Friday, February 28, 2025

Rela Hospital Launches India’s First Intestinal Rehabilitation Centre to Expand Treatment Horizons Beyond Transplantation

Rela Hospital Launches India’s First Intestinal Rehabilitation Centre to Expand Treatment Horizons Beyond Transplantation
 
Chennai, 28 February 2025: Rela Hospital, a leading multispecialty hospital in the city, has opened Centre for Intestinal Rehabilitation and Nutrition Support, a first-of-its-kind facility in the country, to offer a comprehensive range of medical, surgical and nutritional therapies for rare intestinal failures and complex gastrointestinal disorders, with a particular focus on preterm babies who are not medically fit for intestinal transplants.
 
The centre has a multidisciplinary team, comprising expert surgeons, gastroenterologists, dietitians, and nursing specialists, to provide integrated care, essential for repair, regeneration, and elongation of intestines. This team led by Prof. Anil Vaidya Director - Multivisceral Organ Transplantation and Dr. Naresh Shanmugam Director - Women and Child Health & Senior Pediatric Gastroenterology & Hepatology, Rela Hospital includes 10 other experts. This team will provide end-to-end care for intestinal failure from extremely premature infants to adolescents. Intestinal failures refer to the condition when the intestines are not able to properly absorb the nutrient either due to genetic problems or due to removal of small intestines due to disease. These children would be dependent on total parenteral nutrition (nutrition through veins). The team will support both medically and surgically to rehabilitate (increase the absorption capacity) the intestine. This process might take several months and would require total parenteral nutrition. Home parenteral nutrition, a method of providing nutrients intravenously in the home setting, would be provided for stable children.
 
This centre addresses a range of intestinal failure and gastrointestinal conditions, including: Short Bowel Syndrome, marked by reduced intestinal function; Chronic Intestinal Pseudo-Obstruction, where the intestines fail to move food properly; Inflammatory Bowel Diseases, characterised by chronic digestive tract inflammation; Hirschsprung Disease, causing severe constipation due to missing colon nerve cells; Omphalocele, the protrusion of abdominal organs at birth; Necrotising Enterocolitis, intestinal damage in premature infants; and volvulus, a dangerous intestinal twisting that cuts off blood supply.
 
It offers comprehensive care through a range of specialised services. Most of these infants / children would be really unwell requiring Neonatal/pediatric intensive care to stabilise and support. Oral feeding with special formulations, special feeding techniques for intestines to adopt along Parenteral Nutrition to provide adequate calories for their growth would be done by Gastroenterology and Nutrition team. Children who have never eaten anything by mouth from birth, will not know how to eat they require special support from department of communication & swallow sciences. If feasible, bowel lengthening surgery would be done and if all methods fail, these children will finally require intestinal transplant.
 
In his comments, Prof Mohamed Rela, Chairman and Managing Director, Rela Hospital, said, “While intestinal failure is rare in children overall, affecting approximately 24 in 100,000 babies, it significantly affects preterm infants. In India intestinal transplantation is often the primary treatment. However, our vision is to provide a comprehensive range of unique treatment services to the children, thus minimising the need for transplantation. We prioritise medical, surgical, and nutritional therapies to encourage natural intestinal growth, aligning with advanced international standards. We have an ongoing partnership with Carevue Health in offering these services. We hope that this new centre would benefit a large number of children from India and neighbouring countries.”
 
In his comments, Prof. Anil Vaidya, Director - Multivisceral Organ Transplantation, Rela Hospital, said, “The intestine, comprising the small intestine (10 feet in newborns, 20 feet in adults) and the large intestine (around 5 feet), plays a critical role in digestion. While losing the large intestine may have a lesser impact, the small intestine, where most digestion occurs, is essential. Its loss results in food passing undigested, necessitating intravenous nutrition (parenteral nutrition) for survival in cases of intestinal failure. Our center provides comprehensive, multidisciplinary support for infants, children, and adolescents with intestinal failure and complex gastrointestinal conditions.”
 
Dr. Naresh Shanmugam, Director - Women and Child Health & Senior Pediatric Gastroenterology & Hepatology, Rela Hospital commented, “The intestinal rehabilitation centre will provide end-to-end care encompassing a wide range of specialisations and nutritional & medical support for small infants both in hospital and in-home until they reach adequate weight where surgery or transplant could be offered. The services include advanced therapies to support intestinal function, personalised treatment for better patient outcomes, and collaborations with partner hospitals for continuity of care. Importantly, we offer Home Parenteral Nutrition (HPN) programs for sustained support, enabling patients to receive vital nutrition at home. Our multidisciplinary team works to transition patients from IV nutrition to oral or enteral feeding, reducing transplantation requirements, improving long-term outcomes, and reducing healthcare costs."
 
Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Rela Hospital, commented, “This Centre would deliver unique services which would benefit a lot of children not only from India but also from neighbouring countries.”

*Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

*Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு*


YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். 

எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம்‌, கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், '' என் தலைவன் யுவன் சங்கர் ராஜா  தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ... இல்லையோ.. 'ஸ்வீட் ஹார்ட் 'என்று சொல்லாமல் கடக்க முடியாது. 

ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , '' ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?' என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன். 

கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான். 

பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், '' ஸ்வீட்ஹார்ட்  என்ற இந்த படத்தின் டைட்டில் நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற என்னுடைய படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் தரமான பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது‌ நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு 'வைப்' ( Vibe) இருக்கிறது படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

இயக்குநர் இளன் பேசுகையில், '' யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது.  இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் 'பியார் பிரேமா காதல்' போல் இருக்குமா? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக 'இருக்கலாம்' என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள 'ஆஸம் கிஸா..' என்ற பாடல் வேற லெவலில் உள்ளது.  யுவன் சங்கர் ராஜாவிற்கு 'மார்டன் மாஸ்டரோ', 'கிங் ' என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.  
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார். 

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ''  யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.

ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும்  பவர்ஃபுல் மீடியம்.  அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும். 

திரையில் ரியோவுக்கும் , கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 

இந்தப் படத்தில் இருக்கும் 'கிஸா' சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' யுவன் சங்கர் ராஜாவின் தயாரிக்கும் திரைப்படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம். 
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும். இந்த படத்தின் இசையில் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது. யுவன் சங்கர் ராஜா லைவ் கான்சர்ட்டிற்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். யுவனின் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது '' என்றார். 

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், '' ஸ்வினீத் நான் பார்த்து பழகிய நபர்களில் பாசிட்டிவானவர். 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'வில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்தப் படத்தின் கதையை ஒரு பயணத்தின் போது எங்களிடம் சொன்னார். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது.  

அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவர் இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும். 

என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன். அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார். 

இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், '' முதல் படம். முதல் மேடை. நிறைய பேர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

'ஜோ' படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 'ஜோ' படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்' படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன்.  என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்... அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன்.  இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். 

இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த  கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். '' என்றார். 

நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், '' ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம்.  தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி. 

மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். 

மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரியோ ராஜ் திறமையானவர்.  சௌகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 

ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்': என்றார். 

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், '' இந்த மேடையில் பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும். 

'துள்ளுவதோ இளமை' படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும்.  என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட 'சென்னை 28 'படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பயன்படுத்திக்கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம். 

இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். 'இவர் என் மாணவர்' என பெருமையாக சொல்வேன். 

இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

'ஸ்வீட்ஹார்ட்' அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார். 

தயாரிப்பாளர்-  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ''  மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. 

இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.  மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் 'ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.

Thursday, February 27, 2025

சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” ; ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் ஆதி பெருமிதம்

*“’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்*

*“மிருகம்-2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்”  ; நடிகர் ஆதி*

*“சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” ; ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் ஆதி பெருமிதம்*

*‘ஈரம்’ அறிவழகன் –ஆதி கூட்டணியில் இருமடங்கு எதிர்ப்புடன் வெளியாகும் ‘சப்தம்’*

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. 

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் பிப்-28 (நாளை) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

*பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நடிகர் ஆதி பேசும்போது,*

“’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே  வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.

லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல.. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை.. இந்த படம் காதல் படம் அல்ல.. ஆனால் காதலும் இருக்கும்.. லட்சுமி மேனன் மட்டுமல்ல.. சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது. 

இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.. அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல்  நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். நேற்று ஒரு டீம் இன்டர்வியூ நடைபெற்றபோது கூட அங்கு அந்த அமானுஷ்யத்தை உணர முடிந்தது. சில நாட்களிலேயே இது கொஞ்சம் பழகிவிட்டது என்று சொல்லலாம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.

தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. ஒருவர் கதை சொல்ல வரும்போது அது எந்த மொழி என்பதை விட, அது நமக்கு பிடிக்கிறதா, ஒத்து வருமா என்று தான் பார்க்கிறேன். தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் சப்தம், மரகத நாணயம்-2 என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன.  மரகத நாணயம்-2 படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது.

தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து அகாண்டா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். சப்தம் படத்தின் டிரைலரை அவரும் பார்த்து விட்டு பாராட்டினார்.

ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை.. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும். 

வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன்.

ஒரு தயாரிப்பாளராக நான் இருந்தால் கமர்சியல் படம் எடுக்கத்தான் விரும்புவேன். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய துணிச்சலான விஷயத்தை படமாக்க முன்வரும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு டீம் அமைவது ரொம்பவே முக்கியம். அது சிரமமும் கூட. நான் படங்களை மெதுவாக பண்ணுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

டைரக்ஷனில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை. அது ரொம்பவே மன அழுத்தம் தரக்கூடியது. அதனால் நடிப்பு மட்டுமே இப்போதைக்கு போகும்.

திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.

இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமான நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியி’டம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். 

யாவரும் நா காக்க படத்திற்கு பிறகு எனது சகோதரர் இன்னொரு கதை சொல்லியிருக்கிறார். ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது. சரியான நேரம் வரும்போது அதில் நடிப்பேன்” என்று கூறினார்.

- Johnson, pro

பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது :நடிகர் மாதவன் ஆதங்கம்!


பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது :நடிகர் மாதவன் ஆதங்கம்!

Parent Geenee : குழந்தைகளின் செல்போனுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா!

இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது  என்று நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:

நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ள 'பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது.

இந்தச் செயலி  பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது.
இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும்  நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது.

இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.செயலியை அறிமுகப்படுத்தி வைத்து நடிகர் மாதவன் பேசும்போது,

"ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் செய்யும் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள்.பெற்றோரை விட அவற்றின் மூலம் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். 
இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.அது நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.
எப்போதும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவுவது என்று இருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.

என் மகனைத் தேடி நாலைந்து நண்பர்கள் வருவார்கள். நான் கண்ணாடி அறையில் இருக்கிறேன் .அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்பார் .அந்த ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருக்கிறார்கள்.
முகம் தெரியாத யாருடனோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்வதே இல்லை.பேசுவதும் கேட்காது ஏனென்றால் ஹெட்செட் அணிந்திருக்கிறார்கள்.இந்தியாவில் இருக்கும் ஐந்து பேர் நெதர்லாந்திலோ ரஷ்யாவிலோ இருக்கும் ஐந்து பேருடன் கேமில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் 'போர்ட் நைட்' என்ற ஒரு கேமை விளையாடுகிறார்கள்.இது என்னை மிகவும் பாதித்தது.

இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் அவர்கள் ஸ்கிரீனில் செலவழிக்கும் நேரம் ,  ஈடுபடும் சமூக ஊடகங்கள், அதனுடைய பாதிப்புகள் என்ன ?என்பதைப் பற்றி பேச வேண்டும்.

அதன் உளவியல் தாக்கங்கள் என்ன?  இதனால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன? இது குடும்ப அமைப்பை எப்படி மாற்றுகிறது? இதைத்தான் நான் உங்களுடன் பேசப் போகிறேன். உங்களுக்கு நினைவு இருக்கிறதோ என்னமோ பல வருடங்களுக்கு முன்பு 'ப்ளூ வேல்' என்று ஒன்று வந்தது.அதன் பாதிப்பு மோசமாக இருந்தது.

அப்போதெல்லாம் ஒரு பள்ளியில் வகுப்பில் 40 பேர் இருந்தால் நமக்கு என்ன அங்கீகாரம் என்று நினைத்தார்கள் .நமது தனித்துவம் என்ன நமக்கான அடையாளம் என்ன என்பதைப் பற்றி நினைப்பார்கள். குறிப்பாக 20 பேருக்கு நம்மை ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்போது உங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் போட்டி நடத்துகிறார்கள்; மோதுகிறார்கள்.
வீடியோ போட்டு வேலிடேஷன் தேடி வந்திருக்கும் இளைஞர்கள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு லைக் எவ்வளவு டிஸ்லைக்  என்பதைக் கூட கேட்கிறார்கள்.  அவர்கள் அடையாளம் இல்லாமல் தனிமையாக உணர்கிறார்கள் .இந்த தனிமை ஒரு மனச்சோர்வை உண்டாக்குகிறது அதனால் தான் 'ப்ளூ வேல் 'போன்றவை வந்தன. அதனால் 
இளைஞர்கள் தற்கொலை வரை போனது. கட்டிடங்களிருந்து பெண்கள் குதித்து விழுந்தார்கள். ஆண்கள் வெட்டிக் கொண்டார்கள். அது ஒரு பயங்கரமான காலமாக இருந்தது .அந்த காலத்தில் நான் ஒரு குழந்தை இருந்தால் என்ன ஆகும் என்று யோசித்தேன். பயமாக இருந்தது. 

நாட்டை பாதுகாக்கப் பல கோடி செலவு செய்கிறார்கள்.வீட்டை, நம் நிம்மதியைப் பாதுகாக்க 
இந்த ஒரு சிறிய செயலியில்  செய்ய முடியும்.

எனது நண்பனின் மகள் விலங்குகள் மீது பிரியமானவள். அவள் ஒரு ரீலைப் பார்த்திருக்கிறாள்.   ஒரு நாயைக் கொன்றது எப்படி என்று  ஒரு பைத்தியக்காரன் ரீல் போட்டு இருக்கிறான்.அந்த நாய் முழு நாளும் கத்திக் கொண்டிருந்ததால் நான் அந்த நாயை அடிக்க முடிவு செய்தேன் என்று சொன்னான். அவள் அதைப் பார்த்ததும்  அழ ஆரம்பித்தாள். அது அவள் அறிந்த ஒரு நாயாக இருந்தது.
அவளது மன உணர்வு மிகவும் பாதிப்புக்குள்ளானது.

என் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்று பயமாக இருக்கிறது.எங்கள் குழந்தைகள் இது போன்றதைப்  பார்த்து வளராமல் இருக்க ஆசைப்படுகிறேன்.

நாம் கைபேசி அதிகமாக உபயோகிப்பதால் முதுகு பட்டை மாறிக் கொண்டிருக்கிறது. கழுத்தில் வளைந்து தினமும் தூங்க எளிதாக இல்லாமல் இருக்கிறீர்கள். சரியாகத் தூங்க முடியவில்லை. உங்கள் படுக்கைகள் மிகவும் மென்மையாக இருக்கிறது. ஆனால் கழுத்து பிரச்சினையால்  மிகவும் கடினமாக இருக்கிறது.

குழந்தைகள் பார்க்கும் அலைபேசியில் திரை பார்க்கும் நேரம் மற்றும் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தை எப்படி மாற்றுவது? அதை குறைக்க நாம் என்ன செய்வது? என்று யோசித்தோம் சமூக ஊடகம் என்பது முழுமையாக மோசமானதல்ல . அதில் அற்புதமான நல்ல விஷயங்கள் உள்ளன.  எல்லா தகவல்களும் குழந்தைகளுக்கு எப்போதும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த உலகில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.

போட்டி  நிறைந்த உலகத்தில் நாம்  நிபுணராக இருந்தால்தான் வாழ முடியும் .முன்பு நீங்கள் உண்மையானவராக இருந்தால் வெற்றி பெறுவீர்கள் .நீங்கள் நல்லவராக இருந்தால் நீங்கள் பெரிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நல்ல சம்பளம் கிடைக்கும் .நீங்கள் சிறந்தவராக இருந்தால்  நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள் .
ஆனால் இப்போது நீங்கள் வேலையில் சேர்வதற்கு  மிகவும் சிறந்தவராக இல்லை எனில் நீங்கள் வாழ முடியாது.

 இந்த  பேரண்ட் ஜீனி செயலியை முதலில் குழந்தைகள் எதிர்ப்பார்கள்.
நாம்தான் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது மாறுபாடுள்ள குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு இது வெவ்வேறு வகை சவாலாக இருக்கும்.  தொலைபேசியைப் பயன்படுத்தும் குழந்தைகள் கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் இது அவசியமானதாக மாறும் என்று நம்புகிறோம். நீங்கள் , இது அவர்களின் நன்மைக்காகத்தான் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த செயலியின் முக்கியத்துவம் என்னவென்றால் இது பெற்றோர்களுக்கு குழந்தைகள் சமூக ஊடகங்களை எப்போது பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வைத்துவிடும்.வெளிநாடுகளில் இந்தச் செயலிகள் நடைமுறைக்கு வந்து விட்டன. நம் நாட்டில் இப்போதுதான் வந்துள்ளது.

இந்தச் செயலியில் குழந்தைகள்  சமூக ஊடகங்களை எந்தளவுக்குப் பயன்படுத்தலாம் அல்லது எந்தளவு திரை பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடிகிறது.
நான் அனுப்பும் செய்திகளைப் பற்றி கவனம் வேண்டும். பெற்றோர்கள் 
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க  கவனமாக இருங்கள்.

 இதனால் குடும்பத்துக்கு நல்லது.குழந்தைகளுக்கும் கூட நல்லது என நம்புகிறோம். அதனால் இந்தச் செயலி உங்களுக்கு உதவும்.
நாங்கள் எங்கள் எதிர்கால தலைமுறைக்கும்,சிறிதாக மாற்றம் வர வேண்டும் என்பதற்காக இதை உங்கள் குழந்தைக்குப் பொருத்தமானதாக மாற்ற விரும்புகிறோம்.  உலகம் எங்கும் வெற்றியுடன் மகிழ்ச்சியுடன் கூடிய அற்புதமான இளைஞர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும் இந்தச் செயலி பயன்படும். .
இலவச பதிப்பும் உள்ளது. நீங்கள் அதற்கும் அதிகமாக தேவைப்படுபவராக இருந்தால் மாதத்திற்கு 300 ரூபாய் அல்லது வருடத்திற்கு 3000 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தி திட்டத்திற்குள் செல்ல வேண்டும் " இவ்வாறு மாதவன் பேசினார்.
இந்த அறிமுக விழாவில்
முன்னணி மனநல நிபுணர் டாக்டர் சி ராமசுப்பிரமணியம்,
இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர்
 பூஜா சீனிவாசா ராஜா  ஆகியோரும் கலந்து கொண்டனர்


 

"ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா.


 "ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா


ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், '' 

'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 

சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள இளம் தலைமுறையினரை கண்டறிந்து அவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்பித்து படைப்பாளிகளாக உருவாக்கும் உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  

இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் 'அசுரன்' திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ராசா' பாடல் ஹிட் ஆகும். 

வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்'' என்றார். 

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் பேசுகையில், '' அடியே படத்தின் படப்பிடிப்பின் போது ஜீ. வி. பிரகாஷ் குமார் இது போன்றதொரு புதிய ஜானரில் கதையைக் கேட்டிருக்கிறேன். அதில் பணியாற்றுகிறீர்களா?  என கேட்டார். கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தேன். படத்தில் பணியாற்ற தொடங்கும் தருணத்தில் இந்த படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. சர்வதேச தரத்தில் இந்த படைப்பு உருவாக வேண்டும் என அவருடைய விருப்பத்தை தெரிவித்தார். படத்தில் பணியாற்றும்போது ஒளிப்பதிவு தொடர்பான நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த படத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படத்தில் வி எஃப் எஸ் காட்சிகள்- கருவிகள்- ஒளி அமைப்பு - அரங்கம் - என அனைத்து விசயத்திலும் பெரிய பங்களிப்பை வழங்கினார். 

இந்தப் படத்தை தயாரிப்பதுடன் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது. அதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காகவும் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

கலை இயக்குநர் எஸ். எஸ். மூர்த்தி பேசுகையில், '' இந்தப் படத்திற்காக கடலும், கப்பலும் இணைந்த வகையில் பிரத்யேக உள்ளரங்கம் ஒன்றை வடிவமைப்பது தான் சவாலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தயாரிப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

இயக்குநர் சுதா கொங்காரா பேசுகையில், '' ஜீவி பிரகாஷ் குமாரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. அவர் சொன்னது மட்டும் இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும்.. சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போன்றது.

இங்கு ஏராளமான இளம் திறமையாளர்களை காண்கிறேன். இயக்குநர் கமல் பிரகாஷின் உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்'' என்றார். 

இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், '' இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன். ..கனவு கண்டிருக்கிறேன்.. என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன். 

நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து 'கிங்ஸ்டன் ' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை ..அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- படத்தொகுப்பாளர் - சண்டை பயிற்சி இயக்குநர் - வி எஃப் எக்ஸ் குழு - ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன்  இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன்- அழகம்பெருமாள்- குமரவேல்- ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார். 

நடிகை திவ்யபாரதி பேசுகையில், '' இந்த முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. 'பேச்சுலர்' திரைப்படத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஊடகத்தினரை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். 

'கிங்ஸ்டன்' படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது.. எந்த மாதிரியான தோற்றத்தில்.. கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.  ஜீவி பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

இயக்குநர் கமல் பிரகாஷ் மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். நிதானமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை. இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இயக்குநர்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும். 

இப்படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றது. ஒரு நாள் கூட ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் என்னிடம் பேசவே இல்லை. வேலையில் கவனமாக இருப்பார். 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது தண்ணீரில் நனைந்து கொண்டே இருப்போம். எனக்கு தலை முடி நீளம் அதிகம் என்பதால் எப்போதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் சகஜமாக பேசி அதனை இயல்பாகி விடுவார்கள். அதனால் அவரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த படத்தில் நானும் சில ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை சிறப்பாக வழங்கும். அனைவரும் மார்ச் ஏழாம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.'' என்றார். 

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், '' இப்படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் என் நண்பர். அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆதரவு வழங்கி வந்தார். அதற்காக ஜீ வி பிரகாஷ் குமாருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு முறை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். பிரம்மாண்டமாக அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்கிறேன். 

திவ்ய பாரதியும், ஜீவி பிரகாஷ் குமாரும் 'பேச்சுலர்' படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருந்தது. இந்தப் படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன். 

'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜீவி பிரகாஷ் குமாரின் நடிப்பு எனது மிகவும் பிடிக்கும். 'தலைவா' படத்தில் வாங்கண்ணா வாங்கண்ணா படத்திலும் ஜீ வி பிரகாஷ் நடனமாடிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் நடிகராகி கலக்கிக் கொண்டிருக்கிறார். 

இயக்குநர் கமல் பிரகாஷ் அடிப்படையில்  தொழில்நுட்ப திறமை மிக்கவர். திரையுலகில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியிருக்கிறது என்றால்.. அதை பற்றி எங்கள் குழுவில் முதலில் தெரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொள்பவர் கமல் பிரகாஷ்.

'முதல் முத்தம்' எனும் என்னுடைய குறும்படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றாலும்.. அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், 'நீ சிறந்த எழுத்தாளராக வருவாய்' என வாழ்த்தினார். அவருடைய  வாழ்த்துக்களால் தான் 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய படங்களை எழுதி, இயக்க முடிந்தது. என்னுடைய இந்த வெற்றிக்கு உங்களின் வாழ்த்துகள் தான் காரணம். அதனால் இந்த தருணத்தில் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 

இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், '' இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து ஜீ  வி பிரகாஷ் குமார் இப்படத்தைப் பற்றி எப்போதும் உற்சாகமாக பேசிக் கொண்டே இருப்பார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். ஒரு முதல் பட இயக்குநருக்கு பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் அவருக்கு வாய்ப்பு அளித்த ஜீ வி பிரகாஷ் குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு கலைஞன் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. புது கான்செப்ட் மீது நம்பிக்கை வைப்பது. அதிலும் குறிப்பாக வி எஃப் எக்ஸ் குழுவை நம்பி ஒரு படம் எடுப்பது சவாலானது. இது தொடர்பாக ஜீ வி பிரகாஷ் குமாரிடம் ஒரு முறை வி எஃப் எக்ஸ் பட்ஜெட் என்ன? என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டை விட படத்தின் தரம் உயர்வாக இருக்கிறது. 

இதை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இது நிச்சயமாக திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று முன்னோட்டத்தை பார்த்ததும் தெரிந்தது.  நடிகர்கள்.. விசுவல் ..மியூசிக்.. எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது. 

இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதை வெளியிடுவதில் பெரிய சவால் இருக்கிறது. இதுபோன்ற கன்டென்ட் ஓரியண்டட் படங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள். 

ஜீ வி பியுடன் இணைந்து பணியாற்றும் போது ...நாம் சொல்ல நினைக்கும் விசயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவார். அதுதான் அவருடைய தனித்துவம். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இதுதான் தேவை. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர் இந்த குழு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 

அறிமுக இயக்குநர் கமலுக்கும் வாழ்த்துக்கள். முதல் பட இயக்குநருக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. முதல் படம் இயக்கி, இரண்டாவது படம் இயக்கும்போதும் பலருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.  குறும்படத்தை இயக்கிய அனுபவத்துடன் இதுபோன்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தில் பணியாற்றுவது என்பது உங்களுக்கு கிடைத்த  முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன். இதில் பணி புரிந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சின்ன பட்ஜெட் படங்கள் - கன்டென்ட் படங்களுக்கு திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் வருகை தருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு 'குடும்பஸ்தன்', 'டிராகன்' போன்ற படங்களின் வெற்றி தான் சிறந்த உதாரணம். சிறிய முதலீட்டு படங்களை தயாரிப்பதில் சவால் இருந்தாலும்... அதனை வெளியிடுவதில் சவால் இருந்தாலும்... அதனை ஓ டி டி தளத்தில் விற்பனை செய்வதில் சவால் இருந்தாலும் ...தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திரையரங்குகள் தான். இதனால் என்னை போன்ற இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''  ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம்.  எந்த இயக்குநர்.. எந்த தருணத்தில் ..அவரை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்டாலும், உடனடியாக தொடர்பு கொண்டு சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம். 

பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான் இசை பணி நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு ? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார். 

ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். 

சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து நான் தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் ? என்று கேட்டேன். புது இயக்குநர்.‌ ஸீ ஃபேண்டஸி ஜானர் படம்... இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார்.  இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். 

இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி.. அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு? என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10%  தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள்.  உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி. 

நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த  பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு ..திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது.  

இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்.  

இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கமர்சியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 

தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் -நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர்.‌ அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார்.

அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும்.. அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

'தெறி', 'அசுரன்' என இரண்டு படங்கள் தாணு சார் தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது 'வாடிவாசல் ' படத்திலும் இணைந்திருக்கிறோம். 

இயக்குநர் சுதா கொங்காரா - அவர்களும் எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது ..நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில்  நடித்திருக்கிறேன். 'தங்கலான்' திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும். 

படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன். 

இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். 

ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய  கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை கமல் ..என்னிடம் கதையாக சொன்ன போது எனக்குள் ஏற்பட்டது. 

இந்த திரைப்படத்தில் ஜீ ஸ்டுடியோ இணைந்தது. அவர்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். இதற்காக இந்த தருணத்தில் அக்சய் மற்றும் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவில் அவர்களும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்தப் படத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஜீ ஸ்டுடியோஸ், வி எஃப் எக்ஸ் டீம், திலீப் சுப்பராயன், நீரவ் ஷா, கோகுல் பினோய், எஸ். எஸ். மூர்த்தி, ஷான் லோகேஷ், பூர்ணிமா, பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், கோபி பிரசன்னா, சிங்க் சினிமா, சரிகம , அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சபுமோன், ஆண்டனி, அருண், ராஜேஷ், திவ்யபாரதி, யுவராஜ், தீவிக், வெங்கட் ஆறுமுகம், தினேஷ் குணா, கமல் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.''

என்றார்.


Aghathiyaa - திரைவிமர்சனம்

திறமையான பாடலாசிரியர் பா. விஜய் இயக்கிய அகத்தியா, ஜீவா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை ஒன்றிணைக்கும் ஒரு கவர்ச்சிகரமான திகில்-கற்பனைத் திரைப்படமாகும். பாண்டிச்சேரியின் இயற்கை அழகுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தப் படம், கைவிடப்பட்ட படப்பிடிப்பு இடத்தை "திகில் இல்லமாக" மாற்றும் ஒரு கலை இயக்குநரின் (ஜீவா) பயணத்தைப் பின்தொடர்கிறது, அவர் தனது நிதி சிக்கல்களைச் சமாளிக்க முயற்சிக்கிறார். ஒரு வழக்கமான முயற்சியாகத் தொடங்கும் படம் விரைவில் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கும், இது முதுகெலும்பை உறைய வைக்கும் தருணங்களுக்கும் சிலிர்ப்பூட்டும் வெளிப்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.

படைப்பு கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற பா. விஜய், திகில் மற்றும் கற்பனை கூறுகளை சிறப்பாகக் கலந்து, அகத்தியாவை ஒரு பிடிமான சினிமா அனுபவமாக மாற்றுகிறார். இந்தப் படம் காட்சி ரீதியாக ஈர்க்கக்கூடியது, பிரமாண்டமான தயாரிப்பு மதிப்புகள் மற்றும் விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துதல். முதல் பாதி நகைச்சுவை மற்றும் பயங்கரமான சஸ்பென்ஸ் கூறுகளுடன் கதையை அமைக்கிறது, அதே நேரத்தில் இரண்டாம் பாதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும் கதைக்கு ஆழத்தை சேர்க்கும் ஒரு கவர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக் காட்சியுடன் சூழ்ச்சியை தீவிரப்படுத்துகிறது.

நடிப்புகள் படத்தின் வலுவான சொத்துக்களில் ஒன்றாகும். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒரு அற்புதமான மற்றும் மறக்கமுடியாத நடிப்பை வழங்குகிறார், இது கதையின் தீவிரத்தை உயர்த்துகிறது. ஜீவா தனது பாத்திரத்தை நம்பத்தகுந்த முறையில் நடிக்கிறார், அதே நேரத்தில் ராஷி கன்னா படத்திற்கு வசீகரத்தை சேர்க்கிறார். ஆங்கில நடிகர்கள் எட்வர்ட் சோனெப்ளிக் மற்றும் மதிடாவின் இருப்பு சஸ்பென்ஸை மேலும் மேம்படுத்துகிறது, இது படத்தை மேலும் ஈர்க்கிறது.

அகத்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, பண்டைய தமிழ் மருத்துவம் மற்றும் நோய்களைக் குணப்படுத்தும் அதன் திறனைப் பற்றிய தனித்துவமான ஆய்வு மற்றும் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான கலாச்சார தொடுதலைச் சேர்ப்பது. இறுதிக்காட்சி அற்புதமானது, அதிர்ச்சியூட்டும் காட்சி விளைவுகள் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் "ஃபர் எலிஸ்" படத்தின் மின்னூட்ட ரீமிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பார்வையாளர்களை இறுதிவரை சிலிர்க்க வைக்கிறது.

ஒட்டுமொத்தமாக, அகத்தியாவின் கவர்ச்சிகரமான திகில்-கற்பனைத் திரைப்படம், அதன் சுவாரஸ்யமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் செழுமையான காட்சியமைப்புகளால் பார்வையாளர்களை மகிழ்விக்கிறது. பா. விஜய்யின் இயக்கம் திகில், சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சி ஆழத்தின் சமநிலையான கலவையை உறுதி செய்கிறது. அதன் ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் தனித்துவமான தருணங்களுடன், இந்த வகையின் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம், ஒரு சிலிர்ப்பான சினிமா அனுபவத்தை வழங்குகிறது.

 

Sabdham - திரைவிமர்சனம்

ஈரம் திரைப்படத்தின் துடிப்பான மூவரும் - ஆதி, இயக்குனர் அறிவழகன் மற்றும் இசையமைப்பாளர் தமன் - மீண்டும் ஒன்றாக இணைந்து சப்தத்தில் ஒரு மயக்கும் த்ரில்லரை உருவாக்குகிறார்கள். இந்த படம் ஒலியின் சக்தியை ஒரு தலைசிறந்த முறையில் ஆராய்கிறது, சஸ்பென்ஸ், திகில் மற்றும் உணர்ச்சியை ஒரு பிடிமான சினிமா அனுபவத்தில் கலக்கிறது.

தொடக்கக் காட்சியிலிருந்தே, சப்தம் ஒரு அமானுஷ்ய தொனியை அமைக்கிறது, அமைதியற்ற ஒலிகள் மனித மனதை எவ்வாறு ஆழமாக பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அறிவாற்றல் மற்றும் ஆழமான ஒரு த்ரில்லரை அவர் வடிவமைக்கும்போது அறிவாற்றல் மிக்க மற்றும் ஆழமான இயக்கத்தை அவர் வடிவமைக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட இடையூறுகளை உணரும் அசாதாரண திறன் கொண்ட ஒரு அமானுஷ்ய ஆய்வாளரான ஆதி அற்புதமாக நடித்த ரூபனைப் பின்தொடர்கிறது கதை. கதை வெளிவரும்போது, ​​பார்வையாளர்கள் சிலிர்ப்பூட்டும் தருணங்கள், விவரிக்கப்படாத மரணங்கள் மற்றும் பயமுறுத்தும் ஒலிக்காட்சிகள் நிறைந்த ஒரு நுணுக்கமாக கட்டமைக்கப்பட்ட மர்மத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள்.

படத்தின் முதல் பாதி ஒரு பிடிமான புலனாய்வு த்ரில்லராக சிறந்து விளங்குகிறது, பார்வையாளர்களை அதன் சிக்கலான கதைசொல்லல் மற்றும் முதுகெலும்பை நடுங்கும் காட்சிகளால் கவர்ந்திழுக்கிறது. இடைவேளை பகுதி ஒரு உண்மையான சிறப்பம்சமாகும், இது ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பத்தை வழங்குகிறது, இது கூர்மையான எடிட்டிங், வேட்டையாடும் ஒலி வடிவமைப்பு மற்றும் அதிகரித்து வரும் பதற்ற உணர்வுடன் பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.

இரண்டாம் பாதி படத்தின் உணர்ச்சி மையத்தை ஆழமாக்குகிறது, சிம்ரனின் கதாபாத்திரம் கதையில் அடுக்குகளைச் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. படம் திகில் கூறுகளை இதயப்பூர்வமான தருணங்களுடன் அழகாக சமநிலைப்படுத்துகிறது, இது ஒரு வழக்கமான த்ரில்லரை விட அதிகமாக ஆக்குகிறது. ஆதி தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்குகிறார், ரூபனை தீவிரம் மற்றும் ஆழத்துடன் சித்தரிக்கிறார். சிம்ரனும் லட்சுமி மேனனும் கவர்ச்சிகரமான நடிப்பை வழங்குகிறார்கள், படத்தின் வியத்தகு தாக்கத்தை மேம்படுத்துகிறார்கள்.

தமனின் இசை சப்தத்தின் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். அவரது பின்னணி இசை வினோதமான மற்றும் சஸ்பென்ஸ் தொனியை முழுமையாக பூர்த்தி செய்கிறது, ஒவ்வொரு தருணத்தையும் துல்லியத்துடன் பெருக்குகிறது. அருணின் ஒளிப்பதிவு சமமாக பாராட்டத்தக்கது, பார்வையாளர்களை கதையில் மூழ்கடிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் இருண்ட, மர்மமான சூழ்நிலையைப் படம்பிடிக்கிறது.

கதைசொல்லல், நிகழ்ச்சிகள், இசை மற்றும் காட்சிகள் என ஒவ்வொரு அம்சத்திலும் சப்தம் என்பது பயத்தையும் பொருளையும் வழங்கும் ஒரு சிலிர்ப்பான சவாரி. தனித்துவமான கதைக்களம், தொழில்நுட்ப புத்திசாலித்தனம் மற்றும் சிறந்த நடிப்பு ஆகியவற்றுடன், இந்த படம் பரபரப்பான த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாகும். அறிவழகன் மீண்டும் ஒருமுறை இந்த வகை திரைப்படத்தில் தனது நிபுணத்துவத்தை நிரூபித்து, சப்தத்தை ஒரு சினிமா அனுபவமாக மாற்றுகிறார், இது பார்வையாளர்களை ஆரம்பம் முதல் முடிவு வரை பரவசப்படுத்தும்.

 

சுழல் 2 - திரைவிமர்சனம்



சுழல் 2-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சி - தி வோர்டெக்ஸ் இறுதியாக வந்துவிட்டது, மேலும் இது எல்லா வகையிலும் எதிர்பார்ப்புகளை மீறுகிறது. இந்த சீசன் நாட்டுப்புறக் கதைகள், நம்பிக்கை மற்றும் ஒரு சிறிய நகர சமூகத்தின் சிக்கலான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றைத் திறமையாகக் கலக்கும் பிடிவாதமான குற்றத் திரில்லரின் அற்புதமான தொடர்ச்சியாகும். ஈர்க்கக்கூடிய கதை, வளமான கதாபாத்திர வளைவுகள் மற்றும் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த விசாரணையுடன், படைப்பாளிகள் மீண்டும் ஒரு விதிவிலக்கான நாடகத்தை வழங்கியுள்ளனர்.

முதல் சீசனின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளிலிருந்து கதை எடுக்கப்படுகிறது, அங்கு நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது கடந்த கால செயல்களுக்காக சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கிடையில், எஸ்ஐ சக்ரவர்த்தி (கதிர்) ஒரு உள் விசாரணையை எதிர்கொள்கிறார், ஆனால் நந்தினிக்கு உதவுவதற்கான அவரது உறுதி அசைக்க முடியாததாகவே உள்ளது. மிகவும் மதிக்கப்படும் வழக்கறிஞரான செல்லப்பா (லால்) மர்மமான சூழ்நிலையில் இறந்து காணப்படும்போது ஆபத்துகள் எழுகின்றன. சக்கரை (பார்த்திபன்) விசாரணையின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார், சந்தேக நபர்களின் சிக்கலான வலை, மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வழியாக பார்வையாளர்களை வழிநடத்துகிறார்.

முதல் எபிசோடிலிருந்தே, நிகழ்ச்சி ஒரு தீவிரமான மற்றும் ஆழமான தொனியை அமைக்கிறது. பிரம்மாவின் இயக்கம் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது, முக்கியமான கதை கூறுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில் பதற்றத்தை உருவாக்குகிறது. சர்ஜுன் கே.எம் இரண்டாவது எபிசோடை கையாளும் விதம் உணர்ச்சி அடுக்குகளை ஆழப்படுத்துகிறது, கதாபாத்திர உறவுகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் இன்னும் வெளிக்கொணரப்படாத இருண்ட ரகசியங்களை சுட்டிக்காட்டுகிறது. கண்ணோட்டங்களுக்கு இடையிலான தடையற்ற மாற்றங்கள் சஸ்பென்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன, ஒவ்வொரு எபிசோடையும் ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சியாக ஆக்குகின்றன.

சுழல் - தி வோர்டெக்ஸை தனித்துவமாக்குவது என்னவென்றால், பிராந்தியத்தின் வளமான கலாச்சார மற்றும் சமூக பின்னணியுடன் ஒரு ஈர்க்கக்கூடிய குற்ற விசாரணையை பின்னிப்பிணைக்கும் திறன் ஆகும். கதைசொல்லல் ஒரு வழக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல; இது நீதி, மீட்பு மற்றும் தனிப்பட்ட போராட்டத்தின் கருப்பொருள்களை ஆராய்கிறது, இது நாடகத்தை சிந்திக்கத் தூண்டும் மற்றும் உணர்ச்சி ரீதியாக எதிரொலிக்கும். நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் ஆகியோர் தங்கள் முரண்பட்ட கதாபாத்திரங்களின் கட்டாய சித்தரிப்புகளை வழங்குகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, சுழல் - தி வோர்டெக்ஸின் இரண்டாவது சீசன் மர்மம், கலாச்சாரம் மற்றும் உணர்ச்சியின் ஒரு சிறந்த கலவையாகும். இது முதல் சீசனின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புதிய சூழ்ச்சி மற்றும் நாடகத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன் கவர்ச்சிகரமான கதை, வலுவான கதாபாத்திர மேம்பாடு மற்றும் ஆழமாக வேரூன்றிய கதைசொல்லல் ஆகியவற்றால், இந்த சீசன் குற்றத் திரில்லர்கள் மற்றும் புத்திசாலித்தனமான, ஆழமான கதைசொல்லலை விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

Suzhal 2 - The Vortex Season 2

Cast

Kathir - Sakkarai

Aishwarya Rajesh Nandini Lal - Chellappa

Saravanan - Moorthy Manjima Mohan - Nagamma Kayal Chandran - Ravi

Gouri Kishan - Muthu

Samyuktha Vishwanathan - Naachi Monisha Blessy - Muppi

Shrisha - Veera

Abhirami Bose - Shenbagam Nikhila Sankar - Sandhanam Rini - Gaandhari

Kalaivani Bhaskar Ulagu

Chandini Tamilarasan - Prayamvata Ashwini Nambiar – Malathy

Crew

Written and created by Pushkar and Gayatri Directed by Bramma and Sarjun KM

Music - Sam C.S

Cinematography - Abraham Joseph Editor - Richard Kevin

Stunt - Dinesh Subbarayan, Dhilip Subbarayan, Miracle Michael Costume - Subhashree Kaarthik Vijay

Production Company - Wallwatcher Films Amazon Prime Video Original


SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன !!

SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில்  தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன !!
 
உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு,  மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் உலகளவில்  உள்ள பொழுதுபோக்கு துறையில்,  பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும்.
 
SRAM & MRAM குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி மற்றும் Paradigm Pictures-யின் தலைவர் திரு. அர்விந்த் தர்மராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த இணைப்பு மூலம் SRAM & MRAM குழுமம் இந்தியாவின் உயர்மட்ட பொழுதுபோக்குத் துறையில்,  பாரம்பரியத்துடன் கலாச்சாரத்தைப் போற்றும் பல புதிய படைப்புகளை உருவாக்க உதவும்.
 
SRAM & MRAM குழுமம் தொழில்நுட்பம், நிதி, விவசாயம், சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளின் மூலம் அதன் நற்பெயரைப் பெற்றுள்ளது. முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலையான நடைமுறைகளில்,  குழுவின் தலைமை அதை உலகளாவிய அதிகார மையமாக மாற்றியுள்ளது. இந்த இணைப்பின் மூலம், SRAM & MRAM தனது நிறுவனத்தை பொழுதுபோக்கு துறையில் கொண்டு வரவுள்ளது. இது தொழில்நுட்ப சிறப்பையும், Paradigm Pictures-யின் படைப்பாற்றல் புத்திசாலித்தனத்தையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
இவ்விணைப்பின் நோக்கம் குறித்து டாக்டர் சைலேஷ் எல். ஹீரானந்தானி கூறுகையில்…
"எங்கள் பார்வை, உலகத் தரம் வாய்ந்த திரைப்பட நகரத்தை உருவாக்குவது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உயர்தர  திறமைகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து, கதைசொல்லல் மற்றும் தயாரிப்பின் சிறப்பம்சங்களின் தரத்தை, மறுவரையறை செய்வதாகும்" என்றார்.
 
50 ஏக்கர் பரப்பளவில், திரைப்பட நகரம் முன்மொழியப்பட்டு, விரைவில் கட்டுமானத்தைத் தொடங்கும் எனும் திட்டமே இந்த இணைப்பின் மூல நோக்கமாகும்.
 
திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் இந்த வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கான தனிப்பயனாக்கக்கூடிய செட்கள் உட்பட விரிவான உள்கட்டமைப்பை வழங்கும். இந்த அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பானது படைப்பாளர்களுக்கான திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை எளிதாக்கும்.
 
திரைப்பட நகரத்தில்  இடம்பெறும் முக்கிய விஷயங்கள்:
 
● உலகத்தரம் வாய்ந்த ஸ்டுடியோக்கள் - மேம்பட்ட VFX திறன்கள் மற்றும் உயர்தர டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோக்கள்.
 
● சொகுசு ப்ரீவியூ தியேட்டர்கள் - டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய, ஐந்து திரையரங்குகள், இதில் இரண்டு பிரஸ் ஸ்கிரீனிங்குகளுக்கு, 100க்கும் மேற்பட்ட இருக்கைகள் மற்றும் மூன்று பிரத்தியேக முன்னோட்டங்களுக்கு 25 அல்ட்ரா-பிரீமியம் இருக்கைகள்.
 
● ஆடம்பரமான தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்ஸ் - பத்து உயர்நிலை ஓய்வு விடுதிகள், ஒவ்வொன்றும் தனியார் குளங்கள் மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட பிரபலங்களுக்கான தங்குமிடங்கள், படக்குழுக்களுக்கான 100 அறை வசதிகளுடன்.
 
● பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வு இடங்கள் - கஃபே, பப், மாநாட்டு அரங்குகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கான அதிநவீன இடம், தயாரிப்பு மற்றும் ஓய்வு எடுக்கும் நேரத்தைச் சிரமமின்றி இணைக்கிறது.
 
Paradigm Pictures AD Ltd, வாரன் ஹவுஸ் நிகழ்வில் அதன் விருது பெற்ற கேன்ஸ் குறும்படத்துடன் தனது சினிமா திறமையை வெளிப்படுத்தியது. அமேசான் பிரைம் வீடியோவில் 100 மில்லியன் நிமிடங்களைத் தாண்டி வி1 கொலை வழக்கு மற்றும் ஹர்காரா திரைப்படங்கள் மூலம் Paradigm Pictures AD Ltd ஸ்ட்ரீமிங் மைல்கற்களை எட்டியுள்ளது. ஏழு திரைப்படங்களின் முன் தயாரிப்பு  பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம்,   உலகம் முழுவதும் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை ஸ்டுடியோ தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.
 
உலகளாவிய மற்றும் பான்-இந்திய தயாரிப்புகள்:
 
புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனங்கள், அதிநவீன திரைப்பட நகரம் அதன் கட்டுமான கட்டத்தில் நுழைந்தவுடன், உயர்தர பான்-இந்தியத் திரைப்படங்களின் தயாரிப்பைத் தொடங்க தயாராக உள்ளது. ஐந்து படங்களின் முதல் ஸ்லேட் நாவல்கள் மற்றும் நிஜ வாழ்க்கைக் கதைகள் மற்றும் பிரபல நடிகர்களைக் கொண்டு தயாராகவுள்ளது.   ஒரே நேரத்தில், இந்த ஒத்துழைப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளில் விரிவடையும், சர்வதேச அளவில் ஈர்க்கும் திரைப்படங்களை வழங்குவதற்காக, இந்தியக் கதை சொல்லும் மரபுகளை, உலகளாவிய திரைப்படத் தயாரிப்பின் நிறுவனத்துடன் இணைக்கிறது.
 
இணைப்பின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், RingDance Entertainment உடன் உருவான கூட்டணி, ரட் & மைல் எழுதிய புகழ்பெற்ற நாவலான “பேர்ட் விஸ்பரர்” இல் அடிப்படையாகக் கொண்ட நோர்டிக் கேஸ்ஃபைல்ஸ் ட்ரைலாஜிக்கு புதிய உயிர் ஊட்டுகிறது.
 
இந்த லட்சிய திட்டத்தில் பின்வருவன அடங்கும்:
 
● RUUD & MILD: நோர்டிக் கேஸ்ஃபைல்ஸ் (கேம்) - குற்றங்களின் மர்மங்களைத் தீர்க்கும் அனுபவம்.
● BIRD WHISPERER (தொலைக்காட்சித் தொடர்) - ஸ்காண்டிநேவிய குற்றக் கதைகள்.
● PARISTAN (திரைப்படம்) - ஸ்டாக்ஹோமில் காணாமல் போன தனது மகனைத் தேடும் தந்தை, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த கதை.
 
இந்த நிகழ்வில் BBC, Netflix பிரதிநிதிகள் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் டேனி பாயிலின் கூட்டாளிகள் உட்படப் பல  சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள், தொழில்நுட்பம், கலைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அங்கீகரித்து, இந்த  இணைப்பைக் கொண்டாடினர்.
 
வாரன் ஹவுஸில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகளாவிய பொழுதுபோக்கின் மாற்றமான அத்தியாயத்தை முன்னறிவிக்கிறது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில் புதிய படைப்புகளுக்குக் களம் அமைக்கிறது.

Wednesday, February 26, 2025

வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி*

*வீரவணக்கம் படத்தில்  கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி*
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'.    பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

 பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.   கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை  அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த இந்த புதுமையான திரைப்படம் ஒரு தாய் மக்களான  தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரும் என்பதில்  சந்தேகமில்லை. 

 அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர்  திரைப்படமான 'வசந்தத்தின்டே கனல் வழிகளில்' என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம். 

 சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும்  சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும்  மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக  அறிமுகம் செய்த படம் தான் வசந்தத்தின்டே கனல் வழிகளில் . சமுத்திரக்கனி மீண்டும் பி கிருஷ்ணபிள்ளையாக  வீரவணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  பெரும் ஜாதி கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம். 

 இத்திரைப்படத்திற்கு    எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளது திரைப்படத்தின் தனிச்சிறப்பாகும்.  'சிம்மக்குரலோன்' டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடுகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார்.  மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார்.

 வீர வணக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி ஜே குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும்  அருமையான பாடல்களை பாடியுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இத் திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர் என்பதால் விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.

Tuesday, February 25, 2025

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர். கே.செல்வமணி பேச்சு

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர். கே.செல்வமணி பேச்சு

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் "  வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் திரைபிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் பற்றிய தங்கள் கருத்துக்களை, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது... 

35 வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர், அப்போதே .ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசை, ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் அவர் படு பயங்கர கண்டிப்பானவர், அவரிடம் தான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல அற்புதமான படங்களை உருவாக்கியவர். அவர் மீண்டும் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி. அவர் மாணவன் நான், நிறைய நடிகர்களை இணைத்துள்ளார். ஸ்ரீகாந்த் இன்னும் க்யூட்டாக இருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 


நடிகை சச்சு பேசியதாவது....

இங்கு எல்லோரும் எனக்கு ஜூனியர்கள், 70 வருட சீனியர் நான். சினிமா தான் என் குடும்பம். ரங்கராஜ் சாரின் நெஞ்சமெல்லாம் நீயே படத்தை மறக்க முடியாது. என்னை இந்த படத்திற்கு ஞாபகம் வைத்து அழைத்தது மகிழ்ச்சி. ஃபாரின் எல்லாம் போகாமல், இந்தப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்த மாதிரி படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்கள் வர வேண்டும். நான் பூஜிதா பாட்டியாக நடித்துள்ளேன். படம் அழகாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். நன்றி. 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது... 


இயக்குநர் ரங்கராஜ் சார் மிக அற்புதமான இயக்குநர். பல அருமையான படங்களை தந்தவர். மிக அழகான தமிழில் டைட்டில் வைத்து படமெடுக்கக் கூடியவர். அவரது இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். இப்ப வரும் நிறைய படத்தில் பாவடையை பிச்சு, பிச்சு, பலரை ஆட வைக்கிறார்கள். விரசம் வேண்டாம். இப்போது இரண்டு படங்கள் வெளியாகி ஒரு படம் நன்றாக போகிறது, இன்னொரு படம் மிக நன்றாக போகிறது. ஒரு படத்தில் நாயகனும் நாயகியும் ஓட்டலில் சந்திக்கிறார்கள், நாயகி பிராந்தி ஊற்றித் தருகிறார், இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தை எடுத்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி  கோபம், மக்களுக்கு தான் உங்கள் மேல் கோபம். எப்படி இப்படியெல்லாம் படம் எடுக்கலாம், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கலாச்சாரத்தை நல்லபடியாக காட்டும் இந்த படம் வெற்றி பெறட்டும் அனைவருக்கும்  நன்றி. 

இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது... 

இந்த இசை விழாவிற்கு வந்த காரணம் என் நண்பர் ஆர் கே சுந்தருக்காகத் தான், அவரும் நானும் மிக நல்ல நண்பர்கள். அவர் இயக்குனர் K.ரங்கராஜ் உடன் இணைந்தது மகிழ்ச்சி. என் சின்ன வயதில்,  உதயகீதம் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஒரு வருடம் ஓடிய படம். அதே போல இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒளிப்பதிவாளரும் என் நண்பர், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


இசையமைப்பாளர் ஆர் கே சுந்தர் பேசியதாவது... 

K.ரங்கராஜ் உடன் இந்தப்படத்தில்  இணைந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் தாமோதரன் தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இளையராஜா சார் உடன், K.ரங்கராஜ்  சார் இணைந்த அத்தனை படங்களும் ஹிட். எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. ரங்கராஜ்  சார் வெட்டு குத்து இரத்தம் இல்லாமல் அவர் பாணியில் மிக அழகான படத்தை தந்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 


கதாநாயகி பூஜிதா பொன்னாடா பேசியதாவது... 

இது என் முதல் தமிழ் மேடை, பல திரை பிரபலங்களுடன் இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப்படம் மிக மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக  கண்டிப்பாக இருப்பார், ஆனால் அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி. 


நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது..

திரையுலகில் 25 வருடம் நிறைபு செய்துள்ளேன் நீங்கள் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள் அனைவருக்கும் நன்றி.  மேடையில் இருந்த சத்யா சாரின் பூ படம் செய்துள்ளேன், இளையராஜாவிடமும் வேலை செய்துள்ளேன், இப்போது ரங்கராஜ் சாரிடமும் வேலை செய்து விட்டேன் அனைவரிடமும் வேலை செய்தது மகிழ்ச்சி. ஷீட்ங்கில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார், அவர் படைப்பில் நான் இருந்தது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப் படுகிறேன், படத்தில் தம்மு தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும் எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள், ஆனால் 12 வருடம்  கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா.  ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.  சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை. நீங்கள் தந்து வரும் அன்புக்கு நன்றி. 


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

 ஸ்ரீகாந்த் பேசி இப்போது தான் கேட்கிறேன், அதிரடியாக கலக்குகிறார், இதே போல் சினிமாவில் இருந்தால் அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார் தான். 35 வருட பழக்கம் அவர் கண்டிப்பானவர் என்கிறார்கள், ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்து பேசுவார். மிக அமைதியான மனிதர். பாடல்கள் பார்த்தேன் கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார்.  கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள், பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும், ரங்கராஜ் சாரின்  திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும், எடுக்க வேண்டியதை மிகக் கச்சிதமாக எடுத்து விடுவார். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும். 

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் செய்தால் எப்படி சரியாகும்,  பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள்


 ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள், அதில் நமக்கு லாபம் இல்லை, இப்போது  தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 



இயக்குநர்  K.ரங்கராஜ் பேசியதாவது... 

எங்களை இன்று வாழ்த்த வந்திருக்கும் கே எஸ் ரவிக்குமார், ஆர் கே செல்வமணி உட்பட அனைவருக்கும் நன்றி. ஸ்ரீகாந்த்  முதல் சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சச்சு, சாம்ஸ் புஜிதா என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து இந்தப்படத்தை உருவாக்க உதவினார்கள். நான் பத்திரிக்கையாளானாக இருந்து திரைக்கு வந்தவன் உங்களின் அன்பான ஆதரவை இந்தப்படத்திற்கு தர வேண்டும் நன்றி என்றார்.


உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும்  வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வசனம் - PNC கிருஷ்ணா
ஒளிப்பதிவு  - தாமோதரன்.T
இசை - R.K.சுந்தர்
எடிட்டிங்  - கே.கே
பாடல்கள் - காதல் மதி
கலை - விஜய் ஆனந்த்  
நடனம் - சந்துரு
ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் - தேனி சீனு
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - MY INDIA மாணிக்கம்
கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - K.ரங்கராஜ்

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!*

*இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐ...