொட்ட நனையுது ஒரு பயஙகரமான லவ் சாங் லிரிக்சை, முழுக்க முழுக்க காமெடியா மாற்றி வைத்திருக்கிறார்கள். புரடியூசர் பார்க்கும் போது எல்லார் முகத்திலயும் அவ்வளவு சந்தோசம் இருக்கும். இந்த விழாவை ஆடி மாத விழா மாதிரி மாத்தின ரோபோ சங்கர் அண்ணாவுக்கு நன்றி. விழாவுக்கு வர யோசிக்கிற ஹீரோ இருக்க இன்ட்ஸ்ட்ரில சொட்டைத்தலையை கெட்டப்போட வந்திருக்க ஹீரோ ரூஷோவுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கலக்கப்போவது ராஜாவுக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள். 

Adler Entertainment  சார்பில் அசார் பேசியதாவது… 

நானும் நவீத்தும் தியேட்டர், தியேட்டராக  படம் பார்க்க அலைந்திருக்கிறோம். அவன் கதை சொல்வான், நான் எழுதுவேன். அவன் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்து ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசியதாவது…  

இது எனக்கு முதல் மேடை பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்று தான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்க்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனி தான் அதில் பல பிஸினஸ் செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப்படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்த தான்  எங்களிடம் இருந்தது, அதை வைத்து தான் படம் எடுத்தோம். 18 நாளில் இந்தப்படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன். Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டு தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள்  ஷீட் வந்தார் எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினி நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத் தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. நல்ல படம் எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி. 

கேபிள் சங்கர் பேசியதாவது… 

தம்பி நிஷாந்த் “பன்றிக்கு நன்றி சொல்லி” படத்தின் மூலம் தான் பழக்கம். அந்தப்படம் ரிலீஸாகமல் இருந்தது. அதைப்பார்த்து கடைசியில் எங்கள் முயற்சியில் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்தார். இப்போது அவரது ஐந்தாவது படத்தில் சந்திப்பது மகிழ்ச்சி. இயக்குநர் நவீன் ஜாலியான ஆள் இல்லை, தன் டென்ஷனை எல்லாம் மனதிற்குள் வைத்துக்கொண்டு ஜாலியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்தை மிக நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும்.  பல பிரபலமான ரீல்ஸ்  முகங்களைப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள், ஜாலியாக படத்தை எடுத்துள்ளார்கள். படம் பெரிய வெற்றிபெறும். முடி இல்லாததைப் பற்றி படம் எடுத்தவர்கள் தோற்றதே இல்லை. அனைவரும் ஜெயிக்க  வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் C V குமார் பேசியதாவது…

நிஷாந்த் நடித்த பன்றிக்கு நன்றி சொல்லி படம் பார்த்த போது, ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப்படம் என் மூலம் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்து நன்றாகப் போனது. அதே போல் இந்தப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குநர் நவீன், கூல் என சொல்கிறார்கள்  உண்மையில் அப்படி இருக்க முடியாது. படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா விடாது. சினிமாவில் நீங்கள் நன்றாக வருவீர்கள் வாழ்த்துக்கள். 

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம், அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்குக் கதை வசனம் எழுதியுள்ளார். 

இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணி, அறிமுக நடிகை ஷாலினி நடிக்கின்றனர். இவர்களுடன், …. முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை  Generous Entitlement  நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

தொழில்நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு நிறுவனம் -  Adler Entertainment 

இயக்கம் - நவீத் s ஃபரீத் (debute)

திரைக்கதை வசனம் - கலக்கப்போவது யாரு புகழ் ராஜா 

இசை - ரெஞ்சித் உன்னி

ஒளிப்பதிவு - ரயீஷ்

எடிட்டிங்க்  -  ராம் சதீஷ்

கலை இயக்கம் - ராம்குமார்

நடனம் - அப்சர்

மக்கள் தொடர்பு - ராஜா




கலைஞர் டிவியின் சுதந்திர தின சிறப்புநிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் சுதந்திர தின சிறப்புநிகழ்ச்சிகள்
 
கலைஞர் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தைமுன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதியதிரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வரும்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திண்டுக்கல்ஐ.லியோனி தலைமையில் நிறைவான மகிழ்வுடன்வாழ்பவர்கள் கிராமத்து பெண்களா? நகரத்து பெண்களா?என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் சிறப்புபட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த் நடிப்பில்"கட்டா குஸ்தி" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அஜித்குமார், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி நடிப்பில் "துணிவு" சிறப்பு திரைப்படமும்ஒளிப்பரப்பாக இருக்கிறது.

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு


 அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு



இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் 'பேய் கதை' படத்தின் இசை & முன்னோட்டம்



ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 

'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி'ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ''இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன். 

படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி. 

'பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது.  குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். 

இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

வசனகர்த்தா நவீன் பேசுகையில், ''இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர்.‌ அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌ அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், ''2017ம் ஆண்டில் வெளியான 'அட்டு' படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என  பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், ''கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நடிகை எலிசபெத் பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், ''இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌ 

இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ''வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. 'பேய் கதை' படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன,'' என்றார். 

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ''படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன். 

எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்றார். 

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ''இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.  

இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,'' என்றார். 

நாயகன் வினோத் பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளியின் ரசிகன். ஏனெனில் 'வாலி' படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி. 

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி. அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார்.‌ அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். 

நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை  சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்.  

'பேய் கதை' திரைப்படம் 29ம் தேதி அன்று வெளியாகிறது. ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

Tuesday, August 5, 2025

India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai*

*India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai*

Hi Life Brings Over 150+ Trendsetting Designers & Luxury Labels Under One RoofChennai, get ready for the most glamorous shopping weekend of the season!

Hi Life Exhibition, India’s leading fashion & lifestyle exhibition brand, is back with its Augustedition — featuring over 150+ curated fashion labels, designer couture, statement jewellery,luxury accessories, bridal wear, artisanal home décor and more — all showcased in a vibrant celebration of style and elegance.

 This two-day mega event will take place on 5th & 6th August at Hyatt Regency, Anna Salai, Chennai from 10 AM to 8 PM. This edition brings together the city’s most stylish trendsetters, influencers, and tastemakers for an unforgettable fashion affair.

 Joining the celebration as Distinguished Guests are:● Mrs. India 2023 – Vaishali Dhanda● Certified Master Sound Healer & Gong Master – Pooja Dugar● Actress & Producer – Divya Krishnan (aka Thirukkural Thiru Selvi) along with Mr. AbyDominic, MD & CEO, Hi Life Exhibition. They will grace the red carpet alongside a host of powerful personalities including celebrities,influencers, artists, and entrepreneurs from across the lifestyle space. 

“We have always had a great connection with Chennai. This edition brings together a trendsetting mix of Designer Wear, Jewellery, Wedding Fashion, Luxury Decor, Home Furnishings, and more from across India — all under one roof,” said Mr. AbyDominic, MD & CEO, Hi Life Exhibition.

 Whether you’re a bride-to-be hunting for the perfect trousseau, a fashionista updating your summer wardrobe, or a lover of luxe shopping, Hi Life Chennai is the ultimate fashion destination for you. With handpicked designers and exclusive collections, the event promises to be more than just a shopping experience — it’s where fashion meets celebration.

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”  படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல்,  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~


இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  ZEE5,  வரும் சுதந்திர  தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க,  அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா"  ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும்.  இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள  இந்தப் படம், சட்டத்தின் குறைபாடுகள், தார்மீக தெளிவின்மை மற்றும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நீதியை வடிவமைக்கும் அரசியல் அடித்தளங்களை ஆராய்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா, விவாதத்தைத் தூண்டும் மற்றும் இதயங்களைத் தொடும் ஒரு துணிச்சலான, கதையைச் சொல்கிறது.

கேரள நீதித்துறை அமைப்பின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரான ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது சொந்த ஊருக்குப் பண்டிகைக் கால பயணம் செல்வது ஒரு இருள் மிகு  கனவாக மாறுவதைப் பின்தொடர்கிறது. நீதியைத் தேடத் தீர்மானித்த அவள், கூர்மையான மற்றும் சாந்தமான வழக்கறிஞரான டேவிட் ஆபெல் டோனோவன் (சுரேஷ் கோபி) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட முன்வரும்போது, ஒரு சிக்கலான சட்டப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள். சட்ட வாதங்களுக்கும் பாதிக்கப்பட்ட உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜானகியின் போராட்டம், இந்திய நீதித்துறை அமைப்பின் ஆழமான தார்மீக மற்றும் நெறிமுறை சங்கடங்களை அம்பலப்படுத்துகிறது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உலகில், சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகள் மங்கலாகி, ஒரு கேள்வியை விட்டுச்செல்கின்றன. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, நீதி என்றால் உண்மையில் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் மையம். 

ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவர் மற்றும் தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறுகையில்…,
 “இந்த சுதந்திர தினத்தன்று எங்கள் பார்வையாளர்களுக்கு ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  படத்தை  வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த படம் அதன் சக்திவாய்ந்த கருப்பொருளுக்காக மட்டுமல்லாமல், அது உருவாக்கப்பட்ட நேர்மையுடனும் தனித்து நிற்கிறது. பிரவின் நாராயணன் போன்ற ஒரு தீவிர திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தலைமையிலான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. இது பரபரப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற டிராமா திரைப்படமாகும், இது பொழுதுபோக்கு மட்டுமல்ல - இது சிந்தனையைத் தூண்டுகிறது, விதிமுறைகளைச் சவால் செய்கிறது மற்றும் பலர் எதிர்கொள்ளத் தயங்கும் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. கேரளாவில் வேரூன்றிய இந்தக் கதை, இப்போது முழு தேசத்துடனும் பேசும் என்பது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்படுவதன் மூலம், கொச்சி, கொல்கத்தா அல்லது கான்பூரில் உள்ள ஒவ்வொரு பார்வையாளரும் ஜானகியின் நீதிக்கான போராட்டத்தை அணுகவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஒரு சக்திவாய்ந்த கதை எல்லைகள் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை ZEE5 நம்புகிறது, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படமும் அந்த மாதிரியான படம்தான்."

 தயாரிப்பாளர் ஜே. பணீந்திர குமார் கூறுகையில்..., 
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  படத்தைத் தயாரித்தது எனது திரைத்துறை வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்தக் கதை வெறும் சட்டப் போராட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது உண்மை, தைரியம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் அமைதியான வலிமையைப் பற்றியது. ZEE5 உடனான எங்கள் கூட்டணி, இந்த சக்திவாய்ந்த கதையை, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை அவர்களின் சொந்த மொழிகளில் சென்றடையச் செய்துள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உங்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு படம், மேலும் இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” 

இணைத் தயாரிப்பாளர் சேதுராமன் நாயர் கன்கோல் மேலும் கூறுகையில்… , 
“ஆரம்பத்திலிருந்தே, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  நேர்மை, பச்சாதாபம் நிறைந்த  மற்றும் கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு நம்பமுடியாத படைப்பாற்றல் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும், இப்போது ZEE5 உடன் கூட்டணி சேர்வதும், நம்பமுடியாத அளவிற்குப் பலனளிப்பதாக உள்ளது. இந்த வெளியீட்டைச் சிறப்புறச் செய்வது என்னவென்றால், வடக்கு முதல் தெற்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்கள் இப்போது ஜானகியின் பயணத்தை,  தங்கள் சொந்த மொழியில் பார்க்க முடியும். இந்தப் படம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தியைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில், 
“முதல் வரைவிலிருந்து இறுதிப் படப்பிடிப்பு வரை, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  ஒரு அன்பின் உழைப்பாகும், இது ஒரு உயிர் பிழைத்தவரின் குரலைப் பெருக்கி, நமது அமைப்பில் உள்ள விரிசல்களில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்பட்டுள்ளது. ஒரு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர், நான் எதிர்பார்த்த விதத்தில் கதையை உயிர்ப்பித்தனர். ZEE5 உடனான எங்கள் ஒத்துழைப்பு, தைரியம், நேர்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பான இந்தக் கதையை, இப்போது பார்வையாளர்களை அவர்களின் விரல் நுனியில் சென்றடையச் செய்கிறது. இது ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாய்ப்பாகும். இந்த சுதந்திர தினத்தன்று எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இதைப் பார்த்து, படத்தின் துடிப்பை அதன் தயாரிப்பின் போது நாங்கள் செய்ததைப் போலவே, வலுவாக உணர வேண்டும் என்று நான் ஆவலாக உள்ளேன்.”

நடிகர் சுரேஷ் கோபி கூறுகையில்.., 
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா   திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானது, பார்வையாளர்கள் இந்தக் கதையை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எங்கள் கதைசொல்லலில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இப்போது ZEE5 இல் உலகம் முழுக்க அதை அனுபவிப்பதைக் காண ஆவலாக  இருக்கிறேன்.  டிஜிட்டல் வெளியீடு மூலம் ஜானகியின் குரல், அவரது போராட்டம், அவரது வலி மற்றும் அவரது தைரியம் ஆகியவை இறுதியாக இந்தியா முழுவதும் வீடுகளை எட்டும் . “டேவிட் ஏபெல் டோனோவனின் கதாபாத்திரம் இன்றைய  உலகில் நேர்மை மற்றும் தார்மீக சிக்கலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. ஒரு உயிர் பிழைத்தவரின் சார்பாக நீதிக்காக நீதிமன்றத்தில் போராடுவது எனக்குச் சவால் விடுத்த ஒரு பாத்திரம், ஆனால் அது என்னை நிலைநிறுத்தியது. படம் ஒளிபரப்பப்படும்போது பார்வையாளர்கள் அதன் ஆன்மாவுடன் இணைந்திருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன், மேலும் அவர்கள் ஜானகியின் குரலையும் கேட்பார்கள் என நம்புகிறேன். 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிகையில்.., 
“ஜானகி பாத்திரத்தைச் சித்தரித்தது எனது திரை வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பயணங்களில் ஒன்றாகும். அவர் எண்ணற்ற கேட்கப்படாத குரல்களின் சின்னம், மேலும் அவரது கதையை நேர்மையுடனும் பச்சாதாபத்துடனும் உயிர்ப்பிப்பதில் எனக்கு ஒரு மகத்தான பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். திரையரங்க வெளியீட்டின் போது எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் மிகப்பெரியதாக இருந்தது, இப்போது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ZEE5 இல் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைக் காண்பார்கள்  என்பதில் நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது ஆன்மாவுடன் பேசும் ஒரு கதை - வலிமை, மீள்தன்மை மற்றும் உலகம் உங்களை மௌனமாக்க முயற்சிக்கும் போது கூட எழுந்து நிற்பது பற்றிய அவசியத்தைச் சொல்லும் கதை. ஜானகியின் தைரியம் பார்க்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.”

இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின்  டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்.

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டா...