Thursday, June 13, 2024

அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சரவணன் !

*அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சரவணன் !*

*இப்போது நிறைய படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது - இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்*


*தமிழ் சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க - தயாரிப்பாளர் கே.ராஜன்*

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


காதல் சுகுமார் பேசும்போது,
தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம். 

இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள். பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது.இப்போது நிறைய படங்களில் தமிழை தேட வேண்டியுள்ளது.உமாபதி இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். திரையுலகம் மீண்டு எழுந்து வருவது போல தோற்றம். கொஞ்சநாட்களாக திரைப்படம் வெளியாகும் எண்ணிக்கை அதிகமாகவும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தலை மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி.

கே.ராஜன் பேசியதாவது, நான் பலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வட்டி வராமல் தவிக்கிறேன். இப்படி நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க கவனமாக இருங்கள். இவர்களுக்கு இடையில் தங்கமான தயாரிப்பாளர் சரவணன். படப்பிடிப்பு எப்படி நடந்தது என்று கேட்டால் மிகவும் நன்றாக நடந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார். ஒரு தயாரிப்பாளர் அப்படி சொல்றதே இல்லை. இயக்குனர் பற்றி அவ்வளவு நன்றாக சொன்னார். படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயம் பண்ணிவிட்டு வந்துள்ள தயாரிப்பாளர். தயாரிப்பாளர் இந்த படம் மட்டும் எடுக்கவில்லை யோகி பாபுவை வைத்து ஜோரா கைதட்டுங்க என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். இன்னைக்கு சினிமா எவ்வளவு சிரமத்தில் இருக்கு என்று உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு படம் ஆரம்பிச்சா தயாரிப்பாளர்கள் படும் வேதனை. சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க. ஆனா சில இயக்குனர்கள் பித்தல மட்டும் மாற்றவில்லை தயாரிப்பாளரையே மாத்திவிடுகின்றனர். பணக்காரனாக வந்தவரை ஏழையாக அனுப்பி வைக்கின்றனர். எல்லாமே ஆங்கில தலைப்பு. தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர். நான் தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தேன் கவனிப்பதாக சொல்லியுள்ளனர். 100 படங்கள் வந்தால் 80 படங்கள் காணாமல் போகிறது. பெரிய வருத்தமாக உள்ளது என்று பேசினார்.

கலை இயக்குனர் வீர சமர் பேசியதாவது, இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் சிறு படங்களுக்கு உயிர் கொடுத்து பேசும் ஒரு அற்புதமான மனிதர். இவரை போன்றவர்களை நாம் பாதுகாத்து வைக்க வேண்டும்.உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் ஒரு சிறு படத்துக்கு வந்து இருக்கும் ஆர்வி உதயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தயாரிப்பாளர் மட்டுமின்றி எல்லா வேலையையும் செய்யக்கூடியவர். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு நாம் மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும். இப்படத்தில் ஹீரோயினுக்காக அயர்ன் பாக்ஸில் ஒரு வண்டி ரெடி செய்தோம். இயக்குனர் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வருவார்.சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாத கதையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எடுத்துள்ளனர். தயாரிப்பாளர் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி.

இயக்குனர் மாணிக்க வித்யா பேசும்போது, ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்துள்ளார். உலகம் முழுவதும் 70 திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்கிறார். இப்படத்தின் தலைப்பு மீது ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம். அதுதான் இந்த கதையிலும்.படத்தில் வில்லி கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தின் ரீ ரிலீஸ் மூலம் நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று பேசினார்.

தயாரிப்பாளர் சரவணன் பேசும்போது, ஒரு படம் குழந்தை மாதிரி.தாய் இயக்குனர் என்றால் தகப்பன் தயாரிப்பாளர் தான்.ஒரு படத்தை நடுத்தெருவில் வீசி செல்வது தயாரிப்பாளருக்கு அழகல்ல. அதனை சரி செய்யும் வேலையை தான் நான் செய்துள்ளேன்.சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை டெல்லி வரை சென்று போராடி ரிலீஸ் செய்தேன். தடை என்றெல்லாம் சொன்னார்கள். ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் தெரிந்த படத்தை எப்படி விடுவேன். இந்த படம் எனக்கு மிகப் பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்த படம் எடுக்கும்போது எனக்கு நெஞ்சு வலி வந்தது. வீட்டில் எல்லோரும் என்னை படம் எடுக்க வேண்டாம் என்றனர். ஆனாலும் இயக்குனருக்காக எனது முடியாத சூழலிலும் நான் வேலை செய்தேன். இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான 'டகோயிட்' படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்

*ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான 'டகோயிட்' படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !!*
ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக  நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில்  படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை  ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட  செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார். 
இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான்   ‘டகோயிட்’.  ஆத்வி சேஷின் 'க்ஷணம்' மற்றும் 'கூடாச்சாரி' உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு  ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த  “மேஜர்” திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இதுவாகும்.
படம் பற்றிய மற்ற  விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர்கள்: ஆத்வி சேஷ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு: 
இயக்கம்: ஷனைல் டியோ 
கதை, திரைக்கதை: ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ 
தயாரிப்பாளர்: சுப்ரியா யர்லகட்டா 
இணை தயாரிப்பாளர்: சுனில் நரங் வழங்குபவர்கள்: அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Wednesday, June 12, 2024

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு


 தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம்

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் 'கல்கி 2898 AD' படக் குழு

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.   இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ டி' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.  ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், '' இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில்,'' இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்... 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... இதை தடுக்க நினைக்கும் கும்பல் ... புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்...‌ பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா... புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது. 

ரசிகர்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புஜ்ஜி எனும் வாகனம் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.  பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும் .. ஆக்சன் பாணியிலான வசனங்களும்.. இது பிரபாஸின் படம் என்பதை அவரின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில் தயாராகி இருக்கிறது. 

சுவாரசியமான கற்பனை கதை - சர்வதேச தரத்திலான படமாக்கம் - மாஸான காட்சிகள் - கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் - மயக்கும் பின்னணி இசை... என 'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

அற்புதமான திரையரங்க அனுபவத்தை பெறுவதற்காக காத்திருக்கும் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 'கல்கி 2898 ஏ டி ' படம் உருவாகி இருக்கிறது.‌

Tuesday, June 11, 2024

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் - ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!*

*சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் - ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!*

சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது.  நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது.  தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.

காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். 

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.

பத்திரிகைகள் பாராட்டும் *’அஞ்சாமை’ இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு* !

*பத்திரிகைகள் பாராட்டும் *’அஞ்சாமை’ இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு* !

ரஹ்மான், விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை வாரி குவித்து வரும் படம் 'அஞ்சாமை’.
நீட் தேர்வினாலும், தேர்வின் போது மாணவ மாணவிகள் அனுபவித்த தாங்கமுடியாத மன உளச்சலையும், அதனால் அவர்களது குடும்பத்தார் நேரிடும் துயரங்களை மைய்யப் படுத்தி இப்படத்தை இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் S.P. சுப்பு ராமன். இவர்  பிரபல இயக்குனர்களான N. லிங்குசாமி , மோகன் ராஜா ஆகியோரது ஹிட் படங்களுக்கு உதவியாளராக பணியாற்றிய அனுபவசாலி. 

'அஞ்சாமை'  படத்தில் மாணிக்கம் பெயரில்  இன்ஸ்பெக்டராகவும், வக்கீலாகவும் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ரஹ்மானுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  தற்போது கேரளாவில் ஓமர் லூலு இயக்கத்தில் 'பேட் பாய்ஸ்' (Bad Boyz) படத்தின் பட பிடிப்பில் பிஸியாக உள்ள ரஹ்மான், இந்த பாராட்டுகள் எல்லாம் இயக்குனரையே சாரும் என்று அவரது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார் . 

மேலும் அவர் அவர், 

‘அஞ்சாமை’ படத்தின் கதையை கேட்ட நாளிலேயே அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது. படத்துக்கும் எனக்கும் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  இந்த பாராட்டுகள் அனைத்தும் இயக்குனர் எஸ்.பி. சுப்பு ராமனையே சாறும். இப்படி விவாதம் நிறைந்த சர்ச்சைக்குரிய ஒரு கதை தேர்வு செய்து படமாக்கிய அவரது துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் என் பாராட்டுக்கள். இப்படி அருமையான ஒரு கதையில் நான் நடித்ததில் எனக்கு  மகிழ்ச்சி.."

“அஞ்சமை” - திருசித்திரம் பட நிறுவனம் சார்பில்  பிரபல மன நல மருத்துவர் Dr. M. திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

உலகமெங்கும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீடு.

Monday, June 10, 2024

ஆவடி புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஜூன் 11 முதல் 16 வரை 74வது ஆண்டு திருவிழா கொண்டாட்டம்!*

*ஆவடி புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஜூன் 11 முதல் 16 வரை 74வது ஆண்டு திருவிழா கொண்டாட்டம்!*

தொடக்க காலத்தில் ஆவடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டிருந்தாலும், அது ஆழமாக வேரூன்றாமல் காலப்போக்கில் கிறிஸ்தவ படைவீரர்களின் ஆன்மீக தேவையை நிறைவு செய்யக்கூடிய ஒன்றாகவே திகழ்ந்தது. 1943-ம் ஆண்டு அருள்தந்தை. ஜாண் வென்னார்ட் அவர்களின் கடின உழைப்பாலும், எளிமையான வாழ்க்கையாலும் ஈரக்கப்பட்டு ஆஸ்ஷ, காமராஜ் நகர, HVF, பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளை சுற்றியுள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். இந்த கிராமங்களில் உள்ள பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்ட அருள்தந்தை இறைமக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், 1950 ம் ஆண்டு குழந்தைகளுக்கு தமிழ்வழிக் கல்லியை ஆரம்பித்தார்.

இறைமக்களின் ஆன்மீக தேவைகளை உணர்ந்து, 1958-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு லூயிஸ் மத்தியா ஆண்டகை அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கள் நாட்டப்பட்டு, ஆலய பணிகள் அனைத்தும் முடிந்து 1959-ம் ஆண்டு ஜீலை மாதம் 3-ம் நாள் சென்னை மயிலை உயர மறைமாவட்ட இணை ஆயர் மேதகு பிரான்சிஸ் கார்வாலோ அவர்களால் புனிதப்படுத்தி திறந்து வைக்கப்பட்டது. ஆவடி புனித அந்தோணியார் ஆலயமானது 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் நாள் சென்னை மயிலை பேராயர் மேதகு A.M. சின்னப்பா அவர்களாவி திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.

புனித அந்தோணியாரின் புதுமைகளால் நிரம்பி வழியும் இத்திருத்தலத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதங்களை கடந்து வருவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அற்புதங்களும், அதிசயங்களும் புனிதரின் பரிந்துரையால் இத்திருத்தலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக மெழுகுவர்த்தி ஏற்றுதல், மாலை அணிவித்தல், உலோகத்தினாலான உடல் உறப்புகள் காணிக்கை போன்றவை புனிதரின் அருளுக்கு சான்றாக அமைகிறது. எனவே ஆவடி புளித அந்தோணியார் திருத்தலம் வாருங்கள் நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் என்பதே இத்திருத்தலம் தரும் இறையாசீர்.

இந்த ஆண்டு ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 74வது ஆண்டு விழா வருகின்ற ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடவிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்வுகள்!

11.06.2024, செவ்வாய் மாலை 06.00 மணி - திருக்கொடியேற்ற பெருவிழா
14.06.2024, வெள்ளி மாலை 06.00 மணி - நற்கருணை பெருவிழா
15.05.2024, சனி மாலை 06.00 மணி ஆடம்பர தேர்த்திருவிழா
16.05.2024 ஞாயிறு பாலை 06.00 மணி - திருக்கொடியிறக்கம்

இந்த முக்கிய நிகழ்வுகளில் பங்குபெற்று கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் ஆசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்,

நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

*நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நடிகர் வினோத், "'ராட்சசன்' பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக 'மகாராஜா' அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி". 

எடிட்டர் ஃபிலோமின்ராஜ், "இந்தப் படம் ஒரு பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்". 

நடிகை அபிராமி, "விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி". 

இயக்குநர் நித்திலன், "என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ், "'எனிமி' படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட 'மகாராஜா' படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்". 

நடிகர் விஜய்சேதுபதி, " ராமோஜிராவ் என்ற ஜாம்பவானின் மறைவு எனக்கு வருத்தம். அவருக்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய ஐம்பதாவது படமாக 'மகாராஜா' அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலைப் பார்த்துள்ளனர். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

Madras Maplai, Multi-cuisine Fine Dine Restaurant, Opens in Chennai, Near Anna Flyover*


*Madras Maplai, Multi-cuisine Fine Dine Restaurant, Opens in Chennai, Near Anna Flyover*
● Actor and comedian Mr. Balan Aakash, popularly known as KPY Bala, inaugurates the restaurant; about 50 orphaned children are treated with ‘Maplai Virundhu’, a sumptuous south Indian feast.
● Complimentary dinner for newly wedded couples and their friends till June end; 15% discount on bill during the inaugural week
*Chennai, June 10, 2024:* Madras Maplai, a young and unique hospitality brand from Chennai, has opened its first multi-cuisine, fine-dining restaurant near Anna Flyover. Actor and comedian Mr. Balan Aakash, famously called KPY Bala, inaugurated the restaurant today. In a heartwarming gesture, the restaurant welcomed around 50 orphaned children and are treated with ‘Maplai Virundhu’, a sumptuous south Indian feast.
Occupying 4,000 square feet space at Gemini Parsn Manere, Anna Salai, Nungambakkam, the restaurant offers a diverse menu featuring cuisines of Andhra, Chettinad, North India, and Chinese. Its signature items are Maplai Virundhu, Madras Maplai Mutton Chukka, Manga Era Varuval, Arati Aaku Kodi, and Andhra Bhojanam.
The restaurant is open from 11:30 am to 11:30 pm. It can cater to about 150 guests at a time. Its party hall can host about 50 guests - and the private dining cabin can accommodate 12-15 guests. There is a parking facility for about 20 cars. Reservations or home delivery orders can be made at 73050 21627.
In celebration of its inauguration, Madras Maplai is offering a complimentary dinner for couples getting married between June 10 and June 30, 2024. The couples can also bring two more guests for the dinner. The offer is on a first come first serve basis - and registration is a must. The restaurant is also offering a 15% discount on the bill from June 10-17, the inaugural week. 
In their comments, *Mr. Jerome Fenelon, and Mr. D Badrinarayan, Directors, Madras Maplai Restaurant,* said: “In the Tamil society, families take particular care and pride in serving feast for the bridegroom and the close relatives within a day or two after the marriage. Called ‘maplai virundhu’, the feasts are grand and the guests are treated with utmost love and respect. We have Maplai in our brand name as we are very much inspired by this tradition of hospitality - the prefix, Madras, denotes the place of our origin and presence. We are probably the only multi-cuisine fine-dining restaurant in this vicinity. We consider every cuisine a primary cuisine, and not an add-on. The food items of all cuisines are prepared only by Master Chefs and are served in cuisine-specific cutlery. For instance, Chinese food comes in ceramic plates.”
They added, “Food safety is our topmost concern. We never add any artificial chemicals, colouring agents or taste enhancers. We also do not use any taste elements - be it salt or chilly, more than what is essential to bring the authentic taste. All our supervisors are trained and have Food Safety Training and Certification (FoSTaC) from the Food Safety and Standards Authority of India (FSSAI).” 
It is promoted by a young team with over six years of experience in the catering and hospitality industry. Madras Maplai restaurant undertakes outdoor catering and bulk orders. It has its own staff to deliver food at the doorsteps of customers - besides, the restaurant is also available on the food delivery platforms like Swiggy and Zomato.

Sunday, June 9, 2024

சென்னையில் “சோல் வாக் இன் ஃபேஷன்” நிகழ்வு


 சென்னையில் “சோல் வாக் இன் ஃபேஷன்” நிகழ்வு

 

எஸ்டபிள்யூஎஃப் எனப்படும் “சோல் வாக் இன் ஃபேஷன்” என்பது ஃபேஷனை வெளிப்படுத்த விரும்பும் நபர்களின் உள்ளுணர்வின் தனித்துவமான உணர்வை குறிக்கிறது. ஃபேஷன் என்பது நாம் அணியும் ஆடைகள் மட்டுமல்ல, அது தனித்துவத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் ஒருவரின் தனித்துவமான ஸ்டைலானது ஃபேஷனில் அடுத்து வரவிருக்கும் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகிறது. கிறிஸ் லெகாசி அன்ட் கால் காஸ்மெடிக்ஸ்  (Chriss legacy & Cal Cosmetics) உடன் இணைந்து, வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு அவர்களின் சமீபத்திய கலெக்ஷன்களை பிரபலப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் வரவிருக்கும் ஃபேஷன் பருவங்களுக்கான எதிர்கால டிரெண்டுகளை ஏற்படுத்தவு,ம் ஃபேஷன் மற்றும்  லைஃப்ஸ்டைல் நிகழ்வுகளை உருவாக்கவும் இந்த நிறுவனத்தை நாங்கள் நிறுவியுள்ளோம். ஃபேஷன் டிசைனிங் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை, ஸ்டைல் மற்றும் அழகியல் ஆகியவற்றை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதற்காக எங்களால் கவனமாக கையாளப்படும் தளத்தை பயன்படுத்துவதற்காக அழைக்கப்படுகிறார்கள். டிசைனர்கள், மாணவர்கள், அழகுக்கலை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஃபேஷன் துறையில் வளரும் திறமையாளர்களுக்கான பல்வேறு ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​போட்டிகளுக்கான நுழைவு வாயிலாகவும், ஃபேஷன் உலகில் தங்களின் முக்கிய இடத்தைக் கண்டறிவதற்காக அவர்களின் ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை, ஸ்டைல் மற்றும் அழகியல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைந்துள்ளது. இது ஒரு மன்றமாக செயல்படுகிறது.

1. டிசைனர்கள் தங்களின் பிராண்ட் அடையாளத்தை நிறுவுவதற்கும், வலுப்படுத்துவதற்கும், பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அவர்களின் கலெக்ஷன்களை  காட்சிப்படுத்துவதற்கும் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

2. புதிய டிசைனர்கள் ஃபேஷன் ரன்வே விளக்கக்காட்சிகள் மூலம் தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் முதல் வாய்ப்பை பெறுகிறார்கள்.

3. ஃபேஷன் ஷோக்களில் உள்ளார்ந்த கலைத்திறன் மற்றும் கதைசொல்லல் மூலம், டிசைனர்கள் தங்களின் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்தி, பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முடியும்.

4. சமூக ஊடகங்கள் அதிகரித்துள்ள நிலையில், டிசைனர்கள் தங்கள் பிராண்ட் பற்றிய செய்திகளை தெரிவிக்க அவர்களை தொடர்புகொள்வதற்கும், அவை பரந்த பார்வையாளர்களை சென்றடைவதற்கும், அவர்களின் கலெக்ஷன்களை பற்றி ஒரு பரபரப்பை உருவாக்குவதற்கும் ஊடக வெளிப்பாடானது ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது.

5. பேஷன் ஷோக்கள் பிராண்ட் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கவும், ஃபேஷன் நிபுணர்களை அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் வழிகாட்டவும் பயன்படுகிறது.

6. விருதுகள் மற்றும் வெகுமதிகள் தவிர, நிகழ்ச்சியின் சிறந்த டிசைனர்கள், பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் அனுபவங்களை பெறுவதன் மூலம் அவர்களின் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.

எஸ்டபிள்யூஎஃப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் பட்டியல்:

1. பேஷன் ஷோக்கள்

2. தியேட்டர் நாடகம்

3. அழகுப் போட்டிகள்

4. விருது நிகழ்வுகள்

5. ஃபேஷன் திருவிழாக்கள்

6. காஸ்பிளே ஃபேஷன்

7. தீம்ட் காலா’ஸ்


WILD MILAN POP UP TWO DAYS SUMMER SHOPPING EDITION inaugurated by K T SRINIVASARAJA, SWETHA SUBRAMANIAN, GHUN JAIN & SIRI CHANDANA at Amethyst, Royapettah.*

*WILD MILAN POP UP TWO DAYS SUMMER SHOPPING EDITION  inaugurated by K T SRINIVASARAJA, SWETHA SUBRAMANIAN, GHUN JAIN & SIRI CHANDANA at Amethyst,  Royapettah.*
  An exclusive pop up show by Wild Milan featuring small scale businesses which includes food, clothing, accessories, sustainable goods, footwear from all over India on JUNE 8th & 9th 2024 at Amethyst Folly Hall 
Wild Milan motive is to support small scales and home-grown businesses.
Wild Milan pop up show presents a mix of fashion, appetizing food and uncompromising shopping experience at the most happening place of the city Folly Hall, Amethyst Chennai 
This show is created especially for Small scale businesses, who mostly conduct business through online platform, this is an opportunity for them to exhibit their products to our exclusive clientele 

We are coming up with more shows pan India, showcasing the products of many young and talented entrepreneurs. This Summer shopping Edit by Wild Milan will meet all your shopping needs right from Handmade clothing, footwear and accessories to Food, toys, Art and craft, vegan skin care and many more eco friendly and sustainable products.
List of brands participating
CLOTHING BRANDS
SUSTI
SHINE BOUTIQ 
HOUSE OF AKOOR
DRESS UP
KATHA
PRETTY NAARI 
BK STYLES
AYNI
DESI ERA
NAYAAB COLLECTIONS
OTHERS
EARRAHOLIC
BLUE MOON CHENNAI 
ONLY BAGS
YUMSATIONS 
EARTH AND BREW
ZORCA JEWELS
ESBEE BY SURYANSHI
& MUCH MORE
ORGANIZERS PROFILES
Wild Milan is a Dream project of two friends  Siri and Ghun whose aim was to create a platform for Small and Upcoming businesses at affordable pricing.
Gunavathy Ghun Jain
Ghun is an avid social media influencer with a follower-count of 64K. She is co-founder of Susti, a sustainable fashion brand which has latest collections of 100% Cotton & Unisex Shirts and Kaftans.
Siri Chandana Reddy
Siri is a finance professional who quit her corporate job, a first-generation entrepreneur who started a sari brand whose motive is to bring back the forgotten weaves and crafts of India, and make them a part of every one Wardrobe, Her passion is to support startup’s &  Young Entrepreneurs and provide them a platform to show case their product & services
CHIEF GUEST FOR THE POP UP SHOW attended by SWETHA SUBRAMANIAN, K T SRINIVASARAJA

Saturday, June 8, 2024

HAARA - திரைவிமர்சனம்


 கோவையில் படித்து வரும் மோகன் மகள் நிமிஷா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், தன் மகள் தற்கொலை செய்துகொண்டிருப்பாள் என்று மோகன் நம்பவில்லை.

அதனால் அவள் சாவுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்களைத் தேடத் தொடங்குகிறான். அவர் தேடும் போது கண்டுபிடிக்கும் உண்மைகள் திடுக்கிடும்.

மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை.

இயக்குனர் விஜய் ஸ்ரீ சொல்லில் இருந்தே பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி, தீவிரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

திரைக்கதை பயணத்தின் போது பல கேள்விகளை எழுப்புகிறது மற்றும் திரைப்படம் முன்னேறும்போது அவை அனைத்திற்கும் உறுதியான முறையில் பதிலளிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மோகன் மீண்டும் வருகிறார், அவருடைய இருப்பு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்.

அவரது புதிய ஒப்பனை மற்றும் உடல் மொழி ஒரு புதிய உணர்வை அளிக்கிறது. படத்தில் ஏராளமான ஸ்டண்ட் காட்சிகள் உள்ளன மற்றும் அவர் சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் வேகம் சிறப்பாக இருந்திருக்கலாம் மற்றும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்றதாக இல்லாத சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

அனுமோல் வழக்கம் போல் தன் கேரக்டரில் மிளிர்கிறார். யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

ரஷாந்த் அர்வினின் இசை படத்தின் கருப்பொருளை நன்றாகப் பாராட்டுகிறது. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது மற்றும் படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கவனிக்கத்தக்கவை.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...