Monday, July 21, 2025

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு


ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது


' ராஜ குமாரா' , 'கே ஜி எஃப்', 'சலார் ' மற்றும் ' காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள - அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌


படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது.


படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது.  மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால்.. இந்த மேக்கிங் வீடியோ - நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.


' காந்தாரா : சாப்டர் 1 ' என்பது ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகும். படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.‌ இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.


அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி,  தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும்.


'காந்தாரா : சாப்டர் 1 'உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து கடந்து செல்கிறது. நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து.. கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கும் என இந்தப் படம் உறுதியளிக்கிறது.


ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை

*ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன்  நிமிடங்களை கடந்து சாதனை  !!*

*ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை இப்போது இலவசமாக கண்டுகளிக்கலாம் !!*

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.  ZEE5  வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில்  நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.  “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார்.  உணர்வுப்பூர்வமான கதையுடன்,  சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 

கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் … மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை,  இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும்  ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம். 

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

சட்டமும் நீதியும் சீரிஸை  ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்.

DRA HOMES Madras Couture Fashion Week – Season 11


DRA HOMES Madras Couture Fashion Week – Season 11

FASHION FRENZY

Radisson Blu Hotel & Suites GRT Chennai hosted the ELEVENTH edition of DRA HOMES Madras Couture Fashion Week 2025 a spectacular celebration and fusion of style, creativity, glamour curated and managed by Satish Jupiter was held on 20th July 2025. The event showcased fashion, artistry, and innovation, bringing together renowned designers, celebrities, influencers and fashion enthusiasts







MCFW Season 11 choreographed by Karun Raman saw an array of gorgeous models and trendy outfits that ruled the ramp. There were sequences of fashion show by designers such as Ivory by Radhika, Mrisah by Sudha, Suit Lounge, Bangalore designers, AVR Swarna Mahal, Manyavar Mohey and The Bridal Artisans




Satish Jupiter says “At this glamorous and glittering show, it is great to see this level of innovation. I hope that these designers take this experience with them and continue to work the best in their careers”. He further added that “we are extremely happy that we have been able to successfully sustain this property since 2014 and now in its 11th season, we are glad to partner with Radisson Blu Hotel & Suites GRT Chennai & collaborate with DRA Homes as the Title Sponsor for this edition





Mr. Vikram Cotah, CEO, GRT Hotels & Resorts shared “At GRT Hotels & Resorts, we believe in hosting experiences that inspire – and fashion is a powerful expression of culture, identity, and innovation. We’re delighted to partner with Satish Jupiter once again to host the 11th edition of Madras Couture Fashion Week at Radisson Blu Hotel & Suites GRT Chennai. The showcase continues to evolve with fresh energy, spotlighting emerging and established talent while pushing creative boundaries. We’re proud to provide a platform where designers, artists, and storytellers come together to shape the future of fashion.”

Saturday, July 19, 2025

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது*

*பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது*

பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது. அக் கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அதன் தாக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

இவரது பயணம் இன்னும் பல உன்னத இலக்குகளை நோக்கி நகர்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள முருகநந்தம், தற்போது ஹாலிவுட் திரைப்படமாக அவருடைய வாழ்க்கையை உருவாக்கும் திட்டங்கள் முன்னேறி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சாதாரண மனிதன், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்த உண்மையான மாற்றத்தூண்டிப் புரட்சி வீரர் தான் அருணாசலம் முருகநந்தம்.

பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!*

*‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!*

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

தயாரிப்பாளர் அமல்ராஜ், “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன். அந்த அளவுக்கு கதையும் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். இளையராஜாவுக்கு அடுத்து அருமையான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான். தயாரிப்பாளர்கள் படம் முடியும்போதும் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஜிவி பிரகாஷால் ஒரு தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லோரும் வந்திருக்கும் ஆடியோ லான்ச் இதுதான் என நினைக்கிறேன். சாம் சிஎஸ் இசை அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜிவி இசையில் நிறைய படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஆனால், அவர் நடிக்கும் படத்திற்கு இதுதான் முதல் முறை பாடல் எழுதுகிறேன். சாம் சிஎஸ் அருமையாக இசை கொடுத்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை தேஜூ அஸ்வினி, “இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவி சாருடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்தி பார்த்த இயக்குநர் மாறன் அவர்களுக்கும் நன்றி. சப்போர்ட் செய்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வித்தியாசமான தேஜூவை பார்ப்பீர்கள். ஆகஸ்ட் 1 படம் வெளியாகிறது”.

நடிகர் லிங்கா, “இந்த வாய்ப்பு கொடுத்த அமல்ராஜ் சார், மாறன் சாருக்கு நன்றி. ஜிவி பிரகாஷ் சார் நடிக்க ரொம்பவே இலகுவானவராக இருந்தார். படக்குழுவினருக்கு நன்றி. படம் வெற்றி பெறும்”.

நடிகை சந்திரிகா, “நான் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் பாட்டில்தான் கதை உள்ளது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை. ஆகஸ்ட் 1 படம் பாருங்கள்”.

நடிகர் முத்துக்குமார், “நான் இதுவரை செய்த படங்களில் இது வித்தியாசமானது. நான் சரியாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். சீரியஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இதில் என் கதாபாத்திரம் இருக்கும். தயாரிப்பாளருக்கு நன்றி. ஜிவி பிரகாஷ் எளிமையாக பழகக்கூடியவர். தேஜூ மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

நடிகை பிந்து மாதவி, “ரொம்ப நாள் கழித்து அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்தப் படத்தின் பாடல்கள் டிரெய்லர் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குடும்ப செண்டிமெண்ட் கதை நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும். ’கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களை அடுத்து இந்தப் படமும் மாறனுக்கு வெற்றி பெறும். ஜிவி இந்தப் படத்திற்கு பாதி சம்பளதான் வாங்கி இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். தயாரிப்பாளர், இயக்குநர் மீது அதிக அன்பு கொண்டவர் ஜிவி பிரகாஷ். முதல் மூன்று நாட்கள் ரிவியூ செய்ய வேண்டாம் என்று விஷால் சார் முன்பு இதே மேடையில் சொல்லியிருந்தார். அதை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். மூன்று நாட்கள் ரிவியூ வரவில்லை என்றால் பெரும்பாலான படங்கள் வந்ததா என்று ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். கொஞ்சம் கனிவாக, பேலன்ஸ்டாக ரிவியூ கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் கதிரேசன், “படத்தின் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் போய் சேர்ந்திருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சாம் சிஎஸ் இசையில் பின்னியிருக்கிறார். தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு நன்றி. முன்பு இதுபோல அதிகம் செய்தவர் ரஜினிகாந்த் அவர்கள். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் வசந்தபாலன், “பிளாக்மெயில் என்ற வார்த்தை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. இந்த வார்த்தை எப்படி வந்திருக்கும் எனத் தேடினேன். மெயில் என்றால் வாடகை, கட்டணம் என்ற அர்த்தத்தில் வரும். 16 ஆம் நூற்றாண்டின் வார்த்தை இது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையில் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் இருந்த இடத்தில் தலைவர்கள், கொள்ளையர்கள் சென்று சூறையாடி இருக்கிறார்கள். அப்படி எங்களை கொள்ளையடிக்காதே, சூறையாடாதே என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தான் மெயில். பிளாக்காக அதை கொடுத்ததால் பிளாக்மெயில் என்று பெயர் வந்தது. பாத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் ‘விக்ரம் வேதா’வுக்கு அருமையாக இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை சாமுக்கும் உண்டு. 17 வயது பையனாக என் கண் முன்னே வந்து வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ். மகிழ்ச்சியாக உள்ளது. யாரையும் காயப்படுத்தாத குணம் கொண்டவர். அவரது குடும்ப விஷயத்தில் எந்தளவுக்கு பக்குவமாக நடந்தார் என்பது வியப்பாக இருந்தது. எனக்காக இரண்டு படங்கள் விட்டுக்கொடுத்தார். அவர் இல்லை என்றால் படம் வெளியாகி இருக்காது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாறனுடைய முந்தைய படங்களுக்கு நான் ரசிகன். அவர் பெரும்பாலும் இருளில் தான் படம் எடுப்பார். எனக்கு ஜிவி பிரகாஷ் பல இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார். படத்தில் செண்டிமெண்ட்டாக விஷயம் இருக்கிறது. படம் வெற்றி பெறும் என்று ஜிவியிடம் சொன்னேன். படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்”.

’ட்ரீம் வாரியர்ஸ்’ சிஇஓ குகன், “இந்தப் படத்தின் கனெக்ட் எனக்கு அமல்ராஜ் மூலமாகதான் வந்தது. விழா நாயகன் சாம் சிஎஸ்ஸூக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் மாறன் தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இதிலும் மேஜிக் செய்திருப்பார். ஜிவி ரசிகர்கள் மற்றும் த்ரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக அமையும். படத்தில் நடித்துள்ள மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் இந்தப் படம் முக்கியமான படமாக அமையும். படத்திற்கு பாடல்கள்தான் முக்கியம். சமீபகாலங்களில் பாடல்களை படத்தில் முழுதாக வைப்பதற்கு தயங்குகிறார்கள். திரைக்கதை எழுதும்போதே இயக்குநர்கள் அதை முடிவு செய்து விடுங்கள். இது என் வேண்டுகோள்”.

இயக்குநர் மாறன், “கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும். உங்கள் ஆதரவு தேவை. நன்றி”.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 


நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்-  ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம்.  ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு  செய்தனர். 

குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார். 

ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்,  ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நடிகர் உதயாவின் கடும் உழைப்பை இந்த படத்தில் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அவருடைய கடும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

படத்தொகுப்பாளர் ஷ்யாம் பேசுகையில், ''எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு திரில்லர் ஜானர் ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்க கூடியது. அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை படத்தொகுப்பின் போது உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதற்காக சில உத்திகளை கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். இது போன்றதொரு படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை செய்வதற்கு வாய்ப்பளித்த எடிட்டர் பிரவீண் சாருக்கும், உதயா சாருக்கும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சாருக்கும் நன்றி. இப்படத்தின் இசையும் மிகப் பிரமாதமாக இருக்கிறது.  இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும் வகையிலான டீசன்டான சீட் எட்ஜ் திரில்லர் படம்.  அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

நடிகர் டானி பேசுகையில், ''ஓ மரியா பாடலில் நடிகை ரம்பாவுடன் நடனமாடிய பாடல் 1999ம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சினிமா வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு சென்றார். அவரிடம் கேட்டபோது சின்ன பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்து உதயா நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இந்தத் தருணத்தில் விஜய் டிவியில் 'ஓ மரியா..' பாடலை ரீ கிரியேட் செய்தனர். அதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்து நடனம் ஆடினேன். அந்தத் தருணத்தில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸிடமிருந்து அழைப்பு வந்தது. நான் நேராக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார். 

ஒவ்வொரு கலைஞனுக்கும் விமான நிலையத்தில், பொதுவெளியில், வணிக வளாகத்தில் ரசிகர்கள் சந்தித்து,  'உங்கள் படத்தை நான் பார்த்திருக்கிறேன்' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது அந்த கலைஞனுக்கு மிகப்பெரிய போதையை தரும். ஆனால் என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை, அடையாளப்படுத்தவில்லை. அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த தருணத்தில் உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் தலை முடியை கட் செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் யோசித்தேன். 

'மின்னலே' படத்தில் நாகேஷ் உடன் நடித்தேன். 'காதலர் தினம்' படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறேன்.  'கவிதை' படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். பல காமெடி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அந்த வகையில் யோகி பாபு உடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். யோகி பாபு உடன் மட்டுமல்லாமல் அஜ்மல் - உதயா என அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தில் நடித்தால் மீண்டும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தலைமுடியை கட் செய்யவும் சம்மதித்தேன். இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இது எங்களுக்கு முக்கியமான நாள். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி,'' என்றார்.

தயாரிப்பாளர் சேது பேசுகையில், ''நாங்கள் பெரிதாக எதிர்பார்த்து முதல் முதலாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் படம் இது. இதற்கு உதயா தான் காரணம்.‌ அவருடன் நடைபெற்ற ஒரு சாதாரண சந்திப்பு தான் இப்படத்தில் எங்களை இணைய வைத்தது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் எங்களிடம் என்ன கதையை சொன்னாரோ, அதை அப்படியே எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்லாம் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. இந்தப் படத்தின் கதை தனக்கு என்ன தேவையோ,பாஅதை அதுவே இழுத்துக் கொண்டது . நாங்கள் எதையும் செய்யவில்லை. அதை என்ன கேட்டதோ அதை நாங்கள் செய்து கொடுத்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், ''அக்யூஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்லதொரு அனுபவம். ஜனவரியில் தான் இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினோம். ஆறு மாதத்திற்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆகிவிட்டது. நான் இந்த குழுவில் இணைந்ததற்கு முக்கியமான காரணம் உதயா தான். அவருக்கு என்னுடைய முதல் நன்றி. 

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து உங்களது விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நடிகர் பிரபாகர் பேசுகையில், ''கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான கன்னட திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அவர் உன் திறமையை வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையை அவர் சொன்னதும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் இங்கு வந்த பிறகு தமிழைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் இப்படத்தில் தமிழக-கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கதாபாத்திரம் என்பதால் படத்திலும் நான் நடித்த காட்சிகளுக்கு சொந்தக் குரலில் பின்னணி பேசவும் வாய்ப்பளித்தனர். இதற்காக நடிகர் உதயாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பஸ், கார், ஓட்டம் என சேசிங்கிலேயே இருக்கும்.  இதனால் நான் மிகவும் விரும்பி நடித்தேன். 

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த அனுபவம் மறக்க இயலாது,'' என்றார். 

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர் சி - தனுஷ் - அர்ஜுன் - ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவிட்டு,  கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.

கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிக பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் 'நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்' என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். 

அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான் உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்து கதையை சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு, கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம் என்றார். அடுத்த நாள் தயாரிப்பாளர்கள் பன்னீர்செல்வம் - தங்கவேல்- உதயா - ஆகியோர் இருந்தனர். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அனைவரும் பட்ஜெட் அதிகம் என சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களிலும் எந்த குழப்பமும் இல்லாமல் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர். எனக்கு கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்கள். அதனால் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்திய பின் ஸ்கிராப்பிற்கு அனுப்பினோம். இதற்கும் உதயா தான் முழு காரணம். 

இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்கு கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். 

கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபு விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார். 

இந்தப் படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். என்னுடைய உறவினர் இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர் வேண்டும் என விரும்பினேன் இதற்காக உதயா அவருடைய 'உத்தரவு மகாராஜா' படத்திற்கு இசையமைத்த நரேன் பாலகுமாரை அறிமுகப்படுத்தினார். அவரது பாடலைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவரின் இசையில் உருவான பாடல்கள் எனக்கும் பிடித்தது. என் மகன்களுக்கும் பிடித்தது. ஒரு பாடலை சிறிய வயதில் இருக்கும் பிள்ளைகள் பாடினால் அந்தப் பாட்டு ஹிட் ஆகும். பாடல்களைப் போல் பின்னணி இசையிலும் நரேன் மெஸ்மரைஸ் செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை, நீங்கள் படம் பார்த்தால் புரியும். 

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும்.  திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும்," என்றார். 

நாயகி ஜான்விகா பேசுகையில், ''இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். 'அக்யூஸ்ட்' ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை. 

இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி. 

இந்தப் படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. அற்புதமான பாடல்கள் உள்ளன. சில்வா மாஸ்டர் அமைத்த சண்டை காட்சிகளும் உள்ளன. யோகி பாபுவின் காமெடி இருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அதனால் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நடிகர் அஜ்மல் பேசுகையில், ''ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும். 

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது. 

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள். 

'அஞ்சாதே' படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. 'கோ' படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்  என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் பேராதரவு தேவை. அதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நாயகன் உதயா பேசுகையில், ''மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் '  திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். 

சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை. 

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன். 

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது. 

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார். 

இந்தப் படத்தினை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து விட்டால், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற செய்து விடுவார்கள்.  

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். 

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் என் குடும்பத்தை போன்றவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்நிகழ்விற்கு வருகை தந்த எடிட்டர் ஷியாம், எஸ்கியூடிவ் புரொடியூசர் சிவசங்கரன், இயக்குநர் ராஜா, நடிகர்கள் பெங்களூர் டானி, பிரபாகர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஹீரோ அஜ்மல், ஹீரோயின் ஜான்விகா, தயாரிப்பாளர் - தம்பி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் - தம்பி சேது, நடிகை சுபத்ரா, ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ரங்கோலி படத் தயாரிப்பாளர் சதீஷ், தயாரிப்பாளர் -‌ நடிகர் டி. சிவா ஆகியோருக்கும் நன்றி. 

இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, யோகி பாபு, எடிட்டர் பிரவீண் , இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இதனிடையே இந்நிகழ்வில் சண்டை கலைஞர் எஸ் மோகன்ராஜ் - மூத்த நடிகை சரோஜாதேவி - இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவிற்கு உதயாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


***

Britannia Milk Bikis redefine ‘bite-sized content’ with their new campaign for Tamil Nadu Day.


 

Britannia Milk Bikis redefine ‘bite-sized content’ with their new campaign for Tamil Nadu Day.

Britannia Milk Bikis, The Biscuit That Grew Up in Tamil Nadu Just Said Thank You

Britannia Milk Bikis break their biscuits to celebrate Tamil Nadu Day.

To celebrate Tamil Nadu Day, Britannia Milk Bikis, one of the most loved brands in the state, has launched one of their most hyperlocal campaigns to date - ‘A Bite of TN’.

Conceptualised by Talented, the campaign cleverly taps into a unique cultural habit that has existed in the state for decades -  biting around the flower borders and the logo of Milk Bikis Classic, available exclusively in Tamil Nadu. This everyday habit has taken the center stage, with Britannia biting their own biscuits in the shape of Tamil Nadu’s cultural icons, brought to life through print ads, striking billboards and a film.

From Thalaivar’s glasses to Madurai malli (jasmine), ‘A Bite of TN’ features 80 billboards spread across 19 districts. These directional billboards, filtered by pincodes, point people to 80 distinct spots. A cultural curation of iconic landmarks, pop-culture legends, sub-cultures, food spots and parks, the campaign doubles up as a travel guide for all things Tamil Nadu. The print leg goes further with 13 district-specific creatives - each a starter pack to that city’s hidden gems.

This pincode approach to hyperlocal campaigns isn’t new for Britannia. Commenting on the intent for going so deep into the state’s cultural fabric, Siddharth Gupta, General Manager at Britannia, says, “Britannia Milk Bikis is part of Tamil Nadu’s traditions for generations, with close to 50% households consuming it every month during moments shared with their loved ones. We feel a deep sense of gratitude for the love Tamil Nadu has shown us, and ‘A Bite of TN’ is a small tribute to that bond. With this campaign, we are celebrating the cultural nuances that make Tamil Nadu so special, through the lens of a biscuit that’s loved and lived here. It’s our way of staying connected and further deepening our relationship with the people who’ve made Milk Bikis what it is today.”

Ria Sharma, Brand Strategy, and Aaliya Sheikh, Creative, at Talented said, “‘A Bite of TN’ is a campaign that only a brand that has grown up with the state can pull off. Along with our media partners, we plotted out over a hundred unique spots and used Google Maps to understand their proximity to our billboards. Each creative is unique and contextualized to the landmark it is located near. With every Milk Bikis and TN collaboration, we continue to push the boundaries of hyperlocal creativity every year.”

Watch the film here: https://youtu.be/JMbFaDeSD2I

Ronak Chugh, director, Rooted Films, commented, “What truly makes a place if not for its sights, sounds, scents, its people, and its spirit. That's why we celebrated Tamil Nadu, the state I was born and brought up in, with a stop-motion animation featuring bitten Milk Bikis and a vibrant folk+Kollywood+Gaana inspired song. Our favorite part? Playfully rhyming 'Dei' (an informal way to call a friend) with 'Tamil Nadu Day' in the lyrics, adding an extra layer of a relatable conversational touch.”

Britannia Milk Bikis has a deep-rooted relationship with the state of Tamil Nadu spanning decades. This hyperlocal creativity has been previously seen in campaigns like Anaivarukkum, Adengappa and Flashback Pack, which drew on regional insights celebrating the state's rich linguistic diversity and regional pride, building on the longstanding brand love and connection it has with the region.

 

சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு

சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில்,  'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! 

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும்  சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள  'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின்  'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. 

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட  தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து,  அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார்.  'ச்சீ ப்பா தூ...' பாடலை எழுதியிருப்பதோடு அதில் ராப் வடிவத்தையும் அமைத்துள்ளார் வாஹீசன் ராசய்யா.

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார். 

தரண் குமரின் அற்புதமான இசை, பாடலைக் கேட்டவுடன் ஈர்க்கும் வரிகள், இடையில் வரும் அசத்தலான ராப் என இந்த தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் இப்பாடலை,  இசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

https://youtu.be/MuP38LTnlCY  

Friday, July 18, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா, தமிழ் சினிமாவில் நிதானமான நடிப்பும், அழகான தோற்றத்தையும் கொண்ட நடிகையாக மெருகேறி வருகிறார்

 திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா, தமிழ் சினிமாவில் நிதானமான நடிப்பும், அழகான தோற்றத்தையும் கொண்ட நடிகையாக மெருகேறி வருகிறார். 1.65 மீ (5 அடி 5 அங்குலம்) உயரமும், சுமார் 55 கிலோ எடையும் கொண்ட பவ்யாவின் நேர்த்தியான உருவம் மற்றும் அழகு ஊடகங்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.

சென்னையின் M.O.P. வைஷ்ணவக் கல்லூரியில் ஊடகக் கல்வி முடித்த பவ்யா, 2022-ல் தினேஷ் பாலனிவேல் இயக்கிய ‘கதிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், 2023-ல் ரியோ ராஜ் ஜோடியாக நடித்த ‘ஜோ’ படத்தில் "ஸ்ருதி" என்ற கதாபாத்திரம் மூலம் அவர் பரவலான கவனம் பெற்றார். 17 முதல் 27 வயதுக்குட்பட்ட கேரளா–தமிழ்நாடு எல்லைக் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த காதல் படம் 2023 நவம்பர் 24 அன்று வெளியானது, மேலும் 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

பாரம்பரிய ஆடைகளிலும், மினிமலிஸ்டிக் ஆடைகளிலும் தன்னை அழகாக காட்சிப்படுத்தும் பவ்யா, புகைப்படங்களில் எப்போதும் விறுவிறுப்பாகத் தெரிகிறார். ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அவரை எப்போதும் “நேர்த்தியும் நம்பிக்கையும் கொண்ட நடிகை” என புகழுகின்றன.

2024 மார்ச்சில், பவ்யா சென்னை நகரில் நடைபெற்ற Times Fresh Face போட்டிக்கு நடுவராக இருந்தார். “வெற்றியை விட திறமையை கொண்டாடுங்கள்” என கூறிய அவர், ஒருகாலத்தில் அந்த போட்டியில் இறுதிச் சுற்று போட்டியாளராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்து, இளம் மாடல்கள் மற்றும் நடிகர்களை ஊக்குவித்தார்.

அதற்கும் மேலாக, சமீபத்தில் வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் அவர் நடித்த வலிமையான கதாபாத்திரம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது பெரிதும் பாராட்டப்படுகின்றது. இவரது இந்த பரிசீலனையுடன் கூடிய தேர்வுகள், அவரை ஒரு வலிமையான நடிகையாக  உயர்த்தி வருகின்றன.


நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன்  ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா  பேனரின் கீழ்  இயக்க இருக்கிறார்.

இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக ஹிட் படங்களை பல ஜானரில் கொடுத்து வருபவர் இயக்குநர் ஜோஷி. 

தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் ரூ. 100 கோடி வசூலித்த ஆக்‌ஷன் திரைப்படமான 'மார்கோ' என மலையாள சினிமாவின் வணிகத்துக்கு புதுவரையறை கொடுத்ததை அடுத்து இயக்குநர் ஜோஷியுடன் இணைவதன் மூலம் UMF  தனது தரத்தை மேலும் மேம்படுத்துகிறது.

'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆஃப் கொத்தா' போன்ற படங்களில் தனது வலுவான கதாபாத்திர வரையறை மற்றும் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர்- இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார். இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. 

இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்‌ஷன் அவதாரத்தில் நடிக்கிறார். குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் படங்கள் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது UMF. 

மலையாள சினிமாவில் தரமான படம் தயாரித்து வரும் நிறுவனங்களில் ஐன்ஸ்டீன் மீடியாவும் ஒன்று. தரமான, பரிசிதனை முயற்சிகளை தைரியமாக கொடுக்கும் ஐன்ஸ்டீன் மீடியாவின் சமீபத்திய படம் 'ஆண்டனி'. டார்க் ஹியூமர், வித்தியாசமான கதை சொல்லலுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'புருஷ பிரேதம்' திரைப்படத்தையும் தயாரித்தது. தரமான கதைகள், உயர்தரமான தயாரிப்பு என்ற உயர்நோக்கத்துடன் ஐன்ஸ்டீன் மீடியா அடுத்தடுத்து படங்கள் தயாரித்து வருகிறது. 

UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் புதுவித சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க இருக்கிறது.

 

Bun Butter Jam - திரைப்பட விமர்சனம்

 பன் பட்டர் ஜாம் என்பது ஒரு இனிமையான மற்றும் மனதைத் தொடும் அனுபவத்தை வழங்கும் ஒரு தென்றலான காதல் நகைச்சுவைத் திரைப்படம். இளமைத் துடிப்பும், லேசான நகைச்சுவையும் நிறைந்த இந்தப் படம், தொடர்புடைய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு அழகான வாழ்க்கைக் கதையை வழங்குகிறது. இது ஒரு இளைஞன், அவனது நெருங்கிய நண்பர் மற்றும் அவனது காதலியைச் சுற்றி மையமாக உள்ளது, அவனது வாழ்க்கையில் உள்ளவர்கள் அவனது பயணத்தை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதை ஆராய்கிறார் - சில சமயங்களில் அவனது எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகிறார்கள், மற்ற நேரங்களில் எதிர்பாராத வழிகளில் அவனை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

முன்னணி நடிகராக அறிமுகமான பிக் பாஸ் ராஜு, இயல்பான மற்றும் ஈர்க்கக்கூடிய நடிப்பால் ஈர்க்கப்படுகிறார். உணர்ச்சி மற்றும் நகைச்சுவை நேரத்தின் சரியான கலவையை தனது பாத்திரத்தில் கொண்டு வருகிறார், இதனால் கதாபாத்திரம் நம்பக்கூடியதாகவும் விரும்பத்தக்கதாகவும் மாறுகிறது. அவரது வசனம் நம்பிக்கையானது மற்றும் படத்தின் எளிமையான ஓட்டத்திற்கு சேர்க்கிறது. துணை நடிகர்களும் சமமாக மகிழ்ச்சிகரமானவர்கள், சரண்யா பொன்வண்ணன் மற்றும் தேவதர்ஷினி போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் தங்கள் பாத்திரங்களில், குறிப்பாக நகைச்சுவை காட்சிகளில் தனித்து நிற்கிறார்கள். அவர்களின் இருப்பு படத்திற்கு ஆழத்தையும் அரவணைப்பையும் சேர்க்கிறது.

நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்தின் மற்றொரு வலுவான தூண். அவரது துடிப்பான இசை உணர்ச்சி மற்றும் காதல் துடிப்புகளை மேம்படுத்தி, கதைசொல்லலை அழகாக நிறைவு செய்கிறது. காட்சியமைப்புகள் மனதிற்கு இதமாக உள்ளன, சிந்தனைமிக்க பிரேமிங் மற்றும் படத்தின் மனநிலைக்கு ஏற்ற மென்மையான வண்ணத் தட்டு.

முதல் பாதியில் ஒரு சில காட்சிகளை ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்த ட்ரிம் செய்திருக்கலாம் என்றாலும், இரண்டாம் பாதி அதிக உணர்ச்சி எடை மற்றும் ஒரு அடிப்படையான கதையுடன் செல்கிறது. இந்த மாற்றம் நன்றாக வேலை செய்கிறது, கதைக்கு அதிக தெளிவையும் கவனத்தையும் தருகிறது.

ஒட்டுமொத்தமாக, பன் பட்டர் ஜாம் ஒரு இனிமையான, இலகுவான படம், இது அதிக முயற்சி எடுக்கவில்லை, ஆனால் அதன் பார்வையாளர்களை வசீகரிப்பதில் வெற்றி பெறுகிறது. இது ஒரு நிதானமான பார்வைக்கு ஏற்ற ஒரு நல்ல பொழுதுபோக்கு. இது வகையை மறுவரையறை செய்யாவிட்டாலும், அது என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்கிறது - உங்களை சிரிக்க வைக்க, சிரிக்க வைக்க, மற்றும் ஒரு தென்றல் காதல் பயணத்தை அனுபவிக்க வைக்க.

Yaadhum Ariyaan - திரைப்பட விமர்சனம்

நகர வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து ஒரு இடைவெளி தேடி, நான்கு நெருங்கிய நண்பர்கள், பசுமையான, அமைதியான காட்டின் மையத்தில் அமைதியான பயணத்தைத் தொடங்குகிறார்கள். உயரமான மரங்கள் மற்றும் இயற்கையின் இனிமையான ஒலிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு அழகான, பழைய பங்களாதான் அவர்களின் இலக்கு. இந்த அமைதியான சூழலில் தங்களுடன் மற்றும் ஒருவருக்கொருவர் மீண்டும் இணைவதில் குழு புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உணர்கிறது.

இரவு விழும்போது, வளிமண்டலம் மர்மமாகிறது, எதிர்பாராத ஒரு நிகழ்வு அவர்களை உலுக்கியது - ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று விசித்திரமான சூழ்நிலையில் சரிந்து விடுகிறார். அதிர்ச்சியடைந்து மனம் உடைந்து, குழு தங்கள் வலிமையையும் ஒற்றுமையையும் சோதிக்கும் ஒரு தருணத்தை எதிர்கொள்கிறது. பீதிக்கு அடிபணிவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் தைரியத்தை சேகரித்து, ஒன்றாக இருந்து சரியான முடிவுகளை எடுக்கத் தீர்மானித்தனர்.

காட்டின் அமைதியில், உணர்ச்சிகள் அதிகமாக ஓடுகின்றன, ஆனால் அவர்களின் பிணைப்பு அவர்களை நங்கூரமிடுகிறது. பயம் உள்ளே நுழைந்தாலும், இரக்கமும் அவ்வாறே செல்கிறது, மேலும் ஒவ்வொரு நண்பரும் வாழ்க்கை, நட்பு மற்றும் பொறுப்பின் மதிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஒரு காலத்தில் தப்பிக்கும் இடமாக இருந்த பங்களா, கணக்கு மற்றும் வளர்ச்சிக்கான இடமாக மாறுகிறது.

இரவு ஆழமடையும் போது, குழு சூழ்நிலையை தெளிவுடனும் முதிர்ச்சியுடனும் எதிர்கொள்ள ஒன்றாகச் செயல்படுகிறது. நேர்மையும் நம்பிக்கையும் மட்டுமே தங்களின் முன்னோக்கிச் செல்லும் ஒரே பாதை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். நிழல்களுக்கு மத்தியில், அவர்கள் அரவணைப்பு, பகிரப்பட்ட நினைவுகள் மற்றும் அமைதியான வலிமையின் தருணங்களைக் காண்கிறார்கள்.

சூரிய உதயத்தில், காடு வித்தியாசமாக உணர்கிறது - இன்னும், ஆனால் அமைதியான புரிதலால் நிரப்பப்படுகிறது. குழு என்றென்றும் மாறி வெளிப்படுகிறது, பயத்தால் உடைக்கப்படவில்லை, ஆனால் அனுபவத்தால் மேம்படுத்தப்படுகிறது. இரவு கனமாக இருந்தபோதிலும், அது அவர்களுக்குள் சக்திவாய்ந்த ஒன்றை எழுப்பியது: வாழ்க்கைக்கான புதுப்பிக்கப்பட்ட பாராட்டு, எந்த இருளும் அசைக்க முடியாத ஒரு பிணைப்பு.

காட்டுக்குள் அவர்களின் பயணம் ஒரு தப்பிக்கும் பயணமாக இருந்தது - ஆனால் அது ஒரு திருப்புமுனையாக மாறியது. இரவின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதில், அவர்கள் தங்களுக்குள் ஒளியைக் கண்டார்கள்.

 

Trending - திரைப்பட விமர்சனம்

இந்த சுவாரஸ்யமான படம், பிரபல யூடியூப் ஜோடி காதலித்து, திருமணம் செய்துகொண்டு, விரைவில் பிரபலமற்ற நீல திமிங்கல விளையாட்டின் ஆபத்தான நிஜ வாழ்க்கை பதிப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறது. மகிழ்ச்சியான, உள்ளடக்கமான டிஜிட்டல் வாழ்க்கையாகத் தொடங்கும் இந்த படம், தம்பதியினர் தங்கள் தைரியம், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி வலிமையை சோதிக்கும் ஒரு மோசமான சவாலில் இழுக்கப்படும்போது ஒரு இருண்ட திருப்பத்தை எடுக்கிறது. பயமுறுத்தும் சூழ்நிலைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் மற்றும் மறுபுறம் வலுவாக வெளிவர முயற்சி செய்கிறார்கள் என்பதை படம் திறமையாக சித்தரிக்கிறது.

நடிகர்கள் கலையரசன் மற்றும் பிரியாலயா ஆகியோர் தனித்துவமான நடிப்பை வழங்குகிறார்கள், அவர்களின் கதாபாத்திரங்களின் உணர்ச்சி உச்சங்களையும் தாழ்வுகளையும் சரியாகப் பிடிக்கிறார்கள். அவர்களின் வேதியியல் மற்றும் திரை இருப்பு பார்வையாளர்களை அவர்களின் பயணத்தில் உண்மையிலேயே முதலீடு செய்ய வைக்கிறது, சிலிர்ப்பூட்டும் கதைக்கு ஆழத்தை சேர்க்கிறது. இரு நடிகர்களும் அவர்களின் நேர்மையான மற்றும் யதார்த்தமான சித்தரிப்புகளுக்காக பரவலாக பாராட்டப்பட்டனர், இது படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை உயர்த்துகிறது.

இயக்குனர் சிவராஜ் நாகராஜ் ரியாலிட்டி தொலைக்காட்சியின் கூறுகளை கதைக்களத்தில் கலப்பதன் மூலம் ஒரு தனித்துவமான திருப்பத்தை அறிமுகப்படுத்துகிறார். பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் வடிவத்தால் ஈர்க்கப்பட்ட இந்த படத்தில், தம்பதியினரின் யூடியூப் சேனல் திடீரென அகற்றப்பட்டு, அவர்கள் தங்கள் வீட்டிற்குள் அமைக்கப்பட்ட ஒரு மர்மமான விளையாட்டில் இழுக்கப்படுகிறார்கள். இந்தக் கருத்து, பதற்றம், மர்மம் மற்றும் ஒருவித அச்ச உணர்வைச் சேர்த்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது.

இந்தப் படம், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை - குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் புகழைத் தேடுபவர்களை - நுட்பமாகப் பேசும் ஒரு சரியான நேரத்தில் சிந்திக்க வைக்கும் கதையை முன்வைக்கிறது. இது ஆன்லைன் சவால்களின் உளவியல் ரீதியான பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மெய்நிகர் பிரபலத்திற்கும் நிஜ உலக விளைவுகளுக்கும் இடையிலான அதிகரித்து வரும் மங்கலான எல்லைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அதன் நவீன கருப்பொருள், தொடர்புடைய கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சிகரமான கதைக்களத்துடன், இந்தத் திரைப்படம் இளைய பார்வையாளர்களை ஈர்க்கும் என்பது உறுதி. பாக்ஸ் ஆபிஸ் மற்றும் OTT தளங்களில் கடுமையான போட்டி நிலவும் நேரத்தில் வெளியிடப்பட்டது, இது நிச்சயமாகப் பார்க்கத் தகுந்த ஒரு புதிய மற்றும் பொருத்தமான பொழுதுபோக்காகத் தனித்து நிற்கிறது.

 

Jenma Natchathiram - திரைப்பட விமர்சனம்


 ஒரு நொடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தமன் ஆகாஷ் இயக்குனர் ரவிவர்மனுடன் இணைந்து ஜென்ம நட்சத்திரம் என்ற படத்தை உருவாக்குகிறார். இது 1980களின் தமிழ் திகில் படத்திலிருந்து உத்வேகம் பெறும் ஒரு துணிச்சலான மறுகற்பனை படமாகும். இந்த படம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சஸ்பென்ஸை ஒரு பிடிமான அரசியல் குற்ற நாடகத்துடன் கலக்கும் அதே வேளையில், அதன் லட்சியம் மற்றும் கருப்பொருள் ஆழத்திற்கும் தனித்து நிற்கிறது.

சென்னையின் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்ட இந்த கதை, ஒரு ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர் (தமன் ஆகாஷ் நடித்தார்) ஒரு கவர்ச்சிகரமான அறிமுக ஸ்கிரிப்ட் மூலம் தனது முத்திரையைப் பதிக்க முயற்சிப்பதைச் சுற்றி வருகிறது. அவர் தனது கர்ப்பிணி மனைவி (மால்வி மல்ஹோத்ரா) மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்துடன் வாழ்கிறார். மனைவி விசித்திரமான மற்றும் விவரிக்க முடியாத நிகழ்வுகளைக் காணத் தொடங்கும் போது, பதட்டமான மற்றும் பேய்த்தனமான சூழ்நிலையை உருவாக்கும்போது அவர்களின் அமைதியான வாழ்க்கை விரைவில் சீர்குலைகிறது.

ஒரு இணையான கதையில், காளி வெங்கட் ஒரு நேர்மையான அரசியல் உதவியாளராக சித்தரிக்கிறார், அவரது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியளிக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் ₹57 கோடியை தவறாகப் பயன்படுத்தும்போது அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் பணத்தை மறைத்து வைத்து, அவரது பாதை மெதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட இழையுடன் குறுக்கிடத் தொடங்குகிறது, இது ஒரு சுவாரஸ்யமான இரட்டை கதை அமைப்பை உருவாக்குகிறது.

திகில் திரைப்படத்தை சமூக ரீதியாக எதிரொலிக்கும் அரசியல் துணைக் கதையுடன் இணைப்பதன் மூலம் புதிய ஒன்றை முயற்சித்ததற்காக இயக்குனர் ரவிவர்மன் பாராட்டுக்குரியவர். இதன் விளைவாக, ஆச்சரியமான திருப்பங்கள் மற்றும் பயனுள்ள ஜம்ப் பயங்களுடன், பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் ஒரு படம். நிழல் ஒளிப்பதிவு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் பேய் காட்சிகளுடன், படம் அதன் திகில் வேர்களுக்கு காட்சி மரியாதை செலுத்துகிறது.

தமன் ஆகாஷ் ஒரு முதிர்ந்த நடிப்பை வழங்குகிறார், பயம், விரக்தி மற்றும் மீள்தன்மையை அதிகரித்து நம்பிக்கையுடன் சித்தரிக்கிறார். மாளவி மல்ஹோத்ரா ஒரு கட்டாய சித்தரிப்புடன் தனித்து நிற்கிறார், குறிப்பாக உணர்ச்சி ஆழத்தை கோரும் காட்சிகளில். காளி வெங்கட், திரை நேரத்தால் வரையறுக்கப்பட்டிருந்தாலும், தனது பாத்திரத்திற்கு தீவிரத்தையும் கண்ணியத்தையும் கொண்டு வருகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக, ஜென்ம நட்சத்திரம் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் சிறந்து விளங்குகிறார். படத்தின் வேகம் கவனத்தை ஈர்க்கிறது, மேலும் பல காட்சிகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திரைக்கதை பல அடுக்குகளை கையாளும் அதே வேளையில், அதன் லட்சியம் பாராட்டத்தக்கது மற்றும் சாத்தியமான எதிர்கால தவணைகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.

மொத்தத்தில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் உணர்ச்சி, சஸ்பென்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை இணைத்து தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஒன்றைக் கொண்டுவருவதற்கான ஒரு துணிச்சலான முயற்சியாகும். சில சீரற்ற தருணங்கள் இருந்தபோதிலும், இது வித்தியாசமாக இருக்கத் துணிந்த ஒரு படம் மற்றும் திகில் மற்றும் அரசியல் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு ஈர்க்கக்கூடிய பார்வையை வழங்குகிறது.

Jenma Natchathiram Cast and Crew

Cast Details Character name

Taman Aakshan - ajay

Malvi Malhotra  - riya

Maithreya  - vino

Raksha cherin - suji

Sivam - jana

Arun Karthi  - prakash

Kali Venkat - rajesh

Munishkanth - murukesan

Velaramamoorthy -velayudham

Thalaivasal Vijay - Dr. Stephen

Santhana Bharathi - producer

Nakalites Niveditha- durga

Yasar -satti

 Crew Details

Amohom studios, Whitelamp pictures

Release : Romeo Pictures

Producer : Subhashini. K

Director : B. Manivarman

Cinematographer : K G

Music Director : Sanjay Manickam

Editor : S. Guru Suriya

Art director : SJ Ram

Costume designer : Subika.A

Stunt master : Miracle Michael

Costumer : Ramesh

Project head: Vijayan Rengarajan

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்


 செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'



உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜன், நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் 'சோழநாட்டான்' தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசுகிறது

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும்  'சோழநாட்டான்' திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

"பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கும் 'சோழநாட்டான்' முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது.

'சோழநாட்டான்'  திரைப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா, "தஞ்சாவூரில் தொடங்கும் இப்படத்தின் கதை சென்னையில் தொடர்கிறது. ரேக்ளா பந்தயத்தோடு நில்லாமல் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு மிகப் பிரபலமான நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதும் திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.

திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவை கையாள, ராஜா முகமது படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். எஃப். எஸ். ஃபைசல் இசையமைக்க, யுகபாரதி சபரீஷ், மற்றும் மணி அமுதன் பாடல்களை எழுத, சித் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பாடல்களை பாடுகின்றனர். கலை: பாபு, சண்டை பயிற்சி: மிராக்கிள் மைக்கேல்,
லைன் புரடியூசர்
ஆம்பூர் J. நேதாஜி
இணை தயாரிப்பு: வி. பாரி வள்ளல்.

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் இன்று தொடங்கிய 'சோழநாட்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Thursday, July 17, 2025

“Sattamum Neethiyum” - திரைப்பட விமர்சனம்


 ஜூலை 18 ஆம் தேதி ZEE5 குளோபலில் திரையிடப்படும் 'சத்தமும் நீதியும்' திரைப்படம், நடிகர் சரவணன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது 35 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் ஒரு சுவாரஸ்யமான நீதிமன்ற நாடகமாகும். இந்த உணர்வுபூர்வமான தொடர் நீதி, தைரியம் மற்றும் உண்மை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு அழுத்தமான கதையை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

சுந்தர மூர்த்தி என்ற போராடும் நோட்டரி பப்ளிக், தனது தந்தை சம்பந்தப்பட்ட ஒரு துயர சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன ஒரு பெண்ணின் வழக்கைத் துணிச்சலுடன் எடுத்துக்கொள்வதைப் பின்தொடர்கிறது. ஒரு எளிய சட்ட முயற்சியாகத் தொடங்கும் இந்த திரைப்படம் விரைவில் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டராக மாறுகிறது, சுந்தர மூர்த்தி நீதிமன்றத்தில் ஒரு வலிமையான எதிரியை எதிர்கொள்கிறார். இறுக்கமான சட்ட வாதங்கள், மனித தருணங்களைத் தொடுவது மற்றும் நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தும் நீதிக்கான தேடல் மூலம் கதை வெளிப்படுகிறது.

சரவணன் முன்னணி வேடத்தில் பிரகாசிக்கிறார், சுந்தர மூர்த்தியின் சித்தரிப்பில் பாதிப்பு மற்றும் வலிமையின் கலவையைக் கொண்டு வருகிறார். நம்ரிதா எம்.வி அவரை அழகாக பூர்த்தி செய்கிறார், தொடருக்கு உணர்ச்சி அதிர்வுகளை சேர்க்கும் ஒரு உற்சாகமான நடிப்பை வழங்குகிறார். அறிமுக இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இயக்க, 18 கிரியேட்டர்ஸ் என்ற பதாகையின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்த இந்தத் தொடர், புதிய கதைசொல்லலையும் வலுவான நடிப்பையும் ஒருங்கிணைக்கிறது.

7 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் பதற்றம், மூல உணர்ச்சி மற்றும் கதையின் சமூக பொருத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் சக்திவாய்ந்த உரையாடல்கள் நிறைந்த நீதிமன்றக் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 22–25 நிமிடங்கள் ஓடுகிறது, இது ஆழ்ந்த பிரதிபலிப்புக்கு இடமளிக்கும் அதே வேளையில் தொடர்ந்து பார்ப்பதை எளிதாக்குகிறது.

சத்தமும் நீதியும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான கதைசொல்லல் மூலம் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தலைமுறைகளைக் கடந்து எதிரொலிக்கும் கருப்பொருள்களுடன், சத்தமும் நீதியும் வெறும் நீதிமன்ற நாடகம் அல்ல - இது மனித ஆவி மற்றும் தார்மீக தைரியத்தின் கொண்டாட்டமாகும்.

A ZEE5 Original Sattamum Needhiyum Cast & Crew Details


Cast : Saravanan, Namritha, Aroul D Shankar, Shanmugham, Thiruselvam, Vijayashree  & Iniya Ram


Crew:

Writer & Showrunner: Sooriyaprathap S

Direction: Balaji Selvaraj

Producer: Sasikala Prabhakaran

Production: 18 Creators

DOP: S Gokulakrishnan

Editor: Raavanan

Music Director: Vibin Baskar

Art Director: Bhavna Govardan

Lyricist: Srini Selvaraj

Costume Stylist: Maria Milan

Sound Design: Hariharan (H Studios)

Audiographer: Tony J

Make Up: Arun Ganesan

Executive Manager: MP Ramachandran

Production Manager: Selvakumar

Colorist: SK (Pixel ARTS)

Visual Effects Supervisor: Kiran Raghavan (ResolFx)

Stills: Dhigil Deepak S

Co-Director: Ramesh Prabhu

Associate Directors: Shri Vikram Bhupathi, Gokul S, Pa.Hari Raj, Thiruselvam

Assistant Directors: Diwahar Manimaran, A Aaron Kingson, Bharathi Sriman A

Second Unit DOP: S Vinoth Kumar

Associate Cinematographers: Imraan K, Akilan Vigneshwar

Additional Screenplay: Balaji Selvaraj

Additional Dialogues: Diwahar Manimaran, A Aaron Kingson

Publicity Design: Triland Animation Studios

PRO: Sathish, Siva (AIM)

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன்ஸ் வழங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன்ஸ் வழங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்', உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது.

'ராக் ஆன் ஹாரிஸ் 3.0' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.

இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "ரசிகர்கள் முன் இசைப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி. அதுவும் தாய் மண்ணான சென்னை ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சியை வழங்குவது மறக்க முடியாத அனுபவம். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ரசிகர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது" என்றார்.

'ராக் ஆன் ஹாரிஸ் 3.0' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த‌ பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

*நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு  தொடக்கம்* 

*குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ' புரொடக்சன் நம்பர் ஒன்' படத்தின் பூஜை - படப்பிடிப்பு தொடக்கம்*

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன்  நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள,  கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள். 

இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

'பார்க்கிங் ' படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் - இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு 'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடிய...