Thursday, September 25, 2025

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்
 
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 29 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ருத்ரா என்கிற புத்தம் புதிய மொகாத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த மெகாத் தொடர், சென்னையின் லட்சுமி காலனி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விதவிதமான மனிதர்கள், அவர்களின் ரகசியங்கள் மற்றும் சிக்கல்களை மையப்படுத்தி உருவாகிறது.
 
லட்சுமி காலனிக்கு அனு என்கிற குழந்தையுடன் குடியேறும் கலாரஞ்சனி, தனது கடந்தகாலத்தை மறைத்து அங்கு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், அவள் மீது காதல் கொண்டு அவளையே சுற்றி வரும் புலனாய்வு பத்திரிகையாளரான கதிர் ஒரு பக்கம், நேர்மையான போலீஸ் அதிகாரி சந்துரு, ஆட்டோ டிரைவர் வைரவேல் போன்ற கதாபாத்திரங்கள் கதையில் இணையும் போது, தொடரில் பல திருப்பங்கள் இடம்பெறுகிறது.
 
இந்த விறுவிறுப்பான கதையில், அனுவின் அடையாளம் என்ன, உண்மையில் கலாரஞ்சனி யார், அவரது நோக்கம் என்ன, அவளைத் தொடர்ந்து வரும் மர்ம மனிதர்கள் யார் என்பதே இந்தத் தொடரின் மீதிக் கதை.

Tuesday, September 23, 2025

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர்  ஷாரூக் கான்!!

30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

“ஜவான்”  படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்  தேசியவிருது பெற்றதை,  ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

Saturday, September 20, 2025

மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்


மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான  முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்

எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..

நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.

சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.

இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில் இந்த வாரம் வெளியிடப்படுகிறது.

Thursday, September 18, 2025

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது

இறுதி வரை பரபரப்பான ஒரு திரில்லர் திரைப்படம்
 
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால்  கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான  ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம்  தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியாகி இருக்கிறது.
 
ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகி இருக்கிறது. இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் கதைக்களம் தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
 
நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
பரபரப்பான இந்த திரைப்படத்தை இந்த வாரம் உங்கள் கண்களுக்கு விருந்தாக கண்டு களியுங்கள்.

Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

National, September 18,2025: Ramraj Cotton, India’s leading name in traditional South Indian attire, proudly presents SWAYAMVARA GRAND, an exclusive Art Silk dhoti, shirt, and towel set for special occasions. Crafted for men who value tradition with a contemporary touch, this collection allows you to wear your culture with pride. It embodies the artistry of Indian weaving, showcasing intricate designs that exemplify luxury and grandeur.

Each set is tailored from premium-quality artificial silk, offering a soft and comfortable feel. The fabric drapes gracefully with a subtle sheen, while jacquard patterns and gold-detailed borders enhance its traditional appeal. Available in six elegant colours with multiple patterns, every set includes a matching shirt, dhoti, and towel, delivering a complete and refined ceremonial look.

Speaking on the launch, Mr. K.R. Nagarajan, Chairman of Ramraj Cotton, said, “For decades, Ramraj Cotton has celebrated our swadeshi heritage while keeping pace with modern preferences. SWAYAMVARA GRAND reflects our passion for quality and tradition. It is created for life’s big occasions, where attire becomes a part of the celebration. We are delighted to have Mr. Rishabh Shetty, our brand ambassador, for this collection launch, as he truly represents the values our brand stands for.”

Actor and filmmaker Rishabh Shetty added, “I am honoured to represent Ramraj Cotton, a brand synonymous with quality and timeless tradition. SWAYAMVARA GRAND is more than just attire; it evokes pride and belonging, bringing elegance to weddings, festivals, and special occasions.”

For decades, Ramraj Cotton has been a trusted name in men’s traditional wear across India, from fine cottons to rich silks. With SWAYAMVARA GRAND, the brand takes a step further in redefining ceremonial elegance for the modern Indian man.

The collection is now available across all Ramraj Cotton exclusive showrooms and leading textile outlets nationwide.

Tuesday, September 16, 2025

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
தற்போதைய கதைக்களத்தில் ஒருபுறம், ரம்யாவும் – தானும் காதலிப்பதாக சரவணன், ரம்யாவின் அப்பாவிடம் கூற, தனது மகளை விட்டுவிடும் படி ரம்யாவின் அப்பா கேட்க, மறுபுறம் சரவணணுக்கு ஈஸ்வரியை மணமுடிக்க, அவளது குடும்பம் சரவணனின் அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறது.
 
இவ்வாறான, இக்கட்டான சூழ்நிலையில், சரவணன் எடுக்கப் போகும் முடிவு என்ன காதலியை கரம் பிடிப்பாரா? அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவாறா? என்கிற பரபரப்போடு கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Saturday, September 13, 2025

ஸ்ரீ லீலா - விராட் நடித்த " கிஸ் மீ இடியட் " செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


 ஸ்ரீ லீலா - விராட் நடித்த  " கிஸ் மீ இடியட் "    செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " கிஸ் மீ இடியட் "  

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள்  ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ்  " படம்  தமிழில்   " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில்  ரீமேக் செய்யப்படுகிறது.

கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும்  ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை - பிரகாஷ் நிக்கி

பாடல்கள் - மணிமாறன்


இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர்.

கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன்  தமிழிலும் இயக்கியுள்ளார்.

கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம்பொரித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள். அந்த கல் பேனரில் பட்டு பிரதிபலித்து ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வீராட் என்பவரின் காரில் படுகிறது . இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது .இந்த சேதத்திற்கு நஷ்டஈடாக வீராட், ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று சொல்கிறார். இதற்க்கு ஸ்ரீ லீலா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுக்கிறார். அதற்க்கு வீராட் மாற்று வழி ஒன்றை சொல்கிறார் . என்னவென்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய்ய சொல்கிறார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்ரீ லீலா உதவியாளராக வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் ஸ்ரீ லீலா சில நிகழ்வின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முற்பட்டு அதனை சொல்ல வரும்பொழுது, வீராட் அவளை வேலையை விட்டு அனுப்புகிறான் . அவளை அனுப்பிய பிறகுதான் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை உணர்கிறான். பின்பு தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சிக்கிறான் . அது வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பது தான் கதை.

செண்டிமெண்ட் கலந்த

இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ள

"  கிஸ் மி இடியட் " செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Friday, September 12, 2025

அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!


 அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

100 பிரபலங்கள் வெளியிடும் 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா  நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது.

வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் .

அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது.

இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். 

இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். 

மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா  இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.

 இவரின் தந்தை 

 திரைப்படங்களில் நடிப்பதில்  மிதுன் சக்கரவர்த்திக்குச்  சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு.  இவர் இப்போது எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார் .படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என அவர் தந்தை கேசி பிரபாத் கூறியுள்ளார்.

 இந்தப் பாடலை திரைப் பிரபலங்கள் 100 பேர் வெளியிட்டார்கள்.

 இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர்,

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான  ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன்,

அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,

இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்  மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்,நடிகைகள் தேவிகாவேணு, தியா.மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் இந்தப் பாடலை பார்த்து பாராட்டி  வலைதளத்தில் வெளியிட்டனர்.

Finding bliss in acclaimming your sweet heart.

Here's Mellifluous #AdiyeVellalagi song.

Direction: Mohammed Imthiyas

Hero -  K.C.P Methun Shakaravarthy Heroine - Jeevitha

Link -  youtu.be/pNjQFSUl0HY?si…

@PROSakthiSaran


சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!*

*சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!*

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :

“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”

மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.
தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு, புதிய இசை பரிமாணத்தை தருமென  எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2025 அன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

*Diljit Dosanjh Records for Kantara Chapter 1 Album – A Musical Union Blessed by Shiva’s Grace*
National award–winning actor-singer Diljit Dosanjh has joined hands with director-actor Rishab Shetty for the music album of Kantara Chapter 1.

Sharing a heartfelt note on Instagram, Diljit recalled how deeply the original Kantara moved him:

“With Big Brother @rishabshettyofficial – salute to this man who made the masterpiece Kantara. I have a personal connection with this film which I can’t tell, but I remember when the song Varaha Roopam played in theatres, I cried in so much ecstasy.”

The acclaimed artiste further expressed his excitement for the upcoming prequel, releasing October 2, and thanked composer B. Ajaneesh Loknath for the creative exchange, saying he “learnt a lot in just one day” with him.

This powerful collaboration between Diljit Dosanjh and Rishab Shetty promises to add a fresh musical dimension to the much-awaited Kantara Chapter 1, produced by Hombale Films.

Kantara Chapter 1 hits theatres worldwide on 2 October 2025.

Wednesday, September 10, 2025

சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!

“சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க - சீசன் 2” என்கிற புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
 
சமைக்க சுவைக்க சமையல் நிகழ்ச்சியின் முதல் சீசனில் தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்ற நிலையில், சமைக்க சுவைக்க நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனானது இலங்கையில் தனித்துவமான உணவுகளை நம் கண் முன் கொண்டு வரப் போகிறது.
 
நிகழ்ச்சிக்காக "கற்றது கையளவு" சமையல் குழுவினர் இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள் இடம்பெறுகிறது.
 
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொரு உணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல் இந்த முறை இலங்கையின் தனித்துவமான உணவுகளை சுவைக்க சமைக்க சுவைக்க சீசன் 2 -வை தொடர்ந்து பாருங்கள்.

Monday, September 8, 2025

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

*பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்*

*அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்*

*பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி*

தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. 

அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில் பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு மற்றும் குடிசை மாற்று வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் திரு பூச்சி முருகன் உள்ளிட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்ட பூவை செங்குட்டுவன், ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல்கள், திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என அளவற்ற பலவற்றை  எழுதியுள்ளார். 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இறைவன் படைத்த உலகை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், திருப்புகழைப் பாட பாட, கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். 

இறுதிவரை இடைவிடாது எழுதி வந்த இவரது இறுதி நூலான 'வாழ்க்கை எனும் நேர்க்கோடு' கடந்த சில தினங்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ் பி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன், கவிஞர் அறிவுமதி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையிலும் பூவை செங்குட்டுவன் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

அய்யன் வள்ளுவனின்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும்
எளிய நடையில்
இசைப்பாடலாக (133 பாடல்கள்)
தந்தவர் இவர் ஒருவரே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனை மனமுவந்து
பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடலை 
'குறள் தரும் பொருள்'
என்ற இசைப் பேழையாக
இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார், பத்திரிகைகள் பலவும் பாராட்டின.

கலைமாமணி (1980), கலைத்துறை வித்தகர் விருதான
கண்ணதாசன் விருது (1997), மகாகவி பாராதியார்
விருது (2020) உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பூவை செங்குட்டுவன் பெற்றுள்ளார். 

பூவை செங்குட்டுவனுக்கு பூவை தயாநிதி மற்றும் எஸ் ரவிச்சந்திரன் ஆகிய மகன்களும், விஜயலட்சுமி மற்றும் கலைச்செல்வி ஆகிய மகள்களும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். பூவை செங்குட்டுவனின் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டார். பூவை செங்குட்டுவன் மனைவியின் தங்கை கணவர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் என்பதும் தங்கையின் மகன்கள் நடிகர் உதயா மற்றும் இயக்குநர் ஏ எல் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



***

இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!*



 *இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!*

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விஜய் கனிஷ்கா விருது பெற்றதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்

இயக்குநர் விக்ரமன் தனது பதிவில், "துபாயில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக என் மகன் விஜய் கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற போது..வாக்கு அளித்து support பண்ணிய அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தனது மகனின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த இந்த விருது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பெரிய விருதுகள்

இது விஜய் கனிஷ்காவுக்குக் கிடைத்த மூன்றாவது விருது என்றும், இதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது மற்றும் மலேசியாவில் நடைபெற்ற Edison Film Award ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளதாகவும் விக்ரமன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விருதுகளுக்கு விஜய் கனிஷ்கா தகுதியானவர்தான் என்பதை 'ஹிட் லிஸ்ட்' படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

'ஹிட் லிஸ்ட்' விமர்சனப் பார்வை

'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம், "ஒரு மந்தமான மதிய பொழுதுக்குப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல த்ரில்லர்" என்று குறிப்பிட்டு, படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு குறித்துப் பாராட்டியது. மேலும், ஒரு புதிய நடிகர் என்ற வகையில் விஜய் கனிஷ்காவின் நடிப்பு திருப்திகரமாக இருந்ததாகக் குறிப்பிட்டது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம், "படத்தில் ஒரு நல்ல மெசேஜ் உள்ளது. படத்தின் இறுதி 30 நிமிடங்கள் த்ரில்லாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. க்ளைமாக்ஸ் யாராலும் கணிக்க முடியாத ட்விஸ்ட்டுடன் இருந்தது" என்று குறிப்பிட்டது. மேலும், புதுமுகமாக இருந்தாலும் விஜய் கனிஷ்கா பயந்த சுபாவம் கொண்ட கதாபாத்திரத்தின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், இது மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் ஒரு யதார்த்தமான கதாபாத்திரமாக இருந்ததாகவும் குறிப்பிட்டது.

டைம்ஸ் நவ் விமர்சனத்தில், "விஜய் கனிஷ்கா ஒரு புதுமுகத்திற்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று பாராட்டி, சில காட்சிகளில் அவர் அனுதாபத்தையும், பயத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.

இயக்குநர் விக்ரமன் குறிப்பிட்டதுபோல, 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், படத்தின் கதைக்கரு, த்ரில்லர் அம்சங்கள் மற்றும் விஜய் கனிஷ்காவின் நடிப்பு ஆகியவற்றிற்காகப் பலரால் பாராட்டப்பட்டுள்ளது. இதுவே அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, September 4, 2025

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* "உஃப் யே சியாபா"

ஏஆர் ரஹ்மான்
இசையமைப்பில்
மொழி,வசனம்
இல்லாமல்
வெளியாகும் திரைப்படம்*  "உஃப் யே சியாபா"

  லவ் பிலிம்ஸ் வழங்கும்
லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர்  ஜி. அசோக் இயக்கிய "உஃப் யே சியாபா"
திரைப்படம்  வரும்  செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.


இது ஒரு  நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல் 
நகைச்சுவைகள் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் உற்சாகமான இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வசனம் கூட இல்லாமல் நடிகர்கள்  சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதுவும் முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது.
இந்த படத்திற்கு இசையையும், நடிகர்களின் வசனமில்லாத நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருந்திருக்கிறது இந்த படம். இது குறித்து அவர் கூறியது.

இந்தபடத்தில்  பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும்   இருந்தது. 
பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாகும். இசை முக்கிய கதைசொல்லலை இயக்கும் இது போன்ற வாய்ப்புகள் அரிதானவை. புதிய  பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன்,
 குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது.
லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது, 
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களின் இந்த முயற்சி  வெற்றி பெரும் விதமாக அமைந்துள்ளது. 


ரஹ்மானின் பின்னணி இசை  வெறும் பின்னணி மட்டுமல்ல - அது படத்தின் குரல். 
அவரது இசை உணர்ச்சிகளை வழிநடத்துகிறது, 
பதற்றத்தை உருவாக்குகிறது, உரையாடல்  இல்லாத நகைச்சுவையை  உணர வைக்கிறது. 

இயக்குனர் 
ஜி. அசோக்  பாகமதி , மற்றும் துர்காமதி போன்ற படங்களை இயக்கியவர் .

 "உஃப் யே சியாபா" மூலம், நவீன பார்வையாளர்களுக்கு அமைதியான கதைசொல்லலில் ஒரு துணிச்சலான பாய்ச்சலை மேற்கொள்கிறார். 

டார்க் காமெடி வகையான இந்த திரைப்படம் 
சிரிப்பையும் சஸ்பென்ஸையும் மட்டும் வைத்து 
ஒரு புதிய   சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது - 
நவீன பாலிவுட்டில்  இதுபோன்ற படங்கள் வருவது அறிது
இது பல வருடங்களுக்குப்பிறகு இந்தியாவில் உருவாக்கும்  படம். திரு கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே இது போன்ற வசனங்கள் இல்லாத படம் வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் சோதனை முயற்சிகள் புதிதல்ல,  தமிழில் ஏற்கனவே இந்த முயற்சி செய்ப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சியை  இந்த தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
இப்படி ஒரு படம் வருவது மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மொழி இல்லாத படமாக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த படத்தை தயக்கமின்றி வெளியிடுகிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.

Wednesday, September 3, 2025

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*

*அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் –  இந்த   மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும்  பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.

ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray)  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது.

ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel) மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ (Vedika Pinto), மோனிகா பன்வார் (Monika Panwa), முகமது ஜீஷான் அய்யூப் (Mohammed Zeeshan Ayyub )மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜீ மியூசிக் கோ வெளியிடும் இசையில், நாட்டுப்புற சுவை கொண்ட புதிய பாடல்கள், “பிலம் தேகோ”, “டியர் கன்ட்ரி”, “பிர்வா” போன்ற ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பில் அனுராக் சாய்கியா, மனன் பாரத்வாஜ், துருவ் கானேகர், ஆயிஷ்வர்ய் தாக்கரே, நிஷிகர் சிப்பர் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பாடகர்களில் அரிஜித் சிங், மதுபந்தி பாக்சி, ஆயிஷ்வர்ய் தாக்கரே உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ப்யாரேலால் யாதவ், மனன் பாரத்வாஜ், சஷ்வத் திவேதி மற்றும் பலர் வரிகள் எழுதியுள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 அன்று உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது.

"நிஷாஞ்சி" டிரெய்லர் பார்வையாளர்களை 2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பப்லூ நிஷான்சி, ரங்கேலி ரிங்கூ மற்றும் டப்லூ ஆகியோரின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மோதிக்கொள்கிறது. அதிரடி துரத்தல்கள், அசத்தல் வசனங்கள், நேரடி மோதல்கள், அன்பு மற்றும் ஏக்கம் நிரம்பிய காட்சிகள் — இவை அனைத்தும் குழப்பமானதாய் இருந்தாலும் ஒரு புதிய அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.  

ஆக்சன், நகைச்சுவை, தேசி ஸ்வாக் ஆகியவற்றால் நிரம்பிய இந்த டிரெய்லர், காதல் மற்றும் இரு கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான போட்டியின் துடிப்பை சம அளவில் வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்தும் ஆர்வத்தை தூண்டுகிறது.

அமேசான் MGM ஸ்டூடியோஸ் மற்றும் பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இயக்குநர் நிகில் மாதோக் கூறியதாவது...,

“நிஷாஞ்சி" டிரெய்லரை வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனுராக் காஷ்யப் போன்ற துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநருடன் இணைந்தது இப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. ஆயிஷ்வர்ய் மற்றும் வேதிகா ஆகியோரின் அருமையான நடிப்பு பார்வையாளர்களை கவரும்.   “திரையரங்கு அனுபவத்தின் மீது  நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகிற ஆண்டுகளில் தனித்துவமான படங்களை திரையரங்குகளில் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். நிஷான்சி அந்தப் பயணத்தின் ஆரம்பமாக முக்கிய பங்காக இருக்கும்.


இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது...,

“நிஷாஞ்சி" பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப்படத்தை தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வை சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே  கூறியதாவது...,

“நிஷாஞ்சி" என்  மனதுக்கு நெருக்கமான படம். இது என் முதல் படம் என்பதற்காக மட்டுமல்ல, பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களாக நடிப்பதன் மூலம் என் நடிப்பின் திறமையை  வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் இது முக்கியமான் படம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை நடிப்பதில் மனதாலும் உடலாலும் பல சவால்களை சந்தித்தேன். அதேசமயம், படத்தின் இசையிலும் பங்களித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா போன்ற தைரியமான கதைகளுக்கு ஆதரவு தரும் நிறுவனத்துடன் அறிமுகமாகுவது பெருமை.  செப்டம்பர் 19 அன்று பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.


நடிகை வேதிகா பின்டோ கூறியதாவது...,

“நிஷாஞ்சி" டிரெய்லர் வெளியாகியிருப்பது இன்னும் கனவுபோல் இருக்கிறது! அனுராக் சார் எப்போதுமே என் விருப்பப்பட்டியலில் இருந்தவர். அவர் இயகத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு நனவாகியது. இந்த படத்தில் நான் நடித்த ரங்கேலி ரிங்கூ முதல் பார்வையில் மென்மையான, இனிமையானவளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் வலிமையான, துணிச்சலானவளாக இருக்கிறாள். அதை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆயிஷ்வர்யுடன் இணைந்து பணிபுரிந்ததும் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. நிஷாஞ்சி திரைப்படம் உணர்ச்சி, டிராமா மற்றும் எனர்ஜி நிறைந்த தேசி என்டர்டெய்னர். செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் நீங்கள் இப்படத்தை அனுபவிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.


ரசிகர்களே தயார் ஆகுங்கள் – "நிஷாஞ்சி" செப்டம்பர் 19 அன்று முதல் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!


அமேசான் MGM ஸ்டூடியோஸ் பற்றி

அமேசான் MGM ஸ்டூடியோஸ் என்பது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உள்ளடக்கங்களை தயாரித்து உலகளவில் விநியோகிக்கும் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம். ஒரிஜினல்  தொடர்கள் Prime Video வில் வெளியாகின்றன. 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இவற்றை பார்வையிட முடியும். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் Prime Video வில் மட்டும் கிடைக்கும். மேலும் MGM+ சேனலுக்கான உள்ளடக்கங்களையும் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

 தொடர்பு: pv-in-pr@amazon.com

 சோஷியல் மீடியா ஹாண்டில்ஸ்: @AmazonMGMStudiosIn

Link : https://bitly.cx/PpRYy

Tuesday, September 2, 2025

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் "வா தமிழா வா"

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் 

"வா தமிழா வா"

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு "வா தமிழா வா" என்கிற பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
 
மக்களின் குரலாய், மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.
 
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள்என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தஉருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில்நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்துசெல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும்பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!*

*கட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!*

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது.
முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
---

தொழில்நுட்பக் குழுவினர்:
தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம்: செல்லா அய்யாவு
ஒளிப்பதிவு: கே. எம். பாஸ்கரன்
இசை: ஷான் ரோல்டன்
எடிட்டிங்: பரத் விக்ரமன்
கலை இயக்கம்: எஸ். ஜெயச்சந்திரன்
சண்டைக் காட்சிகள்: முருகன்
நடன அமைப்பு: பாபா பாஸ்கர்
பாடல்வரிகள்: மோகன்ராஜன்
தலைமை நிர்வாகம் (வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்): நிதின் சத்யா
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)

Ariser Signs Cricket Star Ravindra Jadeja as Brand Ambassador

Ariser Signs Cricket Star Ravindra Jadeja as Brand Ambassador
National, September 2, 2025: Ariser, the smart-casual label for everyday go-getters, today announced Indian cricket sensation Ravindra Jadeja as its Brand Ambassador. Jadeja, celebrated for his all-round brilliance on the field, resonates with Ariser’s promise of style that fits right, feels right, and moves with you.

In an evolving menswear market, Ariser stands apart by blending comfort, craftsmanship, and contemporary design. The brand offers a versatile wardrobe from printed, striped, and solid shirts to polos, chinos, denim, and activewear crafted to combine everyday functionality with modern aesthetics. Every piece is designed for ease, wearability, and relevance across seasons, helping men look sharp, feel good, and own their style from day to night.

“We’re proud to welcome Ravindra Jadeja to the family as the new face of Ariser,” said    Mr. B.R. Aruneashwar, Managing Director of Ariser. “Mr. Jadeja’s journey from a consistent performer to one of India’s most dependable all-rounders mirrors Ariser’s own story of ambition, consistency, and style. His sharp game sense and effortless confidence makes him the perfect face for a brand built on self-belief and performance. With trend-forward colours, versatile fits, and timeless design, we are here for those who rise above the routine and Mr. Jadeja truly embodies that spirit.”

Sharing his excitement about the collaboration, Ravindra Jadeja said “I’m proud to partner with Ariser, an Indian brand that truly understands how today’s men live: busy, active, and always on the move. What sets Ariser apart is its focus on quality, comfort, and craftsmanship across every piece. Whether I’m training, travelling, or attending an event, I need clothes that not only look sharp but also feel great, and the brand delivers on all fronts. The fit, the finish, the feel, it’s all spot on, without the hefty price tag, bringing a fresh energy to menswear, and I’m excited to represent a brand that’s redefining everyday fashion with such style and substance.”

A 360-degree campaign across TV, digital, outdoor, and retail touchpoints will spotlight Jadeja and Ariser’s latest collection showcasing smart -casual menswear.

About Ariser: Ariser is redefining smart-casual menswear with a focus on comfort, craftsmanship, and contemporary appeal. More than a clothing label, it represents a lifestyle for men who value modern aesthetics without compromising on functionality. The brand’s collection spans versatile wardrobe essentials from crisp shirts, polos, chinos, and denim to activewear designed to work across occasions and seasons. Each piece is thoughtfully crafted for superior fit, breathable comfort, and long-lasting wearability, allowing men to look sharp and feel confident all day long.

For more details- https://ariser.co.in/

Monday, September 1, 2025

*மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவால் மற்றொரு மைல்கல்லை சாதனை உருவாகியுள்ளது!*



*தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!*

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் - குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025 இல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. 

நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.  மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது.

நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் (TNSKA) முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.  பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதன் மூலம் இந்த சாதனையை அடைய முடிந்தது.

அடிமட்ட அளவில் கிக் பாக்ஸிங் திறமையாளர்களை கண்டறிந்து வளர்ப்பதிலும், குழந்தைகள் மற்றும் கேடட்கள் தேசிய அளவில் சிறந்து விளங்க ஒரு வலுவான தளத்தை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதுஇந்த வெற்றியின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா*

*மிராய் பத்திரிகையாளர் சந்திப்பு;*

*சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா*

*மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன - தேஜா சஜ்ஜா*

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில்,

தேஜா சஜ்ஜா பேசியபோது,

“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.

ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.

மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.

மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.

இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.

இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.

இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.

அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'*


*பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'*

*வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது*


பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 

சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது. 

திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்," என்றார். 

'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா. 

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 



*'

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்   கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப...