Friday, June 21, 2024
RAIL - திரைவிமர்சனம்
Thursday, June 20, 2024
நானும் ஒரு அழகிபெண்ணியம் போற்றும் கதை
Tuesday, June 18, 2024
ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ இனிதே துவங்கியது !
வெற்றிகரமான ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின் சீசன் 2 பூஜையுடன் தொடங்கியது !!
ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததோடு, ஆஹா தமிழ் தளத்திற்கு பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கது.
மக்களின் மனம் கவர்ந்த இணையத் தொடராக உருவெடுத்த, ‘வேற மாறி ஆபீஸ்’ தொடரின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, அத்தொடரின் இரண்டாம் சீசனை பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது ஆஹா நிறுவனம்.
முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய களத்தில், கூடுதல் சுவாரஸ்ய அம்சங்களுடன் ‘வேற மாறி ஆபீஸ் - வெப் சீரிஸின் சீசன் 2’ உருவாகவுள்ளது, கடந்த சீசனின் தொடர்ச்சியாக, நிஷா (ஜனனி) தலைமையில் இவர்கள் அனைவரும் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள். அந்நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகள் போன்றவற்றை எப்படி ஒருசேர சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த தொடரின் கதை.
கனா புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ தொடரை ஜஷ்வினி இயக்குகிறார். இதில், முதல் சீசனில் முதன்மை வேடத்தில் நடித்த RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டான் ஆகியோருடன் லொள்ளு சபா மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஷ்யாமா, சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம், பப்பு, ஸ்வப்னா, தாப்பா, விஷ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சென்னையில் கடந்த 12-06-2024 ஆம் தேதி இந்தத் தொடரின் பூஜை, படக்குழுவினர், தொடரில் நடிக்கும் நட்சத்திரங்களுடன், ஆஹா தமிழ் தளத்தின் குழுவினரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
முதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன், அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன், மிக உயர்ந்த தரத்தில் உருவாக்குவதில் ஆஹா தமிழ் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
‘வேற மாறி ஆபீஸ்’ -வெப் சீரிஸ் சீசன் 2 வுக்கு, சத்யா ஒளிப்பதிவு செய்ய, ராகவ் இசையமைக்கிறார். கலை இயக்குநராக நர்மதா பணியாற்ற, படத்தொகுப்பாளராக விக்கி பணியாற்றுகிறார்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. சீரிஸ் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் - பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்
தியா' புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- 'ரதாவரா' இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் 'சௌகிதார்' எனும் புதிய திரைப்படம் தயாராகிறது
Monday, June 17, 2024
ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் "ராக்கெட் டிரைவர்"
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள்.
அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.
Sunday, June 16, 2024
பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை "பருவு" இப்போது உங்கள் ZEE5 தளத்தில்
பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை "பருவு" இப்போது உங்கள் ZEE5 தளத்தில் !!
~ ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான "பருவு" தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது ~
சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான "பருவு" சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் "பருவு" பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.
காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது.
ZEE5 இல் "பருவு" இன்றிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது. ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பார்க்கலாம்.
டிரெய்லர் லிங்க் : https://www.zee5.com/tv-shows/details/paruvu/0-6-4z5570736/paruvu-trailer/0-1-6z5570738
ZEE5 ஒரிஜினல் சீரிஸான ‘பருவு’ தெலுங்கு மற்றும் தமிழில் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்
Friday, June 14, 2024
ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு
MAHARAJA - திரைவிமர்சனம்
சிகையலங்கார நிபுணர் விஜய் சேதுபதி தனது மனைவி திவ்யாபாரதி மற்றும் அவர்களது மகளுடன் வசித்து வருகிறார்.
விஜய் சேதுபதி ஒரு விபத்தில் மனைவியை இழக்கிறார். அந்த விபத்தில், அவரது மகள் குப்பைத் தொட்டியுடன் தப்பிக்கிறார்.
அன்றிலிருந்து விஜய் சேதுபதி தனது மகளுடன் இரும்பு குப்பை தொட்டிக்கு லட்சுமி என்று பெயர் சூட்டி பாதுகாத்து வருகிறார். ஒரு நாள் விஜய் சேதுபதியின் மகள் பள்ளி விளையாட்டிற்காக வெளியூர் சென்றபோது, மர்ம மனிதர்கள் விஜய் சேதுபதியை தாக்கி குப்பைத் தொட்டியை எடுத்துச் செல்கிறார்கள்.
குப்பைத் தொட்டியை காணவில்லை என்று விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீஸ் அதிகாரி நட்டி நட்ராஜ் புகார் கொடுக்க மறுக்கிறார்.
விஜய் சேதுபதி தனது மகள் வீடு திரும்புவதற்குள் குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இறுதியாக விஜய் சேதுபதி இரும்புக் குப்பைத் தொட்டியைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நித்திலன் இயக்கிய இந்த கதை, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் திரைக்கதை மற்றும் எடிட் பேட்டர்ன் மூலம் வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது, இது பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் சுவாரஸ்யமானது.
நித்திலன் ஆச்சர்யங்களை அள்ளி வீச வெகு நேரம் காத்திருக்கவில்லை.
படத்தின் ரன்டைம் முழுவதும் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன.
விஜய் சேதுபதி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நடிகர் தனது கதாபாத்திரத்தை சித்தரிப்பதில் பிட்ச் பெர்ஃபெக்ட்டாக இருக்கிறார், மேலும் இது அவரது குரல் மாடுலேஷனில் தொடங்கி எல்லாவற்றையும் சரியாகப் பெறும் பாத்திரங்களில் ஒன்றாகும்.
அனுராக் காஷ்யப் தனது கதாப்பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பதால் இந்தப் படமும் பெரிய அளவில் பயனடைகிறது.
மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி மற்றும் மற்ற நடிகர்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.
அஜனீஷ் லோகநாதனின் பின்னணி இசை உணர்வு மற்றும் வெகுஜன காட்சிகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு நிகழ்வுகளை திறம்பட பதிவு செய்கிறது.
படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் மிக உயர்ந்தவை.
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்க, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்" கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...
-
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர்...
-
*ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்.... 2026 பொங்கல் வெளியீடாக வ...


