கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, மாயாவின் வசியத்தால் தன் வீட்டிற்கு வந்த முனிவரை துர்காவால் கவனிக்க முடியாமல் போகிறது.
இதனால் கோபமடையும் முனிவர், கௌரியின் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் அளிக்கிறார். இந்நிலையில், துர்கா மற்றும் வயிற்றில் இருக்கும் கருவை காப்பாற்ற மங்காவின் உதவியோடு அசோக் பரிகாரம் செய்கிறார். இதற்கு இடையூறாக, மங்கா அசோக்குக்கு தடங்கல்களை ஏற்படுத்த இறுதியில் பரிகாரம் வெற்றியடைந்ததா? கரு நிலைத்ததா? என்கிற விறுவிறுப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

.jpeg)