Thursday, May 5, 2022

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !


விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .

'இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .  

தொழில் நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்

தயாரிப்பு - S வினோத்குமார் மினி ஸ்டுடியோ

இசை - ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு  - அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு  - விஜய் வேலுக்குட்டி

கலை இயக்கம் - உமேஷ் ராஜ்குமார் .

சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா

உடைகள் - சத்யா NJ

நடனம்  -தினேஷ் , அஸார்

பாடல்கள் - மதுர  கவி ,அஸல்  கோலாறு

நிர்வாக தயாரிப்பு - சொக்கலிங்கம் ,

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

புகைப்படம் - R S ராஜா

விளம்பர வடிவமைப்பு  -கபிலன்

Wednesday, May 4, 2022

Attractive first glimpse of Samantha's Yashoda out now!

 



Attractive first glimpse of Samantha's Yashoda out now!


Yashoda opened her eyes. The world she's been watching around her isn't the same anymore. The environment, her dress, her watch and the silence seemed surprisingly different to her. While the heartbeat is resonating in her ears, she went to open the window. Noticing a pigeon that resembled the freedom she wants, tried to catch it. Then, what happened?


All of this is part of 'Yashoda' first glimpse. Raising the expectations on its enthralling content, Senior producer Sivalenka Krishna Prasad says there's more on the way.

                       

Starring Samantha as the lead Sridevi Movies is making 'Yashoda' as their Production No. 14. Talented direction duo Hari-Harish are handling the project casting renowned actors, Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj and others in pivotal roles.


As the first glimpse of the movie came out today, producer Sivalenka Krishna Prasad says "Samantha garnered Pan-Indian audience with 'Family Man 2' webseries. Keeping her reach in mind, we are making this project uncompromisingly. The way Samantha owned her role with dedication is commendable. I feel proud watching her performance. We shot the climax part in Kodaikanal back in April under the supervision of Fight Master Venkat. We've wrapped up 80% of the shoot already and pacing up the last schedule in Hyderabad. Shoot will last by June 1st week. Special effects also play major role in this film. Our director duo Hari-Harish's work is impressive.  Planning to release it in Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam simultaneously on August 12th"

                         

Besides Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj, Shatru, Madhurima, Kalpika Ganesh, Divya Sripada, Priyanka Sharma and others are playing major roles.


Music: Manisharma,

Dialogues: Pulagam Chinnarayana, Dr. Challa Bhagyalaxmi

Lyrics: Chandrabose, Ramajogiah Sastry

Creative Director: Hemambar Jasthi

Camera: M. Sukumar

Art: Ashok

Fights: Venkat

Editor: Marthand. K. Venkatesh

Line Producer: Vidya Sivalenka

Co-producer: Chinta Gopalakrishna Reddy

Direction: Hari - Harish

Producer: Sivalenka Krishna Prasad

Banner: Sridevi Movies



தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு

 



தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின்  தலைவர் மற்றும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும்  ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில் குமார்  தெரிவித்தார்.

 இந்திய பள்ளிகள்  கிரிக்கெட் கூட்டமைப்பின் குழு உறுப்பினர்களால் தமிழகத்தைச் சார்ந்த ஜான் அமலன்  தென்னிந்தியக் பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அது மட்டுமல்லாமல் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் பேசுகையில் இது அவரது ஆற்றலுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால்,தமிழ்நாடு மாநிலத்திற்கே  பெருமை சேர்க்கும் விஷயமாகும். 

 இந்த கௌரவத்திற்கான பாதை  என்பது எளிதானது அல்ல.  G.ஜான் அமலன் அவர்களின் திறமை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிற உயர் செல்வாக்கு மிக்கவர்கள் உட்பட பலரின் போட்டியாளர்களை விட  அதிக திறமை வாய்ந்தவராக உள்ளார். இவரது தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களிடையே பெரும் பாராட்டுக்களையும், வரவேற்பை பெற்றுள்ளது.

 தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும்  இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல்வாதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

 

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்ணின் காதலைச் சொல்லும்  'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' 

மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும்  'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த்,,பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“இந்த படத்தில் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய் ஷங்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவா நடிக்கிறார். செயற்கை நுண்ணறிவு கொண்ட சிம்ரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவரது தோற்றம், உடல்மொழி ஆகியவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளம்பெண் கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சுகுரியன் நடித்திருக்கிறார்.  இவர்களுக்கிடையே நடைபெறும் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி தான் படத்தின் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார். 

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் மிர்ச்சி சிவாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இதற்கு இணையவாசிகளின் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக்

*விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக்



நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.



இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.



படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராமிய பின்னணியில் ஃபேன்டஸியுடன் கூடிய, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை. இதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும்'' என்றார்.



'விலங்கு' வலைதள தொடரின் பிரம்மாண்டமான வரவேற்புக்கு பிறகு விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தெய்வ மச்சான்' படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கில் விமலின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், 'தெய்வ மச்சான்'  படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது; நடிகர்களின் படத்தை அல்ல! - இயக்குனர் சாமி

உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது; நடிகர்களின் படத்தை அல்ல! - இயக்குனர் சாமி

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது :

மஜித் மஜிதி எங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் என்றால், எங்கள் வேலையின் மீது கொஞ்சம் கூட ஐயம் கொள்ளத் தேவையில்லை என்று அர்த்தம். ஆனால், 1997ல் ஈரான் நாட்டிற்கேற்ப எடுக்கப்பட்ட களம் அது. அதை தமிழில் ரீமேக் செய்யும் போது சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.

முதலில் நாம் கதையை நேரான வழியில் சொல்ல முடியாது. மேலும், இப்போதுள்ள காலத்தில் தினக்கூலி வேலை செய்பவரின் வருமானம் கூட நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் ஆகிவிட்டது. அதனால் எளிதில் ஒரு ஷூவை வாங்கிட முடியும். ஆகையால், நான் இந்த படத்தை வயதுக்கு வந்த அண்ணன், தங்கை அவர்களின் கடந்த காலத்தை கூறும்படியாக 1997ல் நடக்கும் ஒரு கதையாகவே இதை அமைத்துள்ளேன்.

அவர்கள் தங்களின் ஊரை பற்றி, பள்ளி கூடத்தை பற்றி, வீட்டை பற்றி கதையை வாசித்து வர காட்சியில் அவர்களின் சிறுவயதையே காட்டப்பட்டுள்ளது. அதே போல், நம் நடைமுறையில் இருந்த ஒரு சில விஷயங்களை இணைத்துள்ளேன். சைக்கிள் வாங்குவதற்காக அப்பாவிற்கு தெரியாமல் அண்ணன் உண்டியலில் பணத்தை சேர்த்து வைத்திருப்பான். தங்கை ஷூ கேட்டதும் அதை வாங்கி கொடுக்க உண்டியலை உடைத்து அந்த பணத்தை எடுத்துச் செல்வான், ஆனால், அது பற்றாமல் போகும்.

அதே சமயம், உலகமயமாக்கல் காரணமாக அப்பாவிற்கு வேலையை இழக்கும் சூழல் நேரிடும். பிஎஃப் பணத்தை வைத்து ஷூ வாங்கலாம் என்று நினைப்பார்கள். கடன் கொடுத்தவன் அந்த பணத்தை வாங்கி சென்றுவிடுவான் என இது மாதிரியான சூழல்களை நான் இந்த படத்தில் வைத்துள்ளேன். 

மஜித் மஜிதி சார் இயக்கிய அந்த படத்தில் வறட்சியான ஒரு நிலப்பரப்பில் கதையை நகர்த்தி சென்றிருப்பார். ஆனால், ஷூ கண்டிப்பாக போட வேண்டும் என்ற சூழல் இருக்க வேண்டும் என்பதற்காக குளிர் பிரதேசமான கொடைக்கானல் பூம்பாறையில் கதை நடக்கும்படியாக அமைத்துள்ளேன். எனது பிள்ளைகளும் பத்மா ஸ்ரீ சேஷத்ரி பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள். சமயத்தில் அவர்கள் செருப்பு அணிந்து செல்வதும் உண்டு. ஆனால், கதையில் அப்படிப்பட்ட சூழல் இல்லாதது போல் காட்சியமைத்திருக்கிறேன். 

அப்பா அம்மா சிரமப்பட்டால் கூட பசங்களை கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால், அப்பா கதாபாத்திரம், படிப்பு மட்டுமே இந்த உலகத்தின் மாற்றத்திற்கு உதவும் என்று ஆணித்தனமாக நம்பும் ஒரு கதாபாத்திரம் அது. 

கொடைக்கானல் அருகில் பூம்பாறை என்ற இடத்தில் தான் இந்த கதை நடக்கிறது. அந்த ஊர் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர் உருவானதாக ஒரு வரலாறு உள்ளது. குனும மன்னாடிகள் என ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த 16 பேர் இங்கு வந்து தங்கியுள்ளனர். அது அப்படியே நாளடைவில் உருவாகி 1600 வீடுகள் அங்குள்ளது. அந்த இடத்தை சுற்றி மலை இருக்கும், அந்த மலைக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் இந்த கிராமம் இருக்கும். அங்கு குழந்தைவேலப்பர் கோவில் என ஒரு கோவில் உள்ளது. அங்கு போகர் செய்த நவபாஷாண சிலை இருக்கிறது. முதல் சிலை பழனியிலும். இரண்டாவது சிலை பூம்பாறையிலும் உள்ளது. 

அந்த மக்கள் நாம் இங்கிருப்பதை விட பக்தியாக இருக்கின்றனர். குழந்தை வேலப்பர் சாமியை அவர்கள் வீட்டுக் குழந்தையாகவே நினைத்து வழிபடுகின்றனர். நானும் குழந்தைகள் படம் இது என்பதால் குழந்தை வேலப்பரையும் கதையின் உள்ளே அமைத்திருக்கிறேன். இப்போது சில செல்போன் டவர்கள் வந்துவிட்டது. அதை காட்சியிலிருந்து தவிர்க்க முயற்சி செய்திருக்கிறேன். மற்றும் குழந்தை வேலப்பர் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். நாங்கள் 9 நாட்கள் 5 கேமராவை வைத்து அதை படம் பிடித்துள்ளோம். இளையராஜா சார் அந்த திருவிழாவிற்கு அருமையான ஒரு குத்து பாட்டை அமைத்திருக்கிறார்.

மேலும், THE CHILDREN OF HEAVEN படத்தில் அந்த குழந்தைகள் ஷூ வை வாங்குவதோடு படத்தை முடித்திருப்பார். நான் அந்த குழந்தைகள் அவர்கள் ஓடிய ஓட்டத்தை எப்படி வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது வரை காட்டியுள்ளேன்.

மேலும், கதாநாயகன் எட்டிட் ஷூட் வரை வந்து கதையைமாற்றிவிடுவார்கள் என்று கேட்கின்றனர்.. 
  என் படத்தின் எடிட் சூட்டில் ஆர்டிஸ்ட்கள் வரமாட்டார்கள். அது அவர்களின் வேலை கிடையாது. அப்படி அவர்களுக்கு ஸ்கிரிப்ட்டில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் அதை படப்பிடிப்பின் போதே சொல்லலாம். அது அப்போதே தேவைப்பட்டால் மாற்றப்படும். ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங் என அனைத்தையும் செய்ய வேண்டியது ஒரு இயக்குனரின் கடமை. அதற்குதான் சம்பளம் வாங்குகிறார்கள்.. அது தான் அவரின் வேலையும் கூட. அதை விட்டு விட்டு நடிகர்கள் கருத்து சொல்ல ஏதும் இல்லை. அந்த நடிகர் ஒரு இயக்குனராக இருந்தால் அவர் கண்டிப்பாக மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். இல்லையெனில், உலகின் தலைசிறந்த நடிகர் சொல்வதற்கு கூட நான் அனுமதிக்கமாட்டேன். உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறதே தவிர நடிகர்களின் படத்தை அல்ல. இயக்குனர் எடுக்கும் படமே சரியான படம். மற்றவர்கள் கதையை மாற்ற சொன்னால் அது தவறான படமாகிவிடும். அந்த தவறை நான் ஒரு போதும் அனுபதிக்க மாட்டேன். அதற்கு பதில் நான் தோட்ட வேலைகளையோ அல்லது முடி திருத்தம் செய்தோ சம்பாதிப்பேன்.

இந்த படத்தில் கூட அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்..  ஒரு வசனம் எனக்கு சரியாக படவில்லை.. அதற்கு பதிலாக இந்த வார்த்தை பயன் படுத்தலாமா? என படப்பிடிப்பின் போதே கேட்டார். அந்த வார்த்தையும் சரியாக இருந்தது என நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால், எடிட் சூட் வரை நான் நடிகர்களை அனுமதிப்பது இல்லை.

நான் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனமான ஆள் தான். எங்கள் வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு இரண்டு அக்கா உள்ளார்கள். சிறு வயதிலிருந்தே கீழ் வீட்டுக் காரன் அடித்துவிட்டான் என்று தான் என்னை கூறுவார்கள். ஆனால், நான் அன்பானவன் கூட. பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ.சி. சார் என அனைவரிடமும் வேலை பார்த்திருக்கிறேன். என்னுடைய வேலையை செய்ய யாரேனும் தடுத்தால் கோபப்படுவேன். ஒரு இயக்குனர் தலைவனாக இருக்க வேண்டும். அவரே சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வேலை செய்ய முடியும். இல்லையென்றால், யார் வேண்டுமாலும் படத்தில் தலையிடுவார்கள். ஸ்கிரிப்ட்டில் என்ன இருக்கிறதோ அதை எடுக்க வேண்டுமென்றால், அந்த இயக்குனர் சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை அப்படி தான் இருந்திருக்கிறேன். என்னுடைய எட்டாவது படம் இது. ஆனால், ரிலீஸ் ஆகும் ஐந்தாவது படம்.

அன்றைய தினம் நடிகர் ஆதி கூட என்னை பார்த்தால் சிறிது பயமாக இருக்கிறது என்றார். அதே போல், இந்த படத்தின் படப்பிடிப்பின் போதும் 3 நாட்கள் மிகவும் கடினப்பட்டேன். குழந்தைகளும் என்னைப் பார்த்து பயந்தார்கள். பிறகு ஒளிப்பதிவாளர் நல்ல அனுபவமுடையவர். 80 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். அவர் தான், குழந்தைகளிடம் சிறிது அன்பாக சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் என கூற, நானும் என்னை மாற்றிக் கொண்டு கொடைக்கானல் சாக்லேட், நட்ஸ் அனைத்தையும் வாங்கி கொடுத்து ஒரு 65 நாட்கள் நானும் குழந்தையாகவே மாறிவிட்டேன். இந்த படத்தின் மூலம் நானே மாறியது போல் உணர்வு உள்ளது. இத்தனை நாட்கள் கோபமாக சொல்லும் போது செவி கொடுக்க யாரும் இல்லை. அன்பாக சொன்னால் அனைவரும் கேட்டுக் கொள்கிறார்கள் என்பதால் நான் இனிமேல் அன்பாக தான் அனைத்து விஷயங்களையும் சொல்ல போகிறேன்.

மேலும், ஒரு படம் இயக்கி கொண்டிருக்கும் போது அடுத்த படம் இது தான் என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால், என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றது. கங்காரு படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி வந்துவிட்டது. பலரும் இது மாதிரி இயக்குங்கள் என்று அட்வான்ஸ் கொடுத்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குள் பண மதிப்பு நீக்கம் (demonitisation) வந்து விட்டது. அதில் நிறைய பஞ்சாயத்தும் நடந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் (Children of Heaven) இப்படத்தை என் பிள்ளைகளோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் என்னுடைய அக்கா ஊரில் இருந்து வந்திருந்தார்கள். அவரும் இந்த படத்தை பார்த்து விட்டு இது மாதிரி உருக்கமான படத்தை எடுக்க மாட்டியா என்று கேட்டார். அப்போது தான் கண்டிப்பாக எடுக்கிறேன் என்று கூறினேன். உடனே மஜித் மஜிதி சாருக்கு மெயில் அனுப்பினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து இந்தியாவின் உரிமம் இந்தியாவில் தான் இருக்கிறது என்று பதில் வந்தது. யார் என்று விசாரித்த போது பர்ஃபெக்ட் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தின் உரிமத்தை வாங்கி இயக்குனர் பிரியதர்ஷனை வைத்து பம்பம்போலே என்ற பெயரில் ஹிந்தி மொழியில் 16 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார்கள்.

ஆனால், நான் பிரியதர்ஷனுக்கு தான் தொடர்பு கொண்டேன். அவர் அந்த நிறுவனத்திடம் பேசி இயக்குனர் சாமியிடம் கொடுங்கள் நன்றாக பண்ணுவார் என்று கூறினார். அதன்படி, தமிழில் மறு உருவாக்கம், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி -யுடன் உரிமம் வாங்கி இருக்கிறேன். இப்போதைக்கு ஓடிடி பற்றி எண்ணம் இல்லை. ஓடிடி-யை பொறுத்தவரை பிரபலங்கள் இருந்தால் வாங்கி கொள்வார்கள். இல்லையென்றால், திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றால் தான் வாங்குவார்கள். மேலும், இதே படத்தை 2D நிறுவனம் வெளியிடுகிறது என்றால் யோசிக்காமல் வாங்குவார்கள். ஏனென்றால், என்ன சொல்கிறார்கள் என்பதை தாண்டி யார் சொல்கிறார்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. இது உங்களுக்கும் தெரிந்த ஒன்று தான். இல்லையென்றால், மிகச் சிறந்த கதை, இடம், இசை, குழுந்தைகளுக்கான உணர்வுப்பூர்வமான உருக்கமான அனைவரும் பார்த்து அழக் கூடிய ஒரு படத்தை வெளியிட சிரமப்பட்டு பிவிஆர் மூலமாக நாங்கள் தானே வெளியிடுகிறோம்.

உதயநிதி ஸ்டாலினை சந்திக்க முடியுமா? என்று சொல்லுங்கள். செண்பக மூர்த்தி அவர்களை பார்த்தோம். ஆனால், அவர் மேல் உள்ள ஆட்களிடம் கொண்டு போக வேண்டும். பெரிய திமிங்கலம் இருக்கும் போது நான் சென்னாகுன்னி மாதிரி, என்னை எப்படி கண்டு கொள்வார்கள். மேலும், இப்படத்தை பெரிய பெரிய ஆட்கள் நிறைய பேர் பார்த்தார்கள்.

இப்படத்தை 120 முதல் 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். 

மே 6ஆம் தேதி பிவிஆர் மூலமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வெளியாகிறது.

அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Tuesday, May 3, 2022

விசித்திரன் திரைப்படத்தை பார்த்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு.

*விசித்திரன் திரைப்படத்தை பார்த்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு.*

மே 4, 2022, 

இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது. 
படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது. ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும். 
திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில், தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முழைக்க செய்வது தான் முதல் முயற்சி தான் இந்த சினிமா, அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர் கே சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, இந்த படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே அனைவரும் இந்த படத்தை பார்க்கவேண்டும். ஆர் கே சுரேஷ்க்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.
இயக்குனர்  சங்க செயலாளர் இயக்குனர் ஆர் வி உதயகும்மார் பேசுகையில் “விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. தலைவரிடம் சொன்னேன், இன்று நாம் அனைவரும் பார்த்துவிட்டோம், என்னைபோலவே உங்களுக்கம் பாதிப்பை உண்டாக்கியதில் மகிழ்ச்சி. 

அதன் பிறகு சிறப்பு கண்ணோட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில் விசித்திரன் படத்தின் மூலமாக ஒரு நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நான் நினைக்கிறான். தொடர்ந்து இதுபோல நடிப்புக்கு சவால் விடும் படங்களை ஆர் கே சுரேஷ் நடிக்க வேண்டும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார். 

அதன்பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை முறையே பதிவு செய்தனர். அதை படக்குழு விளம்பரத்துக்காக எந்தவித தொகுப்பும் செய்யாமல், அதை அப்படியே இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. ஒரூ வளர்ந்தவரும் நடிகனின் படத்தை பார்த்து இயக்குனர் சங்கம் வெகுவாக சிலாய்த்து பாராட்டியது இதுவே முதல் முறை. அதன்பிறகு படத்தின் கதாநாயகனும் தனது Studio 9 நிறுவனம் மூலம் உலகெங்கும் “விசித்திரன்” படத்தை வெளியிடும் ஆர் கே சுரேஷ் நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்பால முருகன் - அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும்“பாலமுருகனின் குதூகலம்”

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்

பால முருகன் - அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும்

“பாலமுருகனின் குதூகலம்”

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் - உலகநாதன் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு - மணி பெருமாள்
இசை - பிஜார்ன் சுர்ராவ்
படத்தொகுப்பு - மப்பு பிரகாஷ்
கலை - L.கோபி MFA
சண்டைப்பயிற்சி - Danger மணி
நடனம் - அப்சர்
நிர்வாக தயாரிப்பு  - அம்பிகாபதி.M

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Monday, May 2, 2022

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் ஆகியோரை ஆட்டுவிக்கும் 'நடனப்புயல்' பிரபுதேவா*

*மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் ஆகியோரை ஆட்டுவிக்கும் 'நடனப்புயல்' பிரபுதேவா*

*மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா*

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அப்படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை 'நடனப்புயல்' பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'காட்பாதர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது...'' அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள். திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்'' என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

'காட்பாதர்' படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார். பாலிவுட் படங்களில் பணியாற்றிய கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் கலை இயக்கப் பணிகளை கவனித்து வருகிறார். 'காட்பாதர்' திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

திரைக்கதை & இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் : ஆர்.‌பி. சவுத்ரி & என். வி. பிரசாத்
வழங்குபவர் : கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனங்கள்:  கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்.
இசை : எஸ். எஸ். தமன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
கலை இயக்கம் : சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு மேற்பார்வை : வகதா அப்பாராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Sunday, May 1, 2022

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 - நிறைவு விழா

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 - நிறைவு விழா

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ நடத்தியது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 2022 என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தடகள வீரர்களுடன் போட்டியிடும் மிகப்பெரிய தடகளப் போட்டியாகும், 13 வயது முதலான பிரிவுகளில் மொத்தம் 22 தடகளப் பிரிவுகள் கொண்ட போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நடத்தப்பட்டது

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் திரு ஆர்யா அவர்கள் கலங்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நிகழ்வின் போது இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு.டி டேவிட் பிரேம்நாத், சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு.செண்பகமூர்த்தி உடனிருந்தார்.

ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது !

ஜீ5 தனது வித்தியாசமான படைப்புகளால், தொடர்ந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ! 

ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கச்சிதமான உருவாக்கத்தில், சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் சிறந்த தளமாக ஜீ5 இயங்கி வருகிறது. தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் IMDb இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” ஆகியவற்றின் மாபெரும் வெற்றிகளுடன்,  ஓடிடி இயங்குதளத்தின் இலக்கணமாக, அடையாளமாக ஜீ5 புகழ் பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினை கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து அம்சங்களும் அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ளன. பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் என பல காரணங்களுக்காக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஜீ5 இந்த இணையத் தொடர்களின் வெற்றியின் மூலம் ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது, இது தமிழ் இணைய தொடர்களின் களத்தில் இதுவரை கண்டிராத காட்சியாகும். ரசிகர்களின் இத்தகைய நம்பமுடியாத அற்புதமான வரவேற்பை தொடர்ந்து, ஜீ5  அதன் பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் ஈர்க்கும் உள்ளடக்கத்தை, தொடர்ந்து  வழங்குவதாக உறுதியத்துள்ளது. ஜீ5 தளத்தின் அடுத்த கட்ட புதிய வரவுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...